சனி, 8 அக்டோபர், 2016

சிவபெருமானுக்கு அபிஷேகப் பொருள்களும் அவற்றின் பயன்களும்

திருக்கோவில்களுக்கு நாம் செல்லும்போது சிவபெருமானுக்கு அபிஷேகப் பொருள்களும் அவற்றின் பயன்களும் என்ன?  என்பது பற்றிப் பார்ப்போம்

1. கந்த தைலம் - இன்பம்

2. மாப்பொடி - கடன் நீக்கம்

3. மஞ்சட்பொடி - அரசவசியம்

4. நெல்லிப்பருப்புப்பொடி - பிணிநீக்கம்

5. திருமஞ்சனத்திரவியம் - பிணிநீக்கம்

6. ரசபஞ்சாமிர்தம் - முக்தி

7. பழபஞ்சாமிர்தம் - முக்தி

8. பால் - ஆயுள் விருத்தி

9. பஞ்சகவ்யம் - சுத்தம், சகல பாவநீக்கம்

10. இளவெந்நீர் - முக்தி

11. தேன் - சுகம், சங்கீத குரல்வளம்

12. இளநீர் - ராஜயோகம் கொடுக்கும்

13. சர்க்கரைச்சாறு - பகைவரை அழிக்கும்

14. கரும்புச்சாறு - ஆரோக்கியம்

15. தமரத்தம் பழச்சாறு - மகிழ்ச்சி தரும்

16. எலுமிச்சம் பழச்சாறு - எமபயம் போக்கும்

17. நாரத்தம் பழச்சாறு - மந்திர சித்தி ஆகும்

18. கொழுச்சிப் பழச்சாறு - சோகம் போக்கும்

19. மாதுளம் பழச்சாறு - பகைமை அகற்றும்

20. அன்னாபிஷேகம் - விளைநிலங்கள், நன்செய்தரும்

21. வில்வங் கலந்தநீர் ( வில்வோதகம்) - மகப்பேறு தரும்

22. தர்ப்பைப்புல் கலந்தநீர் ( குரோதகம்) - ஞானம் தரும்

23. பன்னீர் - குளிர்ச்சி தரும்

24. விபூதி ( திருநீறு) - சகல ஐஸ்வர்யம் தரும்

25. தங்கம் கலந்தநீர் ( ஸ்வர்ணோதகம்) - சகல சௌபாக்கியம் கிட்டும்

26. ரத்னம் கலந்தநீர் ( ரத்னோதகம்) - சகல சௌபாக்கியம் கிட்டும்

27. சந்தனம் - அரசாட்சி, பெருஞ் செல்வம் கிட்டும்

28. கோரோசணை - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்

29. ஜவ்வாது - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்

30. புனுகு - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்

31. பச்சைக் கற்பூரம் - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்

32. குங்குமப்பூ - சகல ஆரோக்கியம், மிக்க புகழ் கிட்டும்

33. தயிர் - குழந்தைச் செல்வம் கிட்டும்

34. சங்காபிஷேகம் - சகல பாரிஷ்டம் கிட்டும்

35. ஸ்நபன கும்பாபிஷேகம் - சித்த சுத்தியடைந்து சிவதரிசனம் கிட்டும்

ஆகவே நாம் சிவாலயங்களுக்கு செல்லும் போது இந்த அபிஷேக பொருள்களை வாங்கி கொடுத்தும் கண்ணார அபிஷேகத்தை பார்த்தும் பிறந்த பிறவியின் பயனைப் பெறவும் என்று மனம், மொழி, மெய்களால் வாழ்த்தி மகிழ்கிறேன்

திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக