சனி, 9 நவம்பர், 2019



காதல் கடிதம்.. என் அன்பே!!.. நீ எப்போதுமே என் இதயத்திலும், எண்ணத்திலும்..💘
ழூ நமது நித்ரா நாட்காட்டியின் முதல் பக்கத்தில் உள்ள கதைகள்ஃகட்டுரைகள் பகுதியில் சுபாஷ் சந்திர போஸ் பற்றிய முந்தைய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.சுபாஷ் சந்திர போஸ் எழுதிய காதல் கடிதம்..!!

💖சுபாஷ் சந்திர போஸ் எமிலிக்கு எழுதிய காதல் கடிதம் இதோ..!!

💖'என் அன்பே, தக்க நேரம் வரும்போது உறைந்த பனி உருக ஆரம்பிக்கிறது. ஆனால், இம்முறை எனது இதயம் உருகுவதை போன்று உணருகிறேன்.

💖நான் உன்னை எவ்வளவு விரும்புகிறேன் என்பதை உனக்கு கடிதங்கள் மூலமாக தெரிவிப்பதை நாம் நேரில் உரையாடுவதை போல என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை.

💖என் அன்பே, எனது இதயத்தின் ராணி நீதான். ஆனால், நீ என்னை விரும்புகிறாயா?."

💖'எதிர்காலத்தில் என்ன நடக்கும்? என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை நான் எனது மீதி வாழ்க்கையை சிறையில் செலவிட நேரிடலாம், நான் சுட்டுக் கொல்லப்படலாம் அல்லது தூக்கில் தொங்கவிடப்படலாம்.

💖அதனால், நான் உன்னை நேரில் சந்திக்க முடியாமல் போக நேரிடலாம் அல்லது மீண்டும் கடிதத்தை எழுத முடியாமலும் போகலாம். இருப்பினும், நீ எப்போதுமே எனது இதயத்திலும், எண்ணத்திலும், கனவிலும் நிறைந்திருப்பாய்.

💖இந்த ஜென்மத்தில் நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ முடியாவிட்டாலும், அடுத்த ஜென்மத்தில் உன்னுடன்தான் இருப்பேன்" என்று சுபாஷ் சந்திர போஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஆன்மாவின் அன்பு :

💖அந்த கடிதத்தின் கடைசியில், 'நான் உன்னுள் இருக்கும் பெண்ணையும், ஆன்மாவையும் காதலிக்கிறேன். நான் நேசிக்கும் முதல் பெண்மணி நீதான்" என்று போஸ் குறிப்பிட்டுள்ளார்.

💖மேலும், இந்த கடிதத்தை படித்ததும், அழித்துவிடுமாறு எமிலியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், எமிலி அதை பாதுகாப்பாக சேகரித்து வைத்துக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக