திங்கள், 5 டிசம்பர், 2016

அம்மா என்றால் அன்பு

எழுதியது யார் என தெரியல ஆனா மனசை கனமாக்கிவிட்டது வார்த்தைகள்..⏪
.
👉 பூ போன்ற மகள்
அப்பல்லோவில் படுத்துக் கிடக்கிறாளே என
புலம்புவதற்கு தாய் இல்லை....
.
👉 நோய் தீர்ந்து மகள் புன்னகை சிந்தி வருவாளென பார்த்திருக்கத் தந்தை இல்லை...
.
👉 தெய்வங்களைக் கேட்டே என் சகோதரி நலம் மீட்பேன் என்று பூஜை செய்ய சகோதரன் இல்லை..
.
👉 மாற்றுடை வேண்டுமோ என
உடுப்புகள் தேடி எடுத்துப் போக உடன் பிறந்த தங்கை இல்லை..
.
👉 பெற்றவள் நலம் மீட்ட பின்பே மற்ற வேலை என்று மார் தட்டிச் சொல்வதற்கு மகன் இல்லை..
.
👉 மருந்து மாத்திரை தேடி எடுத்து மணி தவறாமல் கொடுத்திட மகள் இல்லை..
.
👉 ஆனாலும் ஈரெட்டு நாட்களாய் தாய் முகம் காணாமல் எத்தனை இதயங்கள் இங்கே
கண்ணீரில் குளிக்கிறதே..
.
👉 கட்டுக்கடங்கா கூட்டம்...
வாழ வைத்த தாய் வாடிக் கிடக்கலாமோ என செந்தனலில் இட்ட புழுவாய் தவிக்கிறது...
.
👉 உள்ளங்கைக்குள் மாணவர் உலகைக் காண மடிக்கணினி
தந்த மாதரசி நலம் பெறவே
வேண்டி நிற்கிறது மாணவச் சமூகம்..
.
👉 காவேரியை மீட்டு வந்து
முல்லைப் பெரியாரை
காத்துத் தந்து
👉 கழனி வாழ் உழவினத்தின் கண்ணீர் துடைத்த எங்கள் கனிவு மனத் தாயுன்நிலை பொறுக்காமல் உயிர் உருகும் வேதனையில் உழவர் கூட்டம்
👉 இன அழிப்பு இலங்கைக்குக்
குலைநடுக்கம் கொடுத்த
உலகத் தமிழினத்தின் ஒப்பில்லாத் தலைவியை
ஒரு நோய் வந்து சாய்ப்பதுவா என ஊணுறக்கம் கொள்ளலையே..
.
👉 கருணை தரித்த
எங்கள் அம்மா உமக்கோ பத்து கோடி பாசப் பிள்ளைகள்..
.
👉 வாஞ்சை மிகு தாய் எழுந்து வரும் நாளை எதிர்பார்த்து வாடுதே எங்கள் மனசு..
.
👉 அம்மாவின் வருகையை எதிர்பார்த்திருக்கும் கோடி இதயங்களில் நானும் ஒருத்தனாய்..!
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக