திங்கள், 21 நவம்பர், 2016

மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம் ...

நக மந்திரம் உடலை இயக்கும் ஒரு ஜிம் (GYM)

காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது., "மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892—1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் "நதிகளில் நான் கங்கையாகவும., மலைகளில் நான் விந்திய மலையாகவும்., மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சுவாமி இராமகிருஷ்ண பரமஹமஸர் கூறுகையில் "பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும்., காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் "காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் (Atom Bomb) சமம்" எனக் குறிப் பிட்டுள்ளார்.

ஜெர்மன் தத்துவ ஞானி மெக்ஸ் முல்லர் (1823—1900) அவர்கள் "ஒளியினை தவம் செய்து நம் மூளை., மனதினை உயர்த்துவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தி (1869—1948) அவர்கள் "யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக் கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் "உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்" என்பதாகும்.

இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.
காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி., மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது.

தத் — வெற்றி
ச — வீரம்
வி — பராமரிப்பு
து — நன்மை
வ — ஒற்றுமை
ரி — அன்பு
நி — பணம்
யம் — அறிவு
ஃபர் — பாதுகாப்பு
க்கோ — ஞானம்
த்தி — அழுத்தம்
வா — பக்தி
ஸ்யா — நினைவாற்றல்
ஃத்தி — மூச்சு
மா — சுய ஒழுக்கம்
யோ — விழிப்புணர்வு
யோ — உருவாக்குதல்
நஹ — இனிமை
பரா — நல்லது
சோ — தைரியம்
த்தா — ஞானம்
யட் — சேவை

காயத்ரி மந்திரம் என்றால் என்ன..?

வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.
ஓம் — தெய்வீக சக்தி, ஒலி சின்னம்
ப்பூ — உடல் விமானம்
புவஹா — நிழலிடா விமானம்
ஸ்வ — வான விமானம்
தத் — அந்த தலை தெய்வத்தின்
ஸவித்து — பிரபஞ்சம் தயையும் சக்தி
வரேன்யம் — வணங்க வேண்டும்
பர்கோ — பிரபல
தேவஸ்ய — பிரகாசமிக்க
தீமஹி — நம் த்யானம்
தியோ — அறிவினை
யா — யார்
நஹ — எங்கள்
ப்ரசோதயாத் — தெளிவுப்படுத்துங்கள்

"ஓம் பூர் : புவ : ஸீவ :
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ : யோந: ப்ரசோதயாத்"

நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள்.

இம் மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது. வேதங்களின் தாய் தான் காயத்ரி தேவி. இம் மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இத்தேவி இருப்பாள். இத் தேவிக்கு சாவித்திரி., சரஸ்வதி என்ற பெயரும் உண்டு.

காயத்ரி ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி ப்ராண சக்தி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது. சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக., உண்மையான சிந்தனை., சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகின்றது. காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடே சொல்ல வேண்டும். காலை., மாலை இருவேளையும் சொல்லலாம். அனைவரும் சொல்லலாம். ஹிருதயம் சுத்தமாகும். தீய எண்ணங்கள்., கவலைகள் நீங்கும். குறிப்பாக., பள்ளி மாணவர் திறமையாகப் படிப்பார்கள்.

காயத்ரி மந்திரம் ஜபிப்பதன் பலன்கள்

# கம்பீரத் தோற்றம்.
# தரமான பேச்சு.
# வறுமை., குறை நீங்குதல்.,
#பாதுகாப்பு வட்டம்.
# கண்ணில் அறிவு தெரிதல்.
#அபாயம்., தேவையற்ற சூழ்நிலை நீங்கும்.
# நரம்புகளும்., சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படும்.
மேலும்.,
#அமைதியாய் இருப்பர்.
# நற்செயல்களில் ஈடுபடுவர்.
#காந்த சக்தி ஆகியவை உருவாகும்.
மேலும்.,
# வாழ்க்கையில் தடைகளை நீக்கும்.
# மூளையை பிரகாசிக்கச் செய்யும்.
#உள்ளுணர்வினை தெளிவாக்கும்.
#உயர் உண்மைகள் தெரிய வரும்.
— என்றும் கூறப்படுகின்றது.

டாக்டர் ஹெவார்ட் ஸ்டியன் கெரில் என்ற அமெரிக்க விஞ்ஞானி காயத்ரி மந்திர பலன்களாக பல செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆனால்., இதற்கு மேலும் ஆதாரப்பூர்வம் தேவைப்படுகின்றது....
கடந்த சில ஆண்டுகளில் சில வெளிநாடுகளில் காலை 7 மணிக்கு சுமார் 15 நிமிடங்கள் தொடர்ந்து காயத்ரி மந்திரத்தினை ஒலிபரப்புவதாக கூறப்பட்டுள்ளது.

இம்மந்திரம் முழுக்க முழுக்க ஒளியினை வணங்குவதும்., மனதின் இருளினை நீக்க வேண்டுவதாக அமைந்துள்ளதால்., இம் மந்திரம் பெரிதும் வரவேற்கப்படுகின்றது.

ஒரு மந்திரமோ., தியானமோ., யோகவோ., உடற்பயிற்சியோ., ஆரம்பிப்பதற்கு முன்னால் உங்கள் மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம்.
ஒரு பழக்கம் உங்களை விட்டு நீங்க (உ—ம்) காபி., டீ பழக்கம் போன்றவை நீங்க 40 நாட்கள் ஆகும்.

த்யானமோ., மந்திரமோ அது பழக்கமாக ஆரம்பிக்கும் பொழுது அது உங்களுக்கு கை கூடி வர., பழக்கப்பட 90 நாட்கள் ஆகும்.

120 நாட்களில் புதுப்பழக்கம் நன்கு பழகி விடும்.

120 நாட்களில் கை விட்ட பழக்கமும் நம்மிடம் நன்கு நீங்கி விடும்.

1000 நாட்களில் நீங்கள் செய்யும் சாதனையோ., கடைப்பிடிக்கும் பழக்கமோ., அதற்கு நீங்கள் மாஸ்டர் ஆகி விடுவீர்கள். (உ—ம்) தொடர்ந்து நீங்கள் 1000 நாட்கள் காலை 4 மணிக்கு எழுந்தால்.,  வாழ்நாள் முழுவதும் அவ்வாறே செய்வர்.

#மந்திரத்தைத் தொடர்ந்து 3 நிமிடங்கள் ஜபிப்பது உங்களைச் சுற்றியுள்ள மின்சார காந்த அலைகளை தாக்கும். ரத்த ஓட்டம் சீர்படும்.

#ஏழு நிமிடம் தொடர்ந்து ஜபிப்பது உங்கள் மூளை செயல் திறனைக் கூட்டும். உடல் வலுவினைக் கூட்டும். உடலைச் சுற்றியுள்ள காந்த அலைகளில் நல்ல மாறுதல்கள் ஏற்படும்.

# 11 நிமிடம் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும்., தியானம் செய்வதும் நரம்பு மண்டலத்திலும்., சுரப்பிகளிலும் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும்.

# 22 நிமிடங்கள் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும்., தியானம் செய்வதும் ஒருவரின் அழிவுப்பூர்வ., ஆக்கப்பூர்வ இரண்டும் இல்லாத நிலைகளில் தடுமாறும் மனதினை நிலைப்படுத்தி தெளிவாக சிந்திக்க வைக்கும். உள் உணர்வினைக் கூட்டும்.

#31 நிமிடங்கள் தொடர்ந்து ஜெபிப்பது சுரப்பிகளை சீர்ப்படுத்தும். மூச்சு சீராகின்றது. அனைத்துத் திசுக்களும் சீர்படத் தொடங்குகின்றன.

# 62 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிக்கும் பொழுது மூளையில் "க்ரே" பகுதியில் (Grey Matter) மாற்றம் ஏற்படுகின்றது. பிட்யூட்டரி., பீனியல் சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன.

#இரண்டரை மணிநேரம் தொடர்ந்து ஜெபிக்கும் பொழுது உயர்நிலையினை மனம்., மூளை அடைகின்றது. நாள் முழுவதும் ஆக்கப் பூர்வமாகவே செயல்படுவர்.

— மேற்கூறப்பட்டுள்ள கருத்துக்கள் விஞ்ஞான ஆய்வு முடிவுகள் இல்லை. என்றாலும்,, பல அனுபவ ரீதியான கருத்துக்களாக வெளியிடப்பட்டுள்ளன.
மந்திரம் சொல்வதற்கென சில முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

#காலை 4 மணிக்கு எழுந்து நாலரை மணிக்குள் தயாராகுங்கள்....

#கிழக்கு முகமாக அமருங்கள்.

#ஞான முத்திரை பரிந்துரைக்கப்படுகின்றது.

#மந்திரத்தினை பொறுமையாய் 108 முறை சொல்லுங்கள்.

மகாத்மா காந்தி அவர்கள். அவர்களது "இயற்கை வைத்தியம்" என்ற புத்தகத்தில் "ஒரு மருத்துவரின் கடமை நோயாளியின் உடலுக்கு கவனம் செலுத்துவது மட்டுமல்ல. அவரது ஆன்மாவிற்கும் கவனம் செலுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மந்திரங்களைப் பற்றிய கூடுதல் தகவல்கள்.....

* மகாத்மா காந்தி அவர்கள்., "ராம" நாமத்தினை பரிந்துரைக்கின்றார். மேலும் "ராம" நாமம் அனைத்திற்கும் தீர்வு என்று குறிப்பிடுகின்றார். இந்த நாமத்தினை சொல்பவர்கள் சிறிய முயற்சியிலேயே அரிய செயல்களை சாதிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"ரா" என்பது "ஓம் நமோ நாராயணா என்பதிலிருந்தும், "ம" என்பது "ஓம் நம சிவாய" என்பதிலிருந்தும் சேர்க்கப்பட்டதால்., இரட்டிப்பு பலன் என்றும் கூறப்படுகின்றது.

* கந்த ஷஷ்டி கவசத்தில் கூட "ரஹன பவச ரரரர., ரிஹண பவச ரிரிரிரி" என சொல்லப்படுகின்றது. "ரா" என்ற எழுத்தும் "ம" என்ற எழுத்தும் உச்சரிக்கப்படும் பொழுது உடலில் ஏற்படும் அதிர்வுகள் அவரது உடல் நலத்தினையும்., மன நலத்தினையும் காப்பதாக விளக்கப்படுகின்றது. ஆக., மந்திரங்களும் அமிர்த மருந்தே என்பதை அறிவோமாக.
*********************************
காயத்திரி மந்திரம்:
ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்|
காயத்திரி மந்திரத்தின் விளக்கம்:
பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய
மூன்று உலகங்களையும் படைக்க்க்
காரணமான ஒளி பொருந்திய,
வணக்கத்திற்குரியவரை நாங்கள்
தியானிக்கிறோம். நாங்கள் மேலான
உண்மையை உணர அந்தப்
பரம்பொருள் எங்களது அறிவை
ஊக்குவிக்கட்டும்.
உபநயனம் செய்யப்பட்டவர்கள்
நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை
ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள்
அனைத்துமே செய்யுளைப் போல்
உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை
உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின்
அளவைக் கொண்டு இந்த மந்திரம்
இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி
மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று.
ஒவ்வொரு கடவுளரை தியானிக்க
தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது.

காயத்திரி மந்திரத்தின் பொருளைப்
பாரதியார் தான் பாடிய பாஞ்சாலி
சபதத்தில் (பாடல் எண்;
153)பின்வருமாறு பாடியுள்ளார்.
"செங்கதிர்த் தேவன் சிறந்த
ஒளியினைத் தேர்கின்றோம்
அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக"
*****************************
விசுவாமித்திரர் இயற்றிய (ரிக் வேதத்தின்) மூன்றாவது
மண்டலத்தில் (3.62.10) உள்ள மந்திரம் தான் காயத்திரி
மந்திரம் ஆகும். இது மிகவும் சக்திவாய்ந்த மந்திரமாகும்.
இதை தினமும் செப்பித்தால், எல்லா
சௌபாக்யங்களும் கிட்டும்.
| ஓம் | என்றால் பரம்பொருளாகிய இறைவன்.
| பூர்: | என்பது பூர்ஹ் என்று உச்சரிக்கப்படுதல் ஆகும். பூர்:
என்றால் பூமி எனப் பொருள்படும். இறைவன் பூமியில் நம்முடனே இருக்கிறார்.
எவ்வுயிரிலும் இருக்கிறார். பூமி முழுவதும் எங்கும்
நிறைந்திருக்கிறார். இந்த பூமி நம்மால் பார்த்து,
உணரக்கூடிய ஓர் இடம். இறைவன் நம்மால் பார்த்து,
உணரக்கூடிய நிலையிலும் இருக்கிறார்.
| புவ: | என்பது புவஹ் என்று உச்சரிக்கப்படுதல் ஆகும். புவஹ்
என்றால் வானம். இறைவன் வானமெங்கும் நிறைந்திருக்கிறார்.
வானத்தை நம்மால் காண மட்டுமே முடியும். அதை நாம்
தொட்டு, உணர இயலாது. இறைவன் நம்மால்
காணமட்டுமே முடிந்த உணரமுடியாத ஒன்றாகவும்
இருக்கிறார்.
| ஸுவஹ | என்பது ஸ்வஹ என்று உச்சரிக்கப்படுதல் ஆகும். ஸ்வஹ் என்றால்
வானத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று. அதுவே
ஆங்கிலத்தில் ’beyond universe’ எனப்படுகிறது.
இந்த நிலையை நம்மால் காணவும் முடியாது உணரவும்
முடியாது.. அங்கும் இறைவன் நிறைந்திருக்கிறார்.
அந்த தன்மை இறைவனுக்கும் உண்டு..
இறைவன் நம்மால் காண முடியாத உணர முடியாதவராகவும்
இருக்கிறார்.
| தத் ஸவிதுர் | என்றால் ‘அந்த ஞானஒளி’
| வரேண்யம் | என்றால் ‘அளவுக்கடந்த பக்திக்கும் அன்பிற்கும்
உரியவரே’
| பர்கோ | என்றால் பிரகாசமான சுடரொளி
| தேவஸ்ய | என்றால் தெய்வீகமான
| தீமஹி | என்றால் எங்கள் முழுச்சிந்தனையும் உன்னோடு
செலுத்தி உன் எண்ணத்திலேயே
தியானத்தில் மூழ்குகிறோம்
| தியோ: | என்றால் ஞானம், விவேகம், சிந்திக்கும் திறன்
| யோந: ப்ரச்சோதயாத் | என்றால் நீயே எங்களுக்கு
அறிவைப் புகட்டு
இம்மந்திரத்தின் குறுகிய அர்த்தம் என்னவென்றால், பூர்: புவ: ஸ்வஹ
என்ற மூன்று நிலையும் கொண்ட, உணர்ந்த அந்த ஞானஒளியாக
திகழும் பரம்பொருளே,.. எங்களின் அளவுக்கடந்த
பக்திக்கும் அன்பிற்கும் உரியவரே,.. பிரகாசமான சுடரொளியே,
தெய்வீகமானவரே, எங்கள் முழுச்சிந்தனையும்
செலுத்தி உன்னையே நினைவில் கொண்டு
தியானத்தில் மூழ்குகிறோம். எங்களின் ஞானம், விவேகம்,
சிந்திக்கும் திறன், புரிந்துணர்வு, பேராற்றல் ஆகிய
அனைத்தையும் நீயே எங்களுக்கு
புகட்டுவாயாக.
காயத்திரி மந்திரத்தின் பொருளைப் பாரதியார் தான் பாடிய
பாஞ்சாலி சபதத்தில் (பாடல் எண்; 153) பின்வருமாறு பாடியுள்ளார்.
"செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத்
தேர்கின்றோம் அவன் எங்களறிவினைத் தூண்டி
நடத்துக"
இம்மந்திரத்தைக் காலை எழுந்து
நீராடிவிட்டு பூஜை அறையில் அமர்ந்து தியானிக்கும்
போது செப்பித்தால் மிக்க நன்மை உண்டாகும். எல்லா
இந்துக்களும் அடிப்படையாக தெரிந்துகொள்ள
வேண்டிய முதல் மந்திரம் இதுவாகும். அனைவரும்
இம்மந்திரத்தை செப்பித்து நல்பேறு
பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக