வியாழன், 28 மார்ச், 2019

சுய இன்பத்தால் வரும் பிரச்சினைகள், அதில் இருந்து முழுவதுமாக விடுபட!! ?


சுய இன்பத்தால் வரும் பிரச்சினைகள்,
அதில் இருந்து முழுவதுமாக விடுபட!! ?

தினமும் சுயஇன்பத்தில் ஈடுபட்டால் இவை அனைத்தும் உங்களுக்கு ஏற்படும்.

♦இவை அனைத்து அதிக
♦சுய இன்பத்தால் ஏற்படும் ♦பிரச்சினைகள்.

1) இரவில் அடிக்கடி கனவு வந்து விந்து வெளியாகும்.

2) முதுகு வலி, இடுப்பு வலி மற்றும் கழுத்து வலி ஏற்படும்.

3) ஆண்குறி சுருங்கி சிறுத்து காணப்படும்.

4) ஆண்குறி வலுவிழந்து அதில் நிறைய நரம்புகள் தோன்ற ஆரம்பிக்கும். எவ்வளவு நரம்பு அதிகரிக்குதோ அந்த அளவு உங்கள் ஆண்குறி பாதிக்கப்பட்டுள்ளது என அர்த்தம்.

5) ஆண்குறி முன் போல விறைப்பு இல்லாமல் விறைப்பு குறையத் துவங்கும்.

6) கன்னம் ஒட்டி போகும்.

7) கண் குழி விழுந்து கருவளையம் உண்டாகும்.

8)உடல் எடை குறையும்.

9) உடலில் உள்ள நரம்பு பாதிக்கப்பட்டு கைகளில் நரம்பு புடைத்து வெளியே தெரிய ஆரம்பிக்கும்..

10) எப்போதுமே சோர்வாக இருக்கும்.

11) சுய இன்பம் ஆரம்பித்து 10 அல்லது
20 நொடிகளில் விந்து வெளியேறிவிடும்.

12) உங்களால் ஒரு 15 நிமிடம் கூட வெறுமனே கவர்ச்சிப் படம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. அதற்குள் துடைக்க துணியை தேடுவீர்கள்.

13) ஆண்மைக் குறைவு உண்டாகும்.

14) பயம் நடுக்கம் படப்பிடிப்பு அதிகமாகி ஒரு புதிய மனிதரை சந்திக்க தயங்குவீர்கள்.

15) மலம் கழிக்க முக்கினால் கூட விந்து வெளியாக ஆரம்பிக்கும்.

16) ஸ்டாமினா குறைந்து மாடிப்படி ஏறினால் கூட மூச்சு வாங்கும்.

17) நியாபக மறதி ஏற்படும்.

18) பெண்களை பார்த்தாலே பயம் வரும்.

19) நான் ஆண் தானா? என்னால் ஒரு பெண்ணை திருப்திபடுத்த முடியுமா என் சந்தேகம் தோன்றும்.

20) உங்கள் மீதே உங்களுக்கு வெறுப்பு உண்டாகும்.

21) மன அழுத்தம் அதிகமாகும்.

22) உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து லேசாக குளிர் அடித்தால் கூட உங்களுக்கு அதிகம் குளிரும்.

23) தும்மினால் கூட சிறுநீரும் விந்துவும் வெளியேறும்.

24) எப்போதும் எதற்காகவாது கவலைப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள்.

25) பெண்கள் மீது வெறுப்பு உண்டாகும்.

26) சிறுநீரில் விந்து கலந்து வெளியாக ஆரம்பிக்கும்.

27) கவர்ச்சி படம் பார்த்து ஆண்குறி விரைத்த மறு வினாடியே ஈரம் ஆகிவிடும்.

28) கை கால் மூட்டு இணைப்புகளில் வலி உண்டாகும்.

29) தசைப்பிடிப்பு உண்டாகும்.

30) எந்த காரியத்திலும் கவனம் செலுத்த முடியாது.

31) கவர்ச்சிப் படம் பார்க்கும் போது ஆண்குறி கொஞ்ச நேரம் விறைத்து இருக்கும் போது ஆண்குறிக்கு கீழே உள்ள விதைப்பை வலிக்க ஆரம்பிக்கும்.

32) யாரிடமும் பேச பிடிக்காமல் தனியாகவே இருக்க விரும்புவீர்கள்.

33) சிறுநீர் மண்டலம் பாதிக்கப்பட்டு சரியாக சிறுநீர் கழிக்க முடியாது.

34) காது கேட்கும் திறனும் கண் பார்வை திறனும் மங்க ஆரம்பிக்கும்.

35) உங்கள் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைந்து உங்களால் ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆக முடியாத சூழ்நிலை உண்டாகும்.

36) அதிக சுய இன்பத்தால் முழுமையாக விறைப்பு தன்மை குறைந்து ஒரு பெண்ணை வாழ்நாளில் எப்போதுமே திருப்திபடுத்த முடியாமல் போகும்.
இவை அனைத்து அதிக சுய இன்பத்தால் ஏற்படும் பிரச்சினைகள்.


*முழுவதுமாக* *விடுபட*..!!!! ?????

உலகம் முழுவதும் பருவமடைந்த ஆண்கள், பெண்கள் பலரிடம் சுய இன்பப் பழக்கம் நிலவி வருகிறது. சிலரிடம் பருவமடையும் முன்னரே சிறு பிராயத்திலேயே இப்பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. இவர்கள் பிஞ்சிலே பழுத்தவர்கள்.

சிலரிடம் மணமான பின்னரும் கூட நாற்பது, ஐம்பது வயதுக்கு மேலும் கூட இப்பழக்கம் நீடிக்கிறது.

சாதாரணமாகப் பிறப்புறுப்பை தீண்டும் போது ஏற்படும் வித்தியாசமான புலனுணர்வு, அடிக்கடித் தொட்டு, அசைத்து அதிக இன்பம் அனுபவிக்கும் மனநிலை ஏற்பட்டு பின்னர் அப்பழக்கத்திற்கு பலரும் அடிமையாகி (#Addict) விடுகின்றனர். தற்செயலாகத் துவங்கும் சுய இன்பப் பழக்கத்திலிருந்து அவ்வளவு சீக்கிரம் எவரும் மீள முடிவதில்லை.

துணையின்றி, தன்னந்தனியாக உறுப்புகளை அசைத்து சுயமாக காம இன்பம் காணும் இப்பழக்கத்திற்கு சில முக்கியக் காரணங்கள் உள்ளன.

ஆபாச பத்திரிகைகள் வாசிப்பு,

ஆபாச படங்கள் பார்த்தல்,

நட்பின் மூலமாக ஆபாசங்களைப் பேசிப் பகிர்தல்,

ஆபாசச் சிந்தனைகள்,

கனவுகளில் மூழ்குதல்,

மன எழுச்சி

போன்ற அகபுறக் காரணிகளும், வாழ்நிலைகளும், சூழ்நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சுய இன்பப் பழக்கம் குறித்து நவீன  மருத்துவர்களும், மாற்றுமுறை மருத்துவர்
களுக்குமிடயில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

சுய இன்பப் பழக்கம் இயற்கையானது. இதனால் உடல் நலத்திற்கு எந்தக் கேடுகளும் ஏற்படுவதில்லை. உடலுறவுக்குப் பின்னர் ஏற்படும் சிறு பலவீனத்தைப் போலவே சுய இன்பத்திற்குப் பிறகு சிறிய பலவீனம் ஏற்படும். ஓய்வுக்குப் பின்னர் சரியாகி விடும். சிறுநீர் கழிப்பதிலோ, உமிழ்நீரை துப்புவதிலோ எப்படி எந்தப் பாதிப்பும் இல்லையோ அதேபோல விந்து வெளியேற்றத்திலும் எந்தப் பாதிப்பும் இல்லை.

சுய இன்பப் பழக்கத்தின் விளைவுகள் குறித்து மாற்றுமுறை மருத்துவர்கள் கூறும் கருத்துக்கள் எல்லாம் நூறு சதவீதம் பொய் என்று ஓங்கி உரைக்கும் நவீன மருத்துவ நிபுணர்கள் ‘சுய இன்பப் பழக்கமுள்ள ஆண்கள், பெண்களில் பாதிக்கு மேற்பட்டோர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்’ என்பதை நிரூபிக்க முடியுமா?

பள்ளியிலேயே மாணவியர்களுக்கு சுய இன்பப் பழக்கத்தில் ஆண், பெண் இருவரும் உள்ளத்தாலும்,
உடலாலும் ஒன்றி தான்தோன்றித்தனமான நினைத்த போதெல்லாம் எச்சில் துப்புவது போல் விந்தினை வெளியேற்றுவதும் இயல்பானதுதான். அதனால் எந்த பாதிப்புமில்லை என்று தைரியமூட்டுகின்றனர்.

*பிறந்த* *குழந்தைக்கும்* *எச்சில் சுரக்கும்*. *ஆனால்* *விந்து* *சுரக்க பதினைந்து* *ஆண்டுகள்* *காத்திருக்க* *வேண்டும்*. *விந்து* *இனப்பெருக்க* *ஆற்றலுள்ளது*.

விந்து ஒவ்வொரு முறை வெளியேறும் போதும் தலை முதல் கால் வரை மொத்த உணர்வு மண்டலமும் பரவசக் கிளர்ச்சி ஏற்படுகிறது. சிறுநீர் கழிக்கையிலும், எச்சில் துப்பும் போதும் எவருக்கும் இந்த அனுபவம் ஏற்படாது. நரம்பு மண்டலத்தினூடே ஓடிப் பாய்ந்த உணர்வு எழுச்சி ஏற்படுத்தி அதுவே தொடர்கதையானால், நரம்பு மண்டலத்தையே நாசப்படுத்தி விடும் வீரியமுள்ள விந்தினை சிறுநீருடன், எச்சிலுடன் எப்படி ஒப்பிட முடியும்?

நான்காண்டு பழக்கம் என்றும், எட்டாண்டுப் பழக்கம் என்றும் தினமும் சுய இன்பத்தில் நகர்ப்புறங்களில் திரும்பும் திசையெல்லாம் ஆபாச சுவரொட்டிகள், விரசமான காட்சிகள், ஆபாசமான ஆடல், பாடல்களும் நிறைந்த திரைப்படங்கள், ஆபாசப் படங்களும், கதைகளும் நிறைந்த பத்திரிகைகளின் அதிகரிப்பால் இயற்கைக்கு மாறாக பாலியல் கிளர்ச்சி தூண்டப்பட்டு அடிக்கடி இளம் வயதினர் சுய இன்பத்தில் கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வு வேண்டாமா?

வெளிச்சத்திலேயே விழும் விட்டில் பூச்சிகளாக மாறிவிட்ட இளம் வயதினர் பாதங்களை ஆக்கப்பூர்வமான பாதைகளில் திருப்பி விடுவதில் மருத்துவர்களுக்கு பங்கில்லையா?

சுய இன்பப் பழக்கத்தினால் நன்மைகள் அதிகமா?

தீமைகள் அதிகமா?

என்று சாதக(Positive side) பாதகங்களை (Negative sides) விரிவாக அனைத்து முறை மருத்துவர்களும் விவாதித்து ஒருங்கிணைந்த முடிவுகளுக்கு வர வேண்டியதும் அதனடிப்படையில் இளைய தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டியதும் நிகழ்காலத்தின் அவசியம்.

சுயஇன்பம் என்றசொல்லையும் அது தொடர்பான விசயங்களையும்
மற்றவர்கள்முன் பேசுவதற்கு நாம் தயங்குகிறார்கள். அதேபோல கேட்பவர்களு ம் அருவருப்பு அடைவார்கள்.

அவ்வாறு பேசப்படாததன்
காரணமாக எத்தனை இளம் வயதினர் தங்கள் பிரச்சனைகளை வெளிப்டையாகச் சொல்ல முடியாது தங்களுக்குள் மறுகுவதும் குற்றவுணர்வு டன் சோர்ந்து இருப்பதும் உங்களுக்குத் தெரியுமா?

தங்கள் திருமண வாழ்வு, எவ்வாறு அமையும், மனைவியைத் திருப்திப்படுத்த முடியுமா,
குழந்தைப்பாக்கியம் கிட்டுமா என்றெல்லாம் பயந்து வாழ்கிறார்கள் என்பதை எத்தனை பெற்றோர்கள்
அறிந்திருக்கிறார்கள்.

ஆயினும் இது ஒரு #போதை போலாகி அதை விட முடியாமல் அதிலியே மூழ்கிக் கிடந்தால், வாழ்க்கையானது சேற்றில் சிக்கிய வண்டி போல முன்னேற முடியாது முடங்கிவிடும்.

அத்தகைய நிலையில் ஒருவர் செய்ய வேண்டி யவை எவை?

சுயஇன்பத்தைத் தேடவேண்டிய அவசியம் எத்த கைய நேரங்களில் வருகிறது என்பதை அடையாளங் காணுங்கள்.

ஆபாசப்படங்கள் பார்ப்பதைத் தவிருங்கள்.
தனிமை, பொழுது போக்கின்மை,
போன்றவை அணு காமல் தவிருங்கள்.

சுய இன்பத்தைத் தூண்டுகிற நண்பர் களின் உறவைத் தள்ளி வையுங்கள்.

உற்சாகமும் மகிழ்ச்சியும் தரக் கூடிய வேறு நடவடிக்கைகளால் உங்கள் பொழுதுகளை நிறையுங்கள்.

இசை, எழுத்து, ஓவியம்,
இசைவாத்தியங்கள், போன்ற ஏதாவது ஒரு படைப்பூக்கம் தரும் செயற்பாட்டில் முழுமையாக மனதைச் செலுத்துங்கள்.

கால்பந்தாட்டம், துடுப்பாட்டம் உடற் பயிற்சி, போன்ற
விளையாட்டுகளில் ஈடுபடுங்கள்.

யோகாசனம் போன்றவை உடலுக்கும் உள்ளத் திற்கும்
நலத்தைத் தரும்.

பழவகைகளும், காய்கனிகளும் நிறைந்த ஆரோக்கியமான உணவு முறையைக் கைக்கொள்ளுங்கள்.

ஏதாவது சமூகப்பணிகளில்
ஈடுபடுவது உங்கள் மனதைத் திசை திருப்பும். வறிய மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் கொடுப்பது போன்ற ஏதாவது பணியில் ஈடுபடலாம்.

இளம் வயதில் அடிக்கடி தலைத்தூக்கும் காம உணர்வை கட்டுப்படுத்த தெரிந்து கொள்வது அவசியம். இளம் வயதுகாரர்களுக்கு எச்.ஐ.வி தொற்றி எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய் வருவதை பார்க்கும் போது தான் பாலுணர்வு கட்டுப்பாட்டு யுக்திகளின் முக்கியத்துவத்தை நாம் உணருவது கட்டாயமாகிறது.

★ஒன்று:

எப்போதும் உங்களை பிஸியாகவே உங்களை வைத்திருங்கள். இளம் வயதில் மூளை மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவதால் அதற்கு சதா தீனி தேவைப்படுகிறது. நீங்கள் சரியான தீனி போடாவிட்டால் மனம் தன் விருப்பத்திற்கு ஏதாவது முருங்கை மரத்தில் ஏறி ஆடு ஆரம்பித்து விடும். அதனால் கதை, கவிதை, அறிவியல் ஆராய்ச்சி என்று அறிவுக்கு உணவு போட்டுக் கொண்டே இருந்தால் மனதில் வெறுமை தோன்றாது.

★இரண்டு:

தனிமையை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். செய்வதற்கு எதுவுமே இல்லாத போது, தனியாக இருப்பது கண்டதையும் பரீட்சித்து பார்க்க தூண்டி விடும். எனவே எப்போதும் பலர்சூழ இருக்க முயற்சி செய்யுங்கள்.

★மூன்று;

விளையாட்டில் ஈடுபடுங்கள்-& அது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஹார்மோன்களைச் செலவழிக்க ஒரு நல்ல வடிகாலாகவும் அமைகிறது.

★நான்கு:

ஏதாவது சுவவாரசியமான பொழுதுபோக்கை வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த பொழுது போக்கில் ஈடுபடும் போது பிற தேவையில்லாத எண்ணங்களை மறந்து சுவாரஸ்யத்தில் மனம் லயிக்குமாறு செய்யுங்கள்.

★ஐந்து:

பெற்றோருக்கு உதவி செய்யும் வகையில் வீட்டு வேலைகளில் உடலை வருத்தி உழைத்தால் கூட சில தேவையில்லாத காம எண்ணங்கள் வருவதை அறவே தவிரிக்க இயலும்.

★ஆறு:

காம உணர்வு தலைதூக்கினால் சுய இன்பமா, வெறும் கற்பனையா,
சைட் அடிப்பதா ஏதாவது ஒரு சமாதான நடவடிக்கை தானாக தலைதூக்கும்.

கொஞ்ச நேரத்தில் மனம் இயல்பு நிலைக்கு திரும்பி விடும். உடனே அடுத்தடுத்த வேலையை பாக்க நகருங்கள்.

இன்னும் கொஞ்ச நேரம் என்று இதிலேயே மூழ்கி வேதாளத்தை உயர உயர முருங்கை மரத்தில் ஏற்றி விடாதீர்கள்.


அதிக சுய இன்பத்தால்……

ஆண்மை குறைவு

ஆண்மலட்டுதன்மை நீங்க

உடல் சக்தி பெற

இழந்த ஆண்மையை மீண்டும் பெறவும்.

இழந்த ஆண்மையை மீண்டும் பெறவும்……

தவறானப் பழக்கத்தால் மெலிந்த குறி பருக்கவும்.

மீண்டும் பழைய தன்மையைப் பெறவும்.

இழந்த சக்தியை மீண்டும் பெறவும்.
பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும்.

புதன், 27 மார்ச், 2019

ஆண்களை விட பெண்கள் அதிகம் தூங்க வேண்டும்!


ஆண்களை விட பெண்கள் அதிகம் தூங்க வேண்டும்!

அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது தூக்கம். ஆனால், அதிலும் பெண்களுக்குப் பாரபட்சம்தான். `ஆணைவிடப் பெண் ஒரு மணி நேரம் அதிகமாகத் தூங்க வேண்டும்’ என்று அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். `ஆணைவிட குறைந்தது இருபது நிமிடங்களாவது அதிக நேரம் தூங்க வேண்டும்’ என்று  ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. குறைந்தது ஓர் ஆண் ஆறு மணி நேரமும், பெண் ஏழு மணி நேரமும் தூங்க வேண்டும் என்பது பொதுவாக மருத்துவர்கள் தெரிவிக்கும் கருத்து. ஆண்களைவிடப் பெண்கள் அதிக நேரம் தூங்க வேண்டும்... ஏன்?

அவர்கள் ஒரேயொரு வேலையை மட்டும் பார்ப்பதில்லை. காலையிலிருந்து கொட்டிக்கிடக்கின்றன வீட்டு வேலைகள். வெளியே வேலைக்குச் செல்பவராக இருந்தால் வீடு, பணியிடம் என இரட்டைச் சுமை தலையில் விழுகிறது பெண்ணுக்கு. எல்லா வேலைகளையும் முடித்து உறங்கப் போவதற்கு குறைந்தது இரவு 11 மணியாவது ஆகிவிடுகிறது. மீண்டும் காலையில் ஐந்து மணிக்காவது எழுந்தால்தான் அன்றைய வீட்டுச் சக்கரத்தின் சீரான இயக்கத்தை ஆரம்பிக்க முடியும். குழந்தைகள், கணவர், வீட்டிலுள்ள பெரியவர்கள் அனைவருக்கும் அவரவருக்குத் தேவையானதைச் செய்து கொடுக்கமுடியும். இதில் சில பெண்கள், விதிவிலக்காக இருக்கலாம். பல பெண்கள் இதுபோன்ற வேலைகளோடு அனைவரிடமும் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே கண்டதையும் நினைத்து அதிகமாகச் சிந்திப்பார்கள். மூளைச் செயல்திறனை மீட்டுருவாக்கம் செய்ய அவர்கள் அதிக நேரம் தூங்கவேண்டியது அவசியமாகிறது.

அதிக நேரம் தூங்கலாம்தான். நேரம்? பெரும்பாலான பெண்கள் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் மட்டுமே உறங்குகின்றனர். நேரம் இருந்தும் தூக்கம் வராத, தூங்காத பெண்களும் இருக்கிறார்கள். `இப்படி மிகக் குறைவான நேரம் தூங்குவதால் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன’ என்கிறார்கள் மகளிர் நல மருத்துவர்கள்.

 *மூளைச் செயல்திறன் பாதிக்கும்!*

தேவையான நேரத்தைவிட குறைவாகத் தூங்கும்போது மூளையின் செயல்திறன் வெகுவாகப் பாதிக்கப்படும். மூளைச் செயல்திறனை மீட்டுருவாக்கம் செய்யப் போதுமான கால அவகாசம் வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு நாளும் உற்சாகத்துடனும், உத்வேகத்துடன் செயல்பட முடியும். உறங்கும் நேரம் குறையும்போது, செயல்திறன் மங்கி அன்றாடச் செயல்பாடுகளில் கவனம் செலுத்த முடியாது. இந்த நிலை தொடர்ந்துகொண்டே இருந்தால், பல்வேறு நோய்களுக்கு அதுவே வழிவகுத்துவிடும்.

 *கர்ப்ப காலங்களில் பிரச்னைகளை உண்டாக்கும்!*

கருவில் இருக்கும் குழந்தையின் உடல் மற்றும் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.

 *இரவில் வியர்வை!*

மெனோபாஸ் காலத்தில் இரவு நேரங்களில் அதிகமாக வியர்க்கும்.

 *மாதவிடாய்ச் சுழற்சி பாதிக்கும்!*

தூங்கும்போது அடிக்கடி விழிப்பது போன்ற பழக்கத்தால், 'ப்ரீமென்சுரல் சிண்ட்ரோம்' (Premenstural Syndrome) பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

 *ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம் (Restless Leg Syndrome)*

மாலை மற்றும் இரவு நேரங்களில் கால்கள் குடைய ஆரம்பிக்கும். அதிகமான வலி ஏற்பட்டு, கட்டுப்பாடில்லாமல் கால்கள் அசைய ஆரம்பிக்கும். இதற்கு 'ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்' என்று பெயர். ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இந்த பாதிப்பு ஏற்படும். ஆனால், பெண்களைத்தான் அதிகமாக இது பாதிக்கிறது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். இது, ஹார்மோன் மற்றும் நரம்புக் கோளாறுகளால்தான் ஏற்படுகிறது. அதற்கு அடிப்படைக் காரணமாக 'தூக்கம்' இருக்கிறது.

 *பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.,எஸ்.,):*

நம் நாட்டில் மூன்று பெண்களில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணம் தூக்கமின்மையும், குறைவான நேரத் தூக்கமும்தான். இந்தப் பாதிப்பு ஏற்பட்டால் ஆரம்பத்தில் ஒழுங்கற்ற மாதவிடாய், முடி கொட்டுதல், மனஅழுத்தத்துக்கு ஆளாகுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். கர்ப்ப காலத்தில் அதிகமான உடல்நலப் பிரச்னைகள் உண்டாகும். குழந்தையின்மை ஏற்படுவதற்கு இந்தக் குறைபாடும் ஒரு காரணம்.

 *செகண்டரி இன்சோம்னியா பாதிப்பு உண்டாகும்:*

தூக்கமின்மையை 'இன்சோம்னியா' என்று அழைப்போம். அதில் ஒருவகைதான் `செகண்டரி இன்சோம்னியா.’ இதனால், மனஅழுத்தம், மனப்பதற்றம் போன்றவை ஏற்படும். ஹார்மோன் சமநிலை பாதிக்கப்படும்.

இவை மட்டுமல்லாமல், பல்வேறு வகையான மனநலப் பாதிப்புகளும், டயப்பட்டீஸ், இதய பாதிப்புகளும் பெண்களுக்கு உண்டாகின்றன.

 *நல்ல தூக்கம் பெற என்ன செய்ய வேண்டும் ?

எந்த நேரத்தில் எந்த வேலையைச் செய்து முடிக்க வேண்டும் என்று ஓர் அட்டவணையைத் தயார் செய்துகொள்ள வேண்டும். அதைப் பின்பற்றத் தொடங்கினாலே போதுமான அளவுக்குத் தூக்கத்துக்கான நேரத்தைப் பெற முடியும். விடுமுறை நாள்களில்கூட அந்த அட்டவணையைப் பின்பற்றிச் செயல்படுவது நல்லது.

      தூங்குவதற்கு முன்னர் இளஞ் சூடான நீர்க் குளியல், சூடான பால் அருந்துதல் உதவும்.

     ஒளி குறைவான விளக்குகளையே படுக்கையறையில் பயன்படுத்த வேண்டும்.
         ஏ.சி-யோ, மின்விசிறியோ உங்கள் உடல் வெப்பநிலைக்கு ஏற்ற அளவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

       நல்ல மெத்தை, தலையணை, மெத்தை விரிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

       இரவு நேரத்தில் லேப்டாப், மொபைல்போனைத் தவிர்ப்பது நல்லது.

     தூங்குவதற்கு முன்னர் தொலைக்காட்சிப் பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும்.

      தினமும் காலையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா செய்துவந்தாலும் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.
        வீட்டில் உள்ள மற்றவர்களுடன் வேலைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

‘அந்த’ உணர்வுகளை அடக்கினால் தலைவலி வரும்


‘அந்த’ உணர்வுகளை அடக்கினால் தலைவலி வரும்

செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது. காம உணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை அடக்க முடியாமல் போகும் பட்சத்தில் பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், கொள்ளைகள் போன்றவைகள் நடக்கின்றன.

செக்ஸ் உணர்வுகளை அதிகமாக கட்டுப்படுத்தினால் அது வெடித்து வெளிக்கிளம்புமாம். எனவே செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். மனிதர்கள் உணர்ச்சிக்குவியலால் ஆனவர்கள். கோபம், அழுகை, ஆனந்தம், ஆசை, வெறுப்பு, காமம் என பலவித உணர்வுகளுக்கு ஆட்பட்டவர்கள்.

ஆணும், பெண்ணும் திருமணத்திற்குப் பின்னர் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக இணைந்து காம உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை. அதேசமயம் காம உணர்வுகள் அதிகமாகி அதை அடக்கமுடியாத பட்சத்தில் அதை தவறான முறையில் வெளிப்படுத்துவதன் மூலம்தான் குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன.

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்முறை சம்பவம் தொடங்கி பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவது வரை நடைபெறுவதற்குக் காரணம் காம உணர்வுகளை சரியான முறையில் கையாளத் தெரியாத காரணத்தினால்தான் என்கின்றனர் நிபுணர்கள். காம உணர்வுகளை அடக்கி வைப்பதன் மூலம் மனநோய், தலைவலி போன்றவை வருமாம். திடீர் ஜுரம், மூட்டுக்களில் வீக்கம், இடுப்புவலி, உடல்பலவீனம், நடுக்கம், மார்புவலி, மயக்கம், போன்றவைகளோடு திடீரென இருதய நோய் கூட வரும் என்கின்றனர் நிபுணர்கள்.

முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் காம உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அது எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லையாம். அதேபோல முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா போன்ற உணவுகளுக்கு செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் ஹார்மோன்களை உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்த முடியுமாம்.

ஏனென்றால் உடல் உழைப்பு இன்றி உண்டு கொழுப்பவர்களுக்குத்தான் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கிறதாம். ஆன்மீக நூல்கள் வாசிப்பது, நல்ல இசையை கேட்பது என அனுபவிப்பதன் மூலம் காமத்தை கரைக்கச் செய்யலாமாம். காம உணர்வுகளை குறைக்க மது, போதையில் மூழ்க வேண்டாம். அது காம உணர்வுகளை அதிகரிக்குமாம். அடிக்கடி காம உணர்வுகள் ஏற்பட்டாலோ, அதீத காம வயப்பட்டாலோ மனதிற்கு மிகவும் நெருக்கமான நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். அதற்கு கூச்சப்பட்டால் செக்ஸாலஜிஸ்ட்களை சந்தித்து ஆலோசனை கேட்கலாம்.

வியாழன், 14 மார்ச், 2019

வெயில் தாகத்தை போக்க ஏற்றது மண் பானை குடிநீர்! குறைந்த விலையில் குளிர்ந்த தூய்மையான குடிநீர்.

வெயில் தாகத்தை போக்க ஏற்றது மண் பானை குடிநீர்! குறைந்த விலையில் குளிர்ந்த தூய்மையான குடிநீர்.


கோடை காலத்தில் கொளுத்தும் வெயிலில் பத்தடி சென்றாலே வியர்த்து மூச்சுவாங்குகிறது. வியர்வை அதிகம் வெளியேறும் என்பதால் தாகம் அதிகரிக்கும். தாகத்தை தணிக்க குடிநீர், குளிர்பானம், இளநீர் என பல இருந்தாலும் சுத்தமான குடிநீருக்கு நிகரேதுமில்லை. அதிலும் மண் பானை தண்ணீருக்கு நிகரே கிடையாது.
மண்பானை குடிநீர்
பானையில் சமைக்கும் சோறும் பானையில் ஊற்றி வைக்கும் தண்ணீரும் தனிச் சுவையுடன் இருக்கும். அந்தக் காலத்தில் வழிப்போக்கர்களுக்குக்கூட தண்ணீர்ப் பந்தல்கள் வைத்து மண்பானைகளில் குளிர்ந்த தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டது.
இன்று நகரங்களில் கூட குடிதண்ணீர் மண் பானைகளில் ஊற்றிவைத்துக் குடிப்பது விரும்பப்படுகிறது. சாதாரண தண்ணீரில் இருக்கும் தாது சத்துக்கள் மினரல் வாட்டரில் கிடையாது. மினரல், வெந்நீரில் இவையனைத்தும் இறந்து போகின்றன்
மண்பானை
மண்ணை பிருத்திவி என்று அழைக்கின்றனர். எலும்பு, தோல், நரம்பு, தசை, மயிர் இவை அனைத்தும் மனித உடம்பின் மண் கூறு கொண்டவை. நீரின் தன்மை கொண்டவை இரத்தம், விந்து (வெந்நீர்), சிறுநீர், மூளை, கொழுப்பு. நீரினை புனல் என்று அழைக்கின்றனர்.
மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி. மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த நீர் சுத்திகறிக்கும் கருவி மண் பானை ஆகும்.

வியாழன், 7 மார்ச், 2019

மகளிர் தினம் ஏன் எதற்காக கொண்டாட படுகிறது?


மகளிர் தினம் ஏன் எதற்காக கொண்டாட படுகிறது?

இன்றைய கால கட்டத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக கருத பட்டாலும்..

ஆண்களுக்கு நிகராக பேச பட்டாலும்..

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னால் பெண்கள் அடிமையாகவே இருந்து வந்தன...

பிரான்ஸ் இல் 16 ஆம் லூயி மன்னருக்கு எதிராக பிரான்ஸ் புரட்சி வெடித்த போது...ஆண்களுக்கு நிகராக வாக்குரிமை மற்றும் பிரதி நிதிதுவம் கேட்டு 1789 ஜூன் 14 ஆம் தேதி பெண்கள் வீதியில் இறங்கி போராட தொடங்கினர்..

ஆனால் 16 ஆம் லூயி போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு அடக்குவேன் என்று அறிவித்தார்...

இந்த அறிக்கையில் கோவம் கொண்டு

ஆயிர கணக்கில் பெண்கள் அரண்மனை நோக்கி சென்றன...தடுக்க முயன்ற இரு வாயில் காவலர்கள் கொள்ளபட்டன...

இதை கண்டு அதிந்த 16 ஆம் லூயி அதிர்ந்து...கோரிக்கை பற்றி ஆலோசனை செய்வதாக அறிவித்தார்...

இதனை தொடர்ந்து ஜெர்மனி ,ஆஸ்தரிய, டென்மார்க், இத்தாலி, என ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பெண்களின் போராட்டம் எதிரொலிக்க ஆரம்பித்தது..

இருப்பினும் கோரிக்கைகள் பல காலங்கள் நிறைவேற்ற படாமல் இருந்து வந்தது...

எனினும் பெண்கள் போராட்டம் தொடரவே ..

1848 மார்ச் 8 ஆம் நாள் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டம் நிறைவேற்ற பட்டது.

அந்த நாளை இன்று வரை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாட படுகிறது..


தகவல் பிடித்து இருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்