வியாழன், 27 அக்டோபர், 2016

தீபாவளி விளக்குகளின் பண்டிகை ...

தீபாவளி  விளக்குகளின்
பண்டிகை  ...

தீபாவளி என்றாலே வீடுகளில்
தீபம் ஏற்றுவது என்பது
தொன்று தொட்டு வரும்
விஷயம்தான். ஆனால் ‌தீபம்
ஏற்றுவது பற்றிய விஷயங்கள்
நிறைய இருக்கிறது.
என்னவென்றால் விளக்குகளில்
பல விஷயங்கள் உள்ளன. அதில்
முக்கியமானது எத்தனை
முகம் கொண்ட
விளக்கேற்றுவது என்பது.
ஒரு முகம் கொண்ட
விளக்கேற்றினால் மத்திய பலன்
கிடைக்கும். இரண்டு முகம்
கொண்ட விளக்கேற்றினால்
குடும்ப ஒற்றுமை கிட்டும்.
அதுவே மூன்று முகம்
கொண்ட விளக்கேற்றினால்
புத்திர சுகத்தைக்
கொடுக்கும். நான்கு முகம்
வளத்தை அளிப்பதாகவும்,
ஐந்து முகம் செல்வத்தையும்,
அருளையும் அளிப்பதாகவும்
கூறப்படுகிறது.
பலன்களை நாம்
சொல்லிவிட்டோம், எத்தனை
முகம் கொண்ட
விளக்கேற்றுவது என்பது
அவரவர் தேவையைப்
பொறுத்தது.
விளக்கேற்றுவதற்கு பயன்படும்
திரியைப் பற்றி சொல்ல
வேண்டும் என்றால், திரிகளில்
பஞ்சுத் திரி, வாழைத்தண்டு
நார், வெள்ளெருக்குப் பட்டை,
சிவப்பு நிற புதுத் துணி,
மஞ்சள் நிறம் கொண்ட துணி
போன்றவை
பயன்படுத்தப்படுகிறது.
இதில் பஞ்சினால் திரி
இடுவது சிறந்த பலனைத் தரும்.
அதுபோல் வாழைத் தண்டு
நாரினால் தீபம் ஏற்றினால்
பாவங்கள், செய்வினைக்
கோளாறுகள், தெய்வ
நிந்தனைகள் போகும்.
வெள்ளெருக்குப் பட்டையை
திரியாகப் பயன்படுத்தும்
வீட்டில் செல்வம் பெருகும்.
திருமணம் தடைபட்டவர்கள்,
குழந்தை பாக்கியம் அற்றவர்கள்
சிவப்பு நிற துணியைக்
கொண்ட தீபம் ஏற்றுவது
சிறப்பு. அது போல மஞ்சள் நிற
திரியை ஏற்றினால் அம்மன்
அருள் கிடைக்கும்.
பொதுவாக எல்லோர்
வீடுகளிலும் கிழக்கை
நோக்கித்தான் பூஜை அறை
இருக்கும். சில வீடுகளில்
அவர்களின் வாஸ்து
நிலைப்படி வேறு சில
திசைகளை நோக்கியும்
இருக்கும்.
அதன்படி பார்த்தால், ‌பூஜை
அறை
நோக்கியிருக்கும் ‌திசையை
நோக்கியே நாம் ‌தீபம்
ஏற்றவோம். தெற்கு
திசையைத் தவிர வேறு எந்த
திசை நோக்கியும்
விளக்கேற்றலாம் என்கிறார்கள்
பெரியவர்கள்.
விளக்கேற்றும் எண்ணெய்
மிகவும் முக்கிய விஷயமாக
உள்ளது. அதாவது,
நல்லெண்ணையைப்
பயன்படுத்தி எல்லா
தெய்வங்களுக்கும்
விளக்கேற்றலாம். மேலும்
எல்லா நேரத்திலும்
பயன்படுத்தலாம்.
விளக்கேற்ற வேப்பெண்ணெய்,
இலுப்பை எண்ணெய், தேங்காய்
எண்ணெய், நெய்,
விளக்கெண்ணெய் ஆகிய ஐந்து
எண்ணெய்களையும் சேர்த்து
விளக்கேற்றினால் அந்த வீட்டில்
லஷ்மியின் அருள் தேடி வரும்.
விளக்கேற்ற கடலை
எண்ணெயை மட்டும்
பயன்படுத்தவேக் கூடாது.
வீடுகளில் காலையிலும்,
மாலையிலும் விளக்கேற்றி
இறைவனை வணங்கலாம்.
அவ்வாறு இரு
வேளைகளிலும்
முடியாதவர்கள் அவர்களுக்கு
ஏற்ற ஒரு வேளையில்
விளக்கேற்றி இறைவனை
வணங்குதல் நலம்.
கடைசியாக நாம் சொல்ல
வந்ததை மறந்துவிட்டோமே.
தீபாவளி அன்று வீடுகளில்
விளக்கேற்றி அலங்கரிப்பது
வழக்கம். அன்றைய தினம் நமது
பிள்ளைகள் புத்தாடை
அணிந்து கொண்டு அங்கே
இங்கே ஓடிக்
கொண்டிருப்பார்கள். கையில்
பட்டாசுகள் வேறு இருக்கும்.
எனவே வாசற்படிகளில்
மிகவும் பாதுகாப்பான
வகையில் விளக்குகளை ஏற்றி
வையுங்கள். தற்போது
மண்ணில் செய்த அகல்
விளக்குகளின் மேல் அழகான
துளைகள் இட்ட மூடி போன்ற
அமைப்புடன் விளக்குகள்
வருகின்றன. இவை காற்றில்
தீபம் அணைந்து விடாமலும்,
விளக்கினால்
பிள்ளைகளுக்கு ஏற்படும்
ஆபத்தில் இருந்தும் காக்கும்.
அதுபோன்ற அகல்
விளக்குகளை வாங்கி வந்து
வாசற்படிகளில் தீபம் ஏற்றினால்
இந்த ‌தீபாவளி
எல்லோருக்குமே
இனிய ‌தீபாவளியாக
அமையும். ‌தீபாவளி
வாழ்த்துகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக