வெள்ளி, 31 மார்ச், 2017

ஏப்ரல் 1 அறிவாளிகள் தினம் ஓர்ஆய்வு*



ஏப்ரல் 1 அறிவாளிகள் தினம் ஓர்ஆய்வு*

சர்வதேச ரீதியில் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், தொழிளாலர்கள் தினம் என்று மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய தினங்களுக்கு உரிமை கொண்டாடுவதைப் போல இத்தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாகச் சொல்லிக்கொள்ள எவரும் முன் வருவதில்லை.

அதே நேரம் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளாமல் அடுத்தவரை முட்டாளாக்க முனையும் முட்டாள்களான அறிவாளிகளின் தினம் என்றாலும் பிழையாகாது. அதுதான் இந்த ஏப்ரல் முதல் தேதியாகும்.

விஷயங்களை அறிந்து கொள்பவன் அறிஞன் ஆகின்றான் என்பார்கள். அதேபோல் ஒரு முட்டாள் ‘தான் ஒரு முட்டாள்’ என்பதை அறிந்து கொள்ளும்போது அவனும் ஒரு ‘அறிஞனாக’ வாய்ப்புக் கிட்டுகிறதா என்று எமக்கும் முட்டாள்தனமாக சிந்திக்க தோன்றுகிறது.

“The first of April is the day we remember what we are the other 364 days of the year ” – #Mark #Twain என்று நம்மைப்பற்றி முன்பே உரத்துச் சொல்லிவிட்டார். கற்றாரைக் கற்றாரே காமுறுவது போல் ஒரு முட்டாள் அவனை விடப் பெரிய முட்டாளை மெச்சுவான் என்றும் யாரோ ஒருவரும் கூறியுள்ளதாகவும் அறிகிறோம்.

“முட்டாள்கள் தினம்” ஏப்ரல் 1ம் தேதி உலகமெல்லாம் முட்டாள்களாக்கும் முயற்சி நடைபெறுகிற ஒரு முட்டாள் நாள். இது எவ்வாறு ஆரம்பமானது என்ற வினாவும் எம்முள் எழுகின்றது.
புராதான வரலாற்றில் ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1ம் தேதி தான் வசந்தம் ஆரம்பிக்கும் பொன்னாளாகும். புராதான வரலாற்றில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.

ஹார்வி என்னும் வரலாற்றாய்வாளர் தனது குறிப்பில், ” பிரான்ஸ் தேசத்தின் அரசன் ஒன்பதாம் சார்லஸ் காலத்தில் மார்ச் மாதம் 25ம் தேதியிலிருந்து ஒருவார கால புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளார். திருவிழாவைப்போல் நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களின்போது ஒருவருக்கொருவர் பரிசுப் பொருள்களையும், அன்பளிப்புகளையும் வழங்கி தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒருவாரக் கொண்டாட்டத்தின் இறுதி நாளான ஏப்ரல் ஒன்றாம் தேதி பெரு விருந்துடன் புத்தாண்டு விழா நிறைவெய்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரகரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்று தான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.

1562ம் ஆண்டில் போப் கிரகரி புதிய ஆண்டுத் துவக்கத்தை நடைமுறைப்படுத்தும்படி அறிவித்தார். ஆண்டுத் துவக்க நாளாக ஜனவரி 1ம் தேதியை அறிமுகம் செய்து வைத்தார்.
இனி மேல் பிரான்ஸ் தேசம் முழுமையும் இந்த நாட்காட்டி தான் என்று ஊர்தோறும் அறிவிக்கப்பட்டது.

இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லது போப்பின் அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1ம் தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர்.

இந்தப் “புதிய” புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. அதற்குக் காரணங்கள் பல உண்டு. அன்றைய கால கட்டத்தில் இது போன்ற செய்திகள் அல்லது மாற்றங்கள் சகலரையும் சென்றடைவதற்குரிய தகுந்த சாதனங்கள் இருக்கவில்லை. அத்தோடு பழைய வழக்கத்தைப் புறம் தள்ளி புதிய வழக்கத்தை ஏற்றுக் கொள்வதையும் இம்மக்கள் மறுத்திருக்கலாம்.

 ஆகவே இம்மக்கள் தொடர்ந்தும் ஏப்ரல் மாதம் முதலாம் தேதியையே தமது புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடி வந்தார்கள்.
எவ்வாராயினும் பிரான்ஸ் 1582ம் ஆண்டிலும் ஸ்காட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டன.
புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைத்தார்கள். இதிலிருந்து ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
என்றாலும் 1582ம் ஆண்டுக்கு முன்பே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம் ஆண்டுக் காலப் பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.
1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.
ரோமாபுரியில் கிறிஸ்தவர்கள் அதிகாரத்திற்கு வந்தபோது, நடைமுறைகளை மாற்றினார்கள். தற்போதுள்ள ஈஸ்ட்டர் பண்டிகையினையும் மாற்றி அறிவித்தார்கள். பழமையான கொண்டாட்டங்களை மாற்றியதோடு அவற்றில் ஒரு சிலவற்றை வேடிக்கை, வினோத கொண்டாட்டங்களுக்குரிய நாளாக மாற்றினர்.
இந்த மாற்றங்களில் நம்பிக்கை இல்லாமலிருந்த இவர்களை கேலியும் கிண்டலும் செய்து விளையாட்டாக முட்டாளாக்கி ஏமாற்றும் போக்கில் ஈடுபட்டனர்.

இதுவே நாம் இன்றைக்கு வேடிக்கையாய் முட்டாள்களாக்கி மகிழ்கிற நாளாக தொடர்ந்திடுகிறது எனலாம். ஜனவரி மாதம் 1ம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர். பெரிய பரிசுக்கூடைகள் போன்று வடிவமைத்து உள்ளே குதிரை முடி, பழைய குப்பை என்று நிரப்பிக் கொடுத்து ஏமாற்றுதல் போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து ஏமாற வைத்தனர்.

இதை நம்பும்படியான ஆனால் நகைக்கும்படியான செயலாக செய்து மகிழ்ந்தனர். முதலாம் நெப்போலியன் ஆஸ்திரியாவைச் சேர்ந்த மேரி லூயிஸை 1810ல் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் ஏப்ரல் 1ம் தேதி திருமணம் செய்து கொண்டதால் மணமகளை கேலி செய்து இருக்கின்றனர். நெப்போலியன் உண்மையாகத் திருமணம் செய்யவில்லை. உன்னை முட்டாளாக்கவே திருமணம் செய்திருக்கிறார் என்று எள்ளி நகையாடியதாகக் கூறப்படுகிறது.
ஏப்ரல் முதல் நாளை, “Poission d’avril ” என்று அழைத்துள்ளனர். இத்தகைய கேலிக்கூத்துக்கள் சுற்றிச் சுழன்று பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் ஏப்ரல் ஃபூல் விரிந்து பரவி இருக்கிறது. இது குறித்து சிகாகோவில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டீவன் பேன்னிங் ஐரோப்பாவில் எப்படி எல்லாம் நடந்தது என்று விலாவாரியாகக் குறிப்பிட்டுள்ளார்.
கிரகரியன் காலண்டரை ஏற்றுக்கொண்ட முதல் நாடாக பிரான்ஸ் இருந்தாலும் இத்தகைய கேளிக்கைகளின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கப் போதுமான ஆதாரக் குறிப்புகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்காட்லாந்தில் April Fool’s Dayயை April Gawk என்று கடைப்பிடித்ததாக பேராசிரியர் ஸ்டீவன் தெரிவித்துள்ளார். அதாவது ஏப்ரல் 1ம் தேதி வினோதமாக உடையுடுத்தி ரெண்டுங்கெட்டானாக நடந்து கொண்டு ஸ்காட்டிஷ் மக்கள் அந்த நாளை கொண்டாடியதாக மேலும் தெரிவித்தார்.
ஒரு பொய்யை உண்மை என்று நம்ப வைப்பது, ஒரு கடிதத்தில் அவசரம் என்று மேலே எழுதி உள்ளே முட்டாள்,

“இன்று ஏப்ரல் ஃபூல் தினம் தெரியுமா? அது வேறு யாருமில்லை நீதான்”, இப்படி எழுதி அனுப்புவதை வழக்கமாகச் செய்திருக்கின்றனர்.
பிரெஞ்சுக் குழந்தைகள்கூட காகிதத்தில் மீன் போன்று செய்து தனது சினேகிதர்களின் முதுகில் ஒட்டி அனுப்பிக் கேலி செய்திருக்கின்றனர். இப்படி முதுகில் மீனோடு திரிகிற குழந்தைகளைப் பார்க்கும் குழந்தைகள் “ஏப்ரல் மீன்” என்று அழைத்துக் கேலி செய்திருந்திருக்கின்றனர்.

1986ல் ப்ரெட் வால்டன் இயக்கிய, “ஏப்ரல் ஃபூல்ஸ் டே” திரைப்படம் மிகப் பிரபலமானது. டெபோரா போர்மேன், ஜேய் பேக்கர், டெபோரா குட்ரிச் நடித்திருந்தனர். பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தார் பிரம்மாண்டமாக தயாரித்திருந்த இப்படம் ஒளி நாடாக்களிலும் வீர நடை போட்டு வந்ததை குறிப்பாகச் சொல்லலாம்.
ஏப்ரல் முதல் தேதி பல வேடிக்கைகள் மட்டுமல்லாது பல வினைகளும் வந்துள்ளன.

அத்தோடு பல மூட நம்பிக்கைகளையும் இந்த ஏப்ரல் முதல் தேதி மக்களுக்கு வழங்கியிருக்கின்றது.
அல்லது மக்களே தங்களுக்கு வழங்கி இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்!.

மூக்குத்தி அணிவது ஏன்..?!


மூக்குத்தி அணிவது ஏன்..?!

மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை,காற்றை வெளியேற்றுவதற்கு.

கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.

ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள்.

இதற்கு காரணம் இடதுகாலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனைஎல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும்.

அதேமாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி. நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி இருக்கிறது.

நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன.இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது.

இப்படிஇந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாகசெயல் படவைக்கும்.

இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்யவைக்கிறோம். அதனால்வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும்.

இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வுபோல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ளமூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ளவெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.

ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய வாழ்க்கை முறை அவசயம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உறுவாக்குவோம்.....!





மூக்குத்தி இடது புறம் அணிவதற்கு காரணம் உண்டு



மூக்குத்தி பெண்களுக்கு மட்டுமே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட ஒரு அணிகலன். மூக்குத்தி அணிந்திருக்கும் பெண்கள் இயற்கையாகவே அம்சமாக காட்சியளிப்பர். தற்பொழுது சில பெண்கள் முக்குத்தி அணிவது இல்லை. ஆனால் மூக்குத்தி அணிவதற்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் உண்டு.
ஆண்களுக்கு வலது பக்கமும், பெண்களுக்கு இடது பக்கமும் பலம் வாய்ந்தவை. இதனால்தான் சிலர் ஜாதகம் பார்க்கும் போது ஆண்களின் வலது கையையும் பெண்களின் இடது கையையும் பார்த்து ஜாதகம் சொல்வர்.
மேலும் இந்த ஆண் பெண் பலத்தை உணர்த்தவே சிவனின் அர்த்தநாரீஸ்வரர் தோற்றம் உள்ளது. இந்தக் கோலத்தில் சிவன் வலது பக்கமும் சக்தி இடது புறமும் காட்சி தருவர்.
நம் மூலையில் இருக்கும் ஹிப்போதலாமஸ் (Hypothalamus) என்ற பகுதி உடலில் இருக்கு பல்வேறு செயல்பாடுகளை இயங்க வைக்கவும், கட்டுப்படுத்தவும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. குறிப்பாக ஹார்மோன் வெளிப்பாடு, வெப்பநிலை கட்டுப்பாடு, பசி, தாகம், தூக்கம், காமம் என உடலில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி மற்றும் மற்ற சுரப்பிகளுக்கு மூலமே இந்த ஹிப்போதலாமஸ்தான்.
இடது புறத்தில் மூக்குத்தி அணியும் போது பெண்களின் வலது புற சுவாசம் பலமாகிறது. இதனால் வலது பக்க மூலையின் செயல்பாடுகள் அதிகமாகி இந்த ஹிப்போதலாமஸ் சீராக இயக்க உதவுகிறது.
மேலும் நம்முடைய அன்றாட செயல்பாடுகள் பெரும்பாலானவை வலது புற மூலை இயக்கத்தையே அதிகம் பயன்படுத்துகின்றன. இதனால் வலது பக்க மூலை செயல்பாடுகளை அதிகரிக்க இந்த சுவாச மாற்றம் பெண்களுக்கு உதவுகிறது.
பருவப் பெண்கள் மட்டும்தான் மூக்குத்தி அணியும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தனர், இதற்கு காரணம் பருவம் எய்தவுடன் பெண்களின் நரம்பு மண்டலத்தில் கெட்ட வாயுக்கள் உருவாகின்றன. இந்த கெட்ட வாயு மூக்கு குத்துவதால் ஏற்படும் துவாரத்தின் வழி வெளியேற்றப்படுகின்றன.
தங்கத்திலான மூக்குத்தி அணிவதால் உடலில் இருக்கும் வெப்பத்தை இந்த தங்கம் கிரகித்து தன்னுள்ளே வைத்துக் கொள்ளும். இதனால் பெண்களின் உடல் வெப்பம் சீரடைகிறது. அதிக வெப்பத்தினால் ஏற்படும் உணர்ச்சி வெளிப்பாடுகளை இது தடுக்கிறது.
இவ்வாறு இடது புறம் மூக்குத்துவதால் பெண்களின் ஒற்றைத்தலைவலி, பார்வைக் கோளாறு, சளி தொல்லை. மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள் நீங்குகின்றன. இடது பக்கம் மூக்குத்துவதால் வலது புற சுவாசம் சீராகுகிறது. இதனால் பெண்களின் சிந்தனா சக்தி மற்றும் மன ஒரு நிலைப்படுகிறது.
ஆக பெண்களே நீங்கள் இடது புறம் மூக்குத்தி அணிவதுதான் சிறப்பு. ஒரு வேளை வலது புறம் முக்குத்தியிருந்தால், இடது புறத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்! உங்களின் உடல் ஆரோக்கியம் தான் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

புதிய ஐந்து நிலங்கள்




புதிய ஐந்து நிலங்கள்

மலையும்
மலைசார்ந்த இடம்
குறிஞ்சி அல்ல!
#குவாரி...

காடுகளும்
காடுசார்ந்த இடம்
முல்லை அல்ல!
#தொழிற்சாலைகள்...

வயலும்
வயல்சார்ந்த இடம்
மருதம் அல்ல!
#ப்ளாட்டுகள்...

கடலும்
கடல்சார்ந்த இடம்
நெய்தல் அல்ல!
#அமிலக்கழிவுகள்.....

மணலும்
மணல்சார்ந்த இடம்
பாலை அல்ல!
#லாரிகள்....

பிரியமான அன்பு மகள்




பிரியமான அன்பு மகள்

மம்மி  என் கல்யாணத்திற்கு  ஒரே ஒரு நெக்லஸ்  ஒரேயொரு வளையல்  ஒரேயொரு மோதிரம்  ஒரேயொரு காதணி ற மட்டும் போதும் வேரற  எதுவும்  வேண்டாம் உங்களுக்கு  தொந்தரவு  கொடுக்க  விரும்பவில்லை அப்பாவுக்கு  கஷ்டம்  கொடுக்க  மாட்டேன்  பிரியமான அன்பு மகள்..

வியாழன், 30 மார்ச், 2017

தமிழக அரசியல் கட்சிகள்



தமிழக அரசியல் கட்சிகள்


 S.No. Party Name
1 Ahila India Naadalum Makkal Katchi
2 All India Anna Dravida Munnetra Kazhagam‎
3 All India Educated Unemployed Youth Party
4 All India Ezhai Makkal Munnetra Kazhagam
5 All India Forward Bloc (Subhasist)
6 All India Latchiya Dravida Munnetra Kazhagam
7 All India Makkal Munnetra Kazhagam
8 All India Moovendar Munnani Kazhagam
9 All India Muslim League (2002)
10 All India Samathuva Makkal Katchi
11 Ambedkar Makkal Iyakkam
12 Ambedkar Makkal Katchi
13 Anaithinthiya Thamizhaga Munnetra Kazhagam
14 Aravinda Bala Pajanor
15 Bharatiya Forward Bloc
16 Commonweal Party
17 Congress Jananayaka Peravai
18 Dalit Makkal Munnetra Kazhagam
19 Democratic Forward Bloc
20 Desiya Murpokku Dravida Kazhagam
21 Desiya Murpokku Dravida Kazhagam‎
22 Dhiravida Thelugar Munnetra Kazhagam
23 Dravida Munnetra Kazhagam‎
24 Dravida Telugar Munnetra Kazhagam
25 Dravida Vizhipunarchi Kazhagam
26 Dravidian parties
27 Dravidian political parties‎
28 Hindu Makkal Katchi
29 Indhiya Jananayaga Katchi
30 Indian Christian Front
31 Indian National Democratic Congress
32 Indian Uzhavar Uzhaippalar Katchi
33 Kamarajar Adithanar Kazhagam
34 Kamarajar Deseeya Congress
35 Kongunadu Makkal Katchi
36 Kongunadu Munnetra Kazhagam
37 Makkal Manadu Katchi
38 Makkal Tamil Desam Katchi
39 Makkal Vizhippunarvu Iyakkam
40 Manithaneya Makkal Katchi
41 Marumalarchi Dravida Munnetra Kazhagam
42 Marxist Periarist Communist Party
43 MGR Anna Dravida Munnetra Kazhagam
44 MGR Kazhagam
45 MGR Makkal Munnetra Kazhagam
46 MGR-SSR Latchiya Dravida Munnetra Kazhagam
47 Moovendar Munnetra Kazhagam
48 National Forward Bloc
49 Pasumpon Forward Bloc
50 Pattali Makkal Katchi
51 Periyar Dravidar Kazhagam
52 Perunthalaivar Makkal Katchi
53 Puthiya Needhi Katchi
54 Puthiya Tamilagam
55 Revolutionary Forward Bloc
56 State political parties in Tamil Nadu‎
57 Tamil Arasu Kazhagam
58 Tamil Desiyak Katchi
59 Tamil Maanila Congress
60 Tamil Maanila Kamraj Congress
61 Tamil Nadu Forward Bloc
62 Tamil Nadu Makkal Congress
63 Tamil Nadu Muslim Munnetra Kazagham
64 Tamil Nadu Peasants and Workers Party
65 Tamil National Party
66 Tamilnadu Toilers' Party
67 Tamizhaga Dravida Makkal Katchi
68 Tamizhaga Janata Party
69 Tamizhaga Makkal Munnetra Kazhagam
70 Tamizhaga Munnetra Kazhagam
71 Thamilar Bhoomi
72 Thamizhaga Munnetra Munnani
73 Thayaga Marumalarchi Kazhagam
74 Thazhthapattor Munnetra Kazhagam
75 Thondar Congress
76 Uzhavar Uzhaippalar Katchi
77 Viduthalai Chiruthaigal Katchi
78 Vivasayi Anbhu Katchi


மழை பற்றிய சகுனங்கள்...



மழை பற்றிய சகுனங்கள்...
----------------------------------------
கீழ்கண்ட சகுனங்கள் தோன்றினால் மழை வரும்.

1. தும்பி பறந்தால் தூரத்தில் மழை
2. தட்டான் தாழப் பறந்தால் மழை
3. அந்தி ஈசல் அடை மழை
4. எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை.
5. தவளை கத்தினால் மழை
6. மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை
7. கொக்கு மேடேறினால் மழை
8. பகற்பொழுதில் சேவல் கூவி வானத்தைப் பார்த்தால் மழை
9. கழுதை காதை உயர்த்தினால் மழை
10. ஈசல் பறந்தால் மழை
11. புற்றிலே ஈசல் பறந்தாலும், மண்ணிலே கரையான் கூடினாலும் மழை
12. பாம்புகள் மரத்தில் ஏறினாலோ அல்லது திறந்த வெளியில் புணர்ச்சியில் ஈடுபட்டாலோ மழை
13. பசு மாடுகள் கன்றைத் தேடி வீட்டிற்கு ஓடினால் மழை.
14. பூனைகள் நிலத்தை பிராண்டினால் மழை
15. குழந்தைகள் அணைக்கட்டி விளையாடினால் மழை
16. மலைகள் நீல நிறமாக காட்சியளித்தால் மழை
17. குகைகள் பனிமூட்டத்தால் மறைக்கப்பட்டிருந்தால் மழை
18. ஓணான்கள் வானத்தைப் பார்த்தால், மரத்தில் ஏறி விளையாடினால் மழை
19. பூனை, எலி, பாம்பு முதலிய பிராணிகள் காரணமின்று அங்குமிங்கும் ஓடினால் மழை.
20. மயில்கள் நடனமாடினால் மழை
21. பசுக்கள் சூரியனையும் ,வானத்தையும் பார்த்தால் மழை
22. பச்சோந்திகள் மரத்தின் மீது அமர்ந்து தன் நிறத்தை மாற்றிக்கொண்டால் மழை
23. பசுக்கள் நிழலிடங்களை விட்டு நகர மறுத்தால் மழை
24. நாய்கள் வீட்டிற்கு வெளியே செல்ல மறுத்தால், வானத்தைப் பார்த்து குரைத்தால் மழை
25. சிட்டுக்குருவிகள் மண்ணில் புரண்டு விளையாடினால் மழை
26. மீன்கள் நீரில் துள்ளி விளையாடினால் மழை.
27. பறவைகள், மிருகங்கள் நுனிப்புல் உண்பதைக் கண்டால் மழை.
28. நீரின் சுவை மாறுதல், உப்பு நீர்த்துப் போதல், மோர் புளித்து போதல் நடந்தால் மழை.
29. இரும்பு பொருட்களிலிருந்து மாமிச வாடை வந்தால் மழை
30. சந்திரனை சுற்றி சிவப்பு நிற வளையம் காணப்பட்டால் அல்லது சந்திரனின் நிறம் கோழியின் கண் போன்று காணப்பட்டால் மழை.
31. வட கிழக்கில் மின்னல் தோன்றினால் மழை
32. மேகங்களால் மறைக்கப்பட்ட சந்திரனிலிருந்து பிரதி சந்திரன் தோன்றினால் மழை
33. இரவு நேரங்களில் இடி முழங்கினால், பகல் நேரத்தில் மின்னல் அடித்தால், கிழக்கு திசையிலிருந்து குளிர்ந்த காற்று வீசினால் மழை.

நம் இயற்கையை கண்டறிந்த இயற்கை ஞானிகளை போற்றுவோம்.

திராவிட கட்சிகள் 50 ஆண்டுகளில் ஒரு அணை கூட கட்டவில்லை என்று கூறி திரியும் கூட்டத்திற்கு இந்த பதிவு சமர்ப்பணம் ...



திராவிட கட்சிகள்   50 ஆண்டுகளில்  ஒரு அணை கூட கட்டவில்லை என்று கூறி திரியும்  கூட்டத்திற்கு இந்த பதிவு சமர்ப்பணம் ...


தமிழகத்தில்  கருணாநிதியே  அதிக அணைகள் கட்டியுள்ளார்.

தமிழகத்தில் மொத்தம் உள்ள அணைகள் - 115

சுதந்திரத்துக்கு முன் கட்டப்பட்டவை - 25

காங்கிரஸ் ஆட்சியில்(19 வருடங்கள்) கட்டப்பட்டவை - 25

திமுக ஆட்சியில்(21 வருடங்கள்) கட்டப்பட்ட அணைகள் - 36

அதிமுக ஆட்சியில்(25 வருடங்கள்) கட்டப்பட்ட அணைகள் - 29

ஆதாரம் - http://www.india-wris.nrsc.gov.in/wrpinfo/index.php?title=Dams_in_Tamil_Nadu

 திமுக  - அணைகள்

1 உப்பாறு(ஈரோடு) அணை

2 சிற்றாறு I அணை

3 மணிமுக்தனாதி  அணை

4 சோலையாறு  அணை

5 மேல் ஆழியாறு அணை

6 கீழ் கொடையாறு  அணை

7 சிற்றாறு II அணை

8 மேல் கொடையாறு அணை

9 கடான  அணை

10 பரப்பலாறு அணை

11 பொன்னணியாறு அணை

12 ராமநதி அணை

13 சின்னாறு அணை

14 கருப்பாநதி அணை

15 ஏறவங்கலாறு அணை

16 குண்டேரிப்பள்ளம் அணை

17 ஹைவேய்ஸ்  அணை

18 மணலாறு அணை

19 பாலாறு பொருந்தலாறு அணை

20 வரதமநதி அணை

21 வரட்டுப்பள்ளம் அணை

22 வட்டமலைக்கரை ஓடை அணை

23 வெண்ணிறாறு அணை

24 அனைக்குட்டம் அணை

25 குதிரையாறு  அணை

26 நொய்யல் அதுபாளையம் அணை

27 நொய்யல் ஒரத்துப்பாளையம் அணை

28 ராஜதோப்புகனாறு  அணை

29 பொய்கையாறு அணை

30 மொர்தனா அணை

31 சோத்துப்பாறை  அணை

32 அடைவினைநர்கோவில்  அணை

33 நங்காஞ்சியாறு  அணை

34 செண்பகத்தோப்பு அணை

35 இருக்கன்குடி  அணை

36 மாம்பழத்துறையாறு அணை

புதன், 29 மார்ச், 2017

வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் எளிய கிராமத்து வைத்தியம்.




வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் எளிய கிராமத்து வைத்தியம்.


வயிற்றுப் புழுக்கள் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனை. இந்த புழுக்கள் ஓர் ஒட்டுண்ணிகள்.

இந்த புழுக்கள் உணவுகள் மூலமாகவும், சுகாதாரமற்ற குடிநீரின் மூலமாகவும், உடலினுள் நுழையும். அதுமட்டுமின்றி நன்கு சமைக்காத உணவுகள் மூலமாகவும் இவை நுழையும்.

வயிற்றில் புழுக்கள் இருந்தால், அடிவயிற்றில் வலி, பசியின்மை, வயிற்றுப்போக்கு, மலப்புழையில் அரிப்பு, தூக்கமின்மை, குமட்டல், எடை குறைவு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

•• வெங்காய சாறு வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க வல்ல ஓர் சிறப்பான பொருள். அதற்கு வெங்காய சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகள் அழித்து வெளியேறிவிடும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம்.

•• மாதுளையின் தோலை உலர வைத்து, அரைத்து பொடி செய்து, அதில் சிறிது தேன் கலந்து உட்கொண்டு வர, வயிற்றில் உள்ள புழுக்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, அவை அழிந்து வெளியேறும். மேலும் பசியின்மையால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இது மிகவும் நல்ல மருந்து.

•• தினமும் பச்சை பூண்டை 3-4 உட்கொண்டு வர வேண்டும். இப்படி செய்வதால் வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும். ஆனால் பூண்டை பச்சையாக சாப்பிடவுடன் சற்று வெது வெதுப்பான தண்ணீரை குடிக்க வேண்டும்.

•• ஒரு டம்ளர் மோரில் 1 டேபிள் ஸ்பூன் பாகற்காய் சாற்றினை சேர்த்து கலந்து, அவ்வப்போது குடித்து வர, வயிற்றில் புழுக்கள் வளர்வதைத் தடுக்கலாம். இதனை வாரம் ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் நல்லது. குழந்தைகளின் வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும்.

•• எலுமிச்சையின் விதைகளை அரைத்து பேஸ்ட் செய்து, 1 டம்ளர் நீரில் கலந்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து கலந்து வாரம் ஒருமுறை குடித்து வர, குடல் புழுக்களை முற்றிலும் வெளியேற்றி, வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

ஒரு நிமிடத்தில் ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? அப்டின இத ஒரு கப் குடிங்க...



ஒரு நிமிடத்தில் ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? அப்டின இத ஒரு கப் குடிங்க...


ஒருவரது ஆரோக்கியத்தில் தூக்கம் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒருவர் போதுமான அளவில் தூக்கத்தை மேற்கொள்ளாவிட்டால், உடலில் ஆற்றல் குறைவதோடு, மெட்டபாலிசமும் பாதிக்கப்பட்டு, கொழுப்புக்கள் கரையாமல், எந்நேரமும் வயிற்று உப்புசத்துடன் இருக்கச் செய்யும்.

ஆனால் தற்போதைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையால் பலர் தூக்கம் கிடைக்கப் பெறாமல் அவஸ்தைப்படுகின்றனர். நீங்களும் அத்தகையவர்களுள் ஒருவரானால், இக்கட்டுரை உங்களுக்கு உதவியாக இருக்கும். ஏனெனில் இந்த கட்டுரையில் இரவில் உடனடி தூக்கத்தைப் பெற உதவும் ஓர் அற்புத பானம் கொடுக்கப்பட்டுள்ளது.

*பால் :*

பாலில் புரோட்டீன், அமினோ அமிலங்கள் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளது. இது தூக்கத்தைப் பெற உதவும் செரடோனின் மற்றும் மெலடோனின் போன்ற ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்ட உதவுகிறது.

*தேன் :*

தேன் இனிப்புச் சுவையைக் கொடுப்பதோடு, மூளையில் மெலடோனின் உற்பத்திக்கும் உதவுகிறது. இது தூக்கத்தைப் பெற உதவும் முக்கிய உணவுப் பொருட்களுள் ஒன்று.

*வென்னிலா எசன்ஸ் :*

பல ஆய்வுகளில் வென்னிலாவில் இருந்து வெளிவரும் வாசனை மனதை அமைதிப்படுத்த உதவி, இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது.

*செய்முறை :*

முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

பின் ஒரு டம்ளரில் அந்த பாலை ஊற்றி, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

*குடிக்கும் முறை :*

இந்த பானத்தை இரவில் படுக்கும் முன் குடிக்க வேண்டும். இதனால் படுக்கையில் படுத்த 1 நிமிடத்தில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறக்கூடும்.

ஆரோக்கியமாக வாழ...



ஆரோக்கியமாக வாழ...


ஆரோக்கியமாக வாழவீட்டில் எளிதாய் கிடைக்கும் உணவுப் பொருட்களை வைத்து ஆரோக்கியமாக வாழ பழகிக்கொள்ளுங்கள்.

கொண்டைக் கடலை சுண்டல் ஒரு கப் மற்றும் 100 கிராம் தேங்காய் சாப்பிட்டு வந்தால் துத்தநாக உப்பு பெற முடியும். இது நமது கை நகங்களையும், தோலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் பூசணிக்காயில் உள்ள விட்டமின் A புற்றுநோய் வராமல் 70 சதவீதம் பாதுகாப்பளிக்கிறது. சிறுநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்கும் வல்லமையும் பூசணிக்காய்க்கு உண்டு.

எளிதில் கிடைக்கும் பழ வகைகளில் ஒன்று வாழைப்பழம். மருத்துவ குணம் நிறைந்த பழமாக வாழைப்பழம் திகழ்கிறது.

ஆப்பிளில் உள்ளதை விட 4 மடங்கு காபோவைதரேற்று, 3 மடங்கு பொஸ்பரசும், 5 மடங்கு விட்டமின் A வும் மற்றும் இரும்புச் சத்தும் இதில் நிறைந்துள்ளன. இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் உப்பான பொட்டாஷியம் வாழைப்பழத்தில் ஏராளமாக அடங்கி உள்ளது. உடனடி உற்சாகத்தையும் பயனையும் தரக்கூடியது இப்பழம்.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்தி தொடர்ச்சியாக காய்ச்சலில் படுப்பதை தடுக்கும் ஆற்றல் வாழைப்பழத்திற்கு உண்டு. வாழைப்பழத்தில் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகையையும், பொட்டாசியம் ஸ்ட்ரோக்கையும் தவிர்க்கும் வல்லமை பெற்றுள்ளது.

வாழைப்பழம் ஞாபக சக்தி, மூளையின் சக்தி அதிகரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

கோடையை சமாளிக்க பானங்கள் மற்றும் தவிக்க வேண்டிய உணவுகள்...



கோடையை சமாளிக்க பானங்கள் மற்றும் தவிக்க வேண்டிய உணவுகள்...


கோடை காலம் தவிர்க்க முடியாதது; ஆனால், கோடை வெப்பத்தை நம்மால் தவிர்க்க இயலும். கோடை வந்துவிட்டாலே உடம்பில் அயர்ச்சியும், தண்ணீர் தாகமும் ஏற்படுவது இயற்கை.

இதுபோன்ற நேரங்களில் இளநீர், மோர், எலுமிச்சை சாறு, தர்ப்பூசணி சாறு போன்றவற்றை அருந்துவது மிகவும் நல்லது.

எந்த பழம் சாப்பிடுவதாக இருந்தாலும், சாறாக எடுத்துக் கொள்வதை விட, சுவைத்து சாப்பிட்டால், அதன் பலன் இரட்டிப்பாகும். கோடை காலத்தில் அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.

எலுமிச்சைப் பழமும், தேனும் அல்லது சர்க்கரை, உப்பும் கலந்து அருந்தினால் தாகம் அடங்கும். நுங்கு சாப்பிடலாம். சுத்தமான மோரில் உப்பு போட்டு, அதிக அளவு அருந்தலாம்.

கோடையில் தோல் நோய்கள், அரிப்பு, நமைச்சல், படை, சொறி, சிரங்கு போன்றவை அதிகமாக ஏற்படும்.

அச்சமயத்தில்,  குளிக்கும் போது, கடலை மாவு, பயத்தம் மாவு, முடிந்தால் சந்தனம், வெட்டிவேர் இவற்றைக் கலந்து பொடித்து, உடல்  முழுவதும் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

ஈரமான ஆடைகளை அணியக் கூடாது. உடல் ஈரத்துடனும், ஆடைகள் அணியக் கூடாது. கோடை காலத்தில் பருத்தி  ஆடைகளே சிறந்தது.

காலை, மாலை இரண்டு வேளைகளிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்து  தலை குளிப்பது நலம் பயக்கும்.

ஒருநாள் விட்டு ஒருநாள் இரவு வெந்தயத்தை மோரில் ஊற வைத்து, அரைத்து, மறுநாள் காலை தலைக்கு பூசி குளித்து  வந்தால், குளிர்ச்சியாக இருக்கும்.

இளநீர், மோர் சாப்பிட்டால் சிலருக்கு ஜலதோஷம் பிடிக்கும். அவ்வாறு இருப்பவர்கள், அவற்றுடன் சிறிது மிளகுத் தூளை  சேர்த்துக் கொண்டால் போதும். எலுமிச்சை சாற்றுடன் சர்க்கரைக்குப் பதிலாக தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

கோடையில் மஞ்சள் காமாலை நோய் மற்றும் அம்மை நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, மோருடன் கீழாநெல்லியை அரைத்து, கலந்து, காலை வேளையில், வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது.

இதேபோல், மூலநோய் உள்ளவர்களும் கோடை காலத்தில் மிகவும் சிரமப்படுவர். இவர்கள் மாங்காயில் உள்ள பருப்பை  அரைத்து, மோரில் கலந்து சாப்பிடலாம். அத்திப்பழம் நிறைய சாப்பிடுவது நல்ல பலனளிக்கும்.

முள்ளங்கி, காரட், பீட்ரூட், வெள்ளரிக்காய், வாழைத் தண்டு, வெள்ளைப் பூசணி, சவ்சவ், புடலங்காய், பீர்க்கங்காய் போன்ற  நீர்காய்களை சாலடாக மிளகுத் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிடலாம்.

கோடை காலங்களில் கனரக ஆலைகளில், வாகனங்களில் பணிபுரிவோருக்கு உடல் அதிக உஷ்ணம் அடைந்து, அநேக  பிரச்னைகள் ஏற்படும். இதற்கு சீரகம், வெந்தயம் இரண்டையும் சேர்த்து, பொடி செய்து வைத்துக் கொண்டு, மோரில் கலந்து  சாப்பிட்டால், உடல் குளிர்ச்சியடையும்.

காலையில் கம்பு, சோளம், ராகி கூழ் அல்லது கோதுமை, பார்லி ஆகிய கஞ்சி வகைகளை எடுத்துக் கொள்வது  ஆரோக்கியமானது.

தைராய்டுக்கான அறிகுறிகளும் - பாதுகாப்பு முறைகளும்.



தைராய்டுக்கான அறிகுறிகளும் - பாதுகாப்பு முறைகளும்.


தைராய்டுக்கான அறிகுறிகள் இருக்கும் போதே உடனடியாக சிகிச்சையை தொடங்குவது முக்கியம். இதன் மூலம் அடுத்து வரும் பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.

*பாதுகாப்பு முறை :*

•• தைராய்டு பிரச்சனை பரம்பரையாகவும் வரலாம். தாய்க்கு தைராய்டு பிரச்சனை இருந்தால் குழந்தைக்கும் தைராய்டு பிரச்சனை உள்ளதா என்பதை சிறுவயதிலேயே சோதித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

•• மேலும் பெண்கள் பூப்படையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, டென்ஷன், படபடப்பு போன்ற பிரச்சனைகள் தோன்றும். காரணமின்றி இந்த அறிகுறிகள் தென்பட்டால் தைராய்டு பிரச்சனை இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும்.

•• இது குறித்து பல பெண்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அறியாமையை தவிர்த்து, தைராய்டு அளவைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உடலில் உண்டாகும் மற்ற பிரச்சனைகளை சரி செய்ய முடியும்.

•• உடற்பயிற்சி மூலமும் இந்த தொல்லையை எதிர்கொள்ளலாம். வாக்கிங் செல்வது அவசியம். சத்தான உணவுகள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். அதே சமயத்தில் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளை ஒருபோதும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

•• உணவில் கல் உப்பு பயன்படுத்துவதன் மூலம் அயோடின் குறைபாட்டைத் தடுக்கலாம். சுடு தண்ணீரில் கல் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிப்பதன் மூலம் தொண்டையில் அயோடின் சேர வாய்ப்புள்ளது.

•• இது போன்ற நடைமுறைகளால் தைராய்டு பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளலாம்.

*டயட் :*

•• உடலில் அயோடின் அளவு குறைந்தாலோ, அதிகரித்தாலோ தைராய்டு பிரச்சனை ஏற்படும். டி3 மற்றும் டி4 டெஸ்ட் மூலம் ஹார்மோன் அளவைக் கண்டறியலாம்.

•• தைராய்டு அளவு குறைந்தால் கழுத்து வீக்கம், உடல் வளர்ச்சி குறைதல், மனவளர்ச்சிக் குறைபாடு, ஒல்லியாக இருத்தல் ஆகிய பிரச்சனைகள் தோன்றும்.

•• அயோடின் அளவு அதிகரித்தால் கர்ப்ப கால பிரச்சனைகள், குறைப்பிரசவம், குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு, குழந்தை பிறந்த உடன் இறத்தல், குழந்தை போதுமான வளர்ச்சியின்றி பிறத்தல், காது கேளாமை மற்றும் வாய் பேசாமை குறைபாட்டுடன் குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது.

•• தைராய்டு பிரச்சனையை பொறுத்தவரை மருந்து, உணவு இரண்டிலும் எப்போதும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். கடல் உப்பு சம்பந்தப்பட்ட பொருட்களை தைராய்டு அளவு குறைவாக உள்ளவர்கள் பயன்படுத்தலாம்.

•• தைராய்டு அளவு அதிகம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடிமிக்ஸ், முட்டைக் கோஸ், முள்ளங்கி, குளிர் பானங்கள் ஆகியவற்றையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

•• உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

•• கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும் போது தண்ணீரை வடித்து விட்டுப் பயன்படுத்தலாம். முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும்.

செவ்வாய், 28 மார்ச், 2017

உகாதி பண்டிகையின் சடங்குகளும்... மரபுகளும்.





உகாதி பண்டிகையின் சடங்குகளும்... மரபுகளும்..


டெக்கான் பகுதியை சேர்ந்த மக்கள் கொண்டாடும் வருட பிறப்பே உகாதியாகும்.

உகாதி என்பது 'யுகாதி' என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து உருவானது.

 'யுக்' என்றால் வயது என்றும் 'ஆதி' என்றால் ஆரம்பம் என்றும் பொருள் தரும்.

உகாதி என்பது ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் பகுதிகளில் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்து புராணத்தின் படி, இந்த நாளில் தான் தன் படைத்தல் வேலையை தொடங்கினாராம் பிரம்ம தேவன்.
அதனால் உகாதி பண்டிகையை தெற்கு இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

உகாதி என்பது இளவேனிற் கால வருகையை குறிக்கும் தினமாக விளங்குகிறது.

இக்காலத்தில் மரங்களில் பூக்களும் பழங்களும் மீண்டும் துளிர்வதால், புது வாழ்க்கையின் ஆரம்பத்தை இது குறிக்கும்.

மரபுகளின் படி, பண்டிகை நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே உகாதிக்கான ஏற்பாடுகள் தொடங்கி விடும்.

பண்டிகை தொடங்குவதற்கு முன்பாகவே வீட்டை துடைத்து சுத்தப்படுத்தும் சடங்கு முறையை பின்பற்ற வேண்டும்.


சுத்தப்படுத்துவதை தவிர வேறு சில சடங்குகளும், மரபுகளும் இருக்கின்றன. அதனைப் பற்றி பார்க்கலாமா?

உகாதி தினத்தன்று, உகாதி பச்சடி என்ற சிறப்பு உணவு செய்யப்படும். இதில் ஆறு வகை சுவை அடங்கியிருக்கும் -

இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு மற்றும் துவர்ப்பு.
இதனை தயாரிக்க இவைகள் பயன்படுத்தப்படும் - வெல்லம் (இனிப்பு) சந்தோஷத்தை குறிக்கும், உப்பு (உவர்ப்பு) வாழ்க்கையின் மீதான பற்றை குறிக்கும், வேப்பம் பூக்கள் (கசப்பு) வாழ்க்கையின் கஷ்டங்களை குறிக்கும், புளி (புளிப்பு) சவாலான தருணங்களை குறிக்கும், மாங்காய் துண்டுகள் (துவர்ப்பு) புதிய சவால்கள் மற்றும் ஆச்சரியங்களை குறிக்கும், கடைசியாக மிளகாய் பொடி (கார்ப்பு) கோபம் ஏற்படுத்தும் வாழ்க்கையின் தருணங்களை குறிக்கும்.

சந்தோஷமாக வாழ்ந்திட, வாழ்க்கையின் இந்த ஆறு கட்டத்தையும் மனிதர்கள் சமமாக பார்க்க வேண்டும் என்பதை குறிக்கவே இந்த பச்சடி.

பண்டிகையின் போது அனைவரும் விடியற்காலையில் குளித்து விடுவார்கள்.

அதன் பின் வீட்டின் முகப்பை மாவிலைகளால் அலங்கரிப்பார்கள்.

சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் புதல்வர்களுக்கான விநாயகருக்கும் முருகனுக்கும் மாம்பழம் என்றால் கொள்ளை பிரியம் என்று நம்பப்படுகிறது.

அதனால் மாவிலைகளை கட்டினால், நல்ல தானியங்களை அளித்து குடும்ப நலனை அவர்கள் காப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

சுற்றுச்சூழலை தூய்மையாக்க, நற்பதமான மாட்டின் சாணம் கலந்த நீரை கொண்டு வாசல் தெளிப்பார்கள்.

அதன் பின் ஒவ்வொரு வீட்டிலும் அழகிய ரங்கோலி கோலங்கள் போடப்படும்.

வீட்டினுள் உள்ள அனைவரின் வருங்காலத்தை கணிக்க, புகழ் பெற்ற இந்த மரபு பின்பற்றப்படுகிறது.

ஒரு ஜோதிடரை உகாதி தினத்தன்று வீட்டிற்கு வர வைத்து, அந்த வருடத்திற்கு குடும்ப உறுப்பினர்களின் நேரம் எப்படி இருக்கிறது என்பது கணிக்கப்படும்.

உகாதி தினத்தன்று இலக்கியம் சார்ந்த கூட்டங்களும் நடைபெறும்.

இதில் கவிதைகள் படித்து, இலக்கியம் சார்ந்த விவாதங்களும் நடைபெறும்.

மேலும் வந்திருக்கும் விருந்தாளிகளுக்கு, பல விதமான சுவைமிக்க சைவ உணவுகளை சமைத்து போடுவதும் ஒரு வழக்கமாகும்...


உட்கார்ந்தே இருந்தால் ஏற்படும் உபாதைகள்



உட்கார்ந்தே இருந்தால் ஏற்படும் உபாதைகள்


இன்றைக்கு கணினி முதல் பல்வேறு பணிகள் வரை உட்கார்ந்தே வேலை பார்ப்பவர்கள் அதிகம். சூழ்நிலை காரணமாக நாம் இப்படி வேலை பார்க்கிறோம் என்றாலும், இது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்.

உடலுக்கு தசை இயக்கம் நடக்கிற மாதிரி உழைப்பை கொடுத்துக்கொண்டே இருப்பதுதான் சரியான வாழ்க்கை முறை, அப்போதுதான் நீண்ட ஆரோக்கியத்தோடு வாழ முடியும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

ஒருவர் தொடர்ச்சியாக 3 மணி நேரம் உட்கார்ந்து கொண்டே இருந்தால் நிமிடத்துக்கு 1 கலோரி எரிய ஆரம்பிக்கும். அதோடு ரத்தக் குழாயும் சுருங்க ஆரம்பிக்கும். இதனால் நாளடைவில் டைப் 2 சர்க்கரை நோய் போன்ற தொந்தரவுகள் வரலாம்.

தொடர்ச்சியாய் பல மணி நேரம் உட்கார்ந்து வேலை செய்தால் கொழுப்பைக் கரைக்கும் நொதிகள் சுரப்பது குறையும். கெட்ட கொழுப்பு எரியாமல், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

உட்கார்ந்து வேலை செய்வது வருடக் கணக்கில் தொடர்ந்தால், எலும்பு வளர்ச்சி குறையவதோடு, அடர்த்தியும் குறையும்.

உடலில் இயக்கம் இல்லாதபோது போதிய ரத்தம் மூளைக்குச் செல்லாது. இதன் காரணமாக செல் வளர்ச்சி பாதிக்கப்படும். அதன் விளைவாக இளமையிலேயே முதிய தோற்றம் உண்டாகும் வாய்ப்பு அதிகம் ஏற்படும். சீரான ஹார்மோன் சுரப்பும் தடைப்படும்.

10 முதல் 20 வருடங்கள் தொடர்ச்சியாக அமர்ந்தே பணிபுரிவதால் இதய நோய்கள், பக்கவாதம் உள்பட பல உபாதைகள் உண்டாகலாம்.

எல்லாவற்றையும் விட கசப்பான உண்மை, நமது ஆயுட் காலம் குறையலாம்.

தொடர்ந்து அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர்களுக்குத்தான் 64 சதவீதம் இதய நோய்கள் உண்டாகின்றன. புராஸ்டேட் மற்றும் மார்பகப் புற்றுநோய், 30 சதவீதம் அளவுக்கு ஏற்படுகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நமக்கு அமையும் பணி, உட்கார்ந்து செய்யக்கூடியது என்றால், அதைத் தவிர்ப்பது கடினம்தான். அதை ஈடுகட்டும் வகையில் பிற உடற்பயிற்சிகள், உடல் உழைப்பு சார்ந்த வேலைகளை மற்ற நேரங்களில் செய்யுங்கள்.

நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!!!



நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!!!

இந்தியாவில் கோடைக்காலத்தில் தெருக்களில் விற்றுக் கொண்டு வரும் பழங்களில் ஒன்று தான் நுங்கு. இந்த நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற

நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக கோடையில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்துக்களை இது தன்னுள் அதிகம் உள்ளடக்கியுள்ளது. மேலும் உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளது.அதிலும் கோடையில் அதிகப்படியான வெப்பத்தினால் சின்னம்மை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அப்போது நுங்கு சாப்பிட்டால், சின்னம்மையினால் ஏற்படும் அரிப்புக்களை தடுத்து, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம். இதுப்போன்று நுங்குவில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன.

1.எடையை குறைக்கும் :

கோடையில் மிகவும் ஈஸியாக உடல் எடையைக் குறைக்கலாம். ஏனெனில் இக்காலத்தில் உடல் எடையை குறைக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். அதில் ஒன்று தான் நுங்கு சாப்பிடுவது. நுங்கு சாப்பிட்டால், அதில் உள்ள அதிகப்படியான தண்ணீரானது வயிற்றை நிரப்பி, அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும்.

2.மார்பக புற்றுநோய் :

நுங்குவில் ஆந்தோசையனின் என்னும் பைட்டோ கெமிக்கல் உள்ளது. இவை மார்பக புற்றுநோய் செல்கள் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கும் சக்தி கொண்டவை.

3.சின்னம்மை :

சின்னம்மை வராமல் தடுக்க வேண்டுமானாலும் சரி, வந்த சின்னம்மையை விரைவில் குணப்படுத்தவும் சரி, நுங்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

4.வெயிலால் ஏற்படும் மயக்கம் :

சிலருக்கு வெயிலில் செல்லும் போது அடிக்கடி மயக்கம் போடுவார்கள். அத்தகையவர்கள் நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, மயக்கம் ஏற்படுவது குறையும்.
 Aska Svn
5.கர்ப்ப காலம் :

கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

6.நீர்ச்சத்தை அதிகரிக்கும் :

நுங்குவில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே கோடையில் உடலில் வறட்சி ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், நுங்கு சாப்பிடுங்கள்.

7.வயிற்று பிரச்சனைகள் :

வயிற்றில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைப் போக்க வேண்டுமானால், நுங்கு சாப்பிடுங்கள்.

8.சோர்வு :

கோடையில் விரைவில் சோர்வடைந்துவிடுவோம். இத்தகைய சோர்வை நுங்கு சாப்பிட்டால் தடுத்துவிடலாம்.

9.செரிமான பிரச்சனைகள் :

செரிமான பிரச்சனை உள்ளவர்கள், நுங்கு சாப்பிட்டு வந்தால், அது செரிமான மண்டலத்தை சீராக செயல்பட வைத்து, செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.

10.மலச்சிக்கல் :

மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள், காலையில் வெறும் வயிற்றில் நுங்கு சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

11.கல்லீரல் பிரச்சனை :

கல்லீரலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நுங்கு பெரிமும் உதவியாக இருக்கும். ஏனெனில் இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.

12.உடலை குளிர்ச்சியாக்கும் :

கோடையில் உடலின் வெப்பமானது அதிகரிக்கும். இத்தகைய வெப்பத்தை நுங்கு சாப்பிடுவதன் மூலம் தணிக்க முடியும்.

13.வியர்குரு :

நுங்கு சாப்பிட்டால், உடல் வெப்பம் குறைந்து, உடலில் வந்துள்ள வியர்குரு போய்விடும்.

14.வெயில் கொப்பளம் :

கோடையில் பலருக்கு வெயில் கொப்பளம் வரும். இத்தகைய கொப்பளத்தை வராமல் தடுக்க, நுங்கு சாப்பிடுங்கள்.

15.குமட்டல் :

குமட்டல் உணர்வைத் தடுக்க எலுமிச்சை உதவவில்லை என்றால், நுங்கு சாப்பிடுங்கள். இது குமட்டலைத் தடுக்கும்.

16.ஆற்றலை அதிகரிக்கும் :

நுங்குவில் உள்ள சரியான கனிமச்சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும், உடலின் குளுக்கோஸ் அளவை சீராக வைத்து, உடலை சுறுசுறுப்புடன் வைத்துக் கொள்ள உதவிப்புரியும்.

திங்கள், 27 மார்ச், 2017

வாழ்கைத் தத்துவம்...



வாழ்கைத் தத்துவம்...
* வெற்றிக்கு போராடும்போது 'வீண்முயற்சி' என்பார்கள்.. வெற்றி அடைந்து விட்டாலோ 'விடாமுயற்சி' என்பார்கள்..
* சில நேரங்களில் தனிமை கடினம்.. சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்!..
* நீ சிரித்து பார்.. உன் முகம் உனக்கு பிடிக்கும்..!
மற்றவர்களை சிரிக்க வைத்து பார்.. உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்..
* ஆசை படுவதை மறந்து விடு.. ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே..
* மரணத்தை பற்றி கவலை படாதே.. நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை.. அது வரும்போது நீ இருக்கபோவதில்லை..
* மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.. ஆடம்பரம் என்பது நாம் தேடி கொள்ளும் வறுமை..
* வாழ்க்கை உன்னை எதிர்பாராத இடங்களுக்கு கூட்டிக்கொண்டு செல்லும்.. அன்புதான் உன்னை வீட்டுக்கு அழைத்து வரும்!
* புரியாததை புரிந்து கொள்ளுங்கள்.. புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.. வெற்றி நிச்சயம்!
* சந்தோஷம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட, நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உண்டாக்கு.. வாழ்க்கையில் நிறைவு கிடைக்கும்..
* வளர்ந்த பின் வளைவது பெருமை.. வளைந்தே இருப்பது சிறுமை..
* குறை சொல்வதற்கு இன்னொரு பெயர் பொறாமை !
* வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை..
* மரணபயம் வாழ்நாளை குறைத்து விடும்.
* தவறான மனிதர்களால் தன் வாழ்க்கையில் சரியான பாடத்தை கற்று தர முடியும்!..
* வாழ்க்கை என்பது ஒரு பயணம்.. ஓட்டப்பந்தயம் அல்ல..
* யாரை நீ வெறுத்தாலும் உன்னை மட்டுமாவது நேசிக்க கற்றுக்கொள்.. ஏனெனில் இந்த உலகிலே மிக மிக சிறந்த காதல் உன்னை நீ நேசிப்பது தான்..!!
* கோடிக்கணக்கான கற்பனைகள், லட்சகணக்கான முயற்சிகள், ஆயிரகணக்கான தோல்விகள் இருந்தாலும் ஒரு சில நிஜங்களுடன் நாம் வாழ்கின்ற இந்த நிகழ்வுக்கு பெயர் தான் "வாழ்க்கை".
* ஓர் உச்சக்கட்ட தனிமையை உணர ஒரு சிறு நிராகரிப்பே போதுமானதாய் இருக்கிறது இப்போதெல்லாம்...
* நாம் அனைவரும் சரியாக செய்யும் ஒரே தவறு.. சிலரை உண்மையாக நேசிப்பது..
* எப்போது என் மௌனம் உன்னை பாதிக்கவில்லையோ அப்போதே நான் தெரிந்து கொண்டேன்.. நான் உனக்கு முக்கியமாவனன் இல்லையென்று..!!
* எந்த உறவும் நிரந்தரமில்லை என தெரிந்த பின்னும், யாரும் ஒருவர் மேல் வைக்கும் அன்பை அளவோடு வைப்பதில்லை.. எதார்த்தங்களை மீறியது தான் அன்பு..!!
* கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்பித் தொலைக்கிறோம்...
* நம்மைவிட்டு எல்லோரும் போய்விட்டார்களே என்று வருத்தபடுதை விட, இனி நமக்குக் கூட இருந்து குழி பறிக்க யாரும் இல்லை என்று சந்தோஷப்படு..!!
* பொய் சொல்கிறவனும் சந்தர்ப்பவாதியும் தொடர்ந்து வெற்றி பெரும் இவ்வுலகில் கடவுளையும் உண்மையையும் தேடித்தேடியே களைத்துப் போகிறான் அப்பாவி மனிதன்..
* அருகில் இருந்தும் போலியாக உள்ள உறவை விட, யாரும் அற்ற தனிமையின் வேதனை மேலானது..!
* தோற்றாலும் நம்பிக்கையோடு இரு.. ஆனால் யாரையும் நம்பி தோற்று விடாதே.. அதன் வலி மரணத்தை விட கொடியது..

இதைப் படிப்பதால், உங்கள் வாழ்க்கை முறை, கவலைகள், பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படலாம்



இதை  சேமித்து வைத்து, அடிக்கடி படியுங்கள்.

இதைப் படிப்பதால், உங்கள் வாழ்க்கை முறை, கவலைகள், பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படலாம்.

* உண்ண உணவும், உடுத்த உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால்,  உலகில் உள்ள 75% மக்களை விட நீ வசதி பெற்றிருக்கிறாய்.

* உனக்கு வங்கியில் பணமிருந்தால், அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள், நீயும் ஒருவன். உலகில் உள்ள 80% மக்களுக்கு வங்கி கணக்கே இல்லை.

* உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.

* நினைத்த நேரத்தில், நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால்.. அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்.

*நோயின்றி காலையில், புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலையே, உயிர் துறந்த பலரை விட நீ பாக்கியசாலி.

* பார்வையும், செவித் திறன், வாய் பேசாமை உள்ளிட்ட எந்த குறைபாடுகளும், இல்லாது நீ இருந்தால், அவ்வாறு உள்ள உலகில் உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய்.

* போர், பட்டினி, சிறைத்தண்டனை போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உலகில் உள்ள 70 கோடி மக்களுக்கு கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என அறிந்து கொள்.

*கொடுமைகளுக்கு உள்ளாகாமல், நீ விரும்பும் தெய்வத்தை தொழ முடிந்தால், உலகில் உள்ள 300 கோடி மக்களுக்கு கிடைக்காத சலுகையை நீ பெற்றுள்ளாய்.

* உன் பெற்றோரை பிரியாமல் அவர்களுடன் இருந்தால், நீ துன்பத்தை அறியாதவன் என்பதை புரிந்து கொள்..!!

* தாகம் எடுத்தால் குடிப்பதற்கு உங்களுக்கு தண்ணீர் கிடைத்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர் தான்.

உலகம் முழுதும், சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை.

* கல்வி அறிவு பெற்று, இந்த செய்தியை உன்னால் படிக்க முடிந்தால், உலக அளவில் எழுத படிக்க இயலாத 80  கோடிக்கும் மேல் உள்ளவர்களுக்கு கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய்.

* இணையத்தில் இந்த செய்தியை, உன்னால் படிக்க முடிந்தால், அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்..!!

* உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால், அவ்வாறு செய்ய இயலாத அளவுக்கு தைரியமும், நம்பிக்கையும் இல்லாதவர்களை விட, நீ கொடுத்து வைத்தவன்..!!

* நீங்கள் அனுபவித்து வரும், வசதிகளையும்.. தொழில் நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல், ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல்,  கோடிக்கணக்கானோர் இவ்வுலகில் இருக்க, ஆண்டவன் இவ்வளவு விசயம் உங்களுக்கு கொடுத்திருக்கும் போது, நீங்கள் அதிர்ஷடசாலி இல்லையா பின்ன..??

* நீங்கள் அதிர்ஷடசாலி தான்..!!!

வீண் கவலைகளை விட்டு,அந்த கவலைகளை காரணம் காட்டி குடும்பத்தில் குழப்பங்கள், சண்ட. , சச்ரவுகள் என்பவற்றை விட்டு விட்டு,  நான் அதிர்ஷடசாலி என்ற தைரியத்தோடு
உங்களால் இயன்றவரை மற்றவர்களுக்கு உதவுங்கள்.
God is Great!

பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் - தெரிந்துகொள்வோம்



பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள் - தெரிந்துகொள்வோம்

1; பொதுவாக பாய் தரையில் விரிப்பதால்...நாம் தரையில் உறங்குவதே ஒரு சிறந்த "யோகாசனம்"

2; பிறந்த குழந்தைகளை பாயில் உறங்க வைப்பதால் அதன் முதுகு எழும்பு நேர்படுத்தப்படுகிறது, குழந்தைகளுக்கு இளம் வயது கூண் முதுகு விழுவதை தடுக்கிறது, [கல்வி கற்க்கும் மாணவ மாணவிகளுக்கு இளம் வயது முதுகு வலி வராமலும் தடுக்கும்,]

3; கர்ப்பினி பெண்கள் பாயில் உறங்குவது சுக பிரசவத்திற்கு உதவிடும், [பாயில் படுக்கையில் பெண்களுக்கு இடுப்பு எழும்பு விரிகிறது, இடுப்பு எழும்பு விரிந்தாலே ஆப்பரேசன் இல்லாத சுக பிரசவம்தான்]

4; மூட்டு வலி, முதுகு வலி, தோள்பட்டை தசை பிடிப்பு போன்ற பிரச்சினை உள்ளவருக்கு பாயில் உறங்குவதே ஒரு சிறந்த தீர்வு,

5; பாயில் இரு கால் விரித்து மல்லாக்க படுக்கையில் உடலின் எங்கும் இரத்த ஓட்டம் சீராக பாய்ந்து ஞாபக சக்தியை தருகிறது, [பாயில் தலையணி இல்லாமல் உறங்குவதே சிறந்தது,]

6; ஆண்கள் பாயில் படுக்கையில் அவர்களின் மார்பகம் தசை தளர்ந்து விரியும்,

7; பாய் உடல் சூட்டை உள் வாங்கக்கூடியது,

8;  பெரியோர்கள் சீர்வரிசை கொடுக்கையில் பாய் இல்லா ஒரு சீர்வரிசை கிடையாது,

9; ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தன்மையை இழக்காது,

10; கட்டிலில் விரித்து உறங்கும் பஞ்சு மெத்தையை விட வெறும் தரையில் பாய் விரித்து உறங்குவதால்...
*உடல் உஷ்ணம்,வதையும்...

*உடலின் வளர்ச்சி,யும்...

*ஞாபக சக்தி,யையும்...

*மன அமைதி,யும்...

*நீண்ட உடல்/மன ஆரோக்கியத்தையும் தருகிறது,


கோரைப் பாயில் படுத்து உறங்குவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்!


கோரைப் பாய் பயன்படுத்தி உறங்குவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

பாய்களில், படுக்கைகளில் பல வகைகள் இருக்கின்றன. அந்த காலத்தில் அவரவர் வசதிக்கு ஏற்ப படுக்கை வாங்கி பயன்படுத்தினர். ஒவ்வொரு பாய்க்கும், படுக்கைக்கும் ஒவ்வொரு நன்மைகள் இருக்கின்றன. ஆனால், நாம் இன்று பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாய்களில் தீமை தான் நிறைந்து இருக்கின்றன.
இந்த வகையில் கோரைப் பாய் பயன்படுத்தி உறங்குவதால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு காணலாம்...

கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை!

தயாரிப்பு முறை!
கோரைப் பாய் ஆனது ஆற்றின் ஓரத்தில் வளர்கின்ற கோரைப் புற்கள் கொண்டு தயாரிக்கப்படும் பாய் ஆகும். கோரைப் புற்கள் ஆரம்பத்தில் இருந்து அறுவடை ஆகும் வரை நீர்பிடிப்பு நிலத்தில் வளர்வதால் உறங்க சுகமான அனுபவம் அளிக்கும். உடல் சூட்டை தனித்து, குளிர்ச்சி அடைய செய்யும்.

உறக்கம்!
உடலில் சூடு அதிகரிக்கும் போது உறக்கம் கெடும். கோரைப் பாய் உடலின் சூட்டை குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தருவதால் நல்ல உறக்கம் கிடைக்கும்.
காய்ச்சல்!
உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்ட கோரைப் பாய் பயன்படுத்தி உறங்குவதால் காய்ச்சலும் குணமாகும் என கூறப்படுகிறது. அதிக உடல் சூட்டல் உண்டாகும் காய்ச்சலை தன் குளிர்ச்சி குணம் கொண்டு சரி செய்கிறது கோரைப் பாய்.
பழமொழி அர்த்தம்!
பேச்சு வழக்கு பழமொழி: கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!
உண்மை பழமொழி: கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை!
பொருள்!
கழு என்பது ஒருவகையான கோரைப் புல். அதில் தைக்கப்பட்ட பாயில் படுத்து உறங்கும் போது நாசியில் கற்பூரம் போன்ற வாசனை அடிக்கும். இந்த வாசனைக்கு பூச்சிகள் அருகே நெருங்காது. இதனால், குழந்தைகளை பூச்சி கடியில் இருந்து காக்க இந்த பாய் பயன்படுத்தினர். காலப்போக்கில் இது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என மருவிவிட்டது.

மனிதனின் மனது என்றும் அழிவதில்லை .


மனிதனின் மனது என்றும் அழிவதில்லை .


மன்னிக்கத் தெரிந்த மனிதனின்
மனது கவலைகளை சுமப்பதில்லை.

தண்டிக்கத் துடிக்கும் மனிதனின்
மனது நிம்மதியை உணர்வதில்லை.

குறை கூறித் திரியும் மனிதனின்
மனது நிறைகளை காண்பதில்லை.

நிறை தேடி புகழும் மனிதனின்
மனது மகிழ்வினை மறப்பதில்லை.

மகிழ்வூட்ட நினைக்கும் மனிதனின்
மனது இன்பத்தை இழப்பதில்லை.

புறம் பேசி அலையும் மனிதனின்
மனது இருளினை களைவதில்லை.

துன்பத்தை பொறுத்த மனிதனின்
மனது துயரினில் மடிவதில்லை.

இன்பத்தை வேண்டும் மனிதனின்
மனது சந்தோஷத்தில் திளைப்பதில்லை.

சந்தேகம் நிறைந்த மனிதனின்
மனது சந்தோஷத்தை சுவைப்பதில்லை.

சஞ்சலம் அற்ற மனிதனின்
மனது சங்கடத்தை சந்திப்பதில்லை.

ஆசையை அடக்கும் மனிதனின்
மனது மோசம் போவதில்லை.

நேசம் கொண்ட மனிதனின்
மனது பாசத்தை துறப்பதில்லை.

உதவிட நாடும் மனிதனின்
மனது சிரிப்பினை தொலைத்ததில்லை.

கொடுத்திட நினைக்கும் மனிதனின்
மனது கெடுதியில் வீழ்வதில்லை.

துஷ்டத்தை நாடும் மனிதனின்
மனது கஷ்டத்தை களைவதில்லை.

ஆறுதல் சொல்லும் மனிதனின்
மனது அவதியில் அழுவதில்லை.

பெருமையை தவிர்த்த மனிதனின்
மனது சிறுமையில் வீழ்வதில்லை.

பொறுமையாய் இருக்கும் மனிதனின்
மனது வெறுமையை காண்பதில்லை.

மறுமையை நினைக்கும் மனிதனின்
மனது நற்செயல்களை விடுவதில்லை.

சிந்திக்கத் தவறிய மனிதனின்
மனது அமைதியில் நிலைத்ததில்லை.

நல்லெண்ணம் கொண்ட மனிதனின்
மனது மரணித்து விடுவதில்லை.

இறையச்சம் உள்ள மனிதனின்
மனது பிற அச்சம் கொள்வதில்லை.

இதை உணர்ந்து கொண்ட மனிதனின்
மனது என்றும் அழிவதில்லை .

ஞாயிறு, 26 மார்ச், 2017

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!


பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!


*பொட்டு :*

பொட்டு வைக்கும்
பெண்களை அவ்வளவு சீக்கிரம்
மெஸ்மரிசம் செய்ய முடியாது.

*தோடு :*

மூளையின் செயல் திறன்
அதிகரிக்கும்.
கண்பார்வை திறன் கூடும் .

*நெற்றிச்சுட்டி :*

நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனையை
சரி செய்கிறது.

*மோதிரம் :*

பாலுறுப்புகளை தூண்டும்
புள்ளிகள் மோதிர விரலில்
உள்ளது..
ப்ரேசிலட்,வாட்ச்,காப்பு
அணிவதும் பாலுறுப்பின்
புள்ளிகளை தூண்டும்.

செயின் , நெக்லஸ் :
கழுத்தில் செயின் அணியும் போது
உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள
சக்தி ஓட்டம் சீராகும் .

*வங்கி :*

கையின் புஜை பகுதியில்
இறுக்கமான அணிகலன்கள்
அல்லது
கயிறுகள் அணியும்
பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி
பதற்றம் , படபடப்பு, பயம்குறைகிறது .
மார்பக புற்று நோய் வருவது
தவிர்க்க படுவதாக ஆய்விலே
உறுதிபடுதப்பட்டிருக்கிறது

லம்பாடி பெண்களுக்கு மார்பக புற்று நோய்
வருவது இல்லை.
காரணம்
மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு
மேல்வரை நெருக்கமாக
வளையல்களை அணிவதால்
மார்பு பகுதியின் ரத்த ஓடம் சீராக
வைத்திருக்க உதவுகிறது.

*வளையல் :*

வளையல்கள் அந்த பகுதியின்
புள்ளிகளை அழுத்துவதன் மூலம்
வெள்ளையணு உற்பத்தி உடலில்
அதிகரிக்கிறது.

முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது.
இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும்
நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

*ஒட்டியாணம் :*

ஒட்டியாணம் அணியும்போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக
தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும்.
வயிற்று பகுதிகள் வலுவடையும்.

*மூக்குத்தி :*

மூக்கில் இருக்கும் சிலபுள்ளிகளுக்கும்
பெருங்குடல் மற்றும்
சிறுகுடலுக்கும்நெருக்கமான
தொடர்பு உண்டு.
அந்த புள்ளிகள் தூண்டப்படும் போது
அது சம்மந்தமான நோய்கள்
குணமாகும் .

மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் .

*கொலுசு :*

கல்லீரல்,
மண்ணீரல்,
பித்தப்பை,
சிறுநீரகம்,
சிறுநீர்ப்பை,
வயிறு போன்ற
மிக முக்கிய உறுப்புகளின் செயல்திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன்
கொலுசு.

கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான
கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.



பெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்.


கோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலையெல்லாம் சூட்டினாலும், தாலி, தோடு,மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தால் தான் அலங்காரம் முழுமையடையும். பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது.
1. தாலி - தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.
2. தோடு - எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே !
3. மூக்குத்தி - மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.
4. வளையல் - கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக,
5. ஒட்டியாணம் - கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக!
6. மோதிரம் எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.
இவை தவிர.. நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை, அதிகமாகன ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் இந்த வெப்பத்தை குறைத்து,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் ஏற்றது. அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. இவ்வாறு அணிவதன் சிறப்பு..
கொலுசு: பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன் வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.
மெட்டி: மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டும் அணியும் ஆபரணம். பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது.வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது. மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும்.
மோதிரம்: விரல்களில் அணியப்படும் மோதிரம் டென்ஷன் குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளத்திற்கு உதவுகிறது. அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை ஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது. விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் நீங்கவும் உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடாது.
மூக்குத்தி: மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூட பேஷன் உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது. இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும். வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி. சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் அணிய வேண்டும். இடப்புறம் அணிவதால் சிந்தனை சக்தி,மனம் ஒரு நிலைப்படுத்தபடுகிறது.
காதணி: தோடு என்பது காதில் அணியும் ஆபரணம் பெண்களால் அனைவரும் அணியும் இந்த ஆபரணத்தை ஆண்களும் அணிவார்கள். காது குத்துதல் என்பது சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. காதில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே ஆகும்.




சனி, 25 மார்ச், 2017

பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோயை உணர்த்தும் அறிகுறிகள்



பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோயை உணர்த்தும் அறிகுறிகள்....


பெண்களுக்கு வரும் நுரையீரல் புற்றுநோய் ஆண்களுக்கு வருவதை விட சற்று மாறுபட்டது. பெண்களுக்கு வரும் புற்றுநோயானது நுரையீரலுக்கு வெளிபுறத்தில் ஏற்படும். எனவே இதை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகக் கடினம். மேலும் இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில், நுரையீரலின் வெளிபுறத்தில் இது உருவாவதால் மற்ற பாகங்களான எலும்பு, கல்லீரல் போன்றவற்றிற்கு எளிதில் பரவக்கூடும்.

எனவே, பெண்கள் அவர்களது உடலில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களையும் அலட்சியப்படுத்தாமல் கவனிக்க வேண்டும். இங்கு பெண்களுக்கான நுரையீரல் புற்றுநோயின் சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை படித்து தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

நுரையீரல் புற்றுநோயின் பொதுவான அறிகுறி என்றால் அது உடல் சோர்வு. பொதுவாக உடல் சோர்வு என்பது அதிகப்படியான வேலை பளு மற்றும் அதிக அலைச்சலால் ஏற்படக்கூடும். ஆனால், காரணமே இல்லாமல் சோர்வு ஏற்படுகிறது என்றால் அது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அப்படி ஏற்பட்டால் அதனை உடனே கவனியுங்கள்.

நுரையீரலின் மேல் பகுதியில் புற்றுநோய் கட்டி இருந்தால் அது கண்டிப்பாக நரம்புகளை பாதிக்கும். அதனால் தான் முதுகு மற்றும் தோள்பட்டையில் பகுதிகளில் வலி ஏற்படுகின்றது.

நுரையீரலின் மேல் பகுதியில் கட்டி வளர்ந்தால் நம் சுவாச சுழற்சியில் தடை ஏற்படும். இதனால் கூடத் தொடர்ச்சியான இருமல் ஏற்படும், கவனித்துக் கொள்ளுங்கள்.

நுரையீரல் புற்றுநோய் பொதுவாக நெஞ்சு வலியில் இருந்து தான் ஆரம்பிக்கும். ஏனெனில், இந்த புற்றுநோய் கட்டிகள் மார்புப் பகுதியிலுள்ள இரத்தக் குழாய்கள் மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் நெஞ்சு வலி ஏற்படக்கூடும்.

நுரையீரல் புற்றுநோயின் மற்றொரு அறிகுறி தான் இந்த கரகரப்பான குரல். எப்பொழுது நுரையீரலின் மேல் பகுதியில் கட்டி உருவாகிறதோ அது குரலில் ஒரு கரகரப்பு தன்மையை ஏற்படுத்தும். மேலும் இது மூச்சு விடும் போது கூட கடுமையான சத்தத்தை ஏற்படுத்தும்.

நுரையீரலின் மேல் பகுதியில் கட்டி ஏற்படுவதால் அது நுரையீரலில் அடைப்பை ஏற்படுத்தும். அதனால் நுரையீரலில் சளி அதிக அளவில் தேங்கும். மேலும், இது புற்றுநோய் கட்டியில் இருந்து இரத்தக் கசிவை ஏற்படுத்தும். அந்த இரத்தம் எச்சில் வழியாக வெளியேறக்கூடும்.

இவையெல்லாம் தான் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாகும். எனவே, இப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தால் இதனை அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவ பரிசோதனை செய்துப் பார்த்துவிடுங்கள். நம் உடல் ஆரோக்கியத்தை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

காலமெல்லாம் இனைந்து வாழும் புருசனும் பொஞ்சாதியும்... கொஞ்சம் அனுசரித்து வாழுங்கள்.!!



காலமெல்லாம் இனைந்து வாழும் புருசனும் பொஞ்சாதியும்... கொஞ்சம் அனுசரித்து வாழுங்கள்.!!


ஒரு திருமண மண்டப வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம்...

 கணவனை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த அந்த நவ யுக மனனவியை கவனித்த 60 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர்,...

 அப்பெண்ணை அணுகி," மகளே! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதே...!!!

ஏன் உன் கணவனைகடிந்து கொண்டாய் என தெரிந்து கொள்ளலாமா..?" என வினவினாள்......

"ஒன்னுமில்லை ஆண்டி, சும்மாதான். இது என் கணவரது தங்கையின் திருமணம்....

 நானும்கூட வந்து நிற்கணுமாம், எல்லா நிகழ்ச்சியிலும் பங்கெடுக்கணுமாம்....

வீட்டுக்கு ஒரே பையன் என்றாலும் இவரை இவர் வீட்டாரே மதிப்பதில்லை....

 இதிலே என்னைய வேறு கூப்பிடுறார் !
.
பெண் என்றால் அடிமையா என்ன..?

 கணவன் செல்லும் இடமெல்லாம் செல்வதற்கு.... ?

எனக்கே அசதியா இருக்கு.....

 இந்த ஆம்பளைங்களே இப்படிதான் ஆண்டி தன்மானம் இல்லாதவர்கள்.

 சும்மா கடுப்பேத்திகிட்டு"....

முதியவள் சிறு புன்னகையோடு,

"மகளே" முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் கணவனோடுதான் போவேன்.....!!!

ஆனா இப்ப அவங்க இறந்து 8 மாசமாச்சி.
எங்க ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு....

 ரெண்டு பேருமே விவசாயமே..தொழில்.   .
வயதும் 65ஐ கடந்துவிட்டேன்..!!!

காடு தோட்டமெல்லாம் இரு மகன்களுக்கும் பிரித்து கொடுத்து விட்டு...

ஒரே மகளான தெய்வநாயகிக்கும் கொஞ்சம் காசு பணம் நகைன்னு கொடுத்துவிட்டு....

 பிறகு ஒன்னாவே ஊர்லே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம்....

எங்களோட 2 பிள்ளைங்களும்,ஒரு மகளும் கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே,...

 நாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம்...

 என் கணவனுக்கு துரதிஷ்டவசமா இனிப்புநீர், ரத்தக்கொதிப்புனு நோய்கள் இருந்திச்சி...

 தினமும் மருந்து சாப்பிடணும். அவங்க அவ்வளவு திடகாத்திரமா இல்லாததாலே நான் தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன்....!

இப்ப அவங்க இல்லை,....!

நான் ரொம்ப தனிமையை உணர்கிறேன்...

என் பகல்கள் ரொம்ப நீளமாயிடுச்சு, இரவுகள் ரொம்பவும் வெறுமையாயிடுச்சு..!!

 அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு....!

அவங்க சாப்பிட்டு முடிக்காத மீதமுள்ள மருந்துங்கக் கூட என்னைக் கவலைப்படுத்துது....!

அவங்க handphone நம்பர் இருக்கு,! ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க,...!

 whatsupp பண்ணா படிக்க மாட்டாங்க...!

முன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்...!

 இப்ப நான்
அதே படுக்கையிலே நடுவில தனியா படுத்திருக்கேன்... !

சமையலறைக்குத் தனியா போறேன், ! சமையல்ன்னு பேர்ல எதையோ பண்றேன், !

 வாய்க்கு ருசியா சமைச்சு பகிரஅவங்க இல்லை.!..

கோயிலுக்கு இப்ப ஒன்னா போக அவங்க இல்லை...!

விழியோரம் நீர் தேங்க..,

அதான் மகளே, அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும் ..,!

 அதிகமாக போற்றணும்....!!!

 கணவனின் வெற்றியோ தோல்வியோ,!

 பெருமையோ அவமானமோ...!!!.

லாபமோ...
நட்டமோ...

 மனைவிக்கு அனைத்திலும்..
 சம பங்கு உண்டு...!

 தன் மனைவி தன்னுடன் தோளோடு தோள் கொடுத்து நிற்காத எந்த கணவனுக்கும் ஏற்படும் அவமானமும் தலை குனிவும்....

 வேறெந்த அவமானத்தையும் விட அவனை அதிகம் காயப்படுத்தும்....!

மிகவு‌ம் வேதனை படுத்தும்.!

எங்கு போனாலும் என் கணவர் முன்னே சென்று எனக்கு இடம் பிடித்து தருவார்..

 பஸ் இல் ஏறும் போது ,
விழாக்களில் விருந்துகளில் எனக்கு முன்பே ஓடி சென்று எனக்கு இடம் பிடித்து....

 இல்லாவிட்டால் ஏதாவது எனக்கு வசதியாக ஏற்பாடு பண்ணி தருவார்.!!!

பிரயாணம் செய்யும் போது நான் அசந்து தூங்கி விடுவேன்...!.

 அவரோ ஒரு நிமிடம் கூட கண் அசர மாட்டார்.!
பல முறை 8 மணி நேரம் 12 மணி நேரம் அவசர பயணத்தின் போது.....

 பஸ்ஸில் இடம் கிடைக்காமல் என்னை மட்டும் உட்கார வைத்து பாதுகாப்பிற்காக...

 பக்கத்திலேயே கம்பியை பிடித்து நின்று வந்திருக்கிறார்....!

இன்னிக்குத் தினமும் என் கணவனின் கல்லறைக்குப் போறேன்.....!

 எனக்காக எல்லாத்தையும் தயார் செய்த நீங்க முன்னாடி போயிட்டிங்களே...?"

 இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன்.!

சரி மகளே,! நான் வர்ரேன் என்று புறப்பட்ட முதியவளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் அந்த இளம் மனைவி்..... !.

என்ன நினைத்தாளோ மண்டப திற்கு உள் சென்று தன் கணவனை தேட ஆரம்பித்தாள்.....!!!!!!

ஆம், நம் மனைவிதானே எப்படி நடந்தாலும் பரவாயில்லை என கணவனும்,...

நம்..கணவன் தானே எப்படி பேசினாலும் பரவாயில்லை என மனைவியும் எண்ண வேண்டும்.!

புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடமே,
hi sir how r u? Nice to meet u என்கிறோம்...!

 இடையில் இருமுகிறோம், தும்முகிறோம் I'm sorry sir என்கிறோம்...!

பேச்சுக்கிடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது, உடனே excuse me sir சொல்றோம் ..!

அந்த நபரைச் சந்தித்தே 10-20 நிமிடம்தான் ஆகியிருக்கும்...

 அதன்பின் அவரைச் சந்திப்போமா என்றே தெரியாது....
 ஆனாலும் எவ்வளவு மரியாதை தருகிறோம்?"

வாழ்நாள் முழுதும் நம்மோடு வாழ்கிற கணவனை.... மனைவி மதிக்கிறாளா...?
&
மனைவியை கணவன் மதிக்கிறானா...???

 இல்லை பதில் 100 க்கு 50சதவீதம், இல்லைதான்...

 கணவனின் கரிசனையை, திறமைகளை பாராட்டுறதுமில்லை, அசதியாக தோட்டவேலை முடிந்து வீடு திரும்பும் கணவன்கிட்ட,

ஏங்க, ரொம்ப வேலையா, காலையிலேர்ந்து நான் உங்களை ரொம்ப மிஸ் பன்னிட்டேனுங்கனு

மனைவியும் சொல்றதில்லை...

மனைவியும் ஓய்வாகவோ.. & களைத்து அமர்ந்திருக்கையில்..
இன்று வீட்டு வேலை அதிகமா... என கனிவான பார்வையோடு கேட்கும் கணவன் மாணவர்களும் 50%மே...

இதெல்லாம் சொல்லணும்...!!

அப்படி *ஒருத்தரோட உணர்வை இன்னொருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பித்தால்.....*

 *வாழ்க்கை இனிக்கும்.. & ருசிக்கும்.!!!.*

அகம் முகம் மலர்ந்த நட்பே..!! குழுவிற்க்கு

வந்த தகவல் பறிமாற்றப்பதிவு...

கணவனோ.... மணைவியோ...

மருத்துவ மனையிலோ.. படுக்கையிலோ... இருந்தால்...

கூட இருந்து கவனிப்பவர்... கணவனோ... &
மணைவியோ தான்...

சுமார் ஒரு மாத காலம மருத்துவ மனையில் படுக்கையாக இருந்தால்....

 முதல் ஒருவார காலம்.. பார்க்க வரும் உறவுகள் & சொந்தங்கள்..

 பின்னர் படிப்படியாக குறைந்து விடும்..

பின்னர் மகளோ... மகனோ.... நெருங்கியவர்கள் மட்டுமே...

 வந்து போவார்கள்......

 இறுதியில் கணவன் மனைவி மட்டுமே...

 ஒருவருக்கொருவர்....
துணையாக இருப்பர்..

இறுதியாக ஒன்றுங்க...

நம்முடைய.
 உறவு..... நட்பு... குலம்.... சாதி...   பங்காளி... பகையாளி... இனம்...சனம்.... பணம்...  முதலாளி.... தொழிலாளி..... கட்சிக்காரன்.... எல்லாமே.....

ஞாபகமிருக்கட்டும்..!!!

கூடிக்கலையும் காக்கா கூட்டமே....

ஆக மனைவி... மகள்...மகன்... & இரத்த உறவுகளே...

நம் வாழ்வின் இறுதிநாட்களில் துணையிருப்பார்...

வாட்ஸ் அப் பில் கண்டேன்...

கூட கொஞ்சம் எழுத்தினை இணைத்து ... கருத்தினை திணித்தேன்.!!!!

தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!


தினசரி சாப்பிட வேண்டிய காய்கறி, கனி அளவு!
மனித உடல் ஆரோக்கியத்துக்கு நாம் சாப்பிடும் அன்றாட உணவில் எவ்வளவு காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கவேண்டும் என்பது குறித்து ஆய்வாளர்கள் புதிய பரிந்துரை ஒன்றைச் செய்திருக்கிறார்கள்.
அதன்படி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு தினசரி அரை கிலோ காய், கனிகளை உண்பது அவசியம் என்கிறார்கள். சுமார் 65 ஆயிரம் பேரிடம் செய்யப்பட்ட ஆய்வின் முடிவில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுநாள்வரை, 25 வயதுள்ள ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தது 400 கிராம் அளவாவது காய்கறி மற்றும் பழங்களை உண்ண வேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் பரிந்துரை செய்து வந்தார்கள்.
ஆனால் தற்போது, ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 560 கிராம், அதாவது அரை கிலோவுக்கும் அதிகமாக காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடுவதுதான் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று மருத்துவ ஆய்வாளர்கள் சிபாரிசு செய்கின்றனர்.
இதன்மூலம் மனித உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்பதுடன், உடலின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான சத்துக்களையும் காய்கறிகளும், பழங்களும் கொடுக்கும் என்பது இந்த ஆய்வாளர்களின் பரிந்துரையாக இருக்கிறது.
இதில் ஒரே வகையான காய்கறி, உதாரணமாக அரை கிலோ கேரட்டை சாப்பிட்டால் போதுமா, அல்லது ஒரே வகையான பழம், உதாரணமாக
இரண்டு வாழைப்பழங்களைச் சாப்பிட்டால் போதுமா என்று கேட்டால், அது சரியான அணுகுமுறையாக இருக்காது என்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள்.
தினசரி சாப்பிடும் காய்கறி மற்றும் பழங்களில் பல் வேறு வகையான காய்கறிகளும், பழங்களும் இருப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்றும், அதன்மூலமே மனித உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் கிடைக்கும் என்றும் இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் காய்கறிகள் என்பவை விலை உயர்ந்த காய்கறிகளாகவோ, பழவகைகள் என்றதும் விலை உயர்ந்த பழங்களாகவோதான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று சுட்டிக்காட்டியிருக்கும் விஞ்ஞானிகள், தக்காளி, வெங்காயம், முருங்கைக்காய், கத்தரி, வெண்டை, கோவைக்காய், பலவகையான கீரைகள், முள்ளங்கி, வாழைத்தண்டு போன்ற காய்கறிகளும் கூட நல்ல பலனைத்தரும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பழங்களிலும் கூட வாழைப்பழம், நாவல்பழம், பலாப்பழம், இலந்தை, மாம்பழம் போன்ற சாதாரணமாகக் கிடைக்கும் பழங்களிலும் நல்ல பலன்கள் கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆரோக்கிய வாழ்க்கைக்கு அரை கிலோ காய், கனிகளை அன்றாடம் சாப்பிடுவது அவசியம் என்கிறது இந்த ஆய்வறிக்கை.
பொதுவாக அசைவ உணவுகளைவிட, சைவம் என்ற பிரிவில் வரும் காய்கறிகளும், கனிகளும் அதிகம் நன்மை பயக்கின்றன, உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை என்பதே இதுநாள் வரை ஆய்வு முடிவுகள் வெளியிடும் தகவல்களாக இருக்கின்றன.
இந்நிலையில், தற்போது ஒவ்வொருவரும் தினமும் எவ்வளவு காய்கறிகள், கனிகளைச் சாப்பிட வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். இதை அப்படியே கடைப்பிடிக்க முடியாவிட்டாலும், கூடுமானவரை அதற்கான முயற்சியை மேற்கொள்ளலாம்.
முடிந்தவரை எவ்வளவு மரக்கறி உணவுகளைச் சாப்பிட முடியுமோ, அவ்வளவு சாப்பிடலாம். காய்கறி, பழங்களிலும், அவை இயற்கை முறையில் விளைந்தவையாக இருந்தால் இன்னும் நல்லது என்பது விஞ்ஞானிகள் கருத்து. இனி நம்முடைய தினசரி உணவில் காய்கறிகள், கனிகளின் பங்கு கணிசமாக இருக்கட்டும்.

காய்கறி வாங்குவது எப்படி?


காய்கறி வாங்குவது எப்படி?

இன்றைய தலை முறையினருக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.. உபயோகமான தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன் என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?
1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.
2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்
3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய்
4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்
5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம்.
6.தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக்கும்).
7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்
8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்
9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங் கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்
10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்
11. மாங்காய் ,தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்
12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது
13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்
14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகு தி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்
15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்.
16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்
17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்
18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்
19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்
20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்
21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்
22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்
23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்.
24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது
25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது
26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்
27. மொச்சை : கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்
28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்
29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்
30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்
31. பச்சை மிளகாய் : நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமாக இருக்கும்.

யார், யார் எப்படி பேசுவார்கள்



யார், யார் எப்படி பேசுவார்கள்

*கிரிக்கெட் வீரர்* - "ஓவரா" பேசுவார்

*போட்டோகிராபர்* - "டெவலப் பண்ணி" பேசுவார்

*ரவுடி* - "அடிச்சுப்" பேசுவார்

*ஹோட்டல் சர்வர்* - "சூப்"பரா பேசுவார்

*வக்கீல்* - "பீஸ்புல்லா" பேசுவார்

*ஃபாஸ்ட் ஃபுட் ஓனர்* – "காரசாரமா" பேசுவார்

*ஐஸ் விக்கிறவர்* – "குளிரக் குளிரப்" பேசுவார்

*டெய்லர்* – "கட் பண்ணிப்" பேசுவார்

*பூக்கடைக்காரர்* - வார்த்தையை "அளந்து" பேசுவார்

*டயட்டீஷியன்* - "உப்பு சப்பில்லாமல்" பேசுவார்

*பேங்க் மேனேஜர்* – "இண்ட்ரஸ்டா" பேசுவார்

*பியூட்டீஷியன்* – "அழகாப்" பேசுவார்

எலக்ட்ரீசியன் "ஷாக்" அடிச்சமாதிரி பேசுவார்.

*கசாப்புக் கடைக்காரர்* – "வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுன்னு" பேசுவார்

*ஸ்வீட் கடைக்காரர்* – "இனிக்க இனிக்கப்" பேசுவார்

*மீன் வியாபாரி* _ "நாறடித்து" பேசுவார்

*கண்டக்டர்*_ "நடந்து நடந்து" பேசுவார்.

*டிரைவர்*_ "நிறுத்தி நிறுத்தி" பேசுவார்.

*பால் வியாபாரி* _ பழம் நழுவி "பாலில்"விழுவதுபோல் பேசுவார்.

*பெர்ஃயூம் கடைக்காரர்* "மணக்க மணக்க" பேசுவார்.

*டீ மாஸ்டர்* - "சூடா"க பேசுவார்.

*கணக்கு வாத்தியார*் - "கூட்டி குறைத்து" பேசுவார்.
***
***
***
மேலே சொன்ன அத்தனையும் ஒருத்தன் பேசுவான்....
அவன்தான் "அரசியல்வாதி"

நன்கு சாப்பிட்ட பிறகும் பசியுடன் இருப்பதற்கான சில காரணங்கள்!!!



நன்கு சாப்பிட்ட பிறகும் பசியுடன் இருப்பதற்கான சில காரணங்கள்!!!

நீங்கள் சாப்பிட்ட பிறகும் பசியுடன் இருக்குறீர்களா? நீங்கள் முழு உணவையும் சாப்பிட்ட பிறகும் கூடவா? இது அனைத்து மக்களும் கொண்டிருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை.
குறிப்பாக யார் எடையை குறைக்க விரும்புகிறார்களோ அவர்கள். இந்த சில பிரச்சனையின் தண்டு கலோரிகளை தடுப்பத்தன் மூலம் அதிகமாகிறது மற்றும் இதனுடைய எளிமையான தீர்வு என்னவென்றால் இன்னும் கொஞ்சம் அதிக அளவு உணவை சேர்த்து உண்பது.
சாப்பிட்ட பிறகும் நீங்கள் பசியுடன் இருப்பதற்கான சாத்தியமான காரணங்கள் இங்கே சில குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த காரணங்களை தெரிந்து கொண்டு மற்றும் பசி இருப்பதற்கான சரியான காரணத்தையும் கண்டுபிடிக்கலாம்.

சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எதுவென, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

மிக குறைந்த காலை உணவை எடுத்தல்
நாங்கள் திரும்பவும் கூறுகிறோம், காலை உணவு என்பது ஒரு நாளில் மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் உங்கள் நாளை எப்பொழுது ஆரம்பிக்கிறீர்களோ, அப்போது சரியான நேரத்தில் சரியான கலோரிஸ் மற்றும் ஊட்டச்சத்துடன் தொடங்க வேண்டும். அதனால் இரத்த சர்க்கரையின் அளவு, நாள் முழுவதும் சம நிலையை அடைகிறது. அந்த வழி, உங்களுக்கு நாள் முழுவதும் வெகு நேரத்திற்கு திடீர் என்று பசியை ஏற்படுத்தாமல் தடுக்கும். நிறைய புரதச்சத்துக்களும் அடங்கி உள்ள உணவை எடுத்து கொள்ள வேண்டும். இது பசியை தடுக்க உதவுகிறது.
மிக வேகமாக சாப்பிடுவது
சாப்பிட்ட பிறகும் நீங்கள் எப்பொழுதும் பசியுடன் இருந்தால், நீங்கள் சாப்பிடும் போது நிறுத்தும் கடிகாரத்தை ஏற்பாடு செய்ய வேண்டும், பிறகு நீங்கள் எவ்வளவு நேரத்தில் சாப்பாட்டை முடிக்கிறீர்கள் என்று பார்க்க வேண்டும். நீங்கள் மிகவும் வேகமாக சாப்பிட்டால் அது உங்கள் முழு நிறைவு நிலை ஹார்மோனை அதிகரிக்க நேரமில்லாமல் ஆக்குகிறது. இது சாதாரணமாக 20 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது. ஒரு ஆய்வு கூறுவது என்னவென்றால் எந்த மனிதன் அதிக அளவு வேகமாக ஐஸ் க்ரீமை சாப்பிடுகிறானோ அவனை விட மெதுவாக சாப்பிடுபவனுக்கு பசியை அடக்க உதவும் ஹார்மோன் சுரப்பதை விட, அதிக அளவு சாப்பிடுபவனுக்கு குறைவாக சுரக்கிறது. நீங்கள் வேகத்தை குறைக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் போர்க்கை நிறுத்தி விட்டு, நிதானமாக சாப்பிட வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு செரிமானக் கோளாறும் சரி செய்யப்படலாம்.
போதிய புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து எடுத்துக் கொள்ளாமல் இருத்தல்
நீங்கள் சாப்பிட்ட பிறகு பசியுடன் இருந்தால், நீங்கள் போதுமான அளவு புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து சாப்பாட்டில் எடுத்துக் கொள்ளாவிட்டாலும் இது ஏற்படுகிறது. புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து சாப்பாட்டில் எடுத்துக் கொள்ளாவிட்டால் அது செட்டிடீ ஹார்மோனை உற்பத்தி செய்து சாப்பாட்டின் போது அதிக பசியை ஏற்படுத்துகிறது. மேலும் உணவில் சில நல்ல கொழுப்புகளை (தீர்க்கப்படாத மற்றும் சொறிவூட்டப்பட்ட) சேர்த்துக் கொண்டாலும் அதிக பசியை குறைக்க உதவுகிறது.
தேநீர் இடைவேளை எடுத்துக் கொள்ளாதது
மிகவும் மோசமானது நீங்கள் தேநீர் அருந்துபவராக இல்லாமல் இருப்பது. ஒரு கப் ப்ளாக் டீயை சாப்பாட்டிற்கு பிறகு எடுத்துக் கொண்டால், அது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை 10-15% குறைத்துவிடுகிறது. இது நிறைய நேரத்திற்கு வயிறு முழுமையாக இருக்க உதவுகிறது மற்றும் மேலும் நீங்கள் தேவை இல்லாத உணவுகளை நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளாமல் இருக்கவும் உதவுகிறது..
தவிர்க்கும் வீட்டு உணவுகள்
தனி நபராக இருந்தால் சமைக்கும் திட்டத்தை வெறுப்பீர்கள் அல்லது இதை மிகவும் தொந்தரவானதாக நினைப்பீர்கள், நீங்கள் பேக் செய்யப்பட்ட உணவு அல்லது பாத்திரத்தில் அடைக்கப்பட்ட உணவு போன்றவற்றையே எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அநேகமான இந்த பாத்திரத்தில் அடைக்கப்பட்ட உணவு, பதப்படுத்தப்பட்டு இருக்கும் மற்றும் இது அதிக அளவு பிஷ்ஃபீனால் போன்ற ரசாயனங்களை கொண்டுள்ளது. இந்த ரசாயனங்கள் அதிக அளவு மன அழுத்தத்தை ஏற்படுத்தி, உங்களுக்கு அதிக பசியையும் உருவாக்குகிறது. பிறகு நீங்கள் சில பாக்கெட் சிப்ஸ் அல்லது பர்கரை சாப்பிட வேண்டி இருக்கும்.
குடிக்கும் அதிக அளவு சோடா
ஆய்வுகள் கூறுவது என்னவென்றால் சோடா மற்றும் மற்ற பிற இனிப்பு பானங்கள் அதிக அளவு பிரக்டோஸ் காரன் சிரப்பை கொண்டுள்ளது. இந்த இனிப்பு பானங்கள் இரத்த ஓட்டத்தை குறைக்கிறது மற்றும் பிற செயல்களையும் பாதிக்கிறது. மேலும் உங்கள் பசியையும் தூண்டுகிறது. இந்த திட்டம் லெப்டின் என்ற ஹார்மோன் மூலம் நமது மனதை அடங்காத ஆசைக்கு உள்ளாக்கி அதிக உணவை உண்ண தூண்டுகிறது. (லெப்டின் - போதுமான அளவு சாப்பிட தூண்டும் ஹார்மோன்.)
போதுமான அளவு தண்ணீர் அருந்தாதது
தண்ணீர், பசியை கொல்வதற்கு சிறந்த வழி. நாம் பசிக்கு, அடிக்கடி ஏற்படும் வறட்சியே காரணம் என்று தவறாக நினைக்கிறோம். மேலும், பசியின் போது, நமது உடலில் நீர் நீக்கம் ஏற்படுகிறது. அப்போது நாம் அதிக அளவு உணவை எடுத்துக் கொள்கிறோம். நீங்கள் பசி ஏற்படும் போது ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துங்கள் . நீங்கள் நிச்சயமாக உங்கள் வயிற்றில் ஒரு மாற்றத்தை காண்பீர்கள். தண்ணீர் குடித்தல் நாள் முழுவதும் உங்களை நிறைவாக வைத்திருக்கும். மேலும், இது உங்கள் எடையை குறைக்க உதவுகிறது.