புதன், 2 ஆகஸ்ட், 2017

ஆயில் புல்லிங் பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் அனைத்து நோய்களும்!!



ஆயில் புல்லிங் பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் அனைத்து நோய்களும்!!

( *இன்று முதல் நம் குழு அனைத்து அன்பர்களும் எண்ணெய் கொப்பளிப்பை தினமும் கடமையாக செய்யுங்கள். அதன் பின் பாருங்கள். நோய் அனைத்தும் காணாமல் போகும் மாயத்தை....*)

நல்லெண்ணெய்யின் நற்குணம் தெரியுமா
உங்களுக்கு? எண்ணெய் கொப்பளித்தல்
செய்யும் முறை!

நல்லெண்ணெய்யின் நற்குணம் தெரியுமா
உங்களுக்கு?

*ஆயில்  புல்லிங் (Oil Pulling) !!!*
**************************

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில்
சுத்தமான நல்லெண்ணெய் , (அ) சூரியகாந்தி
(அ) வேர்க்கடலை (அ) ஆலிவ் (அ) தேங்காய்
எண்ணெய் என ஏதாவது ஒரு எண்ணெய்
இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்)
வாயில் விட்டு, அதனை வாய் முழுவதும்
பற்களின் இடைவெளிகளுக்கிடையே
ஊடுருவிச் செல்லுமாறு நன்கு கொப்பளிக்க
வேண்டும். இப்படி 15 முதல் 20 நிமிடங்கள்
வரை தொடர்ந்து கொப்பளிக்க வேண்டும்.

முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று
எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால், சில
நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள்
எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில்
எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய்,
நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது
அதனை உமிழ்ந்து துப்பி விட வேண்டும்....

ஆயில் புல்லிங் செய்வதால் பல் மற்றும்
ஈறுகளில் ஏற்படும் வைரஸ், பாக்ட்ரியாவா
போன்ற கிருமி தொற்று நோய்களிலிலருந்து முதலில் விடுதலை பெறலாம் ..... கண் காது
மூக்கு சம்பந்தமான மற்றும் நுரையீரல்
நோய்கள், வயிறு குடல் நோய்கள்,
மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு,
மூட்டு வலி, முழங்கால் வலி, தூக்கமின்மை,
ஆஸ்துமா, வாயுத்தொல்லை, ஒவ்வாமை
(அலர்ஜி) போன்ற நோய்களை உடனடியாக
குணப்படுத்தியுள்ளது.

நம் உடலில் ஏற்படக்கூடிய எய்ட்ஸ், சர்க்கரை,
இரத்த அழுத்தம், இதயநோய்கள், பார்க்கின்சன்,
கல்லீரல், நோய், ரத்தபுற்று (அ) எலும்புமஜ்ஜை புற்றுநோயையும், பக்க
வாதம், நரம்பு சம்பந்தமான நோய்கள்,
வெரிகோஸ் வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய்
தொல்லைகள், வயிறு சம்பந்தபட்ட
பிரச்சனைகள், மார்பக நோய்கள், கருப்பை
தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை
போன்ற எண்ணிலடங்கா நோய்களையும் மிக
எளிதான முறையில் குணப்படுத்தும்
முறையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்னரே நமக்கு தந்துள்ளனர் நம்
முன்னோர்கள்.

‘ஆயில் புல்லிங்' (oil pulling) மூலமாக மிக
எளிமையான முறையில் குணமாக்கியும்
இருக்கிறார்கள் .....

தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற
கடுமையான வலியால் அவதிக்குள்ளாக்கும்
நோய்கள் தாக்குவதில்லை என்று மருத்துவர்களே கூறுகின்றனர் .....

நோயின் தன்மைக்கு ஏற்ப ஒன்றிலிருந்து
மூன்று முறை செய்தால் நோயின் தீவிரம்
குறையும்..

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்“
வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்”
என்பது பழமொழி. இதே போல மற்றொரு
அனுபவ உண்மை என்னவெனில், வாயில்
நல்லெண்ணெய் விட்டு கொப்பளித்து வந்தால்
நோய்கள் பல நீங்கும்.


நல்லெண்ணெய்
மருத்துவம், நல்லெண்ணெயின் மகத்துவத்தை
உணர்த்துகிறது. சிரமம் ஏதுமின்றி மிக
எளிதாக செய்யக் கூடிய எண்ணெய்
கொப்பளித்தலை செய்து வருவது நமது உடல்
நலத்தைப் பேணிக்காக்கும்.

*எண்ணெய் கொப்பளித்தல்  செய்யும் முறை*
***************************************

சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு
எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு அதை
வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க
வேண்டும். 21 நிமிடங்கள் வரை
கொப்பளிக்கலாம். பற்களின்
இடைவெளிகளுக்குள் எண்ணெய் போகும் படி
செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் எண்ணெய்
நுரைத்து, வெண்மையாகி நீர்த்துப்போகும்.

அப்போது அதை உமிழ்ந்து விட வேண்டும்.
அதன் பிறகு வாயை நன்கு
கழுவிக்கொள்ளவும்.

*எந்தநேரத்தில் செய்யவேண்டும்?*
****************************

இந்த எண்ணெய் மருத்துவம் செய்வதற்கு ஏற்ற
நேரம் அதிகாலை. நாம் பல் தேய்த்த பிறகு,
உணவு உட்கொள்ளும் முன்பு எனில் மிக நல்ல
பலன் கிடைக்கும்.

 *எவ்வளவு காலம்  செய்ய  வேண்டும்?*
*************************************

நல்ல பசி, ஆழ்ந்த அமைதியான உறக்கம், நல்ல
மனநிலை ஆகியவை வரும் வரைக்கும்
எண்ணெய்க் கொப்பளிப்பு தொடர்ந்து செய்ய
வேண்டும். ஆனால் 9 மாதம் முதல் ஓர்
ஆண்டு வரை எண்ணெய்க் கொப்பளிப்பு
செய்வதை தொடர்ந்தால் உடலுக்கு நல்ல
பாதுகாப்பு கிடைக்கும்.


 *நன்மைகள்:*
**********

வெள்ளையான பற்கள் மற்றும் ஆரோக்கியமான
ஈறுகள். தினமும் ஆயில் புல்லிங் செய்து
வந்தால், பற்களில் உள்ள கறைகள் நீங்கி ,
பற்கள் வெள்ளையாகவும் ,
ஆரோக்கியமானதாகவும் காணப்படும்.

 *வாய்துர்நாற்றம்:*
***************

தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்து
வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும்
வெளியேறி, வாய் துர்நாற்றம் அடிக்காமல்
இருக்கும்.

 *ஈறுகளில் ஏற்படும்  இரத்தக்கசிவு:*
**************************************

ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், ஆயில்
புல்லிங் செய்தால், இரத்தக்கசிவு ஏற்படுவது
தடுக்கப்பட்டு, ஈறுகள் ஆரோக்கியமாக
இருக்கும். பல் கூச்சம் நின்று பல் வலி
மறையும்.

*உடலின் எனர்ஜி அதிகரிக்கும்:*
*************************

ஆயில் புல்லிங்கை தினமும் செய்தால்,
உடலின் ஆற்றலானது அதிகரித்து, நாள்
முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன்
இருக்கலாம்.

*ஒற்றை தலைவலி :*
*****************

ஒற்றை தலை வலியால் அவஸ்தைப்
படுபவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து
வந்தால், அந்த தொல்லையில் இருந்து
விடுபடலாம்.3D Character with head in
hands, sitting on the word Stress

 *சைனஸ் ஆஸ்துமா:*
******************

சைனஸ் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள்,
தினமும் ஆயில் புல்லிங் செய்தால், இந்த
பிரச்சனைகள் குணமாகும்.

 *நிம்மதியான தூக்கம் :*
*******************

தூக்கமின்மையால் அவஸ்தைப் படுபவர்கள்
ஆயில் புல்லிங் செய்தால், இரவு நேரத்தில்
நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

*பொலிவான சருமம்:*
*****************

ஆயில் புல்லிங் செய்தால், உடலில் உள்ள
நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவோடு
இருக்க உதவும்.

*தைராய்டு:*
**********

தைராய்டு உள்ளவர்கள், ஆயில் புல்லிங்
செய்து வந்தால், தைராய்டு ஹார்மோனை
சீராக சுரக்க செய்து, தைராய்டு
பிரச்சனையைக்க ட்டுப்பாட்டுடன்
வைக்கலாம்.

 *பார்வைக்கோளாறு:*
******************

பார்வைக்கோளாறு இருந்தால், ஆயில் புல்லிங்
செய்து வர பார்வைக் கோளாறானது
சரியாகும்.

 *மூட்டுபிரச்சனைகள்:*
*******************

மூட்டுகளில் பிரச்சனை உள்ளவர்கள், தினமும்
ஆயில் புல்லிங் செய்து வந்தால் அது
மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும்
வலியை குணமாக்கும்.

*சிறுநீரக  செயல்பாடு:*
*******************

தினமும் ஆயில் புல்லிங் செய்தால், சிறுநீரக
கோளாறு ஏற்படாமல் , சிறுநீரகமானது சீராக
செயல்படும். தோலின் மீது குழிகளும்
வெடிப்புகளும் மறைந்து தோல்
பளபளப்பாகிறது. கை ,கால், விரல்கள்
மெருகுற்று ரத்த ஓட்டம் பெருகியதற்கான
அறிகுறிகள் தெரியும். தோல் அரிப்புகள்
படிப்படியாக குறைந்து 3 மாதங்களில்
மறையும். பொடுகு தொல்லை தீரும். பருக்கள் அனைத்தும் மறைந்து முகம் பொலிவு பெறும்.



*ஆயில் புல்லிங் பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.!!*
*********************************

ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய்
மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில்
பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை
வாயில் விட்டு சாதாரணமாக
கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக
இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங்
எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து
நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும்
ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு
முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து
பின்பற்றியுள்ளனர். இது அனைத்து
நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ
முறையாக இருந்துள்ளது.

பல்வகையான
நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது
வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை
செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு,
அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும்
நுண்ணுயிரிகளையும் அழித்து அதன்
மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியியல்
பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால்
நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களும்
புத்துணர்வு பெறுகிறது.

ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்வது பற்றி
தெலுங்கு நாளிதழான ஆந்திர ஜோதியில்
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு
நடத்தப்பட்டது. மூன்று வருடங்களாக 1041
நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 927
நபர்களுக்கு நோய் குணமானது தெரியவந்தது.

758 நபர்களுக்கு கழுத்து மற்றும் உடல்வலி
குணமாகியது. அலர்ஜி மற்றும் ஆஸ்துமா
நோய்கள் 191 பேருக்கு சரியானது.
தோல்நோய், அரிப்பு,கரும்படை, உள்ளிட்ட
நோய்கள் குணமடைந்ததாக தெரிவித்திருந்த
னர். மேலும், இதயநோய், சர்க்கரை நோய், ரத்த
அழுத்தம்,நரம்பு தொடர்பான நோய்கள்
குணமடைந்ததாக சர்வேயில் தெரிவித்திருந்தனர்.

*நிரூபிக்கப்பட்ட உண்மை*
*********************

நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம்,
இதய நோய், பார்க்கின்சன் நோய்கள் கல்லீரல்,
நுரையீரல்நோய், புற்று நோய், பக்க வாதம்,
நரம்பு சம்பந்தமான நோய்கள், வெரிகோஸ்
வெயின்ஸ், வலிப்பு, மாதவிடாய்
தொல்லைகள், மார்பக நோய்கள், கருப்பை
தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை
போன்ற எண்ணிலடங்கா நோய்களுக்கும்
தொல்லைகளுக்கும் மிக எளிமையான
மருத்துவக் கோட்பாடு ஒன்றினை மனித
குலத்துக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள்.

இதனை அப்போதய சோவியத் ஒன்றியத்தைச்
சேர்ந்த அறிஞர், டாக்டர் மெத்கராஷ் என்பவர்
அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி
மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.

*வலி நிவாரணி*
************

தலைவலி என்பது கடுமையான
தொந்தரவினை தரக்கூடியது.

ஒற்றைத்தலைவலியானது கடுமையான
விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தினமும்
தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவ
ர்களை இந்த நோய்கள் தாக்குவதில்லை
என்கின்றனர் மருத்துவர்கள்.

மூட்டு வலி, முழங்கால் வலி, பல் மற்றும்
வாய் சம்பந்தமான நோய்கள், கண் காது மூக்கு
சம்பந்தமான நோய்கள், வயிறு குடல் நோய்கள்,
மலச்சிக்கல், மூலம், தும்மல், சளி, களைப்பு,
தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை,
ஒவ்வாமை (அலர்ஜி), போன்ற நோய்களை
உடனடியாக குணப்படுத்தியுள்ளது.

எப்படி செய்வது ஆயில் புல்லிங்
காலையில் எழுந்து, வெறும் வயிற்றில், பல்
துலக்கிய உடன் தூய்மை செய்யப்பட்ட
நல்லெண்ணெயோ, ஆலிவ் எண்ணெயையோ,
வேர்க்கடலை அல்லது சூரியகாந்தி
எண்ணெயையோ, இரண்டு தேக்கரண்டி (10
மில்லி லிட்டர்) வாயில் விட்டுக்கொள்ள
வேண்டும். பின்னர் ஓய்வாக அதனை வாய்
முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறும் கொப்பளிக்க
வேண்டும். இப்படியே தொடர்ந்து 15 முதல் 20
நிமிடங்கள் வரை கொப்பளியுங்கள். முதலில்
வாய் முழுவதும் வழு வழுவென்று
எண்ணெயின் தன்மை இருக்கும்.

ஆனால், சில
நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள்
எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில்
எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய்,
நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது
அதனை உமிழ்ந்து விடுங்கள்.

*விடியற்காலையே சிறந்தது*
***********************

உமிழ்ந்த திரவம் வெள்ளையாக இல்லாது
மஞ்சளாக இருந்தால், இன்னும் கொஞ்ச நேரம்
கொப்பளிக்க வேண்டும். மீண்டும் எண்ணெய்
ஊற்றி கொப்பளித்து விட்டு உமிழ்ந்ததும்
வாயைக் கழுவி நன்றாக சுத்தம் செய்ய
வேண்டும். இதனால், உடலுக்கு கேடு
விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம்
நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் முழுமையாக
வெளியேற்றப் படுகின்றன. இந்த எளிய
எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு
விடியற்காலை நேரமே சிறந்தது.

*நாளொன்றுக்கு மூன்று முறை*
***************************

எண்ணெயை கொப்பளிக்க முடிந்த எவரும்,
எந்த வயதினரும் இதனை செய்யலாம். இதற்கு
எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ
கிடையாது. எதாவது நோய்க்காக
மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும்
கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை
தொடர்ந்து உட்கொள்ளலாம்.

நோயின் தன்மை
குறைந்தால், மருந்தின் அளவையும்
மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக்
கொள்ளலாம்.

ஆயில் புல்லிங் செய்யும் போது
ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே
வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு
மாற்றிவிடலாம். இதைச் செய்யும் பொழுது
தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும்
பயப்பட வேண்டாம்.

வயிற்றுப்போக்கு அல்லது
வாந்தி தவிர வேறொன்றும் நேராது! விரைவில்
நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு
மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று
வயிற்றுடன் தான் இதைச் செய்ய
வேண்டுமென்பது விதி.

இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும்,
சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து
பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய்
வாட்டும் நோய் குணமாகப் போகிறது
என்பதின் அறிகுறி. இந்த எளிய வைத்திய
முறையை பின் பற்றுவதோடு, தூய காற்றை
சுவாசித்து, நிறைய நீர் பருகி, அளவான
சுகாதாரமான உணவுகளை உட்கொண்டு நல்ல
முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால், நம்
முன்னோர்கள் போன்று நோயற்ற வாழ்வு
வாழலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக