ஞாயிறு, 21 ஜூன், 2020

டாப் 10 விளையாட்டு வீராங்கனைகள்!



இந்தியாவில் புகழ் பெற்ற விளையாட்டு வீராங்கனைகள் 

டாப் 10 விளையாட்டு வீராங்கனைகள்!

இன்றைய உலகில் பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை. விளையாட்டை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன?
இந்திய அளவிலும் தமிழக அளவிலும் முன்னிலை வகிக்கும் டாப் 10 வீராங்கனைகள் பற்றிய தொகுப்பு இது!

சானியா மிர்சா (26)

மகளிர் டென்னிஸில் இந்தியராலும் சாதிக்க முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்துக் காட்டியவர். கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை. ஒற்றையர் பிரிவில் அவ்வளவாக எடுபடாவிட்டாலும் மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் அலட்சியப்படுத்த முடியாத வீராங்கனை!

மேரி கோம் (30)

மணிப்பூர் மங்கை. குத்துச்சண்டையில் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். லண்டன் ஒலிம்பிக்சில் வெண்கலம் வென்றார். நல்ல ஃபார்மில் இருந்தபோது, ஒலிம்பிக்கில் பாக்சிங் இடம் பெற்றிருந்தால் நிச்சயம் தங்கம் வென்றிருப்பார். அடுத்த ஒலிம்பிக்கிலும் களமிறங்கி சாதிக்கும் உறுதியுடன் பயிற்சி செய்து வருகிறார்.

சாய்னா நெஹ்வால் (22)

பேட்மிண்டன் அரங்கில் இந்தியாவின் பெயரை அழுத்தமாகப் பதிவு செய்தவர். உலக அளவில் 2வது ரேங்க் வரை முன்னேறியுள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த இந்த வீராங்கனை நம்பர் 1 ஆகும் நாள் தூரமில்லை. சூப்பர் சீரிஸ் போட்டிகளில் பட்டம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை, இந்தியாவில் கிரிக்கெட் தவிர்த்து மற்ற விளையாட்டுகளில் அதிகம் சம்பாதிப்பவர் என்ற பெருமைக்குரியவர்.
 
ஜுவாலா கட்டா (29)

மகளிர் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். கலப்பு இரட்டையர் பிரிவில், ‘வலியவீட்டில் திஜு’வுடன் இணைந்து களமிறங்கி ஏராளமான வெற்றிகளைக் குவித்துள்ளார். டெல்லி காமன்வெல்த் போட்டியில் (2010) மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்தவர்.   

மித்தாலி ராஜ் (30)

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன். சிறந்த ஆல்ரவுண்டர். 2005 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை முன்னேற வைத்தவர். அந்தத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக அதிரடியாக ஆட்டமிழக்காமல் 91 ரன் விளாசி அசத்தியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் ரயில்வேஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.



தீபிகா குமாரி (18)

வில்வித்தையில் அசத்தி வரும் ராஞ்சி வீராங்கனை. டெல்லி காமன்வெல்த் போட்டியில் இரண்டு தங்கம் வென்று சாதனை படைத்தவர். மிக இளம் வயதில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக முன்னேறி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். லண்டன் ஒலிம்பிக்கில் ஏமாற்றம் அளித்தாலும், அடுத்து வரும் போட்டிகளில் அமர்க்களப்படுத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கிருஷ்ண பூனியா (35)

வட்டு எறிதலில் தேசிய சாம்பியன். டெல்லி காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தவர். தோஹா (2006), குவாங்ஸூ (2010) ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லத் தவறினாலும் 7வது இடம் பிடித்ததே பெரிய சாதனை!

ரித்து ராணி (21)

இந்திய ஹாக்கி அணியின் கேப்டன். சாம்பியன்ஸ் சேலஞ்ச் கோப்பையை வென்று பெருமை சேர்த்தவர். ஆசிய ஹாக்கி கூட்டமைப்பின் 2011ம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த உலக ஹாக்கி லீக் தொடரின் 2வது சுற்றில் இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தி 3வது சுற்றுக்கு முன்னேற வைத்தவர். இவரது தலைமையில் இந்திய அணி புதிய எழுச்சி பெறும் என்ற நம்பிக்கை உருவாகி உள்ளது.

கீதா போகத் (24)

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமைக்குரியவர். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனையும் இவர்தான். அரியானாவைச் சேர்ந்த இவர் ஆசிய கேடட் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ச்சியாக 3 முறை (2003, 2004, 2005) தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்த மாணவி.

தீபிகா பாலிகல் (21)

ஸ்குவாஷ் நட்சத்திரம். முன்னணி மாடல். உலக அளவில் ‘விஸ்பா’ தரவரிசை டாப் 10ல் இடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை. ஜூனியர் பிரிவில் ஜெர்மன் ஓபன், டட்ச் ஓபன், பிரெஞ்ச் ஓபன், ஆஸி. ஓபன், ஸ்காட்டிஷ் ஓபன் என்று சாம்பியன் பட்டங்களை அள்ளியவர். 2011ல் மட்டும் 3 விஸ்பா தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த ஆண்டு மீடோவுட் பார்மசி ஓபன் தொடரில் சாம்பியன்.  


தமிழகம் டாப் 10

திருஷ்காமினி    கிரிக்கெட்
ஜோஷ்னா சின்னப்பா    ஸ்குவாஷ்
இளவழகி    கேரம்
எஸ்.கவிதா    கபடி
காயத்ரி    தடகளம்
ஜான்சி ராணி    தடகளம்
நிரஞ்சனா    கிரிக்கெட்
மிஷல் கேத்ரினா    செஸ்
அம்ரின் முபாரக்    பேட்மிண்டன்
வாசவி கணேசன்    டென்னிஸ்

செவ்வாய், 16 ஜூன், 2020

காஃபி பிரியரா நீங்கள்? இன்ஸ்டன்ட் காஃபி மற்றும் ஃபில்டர் காஃபி இவற்றில் சிறந்தது எது தெரியுமா?



💗உடல் நலம்....


காஃபி பிரியரா நீங்கள்? இன்ஸ்டன்ட் காஃபி மற்றும் ஃபில்டர் காஃபி இவற்றில் சிறந்தது எது தெரியுமா?

காஃபி குடிக்கும் பல வீடுகளில் ஃபில்டர் காஃபியைப் புகழ்ந்து பேசுகின்றனர். ஆனால், இன்ஸ்டன்ட் காபியைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. ஆனால், மறுபுறம், உடனடி காபி பிரியர்கள் ஆடம்பரத்தையோ அல்லது அதன் உடனடி நெஸ்ஸையோ விட்டு விட்டு, ஒரு கப் காஃபியைப் பெறுவதற்கு நீண்ட மற்றும் விலையுயர்ந்த பணி என்று அழைக்கப்படும் இடத்திற்கு மாறுவது கடினம். இவர்கள் இரண்டும் ஒருவருக்கொருவர் மிகவும் வித்தியாசமாக இருப்பது ஏன்? இன்ஸ்டன்ட் மற்றும் ஃபில்டர் காஃபி ஆகியவற்றில் எது சிறந்தது? என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

*இன்ஸ்டன்ட் காஃபி..*

இன்ஸ்டன்ட் காஃபியை அறிந்திருக்காதவர்கள் யாருமில்லை. உடனடி காபியை சில நிமிடங்களில் செய்து முடித்து விடலாம். இது ஒரு வகையான காபி கரைசலாக மாற்றப்பட்டுள்ளது. இது முழு உலர்த்தும் செயல்முறைக்கு உட்படுகிறது. சிறிதளவு தண்ணீர் அல்லது பாலை கொதிக்க வைத்து, அதை ஒரு கோப்பையில் ஊற்றி சிறிதளவு காபி பொடியையம் , தேவையான அளவு சர்க்கரையும் சேர்த்து நன்கு கலக்கினால், சுவையான இன்ஸ்டன்ட் காஃபி தயார். இந்த காபி சரியான விளைவைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் இது விரைவானது மற்றும் விரைவாக வேலை செய்கிறது. இருப்பினும், சுவையானது ஒரு பெரிய அளவிற்கு மாறுபடும்.

*பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்..*

ஏனெனில், பெரும்பாலும், காபி பீன்களின் மலிவான தரம் உடனடி காபியைத் தயாரிக்கப் பயன்படுகிறது. ஆனால் நேரம் மற்றும் உடனடி காபிக்கு அதிக தேவை இருப்பதால், உற்பத்தியாளர்கள் இப்போது உடனடி காபியின் தரத்தை நன்றாக மேம்படுத்த தயாராக உள்ளனர். உடனடி காபியில் புதிய காபியின் செழுமை இல்லை, மேலும் காஃபின் குறைவாகவும் உள்ளது. காஃபினேட்டட் (caffeine) பானங்களை உட்கொள்பவர்கள் பெரும்பாலும் வயிற்றுப்போக்கு அல்லது அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், இது வெறும் வயிற்றில் பானங்கள்(காபி) உட்கொள்ளும் போது முக்கியமாக நிகழ்கிறது.

*ஃபில்டர் காஃபி..*

தமிழ்நாட்டில் ஃபில்டர் காஃபி பற்றி தெரியாதவர்களே இருக்க வாய்ப்பில்லை. அதிலும் கும்பகோணம் ஃபில்டர் காஃபி இங்கு மிக பிரபலம். இந்த காபி புதிய அல்லது வறுத்த காபி கொட்டை கொண்டு தயாரிக்கப் படுகிறது. அவை முதலில் தரையில் வைக்கப்பட்டு பின்னர் பயன்படுத்தப் படுகின்றன. முழு செயல் முறைக்கும் குறைந்தது சில நிமிடங்கள் மற்றும் சில சிறப்பு காபி உபகரணங்கள் தேவைப் படுகின்றன. இது இல்லாமல், வடிகட்டி காபியை தயாரிப்பது கடினம். இதன் மூலம், இது ஒரு திறமையான வேலை என்பதையும், அனைவருக்கும் செய்ய அவ்வளவு எளிதானது அல்ல என்பதையும் நாம் உணர வேண்டும். எனவே, உங்களிடம் நேரம் இருந்தால், இந்த காபியை உங்களுக்காக தயாரிக்கும் பணியை நீங்கள் மேற்கொள்ளலாம்.

*மிகுந்த சுவையை தருகிறது..*

ஃபில்டர் காஃபி சுவைக்கு வரும்போது, வடிகட்டி காபி நாக்கில் வெளிச்சமாகவும், உடனடி காபியை விட புத்துணர்ச்சியுடனும் உணர்கிறது. ஏனென்றால், ஃபில்டர் காஃபியில் பயன் படுத்தப்படும் காபி பீன்ஸ் பொதுவாக உயர் தரமானது மற்றும் பெரும்பாலான அத்தியாவசிய எண்ணெய்களை அப்படியே கொண்டிருப்பதால், உங்கள் நாக்கில் நுட்பமான மற்றும் முழுமையான சுவையாக இருக்கும். ஒரு வடிகட்டி அல்லது புதிய காபியில் காஃபின் உள்ளடக்கம் இயற்கையாகவே அதிகமாக உள்ளது, ஏனெனில் இது கிரவுண்டிங் செயல்பாட்டில் அதிகம் இழக்கவில்லை. மேலும் பயன் படுத்தப்படும் காபி பீன்ஸ் பொதுவாக உயர்தர ரோபஸ்டா பீன்ஸ் என்றும் கருதுகிறது.

*எது சிறந்தது?*

இன்ஸ்டன்ட் காஃபி மற்றும் ஃபில்டர் காஃபி இரண்டையும் ஒப்பீடு செய்தால், ஒரு எளிய புள்ளியில் வரும், அதுதான் ‘உங்கள் காபியை நீங்கள் எப்படி விரும்புகிறீர்கள்' என்பது. இரண்டு காஃபிகளையும் தவறாமல் வைத்திருப்பது நீங்களாக அல்லது உங்கள் வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்கும் சூழலாக இருக்கலாம். நீங்கள் காபி-க்கு மட்டுமே செல்லக்கூடிய வேகமான வாழ்க்கை இருந்தால், உடனடி காபி உங்களுக்கு ஒரு வழி. ஆனால், காலையில் நீங்கள் காபி சாப்பிடுவது புத்துணர்ச்சியாகவும், எல்லா சுவைகள் மற்றும் நறுமணங்களும் அப்படியே இருந்தால், உங்கள் பணத்தை ஒரு நல்ல காபியாக முதலீடு செய்வதை விட சிறந்த வழி எதுவுமில்லை, மேலும் நீங்கள் செல்ல அந்த கப் காபியை நீங்களே தேர்வு செய்யுங்கள்.

*முடிவு..*

காஃபி ஒருவரின் தனிப்பட்ட விஷயம். ஆனால், அது அவரின் ஆரோக்கியோத்தோடும் தொடர்புடையது. "சிறந்த" காபி இல்லை, நீங்கள் அதை எப்படி விரும்புகிறீர்கள் என்பது உங்களுடைய விருப்பம். முடிவில், நீங்கள் குடிக்கும் காபியைப் பொறுத்து காபி நீங்கள் விரும்பும் அல்லது விரும்பாத ஒன்றாக இருக்கலாம். அனைத்தையும் முயற்சித்து, உங்கள் முக்கிய இடத்தைக் கண்டுபிடித்து, உங்கள் தேவைகள் மற்றும் நீங்கள் விரும்புவதைப் பொறுத்து அந்த காஃபியை அருந்துங்கள்.

ஞாயிறு, 14 ஜூன், 2020

பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.


பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.

*வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைதால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்...!

*கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.

*இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.

*தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொரு மொறுப்பாக வரும்.

*கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்துவிடாமல் இட்லி பானையில் அடியில் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும்.

*வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.

*கிழங்குகள் சீக்கிரம் வேக வைப்பதற்கு பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து விட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

*வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

*சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது

.*பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.

*கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருப்பதற்காக சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் வண்டு பிடிக்காது

*காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளிச்சின்னு இருக்கும்.

*மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கிழே ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்.

*இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

*உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்

*வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.

*சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க வேண்டுமானால் சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் சூடாக இருக்கும்.

*உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். *ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்தால் அருமையான ருசியாக இருக்கும்.

*காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

*முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். *காய்கறிகள் வறுக்கும்போது எண்ணெய் சூடாகும் போது சிறிது சர்க்கரை சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.

*இட்லி சுடும்போது மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். இரண்டு நாட்கள் கெடாமலும் இருக்கும்

. *சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும

*கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.

*உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல எல்லா காய்கறிகளையும் போட்டு வதக்கி அதை உருட்டி கடலை மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தால் வெஜிடபுள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்கறிகளை சாப்பிடுவதற்கு எளிய வழியாக இருக்கும்.

*சமையல் அறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டியை சுத்தமாக வைத்துக் கொள்ள பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

*காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.

*அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.

*சேனைகிழங்கு சீக்கிரம் வேக வைப்பதற்கு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது உப்பு போட்டு வெடிக்கும் வரை வறுத்துவிட்டு, பின்பு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் கிழங்கை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும்

*புளிகுழம்பு வைக்கும் போது கடைசியில் மிளகு, சீரகம் அரைத்து பொடியை போட்டால் சுவையாக இருக்கும்.

*இறைச்சியை வேக வைக்கும் போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும். *எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.

*சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.

*தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்

*காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.

*ரவா உப்புமா அதிகமாகி விட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும்.

*ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

*கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.

*தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

*தயிர் புளிக்காமல் இருக்க ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் புளிக்காது.

*வாழைப்பூ வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கி மோர் கலந்த நீரில் வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும். கரையும் பிடிக்காது. அதில் உள்ள துவர்ப்பும் நீங்கி விடும்.

*மழைகாலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடாமல் இருப்பதற்காக நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் தண்ணீர் படியாமல் இருக்கும்.

*நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.

*இடியாப்பம் செய்து மீந்து விட்டால் அதனை ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான போது வறுத்து சாப்பிடலாம்

. *பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரைமணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதன் கசப்பு போய்விடும்...

வியாழன், 11 ஜூன், 2020

படுக்கையறை பாடம் பற்றியும் பராமரிப்பு பற்றியும் நாம் அறிய வேண்டியவை

படுக்கையறை பாடம் பற்றியும் பராமரிப்பு பற்றியும் நாம் அறிய வேண்டியவை


நாம் அனைவருமே நமது வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதி நேரத்தை படுக்கையறையில் செலவிடுகிறோம். அதாவது படுக்கை அறையில் தூங்கிக் அளிக்கிறோம் தூங்கும் போது, உடலின் நோயெதிர்ப்பு கட்டமைப்பு பகல் நேரங்களில் உருவாகும் நச்சுத்தன்மை களில் இருந்து விடுபட்டு நோய் எதிர்ப்பு திறனை வளர்த்துக் கொள்கிறது. மிக முக்கியமான இந்த செயல்பாடு தூக்கத்தில் நடைபெறுவதால் படுக்கை அறை மிக சுத்தமாக அமைய வேண்டியது அவசியம்கா. காற்றும், வெளிச்சமும் போதுமான அளவு கிடைப்பது அவசியம். படுக்கையறை சட்டத்திற்காக தெரிந்து கொள்ள வேண்டிய பாடங்கள் என்னென்ன தெரியுமா? இதோ அந்த பட்டியலைக் கீழே பார்ப்போம். முதலில் படுக்கை அறையை பாசி அண்டவிடாமல் பராமரிக்க வேண்டும் தினமும் தூங்கி விழித்த உடன் படுக்கையை சுத்தம் செய்ய வேண்டும் இதுவே சுத்தத்திற்கு அடையாளம். படுக்கை விரிப்பு மற்றும் தலையணை உறையை அவ்வப்போது மாற்ற வேண்டியது அவசியம் அப்படி இல்லை என்றால் சுத்தம் தங்காது. படுக்கை அல்லது தலையணை உறையை மாற்ற வடிவிலும் புகைப்பது நன்று வாரத்திற்கு ஒரு முறையாவது குறைப்பது மிகமிக நன்று. படுக்கையறை ஜன்னல்களில் சுத்தம் காற்றை தரும் விதத்தில் சில வகைச் செடிகளை வைக்கலாம் அதில் இருக்கும் செடிகளை தேர்ந்தெடுத்து வாங்கி பயன்படுத்துங்கள். அதுமட்டுமில்லாமல் கட்டில் ஜன்னல் காற்றாடி உள்ள தூசிகளை தினமும் செய்ய முடியாவிட்டாலும் வாரத்திற்கு ஒருமுறையாவது அல்லது மாதத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்வது மிகவும் நன்று.

கொசுக்களை விரட்டுவதற்காக பொருள்களை படுக்கை அறைக்குள் பயன்படுத்தும்போது அறையை விட்டு வெளியே வந்து விடுங்கள்.

கொசுவர்த்தி உபயோகிக்கும் போது உள்ளே படுத்து தூங்குவது நல்லதல்ல. கொசுவர்த்தி கள் எரியும்போது படுக்கை அறை கதவு ஜன்னல்களை திறந்து விடுவது நல்லது து படுக்கை அறை கதவு ஜன்னல்களை திறந்து விடுவது நல்லது. தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு கொசுவர்த்தி கலை அணைத்துவிடுங்கள் அதுவே நல்லது. உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தினமும் 7 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குகிறார்கள் ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி தினமும் 8 மணிநேர தூக்கம் அவசியம், இதயநோய் மன அழுத்தம், சர்க்கரை வியாதி உடல் பருமன் என்று பல பிரச்சனைகளை கைப்பற்றி அழைத்துவரும். தினமும் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் உறங்குவதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும் சராசரியாக ஏழு முறை இரவு தூக்கம் கவலைகளால் பாதிக்கப்படுகிறது இரவில் விழித்திருக்க வைத்திருப்பதில் பணப்பிரச்சனை ஆரோக்கிய அச்சம் வேலையை பற்றி கவலைகள் முக்கிய இடங்களைப் பிடிக்கின்றன கவலையால் உறக்கத்தை இறந்திருப்பது தமது அன்றாட நலத்தை பாதிப்பதை உணர்த்துவதாக பத்தில் ஏழு பேர் கூறுகிறார்கள்.

படுக்கையறையில் வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸ் ஆக இருப்பது தான் சரியானது ஏன் இயல்பாகவே இரவில் நம் உடல் வெப்பநிலை தணிக்கிறது இந்நிலையில் படுக்கையறையின் குளுமை நமது உடல் வெப்பநிலை உடன் இணைந்து நல்ல உறக்கத்துக்கு உதவும். படுக்கைக்கு செல்வதற்கு 90 நிமிடங்களுக்கு முன் குளிப்பது நல்லது குளியலுக்குப் பின் உடல் வெப்பநிலை உடனடியாக குறைவதால் தூக்கம் உங்களை தாலாட்ட தொடங்கிவிடும். படுக்கையில் உறக்கத்தை எதிர்நோக்கி எவ்வளவு நேரம் கண்மூடி கிடப்பது சுமார் 20 நிமிடங்கள் எதிர்கொள்ளலாம் என்று கருத்து சொல்கிறார்கள் நிபுணர்கள் உறக்கம் உங்களை தழுவுவதற்கு அவ்வளவு நேரம் மட்டும் அனுமதிக்கலாம். அதற்குப் பின்பும் உறக்கம் வரவில்லை எனில் குறைந்த ஒளியில் மெல்லிசை கேட்பது ஏதாவது புத்தகம் வாசிப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

காபி, செயற்கை குளிர்பானங்கள், டீ, சாக்லேட் ஆகியவற்றின் தாக்கம் முழுமையாக நீங்குவதற்கு சராசரியாக எட்டு மணி நேரம் ஆகிறது. எனவே நீங்கள் மாலையில் நேரம் கடந்து பருகும் ஒரு காபி இரவில் உங்கள் தூக்கத்தில் குறுக்கிட கூடும் பிற்பகல் 2 மணிக்கு மேல் காபி பருகுவதை தவிர்ப்பது நல்லது. உங்கள் படுக்கையில் உங்களுடைய வியர்வை என்னை மட்டுமல்ல இறந்த சரும செல்களும் படுகின்றன இந்த செல்கள் கண்களுக்கு தெரியாது நுண்ணுயிரிகளுக்கு நல்ல உணவாகின்றன இந்த நுண்ணுயிரிகள் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும் தேசிய ஒழுக்கவியல் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி படுக்கை விரிப்பு சுத்தமாக இருக்கும்போது தங்களால் ஆழ்ந்து உறங்கும் முடிவதாக 71 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கின்றனர் எனவே ஏழு நாட்களுக்கு ஒருமுறையாவது வாரம் ஒருதடவை படுக்கை விரிப்பு தலையணை உறைகளை துவைத்து உலர்த்தி பயன்படுவதை வழக்கமாக வைத்திருங்கள். வெறும் ஆறு நிமிடங்கள் புத்தகம் வாசிப்பது 68 சதவீதம் அளவுக்கு மன அழுத்தத்தை குறைக்கிறது என்கிறது இங்கிலாந்து பல்கலைக்கழக ஆய்வு எனவே நூல் வாசிப்பது என்பது உறக்கத்திற்கு முன் செய்யக்கூடிய சரியான செயல் அது நம் உறக்கத்தைப் பாதிக்கும் கவலைகளில் இருந்து திசை திருப்புகிறது.

பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கவனத்திற்கு - உடனடியாக இதனை செய்யுங்கள்.


பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கவனத்திற்கு - உடனடியாக இதனை செய்யுங்கள்.

 
இனி, நம் குழந்தைகள் ÷ அனைவரும்   1, 6, 9, 11  வகுப்பு  புதிய  பாடத்திட்டத்தில்  புதிய கற்பித்தல் முறைகளுக்காக '  smartphones' பயன்பாடும், ' cam scanner, Diksa, Mx  Videoplayer,  Es file manager' போன்ற  Android Apps, ' You tube 'யும் பயன்படுத்த  தேவையும் வரலாம்.  அவ்வாறு  பயன்படுத்தும் போது, அடிக்கடி    இடையிடையே  சில முகம் சுளிக்கும்  விளம்பரங்களும்  வரலாம்.

எனவே, முன்னெச்சரிக்கையாக 'Phone 'ல் செய்ய வேண்டியது; ' Play store'     சென்று ' Settings'            ல் ' Parent control' option ஐ     'on'      செய்யவும். அதன் கீழே உள்ள 'Apps and Games' ஐ கிளிக் செய்து    '12+'ல் டிக் செய்யவும். அடுத்ததாக   ' Films'     ஐ   கிளிக் செய்து     '  U' என்பதை    டிக் செய்யவும். 

அதேபோல்    '  YOU TUBE' settings ல்  general  ல்   ' Restriction mode '           ஐ   'On'        செய்யவும். இப்போது, நம் குழந்தைகளின் smartphone ல், தேவையற்ற  விளம்பரம்,Video குறுக்கிடாமல்   பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானதாக இருக்கும்.

திங்கள், 8 ஜூன், 2020

சரக்கலை ரகசியங்கள்


சரக்கலை ரகசியங்கள்

*விரும்பிய குழந்தைகளை உருவாக*

ஆணுக்கு வலது நாசியிலும் பெண்ணிற்கு இடது நாசியிலும் சுவாசம் ஓடும் போது உறவு கொண்டு கரு உருவானால் அது *ஆண் குழந்தையாக உருவாகும்*

இதே போல ஆணுக்கு இடது நாசியிலும் பெண்ணுக்கு வலது நாசியிலும் சுவாசம் ஓடும் போது உறவு கொண்டு கரு உருவானால் அது *பெண்ணாக உருவாகும்...*

இருவருக்குமே ஒரு பக்கமாக சுவாசம் ஓடினால் *அலியாக பிறக்கும்...*

ஆணுக்கு விந்து வெளியாகும் போது அபான வாய்வு அதனை எதிர்க்குமானால் *ஒன்றிற்கு மேற்பட்ட கரு உருவாகும்...*

அடுத்து

*கரு சிதைவு ஏற்பட காரணம் என்ன??*

இருவரின் மனமும் ஒத்து போகாத போதும், மன அழுத்தம் இருக்கும் போதோ, விருப்பமே இல்லாமல் உறவு கொண்டு கரு உருவானாலோ, இருவரும் இயல்பாக இல்லாமல் இருக்கும் போது உறவு கொண்டு கரு உருவானால் இவ்வாறு ஆகும்...

*ஊனமாய்/ குறைகள் உள்ள கரு உருவாக காரணம் என்ன????*

திருமூலர் கூறியது

*மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் உருவாக காரணம்* தேக சம்பந்தம் வைத்து கொள்ளும் போது பெண் வயிற்றில் மலம் மிகுந்து இருத்தலே காரணம்

*ஊமை குழந்தை உருவாக காரணம்* பெண்கள் வயிற்றில் சிறுநீர் மிகுந்து இருத்தலே காரணம்

*குருடனாக குழந்தை உருவாக காரணம்* பெண்கள் வயிற்றில் சிறுநீர் மற்றும் மலம் மிகுந்து இருத்தலே காரணம்

*குள்ளமாக குழந்தை உருவாக காரணம்* உடல் உறவின் போது ஆணின் சுவாசம் குறைவாக இருந்தால் இது போல் ஆகும்

*முடமாக / நொண்டியாக குழந்தை உருவாக காரணம்* உறவின் போது ஆணின் சுவாசம் திடமின்றி வெளிப்பட்டால் இது போல் ஆகும் 

*கூனாக குழந்தை உருவாக காரணம்* ஆணின் சுவாசம் திடமின்றி & குறைவாக வெளியானால் இது போல் நடிக்கும்

*குறைகளற்ற குழந்தைகள் பிறக்க*

உடல் உறவின் போது ஆண் & பெண் சுவாசம் சீராக இருக்க வேண்டும் அதே போல் ஆணின் விந்து வெளியாகும் போது சுவாசம் சீராக இருக்க வேண்டும் இந்த நேரத்தில் கரு உருவானால் எந்த குறைகளும் இல்லாத குழந்தைகள் பிறக்கும்

நன்றி


சனி, 6 ஜூன், 2020

இரவில் தொப்புளில் தினமும் ஒரு சொட்டு #எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!


இரவில் #தொப்புளில் தினமும் ஒரு சொட்டு #எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் #நன்மைகள்!!

♥நமது உடலில் அனைத்து நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில்தான் அமைந்துள்ளது என்பதை அறிவீர்களா? குறைந்தது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் அளவு பூமீயின் சுற்றளவு இருமடங்கு இருப்பதைப் போல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

♥அத்தகைய தொப்புளை பெண்களிடம் கவர்ச்சி அம்சமாகவும், ஆண்களிடம் கண்டு கொள்ளாமலும் வைத்திருக்கிறோம். இப்போதும் கிராமத்தில் குழந்தைகள் அழுதால் தொப்புளில் சிறிது எண்ணெய் துளி விட்டதும் அடுத்த நொடியை குழந்தை நிப்பாட்டுவது நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.

♥வாயுக் கோளாறுகள் இருந்தால் தொப்புளில் சிறிது பெருங்காயத்தை நீரில் கரைத்து தொப்புளில் தடவுவது உண்டு. அப்படி தடவுவதால் உடனடி பலன் கிடைக்கும் என்பதில் சந்தெகமில்லை.

♥அப்படி உடனடி நிவாரணம் தரும் முக்கிய புள்ளியான தொப்புளில் எண்ணெய் சிறிது விடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிவீர்களா? தொடர்ந்து படியுங்கள்

#கண்பார்வை :
♥தொப்புளில் நீங்கள் தினமும் எண்ணெய் விட்டால் கண் பார்வை தெளிவடையும் . கம்ப்யூட்டர் , மொபைல் சதா சர்வ காலமும் பார்ப்பதால் நிறைய பேருக்கு கண் வறட்சி உண்டாகிறது. அவர்களுக்கு இந்த வைத்தியம் வரப்பிரசாதம். கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு போன்றவற்றை குணப்படுத்துகிறது

#பாதவெடிப்பு, #சருமபிரச்சனை :
♥உடல் சூட்டினால் உண்டாகும் பித்த வெடிப்பு குணமாகிறது. சருமம் பளபளக்கிறது. உதடு வறட்சி மறைகிறது. தலை முடி ஆரோக்கியமாக செழித்து வளரும்.

#மூட்டுவலி :
♥முழங்கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகிறது. கால் குடைச்சல் சாத சர்வ காலம் சிலருக்கு இருக்கும். இதற்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உண்டாகும். அவர்கள் தொப்புளில் எண்ணெய் விடுவதால் கால் நரம்புகள் ஆசுவாசமடைகின்றன. இதனால் மூட்டு, கால் வலிகள் குணமாகிறது.

#உடல்சோர்வு :
♥உடல் நடுக்கம், சோர்வு மற்றும் கணைய பாதிப்புகள் குணமாகிறது. கர்ப்பப்பை வலுப்பெறுகிறது. உடல் சூடு குறையும். நல்ல தூக்கம் வரும். எந்த எண்ணெய் எந்த பாதிப்பைப் போக்கும் என இப்போது பார்க்கலாம்.

#நரம்புபாதிப்புகள் :
♥நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் துவண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை வலுப்படுத்தும். இதனால் சீரான ரத்தம் பாய்ந்து உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

#தேங்காய்எண்ணெய் :
♥தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒரு இன்ச் அளவிற்கு மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்தால் கண்வலி, சரும வறட்சி குணமாகும்.

#விளக்கெண்ணெய்
♥இரவில் தொப்புளில் விளக்கெண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை இஞ்ச் அளவிற்கு மசாஜ் செய்யும்போது முழங்கால் வலி, மூட்டு வலி , கால் வலி போன்றவை குணமாகின்றன.

#வேப்பெண்ணெய் :
♥வேப்பெண்ணெயை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும், தொற்றுக்களும் குறைகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. நச்சுக்கள் அழிகிறது.

#எலுமிச்சை எண்ணெய் :
♥எலுமிச்சை என்ணெய் வைத்தால் உடலில் பூஞ்சை தொற்று காரணமாக வரும் வயிற்று வலி குணமாகும்.. தொற்றும் அழிந்துவிடும்.

#பாதாம் எண்ணெய் :
♥சருமம் பளபளக்கிறது. முகம் இளமையாக மாறும். சுருக்கங்கள் மறையும். தினமும் இரவில் தொப்புளில் தடவி மசாஜ் செய்தால் பத்து நாட்களில் முகம் பளபளப்பாகிறது.

#ஆலிவ் எண்ணெய் :
♥தொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்தால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும்.

உணவு பாதுகாப்பு தினம் ஜூன் 07.

உணவு பாதுகாப்பு தினம் ஜூன் 07.

இன்று ஜூன் 07ஆம் தேதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 10 பேரில் 1 பேர் அசுத்தமான உணவை சாப்பிடுவதால் நோய்வாய்ப்படுகிறார்கள் என அறிவித்துள்ளது. உணவுப் பாதுகாப்பு முறைமைகளை ஒழுங்காக கையாளுவதன் மூலம் எமக்கான உணவு சுத்தமானதாகவும் பாதுகாப்பானதாகவும் பெற்றுக்கொள்ள இயலும். இது குறித்து உலக சுகாதார அமைப்பு எளிய ஐந்து வழிமுறைகளை தந்துள்ளது.


1. எப்போதும் தூய்மை

நாம் சமையலறைக்குள் நுழைவதற்கு முன்பு, கைகளை கழுவுவதும், சமைக்கும் போது எல்லா நேரங்களிலும் தூய்மையையும் சுகாதாரத்தையும் உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

2. பதப்படுத்தப்பட்ட மற்றும் சமைக்காத உணவுகளை பிரிப்பது

பதப்படுத்தப்பட்ட உணவுகளை சமைக்காத உணவுகளிலிருந்து வெவ்வேறு கொள்கலன்களில் வைப்பது நல்லது. இது இரண்டில் ஏதேனும் மாசுபடுவதற்கான அபாயத்தைத் தடுக்கும்.

3. நன்றாக சமைக்கவும்

எந்தவொரு கிருமிகளையும் கொல்லவும், ஊட்டச்சத்தை அதிகரிக்கவும், உணவு பரிமாறுவதற்கு முன்பு முழுமையாகவும் ஒழுங்காகவும் சமைக்கப்படல் வேண்டும்.

4. உணவு வகைகளுக்கு தகுந்த வெப்பநிலை

வேவ்வேறு வகையான உணவுகளுக்குத் தகுந்தாற்போல் வேவ்வேறு முறைகளில் அவைகளை சேமிக்க வேண்டும். (பாதுகாக்க வேண்டும்). உணவு சேமிப்பு இடம் மற்றும் வெப்பநிலை வாரியாகவும்; உணவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும்.

5. சுத்தமான நீர் மற்றும் பாதுகாப்பான மூலப்பொருட்களைப் பயன்படுத்துங்கள்

சமையலின் போது பாதுகாப்பான மூலப்பொருட்களும், சுத்தமான பாத்திரங்கள் மற்றும் சுத்தமான நீரை எல்லா நேரங்களிலும் பயன்படுத்துங்கள்.

இந்த வழிமுறைகளை நாம் அடிக்கடி செய்வோர் ஆயினும் இந்த நோய் பேரிடர் காலத்தில் மீண்டும் கூடுதல் அவதானமாக உணவுகளை பாதுகாப்பாக வைத்திருப்பது அதனை உட்கொள்வோர் அனைவரினதும் கடமையாகும். மேலும் ஊரடங்கு காலத்தில் புதிதாக தங்களது திறமைகளை வெளிப்படுத்த சமையலைறைகளுக்குள் நுழைந்திருப்பவர்கள் உணவை பாதுகாக்கும் இந்த ஐந்து முக்கிய வழிமுறைகளை தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளுங்கள், தெரிந்திருந்தால் வாழ்த்துக்கள். வாருங்கள் உணவை பாதுகாப்பாக உட்கொள்வோம்!

 

நுகர்வோர்கள் இனிப்பு மற்றும் கார வகைகளை உணவு அங்காடிகளில் வாங்கும் பொழுது கடை பிடிக்க வேண்டிய உணவு பாதுகாப்பு முறைகள் :-

1. அதிகப்படியான செயற்கை வண்ண நிறமிகள் (Artificial Colouring Agent) கொண்டு இனிப்பு பொருட்கள் இருந்தால் வாங்குவதை தவிர்த்தல் வேண்டும்.


2. இனிப்பு வகைகளை பரிசு பொருட்களாக பேக்கிங் செய்து விற்பனை செய்யும்பொழுது. அதில் பால் வகையான இனிப்புகளை மற்ற இனிப்புகளோடு கலந்திருந்தால் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஏன் என்றால், பாலால் செய்யப்பட்ட இனிப்புகளின் சேமிக்கும் நிலை மற்றும் காலாவதியாகும் தேதி மாறுபடும். எனவே, அது குறிப்பிடப்பட்டுள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.


3. ஈக்கள் மொய்க்கும் வண்ணம் இனிப்பு மற்றும் கார வகைகள் இருந்தால் வாங்குவதை தவிர்த்தல் வேண்டும்.


4. துர்நாற்றம் வீசும்; இனிப்பு மற்றும் கார வகைகளை தவிர்த்திட வேண்டும்.


5. உணவு அங்காடிகளில் வாங்கும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு முறையான ரசீது பெற்றிருத்தல் வேண்டும்.


6. உணவு கையாளும் பணியாளர்கள் தூய்மையான ஆடைகள் அணிந்தும் நகங்களை சீர்செய்தும், தலைகவசம், கையுறையுடன் இனிப்பு கார வகைகளை கையாளுகின்றனரா என்பதை உறுதி செய்தல் வேண்டும்.


7. இனிப்பு கார வகைகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய். நெய் விபரங்களை தகவல் பலகையாக உணவு விற்பனை கூடத்தில் வைத்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.


8. நுகர்வோர் இனிப்பு மற்றும் கார வகைகளை விற்பனை கூடங்களில் பொட்டலமிட்டு வாங்கும் பொழுது உணவு சேமிப்புக்குரிய தரத்துடன் (Food Grade containerlPacking Mpterial) உள்ள பிளாஸ்டிக் கொள்கலன்களில் வழங்குவதை உறுதி செய்தல் வேண்டும்.

நிலங்கள் ஐந்து






நிலங்கள்  ஐந்து

குறிஞ்சி நிலம்

நிலங்கள்  ஐந்து தெரியுமா?
    நலங்கள்  தருமே புரியுமா?
குன்றும்  மலையும் காணலாம்
     கொடியும் செடியும்  பார்க்கலாம்
தேனும் தினையும் உண்ணலாம்
    தெவிட்டா நீரைப் பருகலாம்
குரங்கும் மயிலும் ஆடுமாம்
    குறிஞ்சி  என்றே பாடுமாம்


முல்லை நிலம்


நிலங்கள்  ஐந்து தெரியுமா?
    நலங்கள்  தருமே புரியுமா?
காடுகள் அடர்ந்து இருக்குமாம்
    கன்றும் மாடும் மேயுமாம்
பாலும் தயிரும் பெருகுமாம்
    ஆயன் ஆட்சி நடக்குமாம்
முல்லைப் பூவும் மணக்குமாம்
    முல்லை பெருமை பேசுமாம்

.மருதம் நிலம்


நிலங்கள்  ஐந்து தெரியுமா?
    நலங்கள்  தருமே புரியுமா?
வயல்கள் விரிந்து கிடக்குமாம்
     கயல்கள்  துள்ளிக் குதிக்குமாம்
கரும்பும் நெல்லும் வளருமாம்
   அரும்பும் பூத்து சிரிக்குமாம்
வளமை செறிந்த மருதம் என்றே
     வண்டினங்கள்  இசைக்குமாம்

   நெய்தல்


நிலங்கள்  ஐந்து தெரியுமா?
    நலங்கள்  தருமே புரியுமா?
கடலே இறை எனக் கொள்வோமே
    கயலே இரை என உண்போமே
பரதவர் வாழ்வு சிறக்கவே
     படகும் கலமும் இருக்குமே
ஆழ்கடல் முத்தும் மிதக்குமே
     அழகு நெய்தலைப் போற்றுமே

பாலை நிலம்


நிலங்கள்  ஐந்து தெரியுமா?
    நலங்கள்  தருமே புரியுமா?
களவும் கொலையும் அதிகமாம்
    அச்ச உணர்வு கூடுமாம்
பூமி  வெடித்து இருக்குமாம்
   புல்லும் பொடியாய்ப் போகுமாம்
நீரும் நிழலும் இல்லாத
      பாலை வாழ்வு கொடுமையாம்

நன்றி - முனைவர்  ஜெயந்தி நாகராஜன்