வெள்ளி, 6 ஜனவரி, 2017

பப்பாளிப் பழத்தின் மருத்துவ பயன்கள்

பப்பாளிப் பழத்தின் மருத்துவ பயன்கள்

🍑எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் ஒரு அருமையான பழம் பப்பாளிப் பழம்..

🍑இது வெப்ப பிரதேசங்களில் நன்றாக விளையக் கூடியது. இது கிராம புறங்கள் அல்லாமல் நகர்ப்புற வீடுகளிலும் இந்த மரத்தை நாம் காணலாம்.

🍑 இதை வளர்க்கும் முறை மிகவும் எளிமையானது

🍑விதைகளை போட்டாலே போதும் இது விரைவில் வளர்ந்து மரமாக நிற்கும்.

🍑இதில் ஆண் மரம் மற்றும் பெண் மரம் என்று இரு வகை உண்டு.

😃ஆண் மரத்தில் கொத்து கொத்தாக பூக்கள் மட்டுமே பூக்கும் பழங்கள் வராது.

😍பெண் மரத்தில் ஒவ்வொரு இலையின் காம்பு ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு பூ மலரும் அதுவே வளர்ந்து கணியாக மாறும்.
இது பழுத்தவுடன் மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறமாக இருக்கும்.

🍑இப்பழம் அதிக சூடுள்ள பழம் என்று நினைத்து பலர் சாப்பிடாமல் இருப்பர் அது தவறான கருத்தாகும்.

🍑இதில் உள்ள சூடு எந்த வித பாதிப்பையும் நமக்கு ஏற்ப்படுத்தாது.
உடலுக்கு அதிக சக்தியைக் கொடுக்க கூடிய இப்பழம் மாம்பழத்திற்கு அடுத்து இதில்தான் அதிக அளவு வைட்டமின்கள் இருக்கின்றன.

*இதில் குளுக்கோஸ், இரும்புச் சத்து, உலோகச் சத்து, சுண்ணாம்புச் சத்து, எரியம், புரதம், நியாசின்,தயாமின், ரிபோஃப்ளேவின் ஆகிய சத்துக்ளும் எ,எ1,பி1,பி2 மற்றும் சி வைட்டமின்களும் நிறைந்துள்ளன*

🍑விலையுயர்ந்த பழத்தை விட பல்வேறு சத்துக்கள் இந்த பழத்தில் உள்ளன.

🍑இதில் பெப்சின் என்னும் சத்து அதிக அளவில் உள்ளது.

🍑இந்த சத்து குடலில் உள்ள ஏற்படும் நோய்களை குணமாக்கும் வல்லமை உடையது.

🍑நமது இரத்தத்தில் கலக்கும் எந்த விதமான கிருமிகளையும் அழிக்கும் வல்லமையுடைய பழம் இது மற்றும் இரத்தத்தை விருத்தி செய்யும்.

🍑இப்பழத்தை உண்பதால் சொறி சிரங்கு குணமாகும். உடலிலுள்ள புண்கள் விரைவிலேயே குணமாகும்.

🍑உடற் சோம்பலை போக்கும். பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும், பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.

🍑பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்கும்.நரம்புகளில் முறுக்கேற்றும்,தொற்று நோயை அண்ட விடாது.

🍑கண்களுக்கு மிகவும் நல்லது.

🍑குழந்தை பெற்ற பெண்கள் இப்பழச்சாற்றை உட்கொண்டால் அதிக பால் சுரப்பு ஏற்படும்.

🍑குடற் புண்களை ஆற்றும். உதடுகளில் ஏற்படும் வரட்சி, வாய் ஓரங்களில் ஏற்படும் வெடிப்புகளை குணப்படுத்த கூடியது.
மலச்சிக்கலுக்கு எளிய மருந்தாக பயன்படுகிறது.

🍑இந்த பழத்தை காலை மூன்று துண்டுகளும் மாலை மூன்று துண்டுகளும் ஐந்து நாட்கள் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலை குணப்டுத்தலாம்.

🍑மலச்சிக்கலால் ஏற்படும் மூல நோயை குணப்படுத்த பதினைந்து நாட்கள் இப்பழத்தை சாப்பிட்டு வந்தால் மூல நோயின் மூலமே அற்று விடுமாம்.

🍑வயிறு சரியில்லாதவர்களுக்கு எந்த வேலையும் செய்யவும் தோன்றாது சாப்பிடவும் தோன்றாது. இப்படிபட்டவர்கள் பப்பாளி பழம் சாப்பிட்டு அன்று முழுவதும் எந்த உணவையும் தொடாமல் இருந்தால். வயிறு சரியாகிவிடும்

🍑இப்பழத்தை தினமும் தொடர்ந்து 40 நாட்கள் வரை உணவு உண்ட பின் சாப்பிட்டு வர நரம்புகள் பலம் பெறும். இரத்தம் விருத்தியாகும் மற்றும் உடல் பளபளக்கும்.

🍑இந்த மலிவான பழத்தில் இவ்வளவு சத்துக்கள் உள்ளது. இதை நம் அன்றாட வாழ்வில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியத்துடன் வாழலாம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக