சனி, 31 மார்ச், 2018

உங்களுக்குத் தெரியுமா குறைந்துபோன ஆண்மையை மீண்டும் அதிகரிக்க இந்த பூ உதவும்...

உங்களுக்குத் தெரியுமா குறைந்துபோன ஆண்மையை மீண்டும் அதிகரிக்க இந்த பூ உதவும்...

மாறிய வாழ்க்கை முறைகளால் பலருக்கு ஆண்மை குறைபாடு ஏற்பட்டுள்ளது. ஆண்மை குறைந்து போனவர்கள் மருந்து, மாத்திரைகளை தேடி அலைகிறார்கள்.
ஆனால், உண்மையில் குறைந்துபோன ஆண்மை சக்தியை மீட்பதற்கு உதவும் அற்புதமான மருந்து ஒன்று இருக்கிறது. அதுதான் "மகிழம்பூ".
மகிழமரம் என்பது தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக காணப்படுகிறது. 20 முதல் 50 அடி உயரம் வரை வளக்கூடியது. இந்த மரத்தின் பூ (மகிழம்பூ) உடல் உஷ்ணத்தை குறைக்கும், காம உணர்வை அதிகரிக்கும்.
டிப்ஸ் 1
நான்கு மகிழம் பூக்களை ஒரு டம்ளர் நீரிட்டு நன்கு கொதிக்க வைத்து வடிக்கட்டவும். பின்னர், இத்தண்ணீருடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து சர்க்கரையை சேர்த்தால் மருந்து ரெடி.
பயன்:
அருந்த நரம்பு மண்டலம் முறுக்கேறி பாலுணர்வு சக்தியை இருபாலருக்கும் மேம்படுத்தும். இதனை 48 நாட்கள் பயன்படுத்தினால் அற்புத பலன்கள் கிடைக்கும். 
டிப்ஸ் 2
மகிழம் விதை, நாயுருவி விதி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்து சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் அரை தேக்கரண்டியளவு காலை மாலை இருவேளையும் சாப்பிட்டு வர உடல் வலுவடையும், ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
டிப்ஸ் 3
மகிழம்பூ, பாதாம் பிசின், மஞ்சள் ஆகியவைற்றை வகைக்கு 100 கிராம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும். இதில் , காலை, மாலை இருவேளையும் அரைத்தேக்கரண்டி அளவு சாப்பிட்டால் 7 நாட்களில் வெள்ளைப்படுதல் குணமாகும். ஆண், பெண் உறுப்புகளில் உண்டாகும் புண் குணமாகும்.
Thanks Newstig

க்ரீன் டீ அருந்துவோரின் கவனதிற்கு...

க்ரீன் டீ அருந்துவோரின் கவனதிற்கு!!!!!!!

எல்லாரும் இப்போ உடம்பு குறைக்க பயன்படுத்தும் ஒரு முறை தான் இந்த க்ரீன் டீ பழக்கம். இப்பெல்லாம் காலையில் எழுந்ததும் க்ரீன் டீ குடிப்பது தான் பேஷனாகவும் மாறி வருகிறது. ஏன் டிவியில் கூட இதப் பத்தின விளம்பரம் தான் எங்கு பார்த்தாலும்.அப்படிப்பட்ட இந்த க்ரீன் டீ பழக்கம் நல்லதா? சிலர் நினைக்கிறார்கள் கிரீன் டீ உடல் எடையைக் குறைக்கும். சர்க்கரையைக் கட்டுப்படுத்தும். இதய நோயைத் தடுக்கும். நமக்கு எந்த வியாதியும் வராது என்று. ஆனால் கிரீன் அதிகம் குடித்தால் கல்லீரல் பாதிக்கும் என்பது எத்தனைபேருக்குத் தெரியும். இதனால் என்ன பயன் என்பதெல்லாம் உங்களுக்கு தெரியுமா. சரி வாங்க அதைப் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.க்ரீன் டீயில் ஆரோக்கியமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் அதிகமாக குடித்தால் அதுவும் நச்சு தான். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறவாதீர்கள். இதுள்ள சில கெமிக்கல் கலவைகள் நம் உடலில் நச்சுக்களை உண்டாக்குகிறது. இந்த க்ரீன் டீயில் உள்ள காஃபைன், ப்ளூரின் மற்றும் ப்ளோனாய்டுகள் நமக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே இதை அதிகமாக குடிக்கும் போது கல்லீரல் பாதிப்பு கூட ஏற்படுகிறது. இதில் உள்ள டானின்கள் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான போலி அமிலம், விட்டமின் பி போன்றவற்றை உடல் உறிஞ்சி கொள்வதை தடுக்கிறது. எனவே இதை சரியான அளவில் பயன்படுத்துவது முக்கியம். எனவே மருத்துவரின் ஆலோசனையை பெற்று செயல்படுவது நமக்கு நல்லது. மேலும் மற்ற பொருட்களுடன் இது வினைபுரிந்து செயல்படவும் வாய்ப்புள்ளது எனவே கவனமாக பயன்படுத்த வேண்டும்.க்ரீன் டீயில் உள்ள காஃபைன் அளவானது பிராண்ட் பெயரை பொருத்து அமைகிறது. தோராயமாக ஒரு கப் க்ரீன் டீ யில் 35 மில்லி கிராம் அளவிற்கு காஃபைன் இருக்கும். அதிகமான காஃபைன் அருந்தும் போது இதயத் துடிப்பு அதிகரித்தல், இரத்த அழுத்த அதிகரிப்பு, இன்ஸோமினியா, நடுக்கம் ஏன் சில சமயம் இறப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது. ஒரு மனிதன் 200-300 கிராம் அளவிற்கு காஃபைன்யை சமாளிக்க இயலும்.இளைய வயதை அடைந்தவர்க்கான காஃபின் அளவு 150 - 200 மில்லி கிராம் அளவு இருந்தால் கூட மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. காபி, காஃபைன் பானங்கள் எல்லாம் உடம்புக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது.தேநீரில் இயற்கையாகவே ப்ளூரின் அதிகமாகவே உள்ளது. எனவே அதிகப்படியான க்ரீன் டீ குடிக்கும் போது அதிகமான ப்ளூரின் நமது உடலுக்குள் சென்று வளர்ச்சி தாமதம், எலும்பு நோய், பல் பிரச்சினைகள் போன்ற எண்ணற்ற பிரச்சினைகளை வழி வகுக்கிறது.
க்ரீன் டீயில் உள்ள ப்ளோனாய்டுகள் ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக இருப்பதால் நமது செல்களை பாதிப்பிலிருந்து காக்கிறது. ஆனால் அதிகப்படியான ப்ளோனாய்டுகள் நமது உடல் இரும்புச் சத்தை உறிஞ்சி கொள்வதை தடுக்கிறது. இதனால் அனிமியா (இரத்த சோகை) போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வழக்கமாக நாம் அருந்தும் க்ரீன் டீயின் அளவு கூட நாம் உண்ணும் உணவிலிருந்து 70% இரும்புச் சத்து உறிஞ்சலை தடுக்கிறது.க்ரீன் டீ குடிக்கும் அளவானது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஆனால் மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் ஒரு நாளைக்கு 5 கப் க்ரீன் டீக்கு மேலாக குடிப்பது தவறு என்கிறார்கள். அதிலும் கருவுற்ற பெண்கள் ஒரு நாளைக்கு 2 கப்புக்கு மேலாக குடிக்காதீர்கள் என்று பரிந்துரைக்கின்றனர்.
கவனம்: நீங்கள் உடம்பை குறைக்க முற்பட்டு அனிமியா போன்ற பிரச்சினைகளில் மாட்டிக் கொள்ளாதீர்கள். அதிகமான தண்ணீரில் கொஞ்சமாக க்ரீன் டீ கலந்து குடியுங்கள். அளவாக குடித்தால் நலமாக வாழலாம். Thanks TIME PASS NEWS 

கோடையில் சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள்- ஒரு பார்வை முதுமலை - அங்கலா - மசினகுடி - ஊட்டி- கோத்தகிரி நான்கு நாள் சுற்றுலா


கோடையில் சுற்றுலா செல்ல சிறந்த இடங்கள்- ஒரு பார்வை முதுமலை - அங்கலா - மசினகுடி - ஊட்டி- கோத்தகிரி நான்கு நாள் சுற்றுலா

விபூதி மலையில் சூரிய உதயம் காணுங்கள்
ஊட்டி குளிரை அங்கலாவில் அனுபவியுங்கள்
பயண அனுபவம்:
காரைக்குடி - மேட்டுப்பாளையம் பயணம்
காரைக்குடியில் இருந்து மாலை 7 மணி அளவில் கிளம்பி திண்டுக்கல்,ஒட்டன்சத்திரம்,தாராபுரம்,பல்லடம்,அன்னுர் வழியாக மேட்டுப்பாளையம் அடைந்தோம்.அங்கு இரவு தங்கி விட்டு காலை அங்கிருந்து கிளம்பி குன்னுர் வரை சென்றோம்.
முதல் நாள் பயணம் :
ரயில் பயணம் - குன்னுர் டூ ஊட்டி
குன்னுரில் காலை 10 மணிக்கு அடைந்தோம்.அங்கு காலை 10.40 மணிக்கு கிளம்பும் ரயில் டிக்கெட் எடுத்து கொண்டு ஊட்டி வரை ட்ரெயினில் சென்றோம்.அருமையான பயணம்.டிக்கெட் வெறும் 10 ரூபாய் மட்டுமே.குன்னுரில் கிளம்பி சரியாக ஒரு மணி நேரம் பயணம்.வழியில் வெலிங்டன்,அரவங்காடு,கேத்தி ,லவ்டேல் வழியாக ஊட்டியை சென்று அடைந்தோம்.அங்கு எங்கள் கார் ரெடியாக இருந்தது.ஊட்டி வரை ரயில் பயணத்தில் சில குகைகளின் வழியாக சென்றோம்.அருமையான பயணம்.
ஊட்டி டூ மசினக்குடி பயணம் ( ஆபத்தான பயணம் )
ஊட்டியில் மதியம் கிளம்பி தலகுந்தா என்கிற இடத்தில் இருந்து 37 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து மசினக்குடி செல்ல வேண்டும்.தலகுந்தாவில் காவலர் ஒருவரிடம் வழி கேட்டபோது ,எங்களிடம் காவலர் வாகனத்தை இரண்டாம் கியரில் மட்டுமே செலுத்துங்கள் என்று அறிவுறுத்தி அனுப்பினார்.சுமார் ஒன்றரை மணி நேரம் பயணத்துக்கு பின்பு மசினக்குடியை அடைந்தோம்.செல்லும் வழியில் சிறிது தூரத்துக்கு இடைவெளியில் வேகத்தடை அமைத்து உள்ளனர்.காரணம் கேட்டபோது வனவிலங்குகள் சாலையை கடக்கும் என்பதால் அவ்வாறு அமைக்கப்பட்டுளதாக தெரிவித்தனர்.வழியில் மான்களை பார்த்தோம்.அடர்ந்த காட்டின் வழியாகத்தான் பயணம்.மசினகுடியில் ட்ரீம் லேண்ட் என்கிற ஹோட்டேலில் சாப்பிட்டு விட்டு அங்கு ஆல்பட் என்கிற தங்கும் விடுதியில் ரூம் போட்டு விட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்தோம்.
கர்நாடகா மாநிலம் அங்கலா கோபாலசாமி கோவிலுக்கு பயணம்
மசினகுடியில் மதியம் சாப்பிட்டு விட்டு எங்கள் ( காரைக்குடி சொக்கலிங்கம் ) பயணத்தை மீண்டும் துவக்கினோம்.முதுமலை சரணாலயம் வழியாக மைசூர் செல்லும் பாதையில் பந்திப்பூர் சரணாலயம் வழியாக கர்நாடகா மாநிலம் அங்கலாவை அடைந்தோம்.மாலை சுமார் 3.20 மணிக்கு சென்று அடைந்தோம்.அங்கலாவில் கோபாலசாமி கோவில் செல்வதற்கு மலை அடிவாரத்தில் தனியாக கர்நாடக அரசு பேருந்து தயராக உள்ளது.மாலை 4 மணிக்கு மலைக்கு செல்வதற்கு கடைசி பேருந்து.அந்த பேருந்தில் ஏறி நாங்கள் மலை உச்சியில் இருக்கும் கோவிலுக்கு சென்றோம்.செல்லும் வழியில் அடர்ந்து உள்ளது காடு.நாம் செல்லும் வாகனத்தை மலை அடிவாரத்தில் நிறுத்தி விடவேண்டும்.
வருடத்தின் அனைத்து நாட்களும் தண்ணீர் சொட்டும் பனிநீர் கோபாலசாமி கோவில் - ஊட்டிக்கு நிகரான குளிர் உள்ள கர்நாடகா மலை கோவில்
அங்கலா அடிவாரத்தில் இருந்து சுமார் 15 நிமிட பேருந்து பயணத்துக்கு பின்பு கோபாலசாமி கோவில் மலைக்கு சென்றோம்.அங்கு கிருஷ்ணர் அழகாக இருந்தார்.அவரது சிலை இருக்கும் இடத்தில் மேலே வருடம் முழுவதும் பனிநீர் சொட்டி கொண்டே இருக்குமாம்.கோபாலசாமி கடவுளை வேண்டி கொண்டால் பல்வேறு நன்மைகள் நடக்கும் என்று சொன்னார்கள்.அங்கு அனைத்து நாட்களும் சக்கரை சாதம் ,புளியோதரை,வெள்ளை சாதம் சாம்பாருடன்,காய் கறிகளுடன் தட்டில் வைத்து வழங்கப்படுகிறது.
அந்த மலை ஊட்டியில் எவ்வாறு குளிர் இருக்குமோ அது போன்று குளிர் இருக்கும் என்று சொன்னார்கள்.நாங்கள் நிற்கும்போதே குளிர் இருந்தது.நம்மை மாலை சுமார் 4.20 மணி போல் கோவிலில் இறக்கி விட்டு மீண்டும் சுமார் 5.20 மணி போல் பேருந்தில் ஏற்றி அடிவாரத்தில் கொண்டு வந்து விடுகின்றனர்.காலை 11 மணிமுதல் மாலை 4 மணி வரை பேருந்து மலைக்கு செல்கிறது.நாம் காலையில் சென்று விட்டு மாலையில் வரலாம்.அல்லது விருப்பட்ட நேரத்தில் வரலாம்.அதுவும் மாலை 5 மணிக்குள் கண்டிப்பாக திரும்பி விட வேண்டும்.நாங்கள் சென்ற பேருந்தில் நாங்கள் மட்டுமே தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கோபாலசாமி கோவிலை பற்றி கன்னடர்கள் அழகாக பாட்டு பாடியபடியே பேருந்தில் வருகின்றனர்.
மைசூர் தர்ப்பூசணி பழங்கள் :
அங்கலாவில் இருந்து மீண்டும் எங்களது வாகனத்தில் மசினக்குடி நோக்கி வரும்போது கர்நாடக மாநிலத்தின் காடுகளின் அழகை ரசித்தபடி வந்தோம்.அந்த வழியிலும் தொடர்ந்து ஆங்காங்கே வேகதடைகள் உள்ளன .காட்டு விலங்குகள் உள்ளதாக சொன்னார்கள்.
வழியில் மைசூர் தர் பூசணிக்காய்களை அதிக அளவில் பார்த்தோம்.நம்மூரில் இளநீர் கடைகளை காண்பது போல் அடுத்து ,அடுத்து தர்ப்பூசணி பழங்கள் கொட்டி கிடக்கின்றன .அவற்றை பெரிய சாக்குகளில் கொட்டி கட்டி வைத்து உள்ளனர்.ஒரு பழமாக வாங்கினால் 10 ரூபாய் என்று சொல்லி விற்றார்கள் .மூட்டையாக வாங்கினால் விலை குறைவு.
அழகான வரவேற்புடன் எங்களை வரவேற்ற பந்திப்பூர் சரணாலயம்:
நாங்கள் தர்ப்பூசணிகளை வாங்கி ருசித்து கொண்டே வரும்போது மாலை 5.45 மணி போல் பந்திப்பூர் சரணாலயம் வந்தோம்.அங்கு வருவற்கு முன்பு எங்களை அழகாக புலி சிலையுடன் கர்நாடக மாநில வனத்துறையின் வளைவு வரவேற்றது.பந்திப்பூர் சரணாலயத்திலும் வனவிலங்குகளை காண சஃபாரி செல்லலாம்.செல்வதற்கான நேரங்கள் மற்றும் கட்டணம் தொடர்பான தகவல்கள் ;
பயணத்திற்கான நேர விவரம் :
காலை : மணி 6.30 முதல் 8.30 மணி வரை
மாலை : 3.30 மணி முதல் 5.30 மணி வரை
டிக்கெட்டுகள் காலை 6 மணி முதலும்.மாலை ட்ரிப்க்கு 3 மணி முதலும் வழங்கப்படும்.
கட்டண விவரம் :
சஃபாரி வேனில் செல்வதற்கு 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சஃபாரி கட்டணம் ரூபாய் 350 ஆகும்.ஆறு வயது முதல் 12 வயது வரை 175 ரூபாய் .பயண நேரம் சுமார் 1 மணி நேரம் .
தனியாக ஜீப் அல்லது ஜிப்ஸி எடுத்து சென்றால் 6 பேர் கொண்ட குழுவுக்கு கட்டணம் ரூபாய் 3000 ஆகும்.பயண நேரம் சுமார் 1.30 மணி நேரம்.
யாரை தொடர்பு கொள்வது ?
நீங்கள் நேரில் சென்றும் பெறலாம்.இணையத்தில் வழியாக புக் செய்யலாம் . முகவரி : www.bandipurtigerreserve.in.தொடர்பு எண் : 08229-236051(வரவேற்பு டெஸ்க் ).இங்கு பேசியும்,இணையத்தில் பதிந்தும் புக் செய்து கொள்ளலாம் .
வனவிலங்குகளை கண்டிப்பாக பார்க்க இயலுமா?
அது மட்டும் உங்களின் அதிர்ஷ்டத்தை பொறுத்தது .
நம்மூரில் ஆடுகள் சுற்றி திரிவது போல் சுற்றி திரியும் மான்கள் கூட்டம் :
முதுமலை நோக்கி பயணம் :பந்திப்பூர் சரணாலயம் பார்த்து விட்டு அங்கிருந்து முதுமலை நோக்கி பயணம் செய்தபோது எங்கெங்கு காணினும் மான்களின் கூட்டம் அருமையாக உள்ளது.நம்மூரில் ஆங்காங்கே ஆடுகள் கூட்டம் உள்ளதுபோல் மான்களின் கூட்டம் அதிகமாக உள்ளது.பார்ப்பதற்கு கண்களுக்கு அழகாக ,அருமையாக உள்ளது.
மந்திகள் கூட்டம் :
மந்தி குரங்குகளும் அதிகமாக உள்ளன.அவற்றை பார்ப்பதற்கே அழகாக உள்ளன.நம்மூர் குரங்குகள் போல் மனிதர்களிடம் உள்ள பொருள்களை வாங்க முயற்சிக்காமல் மந்திகள் அவை ,அவை அவற்றின் வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்தன.நம்மை தொந்தரவு செய்யவில்லை.
முதுமலை சரணாலயம் :
மாலை 6 மணி அளவில் முதுமலை சரணாலயத்தை அடைந்து அடுத்த நாள் எவ்வாறு எங்கள் பயணத்தை திட்டமிடலாம் என்று விசாரித்து கொண்டோம் .காலை 6 மணிக்கு வந்துவிட்டால் முதல் ட்ரிப்பில் வனவிலங்குகளை பார்க்க வாய்ப்பு உள்ளது என்று சொன்னார்கள்.பிறகு அங்கிருந்து பொறுமையாக கிளம்பி மசினகுடி வந்து சேர்ந்தோம்.
இரண்டாம் நாள் பயணம் :
வனவிலங்குகளை காண வேன் டிக்கெட் வாங்குதல் :
இரண்டாம் நாள் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்திருத்து குளித்து ரெடியாகி சரியாக 6 மணிக்கெல்லாம் முதுமலை சென்று அடைந்தோம்.அங்கு 6.30 மணியளவில் தான் டிக்கெட் கொடுக்கும் இடம் திறக்கப்பட்டது.வனத்துறை வேன் மூலம் செல்வதற்கு ஒரு நபருக்கு ரூபாய் 340 டிக்கெட் கொடுக்கப்படுகிறது.முதலில் செல்பவர்களுக்கு சீட் எண் 1,2,3,4 கொடுக்கப்படுகிறது.இந்த எண்களில் சீட் வாங்கினால் மிக அருமையாக வனவிலங்குகளை பார்ப்பதற்கும்,படம் எடுப்பதற்கும் வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பயணத்திற்கான நேர விவரம் :
காலை : மணி 6.00 முதல் 10 மணி வரை
மாலை : 2.00 மணி முதல் 6.00 மணி வரை
டிக்கெட்டுகள் காலை 6 மணி முதலும்.மாலை ட்ரிப்க்கு 2 மணி முதலும் வழங்கப்படும்.
கட்டண விவரம் :
சஃபாரி வேனில் செல்வதற்கு 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சஃபாரி கட்டணம் ரூபாய் 340 ஆகும்.ஆறு வயது முதல் 12 வயது வரை 175 ரூபாய் .பயண நேரம் சுமார் 1 மணி நேரம் .
தனியாக ஜீப் அல்லது ஜிப்ஸி எடுத்து சென்றால் 6 பேர் கொண்ட குழுவுக்கு கட்டணம் ரூபாய் 4200ஆகும்.பயண நேரம் சுமார் 1.30 மணி நேரம்.ஒரு ஜீப் மற்றும் ஜிப்ஸி மட்டுமே உள்ளதால் காலையில் வெல்லனா சென்றால் மட்டுமே முதலில் அவற்றை புக் செய்ய இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
யாரை தொடர்பு கொள்வது ?
நீங்கள் நேரில் சென்றும் பெறலாம்.இணையத்தில் www .mudumalaitigerreserve.com வழியாக புக் செய்யலாம் . முகவரி : தொடர்பு எண் : தெப்பக்காடு : முதுமலை : 0423-2526235 .ஊட்டி : 0423- 2445971 (வரவேற்பு டெஸ்க் ).இங்கு பேசியும்,இணையத்தில் பதிந்தும் புக் செய்து கொள்ளலாம் .
வனவிலங்குகளை கண்டிப்பாக பார்க்க இயலுமா?
அது மட்டும் உங்களின் அதிர்ஷ்டத்தை பொறுத்தது .
யானை சவாரி :
காலை 7 மணி முதல் 8 மணி வரை.
மாலை 4 மணி முதல் 5 மணி வரை.
யானைகளின் புத்துணர்வு முகாம் நடைபெறும் நாள்களில் இந்த யானை சவாரி கிடையாது.
வனவிலங்குகள் பார்ப்பதற்கு சென்ற எங்களின் அனுபவம் :
கரடியையும்,காட்டு யானையும் பார்த்த அனுபவம் :( காரைக்குடி சொக்கலிங்கம் )
முதலில் மான்களின் கூட்டம் அதிகமாக பார்த்தோம்.முதுமலையில் கிளம்பி கூடலூர் செல்லும் மெயின் ரோட்டில் சென்று பிறகு காட்டு பகுதிக்குள் சென்றோம்.காடு என்றால் அடர்த்தியான காடு.பல கிலோமீட்டர் சென்ற பிறகு மான்களையும்,கரடியையும் பார்த்தோம்.மான்களை வெகு அருகில் பார்த்தோம்.அதிகமான கூட்டம் இருந்தது.எங்களை பார்த்து அவை ஓடவில்லை.எங்கள் உடன் வந்த வாகன காப்பாளர்கள் எங்களை கீழே இறங்க விடவில்லை.வண்டியில் இந்தப் வண்ணமே போட்டோ எடுத்தோம்.பிறகு மயில்களையும் அதிக அளவில் பார்த்தோம்.அவையும் நன்றாக அருகில் வந்தன.
காட்டு யானை :
வழியில் காட்டு யானை ஒன்றை மட்டும் பார்த்தோம்.அது ரொம்ப நேரம் அங்கேயே நின்று கொண்டு இருந்தது.அதனை எங்களுக்கு வேண்டிய அளவில் போட்டோ எடுத்து கொண்டோம்.பிறகு அங்கிருந்து எங்கள் வண்டி மெயின் ரோட்டை நோக்கி அதாவது மைசூர் ரோட்டை நோக்கி சென்றது.காலை 6.55 மணி முதல் சுமார் 8.20 மணி வரை காட்டை வண்டியில் சுற்றி பார்த்தோம்.
யானை உணவு உண்ணும் இடம் :
காலை 8.30 மணி முதல் 9.00 மணிக்குள் முதுமலை வரவேற்பு பகுதிக்கு எதிர்த்தார் போல் உள்ள பாலத்தை கடந்து சென்றால் யானைகள் உணவு உண்ணும் இடம் உள்ளது.அங்கு யானைகளுக்கு பல்வேறு வகையில் கொள்ளு உட்பட அனைத்தையும் கலந்து உருண்டையாக உருட்டி கொடுக்கின்றார்கள்.யானைகளுக்கு உணவு கொடுக்கும் அழகே தனிதான்.
யானைகள் உணவு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது ? பொறுப்பாளர் மாறன் கூறுவதை கேளுங்கள் :
மாத்திரையுடன் உணவு : உண்ண மறுக்கும் யானைகள் :
யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடைபெறுவதால் யானை ட்ரிப் இப்போது இல்லை.யானைகளுக்கு சத்து கொடுக்கும் விதத்தில் மாத்திரை சேர்த்து கொடுக்கப்படுகிறது. ஒரு யானைக்கு சுமார் 8 கிலோ உணவு 7 அல்லது 8 உருண்டைகளாக வழங்கப்படுகிறது.
முதல் உருண்டை கொடுக்கும்போது யானைகள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகிறது.பிறகு அடுத்த உருண்டை வாங்க மறுக்கிறது .காரணம் அதனில் மாத்திரை வைத்து கொடுக்கும்போது அந்த ருசியை தெரிந்து கொண்டு அவை சாப்பிட மறுக்கிறது .பிறகு சிறு குழந்தைகளுக்கு ஊட்டுவது போன்று பாகன்கள் யானைகளை மிரட்டி,உருட்டி சாப்பிட வைக்கிறார்கள்.
சுமார் 68 வயது,67 வயது உடைய யானைகளை நாங்கள் பார்த்தோம்.யானைகளுக்கு உணவு கொடுப்பது,பார்ப்பது அனைத்துமே அழகு.அருமை.யானைகள் புத்துணர்வு முகாமில் உள்ளதால் சிறிது தூரம் நடக்க செய்து மீண்டும் அழைத்து வந்தார்கள்.
யானை உணவு வழங்கும் இடத்தில் மந்தி கூட்டம் அதிகம்.அவை பாட்டுக்கும் ஜாலியாக விளையாண்டு கொண்டு நமது அருகில் வந்து செல்கின்றன.
மீண்டும் மசினகுடி செல்லுதல் :
காலை 9.30 மணி அளவில் மீண்டும் முதுமலை டூ மசினகுடி பயணம்.மசினகுடியில் காலை உணவை சாப்பிட்டு விட்டு சிங்காரா மின் உற்பத்தி நிலையம் சென்றோம்.
நடு ரோட்டில் மரம் சாய்ந்து விழுதல் :
மலை வாழ்க்கையை நினைத்தால் பயமாகத்தான் உள்ளது.நாங்கள் மசினகுடியில் கிளம்பி சிங்காரா செல்லும் பாதையில் பயணித்து கொண்டு இருக்கும்போது நடு ரோட்டில் மரம் விழுந்து பாதையை மறைத்து கொண்டது.அந்த பக்கம் இருந்தும்,இந்த பக்கம் இருந்தும் வாகனங்கள் செல்ல இயலவில்லை.சிங்காராவில் இருந்து வந்த மின் உற்பத்தி பிரிவின் அலுவலர் ஒருவர் பெங்களுரு செல்ல வேண்டும் என்று பறந்து கொண்டு,தவித்து கொண்டு இருந்தார்.ஆனால் மரமோ உடனடியாக எடுக்கும் நிலையில் இல்லை.
 மோயார் பயணம் :
நடு ரோட்டில் மரம் விழுந்ததால் மீண்டும் மசினகுடி வந்து அங்கிருந்து மோயார் மின் உற்பத்தி நிலையம் நோக்கி சென்றோம்.மோயர் மின் உற்பத்தி நிலையம் செல்லும் வழியில் எண்ணிலடங்கா மான்களின் கூட்டம் கண்டோம்.அங்கு உள்ள நீர்ப் பிடிப்பு அணையை பார்த்தோம்.தண்ணீரை பார்த்து எங்களுக்கு அந்த அளவுக்கு மகிழ்ச்சி.பிறகு அங்கிருந்து சிறப்பு அனுமதி பெற்று வின்ச் வழியாக கீழ் பகுதியில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தை சென்று பார்த்தோம்.மிக அருமையான ,வாழ்க்கையில் மறக்க முடியாத பயணம்.வின்ச் முழுவதும் செங்குத்தாக செல்லும்.அங்கு தண்ணீர் உற்பத்தி ஆகி பைப் வழியாக மிக வேகமாக வந்து விழும் வேகத்தில் அங்கு உள்ள மெஷின் சுற்றி அதன் வழியாக மின் உற்பத்தி செய்யப்படுகிறது.இங்கு தமிழ்நாடு மின்துறையின் அனுமதி பெற்றால் மட்டுமே செல்ல இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதியில் விட்ட சிங்காரா மின் உற்பத்தி நிலையம் பயணம் :
மோயார் பகுதியில் இருந்து மீண்டும் மசினகுடி வந்து அங்கிருந்து சிங்காரா நோக்கி பயணித்தோம்.நாங்கள் காலையில் பார்த்த மரம் சுமார் மதியம் 2.15 மணியளவில் பாதி வெட்டி எடுக்கப்பட்டது.அதன் பிறகு நாங்கள் சிங்காரா நோக்கி சென்றோம்.காலையில் அவசரமாக பெங்களூரு செல்ல வேண்டும் என்ற இ .பி.அலுவலரும் மதியம் 2.15 மணிக்குத்தான் வழி கிடைத்து சென்று கொண்டு இருந்தார்.இதுதான் மலைப்பகுதி வாழ்க்கை.
குகைக்குள் பயணம் :
சிங்காராவில் புஷப் எனப்படும் மின்சாரம் தயாரிக்கும் இடத்திற்கு ( காரைக்குடி சொக்கலிங்கம் )முன் அனுமதி பெற்று சென்றோம்.சுமார் ஒன்றரை கிலோமீட்டர் மலையை குடைந்து அங்கு மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.ஊட்டியில் உள்ள கிளன்மார்கன் எனும் இடத்தில் இருந்து நேரடியாக தண்ணீர் ட்டனால் வழியாக சிங்காரா வருகிறது.அங்கு மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
சிங்காராவில் உள்ள பைக்காரா மின் உற்பத்தி நிலையம் :
புஸப் பகுதியில் இருந்து மீண்டும் நாங்கள் 1932ம் ஆண்டு கட்டப்பட்ட பைக்காரா நீர் மின் உற்பத்தி நிலையம் சென்றோம்.இங்குஇருந்து முதன் முதலாக மின் உற்பத்தி செய்யப்பட்ட மதுரைக்கு அனுப்பப்பட்ட நினைவாகத்தான் மதுரையில் பைக்காரா என்ற இடம் உள்ளதாக சொன்னார்கள்.நாங்கள் அங்கு உள்ள இடங்களை அனைத்தும் பார்த்தோம்.புதியதாக அமைக்கப்பட்ட மின் உற்பத்திக்கு தேவையான மெஷின்களின் பாகங்களை உற்பத்தி செய்யும் ஒர்க்ஷாப்பை பார்த்தோம்.இந்த பட்டறை கடந்த 1917ம் ஆண்டு முதல் செயல் பட்டதாக அங்கு இருந்த அலுவலர் எங்களிடம் தெரிவித்தார்.பைக்காரா மின் உற்பத்தி நிலையம் செல்லும் வழியில் அழகான காபி தோட்டம் உள்ளது.அதனை பார்த்து ரசித்து விட்டு அங்கு இருந்து நாங்கள் மீண்டும் மசினகுடிக்கு மாலை வந்து சேர்ந்தோம்.
பொக்காபுரம் அம்மன் கோவில் :
மசினகுடியில் இருந்து மாலை 4.30 மணி அளவில் கிளம்பி நாங்கள் ஊட்டி செல்லும் வழியில் உள்ள பொக்காபுரம் என்னும் இடத்தில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்றோம்.இந்த பகுதியில் மிகவும் பிரசித்த பெற்ற அம்மன் என்று சொன்னார்கள்.அங்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் அங்கு அருகில் உள்ள விபூதி மலைக்கு செல்ல தயரானோம்.
விபூதி மலை : சூரியன் உதயம்,அஸ்தமனம் காணலாம் :
பொக்காபுரத்தில் ஊருக்குள் சின்ன வழியாக செல்கிறது.ட்ரெக்கிங் செல்வது போல் செல்ல வேண்டும்.சுமார் 40 நிமிடங்கள் பொறுமையாக மலை ஏறி காடு ,மலைகளை கடந்து விபூதி மலைக்கு செல்ல வேண்டும்.நல்ல உடற்பயிற்சி.ஏறிய உடன் முருகன் கோவில் உள்ளது.முருகன் சின்ன உருவத்தில் அழகாக உள்ளார்.அங்கு இருந்து மாலை சூரியன் கொஞ்சம்,கொஞ்சமாக அஸ்தமனம் ஆவதை காண இயலுகிறது .மீண்டும் அங்குறிந்து சுமார் 20 நிமிடங்கள் கீழே இறங்கி மீண்டும் மசினகுடி அடைந்தோம்.
நீங்கள் மலை ஏறுவதற்கு சிரமப்பட்டால் மசினகுடியில் இருந்து ஜீப் வழியாக விபூதி மலையை அடையலாம் .சுமார் 8 பேருக்கு மொத்தமே 500 ரூபாய் பெற்று கொண்டு நம்மை அழைத்து சென்று மீண்டும் அழைத்து வந்து விடுகின்றனர்.அப்படியும் செல்லலாம்.15 நிமிடங்களில் சென்று விடலாம்.அதி காலையில் சூரியன் உதயத்தை நாம் காண மசினகுடியில் சொல்லி விட்டால் நம்மை அழைத்து செல்ல ஜீப் ஓட்டுனர்கள் நாம் இருக்கும் இடத்திற்கே வந்து அழைத்து செல்கின்றனர்.அருமையான மலை பகுதி.மாலையில் 5.30 மணிக்கு மேல் மிஸ்ட் உருவாகி விடுகிறது.நல்ல குளிர் நிலை.அனுபவிக்க ஏற்ற இடம் .
மூன்றாம் நாள் பயணம் :
கிளன்மார்கன் அணைக்கு பயணம் :
மசினகுடியில் இருந்து கிளம்பி ஊட்டி நோக்கி ( காரைக்குடி சொக்கலிங்கம் )சென்றோம்.ஊட்டியில் மசினகுடியில் இருந்து செல்லும்போது தலகுந்தா என்கிற இடத்தில் பிரிந்து சில கிலோமீட்டர் பயணம் செய்து கிளன்மார்கன் டீ எஸ்டேட் தாண்டி சென்றோம்.நல்ல அடர்த்தியான காடு.அங்கு சில மையில் தூரத்தில் நம்மை பைக்காரா அணை வரவேற்கிறது.அங்கு இருந்து அந்த அணையை ஒட்டியே சென்றோம் என்றால் கிளன்மார்கன் அணை பகுதி வருகிறது.முக்குருத்தி என்கிற இடத்தில் இருந்து பைக்காரா வரும் தண்ணீர் அடுத்து கிளன்மார்கன் அணைக்கு வருகிறது.இங்கு இருந்துதான் தணல் வழியாக தண்ணீர் சிங்காரா செல்கிறது.பார்க்க வேண்டிய இடம்.தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின்பே இங்கு செல்ல இயலும் .
வின்ச் பயணம் :
கிளன்மார்கன் அணையில் எங்களை அங்கு உள்ள அலுவலர் வரவேற்று நல்ல முறையில் வின்ச் பகுதிக்கு அழைத்து சென்றார்.வின்ச்சில் நான்காவது வின்ச் பகுதியில் இருந்து மூன்றாவது வின்ச் பகுதிக்கு அழைத்து சென்றார்.அருமையான பயணம்.தணல் வழியாக ஏற்படும் ரிப்பேர்களை சரி செய்ய வின்ச் அமைக்கப்பட்டுள்ளது.விஞ்சில் கிளம்பிய சிறிது நேரத்தில் மிக அழுத்தமான ஒரு உடல் அமைப்பு இருந்தது.சிறிது நேரத்தில் சரியாகிவிட்டது.சுமார் 800 மீட்டர் பயணம் செய்தோம்.15 நிமிடங்கள் இருக்கும்.மூன்றாவது வின்ச் பகுதிக்கு வந்துவிட்டோம்.அங்கு இருந்து அடுத்த 1600 மீட்டர் பயணம் செய்தால் சிங்காரா அடைந்து விடலாம்.சுமார் 40 நிமிட மலை வழி வின்ச் பயணத்தில் நேராக சிங்காரா செல்லலாம் .வின்ச் இயக்குபவர் அடிக்கடி ஓடும் விஞ்சில் இருந்து சர்வ சாதாரணமாக இறங்கி (அருகில் உள்ள படிக்கட்டுகளில் இறங்கி ஏறி ) அதனை சரி செய்து கொண்டே எங்களுடன் வந்தார்கள்.மீண்டும் அங்கு சிறிது நேரம் இளைப்பாறி விட்டு அங்கு இருந்து வின்ச் வழியாக கிளன்மார்கன் அணைக்கட்டுக்கு மலை ஏறினோம்.இப்போது அலுவலர் கொடுத்த தைரியத்தில் நாங்கள் மீண்டும் வின்ச் முன் பகுதியில் வந்து நின்று கொண்டு வந்தோம்.அருமையான பயணம்.நம்மை சுற்றிலும் பச்சை பசேல் என்று வனப்பகுதி.வின்சோ செங்குத்தாக ஏறுகிறது.இயற்கையை ரசித்து கொண்டே நாம் பயணம் செய்யலாம்.மீண்டும் நாங்கள் மலை பகுதிக்கு வந்து சேர்ந்தோம்.
கிளன்மார்கன் டேம் செல்லுதல் :
அணைக்கட்டு பகுதி அருமையான இடம்.மிக பெரிய அளவில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.பார்க்க வேண்டிய இடம்.இங்கு செல்லும்போதும் நம்மை பைக்காரா நதி வழி நடத்தி செல்லுகிறது.ஒரு பக்கம் முழுவதும் காடுகள் அடங்கிய மலைப்பகுதி,இன்னொரு பக்கம் அடியில் தண்ணீர் உள்ள பகுதி.அழகாக இருந்தாலும் கவனமுடன் நாம் செல்ல வேண்டும்.
ஆங்கிலேயர் காலத்தில் அருமையாக யோசனை செய்து இந்த இடத்தை வடிவமைத்து உள்ளார்கள்.இன்று அளவும் அவை நமக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக உள்ளது.( காரைக்குடி சொக்கலிங்கம் )
ஊட்டியில் உள்ள பைக்காரா டேம் நோக்கி பயணம் :
ஊட்டியில் உள்ள பைக்காரா நீர் மின் நிலையம் உற்பத்திக்கு தேவையான தண்ணீர் வரும் பைக்காரா டேமை சென்று பார்த்தோம்.இதற்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முன் அனுமதி பெற வேண்டும்.பொன் விழா கண்ட இந்த அணைக்கட்டுக்கு அவசியம் சென்று பார்க்க வேண்டும்.அருமையான இடம்.தண்ணீர் அதிகம் உள்ள இடம்.இங்கு இருந்துதான் பைக்காரா மின் உற்பத்தி நிலையத்துக்கும்,சிங்காராவுக்கும் தண்ணீர் செல்கிறது.இதன் மேலே ஆய்வு மாளிகை உள்ளது.அதன் அருகில் வெலிங்டன் நீர் பயிற்சி கல்லூரி உள்ளது.அருமையான இடம்.மத்திய படையினர்க்கு இங்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
பார்க்க மட்டுமே அனுமதிக்கப்படும் பைக்காரா அருவி :
பைக்காரா அருவி செல்ல நீங்கள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டும்.அருவியில் குளிக்க முடியாது.இது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.அருவிக்கு மிக நீண்ட தூரம் முன்பாகவே நமது காரை நிறுத்தி விடுகின்றனர்.அங்கு இருந்து சுமார் 10 நிமிடங்கள் நடந்து சென்றால் வனத்துறையினர் நம்மிடம் தலைக்கு ரூபாய் 10 வாங்கி கொண்டு உள்ளே விடுகின்றனர்.நாம் அருவி மட்டுமே பார்க்க இயலும்.அந்த இடத்தில் அமர்ந்து கொஞ்ச நேரம் ரசிக்கலாம்.மீண்டும் நாம் வண்டி இருக்கும் இடத்திற்கு நடந்து தான் வரவேண்டும்.
ஒரே ஒரு வசதி இங்கு பேட்டரி கார் உள்ளது .அந்த காரின் மூலம் நடக்க இயலாதவர்கள்,குழந்தைகள்,பெரியவர்கள் செல்லலாம் .ஒரு வண்டிக்கு 60 ரூபாய்.ஆள் ஒன்றுக்கு ரூபாய் 10.அப்படியும் செல்லலாம் .
பைக்காரா படகு சவாரி :
அருவியில் இருந்து பைக்காரா படகு சவாரி செல்லலாம்.அங்கு ஒரு அரை மணி நேரம் அருமையான படகு சவாரி செய்யலாம்.ஊட்டியில் படகு சவாரி செய்வதை விட இங்கு படகு சவாரி செய்வதன் நன்மை என்னவெனில் ,இங்கு தண்ணீர் நன்றாக சுத்தமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.ஸ்பீட் போட்,குழுவாக செல்லும் போட் என அனைத்து வகையான போட்களும் உண்டு.
பைக்காரா நீர் மின் உற்பத்தி நிலையம் :
பைக்காரா அருவியில் இருந்து வெளியில் வந்து சிறிது தூரத்தில் கீழே இறங்கினால் பைக்காரா நீர் மின் உற்பத்தி நிலையம் வருகிறது.அங்கு பைக்காரா அணையில் இருந்து வெளிவரும் தண்ணீர் நீர் மின் உற்பத்தி நிலையத்துக்குள் வந்து எவ்வாறு மின்சாரம் தயாரிக்கப்டுகிறது என்பதை தெளிவாக காண இயலும்.இதற்கு நாம் மின் துறையில் முன் அனுமதி பெற வேண்டும்.
பைக்காரா ஷுட்டிங் ஸ்பாட் :"
பைக்காரா நீர் மின் நிலையத்தில் இருந்து வெளி வந்து நாம் சில கிலோமீட்டர் தூரம் சென்றால் ஷுட்டிங் ஸ்பாட் என்கிற அருமையான புல் வெளி பகுதி வருகிறது.அங்கு வனத்துறையின் டிக்கெட் வாங்கி கொண்டு நாம் உள்ளே செல்லலாம் .உள்ளே செல்லும்போது நாம் எந்த பேப்பரும் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.மலையேறும் வழி அழகாக உள்ளது.அதன் இடது புறத்தில் குதிரை சவாரி உள்ளது.வனத்துறை மற்றும் உள்ளூர் சுற்று சூழல் குழுமம் இணைந்து இதனை நடத்துகின்றனர்.கொஞ்சம் கட்டணம் அதிகமாக உள்ளது.ஒரு ரவுண்டு ,அரை ரவுண்ட்,பழங்குடியினர் வசிக்கும் இடம் வரை சென்று வரக்கூடிய சுற்று என அனைத்துமே கட்டணத்துடன் உள்ளது.சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த இடம் மற்றும் சவாரி.
குதிரை சவாரியை முடித்து கொண்டு மேலே ஏறினால் நமக்கு புல் வெளிகளாலான மலை முட்டுக்கள் வருகின்றன.பார்க்கவே சூப்பராக உள்ளது.ஏறிய களைப்பில் அப்பாடா என அமர்ந்தால் நமக்கு நல்ல வசதியாக இடம் உள்ளது.மலையின் ஒரு பகுதியில் மிஸ்ட் உருவாகி வருவது அருமையான அழகு.
இங்கு காலை முதல் மாலை 6.30 மணி வரை அனுமதி உண்டு.நாங்கள் மாலை சுமார் 6.30 மணிக்கு கிளம்பி அங்கிருந்து நேராக பைக்காரா அருவி அருகே அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் குடியிருப்பில் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கினோம்.
ஊட்டியில் மட்டுமே குளிரை அனுபவிக்க முடிகிறது.மசினகுடியில் கிடையாது.ஊட்டியில் நாங்கள் தங்கிய இடத்தில் இரவு நேரத்தில் மான்கள் கூட்டம் மிக எளிதாக வந்து செல்கிறது.குளிரும் நல்ல குளிர்.
நான்காம் நாள் பயணம் :
முக்குருத்தி அணைக்கட்டுக்கு பயணம் :
பைக்காராவில் கிளம்பி மின்சார வாரியத்தின் நண்பர் ஒருவரின் உதவியுடன் முக்குருத்தி அணைக்கட்டுக்கு பயணம் ஆரம்பித்தோம்.இங்கு மின் வாரியத்தின் முன் அனுமதி பெற்று செல்ல வேண்டும்.பைக்காராவில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் நாம் செல்லும்போதே இடது பக்கத்தில் ஒரு பிரிவு செல்கிறது.காட்டுக்குள் செல்வதற்கு முன்பு சோதனை சாவடி ஒன்று பூட்டு போட்டு பூட்டப்பட்டுள்ளது.அதனை திறந்து கொண்டு நாம் உள்ளே செல்ல வேண்டும்.அதற்கான சாவி மின்சார வாரியத்தில் உள்ளது.மிக அடர்த்தியான காட்டின் வழி பயணம்.சாலையோ மிக,மிக சுமார்.(சுத்தமாக ஒன்றுமே இல்லை ) ஆபத்தான பயணம்.ஏனெனில் வாகனம் வழியில் எங்கு நின்றாலும் நாம் யாரிடமும் போன் செய்து கூட பேச இயலாது.சுத்தமாக எந்த மொபைல் போன் டவர் கிடையாது.அடர்த்தியான காட்டு பகுதியாக இருப்பதால் சிறுத்தை,கரடி அதிகமாக உள்ளதாக சொன்னார்கள்.அவை வழியில் வந்தால் மிக சிரமம்.
சாலையின் ஒரு பக்கம் அடர்த்தியான காடு.மறுபக்கம் பைக்காரா அணையின் தண்ணீர் பகுதி தொடர்ந்து நம்முடன் பயணித்து வருகிறது.சுமார் ஒன்றரை மணி நேர மிக மெதுவான பயணத்திற்கு பிறகு முக்குருத்தி அணையை அடைந்தோம்.நிற்க .
மிக அருமையான அணை கட்டு.அந்த காலத்தில் ஆங்கிலேயர் இந்த இடத்தை கண்டு பிடித்து அடர்த்தியான காட்டுக்குள் மிக பெரிய கற்களை கொண்டு கட்டுமானம் செய்து உள்ளனர்.அப்போதே அவர்கள் கையால் இயக்கக்கூடிய ஷட்டர்,தண்ணீர் அதிகமானால் தானாகவே திறந்து கொள்ள கூடிய ஒரு இயந்திர அமைப்பு என அசத்தி உள்ளனர்.இந்த அணையை வடிவமைத்த பொறியாளர் ,மற்ற அணைக்கட்டுகளில் இருந்து இதனை வேறுபடுத்தி காட்டும் வண்ணம் உள் பகுதியில் அணை கட்டு வருமாறு கட்டி உள்ளார்.
இங்கு உள்ள தண்ணீர் மிக அருமை.நல்ல சுத்தமான தண்ணீர்.மிக தூய்மையான தண்ணீரில் வசிக்கும் ஸ்காட் மீன்கள் இங்கு வாழ்ந்து வருவதாக சொன்னர்கள்.அந்த காலத்தில் இந்த அணையை கட்டும்போது தண்ணீரை மடை மாற்றி விடும் வண்ணம் வேறு வழி ஏற்படுத்தி உள்ளனர்.மிக பெரிய அதிசியம் இது.
இங்கு உருவாகும் தண்ணீர் முழுவதுமே ஊற்றுக்குள் இருந்தும்,மலைகளில் இருந்தும் பெருகும் தண்ணீர் தான்.இந்த அணைக்கட்டில் இருந்து அருகில் இருக்கும் மலை பகுதியை பார்த்தால் ஒரு தேவதை படுத்து இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.மிக அருமையான அணைக்கட்டு.
இது தான் நமக்கு நீர் வழி மின்சாரம் தயாரிக்க உதவும் மிக பெரிய அணைக்கட்டு.இங்கு இருந்துதான் தண்ணீர் உற்பத்தி ஆகி பைக்காரா சென்று அங்கு இருந்து கிளன்மார்கன் சென்று அங்கு இருந்து சிங்காரா சென்று மோயாரை அடைந்து பவானி சாகர் ஆற்றுக்கு செல்கிறது.முக்குருத்தி அணைக்கட்டில் நின்று கொண்டு இருக்கும்போது நமக்கு இயற்கையான காற்று ,தண்ணீர் ,நல்ல சீதோஷண நிலை என அனைத்துமே அருமையான அனுபவம்.நாம் நிற்கும் இடத்தில் நம்மை சுற்றி பச்சை பசேல் என்று அருமையான இயற்கை வளம்.மரங்கள்.அடர்த்தியான காடுகள்.
ஆங்கிலேயர் காலத்து ஆய்வு மாளிகை :
அணைக்கட்டில் இருந்து இறங்கி வரும்போது அந்த காலத்து ஆய்வு மாளிகை மிக சுமாரான நிலையில் உள்ளது.அதனில் இருந்துதான் அதிகாரிகள் இந்த அணையை வடிவமைத்து உள்ளனர்.இப்போதும் அங்கு ஒரு பூ செடி மிக அருமையாக பூத்து குலுங்கி கொண்டு உள்ளது.
முக்குருத்தி நீர் மின் நிலையம் :
அணைக்கட்டில் இருந்து கீழே வந்தால் புதியதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நீர் மின் நிலையம் உள்ளது.அங்கு இருந்து அணைக்கட்டின் அழகை நாம் ரசிக்கலாம்.இங்கு அதிகமான அளவில் மந்தி கூட்டம் உள்ளது.
மீண்டும் பைக்காரா நோக்கி பயணம் :
முக்குருத்தி பயணம் முடித்து மிக கவனமாக எங்கள் வாகனத்தை இயக்கி கொண்டு சுமார் ஒரு மணி நேர பயணத்தில் பைக்காராவை அடைந்தோம்.அருமையான வாழ்க்கையில் மறக்க முடியாத பயணம்.எங்களை அழைத்து சென்றவர் சொன்னார் : இந்த வழியில் எப்போதுமே ஒரு மரம் விழுந்து போக்குவரத்தை பாதிக்கும்.ஆனால் உங்கள் அதிர்ஷ்டம் மரம் எதுவும் விழவில்லை.பொதுவாக இது மிக அடர்ந்த கட்டு பகுதியாக இருப்பதால் யாரும் இந்த வழியாக செல்வது இல்லை.மதியம் இரண்டு மணி போல் நாங்கள் பைக்காரா வந்து அங்கு மதிய உணவு சாப்பிட்டு விட்டு கோத்தகிரி அருகே உள்ள தொட்டபெட்டா நோக்கி வண்டியை செலுத்தினோம்.
தொட்டபெட்டாவின் அழகு :
பைக்காராவில் மதியம் 3 மணி அளவில் கிளம்பி ஊட்டி வழியாக தொட்டபெட்டா மாலை 4.10 மணி அளவில் அடைந்தோம்.தொட்டபெட்டா செல்லும் வழி முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.ஒரு வாகனத்துக்கு 40 ரூபாய் முதல் 75 வரை வசூல் செய்கின்றனர்.ஆனால் சாலையோ மிக ,மிக சுமாராக உள்ளது.நிமிடத்திற்கு பல வண்டிகள் சென்று கொண்டும் ,வந்து கொண்டும் உள்ள சாலையை செப்பனிட்டால் நல்லது.
தொட்டபெட்டாவில் இயற்கை அழகை ரசித்தோம்.நாங்கள் செல்லும்போது வான்வெளி வழியாக மிஸ்ட் உருவாகி இருந்ததால் எங்களால் ஊட்டியின் அழகை ரசிக்க இயலவில்லை.ஆனால் நேரடியாக பார்க்கும்போது மிக நன்றாக இருந்தது.
பசுமை பள்ளத்தாக்கு அருமையானதாக இருந்தது.அங்கு செல்ல ,செல்ல பயம் தான் அதிகம் வருகிறது.சிறிது நேரம் அங்கு அமர்ந்து இருந்து விட்டு அங்கிருந்து நாங்கள் மீண்டும் வாகனம் வழியாக கோத்தகிரி செல்லும் பாதைக்கு வந்தோம்.
அரசு தேயிலை தோட்டம் :
தொட்டபெட்டாவில் இருந்து வெளியில் வந்து கோத்தகிரி செல்லும் வழியில் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அரசு தேயிலை உற்பத்தி செய்யும் இடம் உள்ளது.மிக பெரிய தோட்டம்.சுமார் 45 நிமிடங்கள் 800 மீட்டர் தூரத்தை தேயிலை தோட்டத்தை ரசித்தபடி சென்று வரலாம்.மலை ஏறி தேயிலை தோட்டத்தை பார்த்தபடி இயற்கை அழகை ரசித்தபடி நடந்தே சென்று மீண்டும் நடந்தே வரலாம்.அருமையான வாய்ப்பு.
தேயிலை உருவான வரலாறு :
நாம் நடந்து செல்லும் பாதையில் ஆங்காங்கே நாம் இளைப்பாறும் வகையில் உட்காரும் நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன.அவற்றின் அருகில் தேயிலை எவ்வாறு உருவானது,அதன் வளர்ச்சி ,அதனை யார் முதலில் தோட்டமிட்டது,இந்தியாவில் யாரால் கொண்டு வரப்பட்டது போன்ற பல்வேறு தகவல்களை தமிழிலும்,ஆங்கிலத்திலும் ஆங்காங்கே தேயிலை குடிக்கும் கப் வடிவத்தில் வரைந்து உள்ளே தகவலை கொடுத்துள்ளனர்.பார்ப்பதற்கே அருமையாக உள்ளது.
தேயிலை தோட்டத்தை பார்ப்பதற்கு கட்டணம் :
தேயிலை தோட்டத்தின் உள்ளே செல்வதற்கு வாகனத்திற்கும் ,நபர்களுக்கும் குறைந்த அளவிலான கட்டணம் வசூலிக்க படுகிறது.பார்க்க வேண்டிய தோட்டம்.இங்கு இட்லி பூ,சிறுவர்கள் விளையாடும் வகையில் விளையாட்டு சாதனங்கள்,ஊஞ்சல் என பல்வேறு பொருள்கள் உள்ளன.அவற்றை பார்த்து ரசிக்கும் வகையில் அழகான புல் தரைகள் உள்ளன .
தமிழ்நாடு அரசின் தேயிலை விற்பனை: தேயிலை தூள் (ஒரிஜினல் தூள் ) இங்கு விற்கப்படுகிறது.பல விலைகளில் விற்கப்படுகிறது.இதனில் குறிப்பிடத்தக்க விஷயம் ,நாம் ஒரு 45 நிமிடம் மலை ஏறி ,இறங்கி களைப்புடன் வந்த உடன் நமக்கு சுட,சுட இஞ்சி டீ ,சுக்கு டீ ,லெமன் டீ என இலைகளுடன் குறைந்த விலையில் தரப்படுகிறது.அதனை நாம் சாப்பிட்டால் நாம் பயணம் செய்த களைப்பு காணாமல் போய் விடுகிறது.இவ்வாறு நாங்கள் தேயிலை தோட்டத்தை பார்த்து விட்டு மீண்டும் கோத்தகிரி நோக்கி எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.
காரைக்குடி நோக்கி பயணம் :
மாலை 6 மணி அளவில் தேயிலை தோட்டத்தில் விடை பெற்று அங்கிருந்து நாங்கள் கோத்தகிரி,மேட்டுப்பாளையம்,பல்லடம்,அன்னுர் ,தாராபுரம்,ஒட்டன்சத்திரம் ,திண்டுக்கல் ,நத்தம்,கொட்டாம்பட்டி,திருப்பத்தூர் வழியாக இரவு ஒரு மணி அளவில் வீடு வந்து சேர்ந்தோம்.
சுற்று பயணத்தில் உணவு - சாப்பாடு தொடர்பாக :
முதல் நாள் காலை மேட்டுபாளையத்தில் அன்னப்பூர்ணா உணவகத்தில் சாப்பிட்டோம்.
முதல் நாள் மதியம் முதல் மூன்றாம் நாள் காலை வரை நாங்கள் மசினகுடியில் உள்ள ட்ரீம் லேண்ட் என்கிற ஹோட்டலில் மட்டுமே சாப்பிட்டோம்.இங்குதான் நாம் சாப்பிடும் உணவு நமக்கு எந்த தொந்தரவையும் தரவில்லை.மேலும் விலையும் சரியானதாக இருந்தது.இடையில் ஒரு வேளைக்கு மட்டும் சஃபாரி ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டோம் .அங்கு அனைத்து உணவுகளும் விலை அதிகம்.அதோடு உணவு பொருள்களும் சுமாரான டேஸ்டுடன் இருந்தன.
பைக்காரா உணவு விடுதிகளில் விலை வித்தியாசம் :
மூன்றாம் நாள் மதியம் பைக்காரா அருவி அருகே உள்ள உணவகத்தில் சாப்பிட்டோம்.பைக்காராவில் உள்ள உணவு விடுதிகளில் உங்களுக்கு தெரிந்தவர் இருந்தால் ஒரு விலை .தெரிந்தவர்கள் யாரேனும் இல்லை என்றால் கடைக்காரர்கள் அவர்கள் இஷ்டத்துக்கு உணவு விலை சொல்லுகிறார்கள்.வருபவர்களும் ஒரு வேளைமட்டும்தானே என்று கேட்கும் காசை கொடுத்து செல்கின்றனர்.எனவே பைக்காராவில் சாப்பிடும்போது கவனமாக சாப்பிடுங்கள்.
மூன்றாம் நாள் இரவு,நான்காம் நாள் காலை ஆகிய இரண்டு வேளையும் அருமையான உணவு சாப்பிட்டோம்.மின்சார துறையின் நண்பர் வழியாக ஆய்வு மாளிகையில் உணவு தயாரிக்கப்பட்டு அங்கு சப்பிட்டோம்.இரவு சப்பாத்தியும்,காலையில் இட்டலியும் அருமையாக செய்து கொடுத்தார்கள்.நான்காம் நாள் மதியம் மீண்டும் பைக்காரா அருவி அருகே உள்ள ஹோட்டலில் மதிய உணவு சாப்பிட்டோம்.அருமை.
ஹோட்டலில் தங்கிய இடம் :
மேட்டுப்பாளையயத்தில் முதல் நாள் இரவு காவேரி இன்டர்நேஷனல் என்கிற ஹோட்டலில் அறை எடுத்து தங்கினோம்.நன்றாக இருந்தது.முன்னதாக மயூரா என்கிற ஹோட்டலில் ரூம் புக் செய்தோம்.ஆனால் இரவு 12 மணி அளவில் மேட்டுப்பாளையம் சென்று ஹோட்டலில் விசாரிக்கும்போது,அப்போது ரூம் இருந்தது ,இப்போது இல்லை.வேண்டுமானால் டபுள் ஏசி ரூம் ( கட்டணம் அதிகம் ) இருக்கிறது.தங்கி கொள்ளுங்கள் என்று சர்வ சாதாரணமாக சொல்கின்றனர்.பிறகு மீண்டும் நண்பர்களிடம் முன்பே விசாரித்து வைத்ததன் அடிப்படையில் காவேரி ஹோட்டலுக்கு சென்று ரூம் எடுத்து தங்கினோம்.
மசினகுடியில் மூன்று நாட்களும் ஹோட்டல் ஆல்பட் என்கிற தங்கும் விடுதியில் தங்கினோம்.நல்ல காற்றோட்டமான அறை .வெண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.அங்கு உள்ள உதவியாளரும் நன்றாக உதவியாக இருந்தார்.இந்த ஹோட்டலின் அருகில் சாப்பிடும் இடம்,மெயின் ரோடு,என அனைத்து வசதியும் உள்ளது.
உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்

வெள்ளி, 30 மார்ச், 2018

எண்ணெய் சருமத்தை பாதுகாக்கும் வழிகள்

எண்ணெய் சருமத்தை பாதுகாக்கும் வழிகள்...

கோடை தான் வெயிலின் உச்சக்கட்டத்தை தொடும் காலமிது. வீட்டிலிருக்கும் போதும்  வீட்டை விட்டு வெளியேறும் போதும்  ஒவ்வொரு  நிமிடமும் வியர்வையோடு நம் நாட்களை கடத்தவேண்டியுள்ளது.குறிப்பாக எண்ணெய் பசை தோல் உடையவர்களுக்கும் முகப்பரு பாதிப்பு தோல் உடையவர்களுக்கும் , இந்த பருவத்தில்தான்  அனைத்து வகையான தோல் பிரச்சனைகளை நம் சந்திக்க வேண்டி வருகிறது.

ஆயில் ஸ்கின் :  
கோடைகாலத்தில் எண்ணெய் பசை தோல் வகைகளை கொண்டிருக்கும் மக்களுக்கு எண்ணெய் சுரப்பு அதிகரிக்கிறது. வியர்வையும் அழுக்குடன் சேர்ந்து தோலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தோல் நோய்களுக்கான சிகிச்சைகள் மிகவும் விலை உயர்ந்ததாகவே உள்ளது. அதற்கு பதிலாக நம் வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களை வைத்து ஃபேஸ் பேக்குகளை தயாரித்துப் பயன்படுத்தலாம். இது சருமத்தின் எண்ணெய் சுரப்புகளை கட்டுப்படுத்துவதற்கு மிகுந்த பயனுள்ளதாகவே இருக்கும்.

1.வேம்பு, பன்னீர் மற்றும் ஆரஞ்சுஃபேஸ் மாஸ்க் :
தேவையான பொருட்கள்: வேம்பு, ஆரஞ்சு, சந்தனக்கட்டை, முல்தானிய மிட்டி, (புல்லர்'ஸ் எர்த்) தேன், எலுமிச்சை சாறு, பன்னீர்.
எப்படி தயாரிப்பது ? வேம்பு , ஆரஞ்சு, சந்தனம் மற்றும் முல்தானி மிட்டி (பூரண பூமி) சமமான அளவில் எடுத்து ஒன்றாக கிரைண்டரில் அரைத்துக்கொள்ளவும். பின்பு ஒரு ஐடியல் வைத்து நாள்பட பயன்பாட்டிற்காக பத்திரப்படுத்திக்கொள்ளவும் நம் ஏற்கனவே அரைத்த தூள் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் மற்றும் எலுமிச்சை சாறு அரை தேக்கரண்டி சேர்த்து, இறுதியாக, பன்னீரை ஒரு மென்மையான பேஸ்ட் செய்ய தேவையான அளவு சேர்க்கவும். முகத்திலும், கழுத்திலும் இதனை தடவி 15-20 நிமிடங்களுக்கு விட்டுவிடவும் இது உலர்வதற்கு முன் வெற்று தண்ணீரில் கழுவவும் இது கோடை காலத்தில் எண்ணைய் பசை தோளுடையவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

2.ஆரஞ்சு மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்:
தேவையான பொருட்கள்: பிரஷ் ஆரஞ்சு, ஓட்ஸ்,தேன், முட்டை வெள்ளைக்கரு அல்லது தயிர். தயாரிப்பது எப்படி? பிரஷெ் ஆரஞ்சு கிடைக்குமானால் அதனை பயன்படுத்துங்கள். ஓட்ஸ் 3 தேக்கரண்டி, தேன் 1 தேக்கரண்டி, ஆரஞ்சு சாறு 2 தேக்கரண்டி மற்றும் முட்டை வெள்ளை அல்லது தயிர் 1 தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ளவும். இதை முகத்தில் அப்ளை செய்து அரை மணிநேரம் கழித்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். இந்த கலவை பயன்படுத்தினால் ஆயில் சருமம் உடையவர்கள் நல்ல பலன்களைப் பெறலாம்.

3.அரிசி மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்:
தேவையான பொருட்கள்: அரிசி மாவு, மஞ்சள், தேன், வெள்ளரிக்காய் சாறு. தயாரிப்பது எப்படி? அரிசி மாவு 3 தேக்கரண்டி, தேங்காய் துருவல், 1 டீஸ்பூன் தேன் மற்றும் வெள்ளரிக்காய் சாறு சேர்த்து ஒரு மென்மையான பேஸ்ட் செய்ய வேண்டும். உடல் முழுவதும் பயன்படுத்த அதிகளவில் தயார் செய்துகொள்ளலாம்.

4. தேன் ஃபேஸ் மாஸ்க்:
தேவையான பொருட்கள் பாதாம், தேன். தயாரிப்பது எப்படி? 10 பாதாம் பருப்புகளை ஓர் இரவு முழுமைக்கும் ஊற வைத்து, அடுத்த நாள் காலை நன்றாக பசையை அரைக்கவும். ஒரு டீஸ்பூன் தேன் கலந்து இதை உங்கள் முகத்தில் தடவவும்.15 நிமிடங்களுக்கு பிறகு கழுவவும். இந்த கலவை சாப்பிடுவதற்கும் ஏற்றது , இதை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது நல்ல பலன்களை பெறலாம்.

5. தக்காளி ஃபேஸ் பேக்:
தேவையான பொருட்கள் தக்காளி சாறு ,அரிசி மாவு, தேன்.
தயாரிப்பது எப்படி? தக்காளி எண்ணெய் தோல் உள்ளவர்களுக்கு ஏற்றது. வெறும் 3 தேக்கரண்டி அரிசி மாவு மற்றும் தேன் 1 தேக்கரண்டி சேர்த்து சில புதிய தக்காளி சாருடன் கலக்கி பயன்படுத்தலாம். மாற்றாக, நீங்கள் தக்காளி (சதைப்பகுதி) முகத்தில் 15 நிமிடங்கள் ஒரு வட்ட இயக்கத்தில் தேய்க்க வேண்டும். இதுவும் நல்ல பலனை தரும்.

6.மிட்டி ஃபேஸ் பேக்:
தேவையான பொருட்கள் முல்தானி மிட்டி, பன்னீர்.
தயாரிப்பது எப்படி? முல்தானி மிட்டி மற்றும் பன்னீர் இரண்டையும் ஒன்றாக கலக்கி உங்கள் முகம் மற்றும் கழுத்தில் அது பொருந்தும் அளவுக்கு தடவவும். உங்கள் கண்களில் பன்னீரில்நனைத்த பருத்தி பட்டைகள் வைக்கவும். Thanks Time pass news


வியாழன், 29 மார்ச், 2018

பங்குனி உத்திரமும் குலதெய்வ வழிபாடும்.!


பங்குனி உத்திரமும் குலதெய்வ வழிபாடும்.!

உத்திரம் நாள் : 30.3.2018 | பங்குனி ( 16 ) வெள்ளிக்கிழமை.!!

குலம் தெரியாமல் போனாலும், குல தெய்வம் தெரியாமல் போக கூடாது. குருவை மறந்தாலும் குல தெய்வத்தை மறக்க கூடாது - இதெல்லாம் கிராமத்தில் பேசப்படும் பழமொழிகள். இவை குலதெய்வத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. குல தெய்வங்கள் என்பவை வெறும் வாய்வழிக் கதைகளின் நாயகர்கள் அல்ல; அவை நம் முன்னோர்கள். தங்களை காப்பாற்றியவர்களையோ, தங்கள் காலத்தில் வாழ்ந்த சிறந்த மனிதர்களையோ, நமக்கு நினைவுறுத்த, பெரியவர்கள் குல தெய்வங்களாக வழிபட்டு வந்திருக்கின்றார்கள். குல தெய்வங்களாக சிறு தெய்வங்களே பெருமளவில் விளங்குகின்றன.

இந்த தெய்வங்களை வழிபட மரபுகள் உள்ளன. பெருங்கோயில்கள் போன்று நினைத்த நாளில் சென்று வழிபட வாய்ப்புகள் குறைவு. காரணம் பல குல தெய்வ கோயில்களில் நித்திய பூஜை இருப்பதில்லை, கோயில்களும் மலை, ஆறு, குளம், கண்மாய், காடு போன்ற இடங்களில்தான் இருக்கும். அதற்கு சரியான போக்குவரத்து இருக்காது. இந்த குல தெய்வ வழிபாட்டை கார்த்திகை மாதம் திருகார்த்திகையின் போதும், இன்னொன்று பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்றும் மேற்கொள்ளச் சொல்லிகொடுத்திருக்கிறார்கள். இதில் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும். அன்று பௌர்ணமி என்பதால் உகந்த நாளாகவும் அமைகிறது.

ஆக, இப்போது பெண்ணுருவில் இருக்கும் நீர் என் பார்வதிதேவியின்றி, வேறில்லை என்று கூறினார். பின்பு ஹரிஹர சக்திகள் சங்கமமாகியது. விளைவாக மஹா சாஸ்தா அவதரித்தார். அந்த நாளே பங்குனி உத்திரம் என்று கூறப்படுகிறது. சாஸ்தா எனும் நாமத்துக்கு ஏற்ப அனைத்துலகங்களையும் காத்து ரட்சிக்கும் பொறுப்பை ஈசன் அளித்தார். ஸ்திதி - சம்ஹார மூர்த்திகளின் ஒருங்கிணைந்த சக்தியாக, உலகங்களை ஆட்சி புரியும்படி புவனேஸ்வரனாக பட்டம் சூட்டினார். இதன் பின்னர் ஐயன் சிவ சக்தியரை வலம் வந்து வணங்கி, பூலோகம் செல்ல புறப்பட்டார். காஞ்சிபுரம் வந்த சாஸ்தா, ஈசனை லிங்கமாக்கி பூஜித்தார்.

சாஸ்தா சிவன், சக்தி, விஷ்ணு, மஹாலட்சுமி, பிரம்மன், கலைவாணி என முச்சக்திகளையும் உள்ளடக்கிய மாபெரும் சக்தி, அனைத்து பூத சேனைகளும், சிவன், விஷ்ணுவின் ஏவலர்கள், இயக்கியர்கள்(மாடன்கள், மாடத்தியர்கள்) இவர்கள் எல்லோரும் சாஸ்தாவின் அன்பு கட்டளை ஏற்றே செயல்படுபவர்கள். சாந்த சொரூபத்திலிருக்கும் சாஸ்தா, ஆங்கார ரூபத்தில் அய்யனார் ஆகிறார். சாஸ்தாவிற்கு எழுப்படும் ஆலயங்கள் அவருடன் குறைந்தது 21 சைன்யங்கள் நிலைபெற்றிருப்பர். சாஸ்தா தனித்து இருப்பதில்லை. அவ்வாறு இருந்தால் காவலுக்கு, பூதத்தார் மற்றும் கருப்பன், கருப்பண்ணசாமி, சுடலைமாடன் ஆகிய நாமங்களில் எவரேனும் ஒருவர் இருப்பர்.

சாஸ்தா வழிபாடுக்கு முந்தைய நாள் வீடு, வாசலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், தம்பதியர் முந்தைய நாள் இரவு தாம்பத்யம் வைத்திருக்கக் கூடாது. அவருக்கு தேவையான பூஜைப்பொருள்களை வீட்டில் வாங்கி வைத்து மறுநாள் கோயிலுக்கு கொண்டு செல்ல வேண்டும். குலசாமிகளும், அவரோடு சாஸ்தாவும் குடும்பமாக இருந்து நமக்கு அருள்வார். கோயிலுக்கு செல்லும்போது உடன் பிறந்தவர்கள், பெற்றோரோடு செல்லவேண்டும். திருமணம் செய்து கொடுத்த பெண் பிள்ளைகள் கணவர் வீட்டு சாஸ்தா கோயிலுக்குத்தான் பாத்தியப்பட்டவர்களாவர்கள்.

ஆண் பிள்ளைகள், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தாலும், தாய், தந்தையினரோடுதான் செல்ல வேண்டும். மாமியார், மருமகள் உறவு சரியில்லை என்பதற்காக பெற்றோரை விட்டு விட்டு மனைவி, குழந்தைகளோடு தாய், தந்தை மற்றும் பங்காளிகளை விட்டு சென்று குலதெய்வத்தை வழிபட்டால் அதை தெய்வம் ஏற்காது. எந்த பலனும் கிடைக்காது. இதுதான் குல தெய்வ வழிபாட்டில் முக்கியமான ஒன்று. தேங்காய், பழம் கொண்ட அர்ச்சனைகளை மட்டும் குலதெய்வம் விரும்புவது இல்லை.

காலையில் அந்தணரைக்கொண்டு கணபதி ஹோமம், அடுத்து மூலவர் முதல் பரிவார தெய்வங்களுக்கு நீர், எண்ணெய், மஞ்சள், இளநீர், பால் உள்ளிட்ட அனைத்து அபிஷேகமும் செய்து (மண் சிலைகளாக இருந்தால் வேண்டாம்) அதன் பின்பு மூலவர் சாஸ்தா மற்றும் பூதத்தார், சிவணினைந்த பெருமாள், தம்பிரான் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு சைவமும், மாடன், அம்மன் ஆகியோருக்கு அசைவமும் படைத்து, பல வகை மலர்மாலைகள் அலங்கரித்து, சாம்பிராணி வாசம் மிகுதியாக பூஜை நடைபெற வேண்டும். இவற்றையெல்லாம் விட கண்டிப்பாக கோயிலில் அடுப்பு கூட்டி சமையல் செய்து, அங்கே பந்தி பரிமாறி உணவு அருந்த வேண்டும். அதுவே குலதெய்வ வழிபாட்டில் பிரதானமானதாகும்.


மற்ற தெய்வத்திற்கும், குல தெய்வத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? மற்ற தெய்வங்களுக்கு எண்ணற்ற பிள்ளைகள். குலதெய்வத்திற்கு உங்கள் வம்சவழிதான் பிள்ளைகள். ‘குல தெய்வ சந்நதியில் குறை சொல்லி அழுதபடி, கண்ணீர் சிந்திப்பார். மறு கணமே அதற்கு தீர்வு கிடைக்கும்,’ என்பார்கள். மற்ற நாட்களில் குல தெய்வத்தை வழிபடுவதை விட பங்குனி பவுர்ணமி அன்று வழிபடுவது மிகுந்த பலனைத்தரும்; நம் குலம் சிறப்பதோடு குடும்பமும் மேன்மை பெறும். குல தெய்வங்கள் மனம் மகிழந்து நம்மை ஆசீர்வதிப்பதால், குடும்பங்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்கள், இடையூறுகளில் இருந்து காக்கப்படும்.

குல தெய்வம் என்பது ஒவ்வொரு குடும்ப வகையறாவைப் பொருத்தது.  அண்ணன், தம்பி, குடும்பத்தினர் எல்லாரும், ஒற்றுமையாக நின்று படையல் போட்டு வழிபாடு செய்யும்போது குல தெய்வங்கள் மட்டுமன்றி மறைந்த மூதாதையர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் பித்ருக்களின் பரிபூரண ஆசிகள் எளிதாக வந்து சேரும். கிராமங்களில் இருப்பவர்களுக்கு அவர்கள் அருகிலேயே குல தெய்வ கோயில் இருக்கும். எனவே எளிதாக வழிபாடுகளை செய்து கொள்வார்கள். நகர்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு குலதெய்வ கோயிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருக்கலாம்.

அத்தகையவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதற்கும் ஒரு பரிகாரம் உள்ளது. உங்கள் வீட்டிலேயே குல தெய்வபடத்தை அலங்கரித்து பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனமுருக வழிபாடு செய்யுங்கள். உங்கள் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். ஒவ்வொரு பவுர்ணமி தோறும் இதை செய்து வந்தால் பவுர்ணமி போல் உங்கள் வாழ்க்கையும் பிரகாசிக்கும். நீங்கள் ஒரு வேளை குலதெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் தொடங்குங்கள். வேறு எந்த தெய்வமும் அதற்கு இணை இல்லை. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தேதியில் பூஜை செய்வதைப் பழக்கமாக்கிக்கொள்வது நல்லது.


குலதெய்வப் படத்தை வாங்கி வந்து உங்கள் வீட்டு பூஜையறையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மணிப்பர்சிலும் வைத்துக்கொள்ளலாம். வீடு கட்டுவதற்கும், திருமணம் செய்வதற்கும் முன் குல தெய்வத்தை வழிபட்ட பின்னரே செயலில் இறங்க வேண்டும். ஒருவருக்கு குலதெய்வம் இசக்கியம்மன் என்று வைத்துக் கொள்வோம் அது ஊருக்குள்ளேயே இருக்கும். அவர் அங்கு செல்ல முடியவில்லை என்பதற்கு இசக்கியம்மனும் சக்தியின் அவதாரம் தான் என எண்ணி, அருகிலிருக்கும் காளிகாம்பாள் கோயிலில் சென்று தனது நேர்த்திக் கடனை செலுத்தினால் அது குலதெய்வத்தை போய் சேராது.

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்து கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்றும் செய்து விடமுடியாது. அல்லது வரும் வினைகள் யாவுமே நல்வினையாக மாறும். குல தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது. குல தெய்வத்தின் அருள் இல்லை என்றால் அந்த வீட்டில் எப்படிப்பட்ட மகானை வைத்து வழிபட்டாலும் அந்த வீட்டில் விமோசனம் கிடைப்பதில்லை என்பார்கள். பாரம்பரிய வழக்கத்தை மீறாமல், மாற்றாமல் வணங்கவேண்டியது முக்கியம். குல தெய்வம் என்னவென்று தெரியாதவர்கள் காலபைரவர் சந்நதியில் வியாழக்கிழமை அன்று குருஓரையின் போது அர்ச்சனை செய்து தனக்கு குல தெய்வத்தை காட்டும்படி வேண்டலாம். அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு அகத்திக்கீரையை உணவாகக் கொடுக்கலாம்...

கருவளையம் சங்கடப்படத்துகிறதா?... கவலையவிடுங்க... இத கடைபிடிங்க...


கருவளையம் சங்கடப்படத்துகிறதா?... கவலையவிடுங்க... இத கடைபிடிங்க...

கருவளையம் என்பது நம்முடைய தோற்றப்பொலிவை இழக்கச் செய்து, நம்முடைய தன்னம்பிக்கையையே குழைத்துவிடும். அன அழுத்தத்தால் வரும் கருவளையத்தைவிட, கருவளையத்தால் வரும் மனஅழுத்தம் மிகப்பெரியதாக இருக்கும்.
கருவளையம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அனைவரும் எதிர்கொள்ளும் சவாலான சிக்கலாகும். பாலின வேறுபாடு இல்லாமல் இது அனைவரையும் தொந்தரவு செய்கிறது மற்றும் அது நம் நம்பிக்கையை தகர்கிறது. கருவளையம் பெரும்பாலும் பரம்பரை நோயாக கருதப்படுகிறது, சிலருக்கு வயது ஆகும் போது இது ஏற்படுகிறது. கருவளையம் என்பது நம்முடைய தோற்றப்பொலிவை இழக்கச் செய்து, நம்முடைய தன்னம்பிக்கையையே குழைத்துவிடும். அன அழுத்தத்தால் வரும் கருவளையத்தைவிட, கருவளையத்தால் வரும் மனஅழுத்தம் மிகப்பெரியதாக இருக்கும்.

காரணம்
கருவளையம் தூக்கம் இன்மை , அதிகம் புகை பிடித்தல் , தவறான உணவுமுறை , சுற்றுச்சூழல் மாசுபடுதல் போன்ற பல காரணங்களால் இது தோன்றக்கூடும்.
எனினும், சரியான பராமரிப்புடன், நிரந்தரமாக கருவளையத்தை அகற்றுவது சாத்தியமாகும்.

வேதிப்பொருள்கள்
ஒரே நாளில், ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்திற்குள் கருவலயத்தில் இருந்து விடுதலை என்கிற அளவில் கருவளையத்தை அகற்றுவதாக கூறப்படும் பல ஒப்பனை பொருட்கள் உள்ளன. ஆனால், அவை நமது உடலை பாதிக்கும் பல வேதிப்பொருள்களைக் கொண்டிருக்கின்றன என்பதால் அதன் நம்பகத்தன்மை மிகவும் ஆபத்தானது.
எனவே, இது போன்ற சிக்கல்களைக் கையாளுவதற்கு இயற்கையான மருந்துகளைப் பயன்படுத்துவது எப்பொழுதும் சிறந்தது.

கற்றாழை
கற்றாழை சருமத்தை மிருதுவாக்கும் தன்மை கொண்டது, இது தோலுக்கு அழகையும் பொலிவையும் தரவல்லது. ஒரு புதிய கற்றாழை இலையை வெட்டி அதில் உள்ள ஜெல்லை வெளியே எடுத்து கசக்கி. அல்லது இயற்கையாக தயாரிக்கப்பட்ட கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம். உங்கள் கண்களின் கீழ் இந்த ஜெல்லை தடவி , மெதுவாக அதை மசாஜ் செய்து, 10-15 நிமிடங்களுக்கு அதை விட்டு விடுங்கள். 10 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு பருத்தி துணி கொண்டு அதை துடைக்கவும்.

க்ரீன் டீ
பச்சை நிற தேநீர் பைகள் உங்கள் கண்கள் கீழ் உள்ள கருவலயங்களை குறைக்க உதவுகிறது, அது உங்கள் கண்களுக்கு புத்துணர்வு ஊட்டி கருவலயங்களை போக்குகிறது
இரண்டு தேநீர் பைகளை தண்ணீரில் முக்கி , அரைமணிநேரம் குளிரூட்டியல் குளிரூட்டுங்கள் பிறகு அந்த தேநீர் பைகளை கண்களின் மேல் பதினைந்து நிமிடங்கள் வைக்கவும் பின்பு முகத்தை சாதாரண தண்ணீரில் கழுவவும் . இது போன்று தினசரி ஒரு முறை செய்து வந்தால் கருவளையம் குணமாகும் .

தேன்
தேன் தோலுக்கு பொலிவையும் நல்ல ஊட்டத்தையும் தரவல்லது தேனில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் எந்த நேரத்திலும் கருவளையத்தை குறைக்க உதவும்.
கண்களின் கீழ் ஆர்கானிக் தேனை தடவி 20 நிமிடங்களுக்கு அதை விட்டு விடுங்கள். பிறகு சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவி காயவிடுங்கள். விரைவாக குணமாக ஒருநாளைக்கு இரண்டு முறை இதைப் பயன்படுத்தலாம்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் உள்ள பிரகாசமான முகவர்கள் இருண்ட தோலை மிருதுவக்க உதவும்.
உருளைக்கிழங்கு கண்களின் முரட்டுத்தன்மையைக் குறைக்கும், இதை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். உருளைக்கிழங்கை எடுத்து ஒரு மணிநேரம் குளிரூட்டவும் . பின்பு அதை உரித்து சாறுஎடுக்கவும் . அந்த சாற்றை பஞ்சை கொண்டு உங்கள் கண்களின் கீழ் தடவவும். தடவியபின் ஓர் இரவு முழுவது விட்டுவிடவும். பின்பு காலையில் சூடான நீரில் கழுவவும். இந்த முறையால் உங்களுக்கு மிகச்சிறப்பான பலன்கள் கிடைக்கும்

பால்
பாலில் லாக்டிக் அமிலம் இருப்பதால் தோலை ஈரப்படுத்த உதவுகிறது. எனவே, இது கண்களின் கருவளையத்தையும் மற்றும் புழுக்கத்தையும் குறைக்க உதவுகிறது.
குளிர்ந்த பாலை பருத்தி திண்டு கொண்டு உங்கள் கண்களுக்கு கீழ் வைத்து 15 நிமிடங்கள் அதை விட்டு விடவும். வேகமான மற்றும் சிறந்த முடிவுகளுக்கு நீங்கள் தினமும் இதை இரண்டு அல்லது மூன்று முறை பின்பற்றலாம்.

எலுமிச்சை சாறு
எலுமிச்சை பழச்சாறு வைட்டமின் சி கொண்டிருப்பதை அறிந்திருக்கிறோம், இது தோலை பிரகாசிக்க உதவுகிறது, இது கருவளையங்களை நீக்கவல்லது
ஒரு பருத்தி துணியை பயன்படுத்தி உங்கள் கண்கள் கீழ் சில எலுமிச்சை சாற்றை தடவவேண்டும். இதை 10 நிமிடம் விட்டுவிட்டு சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும். காலையிலும் இரவிலும் ஒவ்வொரு முறையும் நீங்கள் இதை மீண்டும் மீண்டும் செய்யலாம். உங்கள் தோல் வறண்ட நிலையில் இருப்பதால், சாற்றை நீக்கிய பின்னர் சில மாய்ஸ்சரைசரை பயன்படுத்துங்கள்.

வேனல் கட்டி குணமாக



வேனல் கட்டி குணமாக

வேனல் கட்டி கோடை காலத்தில் ஏற்படும் ஒரு உபாதை ஆகும். அதிக வெப்பத்தால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து முகம் மற்றும் உடலில் வேனல் கட்டிகள் தோன்றுகின்றன.

வேனல் கட்டி வராமல் தடுக்க தண்ணீர் மருந்து

வேனல் கட்டி மறைய மற்றும் ஏற்படாமல் இருக்க முதலில் ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் மட்டுமாவது இந்த பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கோடை காலங்களில் தோன்றும் அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடலாம்.

வேனல் கட்டிக்கு வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டு நிவாரணம் பெறலாம்.

வேனல் கட்டி போக சுண்ணாம்பு, தேன் மருந்து

வேனல் கட்டி ஆரம்ப கட்டத்தில் மிகவும் வலியை ஏற்படுத்தும். அதற்கு சிறிது சுண்ணாம்புடன் தேன் குழைத்து கட்டி இருக்கும் இடத்தில தடவி வந்தால் கட்டி மறைந்து வலி குறையும்.

வேனல் கட்டிக்கு கற்றாளை மருந்து

கற்றாழையை வெட்டி உள்ளே உள்ள ஜெல்லை எடுத்து வேனல் கட்டி ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் வேனல் கட்டி மறையும்.

வேனல் கட்டி மறைய மஞ்சள் மருந்து

வேனல் கட்டி குணமாக மஞ்சளை கல்லில் உரசி அதை கட்டியின் மீது தடவ வேண்டும். இதன் மூலம் வேனல் கட்டியிலிருந்து தப்பிக்கலாம்.

வேனல் கட்டி குணமாக சந்தனம், எலுமிச்சை சாறு மருந்து

சந்தனத்தை உரசிக் கொண்டு அதனுடன் எலுமிச்சை சாறினை சேர்த்து கனமாக பத்து போட்டால் வேனல் கட்டி குணமாகும்.

வேனல் கட்டி குணமாக சோப்பு, மஞ்சள், கல் உப்பு மருந்து

சோப்பை தூளாக்கிக் கொண்டு அதனுடன் மஞ்சள் மற்றும் கல் உப்பை சேர்த்து குழைத்து வேனல் கட்டி ஏற்புடும் இடத்தில தடவ வேண்டும். இவ்வாறு செய்தால் வேனல் கட்டி மறையும்.

வேனல் கட்டி சரியாக நல்லெண்ணெய் குளியல் மருந்து

சூட்டினால் ஏற்படும் கட்டி மறைய வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் வேனல் கட்டி மறையும். நல்லெண்ணெய் உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

வேனல் கட்டி மறைய கடுகு மருந்து

கடுகை அரைத்து வேனல் கட்டி ஏற்பட்ட இடத்தில போட்டால் வேனல் கட்டி மறையும்.

வேனல் கட்டி பழுத்து உடைய மஞ்சள் தூள் மற்றும் அரிசி மாவு மருந்து

மஞ்சள் மற்றும் அரிசி மாவையும் சேர்த்து தோசை மாவி போல் கலந்து கொண்டு அதனை கொதிக்க வைத்து களி பதத்திற்கு கிண்டி அதை வேனல் கட்டி ஏற்பட்ட இடத்தில் போட்டால் வேனல் கட்டி பழுத்து உடையும்.

வேனல் கட்டி குணமாக வெள்ளை பூண்டு மற்றும் சுண்ணாம்பு மருந்து

வெள்ளைப் பூண்டை நசுக்கி அதனுடன் சிறிது சுண்ணாம்பு கலந்து வேனல் கட்டு ஏற்பட்ட இடத்தில பத்து போடு வந்தால் வேனல் கட்டி குணமாகும்.

வேனல் கட்டி குணமாக சுண்ணாம்பு, தேன், வெல்லம், வெற்றிலை மருந்து

வெயில் காலங்களில் வேனல் கட்டி நிறைய பேருக்கு வரும். வேனல் கட்டி வந்தால் அதன் வலி மிக அதிகமாக இருக்கும். வேனல் கட்டி குணமாக ஒரு சிறிய தட்டில் சிறிதளவு சுண்ணாம்பை சிறிது தேன் விட்டு குழைக்க வேண்டும். தேன் கிடைக்கா விட்டால் வெல்லத்தை சிறிது நீர் விட்டு குழைக்கலாம். அவ்வாறு குழைக்கும் பொது அது சூடு பறக்க ஒரு கலவையாக வரும். அதை வேனல் கட்டி உள்ள இடத்தில் தடவி அதன் மேல் வெற்றிலையை ஒட்டி விட வேண்டும். வெகு விரைவில் வேனல் கட்டி குணமாகும்.

முடக்கத்தான் கீரையின் பயன்கள்:-


முடக்கத்தான் கீரையின் பயன்கள்:-

முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது.

முடக்கத்தான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத் தொடு கூட்ட¡கப் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.

இந்தக் கீரையைச் சன்னமாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம். கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம்.

துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம். அதோடு, அடை செய்வதற்கும், தோசை மாவை புளிக்க வைப்பதற்கும் இந்தக் கீரையை அரைத்துச் சேர்த்துக்கொள்ளலாம்.

முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.

இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்ட¡ல் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.

வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும். இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்.

பொதுவாக வயது ஆக ஆக மூட்டுவலி பெரும்பாலானவர்களுக்கு வந்து விடுகிறது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் எல்லா வயதினருக்குமே மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகள் இயல்பான ஒன்றாகிவிட்டன. இதற்குக் காரணம் மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள்தான்.
இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.
கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு
அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.
முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், குறிப்பா கிராமங்களில் எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.

இதை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.

குறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

முடக்கத்தான் இலை

தோசைப் போல் சுட்டு சாப்பிடலாம்

2 கப் புழுங்கல் அரிசியை ஊறவைத்து, அத்துடன் இரண்டு கைப்பிடி கீரையையும், சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து, தோசைப் போல் சுட்டு சாப்பிடலாம். இது சற்று மருந்து வாசனையுடன் இருக்கும்.

இரண்டு கைப்பிடி கீரையை, மிக்ஸியில் போட்டு மை போல் அரைத்தெடுத்து, சாதார‌ண‌த் தோசைமாவுடன் (ஒரு பெரிய‌ கிண்ண‌ம் அள‌வு) க‌ல‌ந்து, தோசை சுட்டால், க‌ச‌ப்பு சிறிதும் தெரியாது.

நல்ல காரமான சட்னியுடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.

மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக -: வாரம் ஒருமுறை முடக்கற்றான் இரசம்
வைத்துச் சாப்பிட்டு வந்தால்உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு,
வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.

ரசம்  தயாரிக்க ஒரு சின்ன டிப்ஸ்
கை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு டம்ளரளவு தண்ணீர்
விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம்
வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம்
தயாரிக்க வேண்டும்.

மலம் சரிவரபோக ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை வெள்ளைப் பூண்டுபற்களில் ஐந்து நசுக்கி இதில் போட்டு அரைது தேக்கரண்டி அளவு மிளகைஒன்றிரண்டாகஉடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டுஅடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சியகஷாயத்தை வடிகட்டிவிடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால்

ஒரு எலுமச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம்
சாதம்மட்டும் சாப்பிடலாம்.
மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்ப்பட முடக்கற்றான் இலையை வதக்கி அடி
வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு பெண்களுக்கு ஒழுங்காக வரும்.
மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி சுண்ணாம்பு,
பாஸ்பரம் படிவங்கள்தான் பாரிச வாயு எனும் கைகால் முடக்கு வாதம் ஆகும்
இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.

வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடமஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துவரவும் பின் முடி கொட்டுவது நின்று விடும் நரை விழுவதை தடுக்கும்.கருகருவென முடி வளர தொடங்கும்

இதன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கீல்களில் வரும் வாதத்திற்கு வீககத்திற்க்கு வைத்துக் கட்ட குணமாகும் .

நன்றி ‌: உணவே மருந்து.

கலோரி - உணவு - சத்து


கலோரி - உணவு - சத்து

தினமும் 2000 கலோரி சாப்பிட வேண்டும் . பழத்தில் 10 கலோரி உள்ளது , 20 கலோரி உள்ளது என்றெல்லாம் கூறப்படுவதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏதையும் கலோரி என்ற அளவில் கூறுகிறார்கள்.

அப்படி என்றால் என்ன தெரியுமா ?
கலோரி என்பது சக்தியை அளவிடும் ஓர் அலகு . ஒரு கிராம் நீரை ஒரு டிகிரி சென்டிகிரேடு அளவு உயர்த்துவதற்கு தேவையான சக்திதான் கலோரி.

உங்கள் உடலில் ஒரு கிராம் மாவுப்பொருள் இருந்தால் அது 4 கலோரி சக்தியையும் , ஒரு கிராம் புரதமானது 4 கலோரி சக்தியையும் , ஒரு கிராம் கொழுப்பு 9 கலோரி சக்தியையும் தரும்

கலோரி செலவாகும் விதம் :
நாம் செயல்பட்டாலும் , செயல்படாவிட்டாலும் நமது உடலில் சக்தி எரிக்கப்பட்டு கொண்டிருக்கும். கலோரிகள் செலவாகிக் கொண்டிருக்கும்.

நீங்கள் எட்டு மணி நேரம் வரை நன்றாக தூங்கினால், சுமார் 400 கலோரி சத்து குறைந்திருக்கும். பத்து மணி நேரத்துக்கு உட்கார்ந்திருந்தாலோ அல்லது மெல்ல நடை நடந்தாலோ 550 கலோரி செலவாகும் .

ஒரு மணி நேரம் உறகினாலோ , உட்கார்ந்திருதாலோ 50-55 கலோரி சத்து செலவாகும் . ஒரு மணி நேரம் பேசுவதால் , சுமார் 80 கலோரி செலவாகும் . நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்தால் 200 கலோரியும் சைக்கிள் ஓட்டுதல் விளையாடுதல் போன்றவற்றால் மணிக்கு சுமார் 300 கலோரியும் செலவாகும்.

இதை இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் உங்கள் எடையை 30-ல் பெருக்கி என்ன வருகிறதோ அந்த அளவுள்ள கலோரியை எடுத்து கொள்ளுங்கள்.

நீங்கள் 50 கிலோ எடையுடன் இருந்தால், 50 x 30 =1500 கலோரி சத்துள்ள உணவை சாப்பிடலாம். வயதுக்கு மீறிய எடை இருந்தால் இயல்பான கலோரி அளவை அறிந்து சாப்பிட வேண்டும்.

நீங்கள் செலவழிக்க வசதியாக சில உணவுகளில் உள்ள கலோரி சத்துக்களை கொடுத்திருக்கிறேன். இவற்றை அடிப்படையாக வைத்து உங்கள் எடை மற்றும் உழைப்பு , ஆகியவற்றுக்கு ஏற்ப உங்கள் உணவு திட்டத்தை வகுத்து கொள்ளுங்கள்.

நாம் பயன்படுத்தும் நூறு கிராம் பொருளில் உள்ள கலோரிகளின் அளவை தெரிந்து கொள்ளுங்கள்

அரிசி 345 கலோரி
கோதுமை 344 கலோரி
வெண்ணை 755 கலோரி
நெய் 900 கலோரி
சமையல் எண்ணெய் 900 கலோரி
கோழி இறைச்சி 173 கலோரி
ஆட்டு இறைச்சி 194 கலோரி
ஈரல் 104 கலோரி
மீன் 130 கலோரி
உப்புமா 130 கலோரி
சப்பாத்தி 200 கலோரி
தேன் 320 கலோரி
தயிர் 60 கலோரி
சமோசா 250 கலோரி
கிச்சடி 160 கலோரி
இட்லி 132 கலோரி
சாததோசை 360 கலோரி
பொங்கல் 356 கலோரி
ஊத்தாப்பம் 330 கலோரி
பூரி கிழங்கு 460 கலோரி
ஆப்பம் 226 கலோரி
உருளைக்கிழங்கு சிப்ஸ் 565 கலோரி
சாக்லேட் 520 கலோரி
மைசூர்பாக் 720 கலோரி
ரசகுல்லா 333 கலோரி
பாதம் அல்வா 560 கலோரி
சர்க்கரை 320 கலோரி

பழங்கள்

ஆப்பிள் 50 முதல் 65 கலோரி
திராட்சை 30 முதல் 35 கலோரி
மாம்பழம் 80 முதல் 120 கலோரி
பப்பாளி 35 கலோரி
கொய்யா 60 கலோரி
ஆரஞ்சு 60 கலோரி
வாழைப்பழம் 120 கலோரி

காய்கறிகள்

சிறுகீரை 35 கலோரி
வாழைத்தண்டு 51 கலோரி
வெங்காயம் 59 கலோரி
கத்திரிக்காய் 24 கலோரி
முருங்கைக்காய் 26 கலோரி
புடலங்காய் 18 கலோரி
எலுமிச்சை 57 கலோரி
முட்டைகோஸ் 27 கலோரி
காலிப்ளவர் 30 கலோரி
மாங்காய் 50 கலோரி
கேரட் 50 கலோரி
கிழகுவகைகள் 50 கலோரி

இதைல்லாம் , சில உணவு பொருள்களில் உள்ள கலோரி சத்துகள். உணவு பொருள்களில் உள்ள கலோரிகளை உணவு இயல் மருத்துவ நிபுணரிடம் கேட்டு வாங்கி கொள்வது பயனுள்ளதாக இருக்கும் .

 நமது ஆரோக்கிய வாழ்க்கையில் அதிகம் கடந்து வரும் சொற்கள் கலோரிகள், கொழுப்புகள் போன்றவை . ஒரு ஊட்டச்சத்து நிபுணர் அல்லது டாக்டரிடம் சென்று உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று கேட்கும் போது, கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடாதீர்கள்.

ஒரு நாளைக்கு இவ்வளவு கலோரி உணவை சாப்பிட வேண்டும். கலோரிகள் அதிகமானால் உங்கள் எடை அதிகரிக்கும் என்று கூறுவார். உடற்பயிற்ச்சிக்காக ஜிம் செல்லும்போது அங்குள்ள பயிற்சியாளர் கலோரிகள் மற்றும் பிற விஷயங்கள் பற்றி நமக்கு க்ளாஸ் எடுப்பர். நமக்கு ஒரே குழப்பம். கலோரி என்றால் என்ன? கொழுப்பு என்றால் என்ன?

இது ஒரு பக்கம். கடைகளுக்கு செல்லும்போது, நாம் வாங்கும் உணவு பொருட்களில் அவற்றின் கலோரிகள், மற்றும் சத்துகளின் அட்டவணை கொடுக்கப்பட்டிருக்கும்.

இவர்கள் உணர்த்த விரும்பும் கருத்துகளில் இருந்து நமக்கு சில விஷயங்கள் புலப்படும்.

கொழுப்பு கலோரி இரண்டுமே உடலில் எரிக்கப்படுகின்றன. அப்படியென்றால் இரண்டும் ஒன்றா? மறுபடியும் கேள்வி! இல்லை இரண்டும் வேறு வேறு.இதன் வித்தியாசத்தை உணர்ந்து கொள்வது மிகவும் அவசியம். இதனை அறிவதன் மூலம் மட்டுமே நமது உடல் எடையை பராமரிக்க முடியும். வாருங்கள்! இதன் வித்தியாசத்தை அறிவோம்.

கலோரிகள் என்றால் என்ன?

கலோரி என்பது அளவிடுவதற்கு பயன்படும் யூனிட் ஆகும். நாம் உண்ணும் உணவை உறிஞ்சி அது செரித்த பிறகு உடலுக்கு கிடைக்கும் ஆற்றலின் அளவை மதிப்பிடும் அலகு(unit) தான் கலோரி. ஆகவே நம் உடல் உணவை உடைத்து செரிமானம் செய்ததும் கலோரிகள் கிடைக்கிறது. அதிகம் ஆற்றல் கிடைக்கும் போது உடல் அதற்கு தேவையான ஆற்றலை எடுத்து கொண்டு மீதம் உள்ளதை கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது.

உணவு வெளியிடும் கலோரிகளை உடல் முழுவதுமாக ஆற்றலாக பயன்படுத்தும் வரையில் உங்கள் எடை சரியாக பராமரிக்கப்படுகிறது. இந்த விகிதத்தில் சமநிலை இல்லாதபோது , அதாவது ஆற்றலை சேமிக்க ஆரம்பிக்கும் போது உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கிறது. எல்லா உணவுகளிலும் கலோரிகள் உள்ளன. அது கார்போஹைடிரேட் அல்லது புரதம் அல்லது கொழுப்பு உணவாக இருக்கலாம்.

1கிராம் கார்போஹைட்ரெடில் 4 கலோரிகள் உள்ளன. 1கிராம் பபுரதத்தில் 4 கலோரிகள் உள்ளன. 1 கிராம் கொழுப்பில் இரண்டு மடங்கு அதாவது 9 கலோரிகள் உள்ளன.

கொழுப்பு என்றால் என்ன?

கொழுப்பு என்பது உடலுக்கு தேவையான 6 ஊட்டச்சத்துகளில் ஒன்று. இது மனித உடலை ஆரோக்கியத்துடன் இருக்க வைக்கிறது. இந்த கொழுப்பு அமிலங்களுக்கு ட்ரிகிளிசரைட் என்ற ஒரு துணை குழு உண்டு.ரசாயன மற்றும் வளர்சிதை மாற்றத்தில் கொழுப்புக்கு முக்கிய பங்கு உண்டு. நரம்பு திசுக்கள் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்திக்கான தொகுதிகள் உருவாவதற்கு கொழுப்புகள் தேவை.

உடலின் எரிபொருளாகவும் இந்த கொழுப்பு பயன்படுகிறது. ஒரு மனிதன் கொழுப்புகளை உண்ணும்போது அதை உடல் பயன்படுத்தாமல், கொழுப்பு செல்களில் தக்க வைத்து கொள்கின்றன. உணவு இழப்பு ஏற்படும் வேளையில் உடல் இந்த தக்க வைத்த கொழுப்புகளை பயன்படுத்தி கொள்கின்றது.

சில வகை கொழுப்புகள் உடலுக்கு அவசியமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். முற்றிலும் கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது தவறான செயல். அதற்கு மாற்றாக நிறைவுறாத (unsaturated) கொழுப்புகளை பயன்படுத்தலாம்.

கார்போ, புரதம் மற்றும் கொழுப்பு உடலுக்கு தேவையான முதல் 3 சத்துகள் ஆகும். கார்போ ஆற்றலை கொடுக்கிறது. புரதம் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. கொழுப்பு சத்து உடல் காப்பீடாகவும், நரம்பு பூச்சாகவும், ஹார்மோன்களின் மென்மையான இயக்கத்திற்கும் பயன்படுகிறது. ஆகையால் முழுவதுமாக கொழுப்பு உணவுகளை ஒதுக்குவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

உடலுக்கு தேவையான கலோரிகளின் 15-20% கொழுப்பு சத்துக்களாக இருக்க வேண்டும். அந்த கொழுப்பு சத்தில் நெய், வெண்ணை மற்றும் எண்ணெய் போன்ற கண்ணுக்கு தெரிந்த கொழுப்பு பொருட்களால் பாதி தேவையும் மற்ற உணவு பொருட்களில் மறைந்திருக்கும் கொழுப்பு சத்தால் மீதி தேவையும் பூர்த்தியாகின்றன. 3 பகுதி பல்நிறைவுறாத கொழுப்பு அமிலங்களும், 1 பகுதி நிறைவு கொழுப்பு அமிலங்களிலும் நல்ல ஆரோக்கியம் தரும்.

எந்த உணவை சாப்பிட்டாலும் கலோரிகள் கிடைக்கும். சமவிகித உணவில் ஒரு முக்கிய பொருளாக கொழுப்பு உள்ளது. இந்த கொழுப்பு அதிகரிக்கும்போது செல்களில் சேமிக்க பட்டு உடல் எடையை அதிகரிக்கச்செய்கிறது. ஆகவே கொழுப்பை பற்றி அதிகம் பதற்றம் கொள்ளாமல், ஓரளவுக்கு எடுத்து கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.

கலோரி என்பது உடலுக்கு தேவைப்படும் எரிசக்தி. அதாவது, உடலில் சீரான இயக்கத்துக்கு இந்த கலோரியும் முக்கிய பங்கை செலுத்துகிறது. வியர்வை சிந்தி வேலை செய்வோருக்கு அதிகமாகவும், “சீட்”டில் உட்கார்ந்து வேலை செய்வோருக்கு குறைவாகவும் தேவைப்படும். கர்ப்பிணிப் பெண்கள் உட்பட சில பெண்களுக்கு என்று இவ்வளவு கலோரி என்று கணக்கு உண்டு.

“டீன் ஏஜ்” வரை கலோரி கணிசமாக தேவை தான். ஆனால், நாற்பது வயதை தாண்டிவிட்டால், உடல் எடை கூடிவிட்டால், “அடடா, கொழுப்பு கூடிவிட்டதே” என்று கலோரியை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

கலோரி என்றால், எங்கிருந்தும் கிடைக்கவில்லை. நாம் உண்ணும் உணவில் இருந்து தான் கிடைக்கிறது. நாம் உண்ணும் உணவுகளில் கார்போஹைட்ரேட் மூலம் 50 முதல் 60 சதவீதம் வரை கலோரி கிடைக்கிறது. புரோட்டீன் மூலம் 20 சதவீதம், கொழுப்பு மூலம் 15 முதல் 20 சதவீதம் கிடைக்கிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு நாளுக்கு 300 கலோரி தினமும் அதிகமாக வேண்டும். மற்றவர்களுக்கு வயதுக்கு, உடல் உழைப்புக்கு ஏற்ப கலோரி தேவைப்படுகிறது. உதாரணமாக 16 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு தினமும் கலோரி தேவை, அவர்கள் முழு உடல் எடைக்கு 2200 கலோரி தேவை. ஆனால், உடல் எடை கூடிவிட்டது என்று தெரியும் போது, கலோரியை குறைக்க என்ன செய்யலாம் என்று டாக்டர்களிடம் தான் கேட்க வேண்டும்.

ஒருவருக்கு எவ்வளவு கலோரி தினமும் தேவைப்படுகிறது என்பதை “ஹாங்ஸ் பெனடிக்ட் பார்முலா”படி டாக்டர்கள் முடிவு செய்கின்றனர். உடலுக்கு கலோரியும் தேவை, உடல் எடையும் கூடிவிடக்கூடாது என்ற அடிப்படையில் இந்த கலோரி நிர்ணயம் செய்யப்படுகிறது.

* உணவு வகைகளில் கார்போஹைட்ரேட் (Carbohydrates) , புரோட்டீன், கொழுப்புகள் ஆகியவற்றில் இருந்து கலோரி கிடைக்கிறது.

* உடலின் எரிசக்தியான கலோரி (Calorie), பல வகை இயக்கங்களுக்கும் தேவை என்றாலும், அது அதிகமாகிவிட்டால், கொழுப்பாக மாறிவிடும்.

* புரோட்டீன் (protein), கார்போஹைட்ரேட்டின் ஒரு கிராமில் நான்கு கலோரி (Calorie) உள்ளது. கொழுப்பில் தான் அதிக கலோரி, அதாவது, ஒன்பது கலோரி உள்ளது.

* நீங்கள் சாப்பிடும் முறை, அதனால், உடல் கூடுவது, உடல் உழைப்பு போன்றவற்றால், குறிப்பிட்ட அளவுக்கு மேல் உடலில் கலோரியை சேர்க்கக் கூடாது. சேர்ப்பதால் தான் கொழுப்பு கூடி, உடல் எடை கூடுகிறது.

* ஒருவருக்கு எடை கூடிவிட்டது என்றால், அதை போக்க கலோரியை “எரிக்க” வேண்டும். உடற் பயிற்சி, ட்ரெட் மில், வாக்கிங் என்று வியர்வை சிந்தி தான் உடலில் “கொழுப்பாக தேங்கிய” கலோரியை எரிக்க முடியும்.

* ஒருவர் ஒரு பவுண்ட் எடையை குறைத்துள்ளார் என்றால், 3500 கலோரியை எரித்து இருக்கிறார் என்று அர்த்தம். உடற்பயிற்சியால், ஒரு வாரத்தில் இதை செய்ய முடியும்.

அதனால், உங்கள் உடல் இயக்கத்துக்கு தேவையான கலோரிகளை சீராக பராமரிக்க வேண்டும். அப்படி பராமரிக்க சீரான உணவுப் பழக்கங்கள் தேவை. அதிக கலோரி உள்ள உணவுகளாக சாப்பிட்டால், அதிக கலோரி சேர்ந்து, அதிக கொழுப்பு சேரும்.

அப்படி கொழுப்பு சேர்ந்தால், அப்புறம் கேட்கவே வேண்டாமே, ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி என்று தொடருமே.

எந்த ஜூசில் அதிக கலோரி?

காபி, டீ, ஜூஸ் சாப்பிடுவதில் தவறே இல்லை. ஆனால், அடிக்கடி அதிக கலோரி உள்ள ஜூஸ் சாப்பிடுவதும் கூடாது. அதுவும், எடை கூடிவிட்டது என்று தெரிந்தும், அதிக கலோரி உள்ள பானங்களை விழுங்கினால், அப்புறம் கொழுப்பு குவிந்துவிடும்.

ஆப்பிள் ஜூஸ் – 55

திராட்சை ஜூஸ் – 55

மாம்பழ ஜூஸ் – 58

ஆரஞ்சு ஜூஸ் – 44

பைனாப்பிள் ஜூஸ் – 52

கரும்பு ஜூஸ் – 36

தக்காளி ஜூஸ் – 17

தேங்காய் பால் – 76

இளநீர் – 24

காபி (ஒரு கப்) – 98

டீ (ஒரு கப்) – 79

கோக்கோ (ஒரு கப்) – 213

பசும்பால் – 65

ஸ்கிம் மில்க் – 35

தயிர் – 51

“ப்ரைடு” உணவுகளா? “டீன்” பெண்ணே உஷார் நீங்கள் ஆணா, பெண்ணா, டீன் ஏஜா, அடிக்கடி “ப்ரைடு” அயிட்டங்கள் வெளுத்துக்கட்டுவீர்களா? ஆண்களாக இருந்தால், அவர்களுக்கு ஐம்பதை தாண்டியவுடன் சர்க்கரை, ரத்த அழுத்தம் என்று தான் வரும். ஆனால் பெண்களுக்கு, அவர்கள் திருமணத்துக்கு பின்னர் “வேலையை” காட்டிவிடுமாம்.

இதை அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழக பொதுசுகாதார ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர்.

அவர்கள் சொல்லும் சில எச்சரிக்கை தகவல்கள்:

* சில “ப்ரைடு” உணவு வகைகளில் அதிக கொழுப்பு உள்ளது. இது ஆரோக்கியமற்ற கொழுப்பு. ஆண்களை விட பெண்களை தான் அதிகம் பாதிக்கும்.

* இதை “டிரான்ஸ் ஃபேட்” என்பர். ப்ரைடு ரைஸ் (Fried rice) , ப்ரைடு சிக்கன் (Fried chicken), குக்கீஸ், பாஸ்ட்சுஸ் போன்றவற்றில் இருக்கும். இது ரத்த நாளங்களில் பதிந்து சுருக்கிவிடும்.

* கருப்பை தொடர்பான மலட்டுத் தன்மையை இந்த “ப்ரைடு” உணவுகளால் ஏற்படும் “டிரான்ஸ் பேட்” எனப்படும் கொழுப்பு அதிகரிக்கும்.

* வெறும் இரண்டு சதவீதம் அளவுக்கு இந்த கொழுப்பு சேர்ந்தால் போதும், அதனால் இரண்டு மடங்கு மலட்டுத் தன்மை பாதிப்பு வரும்.

உழைப்புக்கு ஏற்றவாறு கலோரிகள் தேவை:

மனிதன் செய்யும் செயலுக்கு ஏற்றவாறு கலோரிகள் எரிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, ஒரு குடும்பப் பெண் பாத்திரம் துலக்குவது, துணி துவைப்பது என ஒரு மணி நேரம் வீட்டு வேலைகளைச் செய்தால், 120 கலோரி செலவாகும். ஆனால், ஒரு ஆண் ஒரு மணி நேரம் ரன்னிங் செல்லும்போது, 470 கலோரிகள் செலவாகும். அலுவலக வேலை, கடினமான வேலை என பல விதமான வேலைகளைச் செய்துவருகிறோம். இதில், ஆணுக்கும் பெண்ணுக்கும் தேவைப்படும் கலோரிகளின் அளவு வித்தியாசப்படும். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலைப் பார்க்கவும். கவனம்: அவரவர் வேலை அளவுக்கும் உடல் எடைக்கும் ஏற்றவாறு உணவை உட்கொள்ள வேண்டும். இது ஒரு சராசரி  மனிதனுக்குத் தேவைப்படும் கலோரிகளின் அளவு.

எந்த வயதில் எவ்வளவு கலோரி தேவை...

வயதுக்கு ஏற்றவாறு உணவு தேவைப்படும். உதாரணத்துக்கு 3 அல்லது 4 வயது என்றால் ஒரு தோசை சாப்பிடுவார்கள். அதுவே ஏழு வயது இருப்பவர்களுக்கு இரன்டு தோசை தேவைப்படும். இப்படி வளர்ச்சிக்கு ஏற்றவாறு உணவின் அளவு மாறுபடும். குறிப்பாக 14 வயது முதல் வளர்ச்சி நிலை என்பதால், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுவகைகளைச் சாப்பிடுவது நல்லது. எந்த வயதில் எவ்வளவு கலோரிகள் தேவை என்று பட்டியலைப் பார்க்கவும்.
நன்றி விகடன்.. 

செவ்வாய், 27 மார்ச், 2018

எட்டு போடுகிறவனுக்கு நோய்..எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி...!


எட்டு போடுகிறவனுக்கு  நோய்..எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி...!

மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும்..

*உங்கள் வீட்டின் உள்ளோயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து,*
 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் செவ்வக கோடு இட்டு  அதற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள்...!
*"...இது தெற்கு வடக்காக நீளப் பகுதி இருக்கணும்..."*

காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த *8* வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள்...!

*ஆண்கள் வலது கை பக்கம் பெண்கள் இடது கை பக்கமும் நடக்க ஆரம்பிக்கணும்.*

ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து *21 நிமிடம்* நடக்கணும் .

பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று  இதேபோல் *21 நிமிடம்* கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில்
நடை பயிற்சி செய்யணும்,  *42 நிமிடம்*.

*1.* பயிற்சி தொடங்கிய அன்றமார்பு சளி
கரைந்து வெளியேறுவதை காணலாம்.
*2.* இந்த பயிற்சியை இருவேளை
செய்துவந்தால், உள்ளங்கை கை விரல்கள்
சிவந்திருப்பதை காணலாம். அதாவது
ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று
அர்த்தம்.
*3.* நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை
வியாதி) குறைந்து முற்றிலும்
குணமாகும். (பின்னர் மாத்திரை,
மருந்துகள் தேவை இல்லை).
*4.* குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி,
மலச்சிக்கல் போன்றவை தீரும்.
*5.* கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.
*6.* கேட்கும் திறன் அதிகரிக்கும்.
*7.* உடல் சக்தி பெருகும்- ஆதார சக்கரங்கள் சரியாக செயல்படும்.
*8.* குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்.
*9.* ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில் வரும்.
*10.* பாத வலி, மூட்டுவலி மறையும்.
*11.* சுவாசம் சீராகும் அதனால் உள் உருப்புக்கள் பலம் பெரும்...!
*"8"* வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது
நீங்களே உணர்வீர்கள்...!

அந்தவடிவம்
"முடிவில்லாதது" மட்டுமல்ல, நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சம
நிலை படுத்துகிறது என்பதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்தனர் சித்தர்கள்.

விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து
பலனடையுங்கள்...!

நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் இந்த *8 வடிவ நடை* பயிற்சி செய்யலாம்,

*1வது 21 நாளில் -* சர்க்கரை நோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல், குதிவாதம், வடகலை நாடி- இடகலை நாடி புத்துயிர் பெரும்...!

*2 வது 21 நாளில் -*
மூட்டு வலி, ஒட்டுக்கால், பிரச்னை குறையும்...!

*3 வது 21 நாளில் -*
தொடை பகுதி பலம் பெரும்...!

*4 வது 21 நாளில் -* ஆண்மை குறைபாடு, விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு, விந்து நாத அணு குறை பாடு, கல்லீரல் மண்ணீரல் குறைபாடு, கர்ப்ப பை குறைபாடு குழந்தை பேறின்மை, மாதநாள் குறைபாடு, ஆண் பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும் ...!

*5 வது 21 நாளில் -* வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும்...!

*6 வது 21 நாளில் -* இரத்த அழுத்தம், இதய நோய் , ஆஷ்துமா , காசம், நீர் உடம்பு, உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும்...!

*7 வது 21 நாளில் -* தொண்டை பகுதி பிரச்சனைகள், அடிக்கடி கழுத்து பிடிப்பு, முதுகில் வாய் பிடிப்பு வராது...!

*8 வது 21 நாளில் -* அன்னாக்கு பகுதி விழிப்படையும், வாய் கண் காது  கருவிகள் நோய் தன்மை தாக்காது, 2 நாசியிலும் சுவாசம் ஒரே நேரத்தில் ஓடும், மூளைப் பகுதி விழிப்படையும், மூளைப் பகுதி நோய் தீரும்...!

இதை செய்ய வயது வரம்பு இல்லை,  இப்பயிற்சி
*"வாசி யோக"த்திற்கு இணையானது,*
இந்த 8 நிலைகளில் உங்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து உயிர்,  மனம் உடல் ஒன்றாகி காலன் தள்ளி நிர்ப்பான்...,
மெளனமாக நடக்கணும் அல்லது ஏதாவது இறை நாமத்தை மனதில் செபித்தவாறு நடக்கணும் , வாய் வழியாக சுவாசம் கூடாது...!

இயற்கையின் உணவுகளே இல்லற இன்பத்தை முழுமையாக பெறச் செய்யும் , இல்லற இன்பத்துக்கு முழுமையான மருந்து இதோ உங்களுக்காக!

இயற்கையின் உணவுகளே இல்லற இன்பத்தை முழுமையாக பெறச் செய்யும் , இல்லற இன்பத்துக்கு முழுமையான மருந்து இதோ உங்களுக்காக!

இன்றைய காலம் போலவே இளைஞர்களின் செயல்பாடுகளும் வேகம்... வேகம்... என்று பறக்கிறது. ஆனால் விவேகம் இல்லாத வேகம் வினையில்தான் போய் முடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

இயற்கையின் அபரிமிதமான சக்திகள் நமக்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் வழங்கும். குறிப்பாக இயற்கையில் உள்ள மூலிகைகள் மற்றும் உணவுகளே நம் உடலின் ஆற்றலுக்கு தேவையான சக்திகளை அளிக்கிறது. ஆனால் இதை இக்கால இளைஞர்கள் உணர்வதில்லை.

காலமும் பாஸ்ட் ஆக உள்ளது. அதற்கு தகுந்தார் போல் இளைஞர்களும் இல்லற இன்பத்திற்காக மருந்து, மாத்திரைகள் போன்றவற்றை உட்கொள்கின்றனர். ஆனால் அதில் உள்ள ரசாயன கலப்புகள் எந்தளவிற்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்வதில்லை.

இல்லற இன்பம் என்பது அவசரத்தில் தெளிக்கப்பட்ட கோலமில்லை. இயற்கையின் உணவுகளே இல்லற இன்பத்தை முழுமையாக பெறச் செய்யும். ஆனால் அதை தாண்டி ரசாயனப் பொருட்கள் கலக்கப்பட்ட மருந்துகள் பின்விளைவுகளையே ஏற்படுத்துகின்றன.

இயற்கை மூலிகைகள் மற்றும் உணவுகளின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவைகள் கூடுதலாக கிடைப்பதுடன் விட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் அபரிமிதமாக கிடைக்கிறது என்பதை உணருங்கள். இல்லற இன்பத்தை முழுமையாக உணர்ந்து கொள்ளுங்கள். Thanks Vivegam News

தேவையான ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு : 8838078388

ஆண்மை குறைவா ? இந்த “பூ” மட்டும் போதும்....செண்பகப்பூக்கள்

ஆண்மை குறைவா ? இந்த “பூ” மட்டும் போதும்....செண்பகப்பூக்கள்


ஆண்மை குறைவா ? இந்த “பூ” மட்டும் போதும்....

செண்பக மரம் பற்றி நமக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். இந்த மரம் மேற்கு தொடர்ச்சி  மலைப்பகுதியில் தானாகவே வளரக்கூடியது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இந்த மரத்தை பார்க்க முடியும். குறிப்பாக கோவில்கள் மற்றும் அழகுக்காக ஒரு சில வீடுகளில் கூட இந்த மரத்தை வளர்ப்பது உண்டு.
செண்பக மரத்தின் இலைகள் நன்கு நீண்டு மேல்நோக்கி வளரக்கூடியவை.. இலைகள் பசுமையாக இருக்கும். இந்த மரத்தில் கிடைக்கும் செண்பகப்பூ- வின் மனம் காற்றோடு கலந்து சுற்றுப்புறத்தை நன்கு தூய்மையாக வைத்துக்  கொள்ளும்
செண்பகப்பூக்கள்
இந்த மரத்தின் மூலமாக கிடைக்கக்கூடிய இலை, பூ, விதை, வேர். பட்டை  என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது.
இலைகள் தண்ணீரில் போட்டு குடித்து வருதல் - வயிற்றுக்கோளாறு நீங்கும்
தூக்கமின்மை மற்றும் மன உளைச்சலுக்கு எளிய மருந்துகளை இந்த மலர் கொண்டு தயாரிக்கலாம்
உயர் ரத்த அழுத்தம் குறையும்
இரண்டு செண்பக இலைகளை கொண்டு , அத்துடன் சிறிதளவு கசகசா , அரை டீஸ்பூன் பனங்கற்கண்டு போன்றவற்றை சேர்த்துஅரைத்து,சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதனுடன் சிறிதளவு பால் சேர்த்து வடிக்கட்டி குடித்து வந்தால், உயர் ரத்த அழுத்தம் குறைந்து சீராக இருக்கும். வயிற்றுப்புண்ணும் சரியாகும். ஆண்மை குறைவு நீங்கும். Thanks Neelam