வியாழன், 9 ஆகஸ்ட், 2018

கர்ப்பிணிகள் ஏன் கட்டாயம் குங்குமப்பூவை உட்கொள்ள வேண்டும் தெரியுமா..

கர்ப்பிணிகள் ஏன் கட்டாயம் குங்குமப்பூவை உட்கொள்ள வேண்டும் தெரியுமா..


கர்ப்ப காலத்தில், கருவுற்றிருக்கும் பெண்களின் தாய்மார்கள் அனைவரும் தனது மகளின் வயிற்றில் வளரும் குழந்தையின் நலன் கருதி, பல்வேறு அறிவுரைகளை கூறுவதுண்டு.
அவற்றில் ஒன்று தான் குங்குமப்பூ. ஆசிய நாடுகளில் கர்பிணித் தாய்மார்கள் குங்குமப்பூவை உண்பது தற்போது வழக்கமாகியுள்ளது. எனினும், மேலைத்தேய நாடுகளில் இது குறைவு தான்.

01. உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்
குங்குமப்பூவில் உள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கின்றது. எனவே கர்ப்பிணிகள் இதை உண்பதால் அவர்களுக்கு உள்ள இரத்த அழுத்தம் குறையும்.

02. குமட்டலை தடுக்கும்
கர்ப்ப காலத்தில் பொதுவாக அனைத்து தாய்மார்களுக்கும் உள்ள பிரச்சினை தான் இந்த குமட்டல். குங்குமப்பூவானது இந்த குமட்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றது.
03. உணவு நல்ல முறையில் சமிபாடடையும்
குங்குமப்பூவானது இரத்த ஓட்டத்தை சீர் செய்து உணவு சமிபாடடைதலை இலகுவாக்கின்றது.
04. இதயத்தை பாதுகாக்கின்றது
குங்குமப்பூவில் உள்ள பொட்டாசியம், அன்டிஒக்ஸிடன்ஸ், மற்றும் குரோசெட்டின் ஆகியன கொலஸ்ரோல் அளவை பாதுகாத்து குழந்தையின் இதயத்தை பாதுகாக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக