திங்கள், 21 ஆகஸ்ட், 2017

மெட்ராஸ்..நல்ல மெட்ராஸ்...சென்னைக்கு...இன்று 378வது பிறந்த தினம்...ஆகஸ்ட் 22.



மெட்ராஸ்..நல்ல மெட்ராஸ்...சென்னைக்கு...இன்று 378வது பிறந்த தினம்...ஆகஸ்ட் 22.

22/08/17 செவ்வாய்க்கிழமை!

மெட்ராஸ்..நல்ல மெட்ராஸ்...

சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும்.

இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூறப்பட்டு வருகிறது.

கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும்.

 வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.

தாமல் குறுநில மன்னர்கள் வன்னியர் வகுப்பினர் ஆவர்.

காஞ்சிபுரம் அருகில் உள்ள தாமல் கிராமத்தில் இப்போதும் பெரும்பான்மையாக இருப்பவர்கள் வன்னிய நாயக்கர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டி சொஸா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம்.

முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

2007ம் ஆண்டு நடந்த சென்னை தினத்தில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக