ஞாயிறு, 18 மார்ச், 2018

திருமணத்தின் போது பெண்களின் எதிர்பார்ப்புகள் என்ன?


திருமண வாழ்க்கை தொடரும் காலத்தில் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிக எதிர்பார்ப்புகள், குழப்பங்கள், கவலைகள் இருக்கும்.
திருமணத்தின் போது பெண்களின் எதிர்பார்ப்புகள் என்ன?
  • பெண்கள் திருமணம் ஆன பின் கணவர் மற்றும் கணவர் சார்ந்த உறவுகளுடன் சேர்ந்து வாழ வேண்டும். புது உறவுகள் மட்டுமின்றி புதுவித இடங்கள் என்று அனைத்துமே பெண்களுக்கு புதிதாக இருக்கும்.
  • மாமனார், மாமியார், நாத்தனார் போன்ற கணவன் வீட்டு உறவுகள் நம்மிடம் எப்படி நடந்துக் கொள்வார்கள், தங்களை எப்படி நடத்துவார்கள் என்ற பயம் அனைத்து பெண்களுக்குமே தோன்றும்.
  • திருமணம் முடிந்ததும் தாம்பத்தியம் முதல், கணவன் மனைவி மத்தியில் ஏற்படும் பல்வேறு உணர்வுகள் எப்படி இருக்கும் என்ற அச்சம் பல பெண்கள் மத்தியில் இருக்கும்.
  • திருமணத்திற்கு முன், உள்ள நட்புறவுகளை திருமணத்திற்கு பின் தொடர முடியுமா? இதற்கு வருங்கால கணவர் ஏதேனும் தடைகள் கூறுவாரா? என்ற கேள்விகள் இருக்கும்.
  • தனது கணவனிடம் நாம் நினைத்த காரியங்களை செய்ய அல்லது கூற முடியுமா? ஒருவேளை அதற்கு அவர்கள் மறுப்பு கூறினால்? என்ன செய்வது என்ற கேள்விகள் இருக்கும்.
  • இல்லறம், கணவன், மனைவி உறவு என்பதை தாண்டி, பொருளாதாரம், வளர்ச்சி, குடும்ப வரவு, செலவுகளை கண்காணிப்பது போன்றவை பற்றி பெண்களிடம் ஒரு அச்சம் இருக்கும்.
  • வேலைகளில் மாற்றம் செய்ய வேண்டும். தாய் வீட்டில் இருக்கும் போது எப்போது வேண்டுமானாலும் தூங்கலாம், எப்போது வேண்டுமானாலும் எழுந்திருக்கலாம். ஆனால், புகுந்த வீட்டில் அப்படி இல்லை. எல்லா வேலைகளையும் உடனுக்குடன் செய்ய வேண்டுமே என்று நினைக்க தோன்றும்.
  • காலை எழுந்து சமைப்பதில் இருந்து, வேலைக்கு கணவனை அனுப்புவது, வேலைக்கு செல்வது, அலுவலக வேலைகள், மீண்டும் வீடு திரும்பி வீட்டு வேலைகள் என்று நேரம் செல்லும், அப்போது தனக்கான பொழுதுபோக்குகள் தடைப்படுமா? என்ற அச்சமும் இருக்கும்.
  • தாம்பத்யம் மற்றும் குழந்தை பெற்றுக் கொள்வதிலும் பெண்கள் அச்சம் கொள்வார்கள். இதற்கு காரணம் தாம்பத்தியம் வலி மிகுந்ததாக இருக்கும் என்று பொதுவாக கூறும் கருத்துக்கள் தான்.
  • பெண்கள் தங்களின் வீடு, சேமிப்பு, சந்தோஷம் என்று எப்படியெல்லம் வாழ வேண்டும் என்ற பல கனவுகள் பெண்கள் மத்தியில் இருக்கும். அந்த கனவுகள் எல்லாம் எதிர்காலத்தில் நிறைவேறுமா? என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக