சனி, 15 ஜூலை, 2017

வீட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஓவியங்கள்



வீட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஓவியங்கள்

♥🌷 சிலர் ஓவியங்கள் மற்றும் கலைகளின் மேல் அதிக பற்று கொண்டவர்களாக இருப்பர். ஆகையால் வீடு மற்றும் அலுவலகங்களில் நிறைய ஓவியப்படங்களை வைத்திருப்பார்கள். ஆனால் சில ஓவியங்கள் வாஸ்து சாஸ்திரப்படி எதிர்மறை ஆற்றலை உண்டாக்கும். இந்த ஓவியங்கள் வெற்றிக்கு தடையாக அமைவதோடு பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.  அப்படி ஏதேனும் படங்களை வைத்திருந்தால் அகற்றுவது நல்லது. இந்த மாதிரியான ஓவியங்கள் கண்ணை கவரும்படியாக இருந்தாலும் எதிர்மறை ஆற்றலை உண்டாக்கும்.

♥🌷 நடரஜார் நடனம் புரிவது போல் சில கலைஞர்கள் அவர்களது வீடுகளில் வைத்திருப்பார்கள். சிவனின் இந்த நிலை அழிப்பதற்கானது என்பதால் இவற்றை வைத்திருப்பது நல்லதல்ல.

♥🌷 கப்பல் மூழ்குவது போன்ற ஓவியங்களை வீடு அலுவலகங்களில் வைத்திருந்தால், இது எதிர்மறை தாக்கத்தை அளிப்பதால் நமக்கு கிடைக்கும் வெற்றி வாய்ப்புகளும் தடையை ஏற்படுத்தும். ஆகவே இந்த ஓவியங்களை வீடுகள் மற்றும் அலுவலகங்களிலிருந்து அகற்றுவது நல்லது
.

♥🌷 நீர்வீழ்ச்சி போன்ற ஓவியங்கள் நம் கண்களை கவரும்படி அழகாக இருந்தாலும், இந்த மாதிரியான ஓவியங்கள் மற்றும் படங்களை வீட்டில் வைத்திருந்தால் அது வீட்டில் உள்ள அனைவருக்கும் எதிர்மறை ஆற்றலை கொடுத்து வறுமையை ஏற்படுத்தும்.



♥🌷 உக்கிரமான விலங்குகளான புலி, சிங்கம் போன்ற படங்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், இதனுடைய ஓவிய படங்களை வீட்டில் வைத்தால் தேவையில்லாத வீண் சண்டைகளும், வாக்குவாதங்களும் அதிகரிக்கும்.

♥🌷 தாஜ்மஹhல் பார்ப்பதற்கு அழகான கட்டிடம் மட்டுமல்லாமல் காதலின் நினைவுச் சின்னமாக இருந்தாலும், இது ஒரு கல்லறை என்பதால் இந்த ஓவியமானது வீட்டில் எதிர்மறை ஆற்றலை உண்டாக்கும்.

♥🌷 மகாபாரத கதாபாத்திரங்கள் கொண்ட ஓவியத்தை வீட்டில் வைத்திருந்தால், அதனால் மன அழுத்தம் அதிகரிப்பதோடு, வீட்டில் சண்டைகளும் அதிகரிக்கும்.

♥🌷 குழந்தைகள் அழுவது போல் படங்களை வீட்டில் வைத்திருந்தால், அது துரதிர்ஷ்டத்தை தான் கொண்டு வரும்.

♥🌷 வாஸ்து சாஸ்திரத்தின் படி, போர், பில்லி சு னியம் அல்லது பேய் போன்ற ஓவியங்கள், வீட்டில் உள்ளோரின் மனதை பாதிப்பதோடு, வீட்டில் வாக்குவாதத்தை அதிகரிக்கும்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக