புதன், 11 ஏப்ரல், 2018

மருக்கள் எளிதில் மறைய இந்த எளிய வீட்டு மருத்துவத்தை செய்யுங்கள்.

மருக்கள் எளிதில் மறைய இந்த எளிய வீட்டு மருத்துவத்தை செய்யுங்கள்.

வணக்கம்
மரு என்பது பொதுவாக சுத்தம் இல்லாமல் இருப்பதால் ஏற்படுகிறது. அதாவது சுத்தமாக தேய்த்து குளிக்காமல் இருப்பதால் முதலில் மச்சம் போன்று தோன்றி பின் மருவாக மாறிவிடும். அது கழுத்து கன்னங்கள், முதுகு தோல் பட்டை, அக்குள் பகுதி மார்பகங்கள், வயிறு தொடை என எங்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இது ஒரு இடத்தில் வந்தாலும் நாளடைவில் எல்லா பகுதிகளிலும் பரவ ஆரம்பிக்கும்.

மருவை எளிதாக நீக்க எளிய வீட்டு வைத்தியம் ஏராளமாக உள்ளது அவற்றில் சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போம்.
தீர்வு 1
தினமும் ஒரு துண்டு இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு வாரத்திற்கு செய்து வந்தால் மருக்கள் தகர்ந்து இயற்கையாகவே உதிர்ந்து விடும்.

தீர்வு 2
அன்னாசி பழத்தின் சாறு எடுத்து அதை மரு உள்ள இடத்தில் 20 முதல் 25 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி பத்து நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தீர்வு 3
எலுமிச்சை சாற்றை பிழிந்து சாறு எடுத்து அதை மரு உள்ள இடத்தில் 20 நிமிடங்கள் செய்து வர மருக்கள் உதிர்ந்து விடும்.

தீர்வு 4
துணி துவைக்கும் சோப் மற்றும் சுண்ணாம்பு இவற்றை இரண்டையும் சம அளவு எடுத்து சிறிது அளவு சோட உப்பை கலந்து மருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் தானகவே உதிர்ந்து விடும்.

தீர்வு 5 
தேங்காய் மூடியை நெருப்பில் வாட்டி அதிலிருந்து வரும் எண்ணெயை மருவின் மீது தடவி வந்தால் மரு ஆனது தானே உதிர்ந்து விடும்.

இதுபோன்ற பயனுள்ள தகவல்கள் தொடர்ந்து உங்களை வந்து அடைய எங்களை Follow பண்ணுங்க. நன்றி வணக்கம். Thanks Trending Tamil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக