புதன், 25 ஏப்ரல், 2018

திருமணம் ஆகி 5 வருடம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை ? எனக்கு வழி சொல்லுங்கள்....

திருமணம் ஆகி 5 வருடம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை ? எனக்கு வழி சொல்லுங்கள்....

கோப்புப்படம் கேள்வி: எனக்குத் திருமணமாகி 5 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. எல்லோரும் இது பற்றி கேட்கும் போது எனக்கு அவமானமாக இருக்கிறது. நான் “அப்பா“ ஆக ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள்... 
பதில்: திருமணம் ஆயிற்று சரி.  நீங்களும் உங்கள் மனைவியும் கலவி கொள்கிறீர்களா?  சரியான முறையில் உறவு கொண்டீர்களா?  ஒரு வாரத்துக்கு பல முறைகள் என்று விகிதத்தில்?  அப்போதும் பிள்ளை உண்டாகவில்லை என்றால், நீங்கள் செய்ய வேண்டியது.

முதல் ஒரு மாதத்துக்கு அன்றாடம் உறவு கொள்ளுங்கள். மாதவிடாய் முடிந்த  முதல் 15 நாட்கள்  உறவு கொள்ள வேண்டுடியது அவசியம்..

மனைவியின் மாதவிலக்குத் தேதிகள் சரியாக இருக்கின்றனவா என்று பாருங்கள்.  மாதாமாதம் அவளுக்கு மாதவிலக்கு வருகிறதா என்று பாருங்கள்.

இரண்டும் சரியாக இருந்தும் குழந்தை தங்கவில்லை என்றால் உங்கள் விந்தணுக்களைப் பரிசோதிக்கலாம்.  வெறுமனே விந்தணுக்களை மைக்ரோஸ் கோப் அடியில் வைத்து பார்த்தால், எண்ணிக்கை, அசைவு மாதிரியான சமாச்சாரங்கள் சரியாக இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளலாம்.  ஆணின் விந்து பரிசோதனை நல்லபடியாகவே இருந்தால், அடுத்து பெண்ணைப் பரிசோதிக்கலாம்.

அவள் சினையகங்கள் சரியாக இயங்குகின்றனவா?  சினைக் குழாய்களின் செயல்பாடு ஓகேவா?  ஹார்மோன்கள் போதுமான அளவில் சுரக்கின்றனவா என்பதை எல்லாம் வெவ்வேறு முறைகளில் பரிசோதிக்கலாம்.  இன்று இருக்கும் சாதனங்களின் நுணுக்கத்தாலும், அறிவியல் வளர்ச்சியின் கைங்கரியத்தாலும் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதை நிவர்த்தி செய்து பிள்ளைப் பேற்றைப் பெற முடியும்.

அப்படியும் முடியாவிட்டால் ஓர் ஆரோக்கியமான குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ளலாம்.

ஆக, வழிகள் நிறைய இருக்கின்றன.  அதைப் பற்றி கவலைப்படாமல் முதலில் கணவன் மனைவி இருவரும் அடிக்கடி உறவுகொள்ள ஆரம்பியுங்களேன்.  யார் கண்டது, அதிலேயே பிரச்னை தீர்ந்து போகலாமே! 

திருமணம் ஆகி 5 வருடம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை ? எனக்கு வழி சொல்லுங்கள்....
கோப்புப்படம்

கேள்வி: எனக்குத் திருமணமாகி 5 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. எல்லோரும் இது பற்றி கேட்கும் போது எனக்கு அவமானமாக இருக்கிறது. நான் “அப்பா“ ஆக ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள்...
பதில்: திருமணம் ஆயிற்று சரி.  நீங்களும் உங்கள் மனைவியும் கலவி கொள்கிறீர்களா?  சரியான முறையில் உறவு கொண்டீர்களா?  ஒரு வாரத்துக்கு பல முறைகள் என்று விகிதத்தில்?  அப்போதும் பிள்ளை உண்டாகவில்லை என்றால், நீங்கள் செய்ய வேண்டியது.


முதல் ஒரு மாதத்துக்கு அன்றாடம் உறவு கொள்ளுங்கள். மாதவிடாய் முடிந்த  முதல் 15 நாட்கள்  உறவு கொள்ள வேண்டுடியது அவசியம்..
மனைவியின் மாதவிலக்குத் தேதிகள் சரியாக இருக்கின்றனவா என்று பாருங்கள்.  மாதாமாதம் அவளுக்கு மாதவிலக்கு வருகிறதா என்று பாருங்கள்.
இரண்டும் சரியாக இருந்தும் குழந்தை தங்கவில்லை என்றால் உங்கள் விந்தணுக்களைப் பரிசோதிக்கலாம்.  வெறுமனே விந்தணுக்களை மைக்ரோஸ் கோப் அடியில் வைத்து பார்த்தால், எண்ணிக்கை, அசைவு மாதிரியான சமாச்சாரங்கள் சரியாக இருக்கிறதா என்று தெரிந்துகொள்ளலாம்.  ஆணின் விந்து பரிசோதனை நல்லபடியாகவே இருந்தால், அடுத்து பெண்ணைப் பரிசோதிக்கலாம்.
அவள் சினையகங்கள் சரியாக இயங்குகின்றனவா?  சினைக் குழாய்களின் செயல்பாடு ஓகேவா?  ஹார்மோன்கள் போதுமான அளவில் சுரக்கின்றனவா என்பதை எல்லாம் வெவ்வேறு முறைகளில் பரிசோதிக்கலாம்.  இன்று இருக்கும் சாதனங்களின் நுணுக்கத்தாலும், அறிவியல் வளர்ச்சியின் கைங்கரியத்தாலும் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதை நிவர்த்தி செய்து பிள்ளைப் பேற்றைப் பெற முடியும்.
அப்படியும் முடியாவிட்டால் ஓர் ஆரோக்கியமான குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ளலாம்.
ஆக, வழிகள் நிறைய இருக்கின்றன.  அதைப் பற்றி கவலைப்படாமல் முதலில் கணவன் மனைவி இருவரும் அடிக்கடி உறவுகொள்ள ஆரம்பியுங்களேன்.  யார் கண்டது, அதிலேயே பிரச்னை தீர்ந்து போகலாமே! Thanks Tamil Eenadu India

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக