ஞாயிறு, 8 ஜனவரி, 2017

யாருக்கு விதி?!! எங்கே எப்படி முடியும்!!!

யாருக்கு விதி?!!
எங்கே எப்படி முடியும்!!!

*இந்திரன்மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாக வளர்த்துவந்தாள்*

*ஒருநாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது.*

*அதை பரிசோதித்த மருத்துவர்*
*இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார்.*

*உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி,*
*இந்த கிளியை* *எப்படியாவது* *காப்பாற்றுங்கள்.*
*கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்றாள்.*

*இந்திரன்,*
*கவலைப்படாதே இந்திராணி..*.  *நான்* *உடனே* *பிரம்மாவிடம்சென்று* *முறையிடுகிறேன்..*
*ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே?*

*அவரிடம்சென்று கிளியின் தலையெழுத்தை* *மாற்றியெழுதிவிடுவோம் என்று சொல்லிவிட்டு*
*பிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்..*

*விஷயத்தைக்கேட்ட பிரம்மா ,*

*இந்திரா.... *படைப்பது மட்டுமே என்வேலை.*

*உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில்.*

*நாம் அவரிடம்சென்று உதவிகேட்போம்...வா ...நானும் உன்னுடன் வருகிறேன் என்று இந்திரனை* *அழைத்துக்கொண்டு*
*மஹாவிஷ்ணுவிடம்* *சென்று விஷயத்தை* *தெரிவித்தார் பிரம்மா.*
*மஹாவிஷ்ணுவோ, உயிர்களை காப்பது நான்தான*்.

*ஆனால் உன் கிளி இறக்குந்தறுவாயிலிருக்கிறது.*

*அழிக்கும்தொழிலை மேற்கொண்ட சிவன் தான் அதைக்காப்பாற்ற வேண்டும்.*

*வாருங்கள் நானும் உங்களுடன்வந்து சிவனிடம் பேசுகிறேன் என்று கிளம்பினார் விஷ்ணு.*

*விபரங்களைக்கேட்ட சிவன் , அழிக்கும் தொழில் என்னுடையதுதான்.*

*உயிர்களையெடுக்கும் பொறுப்பை* *நான்*
*எமதர்மராஜனிடம்* *ஒப்படைத்துள்ளேன்.*

*வாருங்கள் ....* *நாம் *அனைவரும்சென்று* *எமதர்மனிடம்கூறி அந்த* *கிளியின் உயிரை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிடுவோம்* *என்றுசொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு எமலோகம் செல்கிறார் சிவன்.*

*தன்னுடைய அவைக்கு சிவன் , மஹாவிஷ்ணு , பிரம்மா , இந்திரன் ஆகிய நால்வரும் வருவதைக்கண்ட எமதர்மன் உடனே எழுந்து ஓடிவந்து வரவேற்கிறார்.*

*விஷயம் முழுவதையும்கேட்ட அவர் ,*
*ஒவ்வொரு உயிரையும் எந்தநேரத்தில் ,*
*எந்தசூழ்நிலையில்*
*என்னகார‌ணத்தால்* *எடுக்கவேண்டும் என்ற காரணத்தை ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்கவிட்டுவிடுவோம்.*

*அந்த ஓலை அறுந்துவிழுந்துவிட்டால், அவரின் ஆயுள் முடிந்துவிடும்.*

*வாருங்கள் அந்த அறைக்குச்சென்று*
*கிளியின் ஆயுள் ஓலை எது என்று பார்த்து ,* *அதை மாற்றி எழுதிவிடுவோம் என்று* *அவர்களை* *அழைத்துச்செல்கிறார்.*

*இப்படியாக*
*இந்திரன் ,பிரம்மா* *விஷ்ணு , சிவன் ,* *எம்தர்மன் ஆகிய ஐவரும்* *அந்த* *அறைக்குச்சென்றனர்.*

*அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது.*

*உடனே அவர்கள் அவசரமாகச்சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர்.*

*அது அந்த கிளியின் ஆயுள் ஓலை.*

*அவசரமாக அதை படித்துப்பார்க்கின்றனர்....*

*அதில்,,,*

*இந்திரன் , பிரம்மா விஷ்ணு , சிவன் ,* *எம‌தர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள்* *நுழைகிறார்களோ*
*அப்போது இந்த கிளி இறந்துவிடும் என்று *எழுதப்பட்டிருந்தது*

*இதுதான் விதி!!*

*விதியை மாற்றுவது என்பது முடியாது என்பதே கதை?!*

*யாருக்கு விதி?!!*
*எங்கே எப்படி முடியும்!!!*
*என்பது எழுதினவனுக்கே*
*தெரியாது என்பது தான்* *உண்மை?!*  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக