வியாழன், 31 மே, 2018

கட்டுனா இந்த ஊரு பொண்ண கல்யாணம் பண்ணணும்... எல்லாருக்கும் ரெண்டு பொண்டாட்டி!

கட்டுனா இந்த ஊரு பொண்ண கல்யாணம் பண்ணணும்... எல்லாருக்கும் ரெண்டு பொண்டாட்டி!

இந்த காலத்தில் பலருக்கு திருமணம் நடப்பதே பெரிய காரியமாக இருக்கிறது. சென்ற நூற்றாண்டில் கள்ளிப்பால் கொடுத்த ஆயாக்களை எல்லாம் இந்த நூற்றாண்டின் இளைஞர்கள் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த நூற்றாண்டில் எல்லாம் சாதி, மதம், குலம், கோத்திரம் பார்ப்பதற்கு எல்லாம் நேரமே இருக்காது. முந்திக் கொண்டு ஆண்கள் வரிசையில் நின்று சீர்வரிசை, டவுரி கொடுத்தால் தான் பெண் கிடைக்கும் என்ற நிலை கூற உண்டாகலாம்.
காலமோ இப்படி சென்றுக் கொண்டிருக்க... இன்னும இந்தியாவின் இந்தவொரு கிராமத்தில் மட்டும் ஊரில் இருக்கும் எல்லா ஆண்களும் இரண்டு பெண்களை கல்யாணம் செய்துக் கொண்ட ஜமாய்க்கிறார்கள். இதற்கு பின்னணியில் ஒரு காரணமும் கூறப்படுகிறது. 
ராஜஸ்தான்
தேராசர் (Derasar) என்று அழைக்கப்படும் இந்த கிராமம் ராஜாஸ்தான் மாநிலத்தின் பர்மெர் எனும் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் மொத்தம் 70 இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த இஸ்லாம் குடும்பங்களை சேர்ந்தவர்கள் இரண்டு திருமணம் செய்யும் வழக்கம் கொண்டிருக்கிறார்கள். ஒரு மனைவியை கட்டிக் கொண்டே பலர் திண்டாடிக் கொண்டிருக்கையில்... இவர்கள் இரண்டு மனைவிகளை கட்டிக் கொண்டு சந்தோசமாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.
காரணம்!
தேராசர் கிராமத்தில் வாழ்ந்து வரும் இஸ்லாமிய குடும்பத்தார் பின்பற்றி வரும் இந்த இரண்டு திருமணம் வழக்கத்திற்கு காரணமும் கூறப்படுகிறது. அது கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் இருக்கிறது. இந்த கிராமத்தில் வசிக்கும் ஆண்களுக்கு முதல் மனைவி மூலம் வாரிசு தரிக்காது என்றும், எனவே, குழந்தை பெற்றுக் கொள்வதற்கு என இரண்டாம் திருமணம் செய்துக் கொள்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
நம்பிக்கை!
முதல் மனைவி மூலம் குழந்தை கிடைக்காது... ஆகையால் தான் இரண்டாம் திருமணம் செய்துக் கொள்கிறோம் என்று இவர்கள் சும்மா ஒரு காரணாம் கூறுகிறார்கள் என்று பலர் கருதலாம். ஆனால், உண்மையிலும் அப்படி தான் நடக்கிறது இந்த கிராமத்தில். இந்த கிராமத்தில் வசிக்கும் ஆண்கள் அனைவரும் தங்கள் இரண்டாம் மனைவி மூலமாக மட்டுமே குழந்தை பெற்றுள்ளனர். முதல் மனைவி மூலம் யாருக்கும் குழந்தை பிறக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இந்த முறையை இவர்கள் வழக்கமாக பின்பற்றி வருகிறார்கள்.
அர்த்தமற்றது!
தேராசர் கிராமத்தில் இவர்கள் பின்பற்றி வருவது அர்த்தமற்ற வழக்கமாக இருக்கிறது. இந்த வழக்கத்தை போலி என்று நிரூபிக்க வேண்டும், இதை மாற்ற வேண்டும் என்று கருதி சில ஆண்கள் ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்துக் கொண்டதாகவும். அவர்களுக்கு தங்கள் முதல் (ஒரே) மனைவி மூலம் குழந்தை பிறக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். இந்த கிராமத்தில் காணப்படும் இந்த வழக்கம் மிகவும் விசித்திரமாக இருக்கிறது.
இஸ்லாம் என்ன சொல்கிறது...
ஆனால், இஸ்லாம் மதத்தில் ஆண் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட முறை திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு சில காரணங்களும் கூறப்படுகின்றன. ஒருவேளை தனது மனைவிகளிடம் சமமான அன்பும், அக்கறையும் செலுத்த முடியாத ஆண் பலதாரணம் செய்துக் கொள்ள கூடாது என்றும் கூறப்படுகிறது. மேலும், முதல் மனைவி மூலம் பிள்ளை வரம் கிடைக்காத போது அந்த ஆண் இரண்டாம் திருமணம் செய்துக் கொள்ளலாம் என்று இஸ்லாம் மதத்தில் கூறப்படுவதாக அறியப்படுகிறது.

அதிக மனஅழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா ! இதோ இருக்கிறது தீர்வு...

அதிக மனஅழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா ! இதோ இருக்கிறது தீர்வு...


மனம் அமைதி இல்லாமல் பல்வேறு காரணங்களை மனதிற்குள்ளேயே வைத்துகொண்டு திணறிக்கொண்டிருக்கும் ஒருவித வெளிப்பாடுதான் மனஅழுத்தம். அது முதலில் சாதாரனமாக இருந்தாலும் மெல்ல உள நோயாக மாறும்போது சிலருக்குப் பயம், சிலருக்குப் புதிது புதிதான கற்பனைகள், சிலருக்குச் சந்தேகம், சிலருக்கு வெறுப்பு என வெவ்வேறு இன்னல்களை ஏற்படுத்தக்கூடியது.

மனநோய்கள் ஆரம்பநிலையில் பெரும்பாலும் குணப்படுத்தக் கூடியவைதான். பல்வேறு மனஅழுத்த நோய்களுக்கு உறக்கம் இல்லாததே முதல் காரணமாக இருக்கிறது. ஆரோக்கிய வாழ்வுக்கு 6 முதல் 7 மணி நேர தடையில்லாத உறக்கம் தேவை. தூங்க ஆரம்பித்த ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் கனவு வருவதும், அதிகாலையில் விழிப்பதற்கு முன்னர் 5 முதல் 10 நிமிடங்கள் கனவு வருவதும் இயல்பான உறக்கத்துக்கான அறிகுறிகள் ஆகும். பெரும்பாலானவர்களுக்கு உறக்கத்திலும் அலுவல் மற்றும் குடும்பம் சார்ந்த நினைவுகள் மனதை ஆக்கிரமிக்கும். இதுவும் மனஅழுத்தத்தின் ஒரு அறிகுறிதான்.   
மன அழுத்தத்தை குறைக்கும் சில உணவு வகைகளை கீழே காண்போம்!

மாதுளம்பழச் சாற்றை வெள்ளைச் சர்க்கரை, ஐஸ் துண்டுகள் சேர்க்காமல் தினசரி அருந்தலாம். இதில் இருக்கும் நிறமிச் சத்து மன இறுக்கத்தைக் குறைக்க உதவும். 
மூளையில் சுரக்கும் செரட்டோனின் சத்தைச் சீராக்கும் தன்மை கொண்டது வாழைப்பழம். இந்தச் சத்து குறைவினாலும், சீரற்ற நிலையிலும்தான் பல்வேறு உளவியல் நோய்கள் வருகின்றன. வாழைப்பழம் மனஅழுத்தத்துக்கு நல்லது.
உறங்குவதற்கு முன் ஒரு குவளைப் பாலில் அரை தேக்கரண்டி அமுக்ரா கிழங்குப் பொடி சேர்த்து, சூடாக அருந்தவும். நிம்மதியான தூக்கம் வரும். 

ஒரு சிட்டிகை ஜாதிக்காய்த் தூளை பாலில் சேர்த்து அருந்திவிட்டு உறங்கச் செல்லலாம். மன அமைதியில் இருந்து சற்று விடுதலை கிடைக்கும்
மனஅழுத்தம் உள்ளவர்கள் தினமும் சீரகத் தண்ணீர் அல்லது வெட்டிவேர் போட்ட மண்பானைத் தண்ணீரை அருந்துவது நல்லது. 
தினசரி இருமுறை குளிப்பது அன்றாட அழுக்கோடு மன அழுத்தத்தையும் நீக்கும். மனஅழுத்தத்துக்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள், மருத்துவரிடம்ன ஆலோசனை செய்து, அவர்களுக்காகவே பிரத்யேகமாக உள்ள பிரமித் தைலம், அசைத்தைலம், குளிர்தாமரைத் தைலம் இவற்றில் ஒன்றை வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை பயன்படுத்துவது நல்லது. எண்ணெயில் பொரித்த உணவுகள் பித்தத்தைக் கூட்டும், செரிக்கவும் நீண்ட நேரம் ஆகும். தந்தூரி உணவுகளை மனஅழுத்த நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. ஆவியில் வேகவைத்த உணவுகளே சிறந்தவை. 

மேற்கண்ட வழிமுறைகள் அழுத்தத்தைக் குறைக்குமே தவிர தீர்க்கும் வழிமுறை கிடையாது. இதனல , எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அவ்வப்போது நெருக்கமான நபர்களிடம் மனம் விட்டு பேசி , தூங்குவதற்கு முன்னர் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை யோசித்து தீர்மானித்துவிட்டு சந்தோசமாக இருக்கும் வழிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே முற்றிலுமாக நீங்கள் விடுமட முடியும். முடிந்தவரை காலையில் எழுந்ததும் தியானத்தில் ஈடுபடலாம்.

டீன் ஏஜ் சிக்கல்கள் 1 - உங்களை பிள்ளைகள் வெறுக்கிறார்களா?

டீன் ஏஜ் சிக்கல்கள் 1 - உங்களை பிள்ளைகள் வெறுக்கிறார்களா?

நம் அனைவருக்கும் தங்கள் டீன் ஏஜ் பருவத்தை நினைத்துப் பார்த்த்தால் மனதுக்குள் சந்தோஷம் கரைபுரண்டு ஓடும். டீன் ஏஜில் நண்பர்களுடன் சுற்றித் திரிந்தது, மனதுக்குப் பிடித்த ஆணையோ, பெண்ணையோ பார்த்தால் உடலெங்கும் மின்சாரம் ஓடியது, வீர தீரமிக்க பல செயல்களைச் செய்தது என பல நினைவுகள் கண் முன் வந்து ஆடும். 'அந்தப் பருவம் அப்படியே நீடித்து இருக்கக் கூடாதோ?' என இப்போதும் மனம் ஏங்கும்.
ஆனால், இப்போது வீட்டில் அதே டீன் ஏஜில் மகனோ, மகளோ இருந்தால், 'அய்யோ இவன் படுத்துற பாடு தாங்கல, என்னைய கொஞ்சம் கூட மதிக்கிறது இல்ல, நான் சொல்லுறதக் கேக்குறது இல்ல, எப்பப் பாரு செல்லும் கையுமா இருக்கான். இல்லாட்டா, கிரிக்கெட் பேட்டைத் தூக்கிட்டு ஃபிரண்ட்ஸ் கூட போறவன் எப்ப வரான் போறான்னு தெரியல' என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை வீசுகிறோம். 
ஒரு தலைமுறைக்கும் இன்னொரு தலைமுறைக்கும் இடையே வாழ்க்கை முறையில் பல நூறு விஷயங்கள் மாறுகிறது. ஆனால் டீன் ஏஜ் சிக்கல்கள் எல்லா காலத்திலும் ஒரே மாதிரியாகத்தான் உள்ளது.   
டீன் ஏஜ் பருவத்தில் குறிப்பாக ஐந்து பெரும் சிக்கல்கள் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் வரும். குழந்தை ஆறாம், ஏழாம் வகுப்பு படிக்கும் வரை பெற்றோர் எது சொன்னாலும் அதை சரி என்று நம்பி, அதை பின்பற்றியிருக்கும். 'இந்த பேன்ட் போடு, இந்த சர்ட் போடு... இதுதான் உனக்கு நல்லா இருக்கும்' என்று அம்மாவோ அப்பாவோ சொன்ன கணத்தில் உடனே மறுபேச்சின்றி அந்த ஆடையை போட்டுக்கொள்ளும். அப்போது, அம்மா - அப்பா சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என்று குழந்தை பெற்றோரை முழுவதுமாக நம்பியது. அதனால் பெற்றோர் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டது.
ஆனால், எட்டாம் வகுப்புக்கு மேல், அதாவது 14 வயதுக்கு மேல் வந்த மகனிடமோ, மகளிடமோ போய் பெற்றோர் கருத்து சொன்னால், அதை உடனே ஏற்றுக்கொள்ள தயங்கும். காரணம், தற்போது டீன் ஏஜில் காலடி எடுத்து வைத்து ஒரு படி மேல போய்விட்டதால் தனக்கு என்று ஒரு ரசனை, கருத்து, சிந்தனை ஆகியவற்றை உருவாக்கிக் கொள்ள முனைவார்கள். அப்போது அம்மா, அப்பா சொல்லும் எதிர்க்கருத்தை ஏற்றுக்கொள்வது அவர்களுக்குச் சிரமமாக இருக்கும். 'எனக்கு என்ன வேணும்னு தெரியும் போம்மா' என்று அவர்கள் சர்வ சாதாரணமாகத்தான் சொல்வார்கள். ஆனால் அம்மாக்களோ, 'அய்யோ நேத்துவரைக்கும் என் பேச்சுக்கு மறு பேச்சு பேசாதவன்/ள் இப்ப எதிர்த்து எதிர்த்து பேசுறானே/ளே' என்று புலம்ப ஆரம்பிப்பார்கள்.
அது சில வீடுகளில் பூகம்பமாக வெடிக்கும். அம்மாவுக்கும் பிள்ளைக்கும் இடையில் சண்டையாக வளரும். இதனால் அம்மாக்கள் நிம்மதியின்றி கவலையுடன் இருப்பார்கள். ஏன் அப்பாவிடம் பிள்ளைகளுக்கு இந்த சிக்கல் வராதா? என்ற கேள்வி வரலாம்.  பெரும்பாலான குடும்பங்களில் அப்பா அதிகாரத்தின் தலைவனாக இருப்பதால், பிள்ளைகள் அப்பாவிடம் அடக்கித்தான் வாசிப்பார்கள். அதுவும் ஆண்பிள்ளைகள். ஆனால் அதே ஆண்பிள்ளைகள் டீன் ஏஜின் அடுத்த படிக்கட்டில் கால் வைத்துவிட்டால் அதே அதிகார அப்பாவை முறைப்பார்கள். எதிர்ப்பார்கள். 
டீன் ஏஜ் என்றாலே பிள்ளைகள் இப்படித்தான் அம்மா, அப்பாவை எதிர்த்துப் பேசுவார்களா? இதற்குத் தீர்வே இல்லையா என்று பதற வேண்டாம். கண்டிப்பாக தீர்வு இருக்கிறது. 
ஒரு எல்லை வரை அம்மா, அப்பா பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். அவர்கள் எதிர்த்துப் பேசுகிற எல்லா விஷயங்களுக்கும் உடனே நாம் எதிர்வினை புரியாமல், அமைதியாக இருப்பதுதான் பிரச்னைகள் வெடிக்காமல் இருக்க ஒரே தீர்வு. ஆனால் எல்லா நேரத்திலும் அமைதியாக இருப்பதும் ஆபத்து. 
சில நேரத்தில் உங்கள் பிள்ளை எதிர்த்து பேசுவது உங்கள் நிம்மதியையும் மன நிலையையும் பாதித்து, அவருடைய நடத்தையையும் பாதிக்கக் கூடியதாக இருந்தால், நிச்சயம் இப்படி நீங்கள் சொல்லித்தான் ஆக வேண்டும். இது, மிகவும் பழைய அணுகுமுறைதான் என்றாலும் இதுதான் இதற்கு சரியான தீர்வு. 
ஆம், 'மகளே, நீ இப்படியே பேசுவதா இருந்தா நிச்சயம் என்கிட்ட பேசாத' என்று கறாராகச் சொல்ல வேண்டும். அப்போதுதான், இதுவரை பெற்றோர் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்த ரோலர் கோஸ்டர் பிள்ளையின் மண்டைக்குள் ஓடும்? 'ஏன், அம்மா இப்படி சொன்னார்?'  என்று அவர்கள் யோசிப்பதற்கு நேரம் கொடுப்பது அவசியம். இந்த அணுகுமுறை நிச்சயம் பிள்ளையின் மனதையையும் நடத்தையையும் மாற்றும். 
ஆனால், எந்த சூழ்நிலையிலும் பிள்ளையின் மனதில் 'நம் அப்பாவும் அம்மாவும் நமக்கு என்ன நடந்தாலும் நம்முடன்தான் இருப்பார்கள், நம்மை பாதுகாப்பார்கள்' என்கிற உணர்வை அவர்களுக்குத் தருவது மிக முக்கியம். அந்த நம்பிக்கைதான் அவர்களின் மனதுக்குள் தோன்றும் பல பிரச்னைகளில் இருந்து வெளியே வர உதவி புரியும். 
ஒகே, 'எப்பப் பார்த்தாலும் எம்புள்ள செல்லும் கையுமா இருக்கான்' என்று குற்றம்சாட்டும் பெற்றோரா நீங்கள்? அப்படியானால், அடுத்த பகுதி உங்களுக்கானதுதான். காத்திருங்கள்.
- நாச்சியாள் சுகந்தி, கட்டுரையாளர்.

நீங்கள் மருந்துகளை எடுத்துகொள்ள சரியான முறை - தவறான முறை

நீங்கள் மருந்துகளை எடுத்துகொள்ள சரியான முறை - தவறான முறை

மருத்துவ தகவல்:நோய் வராமல் தடுப்பதற்காகவும் ஊட்டச்சத்துகளுக்காகவும்கூட மாத்திரைகள் பயன்படுகின்றன.
இந்த மாத்திரைகளைச் சிலர் வாயில் போட்ட பிறகு தண்ணீர் குடிப்பார்கள். சிலர், வாயில் தண்ணீரை விட்டுக்கொண்டு மாத்திரை போடுவார்கள். அப்படியே வெறும் வாயில் விழுங்கிவிடுபவர்கள்கூட உண்டு. மேலும், காபி, டீ, குளூக்கோஸ் கரைசல், ஜூஸ், குளிர்ந்த நீர், வெந்நீர் என எந்தத் திரவப் பொருள் கிடைத்தாலும் அதனோடு சேர்த்து விழுங்குபவர்களும் உண்டு. இப்படி மாத்திரையை எதனோடு சேர்த்தும் எடுத்துக்கொள்ளலாமா… மாத்திரை எடுத்துக் கொள்ளும் சரியான முறைகள் என்னென்ன? பார்க்கலாம்.
மாத்திரைகள், வயிற்றில் உள்ள அமிலத் தன்மையைப் பொறுத்துச் செயல்படுகின்றன. பொதுவாக, உணவு உண்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னர், உணவு உண்ட 20 நிமிடங்களுக்குப் பின்னர் என இரண்டு முறைகளில் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உணவு உண்பதற்கு முன்னதாக எடுத்துக் கொள்ளப்படும் மாத்திரைகளின் செயல்பாடு மிதமானதாக இருக்கும். உணவு உண்ட பின்னர் எடுத்துக்கொள்ளப்படும் மாத்திரைகளின் செயல்பாடு தீவிரமாக இருக்கும்.
நோய் தீர்க்கும் மாத்திரைகள், வைட்டமின், இரும்புச்சத்து மாத்திரைகள் போன்றவை பெரும்பாலும் உணவுக்கு பின்னர்தான் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அசிடிட்டி மாத்திரை, வாந்தி நிற்கும் மாத்திரை போன்றவை உணவுக்கு முன்னர் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றன.
வாய்கொள்ளும் அளவுக்குச் சிறிது நீரைப் பருகி, அதில் மாத்திரையைப் போட்டு விழுங்குவதுதான் சரியான முறை. இதனால், விழுங்கும் மாத்திரை உணவுக்குழாயில் தடைபடாமல் செல்லும். நீரால் மாத்திரைக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. மாத்திரையை விழுங்கியப் பின்னர் நான்கு முதல் ஐந்து மடக்கு நீர் பருக வேண்டும். வெதுவெதுப்பான நீரில் மாத்திரையை விழுங்குவது நல்லது.
மாத்திரையை நீரில் கரைத்துக் குடிப்பதும் சரியான முறையே. இதனால், மாத்திரையை எடுத்துக்கொள்ளும் முறை எளிதாகிறது. பெரும்பாலும், ‘குழந்தைகளுக்கு மாத்திரையை நீரில் கரைத்துக் கொடுங்கள்’ என்பதே மருத்துவரின் பரிந்துரையாக இருக்கிறது.
பாலுடன் ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை எடுக்கும்போது, கால்சியத்துடன் ஆன்டிபயாட்டிக் வினைபுரிந்து நீரில் கரையாத கால்சியம் உப்பை உருவாக்கிவிடும். மாத்திரையின் பலனும் வீணாக, முற்றிலுமாகக்கூட வெளியேறலாம். இதனால், மாத்திரை சாப்பிடுவதால், எந்தப் பலனும் கிடைக்காத நிலை உருவாகும். நோயில் இருந்து குணமாதல் தாமதமாகும். மாத்திரை சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் அல்லது பிறகு பால் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம்.
மாத்திரைகளைப் பொடித்தோ, கேப்ஸ்யூல் மாத்திரைகளை திறந்து, நேரடியாக எடுத்துக்கொள்வதோ தவறு. சில மாத்திரைகள் எந்த நேரத்தில் செயல்பட வேண்டும் என்பதைப் பொறுத்து தயாரிக்கப்பட்டிருக்கும். இதை பொடித்துச் சாப்பிடும்போது, மாத்திரையின் செயல்திறன் குறையலாம். சில மாத்திரைகளில், வெளிப்புறம் உடனடியாக கரைந்து பலன் அளிக்கும் வகையிலும், உள்புறம் நீண்ட நேரம் தாக்குப்பிடித்து பிறகு கரையும் வகையிலும் இருக்கும். இதைப் பொடித்து சாப்பிடும்போது பலனளிக்காமல் போய்விடலாம். டாக்டர் பரிந்துரைத்தால் தவிர, பொடித்துச் சாப்பிடக் கூடாது.
தவறான முறைகள்
ஐஸ் வாட்டர் உடன் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது, மிகவும் தவறான முறை. பொதுவாக, உணவு உண்ட பின்னர் ஐஸ் வாட்டர் குடித்தாலே, உணவு செரிமானம் தாமதமாகிவிடும். மாத்திரையையைக் குளிர்ந்த நீரில் எடுக்கும்போது, மருந்து செயல்படும் நேரத்தைத் தாமதப்படுத்தி விடும்.
நீரானது உணவுடன் சேர்த்து வயிற்றிலேயே நீண்ட நேரம் தங்கிவிடும். அவ்வாறு, நீண்ட நேரம் வயிற்றில் தங்குவதால், கொழுப்புக்கட்டிகள் உருவாகும். மேலும், வயிற்றில் உள்ள கொழுப்புக் கட்டிகள் கரையாமல் உடல்பருமனை அதிகரிக்கச் செய்யும். ஐஸ் வாட்டருடன் மாத்திரையைச் சேர்த்துச் சாப்பிடும்போது, தொண்டைவலி ஏற்படும். சளி பிடிக்கக்கூடும்.
காபி, டீயோடு சேர்த்து மாத்திரையை எடுத்துக்கொள்வது மிகவும் தவறான முறை. இவற்றில் உள்ள காஃபின், மாத்திரையில் உள்ள வேதிப்பொருட்களுடன் வினைபுரியக்கூடும். உதாரணமாக, காபியுடன் சேர்த்து இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டால், காபியில் உள்ள காஃபின், மாத்திரையில் உள்ள இரும்புச்சத்து கிரகிக்கப்படுவதைத் தவிர்த்துவிடும். எனவே, மாத்திரை சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அல்லது ஒரு மணி நேரம் கழித்து காபி, டீ அருந்தலாம்.
மாத்திரைகளை நீர் இல்லாமல் எடுத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு எடுத்துக்கொண்டால், தொண்டையில் மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்படலாம். சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தலாம். தொண்டை வறட்சியை ஏற்படுத்தும். உணவுக்குழாயில் மாட்டிக்கொண்டால், அசெளகரியமான உணர்வு ஏற்படும். சில மாத்திரைகளின் சுவை நாவுக்கு ஒவ்வாதபோது குமட்டல் உணர்வு, வாந்தி ஏற்படும்.

உங்களுடையது ஆய்லி ஸ்கின்னா? அப்போ மிஸ் பண்ணாம படிங்க..

உங்களுடையது ஆய்லி ஸ்கின்னா? அப்போ மிஸ் பண்ணாம படிங்க..

பியூட்டி பிரச்னைகளில் மிக முக்கியமானது முகத்தில் எண்ணெய் சுரப்பது. எவ்வளவு புத்துணர்வுடன் இருந்தாலும் முகத்தில் வழியும் எண்ணெய் நம்மை மிகவும் 'டல்' திவ்யாவாக காட்டும். அதோடு முகப்பருக்கள் அதனால் உண்டாகும் தழும்புகள் என பிரச்னை போய்க்கொண்டே இருக்கும். அதுவும் இந்த சம்மர் நேரத்தில் சொல்லவே வேண்டாம். அந்த தொல்லை தரும் எண்ணெயை எப்படி குறைக்கலாம் எனப் பார்ப்போம்... 
மிசெல்லர் வாட்டர் டோனராகவும், சருமத்தில் அதிக எண்ணெய் பசையைக் குறைக்கவும் பயன்படுகிறது. 
ப்ளோட்டிங் ஷீட்டில் உள்ள கிளைக்கோலில் ஆசிட், எண்ணெயைக் குறைக்க உதவுகிறது. ஒருநாளைக்கு இரண்டு ஷீட்டுகள் வீதமோ அல்லது எப்போதாவதோ இதனைப் பயன்படுத்தலாம். 
களிமண் முகத்தில் உள்ள எண்ணெயை நீக்க சிறந்த பொருள், 'மட் தெராபி' என்பது பியூட்டியில் இன்று முக்கியமான சிகிச்சையாகிவிட்டது. அதனால் வாரம் ஒருமுறை சுத்தமான களி மண்ணை முகத்திற்கு பேக்காகப் போடலாம். 
அதிகளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை உணவை தவிர்த்து ஆன்டி ஆக்ஸிடென்ட் & ஒமேகா 3 கொழுப்புகள் உள்ள உணவை அதிகம் எடுத்துக் கொள்ளவும். 
எல்லாவற்றிற்கும் மேல் சிறந்த தோல் நிபுணரை சந்தித்து, உங்கள் சருமத்திற்கு சரியான தீர்வைப் பெறுங்கள். 

சீதாப்பழம் பத்தி இப்படியெல்லாம் வதந்தி வரும்... நம்பாதீங்க... ஜாலியா சாப்பிடுங்க

சீதாப்பழம் பத்தி இப்படியெல்லாம் வதந்தி வரும்... நம்பாதீங்க... ஜாலியா சாப்பிடுங்க

பழங்கள் ஆரோக்கியமானவை என்பது அனைவருக்கு தெரியும். பழங்களைப் பிடித்க்கதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். நமது தினசரி உணவில் பழங்களை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பழங்கள் பல நன்மைகளை செய்கின்றது. எல்லா வகைப் பழங்களையும் சாப்பிடுவது நல்லது. ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு சுவை மற்றும் குணம் உண்டு. 
ஒவ்வொரு பழமும் வெவ்வேறு ஊட்டச்சத்துகளைக் கொண்டது. ஒரு சில பழங்களை அதிகமாக சாப்பிடுவதை நமது பெற்றோர் அனுமதிக்க மாட்டார்கள். அதாவது சில பழங்களில் சூடு அதிகம் இருக்கும். சில பழங்கள் அதிக குளிர்ச்சி தன்மையுடன் இருக்கும். ஆகவே பழங்கள் சுவையானது என்பதற்காக அதிகமாக உண்பதை தவிர்ப்பது நல்லது.
 சூடு அதிகம்
மாம்பழம், பப்பாளி போன்ற பழங்கள் வெப்பமண்டலமான பிரதேசங்களில் விளைவதால் அவை சூடு அதிகம் உள்ள பழங்களாக கருதப்படுகின்றன. ஆகவே இவை உடல் வெப்பத்தை அதிகரிக்கும் பழங்களாக உள்ளன. வாழைப்பழம், சீதாப்பழம் போன்றவை உடலில் குளிர்ச்சியை அதிகரித்து சளியை உண்டாக்குகின்றன. சில பழங்களை தவிர்க்க சில அறிவியல் பூர்வமான நிருபணங்கள் இருப்பது நம்மை ஆச்சர்யப்பட வைப்பதாக உள்ளது.
எப்படி கண்டுபிடிக்கலாம்?
சூடு அதிகம் உள்ள பழங்கள் மற்றும் குளிர்ச்சியான பழங்கள் என்று எவ்வாறு பிரிக்கப்படுகின்றன? எல்லா பழங்களையும் சூடு மற்றும் குளிர்ச்சி என்று வகைபடுத்துகிறது ஆயுர்வேதம். பழங்களின் தன்மை மற்றும் அதனை எடுத்துக் கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றம் போன்றவற்றை பொறுத்து இந்த பிரிவுகள் தோன்றுகிறது. உடலின் உட்புற வெப்பநிலையை சில பழங்கள் அதிகரிக்கும், சில பழங்கள் குறைக்கும். இதனை வைத்து அந்த பழம் குளிர்ச்சியானது மற்றும் சூடானது என்று வகைப்படுத்தப்படுகிறது.
சீதாப்பழம் குளிர்ச்சியானதா?
சீதாப்பழம் என்பது ஒரு இனிப்பு சுவையை உடைய பழம். மேலே பச்சை நிற தடித்த தோல் மற்றும் உள்ளே மென்மையான சதைப் பகுதி மற்றும் விதைகள் கொண்டது. விதையின் மேலே சதைப் பகுதி போர்த்தப்பட்டு இருக்கும் மிகவும் இனிப்பான சுவையைக் கொண்டது இந்த சீதாப்பழம். இந்த பழம் ஒரு குளிர்ச்சியான பழம் ஆகும். இதனை எடுத்துக் கொள்வதால் உடலின் உட்புற வெப்ப நிலை குறைகிறது. இதனால் இந்த பழத்தை சாப்பிடுவதால் சளி பிடிக்கிறது என்று பொதுவாகக் கூறப்படுகிறது.
எது உண்மை?
சீதாப்பழம் சாப்பிடுவதால் சளி பிடிக்கிறது என்பது உண்மை அல்ல. பொதுவாக , பழங்கள் சாப்பிடுவதால் சளி பிடிப்பதில்லை என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை. பொதுவாக உண்டாகும் சளி தொந்தரவுகள் கிருமிகளால் உண்டாகிறது. இதற்கும் நாம் சாப்பிடும் பழங்களுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. அதனால், சீதாப்பழம் உட்கொள்வதால் சளி பிடிக்கிறது என்பது உண்மை இல்லை என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
அப்படியென்றால் இது பொய்யா?
குளிர்ச்சியான பழங்களை சாப்பிடுவதால் சளி தொந்தரவுகள் ஏற்படுகிறது என்று காலங்காலமாக நம்பப்படுகிறது. இதனை முற்றிலும் மறுப்பதற்கில்லை. குளிர்ச்சியான பழங்கள் உடல் வெப்பத்தைக் குறைக்கிறது என்பது உண்மை, ஆனால் மிகவும் அதிக அளவு உட்கொள்ளும்போதே உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஆனால் எந்த ஒரு மனிதராலும் மிக அதிக அளவு பழங்களை சாப்பிட முடியாது. ஒரே நேரத்தில் மிகவும் அதிகமாக இந்த வகைப் பழங்களை உட்கொள்வதால் உடலின் வெப்பநிலை குறைந்து உடல் நல பாதிப்புகள் தோன்றலாம். இதனால் நமது உடலின் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து கிருமி தொற்று தாக்கும் அபாயம் உண்டாகிறது. இதனால் சளி அல்லது ஜலதோஷம் உண்டாகிறது.
நன்மைகள்
சீதாப்பழத்தில் மற்றவர்கள் பரப்பும்வதந்திகளைக் காட்டிலும் பல மடங்கு ஆரோக்கியமும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றன. இந்த பழத்தில் இவ்வளவு நல்ல விஷயமா என்று உங்களை வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு நற்பயன்கள் இதில் அதிகம்.
சரும ஆரோக்கியம்
சீதாப்பழம் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைக்க உதவுகிறது. தொடர்ந்து சீதாப்பழம் சாப்பிட்டு வருவதால், சருமத்தில் கொலோஜென் உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது. இதனால் சருமத்தின் எலாஸ்டிக் தன்மை தக்கவைக்கப்பட்டு வயது முதிர்விற்கான அறிகுறி ஏற்படாமல் தடுக்கிறது.
சீதாப்பழமும் மற்ற பழங்களைப் போல் உடலின் சீரான செயல்பாடுகளுக்கு அதிகமான நன்மைகளைச் செய்கிறது. மிகவும் அதிகமான அளவு சீதாப்பழத்தை சாப்பிடுவதால் மட்டுமே உடல் பாதிப்புகள் தோன்றும். இல்லையென்றால் இதனை உட்கொள்வதால் உடலுக்கு நன்மைகள் மட்டுமே கிடைக்கின்றது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க. 

மனிதனின் இரத்த வகைகளில் மிக அரிதான இரத்தவகை எது தெரியுமா..?

மனிதனின் இரத்த வகைகளில் மிக அரிதான இரத்தவகை எது தெரியுமா..?



மனிதனின் இரத்த வகைகளில் மிக அரிதான இரத்தவகை எது தெரியுமா..?!

கடந்த 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் இரத்த தானம் செய்ய உலகெமெங்கும் உள்ள மக்கள் தானாக முன் வருவதில்லை, இரத்த தானம் பற்றிய பல மூட நம்பிக்கைகள் இன்று அளவு கூட மக்களிடையே ஒரு வித பயம் இருந்து வருகிறது. 
இருப்பினும், முறையான விழிப்புணர்வு காரணமாக சமீப காலமாக போதுமான அளவுக்கு மருத்துவமனைகளில் இரத்தம் கிடைத்து வருகிறது. உலகில் கிடைக்க பெறும் இரத்தங்களில் பெரும் பங்கு, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுடையது என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
மனிதனுக்கு மொத்தம் 08 வகையான இரத்த வகைகள் உள்ளது. இவற்றில் மிகவும் அரிதான இரத்தவகைகளை கீழ்கண்ட பட்டியலில் பார்க்கலாம்.
* ஓ = பாசிட்டிவ் - 38%,
* ஓ = நெகட்டிவ் - 7%,
* ஏ = பாசிட்டிவ் - 34%,
* ஏ = நெகட்டிவ் - 6 %,
* பி = பாசிட்டிவ் - 9%,
* பி = பாசிட்டிவ் - 2%,
* ஏபி = பாசிட்டிவ் - 2 %,
* ஏபி = நெகட்டிவ் - 1%.
இந்த அட்டவணையின் படி  ஏபி - நெகட்டிவ், பி = பாசிட்டிவ், பி = பாசிட்டிவ்,   இரத்தவகைகள் தான் மிகவும் அரிதான இரத்த வகை எனவே, இந்த செய்தியை படிப்பவர்கள் ஏபி - நெகட்டிவ் இரத்த வகையினை கொண்டிருந்தாள், மிகவும் கவனமாக உங்கள் வாழக்கையில் செயல்படுங்கள், உங்களுக்கு விபத்துகள் ஏற்பட்டால் இரத்தம் கிடைப்பது மிக அரிதான ஒரு விடயம் என்பதால் மிகவும் கவனமாக இருங்கள்.

உயர் இரத்த அழுத்தம் பிரச்சினை நீக்குவதற்கான வீட்டு வைத்தியம்...

உயர் இரத்த அழுத்தம் பிரச்சினை நீக்குவதற்கான வீட்டு வைத்தியம்...

வணக்கம் நண்பர்களே, இன்று நம் சமுதாயத்தில் உயர் இரத்த அழுத்தத்தின் பிரச்சனை அதிகரித்து வருகிறது. விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் படி, இதற்கு முக்கிய காரணம் வெளிப்புற மற்றும் திறந்த விஷயங்கள் ஆகும். உயர் இரத்த அழுத்தம் காரணமாக நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், உயர் இரத்த அழுத்தத்தின் பிரச்சனை ரூட் நீக்கம் செய்யப்படலாம் என்று 5 வழிகளை உங்களுக்கு சொல்கிறேன். ஆயுர்வேதத்தில் இந்த ஐந்து விஷயங்கள் உயர் இரத்த அழுத்தத்தின் பிரச்சனையாக விவரிக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் படக் குறிப்பு
1. சூடான தண்ணீரை ஒரு குவளையில் உலர்த்துவதற்கு முன் அரை டீஸ்பூன் வெந்தயம் விதைகள் சூடேற்றவும். காலையில் எழுந்திருந்து, இந்த தண்ணீரை குடிக்கவும், வெந்தயம் விதைகள் சாப்பிடவும் சாப்பிடுங்கள்.
2. பச்சை பூண்டு இரண்டு மொட்டுகளை உறிஞ்சி, சட்னி செய்து, காலையில் சிவப்பு வயிற்று வயிற்று தொடங்குகிறது, இதனால் உயர் இரத்த அழுத்தம் சாதாரணமாகிவிடும்.
சோஃபாக்கள், பருப்பு விதைகள் மற்றும் சர்க்கரை சாக்லியை சமமான அளவு கலந்து, நன்றாக தூள் தூளாக போடவும். மாலை காலையில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் ஒரு தேக்கரண்டி எடுத்து நிவாரணம் தருகிறது.
மூன்றாம் படக் குறிப்பு
4. அமலா சாறு குடிக்கவும், உயர் இரத்த அழுத்தத்தில் அதன் சடலத்தை உபயோகிக்கவும் பயனுள்ளது.
மூன்றாம் படக் குறிப்பு
4. 7 முதல் 8 துளசி இலை மற்றும் மிளகுத்தூள் இலைகளை இலை சாணியில் அரைக்கவும். அரை தேக்கரண்டி மணல் அல்லது வெற்று உப்பு கலந்து ஒவ்வொரு காலையிலும் காலியாக வயிற்றில் அதை சாப்பிடுங்கள். இது உயர் இரத்த அழுத்தத்தில் நிவாரணமளிக்கும்.

இயற்கையான மாம்பழம் சாப்பிட ஆசையா? இந்த தகவலை படியுங்க...

இயற்கையான மாம்பழம் சாப்பிட ஆசையா? இந்த தகவலை படியுங்க...

உடல் ஆரோக்கியம் :கால்சியம் கார்பைடு, பாஸ்பரஸ், எத்திலீன் போன்ற ரசாயனங்கள் மூலமாகப் பழங்கள் செயற்கையாகப் பழுக்கவைக்கப்படுகின்றன. இப்படிப் பழுக்க வைப்பதால் அதன் இயல்பு பாதிக்கப்படுகிறது. மாம்பழம் சாப்பிடுவதே அதிலுள்ள மினரல்ஸ், மல்டி வைட்டமின்களுக்காகத்தான். ஆனால், செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்டவற்றில் இவை எதுவும் இருக்காது.
மாம்பழங்கள் இயற்கையாகப் பழுத்தவையா அல்லது செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்டவையா என்று எப்படிக் கண்டறிவது?
” எந்தப் பழமும் பளபளப்பாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும் பழங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது.

* பழுத்த மாம்பழம் கொஞ்சம் கொழகொழப்பாகத்தான் இருக்கும். ஆனால், செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் அப்படி இருக்காது.
* இயற்கையாகப் பழுத்த பழங்கள் லேசாக அடிபட்டு, கசங்கி முறையான வடிவத்தில் இருக்காது.
* ரசாயனங்கள் மூலமாகப் பழுக்கவைத்தால் பழங்கள் முறையான வடிவத்தில் பழுக்காமல் திட்டு திட்டாக பழுத்திருக்கும்.
* இயற்கையாகப் பழுத்த மாம்பழங்கள் மஞ்சள் நிறத்தில் மட்டுமல்லாமல், சற்று இளஞ் சிவப்பு நிறத்தோடு காணப்படும்.
* மாம்பழத்தில் குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டும் தீப்பட்டதுபோல கறுப்பாக இருந்தால், அது கண்டிப்பாக கார்பைட் கல்லால் பழுக்கவைக்கப்பட்டது.
* இயற்கையில் காம்புப் பகுதிதான் கடைசியாகப் பழுக்கும். பழம் காம்பை நோக்கித்தான் பழுத்துக்கொண்டு செல்லும். செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்டவை அப்படி இருக்காது.

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்.

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்.

ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையாக இருப்பது நீரிழிவிற்கான சிறந்த உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பது தான். இது பற்றி இணையத்தில் சற்றே தேடிப்பார்த்தால் போதும், எண்ணற்ற தீர்வுகள் உங்கள் எதிரில் காண முடியும். எனினும், இவற்றில் எதை கடைபிடிப்பது என்று நீங்கள் குழம்பும் வாய்ப்புகளும் உண்டு.
ஆரோக்கியமான நீரிழிவு உணவு என்பது நார்ச்சத்து, பச்சை காய்கறிகள், பழங்கள், பால் போன்றவற்றை கொண்டிருக்கும் என்று வல்லுநர்கள் சொல்வார்கள். எனினும், இவற்றிற்கு ஈடாக உடலுழைப்பும் அவசியம் என்பதைமறுக்க முடியாது. மேலும், இந்த உணவுகள் அனைத்தும் குறிப்பிட்ட அளவு மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதையும் மறக்க வேண்டாம்.
சாப்பிட வேண்டியவை
  • 'வாழ்க்கையின் அமுதம் - தண்ணீர்'. நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் உங்கள் உடலில் தண்ணீரின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ளும் வகையில், அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீங்கள் எங்கே சென்றாலும், ஒரு பாட்டில் தண்ணீரை உடன் கொண்டு செல்லுங்கள். 30 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீர் குடிக்கவும்.

  • உணவில் காப்ஃபைன் கலந்த பானத்திற்கு பதிலாக மூலிகை தேநீரை சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள. நீங்கள் கிரீன் டீ, இஞ்சி டீ அல்லது ஏதாவது ஒரு வகையான மூலிகை டீயை சேர்க்கலாம். இந்த மூலிகை தேநீர் பானங்களை சர்க்கரை இல்லாமல், குறைந்த கலோரிகளையுடைய இனிப்பான்களை கலந்து குடிக்கவும்.

  • கொழுப்பில்லாத நீரிழிவு உணவை சாப்பிடவும். குறைவான கலோரிகளையுடைய நீரிழிவு உணவுகளையே நீங்கள் எப்பொழுதும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

  • காய்கறிகளுக்கு சல்யூட். நீங்கள் தினமும் சாப்பிடும் உணவில் 3 முறை காய்கறிகளை சேர்த்துக் கொண்டால், அது தான் சிறந்த நீரிழிவு நோயாளிகளுக்கான உணவாகும்.

  • வெங்காயம் ஒரு சிறந்த நீரிழிவு உணவாகும். உணவில் பச்சையான வெங்காயங்களை சேர்த்துக் கொள்ளவும். இது உங்களுடைய செரிமாணத்திற்கும் உதவும்.
  • பழங்களையும் உங்கள் நீரிழிவுக்கான உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சப்போட்டா, மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றை சிறிய அளவில் உணவுடன் சாப்பிடுங்கள்.
  • இந்திய ப்ளாக் பெர்ரி அல்லது ஜாமுன் ஒரு சிறந்த நீரிழிவு உணவாகும். உங்களுடைய இரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்கக் கூடிய இதனை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
  • பாகற்காய் சிறந்த நீரிழிவு உணவுகளில் ஒன்றாகும். இது இரத்தத்தின் சர்க்கரை அளவை குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைத்துவிடும்.
  • ஆளி விதை மற்றும் இலவங்க கரைசலை உணவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை கொழுப்பின் அளவை குறைக்கவும், உடலின் குளுக்கோஸ் அளவை உயர்த்தவும் செய்கின்றன.
  • நீரிழிவு உணவில் ஆக்ஸிஜன் எதிர் பொருட்களை சேர்க்க மறந்து விடாதீர்கள். நீரிழிவின் காரணமாக உருவாகும் கிருமிகளை வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ போன்றவை அழித்து விடுகின்றன.

வயது வந்த பெண்களுக்கு மட்டும் இந்த பதிவு.

வயது வந்த பெண்களுக்கு மட்டும் இந்த பதிவு.

பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுள் மாதவிடாய் சுழற்ச்சி பிரச்சனை முதன்மையானது. பெண்கள் மாதவிடாய் பிரச்சனையில் இருந்து தப்பிக்க, சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதுமானது.

பச்சை காய்கறிகள், கீரைகள் 
கீரைகள், ஊட்டச்சத்து நிறைந்த பச்சை காய்கறிகள் ஆகியவற்றை தினமும் உணவுடன் சேர்த்து கொள்ளவது பெண்களுக்கு மிகவும் நல்லது. இதனால், மாதவிடாய் சுழற்சி சீராக நடைபெறும்.

எள்
சீரான மாதவிடாய் சுழற்சியை பெற எள் சாப்பிடலாம். எள்ளை அளவாக சாப்பிட்டு வந்தால், அவை உடல் வெப்பதை சற்று அதிகரித்து மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.

சோம்பு
சோம்பை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சுழற்சியானது சரியாக நடைபெறுவதோடு, உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு சோம்பை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் அந்த நீரைக் குடித்து வர வேண்டும்.

மீன் அல்லது மீன் எண்ணெய்
மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் மெர்குரி அதிகம் உள்ளது. இதில் உள்ள ஒமேகா-3 இரத்தக் குழாய்களில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் தடுத்து, மாதவிடாய் சுழற்சி தாமதமாவதை தடுக்கும். எனவே மீன் அல்லது மீன் எண்ணெய் மாத்திரையை சாப்பிடுவது நல்லது.

பாதாம் பருப்பு 
பொதுவாக நட்ஸில் உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. அதிலும் பாதாமில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளதால், அவை மாதவிடாய் சுழற்சியை சீராக நடைபெறச் செய்வதோடு, ஹார்மோன்களின் செயல்பாட்டையும் சீராக வைக்கிறது.

மேலும் பல மருத்துவ குறிப்புகள் உங்களுக்கு வேண்டும் என்றால் கீழே உள்ள கமெண்டில் கமெண்ட் பண்ணுங்க. இதேபோல் பல மருத்து குறிப்புகளை தெரிந்து கொள்ள எங்களை Follow பண்ணுங்க.

அழிந்து வரும் ஆலமரங்கள்.ஒரு சிறு தொகுப்பு.எழு தமிழா!.

அழிந்து வரும் ஆலமரங்கள்.ஒரு சிறு தொகுப்பு.எழு தமிழா!.



ஆலமரம் என்பது மிகவும் விசேஷமான மரம். ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி என்று வாழ்த்துவார்கள். தழைத்தோங்கி நிற்பதற்கு ஆலமரத்தைத்தான் குறிப்பிடுவார்கள். அதற்கு நிகராக எதையும் சொல்ல முடியாது. அடுத்து, ஆலமரத்தின் கீழ் எதுவும் முளைக்காது என்று பெரியவர்கள் சொல்வார்கள். அப்படியே முளைத்தாலும் அது பூக்காது, காய்க்காது, கனியாது என்பார்கள். ஏனென்றால், ஆலமரம் இருக்கும் இடத்தில் மற்ற செடிகள் ஓங்கி உயரவோ, வளரவோ முடியாது. அதுபோன்ற சக்தி கொண்டது ஆலமரம். அடுத்ததாக, ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்று சொல்வார்கள். கருவேல மரத்தின் குச்சி, ஆலமரத்தின் குச்சி ஆகிய இரண்டாலும் பல் துலக்கும் போது பல்லினுடைய ஈறுகள் வலுவடைகிறது. குறிப்பாக ஆலங்குச்சியில் ஒருவிதமான துவர்ப்புத் தன்மையைக் கொடுக்கும். மேலும், அதில் கொஞ்சம் பாலும் இருக்கும். இந்தப் பால் தேய்க்கத் தேய்க்க பல்லுக்கு இயற்கையான உரத்தைக் கொடுத்து சக்தியைக் கொடுக்கிறது. அதனால்தான் அதுபோன்ற பழமொழி சொன்னது. 
தவிர, ஆலமரங்கள் சில கோயில்களுக்கு தல விருட்சங்களாகவும் இருக்கிறது. அடுத்து, ஆலமரத்தின் கீழ் உட்கார்ந்து தவம் செய்தால் சிலதெல்லாம் சித்தியாகும். அரச மரத்தை போதி மரம் என்று சொல்கிறோம். ஆனால், இலங்கை அனுராதாபுரத்தில் உள்ள போதி மரம் ஆலமரம்தான். 

மேலும், அதன் இலைகள், பட்டைகள் இதற்கெல்லாம் நிறைய மருத்துவ குணம் உண்டு. இலைக் கசாயம் சளித் தொந்தரவை நீக்கவல்லது. பட்டைகள் உள்ளுக்குள் இருக்கும் இரணத்தை ஆற்றக்கூடியது. வாய்ப்புண் போன்றவற்றை ஆலமரத்தில் இருந்து வடியும் பால் குணமாக்கும். ஆலம் பட்டைகள் ஆணின் உயிரணுக்கள், விந்தணுக்களை வலுப்படுத்தக்கூடிய சக்தி உண்டு. ஆலம் பழத்தை பதப்படுத்தி உண்பவர்களும் உண்டு. 

சில எல்லைத் தெய்வங்களுக்கு ஆலம் பழம் நெய்வேத்தியமாக இருக்கிறது. தவிர, ஆலமரங்கள் இருந்த இடத்தில் முனிவர்கள், சித்தர்கள் அமர்ந்து அந்தக் காலத்தில் தவம் செய்திருக்கிறார்கள். பொதுவாக குளிர்ச்சியான இடத்தைத் தேடி அவர்கள் உட்காருவார்கள். சாதகமான சக்தியையும் தரக்கூடியது ஆலமரம். 

மேலும், ஆலமரத்தின் விழுதுகளுக்கென்று ஒரு தனி சக்தி உண்டு. அந்த விழுதுகள் படர்ந்திருப்பதைப் பார்த்தாலே ஒரு சாத்வீகத் தன்மை உண்டாகும். அதனால், ஆலமரம் என்பது ஒரு சக்தி வாய்ந்த மரம். அதனை வைத்து பராமரித்தால் ஆக்சிஜன், ஓசோன் அனைத்துமே முழுமையாகக் கிடைக்கும்.
இத்தகைய காலை சிறப்புகள் வாய்ந்த ஆலமரங்கள் தற்போது அழிந்து வருகிறது.இத்தகைய மரங்களை காக்க வேண்டும் மழை பெய்யவில்லை என்று புலம்புவதைவிட மழை வருவதற்கு காரணமாக இருக்கும் ஆலமரங்களை நட்டு மழை பெருவோம்
மரம் வளர்ப்போம் மழை பெருவோம். 

இந்த 7 உணவையும் அடிக்கடி சாப்பிட்டீங்கன்னா சீக்கிரமா முடக்குவாதம் வந்துடும்.

இந்த 7 உணவையும் அடிக்கடி சாப்பிட்டீங்கன்னா சீக்கிரமா முடக்குவாதம் வந்துடும்.

யூரிக் அமிலத்தின் அளவை கட்டுப்படுத்த, சிறப்பு உணவு கட்டுபாட்டு முறையை பின்பற்ற வேண்டும். யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உங்கள் உடலின் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்காமல் உடல் நலத்தை நல்ல முறையில் பாதுக்கக்க எந்த உணவை மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும் என்பதை இந்த பதிவில் நாங்கள் உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம். இரத்தத்தில் யூரிக் அமில அளவு அதிகரிப்பதால் முடக்கு வாதம் மற்றும் கீல்வாதம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இந்த அமிலம் உங்கள் மூட்டுப் பகுதியில் உள்ள திரவத்தோடு கலக்கும்போது மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் உண்டாகிறது. இதனால் உங்கள் கால் விரல்கள் மற்றும் முட்டிகள் பாதிக்கின்றன. சில வகை உணவுகளில் ப்யுரின் அதிகமாக உள்ளது. இதனால் இரத்தத்தில் யூரிக் அமில அளவு அதிகரிக்கிறது. இதனை தடுக்க தொடர்ந்து இரத்த பரிசோதனை செய்து கொள்வதும், சீரான உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பது சிறந்த வழிகளாகும். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மட்டி மீன் :
உங்கள் உடலில் யூரிக் அமில அளவு அதிகமாக இருந்தால் மட்டி மீனை மிகக் குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம். மேலும், நண்டு, இறால், சிப்பிகள், சிப்பியினம் போன்றவற்றில் ப்யுரின் அதிகமாக உள்ளது. இந்த வகை உணவுகளை நேரடியாகவும் அல்லது பதப்படுத்தப்பட்டு, கேன் வடிவில் இருந்தாலும் இரத்தத்தில் யூரிக் அளவை அதிகப்படுத்தும் தன்மை இந்த வகை உணவிற்கு உண்டு. ஆகவே இவற்றை மிதமான அளவில் உட்கொள்ளவும்.
சிவப்பு இறைச்சி :
யூரிக் அமில அளவை அதிகரிப்பதில் பெரும் பங்கு இந்த சிவப்பு இறைச்சிக்கு உண்டு. இந்த உணவை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. பன்றி இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி ஆகிய இரண்டிலும் அதிக அளவு ப்யுரின் உள்ளது. கொழுப்பு இறைச்சி, துண்டு துண்டாக வெட்டப்பட்ட இறைச்சி, சிறுநீரகம், மற்றும் தேக உறுப்புகள் இறைச்சி போன்றவற்றிலும் யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் தன்மைகள் உண்டு.
பயறு வகைகள் :
பருப்பு, கொண்டைக்கடலை, பீன்ஸ் போன்றவற்றில் ப்யுரின் அளவு அதிகமாக உள்ளது. வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே இதனை பயன்படுத்துவதால் உங்கள் உடலின் யூரிக் அமில அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
சில வகை காய்கறிகள் :
யூரிக் அமில அளவு அதிகமாக இருப்பவர்கள் அஸ்பரகஸ், காளான், காலிப்ளவர், கீரை, முள்ளங்கி போன்றவற்ற காய்கறி வகைகளை மிதமான அளவில் எடுத்துக் கொள்ளலாம்.
அல்கஹால் :
சிவப்பு இறைச்சி, மட்டி மீன் போன்றவற்றை விட அதிக தீங்கை மக்களுக்கு ஏற்படுத்துவது பீர் . மது , உடலில் யூரிக் அமில உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் உடலை விட்டு இந்த அமிலம் வெளியேற முடியாமல் தடுக்கிறது. கீல்வாதம் போன்ற பாதிப்புகள் இருப்பவர்கள் பீர் அருந்துவதை தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சர்க்கரை சேர்த்த பானங்கள் மற்றும் இனிப்புகள் :
குளிர்பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பழச் சாறுகளில் சேர்க்கப்படும் கார்ன் சிரப் , யூரிக் அமில உற்பத்தியை ஊக்குவிக்கிறது. மேலும் குக்கி, கேக், மாவுப்பன்டங்கள், போன்றவற்றில் அதிக சர்க்கரை சேர்க்கப்படுவதால் இதனை எடுத்துக் கொள்வதால் இன்னும் நிலைமை மோசமாகிறது.
காபி :
யூரிக் அமில அளவு அதிகம் உள்ளவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு முறைக்கும் மேல் காபி குடிக்காமல் இருப்பது நல்லது.
அறிகுறிகள் :
உடலில் யூரிக் அமில அளவு அதிகரிக்கும்போது முடக்குவாதம் மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாகிறது. இதற்கான பொதுவான அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கால் பெருவிரலில் அதிக வலி
மூட்டு பகுதிகளில் அதிக வலி மற்றும் வீக்கம்
சிறுநீர் கழிப்பதில் சிரமம்
அதிகரித்த இதயத்துடிப்பு கால் முட்டியில் வலி
சிறுநீரக கற்கள்
சோர்வு மூட்டு பகுதியை சுற்றி பெரிய கட்டிகள்
பரிசோதனை மூலம் மருத்துவர்கள் சரியான பிரச்னையை கண்டறிந்து உங்களுக்கான சிகிச்சையை மேற்கொள்வார். உணவுக் கட்டுப்பாட்டையும் அவர் தீர்மானிப்பார்.

குழந்தைகளிடம் மதிப்பைக் கூட்ட பெற்றோருக்கு 5 வழிகள்!

குழந்தைகளிடம் மதிப்பைக் கூட்ட பெற்றோருக்கு 5 வழிகள்!

நம் குழந்தைகளுக்கு பெற்றோர்களாகிய நம் மீது மதிப்பு மிகுந்தால்தான் நம்மையும், நாம் சொல்வதையும் அவர்கள் மதிப்பார்கள். இதற்கான எளிதான 5 வழிகள் இதோ... 

எதிர்மறையான பேச்சுகளைத் தவிர்த்தல் 

"இதை செய்யாதே", "இது நடக்காது" என்று எதிர்மறையாக பேசுவதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, குழந்தைகளுக்கு நல்லதையும், நன்மையானதை குறித்தும் அதிகம் பேச வேண்டும். மேலும், எப்படி ஒரு செயலை சரியாய் செய்ய முடியும் என்று அவர்கள் உடன் இருந்து வழிநடத்தலாம் அல்லது உதவலாம். இதனால் நம் குழந்தைகள் செய்யும் எல்லாமே தவறு என்று நாம் கோபப்படாமல், எதுவரை அவர்களுக்கு புரிந்து இருக்கிறது, எதில் தவறுகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். 

உதாரணமாக, நம் குழந்தைக்கு கணக்கு என்றாலே வராது, தப்பாகத் தான் செய்வார்கள் என்று திட்டுவதை தவிர்த்து விட்டு, எந்த இடத்தில் கணக்கு புரியவில்லை; எந்த இடத்தில தவற விடுகிறார்கள் என்பது தெரிந்து, அவர்களுக்கு அதை கற்றுத்தரும்போது நிச்சயம் பலன் கிட்டும்.
பாராட்டுகளும் பரிசுகளும் 

குழந்தைகள் தப்பு செய்யும்போது அவர்களைத் திட்டும் நாம், அவர்கள் செய்யும் சின்னச் சின்ன நல்ல விஷயங்களைப் பாராட்ட தவறி விடுகிறோம். குழந்தைகள் செய்யும் சின்ன நல்ல விஷயங்களை பாராட்டும்போதோ அல்லது ஏதேனும் பரிசு கொடுத்து அங்கீகரிக்கும்போதோ அந்தக் குழந்தை தானாகவே நல்ல விஷயங்களை அதிகம் செய்ய ஆர்வம்கொள்வர். நாளடைவில் அது அவர்களுக்குள் பழக்கமாகவே மாறிவிடும். 

உதாரணமாக, குழந்தைகள் தங்கள் புத்தக அலமாரியை சுத்தமாக வைத்து இருந்தால், "அடடா உன்னோட ஷெல்ப் சூப்பரா இருக்கே!" "இதை நீயே எப்படி இவ்வளவு அழகா சுத்தம் செய்தாய்!" "உன் ஷெல்பை நீ சுத்தம் செய்ததால் உனக்கு பிடித்த உணவை அம்மா இன்று சமைத்து தருகிறேன்" என்று பாராட்டலாம். வீட்டிற்கு வரும் விருந்தினரிடமும் என் பிள்ளை சுத்தப்படுத்தியது என்று கட்டலாம்.
விளைவுகளை உணர்த்துங்கள் 

குழந்தைகள் தாங்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் தவறுகளால் ஏற்படும் பின்விளைவுகளை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அவர்கள் செய்யும் சின்னத் தவறுகளை அவர்களே சரிசெய்ய வைக்க வேண்டும். 

உதாரணமாக, குழந்தைகள் கொட்டும் தண்ணீரை அவர்களையே துடைக்க வைக்க வேண்டும். அவர்கள் தொலைக்கும் பொருள் எங்கு இருக்கும் என்று தெரிந்தால், அதை எடுத்து கொடுக்காமல் அவர்களை அந்த இடத்தில தானாகவே தேடிக் கண்டுபிடிக்க வைக்க வேண்டும்.
விவாதங்களை தவிர்த்திடுங்கள் 

குழந்தைகள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும்போது அவர்கள் தரப்பு வாதங்களை காது கொடுத்து கேளுங்கள். தங்கள் தரப்பு நியாங்களை பிள்ளைகள் முன்வைக்கும்போது அவர்கள் நிச்சயமாக மரியாதையாய் அதை செய்ய அறிவுறுத்துங்கள். பழைய தவறுகளை சுட்டிக் காட்டி மேலும் விவாதத்தை பெரிதாக்குவதை தவிர்த்திடுங்கள். 

உதாரணமாக, பள்ளியில் இருத்து தாமதமாக வீட்டிற்கு வந்தால், "எனக்கு தெரியும், நீ ஒரு நாள் கூட வீட்டிற்கு நேரத்திற்கு வர மாட்டாய். நீ இங்க, அங்க போய் இருப்பாய்" என்று கத்தாமல். ஏன் இன்று தாமதமாய் வந்தார்கள் என்பதற்கு அவர்கள் சொல்லும் காரணத்தை காது கொடுத்து கேளுங்கள்.
நல்ல முன்மாதிரி 

குழந்தைகள் உங்களைப் பார்த்துதான் வளர்க்கின்றனர். பிள்ளைகள் எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பதற்கு நீங்களே சிறந்த எடுத்துக்காட்டாய் அவர்கள் முன் திகழ்ந்திடுங்கள். சொல்வது ஒன்று; செய்வது ஒன்று என்று இருக்கும் பெற்றோரை நிச்சயம் குழந்தைகள் மதிக்க மாட்டார்கள். 

உதாரணமாக, சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்லி கொடுக்கும் நாமே அதை மீறும்போது பிள்ளைகள் எப்படி நாம் சொல்வதை கேட்டு நடப்பார்கள்? 

எல்லாம் நூறு சதவிகிதம் சரியாக நடக்க வேண்டும், மற்ற குழந்தைகள் போல நம் குழந்தைகள் இல்லை. எந்த தவறு செய்தாலும் நிச்சயம் என் பிள்ளை மேல் இருக்கும் அன்பு எனக்கு குறையாது போன்ற தெளிவோடு பெற்றோர்கள் இருந்தால் நிச்சயம் வீட்டில் சத்தத்தை உயர்த்தி குழந்தைகள் சீர்செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. 

கே.ஏ.பத்மஜா , கட்டுரையாளர்