செவ்வாய், 21 ஜனவரி, 2020

"நிம்மதி இழப்பது எதனால்?..''

"நிம்மதி இழப்பது எதனால்?..''
……………………………

''தன்னிடம் இருப்பதே போதும்'' என்ற எண்ணம் வராதவரை, நாம் தொடர்ந்து ஏதோ ஒன்றிற்காக அலைந்து கொண்டேதான் இருக்கின்றோம்.

*எத்தனை கிடைத்தாலும் மனம் திருப்தி,, நிம்மதி அடைவது இல்லை..*

நம்மிடம் இருப்பதை வைத்து சரியான முறையில் பயன்படுத்த தவறும்போது, நிம்மதியை இழக்கக்கூடிய சூழல்கள் ஏற்படுகிறது..

*இருப்பதை கொண்டு திருப்தி காணும் உள்ளம் இல்லையெனில் கோடி கோடியாக கொட்டினாலும் போதாது தான்.!*

ஒரு அறிஞரிடம் பணக்காரர் வந்து,'' அய்யா என்னிடம் நிறைய செல்வமிருந்தும் மனதில் கொஞ்சம்கூட நிம்மதியே இல்லை...என்ன காரணம் என்பது புரிய வில்லை? என்று கேட்டார்.

அதற்கு அந்த அறிஞர் பதில் சொல்லவில்லை.
அங்கே அருகில் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தை ஒன்றை அருகே அழைத்தார்.

அதன் கையில் ஒரு மாம்பழத்தை கொடுத்தார்.
குழந்தை அதை தன்னுடைய ஒரு கையால் வாங்கிக் கொண்டது.

அடுத்து ஒரு பழத்தை கொடுத்தார்.அதையும் இன்னொரு கையால் வாங்கிக் கொண்டது.மீண்டும் ஒரு பழத்தை கொடுத்தார்.

தன்னுடைய ஒருகையால் இரு பழங்களையும் மார்போடு அணைத்துக் கொண்டு மூன்றாவது பழத்தையும் பெற முயற்சித்தது.

ஆனால் ஒரு பழம் நழுவி கிழே விழுந்தது.அதைக் கண்டு அந்த குழந்தை அழுதது.

இதை கவனித்துக் கொண்டு இருந்த அந்த பணக்காரரிடம் அந்த அறிஞர்,

 "இந்த குழந்தையை பார்த்தாயா? இரண்டு பழம் போதும் என்று நினைத்திருந்தால் இந்த நிலை அந்தக் குழந்தைக்கு வந்திருக்குமா?" என்றார்.

அதே போன்றுதான் "போதும்" என்ற திருப்தி ஏற்பட்டு விட்டால் பிரச்னை வாரது.நிம்மதி கிடைக்கும் தனக்கு ஏன் வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்ற விவரம் இப்போது அந்த பணக்காரருக்கு புரிந்து விட்டது.

ஆம்.,நண்பர்களே..

தங்களிடம் உள்ளதை வைத்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்..

அது, வாழ்க்கையில் மன நிம்மதியையும், அமைதியையும் ஏற்படுத்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக