சனி, 29 ஜூன், 2019

இப்படிப்பட்ட அறிகுறிகள் இருப்பது நோயல்ல


இப்படிப்பட்ட அறிகுறிகள் இருப்பது நோயல்ல!

*அவசியம் நம் அனைத்து சித்தர்களின் குரல் அன்பர்களும் இன்று படித்து உணர வேண்டிய உண்மைகள்.....*

*நோயாக மாற்றப்படுகிறது!*

*1. அடிக்கடி சிறுநீர் கழித்தல்*(Polyurea-excessive and frequent urination).

*2. அதிக தாகம்*(Polydipsia-dryness of mouth and excessive thirst)

*3. அதிக பசி* (அதிக சோர்வு)(Polyphagia-excessive hunger)

இவைகள்தான் உளகலாவிய
சர்க்கரை நோயின் அறிகுறிகளாக(international symptoms of Diabetes Mellitus) கருதப்படுகிறது.

*இப்படிப்பட்ட அறிகுறிகள் இருப்பது நோயல்ல!*

நவீன மருத்துவத்திற்கு தெரிந்துவிட்டால்தான் நோயாக மாற்றப்படுகிறது!

*நீங்கள் அந்த மருத்துவத்திற்கும் அது சார்ந்த அனைத்து  "வியாபாரத்திற்கும்" நிரந்தர ATM card ஆக மாற்றப்படுகிறீர்கள்!*

இந்த அறிகுறிகள் பல கோடி ரூபாய் வணிகமாக மாற்றப்படுகிறது!

ஏன் ஏற்படுகிறது என்ற தெளிவை,
நவீன மருத்துவம் விளக்குவதில்லை!

அப்படி ஏதேனும் medical miracle நடக்குமேயானால் அடுத்த நொடியிலிருந்து நீங்கள் சர்க்கரை நோயிலிருந்து பூரண குணமடைய ஆரம்பித்துவிடுவீர்கள்!

இது உங்களை ஆறுதல் படுத்த சொல்லப்படும் வார்த்தைகள் அல்ல!

நடைமுறையில் சாத்தியாமாகி கொண்டிருக்கும் 100 விழுக்காடு உண்மை!

*ஏன் ஏற்படுகிறது?*

★நாம் தெரிந்துக்
கொள்வோம்!

இந்த கோரப்பிடியிலிருந்து விடுபடுவோம்!
வராமல் தடுப்போம்!

*செரிக்கப்பட்ட மாவுச்சத்து இரண்டுவிதமான குளுக்கோஸாக மாற்றப்படுகிறது!*

*1. தரமான குளுக்கோஸ்,*

*2. தரமற்ற குளுக்கோஸ்.*

இதை இனம்கண்டு பிரிப்பது "கனையம்" என்கின்ற pancreas!
இது இயற்கை நமக்களித்துள்ள அற்புத உருப்பு!
இது என்றைக்கும் "நல்ல function" தான் செய்யும்!
"Malfunction" செய்யாது!

தரமான குளுக்கோஸுக்கு மட்டுமே "insulin" சுரக்கும்!
தரமற்ற குளுக்கோஸஸுக்கு insulin சுரக்காது, சுரக்கக்கூடாது!

*ஏன்?*

தரமற்ற சர்க்கரை
"உடல் செல்களுக்கு" சென்றடைந்தால், அவைகள் நோய்வாய் படும்!
அனைத்து உறுப்புகளும், பலமிழக்க ஆரம்பிக்கும்!

ஆக,
தரமற்ற சர்க்கரை இன்சுலின் சுரப்பு கிடைக்கப்பெறாமல்,
செல்களால் நிராகரிக்கப்பட்டு,
இரத்தத்தில் குளுக்கோஸ் அளவை தூக்கிவிட்டு,
சிறுநீரகத்தால்,
சிறுநீர் மூலம் வெளியேற்றப்பட்டு,
இரத்தம் சுத்திகரிக்கப்படும்!

எனவே சிறுநீர்வழியாக சர்க்கரை வெளியேறுவது நோயல்ல!

Pancreas னுடய malfunction னும் அல்ல!

மாறாக நம்மை நீண்ட நாட்களுக்கு உயிரோடு வைத்திருக்கும் உன்னத தற்காப்புக் கவசம்!
"A divine survival body mechanism"...!

இந்த சிறுநீர் யாருக்கும் தெரியாமல் வெளியேற்றுதல் தப்பித்தலாகும்!
மாறாக "நவீன மருத்துவத்திற்கு" தெரிந்துவிட்டால், "விற்பனை பொருளாக" மாற்றப்பட்டு,
உங்களை வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகளுக்கு அடிமையாக்கி,
உலக இன்ப துன்பங்களிலிருந்து விரைவாக விடுவித்துவிடும்!

தொடர்ந்து,
செரிமானக் கோளாறு காரணமாக, தரமற்ற சர்க்கரையை உற்பத்தி செய்வதால்,
உணவு சாப்பிட, சாப்பிட,
இடைவிடாது உற்பத்தியாகி கொண்டிருக்கும்
*"குப்பை_சர்க்கரை"* சிறுநீரகம் ஓயாமல் வேலைசெய்து, சிறுநீராக வெளியேற்றப்படுகிறது!

★இப்போது தெளிவாகியிறுக்கும்,
ஏன்
"Polyurea"(excessive and frequent urination)
*"அடிக்கடி_சிறுநீர் கழித்தல்"*
ஏற்படுகிறது என்று?

நமது உடல் 70 விழுக்காடு நீரால் ஆனது!
அடிக்கடி சிறுநீர் வெளியேறுவதால்,
நீர் சத்து குறைந்து "Dehydration" எனும் நிலை ஏற்படுகிறது!
இதுவே நா வறட்சி மற்றும் அதிக தாகம்!
இந்நிலையை சமாளிக்க உடல்  அதிகப்படியான நீர் கேட்கிறது!

★இப்போது விளங்கியிருக்கும்
ஏன்,

2. Polydipsia(dryness of mouth-excessive thirst) *அதிக தாகம்* ஏற்படுகிறது என்று?

எவ்வளவு உணவு
உட்கொண்டாலும், எத்தனை முறை பிரித்து, பிரித்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தாலும்,
தரமான சர்க்கரையளவு குறைவாகவும்,
தரமற்ற சர்க்கரையளவு அதிகமாகவும் இருக்கும் பட்சத்தில்,
தரமற்ற சர்க்கரை சிறுநீரால் வெளியேற்றப்படுவதால்,
உடல் செல்களுக்கு உணவுதட்டுப்பாடு ஏற்பட்டு,
நம்முடல் தொடர் சோர்வை உணர்கிறது!

★இப்போது புரிந்திருக்கும்
ஏன்

3. Polyphagia(excessive hunger-feeling tired)
*அதிகபசி மற்றும் அதிக சோர்வு_ ஏற்படுகிறது* என்று?

*சரி இதற்கு தீர்வுதான் என்ன?*

உறுதியாக மருத்துவமோ, மருந்து மாத்திரைகளோ தீர்வல்ல!

இது செரிமான கோளாறாதலால்
(metabolic disorder),
உண்கிற உணவை எப்படி நன்றாக செரிமானித்து,
தேவையான அளவு தரமான குளுக்கோஸை உற்பத்தி செய்வது
என்ற pre KG syllabus பாடத்தை கற்றுக்கொள்ள முயற்சிக்கவும்!

இதுமட்டுமே சர்க்கரை நேய் எனும் செரிமானக் கோளாறிலிருந்து
முற்றிலும் வெளிவரும் ஒரே வழி!

*கீழ்க்கண்ட மூன்று மந்திரங்களை கற்றுக்கொள்ளுங்கள்……*

*(ஓர்_அறிவு குறைவாக உள்ள மிருகங்கள், பறவைகளுக்கு நன்றாக தெரிந்த வித்தை)*

*1. எதை சாப்பிடுவது(proper diet)?*

*2. எப்படி சாப்பிடுவது (proper eatingtechniques)?*

*3. எப்போது சாப்பிடுவது (need based diet)?*

*அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்..*

பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள்.

பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.

தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.

இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.

பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல.

தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்ல.

ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக  இருந்து சிந்தியுங்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். அவ்வப்போது  மனதுக்குள் சிறிது நேரம்  பிரார்த்தனை செய்யங்கள் .

குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.

தினம் 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக  நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். (உடற்பயிற்சிக்காக அல்ல மன அமைதிக்காக)

எப்போதும் மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள்.

கடுமையாக உழைக்காதீர்கள்.  உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும், மனச்சிக்கல் இல்லாமல் தூங்குவதும் தான் ஆரோக்கியம்.

இதை கடைபிடியுங்கள் உங்கள் வாழ்கை ஆரோக்கியமாக இருக்கும்.

    

செவ்வாய், 25 ஜூன், 2019

எந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்கள் கொண்டிருப்பார்கள் என்பதை இங்கு காணலாம்....


எந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எப்படிப்பட்ட குணாதிசயங்கள் கொண்டிருப்பார்கள் என்பதை இங்கு காணலாம்....

👧 ஜனவரி மாதம் பிறந்த பெண்கள்
 பேரார்வம், இலட்சியங்கள் நிறைய கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தையும் சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள். இவர்கள் தங்கள் உணர்வை அவ்வளவு சீக்கிரமாக வெளிப்படையாக கூற மாட்டார்கள். இவர்களை போன்றே இருக்கும் நபர்களுடன் தான் அதிகம் பழகுவார்கள்.

👧 பிப்ரவரி மாதத்தில் பிறந்த பெண்கள் சற்று ரொமான்டிக்காக இருப்பார்கள். இவர்களிடம் பொறுமை காத்து பழக வேண்டும், அவசரம் காட்டக் கூடாது. அனைவராலும் இவர்களை புரிந்துக் கொள்ள முடியாது. மனது நிலையாக இருக்காது.

👧 மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் மன வலிமையுடன் இருப்பார்கள். இவர்கள் எளிதாக அனைவரையும் ஈர்த்துவிடுவார்கள். ஆளுமை செலுத்தும் நபர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அவ்வளவு எளிதாக காதலில் விழுந்துவிட மாட்டார்கள். மார்ச் மாதத்தில் பிறந்த பெண்கள் பழக எளிமையானவர்கள்.

👧 ஏப்ரல் மாதத்தில் பிறந்த பெண்கள் இராஜ தந்திரிகள். அனைவருடனும் மிக எளிதாக பழகி பேசிவிடுவார்கள். சிலர் பொறாமை குணமும் கொண்டிருப்பார்கள். இது அவ்வப்போது வெடிக்கும். தாங்கள் முழுமையாக நம்பும் நபர்களிடம் மட்டுமே தங்கள் மனதை திறந்து பேசுவார்கள்.

👧 மே மதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் உறதியான விடாப்பிடியான குணம் கொண்டவர்கள். இவர்கள் நேர்மையாக பழகுவார்கள். இவர்களுக்கென தனிக் கோட்பாடுகள் இருக்கும். ஈர்ப்பு மிக்க இவர்களுடன் எளிதாக பழகிவிட முடியாது. காதலில் விழுவதும் கடினம்.


👧 ஜூன் மாதத்தில் பிறந்த பெண்கள் ஆர்வமிக்கவர்களாக இருப்பார்கள். இவர்கள் எளிதாக அனைவருடனும் பேசுவார்கள். கற்பனை திறன் அதிகமாக இருக்கும். நீங்கள் நினைக்கும் முன்னரே அதை பேசி முடித்துவிடுவார்கள் இவர்கள். ஒளிவுமறைவின்றி நடந்துக் கொள்வார்கள்.

👧 ஜூலை மாதத்தில் பிறந்த பெண்கள் நேர்மை, அறிவு, அழகு, மர்மம் கலந்த கலவை. மோதல்கள் ஏற்படாமல் வாழ விரும்புவார்கள். அனைவரிடமும் கனிவாக நடந்துக் கொள்வார்கள். இவர்களை ஏமாற்றிவிட்டால், மறந்துவிட வேண்டியது தான் கதி. மீண்டும் இணைய மாட்டார்கள்.

👧 ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த பெண்கள் தனித்துவமானவர்கள். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். நல்ல உள்ளம் கொண்டிருப்பார்கள். இவர்களுடன் மோத நினைக்க வேண்டாம். இவர்கள் உங்களை கண்டிப்பாக வென்றுவிடுவார்கள். இவர்களிடம் நகைச்சுவை உணர்வும் அதிகமாக இருக்கும்.

👧 செப்டம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் அன்பு, கட்டுப்பாடு, அழகின் கலவை. இவர்களுடன் கவனமாக நடந்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு குறுகிய கால உறவுகள் பிடிக்காது. ஒருவருடன் பழகினால் அவருடன் நீண்ட நாள் உறவில் இணைந்திருக்க வேண்டும் என்றே எண்ணுவர்.

👧 அக்டோபர் மாதத்தில் பிறந்த பெண்களிடம் குணாதிசயங்கள் மிக வலுமையாக இருக்கும். உணர்ச்சிவசப்படக் கூடிய பெண்களாக இருப்பார்கள். அனைவரிடமும் வெளிப்படையாக பேச மாட்டார்கள். தங்கள் மீது பொறாமை கொள்ளும் நபர்களையும் வெறுக்க மாட்டார்கள்.

👧 நவம்பர் மாதத்தில் பிறந்த பெண்கள் மற்றவர்களை விட ஒருப்படி முன்னே இருக்க வேண்டும் என எண்ணுவார்கள். பொய்களை வேகமாக கண்டுபிடித்துவிடுவார்கள். உண்மையாக இருக்க விரும்பும் இவர்கள், உண்மையை மட்டுமே கேட்க விரும்புவார்கள்.

👧 டிசம்பர் மாதத்தில் பிறந்த பெண்களிடம் பொறுமை பெரிதாக இருக்காது. ஆனால் இவர்கள் அதிர்ஷ்டமான நபர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துக் கொண்டு வெற்றிக்கனியை பெற்றுவிடுவார்கள். திறந்த மனதுடன் பேசுவார்கள். இவர்களுக்கானவை இவர்களுக்கு கிடைக்காமல் போகாது.


திங்கள், 24 ஜூன், 2019

ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானியங்கள்


ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானியங்கள்...

மருத்துவ குணங்களும், போஷாக்கும் நிறைந்த சிறுதானியங்களை அதிக அளவில் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உண்பது சாலச்சிறந்தது.

மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம், இவைகளில் முக்கியமாக உணவு அமைந்துள்ளது. மனித உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும், ஊட்டங்களும் நம்முடைய உணவில் ஒரு சேர உள்ளது. இவைகளில் முக்கிய பங்கு வகிப்பவை சிறு தானியங்கள். இதில் புரதம், வைட்டமின்கள், கொழுப்பு சத்து, மினரல்கள், கார்போஹைட்ரேட்டுகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதனால் உடல் எடை அதி கரித்தல், இதய நோய்கள் வராமல் நமது உடலை பாதுகாக்கிறது.

இன்றைய நவீன உலகில் சுத்திகரிக்கப்பட்ட -எனும் முறையால் தானியத்தில் தவிடு மற்றும் கிருமி முழுவதுமாக நீக்கப்படுகிறது. மீதம் உள்ள சூழ்தசையில் வெறும் கார்போஹைரேட்டு சத்து மட்டுமே இருக்கிறது. மற்ற சத்துக்கள் முழுவதுமாக நீக்கப்படுகிறது. இதை உட்கொள்ளும் மனிதனுக்கு நோய்கள் அழையா விருந்தாளியாக வந்து விடுகிறது.

எந்த உணவுகள் உட்கொள்ள வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்று தெரியாமலேயே மனிதன் வாழ்ந்து வருகிறான். பிறகு நோய்கள் வந்த நிலையில் மருந்துகளையே உணவிற்கு பதிலாக உண்டு வாழும் அவல நிலைக்கு தள்ளப்படுகிறான். சிறு தானிய உணவு உண்பதால் கிடைக்கும் 20 விதமான நன்மைகளை விரிவாக பார்க்கலாம்.

 *ஊட்டச்சத்து*

உடலின் சரியான செயல் பாட்டிற்கு தேவையான பல ஆரோக்கியமான ஊட்டசத்துக்கள் சிறு தானியங்களில் நிறைந்துள்ளன. ரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் ரத்த ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கத் தேவைபடும் இரும்புச்சத்து மற்றும் செம்பு (காப்பர்) ஆகியன நிறைந்த அளவில் உள்ளன. மேலும் சிறு தானியங்களில் ரத்த அழுத்தத்தை கட்டுபடுத்த உதவும் பாஸ்பரஸ் உள்ளது. எனவே இது ரத்த கோசையை குணப்படுத்த உதவும் சிறந்த உணவாக கருதப்படுகிறது. சிறுதானியங்களில் கால்சியமும் உள்ளது. எனவே சிறுதானியங்களை வழக்கமான முறையில் உணவில் சேர்த்து கொண்டால் எலும்புகளை வலுவடைய செய்கிறது.

 *கரோனரி தமனி கோளாறுகளை தடுக்கிறது*

சிறுதானியங்கள் அதிக அளவு உட்கொள்வது உடலில் உள்ள டிரைகிளிசரைடுகளில் அளவினைக் குறைக்க உதவும். சிறுதானியங்கள் ரத்தத் தட்டை அணுக்கள் தடிமன் ஆவதைத் தடுத்து ரத்தத்தை திரவ நிலையிலேயே வைத்து கொள்ள உதவுகிறது. இதனால் வாதம் மற்றும் கரோனரி தமனி கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு பெருமளவில் குறைக்கப்படுகிறது.

 *அதிக அளவு வைட்டமின் “பி”*

சிறுதானியங்களில் உள்ள வைட்டமின் “பி” கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்பினைத் திறமையாக உடைத்து அதனை ஆற்றலாக மாற்றுகின்றது. வைட்டமின் பி ரத்தத்தில் உள்ள ஹோர்மோசைஸ்டீன் அளவைக்குறைக்கிறது. இவ்வாறு குறைப்பதன் மூலம் கொழுப்புகள் ஒன்றோடொன்று சேர்ந்து கொழுப்பு கட்டியாக மாறுவதும், கொழுப்புகள் உடலிலேயே தங்குவதும் தடுக்கப்படுகிறது. நியாசின் ரத்த ஓட்டத்தின் போது கொழுப்பு எடுத்துச் செல்லப்படுவதை தடுக்கிறது. மேலும் நல்ல கொழுப்பு எனப்படும் உயர் அடர்த்தி புரத கொழுப்பின் அளவினை ரத்தத்தில் அதகரிக்க செய்கிறது. இது ரத்த நாளங்களின் தடிப்பு மற்றும் ரத்தக் கசிவு ஏற்படுவதிலிருந்தும் இதயத்தை பாதுகாக்கிறது.

 *பசையம் (குளுட்டம்) அறவே இல்லை*

காய்கறிகளை மட்டும் உண்ணும் சைவப் பிரியர்களால் மிகவும் நேசிக்கப்படும் உணவு சிறு தானியங்களாகும். ஏனெனில் சிறு தானியங்களில் நிறைந்திருக்கும் புரதசத்து தான் இதற்கு காரணம். தினசரி கார்போஹைட்ரேட் மூலம் தேவைப்படும் புரதச்சத்தின் அளவு இறைச்சி உணவுகளை விட சிறு தானியங்களில் அதிக அளவில் கிடைக்கிறது. இறைச்சி உணவுகளில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு மற்றும் பிற ஆரோக்கியமற்ற பொருட்கள் சிறு தானியங்களில் இருக்கும் புரதகூட்டமைப்பு கோதுமையில் உள்ளது போலவே இருக்கிறது. ஒரே ஒரு விதிவிலக்கு என்ன வென்றால் அதிக சத்துகள் அடங்கிய சிறு தானியங்களில் பசையம் (குளுட்டன்) எனப்படும் ஒட்டும் தன்மை கொண்ட பசை போன்ற பொருள் காணப்படுவது இல்லை. ஆனால் முழு கோதுமையில் அதிக அளவு பசையம் (குளுட்டன்) உள்ளது. பசையம் சிறுதானியங்களில் இல்லாத காரணத்தால் செரிமானத் தன்மையை அதிகமாக்குகிறது.

 *விரைவான உடல் எடை இழப்பு*

சிறுதானியங்களில் டிரிப்டோபான் எனப்படும் அமினோ அமிலத்தை கொண்டுள்ளது. இந்த அமினோ அமிலம் பசியின்மையை குறைத்து சரியான எடையை நிர்வகிக்க உதவுகிறது. டிரிப்டோபான் மூலம் உணவு செரிமானத்தை மெதுவான வேகத்தில் நடத்துகிறது. இதன் மூலம் நீண்ட காலத்திற்கு வயிற்றினை முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. சிறு தானியங்களில் நார்சத்து மிகுதியாக உள்ளது. மேலும் அடிக்கடி பசிப்பதை தடுத்து அதிகமாக உண்பதையும் தடுக்கிறது. இதனால் உடல் எடையை இழக்க விரும்புபவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை வீதம் தங்களின் முக்கிய உணவில் ஒன்றாக சிறுதானியங்களை சேர்த்து கொள்ள வேண்டும்.

 *புற்றுநோய்*

சிறுதானியங்களில் நார்சத்து மற்றும் தாவர ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன. நார்சத்து மற்றும் தாவர ஊட்டசத்துக்கள் இவ்விரண்டும் சேர்ந்து க்கோலான் புற்று நோய் வளரும் அபாயத்தை குறைக்கும். லிக்னைன் எனப்படுவது சிறு தானியங்களில் உள்ள தாவர ஊட்டச்சத்தானது. பாலூட்டிகளின் குடலில் உள்ள லிக்னைனாக மாற்றுகிறது. இவ்வாறு மாற்றப்படும் லிக்னைன் மார்பக புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. உண்மையில் சிறுதானியங்களை உட்கொள்வது மூலம் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயத்திலிருந்து 50% குறைக்கலாம்.

 *உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்தல்*

தமனிகளில் உள்ள உட்சுவரினை தளர்த்துவதற்கு சிறு தானியங்களில் உள்ள மெக்னீசியம் பயன்படுகிறது. இவ்வாறு தமனியின் உட்சுவர் தளர்வதனால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது குறைக்கப்படுகிறது. மேலும் இது மூச்சுத்தடை நோய் (ஆஸ்துமா) மற்றும் ஒற்றைதலைவலிகள் ஏற்படுவதன் அளவினை குறைக்கிறது.

 *பசையம் ஒவ்வாமை நோயை தடுத்தல்:*

பசையம் ஒவ்வாமை நோய் என்பது சிறு குடலை சேதப்படுத்தும் ஒரு வகையான நோய் ஆகும். இந்நோய் ஏற்படுவதினால் சிறுகுடல் பாதிக்கப்பட்டு உணவில் இருந்து ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களால் பசையம் போன்ற பசை தன்மை கொண்ட பொருளை தாங்கி கொள்ள முடியாது. இதன் காரணமாகத் தான் சிறுதானியங்களை உட்கொள்ள அதிக அளவில் பரிந்துரை செய்யப்படுகிறது. சிறுதானியங்களில் பசையம் கிடையாது. எனவே இந்நோயிலிருந்து காத்து கொள்ளலாம்.

 *நீரிழிவு நோய்*

சிறு தானியங்களில் குறைந்த கிளைசிமிக் குறியீடு இருப்பதினால் செரிமானத்திற்கான செய்முறைகள் குறைந்த அளவில் மெதுவாக நடைபெறுகின்றது. இதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை ஒரு நிலையான விகிதத்தில் வைத்து கொள்ள உதவுகிறது. அதிலும் குறிப்பாக வைகை-2 நீரிழிவு எனப்படும் நீரிழிவு நோய். மேலும் வழக்கமாக உட்கொள்ளப்படும் கேழ்வரகு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த பயன் அளிக்கிறது.

 *நார்ச்சத்து நிறைந்தது*

சிறு தானியங்களில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. எனவே சிறு தானியங்கள் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. ஆதலால் இவை மிகுந்த செரிமானத் தன்மை மற்றும் ஒவ்வாமை இல்லாத தானிங்களாக கருதப்படுகிறது. சிறுதானியங்களின் மலமிளக்கி பண்புகள் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக அமைகின்றன. சிறுதானியங்களில் உள்ள லெசித்தின் மற்றும் மீத்தியோனின் கல்லீரலில் இருந்து உடலுக்கு தீங்குகளை விளைவிக்கும் கொழுப்பினை வெளியேற்ற உதவுகின்றன.

இதனால் பித்தப்பையில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகின்றன. அதுவும் குறிப்பாய் பெண்கள் நார்ச் சத்து மிகுதியான உணவு களை உட்கொண்டால் கல் உருவாகுதலை தடுக்க உதவும். மேலும் பித்தப்பையில் கற்கள் உருவாவதற்கு காரணமான பித்த அமிலங்களின் சுரப்பை குறைக்கிறது. நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவினை உண்ணாதவர்களுடன் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து உண்பவர்களுக்கு 13 சதவீதம் பித்தப்பை கற்கள் உருவாகுவது குறைக்கப்படுகிறது என பல ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சிறுதானியங்களில் உள்ள அதிக அளவிலான உயிர்வளியேற்ற எதிர்பொருள்கள் உடலில் உள்ள தீவிரமான நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடுகின்றன. மேலும் உயிர்வளியேற்ற எதிர்ப் பொருள்கள் மிக விரைவில் வயதாவதற்கான செயல் முறையின் வேகத்தையும் குறைக்கின்றன. இதனாலேயே மருத்துவர்கள் சிறுதானியங்களை மிகப்பெரும் மருந்தாக சிறியவர்கள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பரிந்துரைக்கின்றனர். தசைகள் சீரழிவதை குறைக்கிறது.

சிறுதானியங்கள் அதிக புரதச்சத்து மிகுந்த தானியமாகவும் மற்றும் அமினோ அமிலங்களில் ஒன்றான லைசினையும் கொண்டுள்ளது. இவை இரண்டும் தசைகள் குறைபாட்டை குறைத்து வலிமையான தசைகள் உருவாகுவதற்கு உதவுகிறது. எனவே சிறுதானியங்கள் தசைகளுக்கு மிகவும் ஏற்ற உணவாக இருக்கிறது.

 *தூக்கக் குறைபாட்டினை குறைக்கிறது*

சிறுதானிங்களில் உள்ள டிரிப்டோபேன் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். செரோபோனின் அளவை அதிகப்படுத்துகிறது. எனவே ஒவ்வொரு இரவும் ஒரு குவளை சிறுதானியங்களால் செய்யப்படும் கஞ்சியினைக் குடித்து வந்தால் ஒலியற்ற மற்றும் அமைதியான தூக்கத்தினைப் பெற முடியும். தூக்கமின்மையால் அல்லல்படுபவர்கள் இரவில் சிறு தானியங்களை உண்ணலாம். பாலூட்டும் தாய்மார்கள் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவில் சிறுதானியங்களில் ஒன்றான கேழ்வரகு அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. கேழ்வரகு உடலில் மார்பகப் பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் தாய் தன் குழந்தைக்கு நீண்ட காலம் உணவளிக்க உதவுகிறது.

 *அதிக அளவு பாஸ்பரஸ்*

சிறுதானியங்களில் பாஸ்பரஸின் அளவு அதிகமாக உள்ளது. பாஸ்பரஸ் செல்களின் வடிவத்தை கட்டமைக்க உதவுகிறது. சிறு தானியங்களில் உள்ள அடினைன் டிரைபாஸ்ட் எனும் கலவைகள் உள்ளன. இவை உடலின் ஆற்றலை பலமடங்கு அதிகரிக்கின்றது. மேலும் பாஸ்பரஸ் உடலின் அத்தியாவசியமான லிப்பிடு கூட்டமைப்பினை கொண்டுள்ளது.அதிலும் குறிப்பாக உயிரணு சவ்வுகள் மற்றும் நரம்பு மண்டல அமைப்பு போன்றவற்றிற்கு பாஸ்பரஸ் இன்றியமையாத தேவையாக உள்ளது.

 *இளமையான சருமம் பெறுதல்*

அதிக அளவு சிறுதானியங்களை உட்கொள்வதன் மூலம் சருமத்தை மேலும் இளமையுடன், மிருதுவான தோற்றத்துடனும், பொலிவடைய செய்கிறது. சேதமடைந்த செல்களை புதுப்பிக்க உதவுகிறது. மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

சிறுதானியங்களில் உள்ள செலினியம், வைட்ட மின்&சி, வைட்டமின்&பி போன்றவை சூரியனால் தோலில் ஏற்படும் சேதம் மற்றும் புற்றுநோய்க்கு எதிராக சருமத்தை காக்கிறது. சிறுதானியங்களில் தோலில் புதுசெல்கள் வளர்வதை ஊக்குவிக்கிறது. சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுக்கின்றன.

சிறுதானியங்கள் உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியினை ஊக்குவிக்கிறது.

 *இளநரை*

இளம் வயதிலேயே முடி நரைப்பது அல்லது மொட்டையாவது, செம்பட்டையாக மாறுவது திசுக்களில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றம் மூலம் நடைபெறுகிறது. சிறுதானியங்களில் உள்ள சக்தி வாய்ந்த உயிர்வளியேற்ற எதிர்ப்பொருட்கள் திசுக்களில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கின்றன. இதன் மூலம் விரைவில் முதிர்ச்சி அடைந்து முடிகள் நரைப்பதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குறைக்கப்படுகின்றன-. சிறுதானியங்களை இளைஞர்கள், இளைஞிகள் அதிக அளவில் பயன்படுத்துவது நல்லது.

 *கீழ்வாதம் எலும்பு முறிவு*

கீழ்வாதம் வருவது தடுக்கப்படுகிறது. எலும்பு முறிவுகளிலிருந்து மிக விரைவில் மீள உதவுகிறது. இவ்வளவு நன்மைகளை உள்ளடக்கிய சிறு தானியங்களை அதிகம் உணவாக எடுத்து கொள்வது நல்லது. இவ்வளவு மருத்துவ குணங்களும், போஷாக்கும் நிறைந்த சிறுதானியங்களை அதிக அளவில் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உண்பது சாலச்சிறந்தது.

 *நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்*

ஞாயிறு, 23 ஜூன், 2019

ஊடகங்கள் எப்படி கடமையாற்ற வேண்டும்??

ஊடகங்கள் எப்படி கடமையாற்ற வேண்டும்??

 திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம்.
ஒரு நாள் மாலை வேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு.
“ஹலோ… ரேடியோ ஸ்டேஷனா?’
“ஆமாங்க.’
“நான் டீன் பேசறேன். ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியிலிருந்து… ஒரு முக்கிய மான விஷயம்.’
“சொல்லுங்க டாக்டர்.’
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு ஆக்சிடெண்ட் நடந்துபோச்சி!’
“எங்கே டாக்டர்?’
“பாளையங்கோட்டை ரயில்வே கிராசிங் தாண்டி… கொஞ்ச தூரத்துலே…’
“பெரிய விபத்தா டாக்டர்?’
“ஆமாம்… வடநாட்டு சுற்றுலா பஸ் ஒன்றும் ஒரு லாரியும் மோதிக்கிட்டதுலே, டிரைவர் உள்பட கொஞ்ச பேர் அந்த இடத்துலேயே இறந்துட்டாங்க. அடிபட்டு உயிருக்குப் போராடிக் கிட்டிருக்கிறவங்களை எல்லாம் இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்காங்க. இந்த நேரத்துலே உங்களாலே ஒரு உதவி!’
“சொல்லுங்க டாக்டர்… எங்களாலே முடிஞ்சது எதுவா இருந்தாலும் செய்யிறோம்.

“வேறே ஒண்ணுமில்லே. இப்ப இங்கே எங்ககிட்டே வந்து சேர்ந்திருக்கறவங்களுக்கு எல்லாம் உடனடியா ரத்தம் செலுத்தியாகணும். அப்படி செஞ்சா அவங்களையெல்லாம் காப்பாத்திப்புடலாம்.’
“சரி.’
“ஆனா போதுமான ரத்தம் இப்ப பிளட் பாங்க்ல இல்லே. பொதுமக்கள் யாராவது வந்து ரத்தம் கொடுத்தா இவங்கள்லாம் பிழைச்சுக்குவாங்க. இப்ப நான் உங்ககிட்டே கேட்டுக்கறது என்னன்னா, உடனடியா இது சம்பந்தமா நீங்க ரேடியோவுல ஒரு அறிவிப்பு கொடுக்க முடியுமா?’
“இப்பவே நாங்க அதுக்கு ஏற்பாடு செய்யறோம். நீங்க மற்ற வேலைகளைக் கவனிங்க.’
வானொலி நண்பர்கள் உடனே செயலில் இறங்கினார்கள். அந்த சமயத்தில் திரைப்பட இசை ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அவசரம் அவசரமாக அறிவிப்பு ஒன்று எழுதப்பட்டது நாலு வரிகளில்.
“நேயர்களே! ஒரு முக்கிய அறிவிப்பு. சற்று முன் நேர்ந்த ஒரு விபத்தினால் பாதிக்கப் பட்டவர்களைக் காப்பாற்ற ரத்தம் தேவைப்படுகிறது. ரத்த தானம் செய்ய விரும்புகிறவர்கள் உடனடியாக பாளையங் கோட்டை மருத்துவமனைக்கு விரைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.’
அறிவிப்பாளர் தூத்துக்குடி ராஜசேகரன், ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாடலை நிறுத்தி இடையே அந்த அறிவிப்பை வாசிக்கிறார். ஒரு முறைக்கு இருமுறையாக இந்த அறிவிப்பு வாசிக்கப்படுகிறது. மறுபடியும் படப்பாடல்கள் தொடர்கின்றன. ஒரு இருபது நிமிடங்கள் கடந்திருக்கும். இன்னும் இரண்டு பாடல்களை ஒலிபரப்ப நேரம் இருந்தது. அந்த சமயத்தில் மறுபடியும் தொலைபேசி அழைப்பு.
“ஹலோ!’
“”சார்… மறுபடியும் ஹை கிரவுண்ட் ஆஸ்பத்திரியில் இருந்துதான் பேசறோம். நீங்க உடனே இன்னொரு அறிவிப்பு செய்யணும்.’
“என்ன சொல்லணும்… சொல்லுங்க டாக்டர்.’
“தயவு செய்து மேற்கொண்டு யாரும் ஹைகிரவுண்ட் ஆஸ்பத் திரிக்கு ரத்ததானம் செய்ய வர வேண்டாம்னு சொல்லணும்.’
“என்ன ஆச்சு டாக்டர்?’
“ஏகப்பட்ட பேர் ரேடியோ அறிவிப்பைக் கேட்டுட்டு ரத்தம் கொடுக்க இங்கே வந்துட்டாங்க… கூட்டத்தை எங்களாலே சமாளிக்க முடியலே. அவ்வளவு பேர்கிட்டே ரத்தம் கலெக்ட் பண்ணவும் இப்ப இங்கே வசதி இல்லே. ப்ளீஸ்…!’
மறுபடியும் வானொலி அறிவிக்கிறது.
“இனி யாரும் அங்கே செல்லத் தேவையில்லை என்பதை நன்றி யோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
மறுநாள் மருத்துவமனைக்குப் போகிறோம். படுக்கையில் இருந்தவர்கள் பாசத்தோடு எங்களைப் பார்க்கிறார்கள். பாஷை ஒரு தடையாக இல்லை.
ஊடகங்கள் சமுதாயத்திற்கு எப்படிக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டீர்கள். இந்த உண்மை நிகழ்ச்சி அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.”
#தென்கச்சி_கோ_சாமிநாதன்

வெள்ளி, 21 ஜூன், 2019

வாழைப்பழ தினம்


வாழைப்பழ தினம்

ஏப்ரல் 18   இன்று வாழைப்பழ தினம் .வாழைப்பழம் (banana) என்பது தாவரவியலில் சதைப்பற்றுள்ளக் கனியும்,[வாழைப் பேரினத்தில் உள்ள பெரும் குறுஞ்செடி வகைப் பூக்கும் தாவரத்தில் உற்பத்தியாகும் உண்ணத்தக்க பழமாகும். மா, பலா, வாழை என்று முக்கனிகளில் கடைசி பழமாக இருந்தாலும் உலக மக்களால் தினம் விரும்பி சாப்பிடப்படும் முதல் பழம் வாழைப்பழமே.எந்த காலத்திலும் எப்போதும் எந்த இடத்திலும் கிடைக்கக்கூடிய இனிய பழம் இது சுபகாரியங்கள் அனைத்திலும் முதலிடம் பெறுவது இப்பழம் குழந்தைகள் முதல் குடுகுடு கிழவன் விரும்பி உண்ணும் பழம் சில நாடுகளில் இது சமைக்கும் வாழைக் காய்களாகப் பயன்படுத்தப்படுகிறது. இப்பழங்கள் அளவு, நிறம், கெட்டியான தன்மை என்பவற்றால் பல வகைகளாக உள்ளபோதிலும், அவை பொதுவாக நீண்டு வளைந்திருக்கும். மிருதுவாக சதையைக் கொண்ட இது மஞ்சள், பச்சை, சிவப்பு, பளுப்பு, ஊதா நிறத் தோல்களினால் மூடப்பட்டிருக்கும்.

வரலாறு

   வாழைப்பழம் முதலில் ஆசியாவில் தோன்றியது பின்னர் . மத்திய அமெரிக்கா, வட அமெரிக்காவிற்கு போனது. கி.மு 327 ல் அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார். திரும்பிப் போகும் போது கிரேக்க நாட்டிலும் மேலை நாடுகளிலும் அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.. அரேபியர்கள் இதை அடிமை வியாபாரத்துடன் சேர்த்து விற்பனை செய்தனர். முற்காலத்தில் வாழைப்பழம் விரல் நீளம்தான் இருக்கும். அரேபிய மொழியில் பனானா என்றால் விரல் என்று அர்த்தம். எனவே இப்பழத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

   பேயன் வாழைப்பழம், ரஸ்தாளி வாழைப்பழம், பச்சை வாழைப்பழம், நாட்டு வாழைப்பழம், மலை வாழைப்பழம், நவரை வாழைப்பழம், சர்க்கரை வாழைப்பழம், செவ்வாழைப்பழம், பூவன் வாழைப்பழம், கற்பூர வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், நேந்திர வாழைப்பழம், கரு வாழைப்பழம், அடுக்கு வாழைப்பழம் வெள்ளை வாழைப்பழம், ஏலரிசி வாழைப்பழம், மோரீஸ் வாழைப்பழம் என பலவகைகள் உள்ளன.

பேயன்



 தடிமனான தோல் கொண்ட இனிப்புச்சுவை உள்ள பழம்
  அதிக சூடான உடம்பைப் பேயன்பழம் மூலம் சமன்படுத்தலாம். அதாவது சூட்டைத் தணிக்கும் தன்மை கொண்டது பேயன்.
  குழந்தைகளுக்கு ஏற்படும் கணச் சூட்டைத் தணிக்கும் இயல்பு கொண்டது
உடல் நலத்திற்கு நல்லது
 மலச்சிக்கலை நீக்கும்
 உடலில் அதிகக் குளிர்ச்சி கொண்டவர்கள் இப்பழத்தை நாடுவது நல்லதல்ல. ஏனெனில் இது நுரையீரலில் கோழையைக் கட்ட வைத்து நுரையீரலைக் கெடுத்துவிடும். வாரத்திற்கு இரண்டோ மூன்றோ சாப்பிடலாம்.

ரஸ்தாளி



    உண்பதற்கு சுவையாக இருக்கும் இப்பழம் வாத உடம்புக்காரர்களுக்கு ஆகாது என்பார்கள்.
இதைச் சாப்பிட்டதும் வயிறு நிரம்பியதைப் போன்று திம் மென்று ஆகிவிடும்.
பசியை மந்தப்படுத்தும் இப்பழத்தை அதிகமாக உண்ணாமல் இருப்பது நல்லது.
பலர் உணவு உண்டதும் ரஸ்தாளியை உண்பர். இது தவறு. உடனே சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படும்.
ஊட்டச்சத்து நிரம்பியதாக இருப்பினும் மந்தத்தை தரும்.
அளவுக்கு அதிகமாக மாவுச்சத்து இருப்பதால் நீரழிவுக்காரர்கள் இப்பழத்தை நினைக்காமலிருப்பது நல்லது.
வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த நன்கு கனிந்த ரஸ்தாளியை ஒரு டம்ளர் நீரில் நன்றாக பிசைந்து, கரைத்துக் குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
வளரும் குழந்தைகளுக்கு அரை ரஸ்தாளியை தேனில் கலந்து கொடுத்து வந்தால், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

பச்சை



       பச்சை நிறத்தில் இருப்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது.
பச்சை நாடன் என்றும் இப்பழத்தை அழைப்பார்கள்.
நன்கு கனிந்த இப்பழம் மிகவும் சுவையாக இருக்கும். கனிந்தவுடனே சாப்பிட்டுவிட வேண்டும். ஏனெனில் இப்பழம் சீக்கிரம் கெட்டுவிடக் கூடியது. (அதாவது கால தாமதமாய்ச் சாப்பிடலாம் என நினைத்தால் இப்பழம் விரைவில் அழுகத் தொடங்கிவிடும்.)
இப்பழம் அதிகக் குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது.
குறைந்த அளவே இப்பழத்தைச் சாப்பிடுவது நல்லது.
அதிக உடல் சூடுடையயவர்கள் அவ்வப்போது சாப்பிடுவது நல்லது.
காசம், ஆஸ்துமா, வாதம் நோய்க்காரர்கள் தொடமலிருப்பது நல்லது.
மேற்கண்ட நோய்க்காரர்கள் குறைந்த அளவே சாப்பிட்டாலும் நோய்களை அதிகப்படுத்தும்.
பித்தத்தை இப்பழம் அதிகப்படுத்தும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.
மலச்சிக்கலை நீக்கும் குணம் கொண்டது.
மலை



      சற்று விலை அதிகமான பழம்.
வாத நோய்க்காரர்களைத் தவிர மற்றவர்கள் தாராளமாய் உண்ண வேண்டிய பழம்.
நல்ல ருசியும், அருமையான வாசனையும் கொண்ட பழம்.
இதிலே சிறு மலைப்பழம் என்றொரு வகை உண்டு. இது மிகவும் இனிப்பாக இருக்கும்.
சற்று பசியை மந்தப்படுத்தும் என்றாலும் ரஸ்தாளி அளவுக்கு மந்தப்படுத்தாது.
இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் அழகு பெறும்.
தினமும் பகல், இரவு உணவுக்கு பின்னர் சற்று கழித்து சாப்பிட்டு வந்தால் இரத்த விருத்தி ஏற்பட்டு உடல் வலு பெறும்.
பசினை மந்தப்படுத்தும் என்றாலும் நல்ல மலமிளக்கியாக உதவும்.
நல்ல ஜீரண சக்திக்கு பயன்படும். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
அஜீரண கோளாறு நீங்க ஆமணக்கு எண்ணெயை சிறிதளவு எடுத்து மலை வாழைபழத்தில் விட்டு பிசைந்து இரண்டு வேளை (எந்த வேளையானாலும் சரி) சாப்பிட்டு வர கோளாறுகள் நீங்கும் சற்று பேதியாகும்.
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டு வருவது நல்லது.பொதுவாக இரத்த சோகை கொண்டவர்கள் சாப்பிட்டு வந்தால் இரத்தம் பெருகும்.
செவ்வாழை


    வாழைப் பழங்களிலேயே அதிக அளவு சத்துக்கள் கொண்டது இப்பழம்
சிவப்பு நிறத்தில் தடிமனாகவும், சற்று நீளமாகவும் இருப்பது
கேரளாவில் அதிகம் விளையும் இப்பழம் சாப்பிட ருசியாகவும் இருக்கும்.
சற்று விலை அதிகமானது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிட வேண்டிய நல்ல சத்துள்ள பழம்.
செவ்வாழைப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவரின் உடலில் நோய் எதிர்ப்ப ஆற்றல் பெருகும். தொற்றுநோய்கள் இவர்களிடம் தோற்று ஓடும்.
.*பல் சம்பந்தமான நோய்கள் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் போகும்.

இருதயம் பலப்படும்
பல்வேறு வகையான தொற்றுநோய்களை செவ்வாழை அண்ட விடாது.
பொதுவாக செவ்வாழைப்பழத்தை எல்லோரும், எல்லாக் காலத்திற்கும் சாப்பிட்டு உடல் ஆரோக்கியம் பெறலாம்.
வாழைப்பழத்திலுள்ள சத்துக்கள்

நீர் (ஈரப்பதம்) - 66.4 கிராம்
நார் - 0.4 கிராம்
கொழுப்பு - 0.3 கிராம்
புரதம் - 1.2 கிராம்
மாவுப்பொருள் - 28.0 கிராம்
சக்தி (எனர்ஜி) - 114.0 கலோரி
பாஸ்பரஸ் - 36.0 மி;.லி
இரும்புச்சத்து - 0.8 மி.கி
சுண்ணாம்புச் சத்து - 16.0 மி.கி
தையாமின் - 0.05 யு.ஜி
கரோட்டின் - 0.78 மி.கி
ரைபோஃபிளேவின் - 0.07 மி.கி
நியாசின் - 0.5 மி.கி
வைட்டமின் ஏ - 12.0 ஐ.கியு
வைட்டமின் பி1 - 0.5 மி.கி
வைட்டமின் பி2 - 0.08 மி.கி

முதல்வரின் அதிரடியால் கண்கலங்கிய செகரட்டரி... அப்படி என்ன செய்தார்? காமராஜர்.



முதல்வரின் அதிரடியால் கண்கலங்கிய செகரட்டரி... அப்படி என்ன செய்தார்? காமராஜர்.

காமராஜர் பற்றிய முந்தைய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.முதல்வரால் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பங்கள்...!!

👉முதல்வராக கர்மவீரர் காமராஜர் பதவியேற்ற முதல் ஆண்டு. அப்போது இருபது எம்பிபிஎஸ் இடங்கள் முதல்வர் கோட்டாவில் வழங்கப்படும். இதற்காக தேர்வு செய்யப்பட்ட நூறு விண்ணப்பங்களை முதல்வர் மேஜையில் வைத்தார் சீப் செகரட்டரி. அப்போது காமராஜர் கேட்டார் இது என்ன கோப்புகள் என்று?

👉அதற்கு சீப் செகரட்டரி, ஐயா! ஒவ்வொரு ஆண்டிலும் அரசாங்க மருத்துவ கல்லூரிகளில் இருபது எம்பிபிஎஸ் இடங்கள் முதல்வர் கோட்டாவில் வழங்கப்படும். அதற்காக மாவட்ட வாரியாக தேர்வு செய்யப்பட்ட நூறு விண்ணப்பங்கள் இங்கே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் இருபது விண்ணப்பங்களை நீங்கள் பொறுமையாக தேர்வு செய்து தாருங்கள். இன்னும் இதற்கு கால அவகாசம் உள்ளது என்று கூறினார் சீப் செகரட்டரி.

👉அதற்கு காமராஜர் அவ்வளவு நேரம் எதற்கு? உடனே தருகிறேன் என்று விண்ணப்பங்களை பார்த்து இருபதை தேர்வு செய்து சீப் செகரட்டரியின் கையில் கொடுத்தும் விடுகிறார். சீப் செகரட்டரிக்கு ஒரே ஆச்சரியம். முதல்வரை பார்த்து, எதை வைத்து உடனே விண்ணப்பங்களை தேர்வு செய்தீர்கள் என்று கேட்கிறார்.

👉அதற்கு காமராஜர், 'பெற்றோர் கையொப்பம்" என்ற இடத்தில் யாரெல்லாம் 'கைரேகை" வைத்திருக்கிறார்களோ அவற்றைத்தான் தேர்ந்தெடுத்தேன். மேலும் முதல் தலைமுறையில் படிக்காதவர்களின் வீட்டு பிள்ளைகள் அடுத்த தலைமுறையிலாவது படித்து முன்னேறட்டுமே என்று காமராஜர் சொன்னவுடன் கண்கலங்கி நின்றாராம் சீப் செகரட்டரி.


👉காமராஜர் 'படித்துவிட்டு வேலை கிடைக்காமல், ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம், ஓராசிரியர் பள்ளிகளுக்கு (ஒரே ஒரு ஆசிரியர் வைத்து இயங்கும் பள்ளி) ஆசிரியர்களாக நியமித்துவிட்டால் என்ன? 'அ" - 'ஆ", 'அம்மா, அப்பா, படம், பட்டம், மரம், மாடு"-ன்னு கற்றுத் தரப் பயிற்சி ஆசிரியர்தான் தேவையா?" என்று வினவினார். அன்றைய பள்ளிக்கல்வி இயக்குனராக இருந்த திரு.நெ.து.சுந்தர வடிவேலு இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

👉எங்கும் ஓராசிரியர்கள் பள்ளிகளுக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். பின்னர் அவர்களுக்கு இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் அரசாங்கத்தின் செலவிலேயே ஆசிரியர் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த திட்டத்தினால், எத்தனையோ படித்த வேலையற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தன.

👉இதன்பிறகு எல்லா கிராமங்களிலும் இரவுப் பாடச்சாலைகள் தொடங்கப்பட்டன. முதியோர்கள் கல்வி கற்கலானார்கள். எழுத்துக்கள், எண்கள் எழுத படிக்க கற்றுக்கொண்டார்கள். காமராஜர் ஆட்சியில் கல்வி நிலை உயர்வடைந்தது.

காமராஜர் கல்வித்துறை மட்டுமல்லாது மற்ற துறைகளில் செய்த திட்டங்களை பற்றி நாளைய பகுதியில் பார்க்கலாம்.


சனி, 15 ஜூன், 2019

தந்தையை வணங்குவோம்: இன்று தந்தையர் தினம்


தந்தையை வணங்குவோம்: இன்று தந்தையர் தினம்

பத்து மாதங்கள் தாய் நம்மை சுமந்தாலும், ஆயுள் வரை நெஞ்சில் சுமப்பவர் தந்தை. முள்ளுக்குள் ரோஜாவாய், பலாப்பழத்தில் பலாச்சுளையாய்  இருந்து சந்தோஷமும், பெருமையும் தருபவர் தந்தை. வாழ்க்கைச் சக்கரத்தில் வசதியாய் நாம் வாழ்வதற்காக, ஓயாமல் சுழலும் அன்புச் சக்கரம்  தந்தை. ‘நான் பட்ட கஷ்டம்’, என் பிள்ளையும் படக்கூடாது என்று அனுதினமும் உழைப்பவர் தந்தை. இத்தகைய சிறப்பு மிக்க தந்தையை வாழ்த்த  இன்று உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினம் கொண்டாடப்படும் தேதி நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும், இந்தியா உள்ளிட்ட  பெரும்பாலான நாடுகளில் ஜூன் 3வது ஞாயிறு கொண்டாடப்படுகிறது. சிறு வயதிலேயே குழந்தைகள் தந்தையை மதிக்க கற்றுத் தருவதே  இத்தினத்தின் நோக்கம்.

அமெரிக்காவில் 1909ல் சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட் என்ற இளம் பெண் தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன் வைத்தார்.  அன்னையர் தினம் கொண்டாடும் போது, தந்தையர் தினம் ஏன் கொண்டாடக்கூடாது என வலியுறுத்தினார். தனது தாயாரின் மறைவுக்கு பிறகு தந்தை  வில்லியம், ஆறு குழந்தைகள் கொண்ட தனது குடும்பத்தை கடும் சிரமங்களுக்கிடையே பராமரிப்பதை கண்டார். இதுதான், தந்தையர் தினம்  கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்கு தூண்டியது. இதன்படி 1910ம் ஆண்டு முதன் முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.  1972ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

 தாயின் அன்புக்கு எவ்வகையிலும் குறைந்து விடுவதில்லை தந்தையின் அன்பு. சிறு வயது முதல் பிள்ளைகள் விரும்பியவற்றை செய்து தருகிறார்.  பிள்ளைகளின் கல்வி முதல் திருமணம் வரை அனைத்திலும் தந்தையின் பணி அளவிட முடியாதது. எத்தனையோ இன்னல்கள் பட்டாலும் அதை  வெளிக் காட்டாமல் துன்பத்தின் சாயல் தனது பிள்ளைகள் மீது படிந்து விடாமல் அனைத்தையும் தம் தோளில் சுமந்தே தன் குழந்தைகளுக்காக  ராத்தூக்கம், பகல் தூக்கம் இன்றி பல தியாகங்கள் புரிந்த, புரியும் தந்தையர்களை நாம் போற்ற வேண்டும்.

இன்றைய அவசர உலகில் நாம், நம் தந்தையருக்கு தள்ளாத வயதில் அவர்களுக்குரிய கடமைகளைச் செய்கின்றோமா என்ற கேள்வியை நம்முள்  நாமே கேட்டுப் பார்த்து நமது தவறுகளை சரிசெய்வதே இன்றைய நாளின் முதற்பணியாகும். இன்றைய தினத்தில் மட்டுமல்ல... என்றுமே  தந்தையருக்கு நாம் செய்யவேண்டிய கடமைகளை மனதில் இருத்திக் கொள்வோம். இந்நாளில் நம் தந்தையரை நாமும் இதய சுத்தியோடு  வாழ்த்துவோம்! வணங்குவோம்!

புதன், 12 ஜூன், 2019

காலங்கள் திரும்ப கிடைக்காது...


காலங்கள் திரும்ப கிடைக்காது...

இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்,. ஒருவர் சொன்னார், "கேரளாவில் ஒரு இடம் இருக்கிறது; அது ஒரு டீ எஸ்டேட்; அங்கு செல்போன் வேலை செய்யாது; நாம் அங்கே போய்விட்டால் வெளி உலகை விட்டு முற்றிலும் துண்டிக்க படுவோம்;
இங்கே இருக்கும் டென்ஷன் எல்லாம் குறைக்க, அங்கே போய் ஒரு மூன்று நாள் இருக்கலாம் போல இருக்கிறது". வெளி உலக தொடர்பே அற்று நிம்மதியாக இருக்கலாம் என்றார்.

ஒருவர் சொன்னார், "எனக்கு இது சரிப்பட்டு வராது; இதை நான் விரும்புவதும் இல்லை" என்றார்.

அதற்கான காரணத்தைச் சொல்கிறார்..

நம்மைச்சுற்றி இருப்பவர்கள் யார்? யார்?
முதலில் மனைவி.
பிறகு பிள்ளைகள்.
அடுத்து உறவுகள்.
பின், நண்பர்கள்.
பின்பு வேலையின் நிமித்தம் தொடர்பில் உள்ளவர்கள்.
அதன் பின் முற்றிலும் தெரியாதவர்கள். அதாவது, கடைவீதியில் நடப்பவர்கள் போல, அறிமுகம் இல்லாதவர்கள்.

இந்த உறவுகள் அற்புதமானவை. மனைவி என்ற ஒருத்தியோடு பேசிக் கொண்டே இருங்கள்;
இல்லாவிட்டால் ஏதாவது சண்டையாவது போடுங்கள். பின்பு சமாதானம் ஆகி உறவாடுங்கள்.
எல்லா ஆண்களுக்கும் ஒரு நாள் வரும். ஒருவேளை அவள் முந்தி மரணமடைந்தாள்?அப்போது தெரியும், பிரிவு என்றால் என்னவென்று.
ஆகவே இப்போது கிடைக்கும் ஒவ்வொரு நொடியும் அற்புதமானவை; வீணாக்க வேண்டாம். அதிலும் பிரிந்து இருக்கவே வேண்டாம்.

அடுத்து, பிள்ளைகள்;
பள்ளி படிப்பு முடியும் வரைதான் அவர்கள் உங்களோடு இருப்பார்கள்.
அதன் பின் அவர்கள் உலகம் வேறு; அதில் நீங்கள் நிச்சயமாய் இருக்கவே மாட்டீர்கள். அப்போது நீங்கள்
அவர்களோடு தொலைபேசி மூலமாக பேசக்கூடநேரம் பார்க்க வேண்டும்.

இப்போது அவர்களிடம் அதிக நேரம் செலவு செய்யுங்கள்.
வெளிநாட்டில் தனது சின்ன குழந்தைகளை பிரிந்து பணி செய்யும் தகப்பன்மார்களுக்கு இந்த வேதனை புரியும்.
இப்படி இல்லாமல், உங்கள் பிள்ளைகள் உங்கள் அருகிலேயே இருந்தால் இது அற்புதமான தருணம். ஒரு நொடியைக்கூட வீணாக்க வேண்டாம். சும்மா அவர்களை பார்த்துக் கொண்டாவது இருங்கள்.

அடுத்து உறவுகளும், உடன் பணி செய்யும் தோழர்களும்.

இதைப்பற்றி தெரிந்து கொள்ள, நீங்கள் அடுத்த மாநிலத்திலோ அல்லது வேறு நாட்டிலோ இருந்தால்,
இது புரியும்.

வட நாட்டில் இருந்தால் அங்கு உள்ள சர்மாவும், பாண்டேயும், தூபேயும், நம்மோடு நட்பாக இருப்பார்கள். ஆனால் தோள் மேல் கைபோட்டு "வாடா மாப்பிளே" என்று கூற முடியாது. ஒரு இடைவெளி இருந்து கொண்டேதான் இருக்கும்.

எல்லாம் ஒரே இடத்தில் கிடைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களே!
வாழ்கையை ருசியுங்கள்;
அனுபவியுங்கள்.
காலமே ஒரு நாள் நம்மை தனிமைப்படுத்த போகிறது.
அன்று யாரும் நம்மை வந்து பார்க்கப்போவது இல்லை.
நாம் நினைத்தால் கூட வெளியே போக முடியாது.

தனிமையே நம்மை கொல்லப்போகிறது.

அதுவரை, கடவுள் நமக்கு தந்த சினேகங்களோடு பேசுவோம்; சண்டையிடுவோம்; கொஞசி குலாவுவோம்; ஏதாவது செய்வோம். ஆனால் தனிமை வேண்டாம்;
அது மோசமானது. தற்கொலைக்குச் சமமானது.

*காலங்கள் திரும்ப கிடைக்காது..*

Nice Message.

ப‌‌‌‌டித்ததில் பிடித்து...

செவ்வாய், 11 ஜூன், 2019

காதலில் எத்தனை விதம் ?


காதலில் எத்தனை விதம் ?!

 64 வகை; அதன் உட்பிரிவோ 12288!! அதிசய மன்னனும், அவனை ஆராய்ந்த அறிஞரும்!!!
1
சுமார் நூறு வருடங்களுக்கு முன்பேயே மகாகவி பாரதியார் காதல் காதல் காதல்
காதல் போயின் காதல் போயின்
சாதல் சாதல் சாதல்
என்று அருமையாக காதலின் உச்சகட்ட நிலையை விளக்கி விட்டார்.
அந்தக் காலத்தில், காதலின் வேகமும் அழுத்தமும் இந்த நவீன யுகத்தில் இருக்கின்றார் போல இருந்ததா? தெரியவில்லை.
இருந்தாலும் அந்த நாளிலேயே அவர் இப்படி அழுத்தமாகச் சொல்லி விட்ட கவிதா வரிகள் சற்று அதிசயமாகவும் இருக்கிறது; ஆச்சரியமாகவும் இருக்கிறது!

2
சரி, காதல்மன்னர்களும், காதல் பற்றிய ஆராய்ச்சியாளர்களும், ரஸிகர்களும், காதலர்களும், காதலிகளும் ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல முடியுமா?
காதலில் எத்தனை விதம், சொல்லுங்கள், பார்ப்போம்!
பதில் தெரியாமல் முழித்தால் இந்து நாகரிகத்திற்குத் தான் வர வேண்டும்.
ஆண்-பெண் உறவின் அற்புத இரகசியத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசிய ஒரே மதம் இந்து மதம் தான்.
காதலில் மொத்தம் 64 விதம் உள்ளது.
எங்கே 64-ஐயும் சொல்லுங்கள் பார்ப்போம் என்கிறீர்களா?
இதோ தருகிறோம், பட்டியலை!
3

01) Abhilasa – அபிலாஷா
02) Akanksa – அகாங்சா
03) Apeksa – அபேக்ஷா
04) Utkantha – உத்கந்தா
05) Ipsa – இப்ஸா
06) Lipsa – லிப்ஸா
07) Iccha – இச்சா
08) Vancha – வாஞ்சா
09) Trsna -த்ருஷ்ணா
10) Lalasa – லாலஸா
11) Sprha -ஸ்ப்ருஹா
12) Laulya – லௌல்யா
13) Gardha – கர்தா
14) Sraddha – ச்ரத்தா
15) Ruci – ருசி
16) Dohada – தோஹதா
17) Asa – ஆசா
18) Asis – ஆசிஸ்
19) Asamsa – அசம்ஸா
20 Manoratha – மனோரதா
21) Astha – ஆஸ்தா
22) Abhinivesa – அபினிவேசா
23) Anubandha – அனுபந்தா
24) Agraha –  ஆக்ரஹா
25) Vimarsa – விமர்சா
26) Manisa – மநீசா
27) Abhipraya – அபிப்ராயா
28) Paksapata – பக்ஷபாதா
29) Lobha – லோப்ஹா
30) Asanga – ஆஸங்கா
31) Abisvanga – அபிஸ்வங்கா
32) Sakti – சக்தி
33) Moha – மோஹா
34) Akuta – அகூடா
35) Kuthuhala – குதூகலா
36) Vismaya – விஸ்மயா
37) Raga – ராகா
38) Vega – வேகா
39) Adhyavasaya -அத்யாவாஸ்யா
40) Vyavasaya – வ்யவசாயா
41) Kamana – காமனா
42) Vasana – வாஸனா
43) Smarana -ஸ்மரணா
44) Sankalpa – சங்கல்பா
45) Bhava – பாவா
46) Rasa (Hasa) – ரஸா (ஹாஸா)
47) Rati – ரதி
48) Priti – ப்ரீதி
49) Dakshinya – தாக்ஷிண்யா
50) Anugraha – அனுக்ரஹா
51) Vatsalya – வாத்ஸல்யா
52) Anukrosa – அனுக்ரோஸா
53) Visvasa – விஸ்வாஸா
54) Visramba – விஸ்ரம்பா
55) Vasikara – வசீகரா
56) Pranaya -ப்ரணயா
57) Prapti – ப்ராப்தி
58) Paryapti – பர்யாப்தி
59) Samapti – சமாப்தி
60) Abhimanapti – அபிமானாப்தி
61) Sneha – ஸ்னேஹா
62) Prema – ப்ரேமா
63) Ahlada – ஆஹ்லாதா
64) Nirvrti –  நிவ்ருத்தி



3
அடேயப்பா, இத்தனை விதமா?
இதற்குள் மலைத்தால் எப்படி?
இந்த 64 விதத்தில் அனுராகத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

நித்யானுராகா
நைமித்திகானுராகா
சமான்யானுராகா
விசேஷானுராகா
ப்ரகாசானுராகா
ப்ரச்சன்னானுராகா
அக்ருத்ரிமானுராகா
க்ருத்ரிமானுராகா

என இதில் எட்டு வகை உள்ளன. இவை காதலின் மஹார்தி எனச் சொல்லப்படுகிறது.
இவை ஒவ்வொன்றிலும் 24 வகை உண்டு.
ஆக அனுராக வகைகளில் மட்டும் எட்டு வகையில் உள்ள 24 உட்பிரிவு வகைகளையும் பெருக்கிப் பார்த்தால் வருவது 192. இந்த 192 ஐ 64-உடன் பெருக்கினால் வருவது 12288.
இவ்வளவு வகை உண்டு.


4
சரி, இதையெல்லாம் யார் சொல்கிறார்கள், எங்கே சொல்கிறார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பே.
போஜ மஹாராஜன்,”ச்ருங்கார ப்ரகாசா” என்ற அலங்கார சாஸ்திர நூலைப் புனைந்துள்ளான்.
அதில் தான் ஒவ்வொன்றின் விளக்கத்துடனும் காதல் அதாவது  ச்ருங்காரம் மிக நுட்பமாக விளக்கப்படுகிறது!
5
இது இப்போது கிடைக்குமா? எப்படி இந்த தகவல்கள் கிடைக்கின்றன?
நல்ல கேள்வி.
பேரறிஞர் டாக்டர் வி. ராகவன் (நிஜமாகவே பேரறிஞர்!!!) சம்ஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகச் சிறந்த விற்பன்னர்.
உ.வே.சாமிநாதையர் வாழ்நாள் முழுதும் தமிழ்ச் சுவடிகளைத் தேடி ஊர் ஊராக அலைந்தது போல, டாக்டர் ராகவன் நாடு நாடாக அலந்தார். பல்வேறு பல்கலைக் கழகங்கள், நிறுவனங்கள், சம்ஸ்கிருத சுவடி இருக்கும் இடங்கள் என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை.

பல லட்சம் நூல்கள் அடங்கிய சம்ஸ்கிருத நூல்கள் பற்றி அறிந்து கொண்ட பின்னர் சம்ஸ்கிருத நூலுக்கான என்சைக்ளோபீடியாவைத் தயாரித்தார்.
அந்த மாபெரும் ஆராய்ச்சியாளர் தனது டாக்டரேட் டிகிரிக்காக ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நூல் தான் போஜனின், “ச்ருங்கார ப்ரகாசா”

1931 செப்டம்பர் மாதத்திலிருந்து 1934 செப்டம்பர் மாதம் வரை அவர் செய்த அற்புதமான ஆராய்ச்சியின் பெருமையைச் சொற்களால் அளக்க முடியாது; விளக்க முடியாது!

1940ஆம் ஆண்டு இது  தொகுதிகளாகவும், பகுதிகளாகவும் வந்தது. (Karnakatk Publishing House, Bombay – 1940)
இப்போது இதை விளக்க இன்னொரு ராகவன் தான் வேண்டும். அப்படி ஒரு நுட்பமான ஆராய்ச்சியை அவர் செய்து உலகுக்கு அளித்திருக்கிறார்.



6
அற்புதமான மன்னன் போஜ மஹாராஜன். அவன் தொடாத துறையே இல்லை.
அதில் ஒன்று தான் “ச்ருங்கார ப்ரகாசா”.

36 அத்தியாயங்கள் இந்த நூலின் கைப்பிரதி மட்டும் 1908 பக்கங்கள் – ஃபூல்ஸ்கேப் பேப்பரில்!.

இதைத் தயாரித்து ஆராய்ந்தார் டாக்டர் ராகவன்.
போஜ மஹாராஜன் 84 நூல்களை எழுதியுள்ளான்.
விமானம் கட்டுவதிலிருந்து சிருங்கார ப்ரகாஸா வரை உள்ள அவனது நூல்கள் பிரமிக்க வைப்பவை.

அந்த மாபெரும் அறிஞனின் அறிவை அளக்க யாரால் முடியும்?!
ஒரு சிறிது அறிந்தாலும் கூட அந்த அளவுக்கு நமது அறிவின் வலிமை கூடும் என்பதில் ஐயமில்லை.

நன்றி : டாக்டர் வி. ராகவன்

திங்கள், 10 ஜூன், 2019

தாலி...!



தாலி...!

பெண்ணுக்கு மார்பு குழியில் ஒரு நரம்பு முடிச்சு இருக்கிறது இது ஆணுக்கு இல்லை... இந்த நரம்பு முடிச்சு மூளையில் பேசல் ரீஜன் பகுதியோடு தொடர்பு ஏற்படுத்தும் வேலை செய்யும்... இது பெண்ணுக்கு இரண்டு நரம்புகள் கொண்ட பாதையாகவும், ஆணுக்கு ஒரு நரம்பு கொண்ட பாதையாகவும் இருக்கிறது... இதனால் ஆணை விட பெண்ணுக்கு அதிக நியாபக சக்தியை உண்டாக்குகிறது.....!

இந்த அதிக நியாபக சக்தியால் ஆணை விட பெண்ணுக்கு சில குழப்பங்களையும் கொடுக்கிறது... ஒரு பெண் ஒரு விசயத்தில் ஒரு முடிவு எடுத்துட்டு பின் அதனால் குழப்பம் அடைவதற்குக்கு இதுதான் காரணம்.....!

இதை கண்டறிந்த ஒரு ஞானி ராஜராஜ சோழன் இடம் சொல்ல அதற்கு மருந்து கண்டு பிடிக்க முடிவு செய்து அதன் படி ஒவ்வொரு உலோகத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு அதன்படி தங்கத்திற்கு இருக்கும் மருத்துவ குணத்தை கண்டறிந்து, அந்த தங்கம் பெண்ணுடைய மார்பு குழியில் எப்போதும் உரச உரச பெண்ணிற்கு நன்மை தரும் என்று இந்த "தாலி" முறைய கொண்டு வந்தாங்க. அது சரியாக மார்புகுழி இடத்தில் வரவேண்டும் என்று மூன்று முடிச்சு போட்டால் மார்பு குழியில் வரும் என்று ஒரு கணக்கு போட்டார்கள். இந்த "தாலி" முறையைத்தான் இப்போது வரை நாம் பயன்படுத்துவது.

 . . . படித்ததில் பிடித்தது.

பெண்கள் எத்தனை வகைகள்.


♥பெண்கள் எத்தனை வகை??

♥பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு என்பது தமிழ் பழமொழி. ஆனால் பெண்கள் சிரித்தால் செண்பக மரம் பூக்கும் என்கிறது வடமொழி.

♥தமிழர்களும் வேங்கை மரத்தை பெண்களின் திருமணத்தோடு இணைத்துப் பேசுவர். அது பெண்களுக்கும் மரத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றிப் பேசுகிறது.

♥அசோக மரத்தைப் பெண்கள் உதைத்தால் அது பூக்கும்
பெண்கள் #உதைத்தால் பூக்கும் அசோகமரம்
பெண்கள் #சிரித்தால் பூக்கும் செண்பக மரம்
பெண்கள் #பேசினால் பூக்கும் நமேரு மரம்
பெண்கள் #தழுவினால் பூக்கும் குராபக மரம்
பெண்கள் #பார்த்தால் பூக்கும் திலக மரம்

♥பெண்கள் எத்தனை வகை?
பெண்களை #வடமொழி வித்தகர்கள் #நாலு வகையாகவும்,
#பரத சாஸ்திர அறிஞர் பரத ரிஷி #எட்டு வகையாகவும்
#தமிழர்கள் வயதின் அடிப்படையில் #ஏழு வகையாகவும்,
#ஜப்பானியர்கள் #ஒன்பது வகையாகவும், #ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் டி.என்.ஏ. அடிப்படையில் #ஏழு வகையாகவும் பிரித்தனர்.

♥#பத்மினி, #சங்கினி,#ஹஸ்தினி, #சித்ரினி என வடமொழி நூலர்கள் குணத்தின் அடிப்படையில் பெண்களை நாலு வகையாகப் பிரித்தனர்.

♥பத்மினி வகை பெண்களைப் பார்ப்பது அபூர்வம். அவர்கள் மிகவும் அழகானவர்கள், மென்மையானவர்கள்,புனிதமானவர்கள். முகம் வட்ட வடிவம் உடையது. உடலும் உருண்டு திரண்டு இருக்கும். அவர்கள் சுஹாசினி (மலர்ந்த முகம்). சுபாஷினி ( இனிய சொல்), சாருஹாசினி (புன்சிரிப்புடையோர்) ஆவர். அழகிய கவர்ச்சிகரமான பார்வையால் எதிரிகளையும்  வசப்படுத்துவர்.
உலகத்தமிழ் மங்கையர் மலர்.

♥சங்கினி வகைப் பெண்கள் அழகானவர்கள், புத்திசாலிகள், சுறு சுறுப்பானவர்கள். சங்கு வடிவத்தில் சில உடல் அம்சங்கள் ஒல்லியாக இருக்கும். சுதந்திர சிந்தனை படைத்தவர்கள். அதிக சக்தி உடைய இவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவோர் கார்கி, வைதேகி, சுரவந்தியா ஆவர்.

♥ஹஸ்தினி வகைப் பெண்கள் பார்பதற்கு இனியவர்கள், ஆனால் பருமனானவர்கள். பின் தூங்கி பின் எழும் பத்தினிகள். கேளிக்கை விரும்பிகள். நீங்கள் முடிவு எடுத்தால் கோபிப்பார்கள். தானாகவும் முடிவு எடுக்க மாட்டார்கள். கேளிக்கையே வாழ்க்கையின் குறிக்கோள். பிரபுக்கள் வம்சம்.

♥சித்ரினி மிக மெல்லிய தேகம் உடையோர். மூங்கில் குச்சியோ எனலாம். அலங்காரத்திலும் கலைகளிலும் ஆர்வம் அதிகம். அலமாரி முழுதும் ஆயிரம் உடைகளைப் பார்க்கலாம். படுக்கப் போகும் போதும் படுத்து எழுந்திருக்கும் போதும் அலங்காரத்துடன் வருவர். அலங்காரி, சிங்காரி ஒய்யாரி-பேஷன் பேர்வழிகள்.

♥2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் 40 வயதுக்குக் குறைவான பெண்களை மட்டும் வயது அடிப்படையில் ஏழு பிரிவுகளாகப் பிரித்தனர். அதற்குப் பிறகு அவர்களைக் கண்டுகொள்ளவில்லை.
உலகத்தமிழ் மங்கையர் மலர்


♥பேதை (5—7),
♥பெதும்பை (8—11),
♥மங்கை (12—13),
♥மடந்தை (14—19),
♥அரிவை (20—25),
♥தெரிவை (25—31),
♥பேரிளம் பெண் (32 முதல் 40 வயது).

♥காமசூத்திரம் எழுதிய வாத்ஸ்யாயனர் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பாலியல் ரீதியில் ஆண்களையும் பெண்களையும் பலவகைகளாகப் பிரித்திருப்பதும் குறிப்பிடத்த்க்கது.

♥நம் முன்னோர்கள் எந்த அளவுக்கு ஆராய்ச்சி மனப்பான்மையோடு இவ்விஷயங்களை அனுகினர் என்பதைப் பார்க்கையில் வியப்பாக இருக்கிறது.

♥பெண்ணின் குணங்கள்
♥தாயின் கருணை,
♥அடியாள் போல தொண்டு,
♥பூமாதேவி போல பொறுமை,
♥படுக்கை அறையில் மகிழ்விக்கும் பெண், ♥குடும்ப நிர்வாகத்தில் மந்திரி போல அற்புத மூளை—
அத்தனையும் வாய்கப் பெற்றவள் தான் தாய் மனைவி சகோதரி மகள் என்ற பெண்கள்...

ஞாயிறு, 9 ஜூன், 2019

மூல நோய் !!! 21 வகை மூலம் !! (hemorrhoids


மூல நோய் !!! 21 வகை மூலம் !!  (hemorrhoids)

ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் வீங்கிப்பருத்து வெளி வருவதைத்தான் மூல நோய் என்கிறார்கள்.
மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகும் போது, மலம் வெளியேறாமல் உள்ளுக்குள்ளேயே நின்று இறுக்குகிறது. முக்கி வெளியேற்ற முற்படும் போது மலவாய்க் குடலில் இருந்து சிரைகள் பாதிக்கப்பட்டு வெளியே தள்ளிக் கொண்டு வந்து விடுகின்றன.
*
மேலும் காய்ந்த மலம் ஆசன வாயைக் கிழிப்பதால் ரத்தம் பீறிட்டு வெளியே வரும். ஒவ்வொரு நாளும் இதே மாதிரி மலம் கழிக்கும் போது அந்த வாய்ப் பிளந்து கொள்ளும். இதை பிஸ்ஸர் அல்லது ஆசன வாய் வெடிப்பு என்கிறார்கள்.
*
இது புண்ணாகி நாளடைவில் சீழ் மூலம் அல்லது பவுத்திரமாக மாறும். இவ்வாறே நவ மூலங்கள் உண்டாகின்றன.
*
ஆங்கில வைத்தியத்தில் இதை முதல் டிகிரி, இரண்டாவது டிகிரி, மூன்றாவது மற்றும் நான்காவது டிகிரி என நான்கு வகைகளாகப் பிரிப்பார்கள். ஆனால் நமது தமிழ் முன்னோர்கள் இதை இருபத்தோரு வகைகளாகப் பிரித்தார்கள்.
*
அவை:- நீர் மூலம், செண்டு மூலம், முளை மூலம், சிற்று மூலம், வரண் மூலம், ரத்த மூலம், வினை மூலம், மேக மூலம், பௌத்திர மூலம், கிரந்தி மூலம், சூத மூலம், புற மூலம், சீழ் மூலம், ஆழி மூலம், தமரக மூலம், வாத மூலம், பித்த மூலம், சிலேத்தும மூலம், தொந்த மூலம் மற்றும் கவ்வு மூலம்.
*
இதில் ஒன்பது வகைகள் மிகக் கடுமையானவை என்பதால் இவற்றை நவ மூலம் என்றும் சொன்னார்கள்.
*
நமது மூதாதையரான சித்தர்கள் மூல நோயை குணப்படுத்தும் பல அரிய மூலிகைகளை ஓலைச் சுவடிகளில் விட்டுச் சென்றுள்ளார்கள்.
*
அதனடிப்படையில் மூல நோய்க்கு பிரத்யேகமான மூலிகை மருந்துகள் தயாரிக்கப்பட்டு அளிக்கும் போது பக்க விளைவுகள் இல்லாமல் மூல நோய் குணமாகும்.
*
ஒரு மண்டலம் சாப்பிடும் மருந்துகளும் உள்ளன, ஒரே வாரத்தில் குணமாகும் மருந்துகளும் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளன.
*
இதனால் உள் மூலம் குணமாகும், வெளி மூலம் சுருங்குகிறது. ஆசன வாயில் இருக்கும் சீழ்க்கட்டிகள் உடைந்து ஆற்றப்படுகின்றன. மல ஜலம் சுலபமான முறையில் வெளியேறுகிறது. மீண்டும் வருவதில்லை.
*
*
உதாரணத்திற்கு ஒரு மூலிகையைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
*
"துத்திக்கீரை" என்ற ஒன்றை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த துத்திக் கீரையை தினந்தோறும் சமையலில் சாப்பிட்டு வந்தால் மூலநோய் தலைக் காட்டாது.
*
எத்தகைய மூலக்கட்டிகள் வந்தாலும் துத்தி இலை மீது விளக்கெண்ணெய் தடவி, அனலில் காட்டி மூலக்கட்டியின் மீது வைத்துக் கட்டி விட, கட்டி உடைந்து விடும். மூல முனைகள் உள்ளுக்குச் சென்று விடும். வேண்டுமானால் மூலத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை செய்து பார்க்கலாம்.
*
*
துத்திக்கீரயின் மற்ற பயன்கள்:
*
இதன் இலை, பூ, வேர், பட்டை என அனைத்துப் பகுதிகளும் மருத்துவக் குணம் கொண்டவை.
*
"மூலநோய் கட்டி முளைபுழுப்புண் ணும்போகுஞ் சாலவதக் கிக்கட்டத் தையலே - மேலுமதை எப்படியேனும் புகிச்ச எப்பிணியும் சாந்தமுறும் இப்படியிற் றுத்தி யிலையை" (அகத்தியர் குணபாடம்)
*
*
மலச்சிக்கல் தீர:-
*
மலச்சிக்கல் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் கேடாகும். மலச்சிக்கலை நீக்கினால் நோயின்றி நூறாண்டு வாழலாம். இன்றைய நவீன உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை, மேலும் அவசரமாக உணவை சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் உருவாகின்றது. மனச்சிக்கல் இருந்தால் கூடவே மலச்சிக்கல் வந்து விடும்.
*
மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் தீரும்.
*
*
மூல வியாதி குணமாக:-
*
காரமும், புளிப்பும் உணவில் அதிகம் சேர்ப்பதால் சிலருக்கு குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமாகி மூலக் குடலை அடைக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்பட்டு மூல நோயாக மாறுகிறது.
*
இவ்வாறு மூல நோயால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை நீர் விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மூல நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து மூல நோய் படிப்படியாகக் குணமாகும்.
*
*
உடல் சூடு தணிய:-
*
துத்திக் கீரையை நன்கு நீரில் அலசி சிறியதாக நறுக்கி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின் அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து இரசமாக அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.
*
*
வெப்பக்கட்டி குணமாக:-
*
துத்தியிலையை எடுத்து ஆமணக்கு (விளக்கெண்ணெய்) எண்ணெய் தடவி வதக்கி வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டி வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும்.
*
துத்தியிலையை சாறெடுத்து, பச்சரிசி மாவுடன் சேர்த்து களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் பூசி வந்தால் கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.
*
*
பல் ஈறு நோய் குணமாக:-
*
துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும்.
*
*
குடல் புண் ஆற:-
*
துத்திக் கீரையை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால் குடல் புண் ஆறும்.
*
*
சிறு நீர் பெருக்கி:-
*
சரியாக சிறு நீர் பிரியாமல் இருந்தால் சிறு நீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறு நீரக நோய் வராது.
*
துத்திக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு வாழலாம்.
*
*
மூல நோய் விரட்ட:-
*
எல்லா வகை மூல நோய்களுக்கும் பக்குவமான மருந்து இது. கிராமங்களில் கிடைக்கும் மருந்து. அது தான் வேப்பமுத்து. அதன் பருப்பை நன்றாக அரைக்க வேண்டும். ஒரு பாக்கின் அளவு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். மாலையிலும் ஒரு பாக்கு அளவு அரைத்து உருட்டிச் சாப்பிட வேண்டும். இப்படியே (ஒரு மண்டலம்) நாப்பத்தெட்டு நாள் சாப்பிடணும். பத்தியம் உண்டு. அதாவது, மூல வியாதிக்கு மருந்து சாப்பிட்டு முடியும் வரை, உடல் உறவு கூடாது. சூடு உண்டாக்கி மூலம் அதிகமாகும். அருகம்புல் சாறும் நல்லது.
நன்ற :- விஞ்ஞான உலகம்
*
9 வகை மூலத்திற்க்கும் மருந்து
முலை மூலம், இரத்த மூலம், சீழ் மூலம், ஆசன கடுப்பு, எரிச்சல், அரிப்பு முதலியவை நீங்கும்.
மூலவியாதிக்கு லேகியம்
நத்தை பற்பம் 20 gm,
ஜாதிக்காய் 20 gm,
கசகசா 50 gm,
கருப்பட்டி 300 gm,
தேன் (அசல்)100 gm,
பால் (பசு)100 ml,
நெய் (அசல் )100 gm,
கருப்பட்டியை தண்ணீர் ஊற்றி அடுப்பில் ஏற்றி கரைத்து வடிகட்டி,எடுத்த
கொள்ளவும்.
ஜாதிக்காய் கசகசா இவ்விரண்டையும்,
தனி தனியே பால் விட்டு அரைத்து கொள்ளவும்.
பிறகு இதை கருப்பட்டி பாகில் கலந்து அடுப்பில் எரிக்கவும்,நத்த
ை பற்பம்,தூவி ,கிண்டி கொதி வந்த பின் தேன் சேர்த்து கிளரி,பின் நெய் சேர்த்து கிண்டி இறக்கவும்.
சூடு ஆறியபின் புட்டியில் பத்திர படுத்தவும்.
சாப்பிடும் அளவு :
5 முதல் 10 gm வரை உணவிற்கு முன் காலை,இரவு சுவைத்து சாப்பிடவும்.
தீரும் நோய்கள் :
உள் மூலம், வெளி மூலம், கட்டி மூலம், முலை மூலம், இரத்த மூலம், சீழ் மூலம், ஆசன கடுப்பு, எரிச்சல், அரிப்பு முதலியவை நீங்கும்.

வெள்ளி, 7 ஜூன், 2019

வளமுடன் வாழ 108 சூத்திரங்கள்


வளமுடன் வாழ 108 சூத்திரங்கள்

1.    கடமையை செய்.
2.    காலம் போற்று.
3.    கீர்த்தனை பாடு.
4.    குறைகள் களை.
5.    கெட்டவை அகற்று.
6.    கேள்வி வேண்டும்.
7.    கை கொடு.
8.    கோவிலுக்குச் செல்.
9.    கொலை செய்யாதே.
10.  கூச்சம் வேண்டாம்.
11.  தர்மம் செய்.
12.  தாயை வணங்கு.
13.  திமிர் வேண்டாம்.
14.  தீயவை பழகாதே.
15.  துன்பம் துரத்து.
16.  தூய்மையாய் இரு.
17.  தெளிவாக சிந்தி.
18.  தைரியம் வேண்டும்.
19.  தொண்டு செய்.
20.  தோழனை கண்டுபிடி.
21.  சத்துணவு சாப்பிடு.
22.  சஞ்சலம் போக்கு.
23.  சாதனை செய்.
24.  சிக்கனம் தேவை.
25.  சீருடன் வாழ்.
26.  சுத்தம் பேண்.
27.  சூழ்ச்சி செய்யாதே.
28.  செலவை குறை.
29.  சேர்க்கப் பழகு.
30.  சைவம் சிறந்தது.
31.  சொர்க்கம் தேடு.
32.  சோகம் வேண்டாம்.
33.  சோம்பல் அகற்று.
34.  செளந்தர்யம் சேர்.
35.  நம்பிக்கை கொள்.
36.  நிம்மதி பெரிது.
37.  நெஞ்சத்தில் நில்.
38.  நேர்மை கடைபிடி.
39.  நைந்து பழகு.
40.  நொறுங்கத் தின்னு.
41.  நோயை விரட்டு.
42.  பண்புடன் பழகு.
43.  பாவம் செய்யாதே.
44.  பிதற்றல் குறை.
45.  பீடிகை போடாதே.
46.  புண்ணியம் சேர்.
47.  பூசல் நீக்கு.
48.  பெரியோரை மதி.
49.  பேதம் வேண்டாம்.
50.  பைந்தமிழ் பேசு.
51.  பொய் பேசாதே.
52.  முகத்தை சுழிக்காதே.
53.  மூத்தோற்கு உதவு.
54.  மெல்லப் பேசு.
55.  மேலானவை நினை.
56.  மோசம் செய்யாதே.
57.  மௌனம் நல்லது.
58.  வறுமை ஒழி.
59.  வளம் சேர்.
60.  விளையாட்டல்ல வாழ்க்கை.
61.  வீம்பு விலக்கு.
62.  ஒவ்வொன்றாக செய்.
63.  வருவோரெல்லாம் நண்பர்களல்லர்.
64.  வேற்றுமை ஒழி.
65.  வையகம் போற்று.
66.  கலைஞனாய் இரு.
67.  ஞானம் வேண்டு.
68.  குணம் வளர்.
69.  பண்ணிப் பார்.
70.  எண்ணுக உயர்வு.
71.  பயம் தவிர்.
72.  மெய்யூட்டி வளர்.
73.  மெய்யென பேசு.
74.  தன் கையே உதவி.
75.  தீயோடு விளையாடாதே.
76.  மலையோடு மோதாதே.
77.  தடத்தில் நட.
78.  விபரீதம் வேண்டாம்.
79.  கண்டு களி.
80.  அட்டூழியம் செய்யாதே.
81.  கேட்டேதும் பெறா.
82.  நாட்டை நேசி.
83.  வீட்டோடு வாழ்.
84.  வரம் கேள்.
85.  திருடி பிழைக்காதே.
86.  மேதாவித்தனம் வேண்டாம்.
87.  சொல்லுக பயனுள.
88.  பழங்கள் சாப்பிடு.
89.  சினம் தவிர்.
90.  அனுபவம் பலம்.
91.  கண்ணெனப் போற்று.
92.  திருடனே திருந்து.
93.  இறைவனைப் புகழ்.
94.  அமைதி கொள்.
95.  துக்கம் மற.
96.  பங்கம் பண்ணாதே.
97.  அன்பே அச்சாணி.
98.  கொஞ்சி மகிழ்.
99.  மட்டம் தட்டாதே.
100. சொந்தம் சூழ்ந்திரு.
101. தவறைத் திருத்து.
102. அம்மாவே தெய்வம்.
103. வர்மம் வைக்காதே.
104. சொல் தவறாதே.
105. தோள் கொடு.
106. பேராசைப் படாதே.
107. புன்னகை அணி.
108. நீடுழி வாழ்

ஞாயிறு, 2 ஜூன், 2019

எது கெடும்....... ?


எது கெடும்....... ?

01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.
21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும்  கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.
41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.
51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.

கெடாமல் பாதுகாக்க வேண்டியது அவரவர் பொறுப்பு.......
படித்ததில் அசந்தது....