செவ்வாய், 31 மார்ச், 2020

தர்பூசணி உட்கொள்ளும் முன் இந்த விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள்

தர்பூசணி உட்கொள்ளும் முன் இந்த விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள்


கோடையில் தர்பூசணி நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக கோடையில், அதை உட்கொள்வதன் மூலம் உடலில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது. அதிக அளவு தண்ணீர் இருப்பதால், அதை சாப்பிடுவது உடலில் சக்தியை வைத்திருக்கும். ஆனால் நீங்கள் தர்பூசணியை அதிக அளவில் உட்கொண்டால் அது உங்கள் ஆரோக்கியத்திற்கு நிறைய சேதத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா.
தர்பூசணியின் அதிகப்படியான நுகர்வு சேதத்தை ஏற்படுத்தும்:
# தர்பூசணியில் ஏராளமான நீர் மற்றும் உணவு நார்ச்சத்து உள்ளது. நீங்கள் தர்பூசணியை அதிகமாக உட்கொண்டால், உங்களுக்கு அமிலத்தன்மை, வாய்வு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று பிரச்சினைகள் இருக்கலாம்.
# தர்பூசணியில் அதிக அளவு நீர் இருப்பதால், அதை உட்கொள்வது உங்கள் உடலில் நீரின் அளவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக உடலில் இரத்த அளவு அதிகரிக்கிறது. இதன் காரணமாக உங்கள் கால்களில் வீக்கம், சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

வாழைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்

வாழைக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்


வாழைக்காயை சாப்பிட்டு வருவதால் குடலில் ஏற்படும் புற்றுநோய் வருவதை தடுக்கும். மேலும் வாழைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் உள்ள நச்சுக்களையும் கழிவுகளையும் வெளியேற்றும். இதனால் குடலில் புற்றுநோய் ஏற்படாமல் இருக்க வாழைக்காயை வாரம் 2 முறை சாப்பிட்டு வரலாம்.
வாழைக்காயை சாப்பிட்டு வருவதால் உடல் எடை குறையும். மேலும் வாழைக்காய் தசைகளில் உள்ள கொழுப்புக்களையும் கரைக்கும். இதனால் உடல் எடை குறைய நினைப்பவர்கள் வாழைக்காயை சாப்பிட்டு வரலாம். மேலும் வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து உள்ளதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதனால் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கத்திரிக்காயை சாப்பிடலாம்.
வாழைக்காயில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் ஸ்டார்ச் சத்து உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் வாழைக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

சேப்பங்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்

சேப்பங்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்


சேப்பக்கிழங்கு சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது.மேலும் வயிறு சம்பந்தமான பிரச்சனை ஏற்படாது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் சேப்பக்கிழங்கு சாப்பிட்டு வரலாம். மேலும் சேப்பங்கிழங்கில் உள்ள மாவுப் பொருள்கள் மலமிளக்கியாக செயல்படும்.
சேப்பங்கிழங்கை சாப்பிடுவதால் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் ஏற்படும் புற்று நோய்கள் ஏற்படாது. இதனால் புற்றுநோய் உள்ளவர்கள் சேப்பக்கிழங்கை சாப்பிட்டு வரலாம்.இதனால் சேப்பங்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் உருவாவதை தடுக்கலாம்.
சேப்பக்கிழங்கில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளதால் உடல் எடையை குறைக்க செய்யும்.இதனால் உடல் எடை அதிகம் உள்ளவர்கள் சேப்பங்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்

கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்


கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் பித்தம் ஏற்படாது. மேலும் பித்தம் அதிகரிப்பதால் தலைவலி,மயக்கம் ஆகியவை ஏற்படுகிறது. கருணைக்கிழங்கை வாரம் ஒருமுறை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும். இதனால் பித்தம் உள்ளவர்கள் கருணைக்கிழங்கை சாப்பிட்டு வரலாம்.
கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் மூலநோய் குணமாகும். மேலும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. இதனால் கருணைக்கிழங்கை மூல நோய் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும். மேலும் கருணைக்கிழங்கு எலும்புகளின் வலிமைக்கு மிகவும் நல்லது.
கருணைக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். இதனால் உடல் எடை அதிகம் உள்ளவர்கள் கருணைக்கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

மாங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்...

மாங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்


சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாங்காயை தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாங்காவை சாப்பிட்டு வரலாம்.மேலும் மாங்காய் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மாங்காயில் வைட்டமின் சி உள்ளதால் இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.இதனால் இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளவர்கள் மாங்காவை சாப்பிட்டு வரலாம்.
மாங்காய் சாப்பிடுவதால் உடல் எடை குறையும்.மாங்காயில் கலோரிகள் இல்லை.இதனால் உடல் எடை அதிகம் உள்ளவர்கள் மாங்காவை சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு வாந்தி ஏற்படும் போது மாங்காய் சாப்பிட்டால் வாந்தி ஏற்படாது.

பச்சை பட்டாணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்

பச்சை பட்டாணி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்


பச்சை பட்டாணியில் வைட்டமின் கே சத்துகள் அதிக அளவில் உள்ளது. இதனால் எலும்புகள் சம்பந்தமான நோய்கள் ஏற்படாது. இதனால் எலும்புகள் சம்பந்தமான நோய் ஏற்படாமல் இருக்க பச்சை பட்டாணியை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். மேலும் ரத்த சோகை உள்ளவர்கள் பச்சை பட்டாணியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை நீங்கும்.
பச்சை பட்டாணியில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் மலச்சிக்கல் மற்றும் வயிற்று சம்பந்தமான நோய்கள் ஏற்படாது. இதனால் மலச்சிக்கல் உள்ளவர்கள் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க பச்சை பட்டாணியை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிட்டு வரலாம். மேலும் பச்சை பட்டாணியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் ஏற்படும் புற்றுநோய் ஏற்படாது.
பச்சை பட்டாணியில் பீட்டா குளுக்கான் என்ற சத்து அதிகளவில் உள்ளதால் கொலஸ்ட்ராலை கரைக்கும். இதனால் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் பச்சை பட்டாணி தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். மேலும் பச்சைப்பட்டாணி சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்காது.

கண்ணாமூச்சி ரே ரே... கனவாகி வரும் விளையாட்டு.. நினைவுப்படுத்துகிறோம்..!! கண்ணாமூச்சி ரே.... ரே...



கண்ணாமூச்சி ரே ரே... கனவாகி வரும் விளையாட்டு.. நினைவுப்படுத்துகிறோம்..!!
கண்ணாமூச்சி ரே.... ரே...

👉நம் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான விளையாட்டுகளில் ஒன்று கண்ணாமூச்சி. நம்மில் கண்ணாமூச்சி விளையாடாதவர்கள் கண்டிப்பாக இருக்கமாட்டார்கள். இந்த விளையாட்டு நம் குழந்தைகள் விளையாடும்போது அவர்களுக்குள் ஒற்றுமை உணர்வு உருவாக முக்கிய காரணமாக அமைகிறது.

👉கண்ணாமூச்சி சிறுவர்களால் விளையாடப்படும் ஒரு எளிமையான விளையாட்டு ஆகும். சிலர் ஒளிந்து கொள்ள ஒருவர் தேடிச்சென்று அவர்களை கண்டுபிடிக்க வேண்டும். இது சிறுவர், சிறுமியர் மட்டுமல்லாமல் பெரியவர்கள் கூட விளையாடுவார்கள்.

எத்தனை பேர் விளையாடலாம்?

👉இரண்டிற்கும் மேற்பட்டோர்.

எப்படி விளையாடுவது?

👉முதலில் யார் ஒளிந்து கொள்ள வேண்டும்? யார் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும்? என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும்.

👉விளையாடுபவரின் கண்ணை மற்றொருவர் தன் இரண்டு கைகளால் பொத்திக்கொள்வார்கள்.

கண்ணாமூச்சி ரே.... ரே....

காதறுப்பான் ரே... ரே....

நல்ல முட்டையை திண்ணுப்புட்டு

கெட்ட முட்டையை கொண்டு வா...!!

அல்லது

கண்ணா... கண்ணா... மூச்சி

காட்டு தல மூச்சி....

நல்ல முட்டைய திண்ணுட்டு...

ஊல முட்டைய கொண்டுவா....
👉என பாடிக்கொண்டே மூடியிருக்கும் கண்ணை திறந்து விடுவார்கள். அதற்குள் மற்றவர்கள் எல்லோரும் ஓடி ஒளிந்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் எங்கே ஒளிந்திருக்கிறார்கள் என்பதை தேடி கண்டுபிடிக்க வேண்டும்.

👉ஒளிந்திருப்பவர்களை கண்டுபிடிப்பதற்குள், அவர்கள் கண்ணைப் பொத்தியவரை ஓடி வந்து தொட்டுவிட வேண்டும். தேடுபவரிடம் அகப்படாமல் கண்ணைப் பொத்தியவரை தொட்டுவிட்டால் பழமாவார்கள். அப்படியில்லையென்றால் கண்ணை பொத்தியிருந்தவர் ஒளிந்து இருந்தவரை தொட்டுவிட்டால் அவர்கள் அவுட். இதில் யார் அவுட் ஆகிறார்களோ அவர்கள் கண்ணை பொத்திக்கொண்டு இவ்விளையாட்டை தொடர வேண்டும்.

👉தற்போது உள்ள கால சூழ்நிலையில் இதுபோன்ற விளையாட்டுகளை காண்பது அரிதாகி கொண்டு வருகிறது.

பயன்கள் :

👉தேடிக் கண்டறியும் திறன் மேம்படும்.

👉செவிப்புலன் கூர்மையாகிறது.

👉காட்டிக் கொடுக்கக்கூடாது என்னும் பண்பு வளர்கிறது.

👉தளர்நடைப் பருவத்தில் குழந்தைகளை தாய்மார் கண்ணாமூச்சி விளையாடச் செய்து நடை பழக்குவர்.

👉நல்ல உடற்பயிற்சியும், மனத்தெளிவும் பிறக்கும்.



வீட்டிலிருந்தபடி பணியாற்றுவது எப்படி?

வீட்டிலிருந்தபடி பணியாற்றுவது எப்படி?

'கொரோனா' வைரஸ் பாதிப்பு காரணமாக, பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும், தங்களின் பெரும்பாலான ஊழியர்களை, வீட்டிலிருந்தபடியே பணியாற்றும்படி அறிவுறுத்தியுள்ளன.
கொரோனா பீதியால் பல வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு, அதன் ஊழியர்கள் வேலை இழந்து தவிக்கும் நிலையில், வீட்டிலிருந்தபடியே வேலை பார்ப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவே கருதப்படுகின்றனர். 
அதேநேரத்தில், 'டிவி' பார்க்காமல், குழந்தைகளுடன் விளையாடாமல், வீட்டிலிருந்தபடி பணியாற்றுவது சாத்தியமா என்ற கேள்வியும், சந்தேகமும் எழுந்துள்ளது. 
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, எளிதான ஆறு வழிகள் உள்ளன. அதைப் பற்றி பார்ப்போமா...
நேரம் முக்கியம்!
1.
 வீட்டிலிருந்தபடியே பணியாற்றுவதற்கான நேரம் எது என்பதை, முதலில் வரையறுத்துக் கொள்ளுங்கள். 
'டிவி' பார்ப்பது, குழந்தைகளுடன் விளையாடுவது, உணவு சாப்பிடு வது ஆகியவற்றுக்கான நேரம் எது என்பதை, முன் கூட்டியே முடிவு செய்து, வேலை நேரத்தை சரியாக திட்டமிட்டு, அந்த குறிப்பிட்ட நேரத்தில் பணியாற்ற முயற்சிக்கலாம்.
உங்களின் வழக்கமான வீட்டு வேலைகளால், அலுவலகத்துக்காக பணியாற்றும் நேரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 
நண்பருடன் இணைந்து வீட்டில் தங்கியிருப்பவர் என்றால், அவர் பணியாற்றும் நேரம் எது, நீங்கள் பணியாற்றும் நேரம் எது என்பதை, இருவரும் முன் கூட்டியே பேசி முடிவெடுப்பது நல்லது.
2. 
வீட்டில், நீங்கள் பணியாற்றுவதற்கு ஏற்ற இடத்தை, சரியாக திட்டமிட்டு தேர்வு செய்யுங்கள். 
முதுகு, கழுத்து வலி ஏற்படாமல் தவிர்க்க, அதற்கு ஏற்ற நாற்காலி அல்லது இருக்கையை வாங்குவது நல்லது. 
நீங்கள் பணியாற்றும் இடத்தில் விளக்கு வெளிச்சம் எப்படி இருக்கிறது என்பதும் மிக முக்கியமான விஷயம். 
உங்களுக்கு முன் புறம் அல்லது உங்களுக்கு அருகில் மிகவும் பிரகாசமான வெளிச்சம் தரக் கூடிய விளக்குகள் இல்லாமல் இருப்புது நல்லது. 
வீட்டிலிருந்து பணியாற்றும்போது, உங்கள் முகம் பிரகாசமாக இருக்கிறதா என்பதை, யாரும் கவனிக்கப் போவது இல்லை.
3.
 'கந்தையானாலும் கசக்கிக் கட்டு' என்பது, நம் முன்னோர்கள் கூறியுள்ள பழமொழி. 
'வீட்டில் இருந்தபடி தானே பணியாற்றுகிறோம்; 
அதனால், நைட்டி, அழுக்கு பைஜாமா, பனியன் போன்றவற்றை அணியலாம்' என, நீங்கள் நினைப்பது தவறு. 
அது, உங்களுக்கு கடமை உணர்வு அல்லது பணியாற்றும் திருப்தியை தராமல் போகலாம். 
எனவே, உடலின் மேல் பகுதியில் அணியும் உடை, நாகரிகமான முறையில் இருப்பது நல்லது.
'வெப் கேமரா' மூலமாக, உங்கள் உயர் அதிகாரி பார்த்தாலும், உங்களின் மேல் புறத்தை மட்டுமே பார்க்க முடியும்.
4 .
வீட்டிலிருந்து பணியாற்றும் போது, கவனச் சிதறல் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. 
பக்கத்து அறையிலிருந்து கேட்கும், 'டிவி' சத்தத்தால், பணியிலிருந்து உங்களின் கவனம் திசை மாறாலாம். 
எனவே, வெளியிலிருந்து வரும் சத்தங்கள், உங்கள் கவனத்தை திசை திருப்பாதபடி, 'ஹெட்போன்' அணிவது நல்லது. 
அந்த ஹெட்போனுக்கு, இணைப்பு எதுவும் கொடுக்க வேண்டாம்.
5.
 குழந்தைகள், மனைவி அல்லது கணவர், செல்லப் பிராணிகளால், உங்கள் பணிக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். 
வீட்டில் உள்ளவர்களிடம், 'எனக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்' என, தெளிவாகவும், உறுதியாகவும் முன் கூட்டியே கூறி விடுங்கள். 
உங்களை அணுகுவதற்கு, குடும்பத்தினருக்கான வரையறை அல்லது எல்லை எது என்பதை, தெளிவாக கூறி விடுங்கள்.
'எங்கள் நிறுவனம், என்னிடமிருந்து இன்று, இந்த பணியை எதிர்பார்க்கிறது. அதை செய்து முடிப்பதற்கு ஒத்துழைப்பு வேண்டும்' என, கூறி விடுங்கள்.
6.
வீட்டிலிருந்து பணியாற்றுவதால், ஓட்டல், பார் ஆகியவற்றுக்கு செல்ல முடியாது என்பது உண்மை தான். 
அதற்காக, தனிமையாக இருப்பதாக கருதக் கூடாது. நண்பர்கள், உறவினர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, 'வீடியோ கால்' மூலமாக, அரட்டை அடிக்கலாம். 
இதற்காக, பிரத்யேகமாக சில, 'ஆப்'களும் உள்ளன. அவற்றையும் பயன்படுத்த முயற்சிக்கலாம்.

குழந்தைகளின் நியாபக சக்தி அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

குழந்தைகளின் நியாபக சக்தி அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்


குழந்தைகளின் நியாபக திறனை அதிகரிக்க சில உணவுகளை நாம் அவர்களுக்கு அளிக்கும் போது அவர்களின் மூளை செயல்திறன் அதிகரித்து நியாபக சக்தி அதிகரிக்கிறது.
1)கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும். அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும்.
2)கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை மற்றும் கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.
 

3)மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஒமேகா-3 மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம். பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் டி உள்ளது.
4)இவ்வளவு ஊட்டத்தை அளிக்கிற பாலானது நரம்புத்தசை மண்டலத்தை நன்கு இயக்குவதோடு மற்றும் மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது.
 
5)மூளையின் நியாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன் சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. இதில்உள்ள வைட்டமின்டி அறிவுத்திறனை அதிகரிக்கும்.
6)வைட்டமின் பி மற்றும் குளுக்கோஸ் அதிகம் உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியை அதிகம் சாப்பிட்டால், மூளையானது ஆரோக்கியமாக இருக்கும். நமது உடலுக்கு தினமும் ஏதேனும் ஒரு தானியத்தை சேர்த்தால் நல்லது.
7)பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிலும் பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் ஸ்புரூட்ஸ் போன்றவற்றில் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
மேல கண்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிட கொடுப்பதன் மூலம் அவர்களின் நியாபக சக்தி அதிகரிக்கிறது.

ரத்த அணுக்களை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

ரத்த அணுக்களை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்


  • டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்களுக்கு ரத்த அணுக்கள் வெகுவாக குறைந்திடும் சில நேரங்களில் இதனால் மரணம் கூட ஏற்படுவதுண்டு. இதனை தவிர்க்க, டெங்கு காய்ச்சல் ஏற்படாதவாறு உங்களை பாதுகாத்துக் கொள்வதுடன் ரத்த அணுக்களை மேம்படுத்தும் உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • ரத்த அணுக்களை மேம்படுத்துவதில் பப்பாளிப் பழம் மிகச்சிறந்த இடம் வகிக்கிறது. பழத்தை விட பப்பாளி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.சிகப்பு வைரம் என்று புகழப்படும் மாதுளம்பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது.
  • அதனால் ஹீமோக்ளோபினை அதிகப்படுத்தும். மாதுளம்பழத்தில் விட்டமின்ஸ்களும் இருப்பதால் உங்களுக்கு உடல் வலிமையையும் கொடுத்திடும். இது டெங்கு வைரஸுக்கு எதிராக போராடவும் செய்திடும்.ப்ரோட்டீன் நிறைந்த மீன்,நண்டு,சிக்கன் போன்ற உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள். அவை உங்களின் ரத்த அணுக்களை மேம்படுத்துவதுடன் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.விட்டமின் ஏ நிறைந்த பூசணிக்காய் அல்லது பூசணிப்பழம் சாப்பிடலாம். இது நம் ரத்தத்தில் உள்ள ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்திடும்.
  • அதே போல உடலில் உள்ள செல்களில் ப்ரோட்டீன் அதிகரிக்கச் செய்திடும். இதனால் ப்ளேட்லெட்ஸ் அதிகரிக்கும்.ரத்த அணுக்களை மேம்படுத்த விட்டமின் சி நிறந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். இது சிறந்த ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் ஆகவும் செயல்படும். இதனால் ரத்த அணுக்கள் பாதுகாக்கப்படும். ஒரு நாளைக்கு 400 முதல் 2000 கிராம் அளவில் விட்டமின் சி எடுத்துக் கொள்ளலாம்.

உங்கள் உயரத்தை அதிகரிக்க நீங்கள் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்

உங்கள் உயரத்தை அதிகரிக்க நீங்கள் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்


உங்கள் உயரத்தை 3 முதல் 5 அடி வரை அதிகரிக்க விரும்புகிறீர்களா அல்லது இங்கே 4 முதல் 6 அடி வரை அதிகரிக்க விரும்புகிறீர்களா? நீங்கள் தினமும் ஓடவோ குதிக்கவோ அல்லது தவிர்க்கவோ கூடாது. இந்த விஷயங்களை தினமும் சாப்பிட்டு உங்கள் உயரத்தை அதிகரிக்கவும்.
அன்னாசிபழம்:
அன்னாசிப்பழம் போதுமான தூக்கத்தைப் பெற உங்களுக்கு உதவும், உங்களுக்கு போதுமான தூக்கம் வந்தால் நீங்கள் அதிக அளவு HGH ஐ உற்பத்தி செய்வீர்கள், மேலும் இந்த HGH உங்கள் உயரத்தை அதிகரிக்க உதவும். இது சிறந்த செரிமானத்திற்கும் உதவும்.
2. சால்மன் மீன்:
சால்மன் ஒரு புரதம் நிறைந்த உணவு. இதில் ஒமேகா -3 உள்ளது, இது இரண்டு வகையான அமிலங்களை உற்பத்தி செய்கிறது, இது உங்கள் உடலின் வளர்ச்சிக்கு உதவும் டி.எச்.ஏ ஆகும், மற்றொன்று ஈ.பி.ஏ ஆகும், இது உங்களை இதய நோயிலிருந்து தடுக்கும்.
3. ஆரஞ்சு:
ஆரஞ்சு மற்றும் பிற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது மற்றும் வைட்டமின் சி நம் உடலின் ஒவ்வொரு திசுக்களையும் வளர்க்க உதவுகிறது.
4. முட்டை:
பருக்கள் பருக்கள் அல்லது வளர்ச்சிக்கு பல வழிகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேய்ச்சல் முட்டைகள் சாதாரண முட்டைகளை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் அவை ஒமேகா -3 மற்றும் வைட்டமின் ஏ ஆகியவற்றில் நிறைந்துள்ளன, இது வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.
5. பாதாம்:
பாதாம் மிகவும் பயனுள்ள உலர் பழங்கள். அவை பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றில் நிறைந்துள்ளன. அல்சைமர் நோய் மற்றும் பிற நச்சு நோய்கள் போன்ற பல நோய்களிலிருந்து அவை உங்களைப் பாதுகாக்கின்றன.

பெண்கள் ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் எவை??

பெண்கள் ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள் எவை??


ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க வேண்டியது அவசியமாகும். ஹீமோகுளோபின் அளவு குறையும் பொழுது தலைவலி சீரற்ற இதய துடிப்பு மூச்சடைப்பு மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவது இரும்பு சாது குறைவது போன்றவற்றால் ஹீமோகுளோபின் அளவு குறைகின்றது. வைட்டமின் சி பற்றகுறை இருந்தாலும் ஹீமோகுளோபின் அளவு குறையும். 
மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறையும். போலிக் அசிட் குறைபாடு இருந்தாலும் ஹீமோகுளோபின் அளவு குறையும். ஹீமோகுளோபின் அளவு சீராக இருப்பதற்கு நமது சத்தான உணவுகளை சாப்பிட்டாலோ போதுமானது. முருங்கைக்கீரை சுண்டக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. கொண்டைக்கடலை மற்றும் பச்சை பயிறு முளைகட்டி சாப்பிடலாம். சுண்டவத்தல் குழம்பு வயிற்றில் உள்ள பூச்சிகளை கொள்ளும் எள்ளலுருண்டை சாப்பிடுவது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
திராட்சை மற்றும் மாதுளை போன்ற பழங்களை சாப்பிட வேண்டும். கருவேப்பிலை துவையல் பொன்னாங்கண்ண கீரை நெல்லிக்காய் போன்றவை நல்லது. எலும்பு சூப் போன்றவற்றை சாப்பிடலாம். இந்த உணவு வகைகளை சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். 

ஆண்களுக்கு விந்தணு அதிகரிக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்

ஆண்களுக்கு விந்தணு அதிகரிக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்


ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் போதிய அளவில் இருக்க வேண்டும் இந்த ஹார்மோன்தான் ஆண்களில் பாலியல் தன்மையை வெளிப்படுத்தும் டெஸ்டோஸ்டிரோன் தான் பாலுணர்ச்சியைத் தூண்டும் இது ஆண்களுக்கு குறைந்துவிட்டால் தூக்கமின்மை எப்போதும் இதுபோல் சோர்வாக இருப்பது விந்து குறைவாக வெளியேறுவது போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இலந்தப்பழம்,அத்திப்பழம், விழாம்பழம், செவ்வாழை,ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, தர்பூசணி இவையெல்லாம் விந்தணுவை அதிகரிக்க உதவும். பாதாம்,முந்திரி,உலர் திராட்சை, நிலக்கடலை, பூண்டு இவைகளும் விந்தணு அதிகரிக்க உதவும்.
விந்தணுக்களை அதிகரிக்க உணவு முறையில் சிறு மாற்றங்களை கொண்டு வந்தால் போதும். அடிக்கடி சூரிய ஒளி ஆண்களின் உடம்பில் பட வேண்டும். விந்தணு பெருக வைட்டமின்-டி அவசியம். சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது. புகை, மது, காபி தவிர்க்க வேண்டும். முந்திரி, ஆப்பிள், தர்பூசணி வைட்டமின் சி உணவுகள். மிளகு, தக்காளி, வாழைப்பழம், பசலைக்கீரை, பூண்டு, மாதுளை போன்றவைகளை விந்தணுக்களை அதிகரிக்கும்.
விந்தணுக்கள் வலிமை இழக்க ஒரு முக்கிய காரணம் உடலில் வைட்டமின் டி குறைவது. தேவையான அளவு வைட்டமின் டி இருக்கும் போது விந்தணுக்கள் வலிமையடைகின்றன. சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது. முந்திரிப் பருப்பில் அதிகமான ஜீன் சத்து கருவுருதல் தன்மையை அதிகரிக்கும். ஆண்கள் அதிகமாக சாப்பிட்டால் விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். அதிலும் ஆப்பிள் சீடர் வினிகரை சாப்பிட்டால் நம்பமுடியாத அளவில் தீர்வு கிடைக்கும்.
அத்திப்பழம்: அத்திப்பழத்தை தினமும் 2 சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம். அத்திப் பழத்தில் கால்சியம், வைட்டமின் சி, இரும்புச் சத்துக்கள், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. உலர்ந்த அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளன. ஒரு உலர்ந்த அத்திப்பழமானது அன்றாடம் நமக்கு தேவையான கால்சியத்தை மூன்று மடங்கு தருகிறது. இதனை தினமும் சாப்பிட்டால் எலும்புகள் பலப்படும். 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் 50 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது அன்றாட நமக்கு தேவைப்படும் நார்ச்சத்தில் 20 சதவீதத்தை நமக்கு தருகிறது. எனவே இந்த பழத்தை காலையில் உட்கொண்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
அத்திபழத்தில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது. அத்திப் பழத்தை தினமும் இரண்டு சாப்பிட்டால் 2% இரும்புச்சத்து கிடைக்கும். உடலின் ஹீமோகுளோபினை எடுத்துச் செல்வதற்கு இரும்புச் சத்து மிகவும் இன்றியமையாதது. எனவே இதனை தினமும் 2 சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை வராது. வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ள அத்திப்பழத்தை தினமும் உட்கொண்டு வருவோருக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் பலமாக இருக்கும்.விந்து அதிகமாகும்.
முருங்கை: முருங்கைப் பிசினை எடுத்து நன்கு கழுவி, பின்னர் வெயிலில் 3 நாட்கள் காய வைக்க வேண்டும். பின்னர் மூன்று பிசினை எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் ஜெல் போன்று விரிந்து விடும். அந்தத் தண்ணீரை வடிகட்டி காலை, இரவு சாப்பிட்ட பின் குடிக்க வேண்டும். இதனை தினமும் குடித்து வந்தால் ஒரு வாரத்தில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். இது ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உடலுறவு திறனை அதிகரிக்கும். விந்து அதிகமாகும். விந்து கெட்டிப்படும். விந்து தானே வெளியேறுவதை நிறுத்தும்.
தர்பூசணி: தர்பூசணி பழத்தில் லைசோபைம் மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளன. இதனை அதிகம் சாப்பிட்டால் விந்தணு அதிகரிப்பதோடு ஆரோக்கியமாகவும் வாழலாம்.
வைட்டமின் சி: வைட்டமின் சி அதிகம் இருக்கும் பழங்கள் சாப்பிட்டால் ஆண்கள் விந்தணுவின் அளவை அதிகரிக்கலாம். வைட்டமின் சி உள்ள சிட்ரஸ் பழங்களில் விந்தணுக்கள் அதிகமாக இருக்கும்.
மிளகு:மிளகு விந்தணுக்களை அதிகரிக்க உதவும் உணவுகளில் ஒன்று. இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் விந்து அதிகரிக்கும். இதில் வைட்டமின் சி பி ஏ இ சத்துக்கள் உள்ளன.
தக்காளி: தக்காளி ஒரு டம்ளர் குடித்து வந்தால் விந்தணு அதிகரிக்கும்.
பசலைக்கீரை: பசலைக் கீரையில் அதிகம் உள்ளது. இது விந்தணுவின் உற்பத்தியை அதிகரித்து விந்தணுவில் உள்ள டி என் ஏவை பாதுகாக்கிறது.

ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய சில முக்கிய உணவுகள்!

ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய சில முக்கிய உணவுகள்!


  • பூண்டில் உள்ள அல்லிசின், மிகச்சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் ஆகும். இது ஆண்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் மற்றும் பக்கவாதம் வரும் அபாயத்தைக் குறைக்கும்.
  • ஆலிவ் ஆயிலில் மோனோ அன் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இத்தகைய ஆலிவ் ஆயிலை சமையலில் பயன்படுத்துவதன் மூலம், இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.
  • பசலைக்கீரையில் இரும்புச்சத்து, வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து முழுமையாக நிறைந்துள்ளது. அதோடு, இதில் பீட்டா-கரோட்டீனும் நிறைந்துள்ளதால், பார்வை பிரச்சனை வருவதைத் தடுக்கும்.
  • பூசணிக்காயில் இருக்கும் அதிகளவிலான ஜிங்க் சத்து, எலும்புகளின் அடர்த்தி மற்றும் வலிமையை மேம்படுத்த உதவும்.

பெண்கள்” கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

பெண்கள்” கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்


சுமங்கலி பெண்கள் தினமும் காலை, மாலை, என இரு வேளையிலும் திரு விளக்கு ஏற்றவேண்டும்.
பெண்கள் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்யக்கூடாது. பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது.
பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்கவிட்டு நடக்கக்கூடாது. கண்டிப்பாக, கோவிலில் அப்படிச் செய்யவே கூடாது.
திருமாங்கல்யத்தை மஞ்சள் கயிற்றில் மட்டுமே கோர்த்து அணிய வேண்டும்.
கோலமிடும் போது தெற்கு பார்த்து நின்று கொண்டு கோலம் போடக்கூடாது. கிழக்கு மற்றும் மேற்கு திசையை பார்த்தவாறு கோலம் போடுவது மிகவும் சிறந்ததாகும்.
திருமணமான பெண்கள், ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு, மூன்று, மெட்டி அணிய கூடாது. அணிவதனால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல் வருமானம்) பாதிப்படையும்.
கோவில்களில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது.
கோவிலில் தெய்வத்தை வணங்கும்பொழுது, பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக் கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்க வேண்டும்.
சுமங்கலிப் பெண்கள் தலை குளிக்கும் போது, முதலில் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டு, பிறகு குளிக்க வேண்டும்.
அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.
பெண்கள் கிழக்கு திசையை பார்த்தவாறு குங்குமத்தை நெற்றியில் இரண்டு புருவங்களுக்கு மத்தியிலும், உச்சந்தலையிலும் வைத்துக்கொள்ள வேண்டும். திருமணமாகாதவர்கள், உச்சந்தலையில் வைத்துக்கொள்ளும் பழக்கத்தை கைவிட வேண்டும்.
கர்ப்பமான பெண்கள் உக்கிர தேவதைகள் இருக்கும் கோவிலுக்குப் போகக்கூடாது. தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கக்கூடாது. தேங்காய் உடைக்கக்கூடாது.

ரத்தப் புற்று நோய் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!

ரத்தப் புற்று நோய் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!!


  • ரத்தப் புற்று நோய் ரத்த செல்களில் புற்று நோய் செல்கள் உருவாகி அவை இரு மடங்கு பெருகுவதால் உண்டாகிறது. எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகும் ரத்த செல்களில் மரபணு மாற்றம் உண்டாகி அவை புற்று நோய் செல்களாக மாறி இரட்டிப்பாகிறது. இதுவே ரத்தப் புற்று நோயாகும்.
  • ரத்த செல்களில் ஹீமோகுளோபினால் சிவப்பு நிறம் உண்டாகிறது. அசாதரண வளர்ச்சி கொண்ட புற்று செல்களுக்கு ஹீமோகுளோபின் அமைப்பு மாறுபடும். இதனால் வெளிர் நிறம் வரும்.
  • தொடர்ச்சியாக வேலை செய்ய இயலாது. தலை சுற்றும். உடல் மிகவும் சோர்வடையும்.
  • உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக முக்கியமானது ரத்த செல்களான வெள்ளையணுக்கள். லுகீமியா நோயால் வெள்ளையணுக்கள் உற்பத்தியாகாது. இதனால் தொடர்ச்சியாக நோய் வாய்படுவார்கள்.