சனி, 12 நவம்பர், 2016

முருங்கைக் கீரை

முருங்கைக் கீரை

முருங்கைக் கீரை  108 கலோரி சக்தியை நமக்குக் கொடுக்கின்றது...
கண்ணுக்கு மிகவும் நல்லது.
மலச் சிக்கலைத் தீர்க்கும்.
தாது உப்புகள் இந்த கீரையில் ஓரளவுக்கு இருப்பதால் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். எலும்பு உறுதி பெறும்.
வைட்டமின் சி அதிகமாக இருப்பதனால், அதை உணவாக உட்கொள்ளும்போது, சொறி சிரங்கு நோய்கள், பித்தமயக்கம், கண்நோய், செரியா மாந்தம், கபம் முதலியவை குணமாகின்றன.
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.
முருங்கைக் கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் குணமாகும்.
கழுத்து வலி உள்ளவர்கள் தினந்தோறும் முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர படிப்படியாக நிவாரணம் கிடைக்கும்.
முருங்கை இலையுடன் வசம்பு, உப்பு சேர்த்து சுட்டு கரியாக்கி, அதை நீரில் குழைத்து தொப்புளைச் சுற்றி பற்றிட குழந்தைகளின் வயிற்று உப்புசம், வயிற்று வலி தீரும்.
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும்.
இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.
நன்கு பசுமையாகவும், இளசாகவும் உள்ள முருங்கை காய்களை எடுத்து, இடித்து சாறி பிழிந்து, அத்துடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட ஜலதோசம் குணமாகும்.
• முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.
• முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது.
• முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.
• இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.
• முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
• கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.
• ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

• முருங்கை கீரையை
வேகவைத்து அதன் சாற்றை
குடித்து வந்தால் உடல் சூடு
தணியும். வெப்பத்தின் காரணமாக
உடலில் ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.
• முருங்கை காய் உடலுக்கு நல்ல
வலிமையைக் கொடுக்க வல்லது.
இதை உண்டால் சிறுநீரகம்
பலப்படும் தாதுவும்
(sperm)பெருகும். எனவேதான்,
இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற
பெயரும் இருக்கிறது.
• முருங்கை இலையை உருவி
காம்புகளை நறுக்கி விட்டு பின்
மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன்
சேர்த்து உண்டு வந்தால் கை, கால்
உடம்பின் வலிகள் யாவும் நீங்கும்.
முருங்கை இலைகளில் இரும்பு,
தாமிரம், சுண்ணாம்புச் சத்து
ஆகியவை இருக்கின்றன.
• இந்த இலைகளை நெய்யில் வதக்கி
சாப்பிட்டால் ரத்த சோகை
உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம்
ஊறும். பல் கெட்டிப்படும். முடி
நீண்டு வளரும். நரை முடி
குறையும்.தோல் வியாதிகள்
நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி,
வயிற்றுப் புண், தலைவலி,
வாய்ப்புண் ஆகிய
வியாதிகளுக்கெல்லாம்
முருங்கைக்கீரை கை கண்ட
மருந்து.
• முருங்கைக் காய் மலச்சிக்கல்,
வயிற்றுப் புண், கண் நோய்
ஆகியவற்றுக்கு மருந்தாகவும்
பயன்படுகிறது. வாரத்தில்
ஒருமுறையோ இரண்டு
முறையோ முருங்கைக் காயை
உணவாக உபயோகித்தால், ரத்தமும்,
சிறுநீரும் சுத்தம் அடைகின்றன.
வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு
உண்டாகிறது. முருங்கைக்காய்
சூப் காய்ச்சல், மூட்டு
வலியையும் போக்க வல்லது.
• கர்ப்பப்பையின் குறைகளை
போக்கி கருத்தரிப்பதை
ஊக்குவிக்கும். பிரசவத்தை
துரிதப்படுத்தும். முருங்கை
இலையை கொண்டு
தயாரிக்கப்படும் பதார்த்தம்,
தாய்ப்பால் சுரப்பதை
அதிகப்படுத்தும்.
• ஆஸ்துமா, மார்பு சளி, போன்ற
சுவாசக் கோளாறுகளுக்கு
முருங்கை கீரை சூப் நல்லது.
ஆண், பெண் இருபாலரின் மலட்டுத்
தன்மையை அகற்றும். முருங்கை
இலை இரத்த விருத்திக்கு நல்ல
உணவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக