ஞாயிறு, 9 அக்டோபர், 2016

வெற்றிலை-பாக்கு- சுண்ணாம்ப

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை-பாக்கு-
சுண்ணாம்பு போடுவது மட்டுமே!

அதிர வைக்கும்
பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்!

பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக
இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு
உருவாக்க பட்டது தான்.

முடி வெட்டுவதில்
இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும்
சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி
உள்ளன.

வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள்
மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள்
கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம்
அடங்கி இருக்கிறது.

இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு
தெரியுமா? என்பது நமக்கு தெரியாது.

பொதுவாக வெற்றிலை பாக்கு
சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில்
கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும்
சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும்
வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான
காரணத்தை சித்தவைத்தியமும் ஆயுர்வேதமும்
சொல்லும் போது உடம்பில் உள்ள "வாதம்,
பித்தம், கபம் (சிலேத்துமம்)" போன்றவைகள் சரியான
விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய்
வருகிறது. என்று சொல்கிறார்கள் இது
முற்றிலும் சரியான காரணமாகும்.

இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில்
அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து
நிற்கும் ஆற்றல்(நோய் எதிர்ப்பு சக்தி) உடம்பிற்கு வருகிறது.

இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம்
உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க
கூடியது.

சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை
போக்கவல்லது.

வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை
நீக்கி விடும்.

இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல்
என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று
தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது.

இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம்,
கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள
கிருமிகளை மட்டுபடுத்துகிறது.
ஜீரண சக்தியை அதிகரிக்கவும்
செய்கிறது.

ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால்
இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன.

அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு
முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது.

தாம்பூலம்
போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக
மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு
சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக
மாறி விடுகிறது.

நமது முன்னோர்களின் தாம்பூலத்தில்
புகையிலை கிடையாது.

புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட
தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய
அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு
ஆகும்.

சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின்
காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி
விடுகிறது.

பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே
மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.

ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு
முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு
சீக்கிரம் ஏற்படாது

இதற்கு காரணம்
அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு
குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக
கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட
நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க
பட்டிருக்கிறது.

காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும்
தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.

காரணம் மதிய நேரம் வந்து வெப்பம்
அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது
பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து
அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில்
உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக
எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம்
தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க
வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை.

இதை மீறும்
போது தான் சிக்கல் வருகிறது.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை...
           

*********************************

தாம்பூலம்

வெற்றிலை போடுவது ஒரு தனி கலைங்க!
அதை தாம்பூலம் தரித்தல் என்றும்
சொல்லுவாங்க ! இரண்டிற்கும்
என்ன வேறுபாடுனா ? சில
வெற்றிலைகளை எடுத்து காம்புகளை கிள்ளி
பாக்கும் சுண்ணாம்பும் வைத்து வாயில்
போட்டு அரைத்து தின்றால்அதை வெற்றிலை
போடுதல் என்று கூறலாம் ! அதையே கலை
நயத்தோடு இளம் தளிர் வெற்றிலைகளை
எடுத்து அதன் காம்புகளைகிள்ளி போட்டு
நரம்புகளை நீக்கி வாசனை சுண்ணாம்பு
தடவி ,சிறிது கொட்டை பாக்கு வைத்து
அதனுடன்
சம அளவில் ஏலக்காய்,கிராம்பு
,வால்மிளகு
,சாதிக்காய்கொஞ்சம் தேங்காய்
பூ ,இவைகளை கலந்து நீளவாட்டில் மடித்து
பின்பு அகல வாட்டில் சுருட்டி வாயில் போட்டு
அப்படியே மென்றால் அப்பா !வாய்
எப்படி மணக்கும் தெரியுமா !
அதைத்தாங்க தாம்பூலம் தரித்தல் என்று
கூறலாம்!
அந்த சாறு வயிற்றுக்குள் போகும்போது
குரல்வளத்ததைக்கொடுக்கும்! ஜீரண
சக்தியை அதிகரிக்கும் !, வயிற்றில் தங்கி உள்ள
வாயுதொந்திரவுகளை
வெளியேற்றி வயிற்றை பிரியாக வைக்கும் !
வயிறு பிரச்சினை இல்லாமல் இருந்தால்
கோபம் வராது !சல்லுசல்லுன்னு யார்
மேலேயும் விழ மாட்டோம் !கோபம் குறைந்தால்
சண்டை வராது ! சுண்ணாம்பு சத்து
பற்களுக்கும் எலும்புகளுக்கும் பலத்தை
கொடுக்கிறது !பாக்கு பித்தத்தை
குறைக்கிறது !அது போல ஏலக்காய் கிராம்பு
போன்றவைகள் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு மருத்துவ குணம்
கொண்டவை ! உடலுக்கு நன்மைகள்
தருபவை !
இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் அதை
பயன் படுத்துபவரை பொறுத்து சில
தீமைகளும் உண்டு !என் உறவினர் ஒருவர்
வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு
இவற்றுடன் புகையிலை சேர்த்து போடுவார் !அந்த
காலத்தில் அங்கு விலாஸ் புகையிலை சிவகிரி
புகையிலை என்று பல வகைகள் உண்டு ! என்
உறவினர் அங்கு விலாஸ் புகையிலை
உபயோகிப்பார் !சில சமயம் அதற்கு
டிமாண்டும் உண்டு !அப்போது முன் கூட்டியே
மொத்தமாக வாங்கி
வைத்துக்கொள்வார் ! இவருடன்
வெற்றிலை போடுவதற்கு என்றே ஒரு கூட்டம்
உண்டு ! காலையிலேயே அவர் வீட்டுக்கு ஆறு
ஏழு பேர் வருவார்கள் !
அவர்களுக்கு காப்பி கொடுத்து
பின்பு வெற்றிலை போட்டு ஊர் கதைகள் பேசி
கலைந்து செல்வார்கள் ! இது வாடிக்கை!
இவர் அதிகமாக புகையிலையை உபயோகித்து அதை
ஒரு கை பார்த்ததால் புகையிலை இவர் பற்களை
ஒரு கை பார்த்து விட்டது ! !புகையிலையில் உள்ள
சேர்மானங்கள் அவரின் 55 வயதிலேயே அவர்
பற்களை ஒவ்வொன்றாக
வாயிலிருந்து வெளியேற்றி விட்டன !அந்த
காலத்தில் பல் கட்டும் வசதி இல்லை !எனவே
கடைசி வரை பொக்கை வாயாகவே
இருந்தார் ! அவர் பேசினால்
என்னேவென்றே புரியாது !புஸ்
புஸ்ஸென்று காத்துதான் வரும் !
அவர் மனைவிக்கு ரொம்ப சந்தோசம் ! !
தொன தொன
வென்று நச்சரிக்க முடியாது
அல்லவா ! ஆனால் அவர்தான் பாவம்
மிகவும் சங்கடப்பட்டார் !அதை பார்த்து
நாங்கள் வெற்றிலை பாக்கு பக்கம்
எட்டி கூட பார்ப்பதில்லை !
சிலர் பீடா போடுவார்கள் ! லாகிரி
வஸ்த்துகள் அதில் சேர்க்காமல்
இருந்தால் நல்லது !
ஆனால் வெற்றிலைக்கென்று தனி
மதிப்பு உண்டு !
அதனுடைய மருத்துவ குணங்கள் ஒரு புறம்
இருக்க விசேச காலங்களில்
வெற்றிலைக்குதான் முதல் மரியாதை !
திருமண விழாக்களில் வெற்றிலை
பாக்குதான் முதலிடம் வகிக்கிறது !
அதோடு விநாயகர் ஆஞ்சநேயர் இவர்களுக்கு
வெற்றிலை மாலை சார்த்தி
மகழ்வார்கள் !நன்மை தீமை
எல்லாவற்றிலும் உண்டு ! நன்மைகளை
எடுத்துக்கொண்டு தீமைகளை விலக்கி
விடுவதே நமக்கு சிறப்பு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக