வெள்ளி, 18 நவம்பர், 2016

பேரிச்சம் பழத்தின் நன்மைகள்!

பேரிச்சம் பழத்தின் நன்மைகள்!

இயற்கையின் கொடையான பழங்களில் மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.
கண்பார்வை தெளிவடைய
பொதுவாக நம் இந்திய குழந்தைகளில் 42 சதவீதம் பேர் கண் பார்வை கோளாறுகளால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
மெலிந்த குழந்தைகளுக்கு
சில குழந்தைகள் எதைச் சாப்பிட்டாலும் உடல் பெருக்காமல் மெலிந்தே காணப்படுவார்கள். பள்ளிக்குச் சென்று வந்தவுடன் கால் முட்டிகளில் வலி ஏற்படுவதாகச் சொல்வார்கள். எவ்வளவுதான் மருந்துகள் கொடுத்தாலும் இவர்கள் தேறாமல் இருப்பார்கள். இதை ஆங்கில மருத்துவரிடம் காண்பித்தால் சாதாரண வலி என்று கூறுவார்கள். ஆனால் சித்த மருத்துவர்கள் இப்படிப்பட்ட பிரச்சனை ஏற்பட ஈரல் பாதிப்பு ஒரு காரணம் என்கின்றனர்.
வர்ம பரிகார நூல்கள் கூட கால்சியம் சத்து குறைவால் ஈரல் பாதிப்பு ஏற்படும் என்கிறது. இந்த பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தை தேனுடன் ஊறவைத்து காலை மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
பெண்களுக்கு
பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
சளி இருமலுக்கு
பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்க
அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.
பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.
* எலும்புகளை பலப்படுத்தும்.
* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.
* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.
* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.
மாலை நேரத்தில் கண்பார்வைக் குறைபாடு கொண்டவர்களை கப உடம்பு சூலை நோய் என்பார்கள். சளியானது கண்ணில் படிந்து மாலைக்கண் நோய் ஏற்படச் செய்கின்றது. இதற்கு தினமும் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிடுவது சாலச் சிறந்தது.
**********************************

உடல் நலத்திற்கு
ஆரோக்கியத்தை வாரி
வழங்குவதில்
பேரிச்சம்பழத்திற்கு இணை
வேறு எதுவும் இருக்க
முடியாது. இந்த சிறிய
பேரிச்சம் பழத்தில் அவ்வளவு
சத்துக்கள் நிறைந்துள்ளது.
முக்கியமாக பேரிச்சம்
பழத்தில் வைட்டமின்களும்,
கனிமச்சத்துக்களும்
ஏராளமாக உள்ளது. பேரிச்சம்
பழத்தை அன்றாடம்
உட்கொண்டு வந்தால்,
ஆண்களை அதிகம்
தாக்கும் கொலஸ்ட்ரால்
பிரச்சனை மற்றம்
இதர பிரச்சனைகளைத்
தடுக்கலாம்.
எனவே ஆண்கள்
ஆரோக்கியமாக இருக்க
விரும்பினால், தினமும் ஒரு
பேரிச்சம் பழத்தை
உட்கொண்டு வாருங்கள்.
நிச்சயம் ஓர்
நல்ல மாற்றத்தைக் காணலாம்.
இது
ஆண்களுக்கு மட்டுமின்றி,
பெண்களுக்கும்
பொருந்தும். இங்கு பேரிச்சம்
பழத்தை
அன்றாடம் எடுத்துக் கொள்வதன்
மூலம்
பெறும் நன்மைகள்
கொடுக்கப்பட்டுள்ளன.
ஊட்டச்சத்துக்கள்
பேரிச்சம் பழத்தில்
கொழுப்புக்கள் மிகவும்
குறைவு. மேலும் பேரிச்சம்
பழத்தில் வைட்டமின்களான
பி1, பி2, பி3, பி5, ஏ1, சி
போன்றவையும் புரோட்டீன்,
நார்ச்சத்து போன்றவையும்
வளமாக நிரறந்துள்ளது.
செரிமானம் சீராகும்
பேரிச்சம் பழத்தில் உள்ள
கரையும் மற்றும் கரையாத
நார்ச்சத்துக்களுடன், பல்வேறு
வகையான அமினோ
அமிலங்களும் உள்ளதால்,
இதனை தினமும்
உட்கொண்டு வந்தால்
செரிமான
மண்டலத்தின் செயல்பாடு
ஆரோக்கியமாகி,
செரிமான பிரச்சனைகள்
ஏற்படுவது
தடுக்கப்படும்.
சிறந்த ஆற்றல் கிடைக்கும்
பேரிச்சம் பழம் உடலின்
ஆற்றலை மேம்படுத்தும்.
ஏனெனில் இதில் இயற்கை
சர்க்கரைகளான
குளுக்கோஸ், சுக்ரோஸ்
மற்றும் புருக்டோஸ்
போன்றவை
நிறைந்துள்ளன. அதிலும்
தினமும் பேரிச்சம் பழத்தை
பாலுடன் சேத்து உட்கொண்டு
வந்தால்,
உடலின் சோம்பேறித்தனம்
நீக்கப்பட்டு, உடலின் ஆற்றல்
அதிகரிக்கும்.
ஆரோக்கியமான நரம்பு
மண்டலம்
பேரிச்சம் பழத்தில்
சோடியம் குறைவாகவும்,
பொட்டாசியம் அதிகமாகவும்
இருப்பதால், இதனை
உட்கொண்டால்,
நரம்பு மண்டலத்தின்
ஆரோக்கியம் அதிகரிக்கும்.
பக்கவாதம் தடுக்கப்படும்
ஆராய்ச்சியாளர்கள், பேரிச்சம்
பழத்தில்
பொட்டாசியம் உள்ளதால்,
அதனை
அன்றாடம் ஆண்கள் உட்கொண்டு
வந்தால், அவர்களை அதிகம்
தாக்கும்
பக்கவாதம் வரும் வாய்ப்பு
குறைவதாக
தெரிவித்துள்ளனர்.
கெட்ட கொலஸ்ட்ரால்
குறையும்
பேரிச்சம் பழத்தை தினமும்
சாப்பிட்டு வந்தால்,
உடலில் உள்ள கெட்ட
கொலஸ்ட்ராலின் அளவு
குறையும்.
இரத்த சோகை நீங்கும்
பேரிச்சம் பழத்தில்
இரும்புச்சத்து இருப்பதால்,
இதனை
இரத்த சோகை உள்ளவர்கள்
உட்கொண்டு
வருவது நல்லது.
மலச்சிக்கல்
மலச்சிக்கலால்
அவஸ்தைப்படுபவர்கள்,
பேரிச்சம்
பழத்தை இரவில் படுக்கும்
போது நீரில் ஊற வைத்து,
மறுநாள் காலையில் நீருடன்
பேரிச்சம் பழத்தை
உட்கொண்டு வந்தால்,
மலச்சிக்கல்
நீங்கும்.
படுக்கையில் சிறப்பாக
செயல்பட உதவும்
பேரிச்சம் பழம் படுக்கையில்
நீண்ட நேரம் சிறப்பாக
செயல்பட உதவும். அதற்கு
இரவில் படுக்கும்
போது ஆட்டுப் பாலில் ஒரு
கையளவு பேரிச்சம் பழத்தை
ஊற வைத்து, மறுநாள்
காலையில் அதனை பாலுடன்
சேர்த்து அரைத்து, தேன்
மற்றும் ஏலக்காய்
பொடி சேர்த்து கலந்து
குடித்து வர வேண்டும்.
எடையை அதிகரிக்கும்
ஒல்லியாக இருப்பவர்கள்,
குண்டாவதற்கு
பேரிச்சம் பழம் சாப்பிட்டு
வந்தால் போதும். நிச்சயம்
குண்டாகலாம்.
அதுமட்டுமின்றி, ஆல்கஹால்
குடித்து உடலில்
தேங்கியுள்ள நச்சுக்களை
வெளியேற்றவும் பேரிச்சம்
பழம் உதவும்.

தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட
ஆரம்பித்தால் உடலில் என்னென்ன
மாற்றங்கள் ஏற்படும் என்று
தெரியுமா? பலரும் பேரிச்சம்
பழம் சாப்பிட்டால் உடலில்
இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்
என்று மட்டும் தான்
நினைக்கிறார்கள். ஆனால்
பேரிச்சம் பழத்தில் நாம் நினைக்க
முடியாத அளவில் நன்மைகள்
நிறைந்துள்ளது.
அதிலும் தினமும் 3 பேரிச்சம்
பழத்தை ஒருவர் உட்கொண்டு
வந்தால், தற்போது பலர் சந்தித்து
வரும் நிறைய பிரச்சனைகளில்
இருந்து விடுபடலாம்.
அந்த அளவில் இந்த சிறு பழத்தில்
சத்துக்களானது ஏராளமான
அளவில் அடங்கியுள்ளது. இங்கு
தினமும் 3 பேரிச்சம் பழம்
சாப்பிடுவதால் பெறும்
நன்மைகள்
கொடுக்கப்பட்டுள்ளது.
பேரிச்சம் பழத்தில் வளமான
அளவில் ஊட்டச்சத்துக்கள்
நிறைந்துள்ளதால், தினமும் 3
பேரிச்சம் பழத்தை உட்கொண்டு
வந்தால், ஒரு நாளைக்கு
ஒருவருக்கு வேண்டிய
ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
குறிப்பாக காப்பர்,
பொட்டாசியம், நார்ச்சத்து,
மாங்கனீசு, வைட்டமின் பி6,
மக்னீசியம் போன்றவற்றைப்
பெறலாம்.
பேரிச்சம் பழம் செரிமான
மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு
நல்லது. ஒருவேளை
உங்களுக்கு சீரற்ற குடலியக்கம்,
மலச்சிக்கல் அல்லது வேறு
ஏதேனும் செரிமான
பிரச்சனைகள் இருப்பின்,
பேரிச்சம் பழத்தை தினமும் 3
உட்கொண்டு வர, அதில் உள்ள
நார்ச்சத்து
இப்பிரச்சனைகளுக்கு
தீர்வளித்து, குடல் புற்றுநோய்
வரும் அபாயத்தைக் குறைக்கும்.
பேரிச்சம் பழத்தில் மக்னீசியம்
என்னும் நோயெதிர்ப்பு
அழற்சிப் பொருள் உள்ளது. இது
உடலினுள் ஏற்படும் வீக்கம்
மற்றும் வலியைக் குறைக்கும்.
மேலும் ஆய்வுகளும் பேரிச்சம்
பழத்தில் உள்ள மக்னீசியம்,
தமனிகளில் ஏற்படும் வீக்கத்தைக்
குறைத்து, இதய நோய்கள் வரும்
அபாயத்தைக் குறைப்பதாக
கூறுகின்றன.
69 கர்ப்பிணிகளைக் கொண்டு
ஆய்வு மேற்கொண்டதில்,
பிரசவம் நடைபெறுவதற்கு 4
வாரத்திற்கு முன்பிருந்து
தினமும் 3 பேரிச்சம் பழம்
உட்கொண்டு வந்த பெண்களுக்கு
பிரசவம் எளிமையாக
நடைபெற்றிருப்பது தெரிய
வந்தது. மேலும் பேரிச்சம்
பழத்தை கர்ப்ப காலத்தில்
உட்கொண்டு வந்தால், பிரசவம்
முடிந்த பின் உடல் எடையை
குறைக்க உதவியாக இருக்கும்.
பேரிச்சம் பழத்தில் உள்ள
மக்னீசியம், உயர் இரத்த
அழுத்தத்தைக் குறைக்க
உதவியாக இருக்கும். மேலும்
இதில் உள்ள பொட்டாசியம், இதய
செயல்பாட்டை மென்மையாக்கி,
இரத்த அழுத்தத்தை சீராக
வைத்துக் கொள்ளும். எனவே
உயர் இரத்த அழுத்தம்
இருப்பவர்கள், தினமும் 3
பேரிச்சம் பழம் சாப்பிட்டு
வந்தால், இரத்த அழுத்தத்தைக்
கட்டுப்பாட்டுடன் வைத்துக்
கொள்ளலாம்.
முக்கியமாக பேரிச்சம் பழத்தில்
இருக்கும் மக்னீசியம் பக்கவாதம்
வரும் அபாயத்தைக்
குறைப்பதாக ஏழு ஆய்வுகளில்
நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு
தினமும் ஒருவர் 100 மிகி
மக்னீசியத்தை எடுக்க
வேண்டியது அவசியம்.
யார் ஒருவர் தினமும் 3 பேரிச்சம்
பழத்தை உட்கொண்டு
வருகிறாரோ, அவரது
மூளையின் செயல்பாடு
மேம்படும். அதாவது ஞாபக
சக்தி, ஒருமுகப்படுத்தும்
தன்மை, கூர்மையான புத்தி,
எதையும் எளிதில் கற்றுக்
கொள்ளும் திறன் போன்றவை
அதிகரிக்கும்.
பேரிச்சம் பழத்தில் உள்ள
அதிகப்படியான இரும்புச்சத்து,
உடலில் இரத்தணுக்களின்
அளவை அதிகரித்து, இரத்த
சோகை வரும் அபாயத்தைக்
குறைக்கும். எனவே உங்கள்
உடலில் இரத்தத்தின் அளவு சீராக
இருக்க, தினமும் 3 பேரிச்சம்
பழத்தை உட்கொண்டு வாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக