செவ்வாய், 14 நவம்பர், 2017

குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா?


குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா?

மருந்து ஒன்று
மாதவிலக்கு கோளாறு காரணமாக குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா?
மாதவிலக்கு கோளாறு காரணமாக
குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா?
ஊளைச் சதையால் சங்கடப்படுகிறீர்களா?
கல்யாணி சுவாமி சொல்வதை கேளுங்கள்.
கவலையை துரத்துங்கள்!

இ ப்பல்லாம் குழந்தை இல்லைனு ஏக்கப்படற தம்பதிகளோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு.
குழந்தை பாக்கியம் கிடைக்காம போறதுக்கு உடல்நிலை, வாழ்க்கைமுறை, உணவுப் பழக்க வழக்கம்னு பல விஷயங்கள் காரணமா இருக்கு!
மாதவிலக்குக் கோளாறுகள் இருந்தாலும்கூட
கருத்தரிக்கறதுல சிக்கல் வரும்.
 மாதவிலக்கு கோளாறுதான் காரணம்னா,
அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு என்னால ஒரு வைத்தியம் சொல்ல முடியும்.

அரை லிட்டர் பசும்பால்ல,
கால் கிலோ மலைப் பூண்டை உரிச்சுப் போட்டு வேக வையுங்க.
கலவை நல்லா சுண்டி அல்வா பதத்துக்கு வந்ததும்,
தேவையான அளவு பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்குங்க.
மாதவிலக்கான நாள்லருந்து ஒரு வாரத்துக்கு
 தினமும் காலை யில வெறும் வயித்துல இதைச் சாப்பிட்டு வந்தா,
 கண்டிப்பா பலன் கிடைக்கும்.
மருந்து இரண்டு
இன்னொரு வைத்தியமும் இருக்கு!
பசும் மஞ்சளை அரைச்சு எடுத்த சாறு,
மலை வேம்பு சாறு,
நல்லெண்ணெய்...
இது எல்லாத்தையும் சம அளவு எடுத்து கலந்து வெச்சுக்குங்க
. இதை சூடு பண்ணத் தேவையில்லை.
 மாதவிலக்கான முதல் மூணு நாட்கள்ல காலை, சாயந்திரம்னு ரெண்டு வேளையும்
தலா ரெண்டு டேபிள்ஸ்பூன் சாப்பிடணும்.
எனக்குத் தெரிஞ்சு நிறைய பெண்களுக்கு இந்த மருத்துவத்தை சிபாரிசு பண்ணி, பலன் கிடைச்சிருக்கு.


உடம்புல ஊளைச் சதை அதிகம் இருந்தாலும் கரு உண்டாகறதுல பிரச்னை வரும்.
தினம் அஞ்சுலருந்து பத்து எண்ணிக்கை வரை சின்ன வெங்காயத்தை எடுத்து பச்சையா சாப்பிட்டா, கொஞ்ச நாள்லயே ஊளைச் சதை குறைஞ்சு ஆளும் ஸ்லிம்மாகிடுவாங்க.
 சீக்கிரமே வீட்டுல ‘குவா குவா’ சத்தமும் கேட்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக