செவ்வாய், 30 அக்டோபர், 2018

குடிபோதையை நீக்கும் மருந்துகள் என ஒரு கும்பல் விற்பனையை ஆரம்பித்துள்ளதே?

குடிபோதையை நீக்கும் மருந்துகள் என ஒரு கும்பல் விற்பனையை ஆரம்பித்துள்ளதே?

ஆங்கில மருத்துகளை இலைகளுடன் அரைத்து விற்பது என்பது பாரம்பரிய மருத்துவர்களின் ஒரு பழமையான வழிமுறையாகும். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு Frusemide என்ற மருந்தை அரைத்துத் தருவது.
ஆண்மைக்குறைவு உள்ளவர்களுக்கு Sildenafil என்னும் மருந்தை அரைத்துத் தருவது. ஜுரத்திற்கு Paracetamol மருத்தை அரைத்துத் தருவது என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிற‌து.தற்போது அதிகரித்துவரும் குடிப்பழக்கத்தை நிறுத்த Disulfurim என்ற மருந்தை அரைத்துத் தருகின்றனர்.
இது மனநல மருத்துவரின் கவனிப்பில் பல்வேறு முன்னேற்பாடுகளோடு தரவேண்டிய ஒரு மருந்து ஆகும். இதனை முறை தவறி பயன்படுத்துவதால் பலர் மனநிலை பாதிக்கப்பட்டு Delerium என்னும் மோசமான நிலையில் கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்திற்கு வந்து சேருவதாக‌ மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக