செவ்வாய், 11 அக்டோபர், 2016

நான் அல்ல நாம்...

_*நான்... நான்... நான்...*_

*நான்* சம்பாதித்தேன்,
*நான்* காப்பாற்றினேன்,
*நான்* தான் வீடு கட்டினேன்,
*நான்* தான் உதவி  செய்தேன்,
*நான்* உதவி  செய்யலனா? அவர்  என்ன ஆகுறது!!!!!

*நான்*  பெரியவன்,
*நான்*  தான்  வேலை  வாங்கி  கொடுத்தேன், *நான்  நான்  நான்  நான்*  என்று  மார்தட்டி  கொள்ளும் மனிதர்களே!!!...

*நான்*தான்  என் இதயத்தை இயக்குகிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா?

*நான்*  தான்  என் மூளையை  இயக்குகிறேன் என்று  உங்களால்  சொல்ல முடியுமா?

*நான்*  தான்  என் இரண்டு  கிட்னியையும்  இயக்குகிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா?

*நான்*  தான் என் வயிற்றில்  சாப்பிட்ட உணவில்  இருந்து சத்துக்களை  தனியாக  பிரித்து  இரத்தத்தில்  கலக்குகிறேன் என்று  உங்களால்  சொல்ல முடியுமா??

*நான்*  தான்  பூக்களை  மலர  வைக்கிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா ?

*நான்*  தான்  காய்களை பழமாக மாற்றுகிறேன் என்று  உங்களால் சொல்ல முடியுமா ?

*நான்* தான் கடலில்  மீன்  பிடிக்கிறவனுடைய வலையில்  மீனை சிக்க  வைக்கிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா? 

இவைகள் அனைத்தையும்  எவன்  செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே *"நான்"* என்று  சொல்வதற்கு அதிகாரமும்  உரிமையும்  உண்டு..

ஆகையால் *நான்* என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் *அன்பாக* இருங்கள்.
*அன்பே* அனைத்து துன்பப் பூட்டையும் திறக்கும் திறவுகோல்.

ஆகையால் நாம் *அன்பை பரிமாறிக் கொள்வோம்*
                         *அன்புடன்*
                              *நான்* அல்ல
நாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக