திங்கள், 30 அக்டோபர், 2017

அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள் !...



அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள் !...

டிவி நாடகங்களில் வரும் அழுகைகள், குமுறல்கள், ஒப்பாரிகள், உரக்கக் கத்திப் பேசுதல், சோக இசைகள் மற்றும்
சாவு மேளதாளம் இசைகள் இவையெல்லாம்
உங்கள் வீட்டில் இருக்கும் லக்ஷ்மி கடாக்ஷத்தைச் சீர் குலைத்து கெடுத்து விடும்.

இதனால் அபசகுனமான
நிகழ்ச்சிகளின் காட்சிகள் TVக்குள் நடந்தாலும்
அதன் ஒளி ஒலி அதிர்வுகளின் நிகழ்வுகள்
நமது வீட்டிற்குள்ளேயே நடப்பதால் குடும்பத்தில் பல பிரச்சனைகள் உருவாகும் என்பது அசைக்க முடியாத ஆன்மீக நம்பிக்கையாளர்களின் ஆய்வு ஆகும்.

இதனால் பல நோய்கள் வரலாம்
வீட்டில் பணம் தங்காமல் போகலாம்,
வீண் செலவுகள் ஏற்படலாம்
தொழில் நஷ்டம் ஏற்படலாம்,
என்று இப்படி பட்ட அதிர்ச்சி தரும் ஆன்மீக  ஆய்வு முடிவுகள் ஒரு பக்கம் எச்சரிக்கை செய்கிறது..

அதை சமயம் ஆன்மீக நம்பிக்கை இல்லாதவர்களுக்கும்
அதிர்ச்சி தரும் மருத்துவ ஆராய்ச்சி
ஆய்வு முடிவுகள் மிகவும்  அபாயகரமானதாக உள்ளது.

ஆம்
உங்கள் உடல் நலத்தையும் சீரழித்து விடும்
அதிர்ச்சி ரிப்போர்ட்...

இதனால்
கண் பார்வை கோளாறில் ஆரம்பித்து
மன இறுக்கம்
மன அழுத்தம்
மன நோய் வந்து...
உடல் எடை அதிகரித்து....
இதன் தொடர்ச்சியாக...
சர்க்கரை வியாதி,
மாரடைப்பு, இருதய கோளாறு,
ரத்த அழுத்தம்,
கழுத்து எலும்பு தேய்மானம் ,
தலைசுற்றல், தலைவலி,
மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தமான பிரச்சனைகள் வரும்...

இதற்கு எல்லாம்
முக்கியமாக'  காரணம்....
பிறரை எப்படிக் கெடுப்பது, அழிப்பது, துன்புறுத்துவது,

கணவன் மனைவிக்குள்
ஒருவரை ஒருவர் ஏமாற்றி
கள்ளக்காதல் தொடர்பு எப்படி என்று கற்றுக் கொடுக்க படுகிறது....

குடும்பத்தினருக்குள்
மாமியார் மருமகள் சண்டை,
அண்ணன் தம்பி சண்டை,
சந்தேகப்படுவது,
சகுனி வேலை பார்ப்பது,
எல்லாம் கற்றுக் கொள்ளலாம்.

எப்படி லஞ்சம் பெறுவது!!!
கற்றுக் கொள்ளலாம்.

அதோடு
நேர்மையான அரசு அதிகாரிகளை
எப்படி லஞ்சம் வாங்கியது போல்
திட்டமிட்டு மாட்டி விடுவது
என்றும் கற்றுக்கொடுக்க படுகிறது .

பிறர் தொழிலை எப்படி கெடுப்பது
எப்படி நம்பிக்கை துரோகம் செய்வது
என்பது எல்லாம்  காண்பிக்கப்பட்டு
மக்களுக்கு பழக்குவிக்கப்படுகிறது.

இவை எல்லாவற்றையும் விட
பெரிய பேரிழப்பு உங்கள் அருமை குழந்தைகளின் விலை மதிப்பற்ற எதிர்காலம் பாழாக்கப்படுகிறது.

இத்தனை பாதிப்புகள் தெரிந்ததும்
தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் TRP ரேட்டிங் அதிகரித்திட சுய லாபத்துக்காக இப்படி பட்ட  மக்களைச் சீரழிக்கும் டிவி சீரியல்கள் தயாரித்திட முக்கியத்துவம் தருகிறது..

தயவு செய்து மக்களே,
இது போன்ற கேவலமான நாடகங்களைப்  புறக்கணியுங்கள்..
நாம் புறக்கணித்தால் தானே TRP ரேட்டிங் குறைந்து தொலைக்காட்சி நிறுவனங்கள் மக்களை சீரழிக்கும் சீரியல்களை தானே நிறுத்தி விடுவார்கள்.

நமது செயல் மட்டும் இல்லை எண்ணங்களும் நமது கர்மாதான்.

எனவே உங்கள் விலை மதிப்பு இல்லாத
ஓய்வு நேரத்தை அன்பான குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள கணவன், மனைவி, பெரியவர்களோடும் சிரித்து பேசி பாசத்துடன் பழகி வாழ்க்கையை அனுபவியுங்கள்.

குறைந்த நேரம் நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாருங்கள்.
மற்ற நேரங்களில்
நல்ல புத்தகங்களைப் படியுங்கள்.. .
கிடைக்க கூடிய பொன்னான நேரங்களில்
பிறருக்கு நன்மை செய்யும் நல்ல
காரியங்களிலும் ஈடுபடுங்கள்.

இல்லையேல் வரும் பலன்களை
நல்லதோ கெட்டதோ
நீங்கள் தான் அவற்றை TV பார்த்து
உருவாக்கினீர்கள் என்பதை உணர்ந்து
அனுபவிக்க தயாராகுங்கள்.

அல்லதை விடுத்து
நல்லதை பாருங்கள் , கேளுங்கள்
பேசுங்கள், சிந்தியுங்கள்
வாழ்வில் எல்லாம் நல்லதாய்
நடக்கும் நண்பர்களே.

தீதும் நன்றும் பிறர் தர வாரா
நம்மை சுற்று நடப்பனவற்றுக்கு
நாமே பொறுப்பு........

எண்ணம் போல் வாழ்க்கை
==========================
பகிருங்கள்.

வெள்ளி, 27 அக்டோபர், 2017

நட்பு எப்படி உடைகிறது காரணங்கள்.



நட்பு எப்படி உடைகிறது காரணங்கள்.

*இரண்டு நண்பர்களில் ஒருவர்*, *மற்றொருவர் வேலைப்பளுவில் (பிசியாக) இருக்கிறார் என்று நினைக்கலாம்.*
*எனவே அவரை தொடர்பு கொண்டு பேசினால் அது அவருக்கு தொந்தரவாக இருக்கும் என்று நினைத்து தொடர்பு கொள்ளாமல் இருக்கலாம்.*
*காலம் செல்லசெல்ல* *"நாம் ஏன் தொடர்பு கொள்ள வேண்டும்*..
*அவர் நம்மை தொடர்பு கொள்ளட்டுமே" என்ற சிந்தனை உருவாகும்.*
*மேலும் சிறிது காலம் செல்லும்போது இது மற்றொரு விதத்தில் தீவிரப்படும்.*
*அதாவது, அவர் நம்மை முதலில் தொடர்பு கொள்ளட்டும்*..
*பிறகு நாம் பேசுவோம் என்று நினைப்பு இருவரின் மனதிலும் பரஸ்பரம் தோன்றும்.*
*இங்கு என்ன ஆகிறது? நட்பால் விளைந்த அன்பு வெறுப்பாக மாறுகிறது*.
*இறுதியில் அவ்விரு நண்பர்களுக்குள் தொடர்பு இல்லாமல் போனதால்*, *நட்பால் விளைந்திருந்த பசுமை நினைவுகள் மறந்து போகிறது.*
*ஒருவர் மற்றொருவரை மறந்து போகிறார்.*
*எனவே நட்பு தொடர்ந்து நீடிக்க* *அடிக்கடி நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள்.*
*நட்பு சிறக்க பத்து பொன் விதிகள்*:
1 . *நட்பு இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்க்க சோதனை ஏதும் வைக்காதீர்கள்.*
2 . *மேலும் நண்பரிடம் உதவி ஏதும் கேட்க நினைத்தால் அவரின் நிலை அறிந்து கேளுங்கள்.*
3. *நண்பரே குறிப்பறிந்து உதவி செய்தால் அதற்கு நன்றி தெரிவியுங்கள்.*
4. *ஆனால் அதே நேரத்தில் நாம்தான் அவருக்கு உதவி செய்திருக்கிறோமே என்று அவரிடமிருந்து பிரதி உதவி எதிர்பார்க்காதீர்கள்*.
5. *நண்பர் உதவவில்லையானால் "* *அவருக்கு என்ன சூழ்நிலையோ*,
*கஷ்டமோ தெரியவில்லை?*" *என்று நினைக்கப் பழகுங்கள்.*
6. *உதவ முடியாத நிலைக்கு நண்பர் வருத்தம் தெரிவித்தால், அதை ஏற்றுக்கொண்டு பழையபடி நட்பை தொடருங்கள்.*
7. *நண்பருக்கு கஷ்டம், துன்பம் என்று கேள்விப்பட்டால் அதை அறிந்து முடிந்த உதவி செய்யுங்கள். பக்கத்துணையாக நில்லுங்கள்.*
*நல் ஆலோசனை நல்குங்கள்.*
8 . *நண்பர் தன் கஷ்டத்தை முதலில் சொல்லட்டும், பிறகு உதவி செய்யலாம் என்று இருப்பது நட்புக்கு நன்று அல்ல*.
9 . *அதே போன்று நண்பர்களிடம் சோகத்தை பகிர்ந்து கொண்டால் அது பாதியாகும்.*
10 . *அவ்வாறே மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டால் அது இரட்டிப்பாகும்.*
*வாழ்க நண்பர்கள் ! வளர்க நட்பு !!*

பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்.....



பெண்களுக்கு ஹீமோகுளோபின் அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்.....

தங்கள் அம்மா,மனைவி,பெண் குழந்தைகள்.... அவசியம் சாப்பிடவேண்டும்....

1.முருங்கைக்கீரை
2.சுண்டக்காய்
3.சிவப்பு கொண்டைக்கடலை அல்லது பாசிப்பயறு அவித்து சாப்பிடுனும்
4.சுண்ட வற்றல் குழம்பு....(வயிற்றில் பூச்சிகளை கொல்லுமாம்)
5.எள் உருண்டை
6.திராட்சை,மாதுளை
7.கறி வேப்பிலை துவையல்
8.பீர்க்கங்காய்
9.உளுந்து களி
10.கறுப்பு ,உளுந்து இட்லி,தோசை
11.பொன்னாங்கன்னி கீரை
12.வெள்ளாட்டு கறி......எலும்பு சூப்,ஈரல்
13.நெல்லிக்காய்..

அனைவருக்கும் பகிரவும்.....

ஆறுமாதத்தின் பின் குழந்தைகளுக்கான இணை உணவு



ஆறுமாதத்தின் பின் குழந்தைகளுக்கான இணை உணவு

♥ஆறு மாதத்திற்குப் பிறகு தாய்ப்பால் மட்டுமே குழந்தையின் வளர்ச்சிக்குப் போதாது. ஆறு மாதத்திற்குப் பிறகு குழந்தைக்குக் கொடுக்கப்படும் உணவுகள் இணை உணவுகள் எனப்படும். இவைகள் வீட்டிலே தயார் செய்யப்பட்டதாக இருக்கும் போது குழந்தை எளிதில் பழகிவிடும். ஏனெனில் கர்ப்ப காலத்தில் தாய் உண்ட உணவும் பின் தாய்ப்பால் மூலமாக நேரடியாகவும், வீட்டு உணவின் ருசி மூளையில் பதிவாகி இருப்பதால் இது சுலபமாகும்.

#இணை உணவை 6 மாதத்திற்கு முன் ஏன் கொடுக்கக் கூடாது?

♥குழந்தையின் குடல், உணவின் செரிமானத்திற்கு 6 மாதத்தில் தயாராக உள்ளது.  6 மாதம் முன் இணை உணவு தரும் போது, தாய்ப்பால் குடிக்கும் நேரம் மற்றும் தடவைகள் குறைந்து சுரப்பும் குறைந்து விடும். ஊட்டச்சத்து குறைவு ஏற்படலாம். அதே போல் இணை உணவு ஆரம்பிப்பதை 6 மாதத்திற்குப்பின் தள்ளிப்போடவும் கூடாது. அறிவில் சிறந்த நம் பண்டைய சமுதாயம் நம் பாரம்பரிய முறையான அன்னம் ஊட்டுதலை 6 வது மாதத்தில் கடைப்பிடித்தது.

♥பூப்போன்ற வளரும் குழந்தைகளுக்கு, அன்றன்றைக்கு வீட்டுப் பக்குவத்தில் தயாரான சுத்தமான,  ரசாயன பொருள் சேராத சாதா உணவானது, தாயின் அன்பு, பாசத்துடன் சேர்ந்து, மிகச்சிறந்த உணவாக மாறும். குழந்தையும் விரும்பி உண்ணும்.

♥அடைத்து விற்கப்படும் உணவுகளில் ருசிக்காகவும், வாசத்திற்காகவும், இனிப்பும், வேதிப்பொருட்களும், மணமும் கலந்து இருக்கும். உணவு பழகும் பருவமான 6 மாதத்திலிருந்து 10 மாதம் வரை எந்த உணவினை தருகிறோமோ அதன் ருசிக்கு குழந்தை பழகிவிடும்.  டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் உடனடி உணவுகளை மட்டும் தந்து பழக்கிவிட்டால் சத்துள்ள கீரை, பருப்பு மற்றும் பயிறு வகைகளை கண்ணெடுத்தும் பாராது. சாப்பிடவும் சாப்பிடாது.

#வீட்டு இணை உணவு ஏன் தர வேண்டும்?

♥வீட்டு உணவினைத் தரும் போது தானும் வீட்டின் அங்கம் என்ற உணர்வு வளரும்.  கட்டாயப்படுத்தி படுக்க வைத்து திணிக்க வேண்டாம். ஒரு வயதிற்கு மேல் தானாகவே சாப்பிட ஊக்குவிக்க வேண்டும். இதனால் வாய் மற்றும் கையின் ஒத்தசையும் வளரும். சாப்பாடு ஊட்டும் போது கதை சொல்லுங்கள், பேசுங்கள், உடலுடன் அறிவும் வளரும்.

♥முதலில் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டும் தரவும். 6 மாதங்களுக்கு பிறகு அரிசிக்கஞ்சி (அ) பருப்புக்கஞ்சி, காய்கறி, கீரை, முளைகட்டி பின் வறுத்து அரைத்த கோதுமை, ராகி பவுடரில் (2-3 ஸ்பூன்) உப்பு சேர்த்து கஞ்சி (இதனுடன் எண்ணெய் (அ) நெய் ¼ - ½  ஸ்பூன் சேர்க்கலாம்), மசித்த வாழைப்பழம் இவைகளை 1-2 வாரங்கள் தந்து ருசி பழக்கவும்

♥வீட்டில் உணவினைத் தயாரிக்கும் போது காரம் போடாமல் செய்யவும். அதனை 6 கிண்ணங்களில் எடுத்து வைத்து சிறிது சிறிதாகப் பிரித்து வைத்து, 6 வேளைகளில் தரவும். குழந்தையின் இரைப்பையின் கொள்ளளவு குறைவாக இருக்கும். எனவே 6 முறை தருவது அவசியம்.

6 மாதங்களுக்கு பிறகு 9 மாதங்கள் வரை

 ♥இட்லி (அ) தோசை - தொட்டுக்கொள்ள காரம் போடாத சாம்பார், சட்னி

♥அரிசி உணவுடன் 1 ஸ்பூன் பருப்பு, காய்கீரை, தானிய வகைகள்

♥சப்பாத்தி ½ முதல் 1 (அல்லது) ராகிக்களி, பருப்பு, மசித்த வாழைப்பழம், உப்புமா, பொங்கல்

♥குழந்தைக்கு பல் முளைக்கும் வரை மசித்தோ (அ) மிக்சியில் அரைத்தோ தரலாம்.  அதனால் உணவில் சத்துக்குறைவு ஏற்படாது.

9 முதல் 12 மாதங்கள்

♥தாய்ப்பால் தொடரவும்.  இட்லி (அ) தோசை வீட்டில் செய்த சட்டினி சாம்பார் உடன் 1 முதல் 2 வரை கொடுக்க வேண்டும்.

♥காய் கீரைப்பருப்பு, எண்ணெய்(அ) நெய் ½ -1 ஸ்பூன்.
பழம் ஒன்று (அ) ½ முட்டை முதலில் மஞ்சள் பின் வெள்ளைக்கரு (அ) 4 முதல் 5 துண்டு மாமிசம் (அ) 30 கிராம் மீன் கொடுக்கவும்.

♥வேகவைத்த பருப்பு, தானிய வகைகள் கொடுக்கவும், தானாக சாப்பிடச் செய்யவும் தூய்மையான குடிநீர் கொடுக்கவும்.

#பழவகைகள்

♥எந்தக் காலத்திலும் எங்கும் சுலபமாகக் கிடைக்கக்கூடிய ஆப்பிள், பப்பாளி, சப்போட்டா, மாதுளம் நல்லது.  ஒவ்வாமை உள்ளவர்கள் எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு, பூம்பழம் மற்றும் புளிப்பு மிகுந்த பழங்களை தவிர்க்கலாம்.

♥வேகமாக வளரும் குழந்தையின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதில் தானியத்தை முளைகட்டுவது, மிகவும் பலனளிக்கும். தானியத்தை முளை கட்டுதலினால் உண்டாகும், அமைலேஸ் சத்து கூட்டுச் சக்கரையை (பாலி சாக்கரைட்ஸ்) தனிச் சர்க்கரையாக மாற்றுகிறது. இந்த அமைலேஸ் சத்து கலந்த மாவுக்கஞ்சியின் அடர்த்தி குறைவு, மணமும் ருசியும் அதிகம். எனவே, குழந்தையால் எளிதில் அதிக அளவு குடிக்க முடிகிறது. எளிதில் ஜீரணிக்கவும் முடிகிறது.

♥தானியக் கலவை கூடுதல் சத்து அளிக்கும். முழு தானியங்கள் மிகச் சிறந்தது.

♥எளிதில் ஜீரணிக்கக் கூடிய உடைத்த கடலை, பயத்தம் பருப்பை (பாசிப்பருப்பு) குழந்தைகளுக்கான இணை உணவு தயாரிப்புகளில் பயன்படுத்துதல் மிக நல்லது. இணை உணவுடன் சிறிது எண்ணெய் அல்லது நெய் சேர்த்தால் கூடுதல் சக்தி கிடைக்கும்.

♥தயாரிக்கும் போது சுத்தம், சுகாதாரம் கடைபிடிக்க வேண்டும். சுத்தமான கிண்ணம், ஸ்பூன் உபயோகித்து இணை உணவு ஊட்ட வேண்டும்.

6 மாதம் முதல் குழந்தைகளுக்கான சத்துணவில் இணை உணவுக் கலவைகள்:

#கலவை 1 :

♥கேழ்வரகு (ராகி) - 100 கிராம், உடைத்த கடலை - 25 கிராம், சர்க்கரை - 30 கிராம்

♥செய்முறை: கேழ்வரகை கல் நீக்கி சுத்தம் செய்து, சுமார் 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பின் வடித்து, சுத்தமான மெல்லிய துணியில் கட்டி சுமார் 12 மணிநேரம் கழித்து, மூட்டையை அவிழ்த்து, சுமார் 6 மணிநேரம் நிழலில் காய வைக்க வேண்டும். பிறகு வாணலியில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உடைத்த கடலையைச் சுத்தம் செய்து, வறுத்த கேழ்வரகு, சர்க்கரையுடன் சேர்த்து அரைத்து காற்றுப்புகாத, ஈரம் இல்லாத டப்பாவில் கெட்டியாக மூடி வைத்து குழந்தைகளுக்கு தேவைப்படும் அளவில் கஞ்சி தயாரித்து ஊட்டலாம்.

#கலவை 2 :

♥அரிசி - 100 கிராம், கேழ்வரகு - 100 கிராம், பாசிப்பருப்பு - 25 கிராம், உடைத்த கடலை - 25 கிராம், சர்க்கரை - 60 கிராம்

♥செய்முறை : அரிசி பாசிப்பருப்பைத் தனித்தனியே வாணலியில் லேசாக சிவக்கும் வரை வறுக்கவும். கேழ்வரகை முன்னர் கூறிய முறையில் தயார் செய்துக்கொள்ளவும். உடைத்த கடலையைச் சுத்தம் செய்து, வறுத்த தானியம் மற்றும் பருப்பு, சர்க்கரையைச் சேர்த்து அரைத்து, சுத்தமான டப்பாக்களில் போட்டு காற்றுப்புகாமல் வைத்து தேவைப்படும் போதெல்லாம் கொடுக்கலாம்.

♥9 மாதம் முதல் 2 வயது வரை குழந்தைகளுக்கான சத்துணவில் இணை உணவுக் கலவைகள்:

♥கலவை 3 : கேழ்வரகு - 100 கிராம், கோதுமை - 100 கிராம், பாசிபருப்பு - 25 கிராம், உடைத்த கடலை - 25 கிராம், சர்க்கரை - 60 கிராம்.

♥கலவை 4 : அரிசி - 50 கிராம், கம்பு - 50 கிராம், கேழ்வரகு - 50 கிராம், பொட்டுக்கடலை - 25 கிராம், பாசிப்பருப்பு - 25 கிராம், சர்க்கரை - 60 கிராம்.

♥செய்முறை : மேற்கூறியது போல் தயாரிக்கவும்.

♥மேற்கூறிய கலவைகளைச் சுத்தமாகத் தயாரித்து, சுத்தமான டப்பாக்களில் காற்றுப்புகாமல் அடைத்து வைத்தால் சுமார் 2 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

♥இதுபோல ஆங்காங்கு அதிக அளவில் கிடைக்கக் கூடிய தானியங்கள் பருப்பு அல்லது பயறு வகைகள் சேர்த்து இணை உணவுக் கலவைகளை நாமே சுலபமாகத் தயாரிக்கலாம். இக்கலவைகளைக் கொண்டு கஞ்சி, லட்டு, புட்டு, கொழுக்கட்டை, தோசை மற்றும் உப்புமா போன்ற குழந்தைகளுக்கு ஏற்ற மிருதுவான உணவுகளைத் தயாரிக்கலாம். இக்கலவையுடன் கீரைகள், காய்கறிகள், தக்காளி போன்றவற்றைச் சேர்த்து கண்ணுக்குக் கவர்ச்சியாகவும், சத்துள்ளதாகவும் பல வகையான உணவுகள் தயாரிக்கலாம். செலவும், வேலையும் மிகக் குறைவு. கடைகளில் கிடைக்கும் வர்த்தக சத்துணவுகளை அதிக விலை கொடுத்து வாங்கத் தேவையில்லை. இக்கலவைகளை நாமே வீட்டில் குறைந்த செலவில் தயாரித்து நம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

சில உணவுத் தயாரிப்புகள்

♥கஞ்சி பாயாசம் : ஏதாவது ஒரு கலவையில் 2 அல்லது 3 சிறிய தேக்கரண்டி அரைத்த மாவை எடுத்துக் கொண்டு அரை டம்ளர் குளிர்ந்த சுத்தமான நீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். தேவையான அளவு உப்பு அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.  6-7 மாதக் குழந்தைகளுக்கு இது நல்ல இணை உணவாகும். இதில் சிறிது சமைத்த கீரையின் சாறோ அல்லது தக்காளி சாறோ சேர்த்துக் கொடுக்கலாம்.

♥கெட்டியான கஞ்சி கூழ்: இதையும் மேற்கூறியவாறே 4 அல்லது 5 தேக்கரண்டி கலவையில் இருந்த கெட்டியாகத் தயாரித்து 7-8 மாதக் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

♥#களி: நீரின் அளவைச் சிறிது குறைத்து 4 அல்லது 5 தேக்கரண்டி கலவையை ¾ டம்ளர் நீரில் கரைத்து நன்றாக கட்டி இல்லாமல் கிளறி, வெந்த பருப்பு அல்லது மசித்த கீரையுடன் பிசைந்து 8 மாதத்திலிருந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

♥#புட்டு: 1 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம்.  5 அல்லது 6 தேக்கரண்டி கலவையை எடுத்துக் கொண்டு சிறிது உப்புத் தண்ணீர் தெளித்து நன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். கலந்த மாவை 15 நிமிடம் ஆவியில் திட்டமாக வேகவைத்த பாசிப்பருப்போடு கலந்து சமைக்கலாம். சிறிது நல்லெண்ணெய், சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து உண்ணக் கொடுக்கலாம்.

♥#கொழுக்கட்டை: 10 தேக்கரண்டி கலவையில் சிறிது முருங்கைக்கீரை, தேவையானால் சிறிது தேங்காய் கலந்து உப்பு நீர் தெளித்து கட்டியாக பிசைந்துகொள்ளவும். சிறு உருண்டைகளாக உருட்டி நடுவில் சிறிதளவு வெல்லம் வைத்து ஆவியில் 20 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

♥இது கடையில் விற்கும் டின் வகையை விட மிகவும் விலை குறைவானது. சத்து அதிகம்.  கலப்படம் இல்லாதது. இதைத் தயாரிக்க ஆகும் செலவு மிகக் குறைவு.

காய்கறி இட்லிகள்

பச்சை இட்லி:

♥புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றில் ஒன்றை அரைத்து இட்லி மாவுடன் கலந்து வேக வைத்தால் பச்சைநிற வைட்டமின் சத்து நிறைந்த சுவையான இட்லி கிடைக்கும்.

ஆரஞ்சு இட்லி:

♥கேரட்டை துருவி இட்லி மாவுடன் கலந்து வேக வைத்தால் வைட்டமின் ஏ சத்து மிகுந்த ஆரஞ்சு நிற இட்லி கிடைக்கும்.

கருப்பு இட்லி:

♥இட்லிக்கான உடைந்த உளுந்தை தோலுடன் சேர்த்து சமைத்தால் கால்சியம், இரும்புசத்து மற்றும் நார்ச்சத்து மிகுந்த இட்லி கிடைக்கும்.

பல தானிய இட்லி:

♥இரண்டு பங்கு கேழ்வரகு, ஒரு பங்கு அரிசி மற்றும் ஒரு பங்கு உளுந்து கலந்து வேக வைத்து, கேழ்வரகுக்கு பதிலாக தினை, சாமை ஆகியவற்றில் ஒன்று சேர்ந்து பல தானிய இட்லி சமைக்கலாம்.

♥கம்பு, கேழ்வரகு, திணை, வரகு ஆகிய புஞ்சைப்பயிர்கள் நமது உடலுக்கு பலம் சேர்க்கும்.  உரம், பூச்சி மருந்து போன்ற நச்சுக்கள் இல்லாமல் இருப்பது அதன் சிறப்பு அம்சமாகும்.  இவைகளை தோசையாகவும் சுட்டுக் கொள்ளலாம்.

1-3 வயது குழந்தையின் உணவுப் பழக்கம்

♥பிறந்தவுடன் ஆரம்பித்த வேக உடல் வளர்ச்சியின் முதல் கட்டம் 1.5 வயது முதல் 2 வயதில் நிறைகிறது. எனவே முதலில் இருந்த பசி குறைந்து எல்லாம் சாப்பிடும் நிலை உருவாகிறது.

♥சின்னஞ்சிறு வயதில் நல்ல உணவுப் பழக்கங்களை பழக்கவும். இளமையில் நல்ல உணவுப் பழக்கங்களை கடைபிடிக்காவிட்டால், வளர்கின்ற வயதில் பெருந்தீனி, உடனடி திண்பண்டம் டின் உணவு, மென்பானங்கள் சாப்பிட்டு பழகி அதிக பருமன், சர்க்கரை நோய் முதலியவை வரக் கூடும்.

♥எனவே 1-3 வயதே, வளரும் குழந்தைக்கு நல்ல உணவுப்பழக்கங்களை பழக்க சரியான நேரம்.  சாதரணமாக 1 வயது குழந்தை தரையிலோ, நாற்காலியிலோ அமர்ந்து மற்றவர்களுடன் சேர்ந்து உண்ண இயலும்.

♥கை கால் கழுவி, உணவு உட்கொள்வது, சுத்தமும், சுகாதாரமும், தகுந்த தட்டினைப் பயன்படுத்தவும், உண்ண தேவையான நேரம் அளிக்கவும்.

♥உணவினை தொட்டுப்பார்த்து அதன் நிறம், மணம், அளவு, வடிவம் பற்றி உணரச் செய்யவும்.

♥முகர்தல் மற்றும் சுவைத்தலில் உணவினை அறிதல் அபிவிருத்தி அடைகிறது. எனவே புதுப்புது உணவுகளை சுவைக்க குழந்தை விருப்பப்படும்.

♥காரம் குறைந்த, மிதமான சூடுள்ள உணவுகளையே விரும்பும். அதிக காரம், மசாலா கொதிக்கும் சூடு குழந்தைக்கு பிடிக்காது.

♥மழலைகள், சிறார்கள் வண்ண நிறங்களுடைய காரட், கீரைகளை விரும்பும். சத்துடனும், நேசத்துடனும் ஊட்டவும். ஒவ்வொரு முறையும் புது உணவாக தர ஆரம்பிக்கலாம்.

♥குழந்தை உண்ணும் அளவு மட்டும் (உதாரணம் 1 கப்) தரவும். மீதமாகும் உணவு தர வேண்டாம். உணவு துகள்கள் மூச்சு குழாய்களை அடைக்காவண்ணம் தரவும்.

♥வீட்டில் தயாரிக்கும் சக்தி நிறைந்த தானிய, பருப்பு மற்றும் கீரை சேர்ந்த உணவுகள் கலோரிச்சத்து பற்றாக்குறையினை போக்கும், உணவு இடைவேளையின் போது அவைகளை தரவும்.

♥குழந்தையின் குறிப்பிட்ட உணவினை உண்ண (உதாரணம்- முட்டை) தொந்தரவு செய்ய வேண்டாம்.  தற்போது மறுத்தால் பின்னர் வேறு ஒரு சமயத்தில் பொறுத்து தரவும்.

♥உணவினை திணிப்பது வெறுப்பினை உண்டாக்கும். மிரட்டி, அதட்டி தர வேண்டாம்.  சாப்பிடாவிட்டால் பேய், பூதம் பிடிக்கும் என பயமுறுத்த வேண்டாம்.

♥கலர் கலரான குளிர்பானங்கள், பாட்டிலில் அடைக்கப்பட்ட வாசனை பானங்கள் தருவது உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமையினை ஏற்படுத்தலாம். அதிலுள்ள சத்தில்லாத இனிப்பு, நிறத்தினை அளிக்கும் இரசாயனப் பொருட்கள், பொங்கி வரும் நுரையின் வேதிப்பின்னனணி ஒவ்வாமையினை உண்டு பண்ணலாம்.  அதனை விட வீட்டில் தயாரிக்கும் பழரசம் நல்லது.


தின்பண்டங்கள்

♥கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே ஊட்டச்சத்து நிறைந்த வகைவகையான தின்பண்டங்களை குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.

கேழ்வரகு அடை:

♥வெல்லம் (அ) கருப்பட்டி, தேங்காய், துண்டுகள் ஆகியவற்றை கேழ்வரகுடன் கலந்து கேழ்வரகு அடை சுடலாம். மொறுமொறுப்புடன் சாப்பிட இனிப்பாக இருக்கும். இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்தது.

கேழ்வரகு கொழுக்கட்டை:

♥மேற்கூறிய கேழ்வரகு கலவையை கொழுக்கட்டையாக பிடித்து ஆவியில் வேக வைத்து கொழுக்கட்டையாகவும் செய்து கொடுக்கலாம்.

பச்சைப்பயிறு பாயாசம்:

♥உடைத்து வறுத்த பச்சைப்பயிரை, வேகவைத்து அதனுடன் வெல்லம், கருப்பட்டியுடன் தேங்காய் துறுவல் கலந்து, ஏலக்காய் சேர்த்து பாயசமாக கொடுக்கலாம். சுவை மிகுந்தது.  குழந்தைகள் விரும்பி சாப்பிடும், புரதம், இரும்பு சத்து, வைட்டமின்கள் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்தது.

சுண்டல்:

♥கொண்டைக்கடலை, பச்சைப்பயிறு, வேர்க்கடலை, கொள்ளு இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து வேகவைத்து அதனுடன் தேங்காய் மற்றும் மாங்காய் கலந்து தாளித்து சுண்டலாக செய்து கொடுக்கலாம்.

பள்ளிக்கு கொடுத்தனுப்ப தின்பண்டங்கள்:

♥பிஸ்கட், சாக்லேட் போன்ற தின்பண்டங்கள் குழந்தையின் பசியை மந்தப்படுத்துவதோடு, ரசாயனங்களும் அடங்கியவை. அவற்றை தவிர்த்து வீட்டிலேயே செய்யக் கூடிய தின்பண்டங்களைக் கொடுத்தனுப்பலாம்.

அவல் சிற்றுண்டி:

♥1. இனிப்பு அவல்: சிவப்பு அவல், சுடுநீர், தேங்காய் பால், வாழைப்பழம் (அ) பேரீச்சை, தேன் (அ) வெல்லம் இத்துடன் இஞ்சி சாறு சிறிதளவு.

♥2. அவல் காரட் கலவை: சிவப்பு அவல், சுடுநீர் விட்டு கையால் பிசைந்து வைத்துக் கொள்ளவும். நெல்லித்துருவல், தேங்காய் துருவல், மிளகு (அ) பச்சை மிளகாய், சுவையூட்டும் நீர் காய்கள் இவைகளை ஒன்றாக அரைத்து, பிசைந்து வைத்த கார அவல் உடன் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து கலக்கி, எலுமிச்சைச்சாறு பிழிந்து இடவும். அவல் காரக் கலவை ரெடி.

♥3. அதிரசம்: பச்சரிசி, வெல்லம், ஏலக்காய் கலந்து அதிரசம் செய்து கொடுக்கலாம். இது இரும்புச்சத்து நிறைந்தது.

♥4. கேழ்வரகு பிஸ்கட்: கேழ்வரகு 2 பங்கு, கம்பு 1 பங்கு இவை இரண்டையும் முளைகட்டி உலர்த்தி மாவாக்கவும். அத்துடன் உளுந்து மாவு, கடலை மாவு, தலா ஒவ்வொரு பங்கு, வெல்லம் ஒரு பங்கு, நல்லெண்ணெய் தேவையான அளவு, சிறிது ஈஸ்ட் சேர்த்து மொத்தமாக தட்டி ஆவியில் வேகவைத்தால் பிஸ்கட் தயார். மெலிதாகத் தட்டி கல்லில் வார்த்தால் ரொட்டி தயாராகிவிடும்.

♥5. கடலை மிட்டாய் : உடைத்த வேர்க்கடலை, வெல்லப்பாகு ஆகியவை கலந்து கடலை மிட்டாய் செய்து கொடுக்கலாம். புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்தது. கடைகளில் கிடைக்கும் தரமான கடலை மிட்டாய்களையும் வாங்கிக் கொள்ளலாம்.

♥6. காலை பானம்: (காபி, டீக்கு மாற்று) காபி, டீ போன்ற பானங்கள் குழந்தைகளின் பசியை குறைப்பதால், அதற்கு மாற்றாக பச்சைப்பயிறு காபி செய்து கொடுக்கலாம். உடைத்து, வறுத்து, ஏலக்காய் கலந்து அரைத்த பச்சைப்பயிறு மாவு 1 கரண்டியுடன் சூடாக்கிய பால் மற்றும் நாட்டுச் சர்க்கரை கலந்து காபிக்கு மாற்றாக கொடுக்கலாம்.

♥புரதச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், நிறைந்தது. இனிப்பானது வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது.

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

தூக்கம் தொலைத்த இரவுகள்.!



தூக்கம் தொலைத்த இரவுகள்.!

 கடைசியாக இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது? என உங்களுக்கு நினைவிருக்கிறதா?

கடந்த 20 ஆண்டுகளில் நாம் தூங்கச்செல்லும் நேரத்தின் சராசரி அளவு தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதைக் கவனித்து இருக்கிறீர்களா?

 8:00 மணிக்குள் இரவு உணவு முடித்து, 8:30-க்கு வெளிச்சம் அணைத்து, பேசிக்கொண்டே படுக்கையில் விழுந்தால், 9 மணிக்குள் உறங்கிப்போவோம். அது ஒரு காலம்.

9 மணித் தூக்கம் என்பது, 10 மணியாகி, நள்ளிரவாகி, இப்போது அதிகாலை வரை வந்துவிட்டது.

 அதிகாலை 3 மணி, 4 மணி வரைகூட விழித்திருக்கிறார்கள்.

இரவு வேலையின் காரணமாக கண் விழிப்பது, என்றோ ஒருநாள் தூக்கம் வராமல் இப்படி ஆவது,என்பது எல்லாம் தனி.

 எந்த உடனடி காரணமும் இல்லாமல் தொடர்ந்து இரவுகளில் கண் விழிப்போர் பெருகிக்கொண்டிருக்கின்றனர்.

 இதன் விளைவுதான், இந்த 20 ஆண்டுகளில் புதிது புதிதாகப் பெருகிப் பெருக்கெடுக்கும் நோய்கள்.

இரவுத் தூக்கம் தள்ளிப்போவதற்கும், நோய்களின் வருகைக்கும் நேரடித் தொடர்பு உண்டு.

தவறான வாழ்வியல்முறைகளால் ஏற்படும் உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய், இதயநோய் பக்கவாத நோய், போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

நம் இரவுத் தூக்கம் எதனால் தள்ளிப்போகிறது?

 நமக்கு ஏன் தூக்கம் வருவதில்லை?

 இதற்கு `நமது உடல் பிரச்னைகள், மனக் கவலைகள்தான் காரணம்' என நினைக்கிறோம்.

 இது முழு உண்மை அல்ல.

 உண்மையில் நாம் உறக்கத்தைத் தள்ளிப்போடும் ஒவ்வொரு நிமிடத்திலும், பல நிறுவனங்கள் பல கோடிகளுக்கு வருமானம் பார்க்க ஆரம்பித்து விட்டன.

இரவுச் சந்தையில்தான் இப்போது நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு `கோடி’கள் புரள்கின்றன.

 இரவுச் சந்தை என்பது, முழுக்க முழுக்க டிஜிட்டல் சந்தை.

டிஜிட்டல் பொருட்களை நாம் சரியாக அணுகத் தெரியாமல் தடுமாறுவதையே வியாபாரம் ஆக்கிவருகிறார்கள்.

 அதிகரித்துவரும் `காஸ்ட் ஆஃப் லிவிங்' மற்றும் குடும்பக் கடமைகளைச் சமாளிக்க, தனக்குப் பிடிக்காத வேலைகளையும் செய்தாக வேண்டும்.

 அதுவும் தொழிலாளர் சட்டத்தை மதித்து 8 மணி நேர வேலை எல்லாம் கிடையாது. குறைந்தது 10 மணி நேரம் உழைக்க வேண்டும்.

அதில் டார்கெட்டை எட்டிப்பிடிக்க வேண்டும்.

 மனஉளைச்சல் தரும் இந்த வேலையைச் செய்து விட்டு, வெளியே வந்தால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டும்.

 சோர்வுடன் வீட்டுக்கு வந்து விழுந்ததுமே டி.வி-யை ஆன் செய்து விடுகிறார்கள்.

 அந்த மாய உலகத்தில் விரியும் வண்ண வண்ணக் காட்சிகளில் மனம் மயங்குகின்றனர்.

 இளம்வயதினர் மட்டுமின்றி, பலரும் ஸ்மார்ட்போனில்: ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என மூழ்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

சமூக வலை தளங்கள் எனும் உலகத்துக்குச் சென்றுவிட்டால் அங்கு அதற்கான வேடம் தரித்து பலர் பிஸியாகிவிடுகிறார்கள்.

முன்னர் எல்லாம் இரவு உணவு முடித்ததும் திண்ணையில் ஓரிரு மணி நேரம் நண்பர்களோடு உட்கார்ந்து பேசிவிட்டே உறங்கச் செல்வார்கள்.

 வீட்டுத் திண்ணை வாட்ஸ்அப் ஆனது.

 வாட்ஸ்அப் உரையாடலில் நேரம் போவதே தெரிவதில்லை.

 சொந்த வீட்டில் இருப்பவர்களுடன்கூட, வீட்டில் இருந்துகொண்டே சமூக வலைதளங் களின் வழியே தொடர்புகொள்பவர்களும் இருக்கிறார்கள்.
 இது உண்மை.

 தினமும் நள்ளிரவைத் தாண்டிய சாட்டிங்குக்குப் பிறகு `குட்மார்னிங்' சொல்லி விட்டுத்தான் படுக்கைக்குச் செல்கிறார்கள்.

 இரவு உறங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென எழுந்து, `ஃபேஸ்புக்கில் போட்ட போட்டோவுக்கு எத்தனை லைக்ஸ்? வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்திருக்கிறதா?' என அடிக்கடி செக் செய்து கொண்டே இருப்பதை `கம்பல்சிவ் பிஹேவியர்' எனச் சொல்லும் ஒருவகையான மன நலப் பிரச்னை என்றும், `கண்டிஷனல் இன்சோம்னியா' எனும் தூக்கமின்மை நோய் என்றும் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

 பலர் தினமும் காலையில் விழித்து எழுந்ததும் செய்யும் முதல் வேலை என்ன தெரியுமா?

 தலையணை அருகே இருக்கும் மொபைலை எடுத்து இன்டர்நெட்டை ஆன் செய்து, வாட்ஸ்அப்பில் ஏதேனும் மெசேஜ் வந்திருக்கிறதா? எனப் பார்ப்பதுதான்.

 நாம் எவ்வளவு தூரம் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி வருகிறோம் என்பதை உடனடியாக உணரவேண்டிய தருணம் இது.

 இரவுத் தூக்கம் தடைபடுவதால் ஏற்படும் பிரச்னைகள்:

 நமது உடலுக்குள் மன சுழற்சிக் கடிகாரம் இருக்கிறது.

 பொதுவாக சூரிய உதயத்தின்போது எழுந்து உற்சாகமாக வேலைசெய்வதும், சூரியன் மறைந்த பின்னர் இரவு உணவை முடித்துவிட்டு உறங்கச் செல்வதும்தான் இயற்கையோடு இனைந்த வாழ்வு.

 ஏன் நாம் சூரிய வெளிச்சத்தில் மட்டும் இயங்க வேண்டும் என்பதற்கு அறிவியல் விளக்கமும் உண்டு.

சூரியன் மறைந்த பிறகு, இருட்டு நேரத்தில்தான் " மெலட்டோனின் " முதலான பல ஹார்மோன்கள் நமது உடலில் சீராகச் சுரக்கும்.

 நாம் இரவு நேரத்தில் உடலுக்கு ஓய்வு தந்து உறங்கும் போதுதான் "மெட்டபாலிசம்" எனும் வளர் சிதை மாற்றம் உடலில் சீராக நடக்கும்.

 நமது உடல் வளர்ச்சிக்குத் தேவையான குரோத் ஹார்மோன், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான, ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டீரான் போன்ற பிரத்யேக செக்ஸ் ஹார் மோன்கள் சமச்சீராகச் சுரக்கும்.

 முறையற்ற இரவுத் தூக்கத்தால் ஹார்மோன்கள் சீராக உற்பத்தி செய்யப் படாமல் பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

கடந்த சில வருடங்களாக குழந்தைப் பேறின்மை பிரச்னை இளம் தம்பதிகளிடம் அதிகரித்துவருகிறது.

பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, ஆண்களுக்கு விந்தணுக்களின் வீரியம் குறைவு ஆகியவற்றுக்கு, முறையற்ற இரவுத் தூக்கமே முக்கியக் காரணம்.

 ஒழுங்கற்ற தூக்கத்தால்: பயம், பதற்றம், சோர்வு ஆகியவை வருகின்றன.

 மனநலன் சார்ந்த பல பிரச்னைகள் வருவதற்கும் இதுதான் காரணம்.

இரவு நெடுநேரம் கழித்து உறங்குவதாலும், போதுமான நேரம் தூங்காததாலும், ஆழ்நிலை தூக்கம் அடையாமல் மேம் போக்காகத் தூங்குவதாலும், மெள்ள மெள்ள உடற்பருமன், சர்க்கரை நோய், குறிப்பாக ரத்த அழுத்தம், ஸ்ட்ரோக் ஆகியவை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

 எல்லோராலும் இயல்பாக உடனடியாகத் தூங்கிவிட முடிவதில்லை.
 ஒவ்வொருவருக்கும் தூக்கம் தடைபடுவதற்கு வெவ்வேறு காரணிகள் இருக்கின்றன.

 பொதுவாக, தூக்கத்தைப் பாதிக்கும் காரணி வெளிச்சம்தான்.

 இருள்தான் மனிதர்களுக்குத் தூக்கத்தைத் தூண்டும்.

 அதனால்தான் வெளிச்சத்தை அணைத்துவிட்டுத் தூங்குகிறோம்.

 சமீப ஆண்டுகளாக இரவிலும் வெளிச்சம் கண்களைப் பறிக்கிறது.

 வீதிகளில் மட்டும் அல்ல, வீட்டுக்குள்ளும் இரவு வெளிச்சம் அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிட்டது.

ஒரு காலத்தில் மின்சார விளக்கு மட்டும்தான் நமக்கு இரவு வெளிச்சம்.

பிறகு டி.வி வந்தது, கம்ப்யூட்டர், செல்போன், லேப்டாப், டேப்லெட் எல்லாம் வந்துவிட்டன.

 அனைத்தும் அதிஉயர் வெளிச்சத்தை உமிழ்கின்றன.

 இதனால் நமது தூக்கம் தள்ளிப்போகிறது.

 மொபைல் வெளிச்சம் தூக்கத்துக்குக் கடும் எதிரி.

பலர் அறை விளக்குகளை அணைத்துவிட்டு மொபைலில் நோண்ட ஆரம்பித்து விடுகிறார்கள்.

 கண்களுக்கு அருகில் வைத்து மொபைலைப் பயன்படுத்தும் போது, அந்த வெளிச்சம் நமது கண்களையும் மூளையையும் பாதிக்கும்.

 தூக்கத்தைத் தாமதப்படுத்தும்.
 ஒவ்வொருவருக்கும் வேலை நேரம் என்பது வித்தியாசப்படும்.

 வேலைக்கு ஏற்ப தங்களது வாழ்வியல் முறையை ஆரோக்கியமான வகையில் மாற்றிக்கொண்டால் பிரச்னை வராது.

 பொதுவாக இரவு 9 மணிக்குள் உறங்குவதும். காலை ஐந்து மணிக்குள் எழுவதும்தான் சிறந்தது.

அதிகத் தூக்கம் எப்படி ஆபத்தோ, அதுபோல குறைந்த தூக்கமும் ஆபத்தானது.

 இரவு தாமதமாக உறங்கினாலும் காலையில் அலாரம் வைத்து சீக்கிரமாக எழுந்துவிடுவது தவறு.

 அனைவருக்கும் ஆறு மணி முதல் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம்.
நாம் அவசியம் நன்றாகத் தூங்கியே ஆக வேண்டும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம்.

 நேர மேலாண்மையைச் சரியாகக் கையாளத் தெரியாதவர்கள் தடுமாறுகிறார்கள்.

 நண்பர்களுக்கு, மொபைலுக்கு, டி.வி-க்கு என நேரம் ஒதுக்குவதில் தவறு இல்லை.

 உங்கள் உடலுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.

 கடைசி காலத்தில்: ஆரோக்கியம் மிக மிக முக்கியம்.


இரவு தூங்கும் போது கண்ணில் இந்த பூவை வைத்து தூங்குங்கள்.. அப்புறம் நடக்கும் அற்புத மாற்றம் இதோ!!


இரவு தூங்கும் போது கண்ணில் இந்த பூவை வைத்து தூங்குங்கள்.. அப்புறம் நடக்கும் அற்புத மாற்றம் இதோ!!

பல்வேறு பூக்களைப் பற்றியும், அவற்றின் மருத்துவ குணங்கள் பற்றியும், நோய்களை குணமாக்க அவற்றை உபயோகிப்பதைப் பற்றியும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

பூக்கள் அழகு மற்றும் சூடுவதற்கு மட்டுமல்ல. அவற்றில் பல்வேறு மூலிகை குணங்களும், மருத்துவ நன்மைகளும் அடங்கியுள்ளன.

இந்த பூக்களிலிருந்து எடுக்க்கும் தேன் மிகச்சிறந்த மருந்து. அப்படியெனில் பூக்களின் குணங்கள் எப்படியிருக்கும் என நினைத்துப் பாருங்கள்.

தாமரை இதழ்
தினம் ஒரு தாமரை இதழ் சாப்பிட்டால் பேசும் திறன் அதிகரிக்கும்

ஆவாரம் பூ :
ஆவாரம்பூவைக் குடிநீரில் போட்டுக் குடித்து வந்தால் நீரிழிவு உப்பு படிதல், நீர் வேட்கை எடுத்தல் போன்றவற்றில் இருந்து குணம் கிடைக்கும்.
சர்க்கரை வியாதி குணமாகும். அதன் பொடியை உடலில் தேய்த்து குளித்தால் தோல் வியாதிகள் குணமாகும்

செம்பருத்திப்பூ :
செம்பருத்திப்பூவை அப்படியே சாப்பிட்டால் ரத்தம் சுத்தி அடைவதுடன் விருத்தியும் அடையும். இதயமும் வலிமை அடையும். இப்பூவைக் கொண்டு காய்ச்சிய எண்ணெய் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுவதுடன் குளிர்ச்சியும் தரும்.

அன்னாசிப்பூ:
அன்னாசிப்பூவைத் தூளாக்கி அரை கிராம் முதல் ஒரு கிராம் எடை வீதம் ஒரு நாளைக்கு மூன்று முறை உட்கொண்டால் பசி உண்டாகும்

ஒற்றை நந்தியாவட்டை
கண்ணுக்கு குளிர்ச்சி,இரவு தூங்கும் போது கண்ணில் வைத்து தூங்குங்க கண் எரிச்சல் இருக்காது. கண் பாதிப்புகள் நீங்கும்.

தாழம்பூ :
தாழம் பூவில் சர்பத் செய்து 1 மாதத்திற்கு 2 முறை குடிங்க அம்மை நோய் அண்டாது. இதய நோய்கள் நெருங்காது.

ரோஜாப் பூ :
வாய்ப்புண்ணுக்கு நல்லது.அவ்வபொழுது மென்று சாப்பிடுங்க. பாலில் கலந்து குடித்தால் ரத்த விருத்தி உண்டாகும். கபம் கரையும்.

கொசு குறித்து சற்று முன் வந்த ஸ்பெஷல் ரிப்போர்ட்


கொசு  குறித்து சற்று முன் வந்த ஸ்பெஷல் ரிப்போர்ட்

உலகத்தின் ஆதி உயிரினங்களுள் ஒன்று கொசு.

*2.5 மில்லி கிராம் எடைகொண்ட கொசுவுக்குப் பற்கள் மட்டும் 47.

*மழை கொட்டும்போதும் உடல் நனையாமல் துளிகளின் இடுக்குகளில் பறக்க முடிந்த ஒரே பூச்சியினம் கொசு.

* ஒரு விநாடிக்கு 300 முதல் 600 முறை வரை சிறகடிக்கிறது. அதுதான் நீங்கள் கேட்கும் ரீங்காரம்.

*சில வாரங்கள் மட்டுமே ஆயுள்கொண்ட கொசுக்கள் ஆண்டுக்கு 10 லட்சம் மனிதர்களைக் கொன்று குவிக்கின்றன.

*கொசு வகைகளின் எண்ணிக்கை, 3000ஐத் தாண்டியுள்ளது. இதில், 80 வகை கொசுக்கள் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும்.

*ஒரு கொசு, முட்டையிலிருந்து, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறுவதற்கு தேவைப்படும் காலம்,5 நாட்கள் மட்டுமே

* முட்டையிலிருந்து வெளிவந்த சில நிமிடங்களுக்குப் பின், கொசுக்கள் இனப் பெருக்கம் செய்ய முடியும். மேலும், கொசுவுக்கு முள் போன்ற கூரிய முனையுடைய இரத்த உறிஞ்சுக்குழல் உண்டு. கொசுவின் துணையுறுப்புகள் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

*உலகின் அபாயகரமான பூச்சியினம் என்று கின்னஸால் அறிவிக்கப்பட்டதும் கொசுதான்.

* ஆண் கொசுவைவிடப் பெண் கொசுவே பெரியது. ஆண் கொசு சைவம். இலை தழைகளிலேயே அது உணவு உட் கொள்ளும். கடிப்பதும் ரத்தம் குடிப்பதும்
பெண் கொசுதான்.

*கடிக்கும்போது ஒரு கொசு இரண்டு குழல்களை உடலுக்குள் நுழைக்கிறது. ஒரு குழல் ரத்தம் உறையாதிருக்க நொதிப்பொருளை செலுத்துகிறது. மறு குழல் உறையாத ரத்தத்தை உறிஞ்சுகிறது.
' ஏடிஸ் ' வகை கொசுதான் டெங்கு பரப்புகிறது.

*ஒரு தொற்று நோயாளியைக் கடித்த கொசு ஆரோக்கியமானவரையும் கடிக்கும்போது தொற்றுக்கிருமிகளை உட்செலுத்தி டெங்கு பரப்புகிறது.
டெங்குவிற்கு மருந்தில்லை; டெங்குவில் மீண்டாலும் நோய் எதிர்ப்புச் சக்தியை உடல் மீண்டும் அடைவதில்லை.

*கொசு/நுளம்பு மனிதக் குருதியை நுண்ணிய ஊசி போன்ற வாயுறுப்பால் அகத்துறிஞ்சி தனது வயிறு அல்லது கண்டப்பைக்குள் செலுத்தும். கண்டப்பைக்குள் செலுத்தப்பட்ட குருதி, சில நொதியங்கள் சேர்க்கப்பட்டு நுளம்புக்கான உணவாக கண்டப்பையுள் சேகரிக்கப்படும். அதேவேளை மனித உடலில் இருந்து கொசு/நுளம்பு குருதியை அகத்துறிஞ்சும் போது தனது உமிழ் நீரை மனித உடலுக்குள் பாய்ச்சும்.நுளம்பு இனங்களில் அனோஃபிலசு (Anopheles) எனப்படும் நுளம்பினத்தின் பெண் நுளம்புகளே, உலகின் சில பாகங்களில் மனித இறப்பை ஏற்படுத்தும், மலேரியா என்னும் அபாயகரமான தொற்றுநோயை ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கடத்தும் நோய்க்காவியாக இருக்கின்றது

*கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் பொருட்களில் கொசுக்களை அழிக்கும் இரசாயனம் அலெத்ரின்(alletrin) சார்பு பொருட்கள் உள்ளன. இது கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை மனிதனின் சுவாசப்பையில் நச்சுப்பொருள் கலந்து நாளடைவில் மார்புச்சளி, தும்மல் தலைவலி போன்ற உடல்நலக்கேடுகள் விளைகின்றன.

*உடலில் தேங்காய் எண்ணை அல்லது விளக்கெண்னை பூசிக்கொண்டால் இரவில் கொசுக்கள் மட்டுமல்ல வேறு சில் பூச்சிகளும் நம்மை கடிக்காது.

*கொசுக்கள் பெண்களைத்தான் அதிகமாக கடிக்கும் காரணம் அவர்கள் உடலிலுள்ள ஈஸ்ஸ்ட்ரோஜென்ஸ் கொசுக்களை கவருகின்றன ஆக பெண் தான் பெண்ணுக்கு எதிரி என்பது கொசுக்கள் விஷயத்திலும் உண்மையே

*Vitamin B --- கொசுவின் எதிரி..., இந்த வைட்டமின் B அதிகமாக இருப்பவர்களை கொசு அண்டுவதில்லை...

*வைட்டமின் B எவ்வளவு நீங்கள் எடுத்துகொள்ளலாம் என்று மருத்துவரின் பரிந்துரைப்படி மாத்திரைகளை வாங்குவது நல்லது.

சப்பாத்தியும் சர்க்கரை நோயாளியும்



சப்பாத்தியும் சர்க்கரை நோயாளியும்
Kannan Brj· Thursday, 12 October 2017

‘வாய் வழியா உள்ளே போற சர்க்கரையக் குறைக்காம ஊசி போட்டும் மாத்திரை சாப்பிட்டும் ரத்தத்தில சர்க்கரைய குறைச்சுரலாம்ன்னு நினைக்கிறது முட்டாள்தனம் சார்... சப்பாத்தியையும் கோதுமை தோசையையும் தூக்கிக் கடாசுங்க சார்...’

என்னுடைய இந்த பலமான விமர்சனத்தை எதிர்பார்க்கவில்லை அவர். இதோ, முழுக் கதையை உங்களுக்குத் தருகிறேன்.

பதினைந்து வருடங்களாக சர்க்கரை நோயுடன் இருக்கும் என் தூரத்து உறவினர், என்னை ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்க வந்தவர், சமீபத்தில் சிறுநீரக சம்பந்தமான உப்புகள் சற்று கூடி வருவதாகவும், அதை கவனிக்க ஒரு நல்ல சிறப்பு மருத்துவரை பரிந்துரைக்கும் படி என்னைக் கேட்டுக்கொண்டார்.

‘எல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்கேன். சர்க்கரை மாத்திரைகளாகட்டும், உணவு கட்டுப்பாடாகட்டும். தவறாம தினமும் நடக்கிறேன். இருந்தாலும் ஏன் இப்படி?’

‘நீங்க கட்டுப்பாடோட இருக்கீங்கங்கிறது இருக்கட்டும், சர்க்கரை கட்டுப்பாடோட இருக்கா?’

‘ஓரளவுக்கு இருக்கு. 250ஐ ஒட்டி இருக்கும்’

‘அப்படீனா கட்டுக்குள் இல்லைன்னு சொல்லுங்க’
‘........’
‘எத்தனை மாத்திரை எடுக்கிறீங்க, எத்தனை ஊசி போடறீங்க எல்லாம் முக்கியமில்ல, சர்க்கரை சரியான அளவா இருக்காங்கிறது தான் முக்கியம். அது இல்லாத பட்சத்தில சிறுநீரகம், கண் சம்பந்த நோய்கள் கூடத்தான் செய்யும்’

‘நான் தான் எல்லாமும் சரியாத் தானே செய்யிறேன். காலையில ரெண்டு இட்லி. ஒரு வேளை மதியம் மட்டும் கொஞ்சம் சோறு. ராத்திரிக்கு சப்பாத்தி. கொழுப்பு சேர்க்கிறதே இல்லை.’

‘இது சரின்னு யார் சொன்னா?’
‘...............’
‘சப்பாத்தி சர்க்கரைய கட்டுப்படுத்தும்ன்னு யார் சொன்னா?’

‘என்ன டாக்டர், எல்லாருக்கும் தெரிஞ்சது தானே?’

‘வடநாட்டிலே எல்லோரும் அத தானே சாப்பிடுறாங்க. அங்கேயும் நிறைய சர்க்கரை நோயாளிகள் இருக்காங்களே. நீங்க சொல்றது உண்மைன்னா அங்கே சர்க்கரை நோய் குறைவா இருக்கணுமே. இந்த சிம்ப்பிள் லாஜிக்கை ஏன் யாரும் யோசிக்கிறதில்லை’

‘எங்க டாக்டர் அரிசிக்கு பதிலா கோதுமை நல்லதுன்னு சொன்னாரே’

‘உணவுல இருக்கிற சர்க்கரைய குறைச்சாத் தான் ரத்தத்தில சர்க்கரை குறையும். இப்படி நான் சொன்னதும், நான் டீக்கு கூட சர்க்கரை போடறதில்லைன்னு  எல்லோரும் சொல்றீங்க. காபி டீக்கு தேவைப்படும் சர்க்கரை கொஞ்சம் தான். ஆனா, மூணு வேளையும் அரிசி அல்லது கோதுமை மூலம் செஞ்ச உணவுகள சாப்பிடறீங்களே, அதெல்லாம் முழுக்க முழுக்க சர்க்கரை தான்’

‘என்ன டாக்டர் சொல்லறீங்க?’

‘வாய் வழியா உள்ளே போற சர்க்கரையக் குறைக்காம ஊசி போட்டும் மாத்திரை சாப்பிட்டும் ரத்தத்தில சர்க்கரைய குறைச்சுரலாம்ன்னு நினைக்கிறது முட்டாள்தனம் சார்... சப்பாத்தியையும் கோதுமை தோசையையும் தூக்கிக் கடாசுங்க சார்...’
‘............’
‘அப்படீன்னா சப்பாத்தி நல்லதில்லையா சார்?’

‘கோதுமைக்கும் அரிசிக்கும் கலர் தவிர ரொம்ப பெரிய வித்தியாசம் இல்லை. சப்பாத்தியில அரிசியைக் காட்டிலும் புரதம் கொஞ்சம் அதிகம், அவ்வளவு தான். மத்தபடி அதுல 80% சர்க்கரை தான். கோதுமை சாப்பிட்டா சர்க்கரை குறையாது, கூடத்தான் செய்யும்......இதோ நீங்களே அதுக்கு உதாரணம்..’

‘ஓ..ஓ.....’

‘உங்க மனைவிக்கு சுகர் ப்ராப்ளம் இருக்கா?’

‘இல்ல சார்’

‘நீங்க ரெண்டு பெரும் ஒரே மாதிரி தானே சாப்பிடுறீங்க, அவங்களுக்கு ஏன் சுகர் வரலை? ஏன்னா, அவங்க உடம்பு சர்க்கரைய நல்லா கையாளுது, உங்க உடம்புக்கு கையாளத் தெரியல’

‘புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு’

‘ஒரு மாணவனுக்கு கணக்கு வரவே மாட்டேங்குதுன்னு வைங்க, நீங்க, அறிவியல் அல்லது சோஷியல் மாதிரி மற்ற பாடங்கள மேற்படிப்புக்கு எடுத்துக்கச் சொல்வீங்களா, இல்ல, நீ கணக்கு தான் படிக்கணும்னு கட்டாயப் படுத்துவீங்களா? அது மாதிரி தான் இங்கேயும். உங்க உடம்புக்கு சர்க்கரைய கையாளத் தெரியல. ஆனா, சர்க்கரை தான் கொடுப்பேன், அதை ஒழுங்கா சமாளின்னு உங்க உடம்பைக் கட்டாயப் படுத்துறீங்களே?’

‘புரியுது டாக்டர். அப்படீன்னா எந்த உணவு என் உடம்புக்கு நல்லது?’

‘புரதம் மற்றும் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள்’

‘என்னது, கொழுப்பு சாப்பிடலாமா? எல்லாம் மாத்தி மாத்தி சொல்றீங்களே?’

‘இந்த மாதிரி யோசியுங்க. சரிசம விகித உணவு, அதாவது Balanced dietன்னு சொல்ற உணவுல 60% கார்போஹைட்ரேட் எனப்படும் சர்க்கரை சத்தும், 15% புரதமும், 25-30% கொழுப்பும் இருக்கணும்ங்கிறது விதி. ஆனா இன்னைக்கு நீங்க எல்லாம் சாப்பிடுறத கணக்கு போட்டோம்னா 90%க்கும் மேல சர்க்கரை தான். கொஞ்சமா புரதம் இருக்கு, கொழுப்பு இல்லவே இல்லை. கொழுப்பு மேல இருக்கிற பயத்தினால சர்க்கரைய அளவுக்கு அதிகமா சாப்பிட ஆரம்பிச்சு நிறைய சர்க்கரை மற்றும் இதய நோயாளிகளை உருவாக்கிகொண்டிருக்கிறோம்’

‘எப்படி டாக்டர்?’

‘நீங்க சாப்பிடுற சர்க்கரை எல்லாம் என்ன ஆகுது? ரத்ததில சர்க்கரை ஏறும். அதை அப்படியே சர்க்கரையா சேர்த்து வைக்க முடியாது. உடம்பு அத கொழுப்பா மாத்தும். ரத்ததில இருக்கிற நெறைய கெட்ட கொழுப்புகள் சர்க்கரையால வந்தது தான். ஒருத்தர் உடல் குண்டா இருக்கார்னா, அவர் உடம்புல சேர்ந்த கொழுப்பு எல்லாமும் சர்க்கரையால தானே தவிர, நிறைய கொழுப்பு சாப்பிட்டு வந்தது இல்ல.

‘இப்ப நான் என்ன செய்யணும் டாக்டர்?’

‘Balanced dietல சொன்ன மாதிரி ஒரு 30% கொழுப்பு சேர்த்தா போதும். நம்மால கார்போஹைட்ரேட் உணவை முழுவதுமா தவிர்க்க முடியாது. நான் உங்கள நிறைய பால், தயிர், காய் கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் சாப்பிடச் சொல்லப் போகிறேன். இது எல்லாத்திலேயும் கார்போஹைட்ரேட் இருக்கு. ஆனா இது அரிசி / கோதுமை மாதிரி இல்லாம ரத்ததில சர்க்கரைய மெதுவா ஏத்தும். இவைகளை நாம அள்ளி அள்ளி சாப்பிடவும் முடியாது.’

‘அரிசியும் கோதுமையும் கூடாதுன்னா வேற சாப்பிட ஒண்ணுமில்லையே சார்?’

‘இப்படி செய்யுங்க. மதியத்துக்கு ஒரு கப் கீரை, நிறைய காய்கறி, ஒரு பெரிய கப் நிறைய தயிர். அவ்வளவு தான். காய்கறி எது வேணா இருக்கட்டும்,  எண்ணெய் கத்திரிக்கா அல்லது புடலங்கா கூட்டுன்னா, அதையே நெறைய தட்டுல போட்டு சாப்பிடணும். சோறே கிடையாது’

‘இப்படி முடியுமா டாக்டர்?’

‘நானே இப்படி தான் சாப்பிடுறேன். வேணும்னா என் லஞ்ச்டப்பாவ திறந்து பாத்துக்கோங்க’

‘டின்னருக்கு எப்படி?’

‘இன்னைக்கு இரவு உங்களுக்கு டின்னர் முட்டை. ரெண்டோ, மூணோ சாப்பிட்டுக்கோங்க. அது மட்டும் தான். நாளைக்கு, ஒரு பெரிய கிண்ணம் நிறைய சுண்டல். மூணாவது நாள் பன்னீர்ல எதாவது செஞ்சு சாப்பிடலாம். கோழியோ மீனோ சாப்பிடணுமா? ஒரு கால் கிலோ தட்டுல போட்டு சாப்பிடுங்க. சோறோ சப்பாத்தியோ கிடையாது. இது போல உங்களுக்கு ஏத்த மாதிரி நீங்களே முடிவு செய்யலாம். சில நேரம் பழங்கள் மட்டுமே சாப்பிட்டு முடித்துவிடலாம். சுருக்கமா, தட்ட திருப்பணும், அதாவது, நாம சைட் டிஷ்னு சொல்றதையே மெயின் டிஷ்ஷா சாப்பிடணும்.

‘இது மட்டுமே போதுமா சார்?’

‘போதும் மட்டுமில்ல, எல்லா சத்தும் கிடைக்கும். கொஞ்சம் யோசிச்சு பாருங்க, நீங்க இப்ப சாப்பிடுறதுல, சர்க்கரை தவிர வேற ஏதாவது சத்து இருக்கா? அரிசி கோதுமை சாப்பிடக்கூடாதுன்னு சொல்லியாச்சுன்னா, வேற வழியில்லாம நிறைய வித விதமா கீரை, காய்கறி, முட்டை, தயிர், பழம்னு சத்தா சாப்பிடுவீங்க. நான் இப்போ சொன்ன உணவுகள் எல்லாத்தையும் மதியத்துக்கும் இரவுக்கும் மாறி மாறி சாப்பிட்டுக்கலாம்’

‘அப்போ காலைல?’

‘அது தான் கொஞ்சம் ப்ராப்ளம். பாதாம் பருப்போ, முட்டையோ, தயிரோ பழங்களோ சாப்பிட்டு இருந்து விடலாம். முடியாத பட்சத்தில குறைவா ஒன்னுரெண்டு இட்லி நல்லா நெய்யோ எண்ணையோ ஊத்தி சாப்பிடலாம். பத்தலைன்னா தயிர் சாப்பிட்டுக்கலாம்’

‘எண்ணெய் கேட்டது தானே?’

‘இல்ல. எண்ணையில செஞ்ச எந்த உணவவையும் அன்னன்னைக்கு சாப்பிட்டா நல்லது தான். வீட்டுல வட சுடுங்க, அஞ்சாறு சாப்பிடுங்க. முட்டைய ஆம்லேட்டா சாப்பிடுங்க, கோழி மீன் எல்லாம் பொரிச்சி சாப்பிடுங்க, ஒண்ணும பிரச்சினை இல்ல. நம்ம பாரம்பரிய எண்ணைகளான நல்லெண்ணை இல்லன்னா கடலெண்ணை உபயோகப்படுத்துங்க. எண்ணையில செஞ்சு வச்சு சாப்பிடுற ஐட்டங்கள் இருக்கே, சிப்ஸ், பக்கோடா, மிக்ஸர், முறுக்கு அதுல தான் எண்ணெய் கெட்ட எண்ணெயா மாறியிருக்கும். அதுனால அதுகள எப்போதாவது தான்சாப்பிடலாம். வீட்டுல டப்பால வாங்கிவச்சு தினமும் சாப்பிட்டா ஆபத்து.

‘எல்லாத்தையும் உல்ட்டாவா சொல்றீங்களே டாக்டர்? நம்புறதுக்கு பயமா இருக்கு’

‘அப்படீன்னா நாம இதப் பத்தி பேசுறத நிப்பாட்டிருவோம்’

‘ஐயையோ, ஏன் டாக்டர் கோபப்படறீங்க...நம்புறேன், சொல்லுங்க.....நீங்க சொன்னபடி சாப்பிட்டா, சாப்பிட்ட திருப்தியே கிடைக்காதே’

‘உண்மை தான். உடம்பு ஏத்துக்கும், மனசு தான் எத்துக்காது. மொதல்ல ஒரு பதினஞ்சு நாள் கஷ்டமா இருக்கும், அப்பறம் பழகிடும். அதனோட பலன நீங்க பார்த்தப்பறம், பழைய படி உங்களால சாப்பிடவே முடியாது’

‘அரிசி, கோதுமை வேண்டாம் சரி, இந்த கேப்பை கம்பு கேழ்வரகு வரகரிசி குதிரவாலின்னு சொல்றாங்களே, அதெல்லாம் எப்படி?’

‘இதுலே எல்லாம் கொஞ்சம் விட்டமின்கள் மற்றும் புரதம் அரிசியைக் காட்டிலும் அதிகம். ஆனால் அதுலயும் ரொம்ப அதிகமா இருக்கிறது சர்க்கரை தான். அதனால, இதுகள சர்க்கரைக்கு மாற்று உணவா கருத முடியாது, இவைகளை சாப்பிட்டாலும் சர்க்கரை ஏறத்தான் செய்யும்’

‘என்ன டாக்டர், இதெல்லாம் நல்லதுன்னு எவ்வளவு பேர் எழுதுறாங்க?’

‘இந்த உணவுகள சாப்பிட்டு சர்க்கரைய நல்லா கொறைச்ச ஆளப் பார்த்திருக்கீங்களா?’
‘.............’
‘இடையில ரொம்பப் பசிக்குமே டாக்டர்?’

‘பசியோட இருங்க, பாதி வயித்துக்கு சாப்பிடுங்கன்னு சொல்லவே இல்லையே...வெள்ளரிப் பிஞ்சு, காரட், பாதாம் பருப்பு, பிஸ்தா, கடலை, பொட்டுக்கடலை, நவதானியங்கள் அவிச்சதுன்னு எது வேணா பசி அடங்குற வரை சாப்பிடலாம். எல்லாப் பழங்களும் சாப்பிடலாம். பச்ச தேங்காய எப்ப வேணா எவ்வவளவு வேணா சாப்பிடலாம்’

‘சரி. நாளையிலிருந்தே ஆரம்பிச்சுடுறேன். பாப்போம், உங்க உணவு முறை எப்படி வேலை பாக்குதுன்னு பாப்போம்’

இவ்வாறு கூறி விட்டு சென்றவர், இரண்டே நாட்களில் திரும்ப வந்து விட்டார், தன் மனைவியை அழைத்துக்கொண்டு.
‘நீங்க சொன்னதெல்லாம் இவ கிட்ட சொன்னேன் சார். நம்ப மாடேங்கிறா’

கடந்த 50 வருடமாக உணவைப் பற்றி மனதில் வேரூன்றியிருந்த கருத்துக்களை சட்டென்று யாராலும் மாற்றிக்கொள்ளவது சற்று சிரமம் தான், அதிலும் குறிப்பாக குடும்பத்தலைவிகள். அவர் மனைவியிடம் மறுபடியும் விளக்க வேண்டியிருந்தது. ஏற்கனவே கணவர் மூலம் கேட்டறிந்திருந்ததால், என் வேலை சற்று சுலபமாக முடிந்தது என்று தான் கூற வேண்டும். சிறுநீரக மருத்துவரிடமும் ஆலோசனை பெற்றுக் கொண்டு சென்றார். பத்து நாட்கள் கழித்து திரும்பவும் வந்தார்.

‘முடியல டாக்டர். வயிறெல்லாம் கடா முடான்னு சத்தம் போடுது. சில நேரம் மலம் கட்டிக்கிறது. ரொம்ப டயர்டா வேற இருக்கு’

‘இதப் பாருங்க. காரணங்கள் வேண்டாம், காரியம் ஆச்சாங்கிறது தான் கேள்வி. வேற வழியில்ல, மாறித்தான் ஆகணும். ஒரு 15 அல்லது 20 நாட்கள் அப்படி இருக்கும், பின்னர் சரியாகிவிடும்’

தலை ஆட்டிவிட்டுச் சென்றார். அடுத்த ஐந்து மாதங்கள் அவரைக் காணவில்லை. ஒரு திருமண விழாவில் அவரை சந்தித்தேன்.

‘சார், இப்போ சர்க்கரை 200க்கு கீழ கொண்டு வந்திட்டேன். கொஞ்சம் இன்சுலின கூட்டியிருக்கார் எங்க டாக்டர். இன்னும் ஒரு காஸ்ட்லியான மாத்திரையும் சேர்த்திருக்கார்’

எனக்கு புரிந்து விட்டது. நான் அவ்வளவு விரிவாக சொல்லியும் உணவு முறையை மாற்றவில்லை அவர்.

‘ஆனா, சாரி டாக்டர், பழைய டைப்ல தான் சாப்பிடுறேன். நீங்க சொன்னீங்க, ஆனா அது பிரக்டிகலா எனக்குப் படல. எங்க டாக்டர் கிட்ட அதப்பத்தி சொன்னேன், அவரே பயந்திட்டார். எனி வே, இப்போ சர்க்கரையை கண்ட்ரோலுக்கு கொண்டு வந்தாச்சு’

‘பரவாயில்ல சார். ஒண்ணு மட்டும் சொல்றேன். என்ன தான் காஸ்ட்லியா ஊசியும் மாத்திரையும் சாப்பிட்டு சர்க்கரைய கட்டுக்குள் கொண்டு வந்தாலும், அதனால மாரடைப்பு வரும் அபாயமோ பக்க வாதம் வரும் அபாயமோ கொஞ்சம் கூட குறையிறது கிடையாது’

‘என்ன சார் சொல்றீங்க? அப்பறம் எதுக்கு சார் இவ்வளவு மெனக்கெட்டு சர்க்கரைய குறைக்கணும்?’

‘நான் சொல்றதுல சந்தேகம் இருந்தா உங்க டாக்டரக் கேளுங்க’
‘...........’
‘ஆனா, இயற்கையா உணவு மாற்றங்கள் மூலமும், உடற்பயிற்சி மூலமும் சர்க்கரைய குறைச்சா இது போன்ற பிரச்சினைகள தவிர்க்கலாம்’
‘............’

பின்னர் நானும் அவரை மறந்து விட்டேன். மேலும் சில  மாதங்கள் கழித்து என்னை மருத்துவமனைக்கு வந்து சந்தித்தார். மிகவும் சோர்வாக இருந்தார்.

‘பத்து நாள் முன்னாடி டெஸ்ட் எடுத்தேன், உப்பு முன்ன விட கொஞ்சம் கூடியிருக்கு. ரொம்ப அப்செட் ஆயிட்டேன் சார். என்ன செய்யலாம்?’

‘என்ன சொல்ல சார், உணவு முறைய முழுசா மாத்துங்க’

வேறு வழியில்லாமல் மாறத் தொடங்கினார். இடையில் என் உதவியாளர் பெண்ணை தொலை பேசியில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக்கொண்டார். பின்னர் மறுபடியும் காணாமல் போனார்! நான்கு மாதங்கள் ஆகி விட்டது, வரவே இல்லை. நானும் ஏறக்குறைய அவரை மறந்தே போய்விட்டேன். எதேச்சையாக ஒரு பல்பொருள் அங்காடியில் அவரும் அவர் மனைவியும் எதோ வாங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவரை சந்திப்பதை தவிர்க்க முடிவு செய்தேன். அதையும் மீறி சந்திப்பு நடந்தால், சர்க்கரை பற்றியோ உணவைப்பற்றியோ விசாரிப்பதில்லை என்று முடிவு செய்தேன். எனவே நான் வேறொரு பகுதிக்கு சென்று பொருட்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து யாரோ ‘சார்’ என்று அழைக்கவும் நான் திரும்பிப்பார்த்தேன். அவரும் அவர் மனைவியும் நின்றிருந்தார்கள்.

‘சார், நல்லா இருக்கீங்களா?’

ஹ்ம்ம்...என்னை விசாரிக்கிறார். ஒரு சிரிப்புடன் தலையை ஆட்டினேன்.

‘உங்க அந்த அப்பாயிண்ட்மெண்ட் கொடுக்கிற பொண்ணு ரொம்பக் கறார் சார். நான் உங்க ரிலேட்டிவ்ன்னு சொல்லியும் பத்து நாள் கழிச்சு தான் தேதி குடுத்தாங்க. வர்ற புதன். நீங்கள் இங்க வந்திருக்கிரத என் பொண்டாட்டி பாத்துட்டா. நான் வேணாம்னு சொன்னாலும் இழுத்துக்கிட்டு வந்துட்டா சார்’

மறுபடியும் சிரித்து வைத்தேன். இப்பொழுது நான் என்ன பேசுவது? ஒன்று கவனித்தேன். இந்த முறை அவர் குரலில் உற்சாகம் இருந்தது, மனையின் முகத்திலும் புன்னகை இருந்தது.

‘ரொம்ப நன்றி சார். உணவு முறைய நீங்க சொன்ன மாதிரி மாத்தினேன். ஒரு முடிவா என்ன ஆனாலும் பரவாயில்லன்னு. மூணு வாரத்துல சர்க்கரை குறைய ஆரம்பிச்சது. ரெண்டு மாசத்துல இன்சுலின் நிப்பாட்டிட்டேன். எங்க டாக்டருக்குப் புரியல, எப்படின்னு ஆச்சரியப்பட்டார். ஆனா சாப்பிட்ர ஐட்டங்கள மாத்தியிருக்கேன்ன்னு அவர்கிட்ட சொல்லலை. நான் சொல்லி அவர் அத டிஸ்கரேஜ் பண்ணிடுவாரோன்னு பயம். இப்போ சிம்ப்ளா ஒரே ஒரு மாத்திரை தான் சாப்பிடுறேன்’

அவர் சொல்ல சொல்ல எனக்கு சந்தோசமாக இருந்தது, ஆனால் ஆச்சரியம் இல்லை. இந்த முறையை பின்பற்றினால் பயனடைவது நிச்சயம் என்பது நான் அனுபவத்தில் கண்ட உண்மை.

‘மற்றொரு விஷயம், என்னால நம்ப முடியல சார். உப்பு சத்து கூட குறைஞ்சிருக்கு. ரொம்ப தாங்க்ஸ் சார். வர்ற புதன்கிழமை எல்லா டெஸ்ட்டும் உங்க ஆஸ்பத்திரியில எடுத்துட்டு வந்து பாக்கிறேன்’

கை கூப்பி வணக்கம் வைத்து விட்டு திரும்பிவிட்டார். அவர் மனைவி, இரு வினாடிகள் கூடுதலாக நின்று என்னைப் பார்த்து புன்னகைத்து விட்டு திரும்பினார். அந்தப் புன்னகையில் நன்றியுணர்ச்சி மேலோங்கி இருந்தது. ஒரு மருத்துவனுக்கு தன்னால் சிகிச்சை பெற்றவர் குணமடைந்தார் என்பதை விட வேறு இன்பம் தரும் செய்தி இருக்க முடியுமா?

திங்கள், 16 அக்டோபர், 2017

மனதிற்கு இரெண்டு குணம் கொண்ட தன்மைகள் உண்டு...



மனதிற்கு இரெண்டு குணம் கொண்ட தன்மைகள் உண்டு...


*ஒன்று ஆதரவு குணம்*

*மற்றொன்று எதிர்ப்பு குணம்*

ஆதரவு குணம் என்பது நேசம்

அது பகிர்ந்திட தயாராகவே இருக்கும்

ஆதரவு குணம் கொண்ட மனம் காத்திருக்கும்

ஆதரவு குணம் நிம்மதியை கொண்டிருக்கும்

ஆனால்......

எதிர்ப்பு குணம் என்பது பொறாமை தன்மை கொண்டது

அது உரிமை கொண்டாடி உருக்க வைக்கும்

எதிர்ப்பு குணம் எப்போதும் சந்தேகப்படும்

இது எப்போதும் நிம்மதி இல்லாமல் அலைந்து கொண்டே இருக்கும்

ஒவ்வொரு மனித மனதிற்குள்ளாகவும் ஆதரவு குணமும் உண்டு, எதிர்ப்பு குணமும் உண்டு

எதிர்ப்பு குணத்திற்கு கவனம் செலுத்தாமல்,

ஆதரவு குணத்திற்கு வலிமையைக் கூட்ட வேண்டும்

எதிர்ப்பு குணத்திற்கு அதிக கவனம் தந்தால்

அத்தனையும் இழந்து போகும் நிலை வந்துவிடும்

ஆதரவு குணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால்

இருப்பதையும் தக்க வைத்துக்கொள்ளாலாம்,

மேலும் ஆனந்தம் பெருகி அன்புடனே  வாழலாம்

மிக மிக  கவனிக்கப்பட வேண்டிய  முக்கியமான குறிப்பு :

ஆதரவாக இருப்பவர்களை

மேலும் ஆதரவு கேட்டு

தொல்லை கொடுத்தால்

ஆதரவும் விலகிப் போகும்

அனுபவத்தில் கண்ட உண்மை இது

அன்பாய் இருப்பவர்களுக்கு

ஆதரவு இருப்பாக இருப்பதை

உணர முடியாத நிலையில் இருப்பவர்கள்

இதை கவனித்தில் கொண்டால்

எப்போதும் ஆதரவு நிலைக்கும், நீடிக்கும்

எதை தேர்ந்து எடுக்க வேண்டும் என்பது அவரவரே முடிவு செய்து கொள்ளலாம்

மன அலசலின் அனுபவத்தில் : உள் முக பயணம்

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

நகத்தில் படியும் அழுக்குகளை அகற்ற சூப்பரான இயற்கை வழி!


நகத்தில் படியும் அழுக்குகளை அகற்ற  சூப்பரான இயற்கை வழி!

ஆரோக்கியமான நகம் தான் நம் உடல் நலம் மற்றும் ஆயுளையும் பிரதிபலிக்கச் செய்கிறது. எனவே நகத்தின் பராமரிப்பு என்பது மிகவும் முக்கியமானது.

அந்த வகையில், நகத்தின் அழுக்குகளை நீக்கி, பொலிவாக மாற்ற இயற்கை வழிகள் நிறைய உள்ளது.


நகத்தை ஆரோக்கியமாக பராமரிப்பது எப்படி?

நகங்களில் உள்ள அழுக்குகளை அகற்றி, பாலிஷ் செய்து, நகத்தின் மேல், கீழ் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் டூத் பேஸ்ட்டை நன்கு தடவி, சிறிய டூத் பிரஷ் கொண்டு நன்றாக ஸ்க்ரப் செய்து நீரில் நன்றாக கழுவ வேண்டும்.
நகத்தில் உள்ள அழுக்குகளை அகற்றி, பேக்கிங் சோடா, சுடுநீர் கலந்த பேஸ்ட்டை நகத்தின் மேல் மற்றும் பக்கவாட்டு பகுதியில் தடவி 5 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.


காட்டன் பஞ்சை எலுமிச்சை சாற்றில் நனைத்து நகங்களின் அனைத்து பகுதிகளிலும் தடவி, சில நிமிடங்கள் கழித்து நீரில் கழுவினால், நகங்கள் மணமாகவும், மிருதுவாகவும் இருக்கும்.


எலுமிச்சை ஆயில் மற்றும் டீ-ட்ரீ ஆயிலை சிறிதளவு சுடு நீரில் நன்றாக கலந்து அதில் நகங்களை நனைத்து, சில நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். இதனால் நகத்தில் உள்ள கறைகள், பூஞ்சை தொற்றுக்களை நீக்கி, பொலிவாக மாற்றலாம்.

- இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

முட்டையின் மஞ்சள் கருவினுள் வெள்ளைக்கரு; வியக்க வைக்கும் தொழில் நுட்பம்!



முட்டையின் மஞ்சள் கருவினுள் வெள்ளைக்கரு; வியக்க வைக்கும் தொழில் நுட்பம்!


*முட்டை மிகவும் சத்துள்ள உணவென்று அறிந்திருப்பீர்கள்.*

இதன் வெள்ளைக்கருவும் மஞ்சள் கருவும் தனித்தனியே தமக்கான இயல்புக்கேற்ற உயிர்ச் சத்துக்களினைக் கொண்டுள்ளன என்பதும் தெரிந்திருப்பீர்கள்.

பொதுவாக முட்டை ஓட்டினுள் மஞ்சள் கரு உள்ளேயும் வெள்ளைக் கரு வெளியேயுமே அமைந்திருக்கும்.

முட்டையின் உயிர் மையம் மஞ்சள் கருவினுள் தான் காணப்படும்.

ஒரு முட்டையை அவிக்கின்றபோது கோள வடிவமாகக் காணப்படும் மஞ்சள் கருவினைச் சுற்றி வெள்ளைக்கரு பாதுகாப்பு வளையம் போல இருப்பதை அவதானித்திருப்பீர்கள்.

உண்மையிலேயே முட்டையின் மஞ்சள் கருவுக்கு வெள்ளைக்கரு பாதுகாப்பு வேலி தான்.

அதனால் தான் அது அடர்த்தி கூடிய திரவமாக அமைந்து உயிர் மையமான மஞ்சள் கருவினைப் பாதுகாக்கின்றது.

இது ஒரும்புறம் இருக்க, முட்டை வெள்ளைக்கருவின் பாதுகாப்பு வேலியாக மஞ்சள் கருவினை எவ்வாறு கொண்டுவரலாம்?


அதாவது முட்டையை அவித்தபின் அதன் வெள்ளைக்கரு உள்ளேயும் மஞ்சள் கரு வெளியேயும் இருக்குமாறு எவ்வாறு மாற்றியமைக்கலாம்?

இது முகவும் இலகுவானதுதான், ஆனால் விஞ்ஞான பூர்வமான விசையின் மூலமே இது சாத்தியமாகின்றது.

சாதாரணமாக முட்டையை உடைத்துவிட்டு அதிலிருந்து மஞ்சள் கருவினை நீக்குவது கடினமாக இருக்கும்.

இதன்போது மஞ்சள் கரு சேதாரமாக்கப்படவும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

ஆனால் முட்டையை உடைக்காமலே அதன் மஞ்சள் கருவை வெள்ளைக்கருவின் பாதுகாப்பு வேலியாக மாற்றுவதாயின் முட்டையை ஒரு ஒழுங்கு முறைப்படி சுழற்றவேண்டும்.

குறிப்பாக ஒரு நாடா துணியினுள் முட்டையை சுற்றிவிட்டு அந்த நாடாவின் இரு அந்தத்தினையும் பிடித்தவாறு வேகமாக சுழற்றவேண்டும்.


இவ்வாறு சுழற்றுகின்றபோது அடர்த்தி குறைந்த திரவமான மஞ்சள் கரு  கலங்கி அடர்த்தி கூடிய திரவமான வெள்ளைக்கருவுக்கு நடு மையத்தில் வழி விட்டுக் கொடுக்கின்றது.

இதனால் வெள்ளைக்கரு யாவும் நடு மையத்திற்கு வந்ததும் மஞ்சள் கரு வெள்ளைக்கருவின் பாதுகாப்பு வேலிபோல மாறிவிடும்.

*மீண்டும் மஞ்சள் கருவினை அதே நிலைக்கு கொண்டு செல்ல முடியுமா என்றால் இல்லை என்பதுதான் விடை!!*

சனி, 14 அக்டோபர், 2017

ஊதா நிற உருளைக்கிழங்கின் மருத்துவ குணங்கள்..



ஊதா நிற உருளைக்கிழங்கின் மருத்துவ குணங்கள்..


*ஊதா நிற உருளைக்கிழங்கு நமக்கு இரு வழிகளில் உதவுகிறது.*

ஒன்று ரத்த அழுத்தத்தைக் குறைத்து உடல் எடையைக் அதிகரிக்கச் செய்யாது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பார்ப்பதற்குத் சிறியதாகத் தோன்றினாலும், இது இதய நோயின் ஆபத்துகளைக் குறைக்கிறது.

ஊதா நிற உருளைக்கிழங்கு ஆக்ஸிஜன் உட்பொருட்களைக் கொண்டுள்ளது.

மேலும் இது கொரியாவில், எடையைக் குறைக்கும் பிரபலமான நாட்டு மருந்தாக உள்ளது.

அதிக ரத்த அழுத்தத்துடன் அதிக எடையைக் கொண்ட 18 பேரிடம் ஒரு நாளைக்கு இரு முறை 6-8 சிறிய மைக்ரோவேவ் அளவுடைய ஊதா உருளைக்கிழங்குகள் கொடுத்து சோதனை நடத்தப்பட்டது.

இச்சோதனை 4 வாரங்களுக்கு நடைபெற்றது.

சோதனை முடிவில் இரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.

மேலும் உடல்
எடையும் அதிகரிக்கவில்லை.


வெள்ளி, 13 அக்டோபர், 2017

பெண்கள் மத்தியில் இருக்கும் ஏழு அதிசய குணங்கள் ...


பெண்கள் மத்தியில் இருக்கும் ஏழு அதிசய குணங்கள் ...

ஒரு சூழல்நிலை, ஒரு சந்தர்பத்தை ஆண்கள் கையாள்வதற்கும், பெண்கள் கையாள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

ஆண்கள் ஒரு செயலுக்கு சாதரணமாக வெளிப்படுத்தும் பாவத்திற்கும், பெண்கள் வெளிப்படுத்தும் பாவத்திற்கும் உள்ள வித்தியாசங்களை நாம் கண்கூட பார்க்க முடியும்.

உதாரணமாக, அந்த பெண்ணின் தோழியை காதலிக்க நீங்கள் உதவி நாடி போகும் போது, அந்த பெண்ணின் மனதில், ஒன்று பொறாமை குணம் வெளிப்படும், அல்லது கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.

 இதுவே, ஆண்கள் என்றால் முதல் வேலையாக சேர்த்து வைத்துவிட்டு, ட்ரீட் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இதுபோல ஆண்களிடம் ஒப்பிடுகையில், பெண்கள் மத்தியில் இருக்கும் ஏழு அதிசய குணங்கள் என்னென்ன என்று இனிப் பார்க்கலாம்…


அதிசய குணம் 1

நீங்கள் அந்த பெண்ணுடன் பேசுவது, அவரது அழகான தோழியை கரெக்ட் செய்ய என்பது அவருக்கு தெரிந்துவிட்டால் பத்திரகாளியாக மாறிவிடுவார்கள்.

 பெண்களால், ஒரு ஆண், தன் முன்னிலையில் வேறு பெண்ணுக்கு முக்கியத்துவம் அளிப்பதை ஏற்றுக் கொள்ளவோ, பொறுத்துக்கொள்ளவோ முடியாது.


அதிசய குணம் 2

சராசரியாக பெண்கள் ஓர் ரகசியத்தை பாதுகாக்கும் நேரம் 47 மணிநேரம் 16 நிமிடங்கள்.


அதிசய குணம் 3

பெண்களால் அவர்களது கைகளை வெறுமென வைத்துக் கொள்ள முடியாதாம்.

அதனால், ஹேன்ட்பேக், பர்ஸ், புத்தகம் என எதையாவது வைத்துக் கொண்டே இருக்கிறார்களாம்.

 அல்லது உடன் இருக்கும் நபர்களின் கைகளையாவது பிடித்துக் கொள்வார்கள்.


அதிசய குணம் 4

பெண்களால் குளிக்க செல்லும் முன்பு மேசையில் வைத்த ஹேர் பேண்டை கண்டுப்பிடிப்பது கஷ்டம்.

 ஆனால், சரியாக ஏழு மாதத்திற்கு முன்பு, வெள்ளிக்கிழமை இரவு பத்து மணியளவில் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை நினைவில் வைத்திருப்பார்கள்.


அதிசய குணம் 5

ஓர் ஆய்வில் சராசரியாக பெண்கள் வருடத்திற்கு 120 மணிநேரத்தை கண்ணாடி பார்பதற்கு பயன்படுத்துகிறார்கள் என அறியப்பட்டுள்ளது.

இந்த கணக்கை வைத்துப் பார்த்தல் அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கையில் ஐந்து வருடத்தை கண்ணாடி முன்பே கழிக்கிறார்கள் பெண்கள்.


அதிசய குணம் 6

பெண்களுக்கு பல ஆண்கள் மீது ஆவல் ஏற்படலாம், ஆனால், ஒரு ஆணின் மீது தான் அவர்களது காதல் எப்போதுமே சார்ந்திருக்குமாம்.


அதிசய குணம் 7

உங்கள் மீது விருப்பம் கொண்டுள்ள பெண்ணை என்ன வேண்டுமானாலும் திட்டுங்கள், குறை கூறுங்கள்.

 ஆனால், அவர்கள் எதற்கும் லாயக்கு இல்லை என்று கூறினால் அவர்கள் முழுவதுமாக மனமுடைந்து போய்விடுவார்கள்.

வியாழன், 12 அக்டோபர், 2017

குழந்தைகளும் மொபைல் போனும் - தேவை அதிக கவனம்!



குழந்தைகளும் மொபைல் போனும் - தேவை அதிக கவனம்!

மொபைலில் எந்தவிதமான பயன்பாடுகள் இருக்கின்றன என்பதை பெரியவர்களைவிட, குழந்தைகளே தெளிவாகக் கூறுவர். அந்தளவுக்கு மொபைலின் தாக்கம் அவர்களிடம் சென்றடைந்திருக்கிறது. மொபைலைப் பயன்படுத்தும் குழந்தைகளில் இரு பிரிவினர் இருக்கின்றனர். ஒரு பிரிவினர், மொபைலில் உள்ள விளையாட்டுகளை ஆடுபவர்கள்.மற்றொரு பிரிவினர், இணையதளங்கள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள்.

“ஒருமுறை, வீட்டுக்கு உறவினர் வந்திருந்தார். அவரோடு பேசிக்கொண்டிருக்கும் போது என் மகன் குறுக்கே வந்து, ஏதேதோ கேட்டுக்கொண்டே இருந்தான். ‘பேசாமல் இரு’ என்றாலும் கேட்கவில்லை. அதனால் என் மொபைலைக் கொடுத்து, ‘கேம் விளையாடு’ என்றேன். அன்றைக்கு ஆரம்பித்தது... இன்று ஆபீஸ் விட்டு எப்போது நான் வருவேன் எனக் காத்திருந்து, மொபைலைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவிடுகிறான். இரவு தூங்கும்வரை வேறு எந்தப்பக்கமும் அவன் கவனம் திரும்புவதில்லை” என்கிறார் கோவையைச் சேர்ந்த சுரேஷ். அவரின் மகன் இரண்டாம் வகுப்புதான் படிக்கிறான்.


சென்னையைச் சேர்ந்த நிர்மலாவுக்கு இன்னொரு பயம், “என் மகள் டென்த் படிக்கிறா. ஸ்கூல் விட்டு வந்ததும் என் மொபைலை வாங்கி, அவ ஃப்ரெண்ட்ஸ்கிட்ட பேசுவா. அப்படி அவ பேச ஆரம்பிச்ச அடுத்த மாதத்தின் செல்போன் பில் எக்கச்சக்கமா வந்தது. வெறும் கால்ஸுக்கான கட்டணம் மட்டுமில்ல... அவ இன்டர்நெட் பயன்படுத்தினதே அதுக்குக் காரணம்னு தெரிஞ்சு விசாரிச்சப்போ, ‘பாடத்துக்குத் தொடர்பான சில வெப்சைட்களைப் பார்த்தேன்’னு சொன்னா. அவகிட்ட கடுமையா நடந்துக்கவும் முடியல; மொபைலைக் கொடுக்காமலும் இருக்க முடியல’’ என்கிறார்.

அநேகமாக, எல்லோர் வீடுகளிலும் பிள்ளைகள் மொபைல் பயன்படுத்துவது குறித்து இப்படியாக ஏதாவது ஒரு புகார் இருக்கலாம். அந்தளவுக்கு மொபைலின் தாக்கம் சிறுவர்களிடையே புகுந்து விட்டது. பல பள்ளிகளில் பெற்றோர் - ஆசிரியர் கூட்டம், வீட்டுப் பாடம் உள்ளிட்டவற்றை பெற்றோர்களின் வாட்ஸ்அப்களில் அனுப்புவது நடக்கிறது. பெரிய வகுப்புகளில் படிக்கும் பிள்ளைகள் தங்கள் பாடம் தொடர்பாக இணையத்தில் பார்க்க வேண்டும் என்று மொபைல் கேட்கிறார்கள். டியூஷன், ஸ்பெஷல் கிளாஸ் என நேரம் கழித்து வீட்டுக்கு வரும் சூழலில் இருக்கும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்புக்காக அவர்களுக்கு மொபைல் வாங்கித் தருகிறார்கள் பெற்றோர்கள். இவையெல்லாம் பிள்ளைகளிடம் எந்த விதமான மாற்றங்களை உருவாக்குகின்றன, அவற்றை நாம் எப்படி எதிர்கொள்வது என கடந்த 15 ஆண்டுகளாகச் சிறுவர்களுக்குத் தன்னம் பிக்கையை வளர்த்தெடுக்கும் நிகழ்ச்சிகளை நடத்திவரும், ‘மைண்ட் ஃப்ரெஷ்’ கீர்த்தன்யாவிடம் கேட்டோம்.


கைகள் நடுங்க ஆரம்பிக்கும் அடிக்‌ஷன் :

`` சில குழந்தைகளுக்கு  வீடியோ கேம் விளையாட முடியாமல் போனால் குறிப்பிட்ட நேரத்துக்கு  மேல் கைகள் நடுங்க ஆரம்பித்துவிடுகின்றன.  கண்களை ஓர் இடத்தில் நிலைநிறுத்த முடிவதில்லை. மொபைல் பயன்படுத்த முடியாத சூழலில் ஒருவருக்கு வரும் இந்தப் பதற்றத்தை Nomophobia (No Mobile Phobia) என்று பெயரிட்டு அழைக்கிறது மனநல மருத்துவ உலகம். இன்றைய தலைமுறையினர் இந்தப் பிரச்னையால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.

பொதுவாக, டீன் வயதுகளில் உருவாகும் பழக்கம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வருவதற்கே வாய்ப்பிருக்கிறது. அது நல்ல பழக்கம் எனில், அவர்களின் வளர்ச்சிக்கு உதவும். அதுவே தீய பழக்கம் எனில் அந்தப் பழக்கமே நிறைய சிக்கல்களை உருவாக்கிவிடும்.


கண்டிப்பும் கண்காணிப்பும் :

குழந்தைகளோடு தொடர்பில் இருப்பதற்கு மிக அவசியம் எனில்,  அவர்களுக்கு தனியே ஒரு மொபைல் வாங்கித்தருவதைத் தவிர வேறு வழிகள் என்ன இருக்கின்றன என ஆராயுங்கள். அப்படி ஏதுமில்லை, மொபைல் வாங்கித்தருவதுதான் ஒரேவழி என முடிவெடுத்தால், இணையதளம் உள்ளிட்ட சேவை களைப் பயன்படுத்த முடியாத எளிய வகை மொபைல் போன் வாங்கித் தாருங்கள்.

மொபைல் போனை வாங்கித் தந்தாலும் பயன்படுத்திய பிறகு, வீட்டில் பொதுவான ஓரிடத்தில் வைத்துவிடச் சொல்லுங்கள். அதற்குப் பெற்றோரே தன் மொபைலை அங்கு வைத்து வழிகாட்டலாம். இந்த விஷயத்தில் அன்பைப் போலவே கண்டிப்பும் ஓரளவும் தேவை” என்கிறார் கீர்த்தன்யா.

மொபைல் உலகத்தோடு அதிக நேரம் குழந்தைகள் செலவழிப்பதால் அவர்களின் உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் மாற்றங்களுக்கான தீர்வு குறித்துப் பேசுகிறார் மருத்துவர் நா.எழிலன்,


ரத்த அழுத்தம் ஏற்படலாம் :

“பிள்ளைகள் மொபைல் போனில் மூழ்கிக்கிடப்பதற்குப் பெற்றோர்களே முழு காரணம். ஒரு பொம்மையின் இடத்தில் மொபைலை வாங்கி கொடுத்துவிடுகிறார்கள். ஆனால், இந்தப் பொம்மை அவர்களுடன் உரையாடுகிறது. அதில் வீடியோ பார்ப்பது, கேம் டவுன்லோடு செய்வது என அதிகமான நேரம் செலவழிக்கிறார்கள். இதனால் வெளியில் சென்று விளையாடும் பழக்கமே இல்லாமல் போய்விடுகிறது. அதனால் மாலை வெயிலில் கிடைக்கும் வைட்டமின் டி கிடைப்பதில்லை.
மொபைல் போன் ஸ்கிரீனை அருகில் வைத்தே அதிக நேரம் பார்ப்பதால் தூரத்தில் உள்ளவற்றைப் பார்க்கும் திறன் குறையும். புத்தகத்தில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதில் சிரமம் ஏற்படும். பார்வையில் சிக்கல் வரும்போது தலைவலியும் ஏற்படும். ரெஸ்ட்லெஸ்ஸாக தன்னை உணர்வர். ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால், உடல் பருமனாகிவிடும். கூடவே ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் பழக்கத்தால் மிகச்சிறிய வயதிலேயே உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்டவை ஏற்படும் அபாயமும் அதிகம்.  அந்த வயதுக்குரிய சுரப்பிகள் சுரப்பதிலும் சிக்கல் ஏற்படும்.

குழந்தைகளுடன் விளையாடுங்கள் :

முதலில் குழந்தைகளோடு பெற்றோர் விளையாட வேண்டும். மைதானங்களுக்குச் சென்று உடல் களைத்துப்போகும் அளவுக்கு விளையாடுவதை வாரம் ஒருமுறையாவது ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மற்ற நாள்களில் செஸ், கேரம் போன்ற வீட்டுக்குள் விளையாட்டுகளை ஆடலாம். இந்தப் பழக்கமே குழந்தைகளின் பெரும் நேரத்தை எடுத்துகொள்ளும். பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் அருகிலிருத்தலுமே குழந்தைகளை இத்தகைய ஆபத்துகளிலிருந்து மீட்க உதவும்’’ என்றார் நிறைவாக!


இணைய உலகில் குழந்தைகளைக் காக்க சில டெக் டிப்ஸ்!

* குழந்தைகளுக்கு எனத் தனி Log in வைத்துக்கொள்ளுங்கள். அதன் பாஸ்வேர்டு உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

* குழந்தைகள் மொபைலில் கேம்ஸ் விளையாடுகிறார்கள் என்றால், அதற்கென தனி மொபைல் வைத்துக்கொள்ளுங்கள். அந்த மொபைலுக்கெனக் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரி உங்கள் முகவரியாக இருக்கட்டும்.

* யூடியூப் போன்ற வீடியோ தளங்களில் வயதுக்கேற்ப வீடியோக்களை மட்டும் பார்க்கும் வசதிகள் உண்டு. குழந்தைகள் பயன்படுத்தும் கணினி / மொபைல்களில் இந்த செட்டிங்கைக் கவனித்து மாற்றி வையுங்கள்.

* ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் பலவற்றில் யூடியூப்பில் இருப்பது போன்ற 18+ ஆப்ஷன் கிடையாது. எனவே, குழந்தைகளின் friends list-ஐ தினம் தினம் செக் செய்யுங்கள்.

* நல்ல ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேரைப் பயன்படுத்துங்கள். அதுவே தேவையற்ற தளங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க உதவும்

* கூகுள் போன்ற சர்ச் தளங்களிலும் safe search ஆப்ஷன் உண்டு. இதன்மூலம் குழந்தைகளுக்கு உகந்த தளங்களை மட்டுமே அவர்களுக்கு ரிசல்ட்டில் காட்டும்.

* Parent control-க்கு என நிறைய ஆப்ஸ் இலவசமாகக் கிடைக்கின்றன. அதையும் மொபைலில் பயன்படுத்தலாம். இதன் மூலம் குழந்தைகள் என்ன செய்தாலும், அதை எளிதில் கண்காணிக்க முடியும்.

* சாட் வசதிகளைக் குழந்தைகள் பயன்படுத்தினால், அதை அன்றாடம் கவனியுங்கள். அவர்கள் யாருடன் பேசுகிறார்கள், யார் அவர்களுக்கு மெசேஜ் அனுப்புகிறார்கள் போன்றவற்றைக் கவனிக்கத் தவறாதீர்கள்.

* குழந்தைகள் கேம்ஸ் விளையாடும்போது சத்தம் கேட்கும். அதைத் தவிர்க்க நினைத்து ஹெட்போனைப் பயன்படுத்த சொல்லாதீர்கள். சத்தம் மூலமும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை உங்களால் கண்காணிக்க முடியும். அதோடு, ஹெட்போனைக் குழந்தைகள் அதிகம் பயன்படுத்துவதும் நல்லதல்ல.
               நன்றி...
- அவள் விகடன் (12/10/2017)

புதன், 11 அக்டோபர், 2017

வளையல்காரர்




வளையல்காரர்
.
*"ஒரு  பி(மு)ன்னோட்டம்"*

50 வருடங்களுக்கு முன்னால் ரொக்கப் பரிவர்த்தனை இல்லாத வணிகம் தமிழகக் கிராமங்களில் வழக்கில் இருந்தது.

அப்போதெல்லாம் கிராமத்துத் தெருக்களில் தலைச் சுமையிலும், தள்ளுவண்டியிலும் ஈடுபட்டவர்கள், காசு பணத்தைக் கண்ணால் பார்த்ததில்லை. எல்லாம் தானியங்களாகவே பரிமாறிக்கொள்ளப்பட்டன.

மோர் விற்கிற பெண்மணி, வீட்டுக்கு வீடு மோர் அளந்து ஊற்றிவிட்டு ஒரே ஒருபிடி அரிசி வாங்கிச் செல்வார்.

இதைப் போலவே செவ்வாய்க் கிழமைச் செட்டியார் (துணிமணிகள் கொண்டுவந்து விற்பவர்) வாணியச் செட்டியார் (எண்ணெய் விற்பவர்)

வளையல் செட்டியார் (வளையல் வியாபாரி) என்று பலரும் பொருட்களைத் தந்துவிட்டு அரிசியாகவும், கம்பு, கேழ்வரகு, தானியங்களாகவும், காய்கறிகளாகவும் வாங்கிச் செல்வது உண்டு.

இவ்வாறு விற்பவர்களைச் செட்டியார் என்ற சொல்லால் விளிப்பார்கள். அது சாதியைக் குறிப்பதில்லை.

வளையல் செட்டியார் வெறும் வியாபாரி மட்டும் அல்லர்.

அழகியலும் ஆன்மிகமும் ஊடாடும் கலைஞர் கள் அவர்கள். அவர்களின் தோற்றமே அலாதியானது.

தொளதொள ஜிப்பா, தொங்கு மீசை, முண்டாசு, வாய்நிறைய வெற்றிலை, உடைந்த வளையலாக வளைந்த கால், தாங்கித் தாங்கி நடந்து வருவார்.

 நெற்றியில் நாமம், ஒரு தோளில் வளையல்களின் மலாரம், (கயிற்றில் கோத்த வளையல்கள்) மறு தோளில் சதுர வடிவப் பெட்டியை வெள்ளைத் துணியில் வைத்துத் தனியாகத் தொங்கவிட்டிருப்பார்.

வளையல் பெட்டியைத் திறப்பார்.

புத்தம் புது வளையல்களிலிருந்து ஒருவாசம் வீசும். என்ன பொண்ணே...... செளக்கியமா என்பார் சிரித்தபடி. வாயிலிருந்து வாசனைப் புகையிலை கமகமக்கும்.

காகித அட்டைக் குழாய்களில் கலர் கலராக மின்னும் கண்ணாடி வளையல்கள்.

 மோகனமான மோஸ்தர்களில் டால் அடிக்கும்.

 வானவில்லால் செய்தது போன்ற வர்ண விசித்திரங்கள். கையில் அப்படியே ஒரு கொத்து எடுத்துக் காட்டுவதே ஒரு அழகுதான்!

பெண்களைத் தொட்டு வளையல் அணிவிக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு.

 ஆணாதிக்கமும் பெண்கள் மீதான சந்தேகமும் புரையோடிப்போன சமூகத்தில் இது எப்படி அனுமதிக்கப்பட்டது என்பது ஒரு புதிர்தான்.

பெண்களின் கையைப் பிடித்து, விரல்களை அப்படியே ஒன்றுசேர்த்து வாழைப்பூ மொக்காகப் பிடித்துக்கொள்வார். பிறகு, கணுக் கையை நீவி வலிக்காமல் வளையலைப் போட்டுவிடுவார்.

 என்ன லாவகம்.. என்ன நளினம்!

பிடி சற்று இறுகி, வளையல் போடும்போது வலித்தால் நிறுத்திவிட்டு, ‘வலிக்காமல் போட்டுவிடுகிறேன் அம்மா’ என்று தெலுங்கில் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி வளையலைப் போட்டுவிடுவார்.

வளையல்கள் அணிவிக்கும்போது உடைந்து விட்டால், அந்த வளையல்களுக்குக் காசு வாங்க மாட்டார்.

அறிமுகம் இல்லாத பெண்கள் ரொம்பவே கூச்சப்படுவார்கள்.

அப்போது சொல்வார்.. எதற்காகப் பயப்படுகிறாய் அம்மா? சிவபெருமான் திருவிளையாடல் புராணத்தில் வளையல்காரராக வந்து, பெண்களுக்கு வளையல் போட்டுவிடுவார் தெரியுமா? என்னை யார்னு நெனச்சே? சாட்சாத் அந்த சிவனேதான்! என்னை சிவனா நெனச்சுக்கோம்மா என்பார்.

 அங்கிருக்கும் பெண்களின் கண்கள் தளும்பிவிடும்.

ஆளாளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு கை நீட்டுவார்கள்.

வளையல் சத்தத்துக்குக் கிறங்காத மாப்பிள்ளைகள் உண்டா? வளையல் சத்தம் என்றதுமே வண்ணதாசன் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

“ஒண்டுக் குடித்தனக்கார

கூட்டுக் குடும்பஸ்தன்

கண்டுபிடித்தது

ரப்பர் வளையல்.”

வளைகாப்பின்போது முதலில் அரக்கு வளையல்தான் போடுவார்கள்.

அப்புறம் வேப்பமர ஈர்க்குகளில் வளையல்செய்து அணிவிப்பார்கள்.

 பிறகுதான் கண்ணாடி வளையல்கள், பிறகு வெள்ளி, பொன் வளையல்கள் அணிவிப்பார்கள்.

வயிற்றிலிருக்கும் குழந்தை, தாயின் கையில் கலகலக்கும் வளையல் சத்தம் கேட்டுச் சிரிக்குமாம்!

பிறந்த குழந்தையின் கைக்கு திருஷ்டிப் பரிகாரமாக கருப்பு - வெள்ளை நிற வளையல்கள் போடுவது உண்டு.

பால்பாசி வளையல், வசம்புத் துண்டுகளால் ஆன வளையல் என்று பிஞ்சுக் குழந்தையின் கைகளை அலங்கரிக்கும் வளையல் ஒவ்வொன்றுக்கும் ஒரு அபூர்வ வாசனை.. அழகு!

நாற்று நடும் பெண்கள் வளையல்களுடன் வேலை செய்யும்போது, பூச்சிப் பொட்டுகள் ஓடிப்போகும் என்பதால் கையிலிருந்து கழற்ற மாட்டார்கள்.

நெல் குத்தும்போது கழற்றிவைத்து விடுவார்கள்!

 மெட்டி ஒலியும், வளையல்களின் கிணுகிணுப்பும், கொலுசுச் சத்தமும் கேட்ட வீடுகளில் வசிக்க நேர்ந்தவர்களுக்கு வாழ்க்கை சுகானுபவமாக இருந்தது!

இப்போதெல்லாம் தெருக்களில் வளையல்காரர்கள் வருவதில்லை.

அவரை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பெண்களும் இல்லை.

வாழ்க்கை தொலைத்துவிட்டது வளையல் வம்சத்தை!

திங்கள், 9 அக்டோபர், 2017

கட்டாயம் தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்



இந்த பழக்கங்களை வழக்கமாக கொண்டிருந்தால் விட்டுவிடுங்கள்!


*உடல் நலம் காப்போம்*

*கட்டாயம் தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்!!*

நாம் அன்றாடம் செய்யும் சில சாதாரண பழக்கவழக்கங்கள் கூட நோய் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இப்பழக்கங்கள் நம் உடல்நலத்தில் சிறிது சிறிதாக பாதிப்பினை ஏற்படுத்தி நம்மை கொல்லும் விஷமாகிறது.

நம்மில் பல பேரிடம் இருக்கும் கெட்டபழக்கம் நகம் கடித்தல் ஆகும். நாம் விரலில் உள்ள நகத்தினை கடிக்கும் போது அதில் உள்ள கிருமிகள் நமது உடலுக்குள் சென்று நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

*நமது விரலில்* ஏராளமான கிருமிகள் நிறைந்து இருக்கும். மூக்கு மற்றும் வாயில் நாம் விரலை வைப்பதால் நம் கையில் உள்ள கிருமிகள் உடலுக்குள் எளிதாக சென்று நோய் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

*தரம் குறைவான* கண்ணாடியினை பயன்படுத்தி சு ரியனை பார்க்கும் போது அதிலிருந்து வரும் ஊதாக்கதிர்கள் நேரடியாக நமது கண்ணின் கருவிழியினை தாக்கி பார்வை குறைபாடுகளையும், சில சமயங்களில் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.

*கால்மேல் கால்* போட்டு அமர்வதால் இரத்தநாளங்களில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் இதனால் உயர் மனஅழுத்தம், நரம்பு சிதைவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

*உச்சி முதல்* உள்ளங்கால் வரை போர்த்திக் கொண்டு தூங்கும் போது கார்பன்-டை-ஆக்சைடு அளவுக்கு அதிகமாக அதிகரித்து மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

*தொடர்ந்து* செல்போனில் ஹெட் போனை உபயோகிப்பதால் நோய்தொற்று ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாது, காது கேட்கும் திறனும் குறைகிறது.

*அதிக எடையுள்ள* பைகளை நாம் எடுத்து செல்லும்போது நமக்கு தோல் வலி, முதுகு தண்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

*அதிக உயரமுள்ள* செருப்புகளை அணியும் போது, குதிகாலில் எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

*காலை உணவானது* ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். இதனை தவிர்க்கும் போது உடல் ஆற்றலை குறைத்து, உடல் எடையினை அதிகரிக்க செய்கிறது.

*நண்பர்கள் அனைவரும்*

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

காய்ச்சல் நோயா? நோய் தீர்க்கும் செயலா......?


காய்ச்சல் நோயா? நோய் தீர்க்கும் செயலா......?

டெங்கு காய்ச்சலை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் காய்ச்சல் என்றால் என்ன என்று பார்ப்போம்.

மனித உடல் பல லட்சம் கோடிக்கணக்கான செல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. சுமார் 37.2 Trillion செல்கள் என சொல்லப்படுகிறது. ஒவ்வொறு செல்லும் உணவு அருந்தி, சக்தியை கொடுத்து, கழிவுகளை வெளியேற்றுகிறது.

இது தொடர்ந்து நடைபெற்று வரும், நமது தவறான உணவு மற்றும் வாழ்கைமுறை காரணமாக செல்களின் கழிவுகளை வெளியேற்றும் பணியில் சுணக்கம் ஏற்படுகிறது.

எனவே கழிவுகள் ஆங்காங்கே தேங்கிவிடுகிறது.
சரி இப்பொழுது குழந்தைகளின் பால் புட்டியை எந்த தண்ணீரில் கழுவுவீர்கள் ? சுடு தண்ணீரில் தானே. ஏன் ? அழுக்குகள் நீங்கும், கிருமிகள் அழியும்.

சரி சிலர் தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கிறார்கள். ஏன் ?
கிருமிகள் அழியும். கொதிக்கவைத்து குடிப்பது தவறு தான் அதனுள் இப்பொழுது செல்ல வேண்டாம்.

தண்ணீரை சூடு செய்யும் போது அதில் சில பொருட்கள் நகர்வதை நீங்கள் பார்க்கலாம். சூடு ஆகும் போது நீரின் Molecules அனைத்தும் நகரத்துவங்கும்.

உணவுப் பொருட்களை சூடு செய்யும் போது அதில் இருந்து மணம் வெளிப்படுவதை நீங்கள் அறிவீர்கள்.
உணவில் உள்ள மணத்தை சூடு நகர்த்தி வெளி கொணர்ந்தது.

நமது நாட்டில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டு, காரணம் வெப்ப மண்டல நாடு. சூடு பூவின் மணத்தை நகர்த்தி வெளி கொணர்ந்தது.

ஊட்டி போன்ற குளிர் பிரதேச பகுதிகளில் உள்ள பூக்களுக்கு மணம் உண்டா ? என நீங்களே பரிசோதித்து பாருங்கள். பூ அழகாக இருக்கும் மணம் இருக்காது.

வயதான முதியவர் இறந்துவிட்டார் கையை தொட்டு பார்த்தால் ஐஸ் போல் உள்ளது. அசைவுகள் இல்லை. உயிருடன் இருந்த போது சூடு இருந்தது,
அசைவு இருந்தது.

சுடாக இல்லாவிட்டால் இரத்தத்தில் வேகம் இல்லை என்ற பாடல் வரிகளையும் நினைவுப்படுத்துகிறேன். இது போல் இன்னும் பல உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

இதில் இருந்து என்ன தெரிகிறது. சூடு ஒரு பொருளை நகர்த்தும் என தெரிகிறது. சூடு இருந்தால் Movement இருக்கும் என தெரிகிறது.
இது இயற்கை விதி. சூடு தான் சக்தி ( Energy ).

உடல் தனக்கு தேவையான பொருளை ஒரு போதும் வெளியேற்றாது. அதேப்போல் தனக்கு தேவை இல்லாத பொருளையும் உள்ளே வைத்திருக்காது.

இப்பொழுது நமது உடலில் கழிவுகள் தேங்கி உள்ளனவா?
அதற்கு வருவோம். ஒரு பொருளை நகர்த்த என்ன வேண்டும் ? வெப்பம்.

சரி இப்பொழுது உடலில் கழிவுகள் அதிகம் தேங்கிவிட்டது.
உடல் என்ன செய்யும் ?
நீ எக்கேடோ கெட்டு நாசமாய் போ என விட்டுவிடுமா ? அல்ல.

உடல் நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள மாவுச்சத்தை (Glucose) அதிகம் எரித்து வெப்பத்தை உருவாக்கும். இந்த வெப்பம் என்ன செய்யும் ?

தேங்கி உள்ள கழிவுகளை நகர்த்தி நகர்த்தி இரத்த ஓட்டத்தில் கலக்கச்செய்யும். பின் இந்த கழிவுகள் அனைத்தும் தரம் பிரிக்கப்படும்.

எந்த எந்த கழிவுகளை எந்த வழியாக வெளியேற்றினால் உடலுக்கு தீங்கு நேராது என்று உடல் முடிவு செய்து அதன் வழியாக கழிவுகளை வெளியேற்றிவிடும்.

மூக்கின் வழி சளியாகவும்.
பொருங்குடலின் வழி திடக்கழிவாகவும்.
தோலின் வழி வியர்வையாகவும்.
சிறுநீர்பை வழி சிறுநீராகவும்.

உடல் பாதுகாப்பான முறையில் கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றி விடுகிறது.

இதைத்தான்னய்யா காய்சல் என்கிறோம். நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக தேங்கிய கழிவுகளை உடல் வெப்பத்தை உருவாக்கி வெளியேற்றும் செயலே காய்சல்.

உலகிலேயே மிகச்சிறந்த நண்பன் யார் தெரியுமா ? உங்கள் உடல் தான். நீங்கள் அவனுக்கு கோடி முறை கெடுதல் செய்தாலும் கோடியை தாண்டி உங்களுக்கு நல்லது மட்டுமே செய்வானய்யா. கெடுதலை நினைக்க கூட அவனுக்கு தெரியாது.

அப்பேர்பட்ட இயற்கையின் அற்புதப்படைப்பான, இந்த உடல் வெப்பத்தை உண்டாக்கி கழிவுகளை வெளியேற்றும் போது பலர் என்ன செய்கிறார்கள்?நவீன சிகிச்சையில் ஊசி போட்டு மாத்திரை எடுக்கிறார்கள். இந்த ஆங்கில மருந்து என்ன செய்கிறது ? கழிவுகளை வெளியேற்ற உடல் சிரமப்பட்டு உருவாக்கிய வெப்பத்தை குறைத்து விடுகிறது.

முதல் முறையாக நீங்கள் செய்த கெடுதலால் உங்கள் நண்பனான உடல் கலங்குகிறான். அவன் தான் உங்கள் நண்பன் ஆயிற்றே விடுவானா?
மீண்டும் வெப்பத்தை உருவாக்க முயற்சிப்பான். தொடர்ந்து நீங்கள் ஆங்கில சிகிச்சை எடுத்து வெப்பத்தை குறைத்து விடுவீர்கள்.

வெப்பம் குறைந்ததால் Movement இருக்காது. Movement இல்லாததால் கழிவுகள் வெளியேறாமல் உடலிலேயே தங்கிவிடுகிறது. மீண்டும் மீண்டும் காய்சலை ஏற்படுத்தி கழிவுகளை வெளியேற்ற முயற்சிப்பான்.

நீங்களும் தொடர்ந்து ஆங்கில சிகிச்சை எடுத்து கழிவுகளை அடக்கி வைத்துவிடுவீர்கள். இப்படி தொடர்ந்து பல வருடங்களாக தேங்கிய கழிவுகள் பல்வேறு நோய்களாக உருவெடுக்கிறது.

பல நாடுகளில் காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவர்கள் வைத்தியம் பார்பதில்லை என உங்களுக்கு தெரியுமா ? காய்சலுக்காக வைத்தியம் பார்க்க சென்றால் திட்டி அனுப்பி ஓய்வெடுக்கச் சொல்வார்கள்.

இங்கு உள்ள நிலமையோ தலைகீழ் சொல்லவே வேண்டாம். ரோட்டில் நடந்துச்செல்பவனை வழி மறித்து ஊசி போடும் நாடு இது.

உடல் தன்னுள் தேங்கிய கழிவுகளை வெளியேற்றும் செயலே காய்ச்சல். இந்த உடல் சுத்திகரிப்பு வேலை நடக்கும் போது அமைதியாக ஓய்வு எடுத்தாலே இரண்டு மூன்று நாட்களில் காய்சல் தானாக சரியாகும்.

சரி இப்பொழுது டெங்கு காய்ச்சல் என பயமுறுத்துகிறார்களே
அதற்கு வருவோம் வாங்க.

ஒரு இடத்தில் குப்பை உள்ளது, அங்கு என்ன இருக்கும் ? பூச்சி, புழுக்கள்.

நாய் அடிபட்டு ரோட்டில் இறந்துள்ளது. அதன் உடலில் என்ன இருக்கும் ? புழுக்கள்.

தானியங்களை காற்று கூட புகாத புட்டியில் அடைத்து வைத்துவிட்டோம். சிறிது நாள் கழித்து திறந்து பார்த்தால் அதில் என்ன இருக்கும் ? வண்டுகள், பூச்சிகள், புழுக்கள்.

குப்பை மற்றும் நாய் மீது இருந்த புழு பூச்சிகள் சிறிது நேரத்திற்கு முன்பு அங்கு இல்லை. இந்த புழு பூச்சிகள் எங்கிருந்து வந்தது ? பக்கத்து ஊரில் இருந்து பேருந்தில் ஏறி வந்ததா ?

காற்று கூட புகாத புட்டியில் அடைத்து வைக்கப்பட்ட தானியத்தில் புழு, வண்டுகள் எங்கிருந்து வந்தது ? சிந்தியுங்கள்.

"இயற்கை விதி என்னவென்றால் எங்கு உணவு உள்ளதோ, அங்கு உயிர்கள் படைக்கப்படும்."

புழு, பூச்சி, வண்டு எல்லாம் எங்கிருந்தும் வரவில்லை. அந்த இடத்திலேயே உற்பத்தி ஆனது என தெரிந்து கொண்டோம்.

ஒரு ஏக்கரில் வொண்டைக்காய் செடி பயிரிடப்பட்டுள்ளது. ஒரு செடியில் அதை உண்ணும் பூச்சி வந்து விட்டது. அந்த பூச்சி பக்கத்து செடியில் உட்கார்ந்து இது நமது உணவுதானா என முகர்ந்து பார்க்கும்.

அடுத்தடுத்த செடியில் பரிசோதித்து. தனது உணவு தான் நிறைய உள்ளது என தெரிந்துகொண்ட உடனே தனது இனத்தை வேகமாக பெருக்க ஆரப்பித்துவிடும்.

ஒவ்வொறு உயிரினமும் தன்னை இப்பூவுலகில் நிலை நிறுத்திக்கொள்ள இறைவன் கொடுத்த அறிவு இது.

மனிதனும் அப்படித்தானே, எனது பொருளாதாரத்திற்கு இரண்டு குழந்தைகள் போதும் என நிறுத்திக்கொள்கிறானே.

அடுத்த இயற்கை விதி உணவின் அளவை பொருத்து உயிரினங்கள் பெருகும்.

இயற்கை விதி இரண்டு !

1 - உணவு உள்ள இடத்தில் உயிரினங்கள் படைக்கப்படும்.

2 - உணவின் அளவிற்கு ஏற்ப உயிரினங்கள் பெருகும்.

சரி, புழு பூச்சிகளுக்கு, அந்த குப்பை என்னவாகிறது ? உணவு.

பூழுவிற்கு, நாய் என்னவாகிறது ? உணவு.

வண்டிற்கு, தானியம் என்னவாகிறது ? உணவு.

இந்த இயற்கை விதிகளை அப்படியே உடலுக்குள் பொருத்துங்கள்.

நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக உடலில் கழிவுகள் தேங்குகிறது. இந்த கழிவுகள் கிருமிகள் என சொல்லப்படும் நுண்ணுயிர்களுக்கு உணவாகிறது.

"கழிவு, கிருமிகளுக்கு என்னவாகிறது ? உணவு."

கிருமிகளின் உணவாகிய கழிவுகளை நீங்கள் சேர்த்து வைத்ததால் அதை உண்டு அழிக்க கிருமிகள் அங்கு இயற்கையால் படைக்கப்பட்டு விட்டது. இப்பொழுது உணவு (கழிவு) உள்ள இடத்தில் உயிர்கள் (கிருமிகள்) படைக்கப்பட்டு விட்டதா ? ஆம்.

எப்படி வெண்டை செடியில் உள்ள பூச்சி, அதிக உணவை கண்டு தனது இனத்தை பெருக்கியதோ அதேப்போல், நுண்ணுயிர்கள் அதிக உணவை (கழிவு) கண்டு தனது இனத்தை பெருக்கும்.

இப்பொழுது நீங்கள் இரத்த பரிசோதனை செய்து பார்த்தால் கிருமிகளின் எண்ணிக்கை அதிகமாக காட்டும். அதுதான் அதிக உணவை கண்டு தனது இனத்தை பெருக்கிவிட்டதே.

உணவு இல்லை என்றால் மனிதன் என்ன ஆவான் ? இறந்து விடுவான் அல்லவா, அது போல் தான் உணவுகளாகிய கழிவுகள் தீர்ந்த பின் கிருமிகள் அழிந்துவிடும்.

நீங்கள் சேர்த்து வைத்து கழிவு, டெங்கு கிருமிக்கு பிடித்த உணவாக இருந்தால் டெங்கு காய்ச்சல்.

நீங்கள் சேர்த்து வைத்த கழிவு, சிக்கன் குனியா கிருமிக்கு பிடித்த உணவாக இருந்தால் சிக்கன் குனியா காய்ச்சல்.

நீங்கள் சேர்த்து வைத்த கழிவு, பன்றிக்காய்சல் கிருமிக்கு பிடித்த உணவாக இருந்தால் பன்றிக் காய்ச்சல்.

அவ்வளவுதாங்க.

அனைத்து காய்ச்சலுக்கும் மூல காரணம் கழிவுகளின் தேக்கமே.

இயற்கை விதி எப்படி உள்ளும் வெளியும் பொருந்துகிறது என்று பாருங்கள்.

இதை தான்

அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்று தான்
அறிந்து தான் பார்க்கும் போதே.

என்று சித்தர் பாடல் நமக்கு உணர்த்துகிறது.

இறப்புகள் நிகழ்வதற்கு காரணம் இரண்டு

1- நவீன சிகிச்சை.
2 - ஊடகம் ஏற்படுத்திய பயம்.

அனைத்து குற்றமும் நம்முள்ளே வைத்துக்கொண்டு அப்பாவி கொசுவின் மீது பழி போடுகிறோமே. இத்துனூண்டு கொசுவை வைத்தும், கண்ணுக்கு தெரியாத கிருமியை வைத்தும் எத்தனை எந்தனை வியாபாரங்கள்.

கொசு விரட்டிகள் - பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் - Corporate pharma companies மருந்து வியாபாரம் - விளைவு சாவு.

வீதிகளுக்கு கொசு மருந்துகள் - கொசுவை அழிக்கிறேன் என்ற பெயரில் பல்லுயிர் அழிப்பு - Collapse of Biodiversity - இயற்கை வழி விவசாயம் அழிவு - Corporate இரசாயன மருந்து வியாபாரம் - விளைவு மலடாய் போன மண்.

டெங்கு கொசு - டெங்கு காய்சல் - Corporate pharma மருந்து வியாபாரம் - விளைவு சாவு. என நீண்டு கொண்டே போகிறது பட்டியல்.

கிருமிகள் - Water Filter System வியாபாரம் - இதனால் நோய் - Corporate pharma மருந்து வியாபாரம் - விளைவு சாவு.

கிருமிகள் - Soap ,Hand Wash, அந்த Wash இந்த Wash கண்ட கண்ட Wash - விளைவு சாவு.

கிருமிகள் - தடுப்பூசி, Vaccination - Corporate Pharma Business - விளைவு சாவு.

கிருமி வியாபார பட்டியலுக்குள் சென்றால் நிச்சயம் இந்த பதிவு போதாது. இதனுடன் நிறைவு செய்யலாம்.

இவர்களின் நோக்கம். நாங்கள் சொல்வதை சாப்பிடு, நாங்கள் சொல்வதை படி, எங்களுக்கு வேலை செய், எங்கள் பொருட்களை பயன்படுத்து, எங்கள் மருத்துவம் பார், எங்களுக்கு சம்பாதித்து கொடுத்து விரைவில் செத்துப்போ என்பதே.

இந்த உலக வல்லாதிக்க தீய சக்தியை அழிக்க நன்மக்கள் நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

இவர்களின் கொட்டத்தை அடக்க ஒரே வழி, நமது முன்னோர்கள் நமக்கு அழகாய் வடிவமைத்துக் கொடுத்த அன்பும், அறமும், பன்பும் செரிந்த தற்சார்பு வாழ்க்கை முறைக்கு திருப்புவது மட்டுமே.

கழிவுகளை உடலில் தேக்கியது யார் குற்றம் ? டெங்கு வருவது வெளியில் உள்ள கொசுவால் அல்ல உங்கள் உடலில் உள்ள குப்பையால் தான் என இப்பொழுது தெரிகிறதா ? புரிகிறதா ?

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா யாருக்கு நோய் எதிர்பு சக்தி அதிகமாக உள்ளதோ அவர்களுக்குத்தான் காய்ச்சல் வரும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் காய்சல் வர வாய்ப்பே இல்லை.

கொசுக்களினாலோ, கிருமிகளினாலோ நோய் வருவது உண்மையாக இருந்தால் என்றைக்கோ மனித இனம் உரு தெரியாமல் அழிந்து போயிருக்கும்.

உண்மை என்னவென்றால் கிருமிகள், பல்லுயிர்கள் உயிருடன் இருந்தால் தான் நாம் இந்த உலகில் உயிருடன் வாழ முடியும்.

பால் தயிராவது கிருமியால் தான்.
மாவு புளிப்பது கிருமியால் தான்.
சோறு நீராகாரமாவது கிருமியால் தான்.
பல பண்நாட்டு உணவுகள் பக்குவமடைவது கிருமியால் தான்.
குப்பை மட்குவது கிருமியால் தான்.
மண் வளமாவது கிருமியால் தான்.
உண்ட உணவு செரிப்பதே கிருமியால் தான்.
ஏன் முதன் முதலில் உயிர் உருவானதே இந்த கருமியால் தான்.

உண்மை இப்படி இருக்க. கிருமியினால் நோய் வரும் என்பது அண்டப்புளுகு. Corporate Pharma Companies தனது வியாபாரத்தை பெருக்கவே இந்த தவறான
கருத்தை பரப்பி பயமுறுத்துகிறது.

உலக வல்லாதிக்க தீய சக்திகள் தனது மென்பொருள் ஏற்றப்பட்ட சுயமாக சிந்திக்கத் தெரியாத மருத்துவர்களை வைத்து அரசுகளை கைக்குள் போட்டுக்கொண்டு ஒன்றும் இல்லாத இந்த கொசுவை வைத்தும், கிருமிகளை வைத்தும் மிகப்பெரும் வியாபார வேட்டையில் ஈடுபடுவது மட்டும் அல்லாமல் மக்களையும் அழித்து வருகிறது.

நாம் நமது உடலை பற்றி தெரிந்துகொள்ளாவிட்டால் இப்படித்தான் தொடர்ந்து நமது தலையில் மிளகாய் அரைத்து அழிப்பார்கள்.

நாம் கற்க வேண்டிய முதல் கல்வி உடலை பற்றிய கல்வியாக இருக்க வேண்டும். பள்ளிகளில் இதை தனிப்பாடமாகவே கொண்டு வர வேண்டும்.

இயற்கையின் அற்புதப்படைப்பான இப்பூவுடலின் பேராற்றலை புரிந்து கொள்ளாமல், உலக வல்லாதிக்க தீய சக்திகளுக்கு நமது அறிவை பலி கொடுத்தது நம் குற்றமே.

அழிக்க வேண்டியது கொசுவையா ?

நமது தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறையையா ?

என நீங்களே முடிவு செய்யுங்கள்.

சரியாக புரிந்துகொண்டால், காய்ச்சல் வரும் போது,
உணவு உட்கொள்ளாமல் முழு ஓய்வெடுப்பதே குணம் அடையும் வழி
என்ற தெளிவு பிறக்கும்.