வியாழன், 19 ஜூலை, 2018

கண்ணாடி அணிபவர்களா நீங்கள் அபோ இதை கண்டிப்பா படிங்க...

கண்ணாடி அணிபவர்களா நீங்கள் அபோ இதை கண்டிப்பா படிங்க...

நாம் பொதுவாக கண்ணாடி அணிதிருபதற்கு இரு காரணங்கள் தான் உள்ளது. ஒன்று நமக்கு கிட்டப்பார்வையாக இருக்கலாம் அல்லது தூரப்பார்வையாக இருக்கலாம். இதை தவிர தலையில், மூளையில் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளோ அதீத தலைவலியோ இருந்தால், அதனால் சில சமயங்களில் பார்வைக் குறைபாடுகள் உண்டாவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகிறது.
இன்று நாம் பார்க்க போவது இந்த கண்பார்வையை எவ்வாறு சரி செய்வது என்றுதான். இந்த கட்டுரையில் குறிபிட்டுள்ள விசயங்களை செய்துவந்தால் விரைவில் உங்கள் கண் பார்வையில் முன்னேற்றம் தெரியும்.
சிறந்த மருந்து
பார்வை கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக முருங்கைப் பூ பயன்படுகிறது. அந்த முருங்கைப் பூவை வைத்து உங்களுடைய பார்வைக் கோளாறை சரி செய்யும்.

இப்பொது இந்த முருங்கை பூவை எப்படி சாப்பிட வேண்டும். எந்த பொருள்களோடு சேர்த்து சாப்பிட வேண்டும் என்று பார்போம்.
பசும்பால்
இந்த முருங்கைபூவை நீரில் நன்கு அலசி, சுத்தம் செய்து அதை பசும்பாலில் சேர்த்து நன்கு காச்சி இரவிலும் பகலிலும் சாப்பிட வந்தால் கண் குளிர்ச்சி அடைந்து கண் பார்வை நன்றாக தெரியும்.
தேன்
கண்களில் வெள்ளெழுத்துப் பிரச்னைகள் இருப்பவர்களுக்கு இந்த முருங்கைப் பூ மிகப்பெரிய தீர்வாக அமையும். முருங்கைப் பூவை நன்கு சுத்தம் செய்து அதை வெயிலில் உலர்த்தி, காய வைத்துக் கொள்ள வேண்டும். நன்கு காய்ந்த மலர்களைப் பொடி செய்து, அந்த பொடியை தேனில் கலந்து தினமும் இரண்டு முறை காலையும் இரவும் சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து பிரச்னை குறையும்.

எண்ணெய் குளியல்
வாரம் இரு முறை தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கண் நரம்பில் உள்ள சூடு குறையும் இதனால் கண் குளிர்ச்சி அடையும், பார்வை தெளிவாகும்.
கீரைகள்
தினசரி உணவுடன் பண்ணைக் கீரை, பொன்னாங்கன்னி கீரை, சிறுகீரை, கேரட் ஆகியவற்றை உங்களுடைய அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பேதி மருந்து

நான்கு மாதங்களுக்கு ஒரு முறையாவது பேதி மருந்து, மாதம் ஒரு முறை வயிற்றை சுத்தம் செய்ய மருந்து எடுத்துக் கொண்டால், அன்மூலம் கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் தீரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக