திங்கள், 10 அக்டோபர், 2016

சுரியனை ஏன் வணங்க வேண்டும்?

சுரியனை ஏன் வணங்க வேண்டும்?

 காலையில் எழுந்ததும் சுரியனை பார்த்து வழிபடுவது நன்மையளிக்கும். விடியலை வா வா என்று அழைத்து கொண்டு வருபவர் சுரியன். அனைவருக்கும் முதலில் வணக்கம் சொல்லி எழுப்புவதும் சுரியன் தான். நவகிரகங்களில் முதலில் இருப்பவர் சுரியன்.

🌅 இன்னும் பலவிதமாக சுரியனை பற்றி சொல்லலாம். அப்படிப்பட்ட சுரியனை அனைவரும் காலையில் வணங்குவது ஏன்?

🌅 மனிதர்கள் எல்லோரும் சாதாரணமானவர்கள், இறக்க கூடியவர்கள், நோய் நொடியில் விழக்கூடியவர்கள், தவறு செய்யக்கூடியவர்கள், மிகப் பெரிய ஆபத்துகளுக்கு ஆளாகக்கூடியவர்கள்.

🌅 சுரியனால் மனிதனுக்கு பெரும் உதவி கிடைத்துக் கொண்டிருக்கிறது. சுரியன் ஒரு மகத்தான சக்தி. சந்திரன் இன்னொரு சக்தி. நட்சத்திரங்கள், கிரகங்கள் எல்லாமும் தனித்தனியே சக்தி வாய்ந்தவை. அவை புமியோடு நெருங்கிய சம்பந்தமுடையவை. நல்லது செய்கின்ற கிரகங்களையும், சுரியனையும், சந்திரனையும் வழிபடுவதில் தவறொன்றுமில்லை.

🌅 சக்தியை அலட்சியம் செய்கிறவர் கடவுளை அலட்சியம் செய்வதுபோல் அர்த்தம். கடவுளின் பேச்சாக, குணமாக, உருவமாக, வடிவமாக சுரிய, சந்திர கிரகங்கள் நம் முன்னே தோன்றி இருக்கின்றன.

🌅 கடவுளை கண்ணால் கண்டறிய முடியாது. பேசிப் புரிந்துகொள்ள முடியாது. அதனால் பார்க்க முடிகிற கடவுளாக நினைத்து சுரியனை வழிபடுகின்றனர்.

🌅 சுரியனை வணங்குவதால் நமது உடலிற்கும், மனதிற்கும் புத்துணர்வு மற்றும் மன அமைதி கிடைக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும். காலையில் ஒரு 5 நிமிடம் மன அமைதியுடன் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் சுரியனை பார்த்து தியானம் செய்தால் போதும். அதன் பலனை உணர முடியும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக