சனி, 12 நவம்பர், 2016

பூண்டை சாப்பிட்டால் அற்புதங்கள் ஏற்படும்

வறுத்த 6 பூண்டு சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?

பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும் .

பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால்...

உயர் இரத்த அழுத்தம்,
குறைந்த இரத்த அழுத்தம்,
உயர் கொலஸ்ட்ரால்,
இதய நோய்கள்,
மாரடைப்பு,
பெருந்தமனி தடிப்பு
போன்றவைகளை கட்டுப்படுத்தலாம்.

மேலும் பூண்டுகள் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தைத் தடுக்கும்..

மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும்.

பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும்.

இத்தகைய பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும்.

இங்கு அந்த அற்புதங்கள் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது.

1 மணிநேரம்:

வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும்.

2-4 மணிநேரம்:

2-4 மணிநேரத்தில் பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.

4-6 மணிநேரம்:

4-6 மணிநேரத்தில் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.

6-7 மணிநேரம்:

பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும்.

7-10 மணிநேரம்:

இக்காலத்தில், பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.

10-24 மணிநேரம்:

முதல் 1 மணிநேரத்தில் பூண்டு செரிமானமாகியப் பின், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிடுவதுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களையும் செய்ய ஆரம்பிக்கும்.

அவையாவன:

1. கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்படும்.

2. தமனிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

3. இரத்த அழுத்தத்தை சீராக்கும்.

4. உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.

5. உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கும்.

6. எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.

7. அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கும்.

8. உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கும்.
**********************************
பிடித்துக் கொள்பவர்களும்
இருக்கிறார்கள். ஆனால்
பூண்டு அற்புதமான
மருந்துபொருள் என்பது
அவர்களுக்கு தெரியாது.
பொதுவாக அமர்ந்தபடி அலுவல்
புரியும் பலருக்கு ஏற்படும்
பெரும் தொல்லை, வாயு
தொல்லை.
அதற்கு அற்புதமான மருந்து
பூண்டு. மருத்துவரிடம்
சென்று அவர் தரும் பூண்டு
மாத்திரைகளை
சாப்பிடுவதற்கு பதிலாக
உணவில் பூண்டை சேர்த்து
கொள்வது பல வகைகளிலும்
நல்லது.
இது ஒரு சிறந்த உணவாக,
மருந்தாக, வாசனைப்
பொருளாக, அழகு சாதனப்
பொருளாகப் பயன்படுகிறது.
பூண்டின் மருத்துவக்
குணங்களால், ஸ்பெயின்,
இத்தாலி, சைனா போன்ற
நாடுகளில் எல்லாவகை
உணவுகளிலும் பூண்டு
சேர்க்கப்படுகிறது. பூண்டில்
அதிகளவு தாதுக்களும்,
வைட்டமின்களும் ஐயோடின்,
சல்பர், குளோரின் போன்ற
சத்துக்களும் இருக்கின்றன.
பூண்டின் மணத்திற்குக்
காரணம் அதில் உள்ள சல்பரே.
இதில் பலவகையான மருத்துவ
குணங்கள் உள்ளன். அவற்றினை
காண்போம்.
மருத்துவ குணங்கள்:
இது ஒரு சிறந்த
கிருமி நாசினி.
வியற்வையை
பெருக்கும்,
உடற்சக்தியை
அதிகப்படுத்தும்,
தாய்பாலை விருத்தி
செய்யும்,
சளியை கரைத்து
சுவாச தடையை
நீக்கும்,
சீரண சக்தியை
அபிவிருத்தி செய்யும்,
இரத்த கொதிப்பை
தணிக்கும்.
உடல் பருமனையும்,
ரத்தத்தில் உள்ள
கொழுப்பையும்
குறைக்கும்.
இதய அடைப்பை நீக்கும்.
நீரிழிவு
நோயாளிகளின்
சர்க்கரை அளவைக்
குறைக்கும்.
ஆண்களின் ஹார்மோன்
உற்பத்தியைப் பெருக்கி
வீரியம் அதிகரிக்கக்
கூடியது பூண்டு.
பூண்டில் உள்ள ஈதர்
நம்முடைய நுரையீரல்,
நுரையீரல் குழாய்
மற்றும் முகத்தில்
அமைந்துள்ள சைனஸ்
குழிகளில்
படிந்திருக்கும்
கெட்டியான சளியை
இளக்கி
வெளியேற்றிவிடும்.
தொண்டை சதையை
நீக்கும்.
மலேரியா,
யானைக்கால்,
காசநோய்க்
கிருமிகளுக்கு
எதிராக செயல்படும்.
மாதவிலக்குக்
கோளாறுகளை சரி
செய்யும்.
பிளேக் முதல் சார்ஸ்
நோயை உண்டாக்கும்
கிருமிகள் வரை
அழிக்கும் திறன்
கொண்டது.
சீரான ரத்த ஓட்டத்துக்கு
உதவும்.
மூட்டு வலியைப்
போக்கும்.
வாயுப் பிடிப்பை
நீக்கும்.
இரத்த அழுத்தம் வந்த பின்
கட்டுப்படுத்தும்
மருந்தாகவும் பூண்டு
விளங்குகிறது
பூண்டை பாலுடன் சேர்த்துக்
குடிக்கலாம். இதனால்
உடலுக்கு ஏராளமான நன்மைகள்
கிடைக்கும். இந்த பால்
குழந்தைகள் முதல் பெரியவர்கள்
வரை அனைவரும் குடிக்கலாம்.
இந்த பால் மிகவும்
சுவையானதாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள் :
பூண்டு – 5 பற்கள்
பால் –150 மி.லி.
தண்ணீர் –150 மி.லி.
மஞ்சள்தூள்–அரை தேக்கரண்டி
மிளகு தூள்–அரை தேக்கரண்டி
பனங்கற்கண்டு–தேவைக்கு
செய்முறை:
• பூண்டுவை நசுக்கிக்
கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் பூண்டு,
பால், தண்ணீர் கலந்து பூண்டு
நன்கு வேகும் வரை சிறு தீயில்
கொதிக்கவிடவும்.
கொதிக்கும்போது நீரில்
கரையும் சத்துக்களும்,
கொழுப்பில் கரையும்
சத்துக்களும் பாலில் கலந்து
சிறந்த ஆரோக்கியத்தை தரும்.
• அந்த பாலுடன், மஞ்சள்தூள்,
மிளகுதூள், பனங்கற்கண்டு
கலந்து பருகவேண்டும். இது பல
நோய்களுக்கு மருந்தாகிறது.
பாலுடன் சேர்த்து பூண்டுவை
சாப்பிடுவதால் அதன்
காரத்தன்மை குறையும்.
• காசநோய், விட்டு விட்டு
உண்டாகும் ஜூரம், ஆஸ்துமா,
மலச்சிக்கல், வயிற்றில் உள்ள
கட்டிகள் போன்றவைகளை இந்த
பால் கட்டுப்படுத்தும்.
பாலூட்டும் தாய்மார்கள் இதை
அடிக்கடி பருகி வரலாம்.
• தினமும் இரவு படுக்கைக்கு
செல்லும் முன்பு இதை
பருகினால் தூக்கம் நன்றாக
வரும்.
* உங்களுக்கு திடீரென சளி
மற்றும் காய்ச்சல் வந்தால்,
அப்போது பூண்டு சேர்த்த
பாலைக் குடியுங்கள். இதனால்
பூண்டில் உள்ள கலவைகள் சளி
மற்றும் காய்ச்சலில் இருந்து
உடனடி விடுதலைக்
கொடுக்கும்.
* உங்கள் முகத்தில் முகப்பரு
அதிகம் இருந்தால், பூண்டு
கலந்த பாலை முகத்தில்
தடவுவதோடு, அவற்றைக்
குடித்து வந்தால் பருக்கள்
வருவதை முழுமையாகத்
தடுக்கலாம்.
* தாய்ப்பால் கொடுக்கும்
பெண்கள் பூண்டு பாலைக்
குடித்து வந்தால், தாய்ப்பாலின்
சுரப்பு அதிகரிக்கும். அதிலும்
பிரசவம் முடிந்த பின், பூண்டு
பாலை குடித்து வந்தால்,
குழந்தைக்கு தினமும் போதிய
அளவு தாய்ப்பால் கிடைக்கும்.
மேலும் உடலில் உள்ள
தேவையில்லாத
கொழுப்பையும் கரைக்கும்.
* செரிமானம் பிரச்சனை
இருப்பவர்கள் பூண்டு பால்
குடிப்பது நல்லது. ஏனெனில்
பூண்டு, உணவைச் செரிக்கும்
செரிமான திரவத்தை தூண்டி,
உணவுகள் எளிதில்
செரிமானமாக உதவும்.
* பூண்டு கலந்த பாலைக்
குடிப்பதன் மூலம் வயிற்றில்
வளரும் புழுக்களை
அழிக்கலாம். அதற்கு இந்த
பாலை காலையில் எழுந்ததும்
வெறும் வயிற்றில் குடிக்க
வேண்டும்
* பூண்டு பாலில் உள்ள வலி
நிவாரணி தன்மை, இடுப்பு
மற்றும் பின்புற கால்
வலியினால்
அவஸ்தைப்படுபவர்களுக்கு
நல்லது. எனவே உங்களுக்கு
இப்பிரச்சனை இருந்தால்
பூண்டு பாலை குடித்து
நன்மைப் பெறுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக