திங்கள், 26 டிசம்பர், 2016

உற்சாகமே ஆரோக்கியம்..

உற்சாகமே ஆரோக்கியம்..

உற்சாகமாக இருப்பது ஒரு கலை. அது மிக சிலருக்கு இயற்கையாகவே அமைந்து விடும்.

பாருங்களேன்.... பெரும்பாலும் உற்சாகமாக இருப்பவருக்கு அதிக கஷ்டங்கள் வருவதில்லை.. வந்தாலும் அவ்வளவு பாதிப்பு இருப்பதில்லை... கடல்போல் வந்தாலும் பனிபோல் மறைந்து விடும்.... அவர்களை சுற்றி எப்போதுமே கூட்டம் இருக்கும்...

பிரச்சனைகளை அதிகம் கொண்ட நோய்கள்கூட அதிகம் தாக்குவதில்லை இத்தகையவர்களை....

எப்பொழுதும் உற்சாகமாக வளைய வருபவர்களுக்கு உறவுகளும்.. சுற்றமும் அதிகரிக்கும் நாளுக்கு நாள்...

இதிலிருந்து என்ன தெரிகின்றது.. எல்லோரது மனமுமே அந்த உற்சாகத்திற்கு ஏங்குகிறது...
ஆசை கொள்கிறது.... அந்த உற்சாகத்தை அனுபவிக்கின்றது...

தான் இருக்கும் நிலையைவிட அந்த உற்சாக நிலை தன்னை எளிதில் ஆட்கொள்கின்றது....

இயற்கையாக அமைந்தால் தான் என்றில்லை... தனக்கு பிடித்தது போல் தன்னை மாற்றி கொள்ளலாமே.... அதில் என்ன தடை இருக்கின்றது....

இந்த மாதிரி விஷயங்களில் தயக்கமும்.. கூச்சமும் நமது மிக வலுவான எதிரிகள்..... அவர்களை கழுத்தை பிடித்து அப்புறப்படுத்தி விட
வேண்டும்.

ஒருவரை சந்திக்கும் போது... ஹாய் என்ற நமது உற்சாக குரலே அந்த சூழ்நிலை எப்படி இருந்தாலும் கலகலப்பாக்கவல்லது.

அதே சூழ்நிலையை... அழுமூஞ்சியாக்குவதும் நமது கையிலேயே. நடவடிக்கையிலேயே தான் இருக்கின்றது...

பலர் கூடியிருந்தாலும் மோசமான மந்த நிலை நிலவினாலும்.. ஒரே ஒரு உற்சாகவாதி அங்கே தலைகாட்டினால் போதும்... எல்லா முகங்களும் ஆட்டோமேட்டிக்காக டியூப்லைட் போட்டுக் கொள்ளும்.... புன்னகையும்.. உற்சாகமும்.. சிரிப்புகளும்.. கலகல பேச்சுகளும் தீபோல் பற்றிக் கொள்ளும்.

இறுக்கம் மாறும்.... வெண்கல கடையில் யானை புகுந்தது போல். மிக கலகலப்பாகும்...  இரத்த ஓட்டம் சீராகும்..
சுகர் லெவலை உடனே பார்த்தால் தெரியும் மாற்றமாகியிருக்கும்... மன உளைச்சலும்... அழுத்தமும் சீரடையும்...

சுவாசம் இழுத்து விடப் படும்.... சாப்பிட வேண்டும் போல் இருக்கும்... உற்சாகத்தோடு அடுத்த வேலையில் ஈடுபட தோன்றும்... நல்ல உறக்கம் இருக்கும்..

மொத்தத்தில் இலவசமாக கிடைக்கும்...
காஸ்ட்லியான ஒன்று
இந்த உற்சாகம்....
பல வகையிலும் பயனளிக்க கூடிய ஒரு சொத்து இந்த உற்சாகம்....

இந்த சொத்தை மட்டும் சேர்த்து விட்டோமானால் போதும் எந்த பிரச்சனையையும் எளிதாக கடந்து விடுவோம்.

இலவசம் தான் நமக்கு பிடிக்காதே....
அதுவும் நல்ல விஷயங்கள் ஆகவே ஆகாது...
வறட்டு கௌரவம் வேறு... சிரிக்கவே காசு கேட்டால் என்ன செய்வது...

அவ்வப்போது கொஞ்சம் உற்சாகமாக சந்தோஷமாக... ஜாலியாக இருக்கலாமே....

என்ன பிரச்சனை நாமும் சிரிக்க மாட்டோம்... மற்றவன் சிரித்தாலும் பிடிக்காது என்றிருந்தால் யாராலும் காப்பாற்ற முடியாது...

ஆரோக்கியத்திற்கு அவசியமானது உற்சாகம்...

1 கருத்து: