வியாழன், 14 நவம்பர், 2019

யாருக்கு கருச்சிதைவு நடக்கலாம்? காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்


யாருக்கு கருச்சிதைவு நடக்கலாம்? காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள்...

பலருக்கு கர்ப்பம் வெற்றிகரமாக அமைகிறது. சிலருக்கு, பாதியிலே கருச்சிதைவும் ஏற்பட்டு விடுகிறது. என்ன காரணம் என்று தெரியாமல் திரும்பத் திரும்ப மனப்பதற்றத்தோடு குழந்தைக்கு முயற்சி செய்து தோல்வியை சந்திக்கிறார்கள். காரணங்களை தெரிந்துகொள்வது பிரச்னைகளை அறிந்துகொள்வதும் நல்லது. ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டால் கருச்சிதைவு நடைபெறாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருந்து, கருச்சிதைவு ஏற்படாமல் தற்காத்து கொள்வதைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 20வது வாரம் முடிவதற்கு முன்னே சிலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிடும். 15% - 25% பேருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிடுகிறதாக சில ஆய்வுகளில் சொல்லப்படுகின்றன. கருச்சிதைவு ஏற்படும் பெண்களில் 80% பேருக்கு, முதல் மூன்று மாதத்துக்குள் கருச்சிதைவு ஏற்பட்டுவிடுவதாக சொல்லப்படுகின்றன.

 *கருச்சிதைவு ஏற்படுவதற்கான அறிகுறிகள்*

…லேசான ரத்தபோக்கு முதல் அதிக ரத்தபோக்கு ஏற்படுதல் தீவிரமான வயிற்று பிடிப்பு ஏற்படுதல் அடிவயிறு வலி காய்ச்சல் பலவீனமாகுதல் முதுகு வலி

 *கருச்சிதைவு ஏற்பட யாருக்கு அதிக வாய்ப்புகள்?*

35 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் சர்க்கரை நோய் அல்லது தைராய்டு உள்ள பெண்கள் 3-4 முறை ஏற்கெனவே கருச்சிதைவு நடந்திருக்கும் பெண்கள்

 *கருச்சிதைவு ஏற்பட பொதுவான காரணங்கள் என்னென்ன?*

தொற்று சர்க்கரை நோய், தைராய்டு இருந்தால் கருச்சிதைவு ஏற்படலம். ஹார்மோன் பிரச்னை நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருத்தல் உடல்ரீதியான பிரச்னைகள் ஏதேனும் இருத்தல் யூட்டரின் பிரச்னை இதையும் படிக்க : முதல் 3 மாதங்கள்... கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டியதன் காரணம் தெரியுமா?

 *முதல் மும்மாதம்…. கருச்சிதைவு ஏற்பட்டால் என்ன காரணம்?*

கிரோமோசம் பிரச்னை இருத்தல் பிளாசென்டா பிரச்னை - குழந்தைக்கு சரியான அளவில் ரத்தம் செல்லாமல் இருத்தல் அதிக உடல் எடை புகை, மது அதிகமாக காபி, டீ குடிப்பது - கெஃபைன் உணவுகள் சாப்பிடுவது

 *2வது மும்மாதத்தில் வரும் பிரச்னைகள் என்னென்ன?*

நாட்பட்ட நோய்களும் ஒரு காரணம் கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய் அதிகமான ரத்தக்கொதிப்பு சிறுநீரக நோய் ஓவர் ஆக்டிவ் தைராய்டு சுரப்பு குறைவான ஆக்டிவ் தைராய்டு சுரப்பு ஆன்டிபாஸ்போலிப்பிட் சிண்ட்ரோம்

 *காரணங்களும் பிரச்னைகளும்...*

தொற்றுகள்… ரூபெல்லா பிறப்புறுப்பில் பாக்டீரியா தொற்று எச்.ஐ.வி மலேரியா சிபிலிஸ் எனும் பிரச்னை ஃபுட் பாய்சன் சுகாதாரமற்ற உணவை சாப்பிட்டு ஃபுட் பாஸ்சனாகி கருச்சிதைவு ஏற்படும் நிலை. காய்ச்சப்படாத பால், வேக வைக்காத முட்டை சாப்பிடுவதால் வரும் ஃபுட் பாய்சன். சமைக்கபடாத உணவுகளை சாப்பிடுதல் கெட்டுப்போன இறைச்சி அல்லது சரியாக வேக வைக்கப்படாத இறைச்சி சாப்பிடுதல் பச்சை முட்டை குடிப்பது, ஹாஃப் பாயில் சாப்பிடுவது

கர்ப்பப்பை வாய் பிரச்னை

சில பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் பலவீனமாக இருக்கலாம். கருவைத் தாங்கி பிடிக்கும் திறன் இல்லாமல் இருக்கலாம். 2வது மும்மாதத்தில் இந்த மாதிரி பிரச்னை உள்ளவர்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிடலாம். இதை cervical insufficiency என்பார்கள்.

 *பிசிஓஎஸ்*

சிலர் பிசிஓஎஸ் பிரச்னையை அலட்சியப்படுத்துவார்கள். இயல்பான ஓவரியைவிட பெரிதளவில் காணப்படும். ஹார்மோன் பிரச்னைகளை ஏற்படுத்தும். குழந்தையின்மை பிரச்னையை ஏற்படுத்தும்.

 *வாழ்வியல் பிரச்னை*

அதிகமாக மருந்துகளை உட்கொள்ளுதல், மது, புகைப்பழக்கம் ஆகியவை இருந்தால் கருச்சிதைவு ஏற்படும்.

 *உடல் தொடர்பான பிரச்னை*

இது கொஞ்சம் அரிதுதான். இயல்பற்ற யூட்டரின், செப்டம் அல்லது பாலிப்ஸ், சர்விகல் பிரச்னை போன்றவை இருந்தால் 2 அல்லது 3வது மும்மாதத்தில்கூட கருச்சிதைவு நடக்கலாம்.

 *சில வகை மருந்துகள்*

ரூமட்டாய்டு ஆர்த்தரிடிஸ் மருந்துகளை உட்கொண்டாலும் கருச்சிதைவு ஏற்படலாம். ஆக்னி, ஹார்மோனல் ஆக்னி, எக்ஸிமா தோல் நோய்க்கு மருந்து உட்கொண்டால் கருசிதைவு நடக்கலாம். சில வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டாலும் கருச்சிதைவு நடக்கலாம்.

 *கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டதை எப்படி அறிவது?*

ரத்தபோக்கு இருத்தல், பொதுவான அறிகுறிகள் இல்லாமல் அதிக அளவில் அசௌகரியமான உணர்வைப் பெறுதல். காய்ச்சலுடன் அதிக ரத்தபோக்கு இருப்பது. காய்சலுடன் வலி, குளிர் போன்ற பிரச்னைகள் இருந்தால் மருத்துவரை உடனடியாக சந்திக்கவும். தொற்றால் கூட கருச்சிதைவு ஏற்பட்டு இருக்கலாம்.
கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களுக்கு மீண்டும் கர்ப்பம் உண்டாகுமா?

ஆம்… 85% பெண்கள் கருச்சிதைவு ஏற்பட்டு இருந்தாலும் மீண்டும் கர்ப்பமாக முடியும். நார்மல் டெலிவரி பெற்றுகொள்ள முடியும். ஆரோக்கியமான குழந்தை பிறக்கவும் செய்யும். கருச்சிதைவு ஏற்பட்டால் இனி மீண்டும் நீங்கள் கர்ப்பமாக மாட்டீர்கள் என அர்த்தம் கிடையாது. இது குழந்தையின்மை பிரச்னை கிடையாது. 1 - 2 % பெண்களுக்கு தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படும் பிரச்னை இருக்கும். சில ஆய்வார்கள் இதை ஆட்டோ இம்யூன் நோய் எனச் சொல்கிறார்கள். இவர்கள் சரியான மருத்துவரை அணுகி, குழந்தைக்கு திட்டமிடும் முன்னரே ஆலோசனை பெறுவது நல்லது. இரண்டு முறை யாருக்காவது கருச்சிதைவு ஏற்பட்டால், அடுத்த முறை தாங்களாகவே குழந்தைக்கு திட்டமிடாமல், ஒருமுறை மருத்துவரின் ஆலோசனை கேட்ட பிறகு தீர்மானிக்க வேண்டியது

 *கருச்சிதைவு நடந்த பெண்கள் மீண்டும் கருத்தரிக்க எவ்வளவு காலம் தேவைப்படும்?*
ஒருமுறை கருச்சிதைவு ஏற்பட்டு விட்டாலே அடுத்த முறை அவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன்தான் குழந்தைக்கு திட்டமிடுவது நல்லது. சில மருத்துவர்கள், குறைந்தது 3-6 மாதமாவது இடைவேளி விட்டு மீண்டும் கருத்தரிக்க திட்டமிடும்படி சொல்வார்கள். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் ஒரு பெண் இருக்க வேண்டியது முக்கியம். ஒரு பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டால், அதற்குதானே காரணம் என நினைத்துவிட கூடாது. பல்வேறு மருத்துவ ரீதியான பிரச்னைகள் இருக்கலாம் என்பதால் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

 *கருச்சிதைவை தடுக்க முடியுமா?*

அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவை தடுக்க முடியாது. ஏனெனில், அது இயல்பான கருத்தரிப்பாக இருக்க முடியாது. ஆனால், கருத்தரிக்க திட்டமிடும் முன்னரே மருத்துவரை சந்தித்து விட்டால், நிச்சயம் அடுத்த கருத்தரிப்பு வெற்றிகரமானதாக அமைய வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு ஏதேனும் பிரச்னை உள்ளது எனத் தெரிந்தால் அதற்கான சிகிச்சைகளை மருத்துவரே தருவர். தாயின் உடல்நலத்தைத் தேற்றி, தக்க ஆலோசனை மருத்துவர் வழங்கி, அதை சரியாக பின்பற்றினால் வெற்றிகரமாக கருவை காப்பாற்றி, குழந்தையை பெற்றெடுக்கும் வாய்ப்புகளும் அதிகம்.

 *முதல் 3 மாதங்கள்... கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டியதன் காரணம் தெரியுமா?*

தாயாகப் போகிறேன் என்ற செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியில் இருப்பீர்கள். உங்கள் வயிற்றில் குழந்தை கருவாக இருக்கும்போதே குழந்தையின் பாலினம், ரோமம், தோல், நிறம், குணம், உயரம், திறன் ஆகியவை முடிவு செய்யப்படும். குழந்தையின் முதல் 3 மாதங்களின் (First Trimester) வளர்ச்சி எப்படி இருக்கும் எனத் தெரியுமா?

 *முதல் மூன்று மாதங்கள் – குழந்தையின் வளர்ச்சியும் தாய் கவனிக்க வேண்டியதும்*

முதல் மூன்று மாதங்களில், தாய் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

 *முதல் வாரம்*

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் எனத் தெரியாது. எனினும் உங்களது உணர்வுகளில் மாற்றங்கள் இருக்கும்.
தாய்மை உணர்வு, சொல்ல முடியாத உணர்வு தோன்றியிருக்கும்.

 *2-வது வாரம்*

ஹார்மோன்கள் சுரந்து மாதவிலக்கை வர விடாமல் தடுக்கும்.
தாய்மைக்கு உடலைத் தயார் செய்ய ஆரம்பிக்கும்.

 *3-வது வாரம்*

வாந்தி, குமட்டல், வயிறு பிரட்டுவதுப் போன்ற உணர்வுகள் வரலாம்.
வயிற்றில் உள்ள கருவுக்கு மூளை செல்கள், முதுகுத்தண்டுவடம், நரம்பு மண்டலம் என அடிப்படையான விஷயங்கள் உருவாகியிருக்கும்.
லேசாக இதயத்துடிப்பும் தெரிய ஆரம்பிக்கும்.

 *4-வது வாரம்*

குழந்தையின் மூளையும் நரம்பு மண்டலமும் முழு வடிவத்தைப் பெற்றிருக்கும்.
முதுகு எலும்புகள், தசைகள், கை, கால்கள், கண்கள், காதுகள் எல்லாம் வளரத் தொடங்கும்.
குழந்தை 3 மில்லி மீட்டருக்கு குறைந்த அளவில் தாயின் வயிற்றில் காணப்படும்.
குழந்தை பாதுகாப்பாக இருக்க, உங்களது கர்ப்பப்பையே தடிமனான மெத்தையை குழந்தைக்காக உருவாக்கும்.
இந்தக் காலத்தில் தாய் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தொடங்குவார்.
வாந்தியும் குமட்டலும் அதிகரித்திருக்கும் காலமும் இது.

 *5-வது வாரம்*

உங்கள் குழந்தை உங்களது வயிற்றில் 5 மீட்டர் அளவுக்கு வளர்ந்திருக்கும்.
சின்ன சிறிய அழகான விரல்களும் தோன்ற ஆரம்பிக்கும்.
சில தாய்மார்களுக்கு பிறப்புறுப்புகளில் ரத்த சொட்டுக்கள் லேசாக ஆரம்பிக்கும். இப்படி இருந்தால் ஒருமுறை மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று வருவது நல்லது.
இயற்கையாக நீங்கள் கர்ப்பமாகி இருந்தால், மருத்துவர் ஆலோசனைப்படி லேசான உடற்பயிற்சிகளை செய்யலாம்.
அதிக சோர்வு சிலருக்கு இருக்கலாம்.
தலைவலி இக்காலத்தில் வரலாம்.
சோர்வாக இருந்தால் அவ்வப்போது ஓய்வு எடுங்கள்.
இரவில் வெகு நேரம் கண் விழிக்கும் பழக்கம் இருந்தால், அதையெல்லாம் இனி விட்டு விடுங்கள். உங்கள் குழந்தையின் நலனுக்காக.
மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
இதையும் படிக்க : கர்ப்பக்கால சர்க்கரை நோயைத் தவிர்க்கும் உணவுகள்

 *6-வது வாரம்*

குழந்தை 6-7 மில்லி மீட்டர் உயரம் வரை காணப்படும். சிறிது சிறதாக வளர்ச்சி அதிகரிக்கும்.
4 அறைகளும் உள்ள முழுமையான இதயம் உருவாகும்.
கைகளும் கால்களும் நீண்டு வளரக்கூடும்.
குழந்தையின் மூளை நன்றாக செயல்படும்.
இதனால் குழந்தையின் உள்ளுறுப்புகளின் வளர்ச்சியை தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும் வேலையை குழந்தையின் மூளை செய்ய தொடங்கிவிடும்.
இந்த காலத்தில் கர்ப்பிணிகள் காற்றோட்டமான இடத்தில் இருப்பதை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
மாலை வெயிலில் சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்வது நல்லது.
விட்டமின் டி சத்து வெயிலிருந்து தாய்க்கு கிடைக்கும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்லும் சூழலும் வரும்.

 *7-வது வாரம்*

குழந்தை 7-8 மீட்டர் அளவு வளர்ந்திருக்கும்.
கை, கால்கள் நன்றாக வளர்ந்திருக்கும்.
சீரான இதயத் துடிப்பு காணப்படும்.
இந்த காலத்தில் தாய்க்குப் புளிப்பான உணவுகள் பிடிக்க ஆரம்பிக்கும்.
புளிப்பு சுவையைத் தேடி தாய்மார்கள் செல்வார்கள்.
இதையும் படிக்க : கர்ப்பக்கால விதிகள் … செய்ய வேண்டியதும் தவிர்க்க வேண்டியதும்…

 *8-வது வாரம்*

குழந்தை 8-10 மில்லி மீட்டர் அளவுக்கு வளர்ந்திருக்கும்.
கருப்பை இரண்டு மடங்கு பெரிதாகக் காணப்படும்.
இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 160 எண்ணிக்கையாக காணப்படும்.
தோல் மிகவும் மெலிதாக உருவாகியிருக்கும்.
பார்ப்பதற்கு மிக சிறிய மனித உருவம் போல தெரியும்.
சோர்வு வரும் போதெல்லாம் ரெஸ்ட் எடுக்க வேண்டும்.

 *9-வது வாரம்*

குழந்தையின் உள்ளுறுப்புகள் நன்றாக வேலை செய்யத் தொடங்கும்.
இதனால் கர்ப்பப்பையில் குழந்தை நகரத் தொடங்கும்.
குழந்தையின் நடனம் தொடங்கிவிட்டது. அங்கேயும் இங்கேயும் லேசாக குழந்தை நகரும்.
குழந்தை தன் விரல்களை அசைக்கும்.
உள்ளங்கையைத் தொட்ட படி கைகளை மூடும்.
தாயின் மார்பகங்கள் கொஞ்ச கொஞ்சமாக பெரிதாகும்.
அதிகமான ஹார்மோன் சுரப்புகள் ஏற்படும்.
திடீர் மகிழ்ச்சி, திடீர் அழுகை இப்படி மாறி மாறி மனநிலை இருக்கும். பயப்பட வேண்டாம். இது நார்மல்தான்.
லேசான மூக்கடைப்பு இருக்கும்.
மூக்கில் ரத்த கசிவு தோன்றலாம்.
மூக்குக்கு உள்ளே வறட்சியாக இருப்பது போன்ற உணர்வுத் தெரியும்.

 *10-வது வாரம்*

குழந்தை தாடை எலும்புகள் தோன்றியிருக்கும்.
இதயம் சீராக இயங்கும்.
தாடையைக் குழந்தை அசைக்கும்.
குழந்தையின் நெற்றியின் சுருக்கங்கள் காணப்படும்.
தாயின் வயிறு கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகும்.

 *11-வது வாரம்*

குழந்தை இப்போது 2-3 செ.மீ நீளத்தில் இருக்கும்.
சீறுநீரகம் நன்கு செயல்பட்டு, சிறுநீர் வெளியாகும்.
முகத்தோற்றம் சீராக இருக்கும்.
நகங்களின் வளர்ச்சியும் சீராக இருக்கும்.
குழந்தையின் நீளத்துக்கு ஏற்றது போல, மூன்றில் ஒரு பங்காக குழந்தையின் தலை காணப்படும்.
குழந்தையின் எடை அதிகரிக்கத் தொடங்கும்.

 *12-வது வாரம்*

உங்கள் குழந்தை இப்போது 6 செ.மீ அளவுக்கு காணப்படும்.
மணிக்கட்டு, முழங்கை ஆகியவற்றை குழந்தை அசைக்க ஆரம்பிக்கும்.
கருப்பையில் குழந்தை கொஞ்ச கொஞ்சமாக சுற்ற ஆரம்பிக்கும்.
குழந்தை தூங்கும்; மீண்டும் எழும். தூக்கமும் விழிப்பும் குழந்தைக்கு மாறி மாறி இருக்கும்.
தன் தசைகளைக் குழந்தை அசைக்கும்.
இந்தக் காலத்தில் குழந்தை தன் தலையைத் திருப்பும்.
வாயைத் திறந்து, திறந்து மூடும்.
தாய்மார்களுக்கும் வாந்தி, வயிற்று பிரட்டல் குறைய ஆரம்பிக்கும்.
இதனால் கொஞ்சம் கொஞ்சமாக தாய்மார்கள் இயல்பு நிலைக்கு வருவார்கள்.
இந்த முதல் மூன்று மாதங்களும் உங்கள் குழந்தையின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. எனவே நீங்கள் வெகு கவனமாக உங்கள் உடல்நலத்தையும் மனநலத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். தாய்மார்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

 *கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் 7 பயம்... உண்மை நிலை என்ன?*

குழந்தைகாக திட்டமிட்டு இருக்கிறீர்களா... நீங்கள் கர்ப்பிணியாகவும் இருக்கலாம்... வாழ்த்துகள்… பொதுவாக கர்ப்பிணிகளுக்கு நிறைய குழப்பங்கள் இருக்கும். இது சரியா… இது நார்மலா… இதுபோல நிறைய கேள்விகள் இருக்கும். மேலும், பயமும் அதிகமாக இருக்கும். உங்கள் பயத்தை போக்க அதன் தொடர்பான (Get rid of top Pregnancy Fears) உண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். பயப்பட வேண்டாம்… மகிழ்ச்சியாக உங்களது கர்ப்பக்காலத்தை அனுபவியுங்கள்.
என்னென்ன பயம்? அதன் உண்மை காரணங்கள் என்னென்ன?

 *#1. பிறவி குறைபாடுகள்*

 குறைபாடுகள்
டவுன் சிண்ட்ரோம், ஆட்டிசம் இன்னும் பல பிறவி குறைபாடுகளை நினைத்து, நீங்கள் பயப்படலாம்.
எப்போது கர்ப்பமாக இருக்கிறீர்கள் எனத் தெரிந்ததோ அன்றிலிருந்து குழந்தையின் நன்மைகாக அதிகம் யோசிப்பீர்கள்.
பெரும்பாலான குழந்தைகள் ஆரோக்கியமாகவே பிறக்கிறார்கள் என்பதால் நிம்மதி கொள்ளுங்கள்.
தற்போதெல்லாம் நிறைய ஸ்கேன், பரிதோசனைகள் வந்துவிட்டன. ஆரம்பத்திலே கண்டுபிடித்துவிடலாம்.
அதில் நிறைய பிரச்னைகள், மிகவும் சிறிய விஷயமாக இருக்கலாம். அதை குணப்படுத்தியும் விடலாம்.
உங்கள் கர்ப்பக்காலத்தில் நீங்கள் சத்தான உணவு வகைகளை சாப்பிடுகிறீர்களா என்பதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்

 .தினமும் ஃபோலிக் ஆசிட் உணவுகள், மருத்துவர் பரிந்துரைத்தால் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் சாப்பிடலாம்.
நரம்பு தொடர்பான, வளர்ச்சி தொடர்பான அனைத்துக்கும் ஃபோலிக் ஆசிட் மிக முக்கியம். எனவே சத்துள்ள உணவுகளுக்கே முதலிடம்.
பயம் குழந்தையை அதிகம் பாதிக்கும் என்பதால் அமைதி கொள்ளுங்கள். தியானம், இசை கேட்பதில் ஈடுபடுங்கள்.

 *#2. கருசிதைவு*

10 - 20% கருசிதைவு ஏற்படத்தான் செய்கிறது.
க்ரோமோசோமல் அப்நார்மலிட்டி எனும் பிரச்னை மூலம் கருசிதைவாகுவதை தடுக்க முடியாது என்பதே உண்மை.
இதெல்லாம் இருந்தாலும் உங்களது மைண்ட், எண்ணம், மனம் எப்போதுமே பாசிட்டிவ்வாக இருக்க வேண்டும்.
பாசிட்டிங் எண்ணெங்கள் (நேர்மறை எண்ணங்கள்), இருந்தாலே எதையும் வெல்ல முடியும்.
நீங்களும் உங்கள் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என நினைத்துக் கொள்ளுங்கள். அது அப்படியே நடக்கும்.
கெஃபைன் உள்ள பொருட்களை அறவே தவிர்க்கவும்.
நிக்கோட்டீன் இருப்பதையும் தவிர்க்கவும். சிகரெட் பிடிப்பவர்களின் அருகில் இருக்க வேண்டாம்.
குடிப்பழக்கம், புகைப்பழக்கம் இருந்தால், கருசிதையும் வாய்ப்புகள் அதிகம்.
ரத்தப்போக்கு இருந்தால் தொடக்கத்திலே மருத்துவரின் ஆலோசனையை கேளுங்கள்.

 *# 3. குறை பிரசவம்*

பெரும்பாலான தாய்மார்கள் குறைபிரசவத்தை நினைத்து பயப்படுகிறார்கள்.
37 வாரம் முடியாமல் முன்னராக குழந்தை பிறந்தால், அந்த பிரசவத்தை குறை பிரசவம் எனச் சொல்லப்படுகிறது.
இப்போதெல்லாம் 37-வது வாரத்துக்கு முன் குழந்தை பிறந்தாலும் அதற்கேற்ற தக்க சிகிச்சையை மருத்துவர்கள் வழங்குகிறார்கள்.
யூட்டரின், சர்விகல் அப்நார்மலிட்டி இருப்பவர்களுக்கு இந்த பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம். மருத்துவர்களின் ஆலோசனை பெறுங்கள்.

குறை பிரசவம் வரலாம் என டாக்டர்கள் முன்னரே யூகிக்கப்பட்டால், அதற்கேற்ற சிகிச்சையை அளிப்பார்கள். பயம் வேண்டாம்.
உடல் எடை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு இவற்றை சீராக, சரியாக வைத்துக் கொள்வது தாய்மார்களின் பொறுப்பு.
இந்த 3 விஷயங்களிலும் நீங்கள் சரியாக இருந்தால் பயம் எதற்கு? உடல் எடையை நன்றாக கவனித்து கொள்ளுங்கள்.
இதையும் படிக்க: குழந்தைக்காக திட்டமிடும் பெண்களுக்கு 10 பயனுள்ள ரகசியங்கள்...

 *# 4. தொப்புள் கொடி*

 சுற்றிக் கொள்வது
நிறைய கதைகளை கேட்டிருப்போம் குழந்தையின் கழுத்தில் தொப்புள் கொடி சுற்றி உள்ளது.
இதை நீங்கள் கேள்விப்பட்டால் உங்கள் எண்ணங்கள் மூலம் சரிசெய்யுங்கள்.
வயிற்றில் உள்ள அந்த நீர் மூலமாக தானாக தொப்புள் கொடி சரியாகிவிடும். சிலருக்கு சரியாகவில்லை என்றாலும் பயப்பட வேண்டாம். மருத்துவர்கள் கவனித்து கொள்வார்கள்.
கரு உண்டான நாள் முதலே நல்லவை, பாசிட்டிவ் விஷயங்களை சொல்லிக் கொண்டே இருங்கள். எல்லாமே நன்றாக நடக்கும்.

 *# 5. உடல் எடை அதிகரிப்பது*

இது எல்லாருக்கும் நடக்க கூடிய விஷயம். புதிது அல்ல…
உங்களது உடலின் தோற்றம் மாறுகிறதால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். சில மாதங்களிலே பிரசவத்துக்கு பின்னர் சரியாகிவிடும்.
எடையை பற்றி அதிகம் கவலை கொள்ளாமல், கர்ப்பக்காலத்தை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள்.
நீங்களாக எந்த வொர்க்அவுட்டும் செய்ய வேண்டாம். குழந்தை பிறந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

 *# 6. வலி மிகுந்த பிரசவம் இருக்குமா…*

பிரசவத்தை நினைக்கும்போது பயம்.
பிரசவ வலி வந்தவுடன் மருத்துவமனைக்கு சரியாக செல்ல முடியுமா எனப் பயம்.
பிரசவ வலி, பனிக்குடம் உடைதல் இதுபோன்ற நிறைய விஷயங்கள் குறித்து பயம் இருக்கும். இதெல்லாம் உலகம் அறிந்த உண்மை.
உங்களுக்கு நீங்களே விழிப்புணர்வு ஊட்டிக் கொள்ளுங்கள். எல்லாம் சரியாக நடக்கும்.
சுலபமான பிரசவம் நடக்கும்.
உங்கள் குழந்தையிடம் நீங்கள் தொடக்கத்திலிருந்தே பேசுங்கள். நீ பிரசவம் சமயத்தில் சுலபமாக வந்துவிடு எனச் சொல்லுங்கள். நிச்சயம் குழந்தைக்கு உங்களது வார்த்தை புரியும்.
இதையும் படிக்க: கர்ப்பக்கால சர்க்கரை நோய் வராமல் தவிர்க்க... சாப்பிட வேண்டிய 22 உணவுகள்...

 *# 7. குழந்தை வளர்ப்பு*

குழந்தை பிறந்தாகிவிட்டது. மகிழ்ச்சியும் ஆனந்த கண்ணீரிலும் ஆழ்ந்து இருக்கிறீர்கள்.
தாய்ப்பால் கொடுப்பது, டயாப்பர் மாற்றுவது, குழந்தை தும்முவது, அழுவது எல்லாமே புதிய விஷயம்தான்.
உங்களுக்கு எந்த பயமும் வேண்டாம். நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போதே குழந்தை வளர்ப்பு பற்றி நல்ல புத்தகங்கள், மாம்ஸ் கம்யூனிட்டி போன்றவற்றில் இணைந்து தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களது குழந்தை வளர்ப்பு கலையும் எளிமையாகும். குழப்பங்கள் வேண்டாம். நிறைய தாய்மார்கள் இணைந்த குழுக்கள் உள்ளன. அதில் கர்ப்பமாக இருக்கும்போதே சேர்ந்து கொள்ளுங்கள்.
நிறைய விஷயத்தை கற்றுக் கொள்ளலாம்.
எல்லாமே உங்கள் கையில் இருக்கிறது. பாசிடிவ் எண்ணங்களை மனதில் விதையுங்கள். எல்லாமே நன்றாகவே நடக்கும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக