ஊதா நிற மாம்பழங்களின் நம்பத்தகுந்த பயன்கள்...!
இந்திய மாம்பழங்களை பிளாக் பெர்ரி பழங்களின் மரபியல் காரணியுடன் இணைத்து உருவாக்கப்பட்டவையே ஊதா நிற மாம்பழங்கள். இயல்பில் மஞ்சள் நிறத்திலிருக்கும் மாம்பழங்களுக்கு ஊதா நிறம் கிடைத்ததின் பின்னணி இது தான்.
தற்போது இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிடால் பகுதியில் அமோகமாக விளைவிக்கப்பட்டு வரும் இந்த வகை மாம்பழங்கள் கூடிய விரைவில் ஆசியாவின் பிற பகுதிகளிலும் விளைவிக்கப்படவிருப்பதாகத் தகவல்.
இயற்கையாகவேஇந்த வகை மாம்பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த பாக்டீரியாக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் இது இயற்கையாகவே ஊட்டமாக வளரும். இவ்வகை மாம்பழங்கள் தற்போது மாம்பழம் சார்ந்து உருவாகக் கூடிய பழரசத் தயாரிப்பு மற்றும் ஜாம் தயாரிப்பு உள்ளிட்ட பிற உணவுப் பொருள் சந்தையிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதில்சர்க்கரையின் அளவு குறைவு என்றாலும் நம் நாட்டு மாம்பழங்களோடு சுவையில் போட்டியிடக்கூடியதாக இன்னும் இது வளரவில்லை. சுவை மற்றும் சத்துக்கள் விஷயத்தில் இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் நாட்டு மாம்பழங்கள் தான் என்றுமே சிறந்தவை.
ஆனால், சர்க்கரை நோயாளிகளைப் பொருத்தவரை அவ்வகை மாம்பழங்களில் இயற்கையாகவே இருக்கும் அதீத சர்க்கரை ஆபத்தானது என்பதால் இவ்வகை ஊதா நிற மாம்பழங்களுக்கு உலகச் சந்தையில் மிகுந்த முக்கியத்துவம் கிட்டியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
அவர்களதுஆராய்ச்சியின் ஒரே நோக்கம் உலகம் முழுதும் உள்ள சர்க்கரை நோயாளிகளின் மாம்பழ தாகத்தைத் தீர்ப்பதே! ஆகவே அவர்களும் பயமின்று ரசித்து உண்ணும் வகையில் இப்படியோர் மாம்பழத்தை புளூ பெர்ரி பழத்துடன் இணைத்துக் கண்டறிந்தனர்.
இனி உலகம் முழுவதிலும் உள்ள சர்க்கரை நோயாளிகளின் மாம்பழ ஆசையைத் தீர்க்க உலகளவில் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படக்கூடிய பழமும் இதுவாகவே இருக்கக் கூடும்.
Thanks: Google.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக