திங்கள், 10 ஜூலை, 2017

பீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் டிப்ஸ்



பீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் டிப்ஸ்

பீரியட் பிரச்னை பெண்களைபாடாய்படுத்தும் பிரச்னைகளில்ஒன்றாக இருக்கிறது. நாட்கள்தள்ளி போவது, அதிகப்படியானஉதிரப்போக்கு, அதிகவலி  போன்றமாதவிடாய் பிரச்னைகளால் பலபெண்கள் அவதிப்படுகிறார்கள்.

கருப்பையில் அல்லதுஹார்மோனில் வில்லங்கம் ஏதாவதுஇருந்தால் அதை  உணர்த்தும்எச்சரிக்கையாக இந்த பிரச்னை இருப்பதால் இதற்கு உடனே தீர்வுகாண வேண்டியது அவசியம்என்கிறார் டாக்டர் சசிக்குமார்.

அவர்கூறியதாவது:

 ஒரு காலத்தில்பீரியட்ஸ் டைமில் ஓய்வும், சத்தானஉணவும் கிடைத்தது. இப்போதுஅப்படியில்லை. பிஸியானவாழ்க்கை முறையில் நல்ல ஓய்வுஎன்பது  கனவாகி விடுகிறது.

ஹார்மோன் சுழற்சியின்வெளிப்பாடு தான் மாதவிடாய். மாதம் ஒரு கருமுட்டை பெண்ணின் முட்டைப் பையில் இருந்து வெளிப்படும்.

இந்தக் கரு குழந்தையாக உருவாகிவிட்டால் பீரியட்ஸ் வராது. முட்டைஉயிராக மாறாமல், வெளிப்படுவதுதான் உதிரப்போக்கு.

இந்தசுழற்சிக்கு ஈஸ்ட்ரோ ஜென் மற்றும்புரோஜஸ்ட்ரான் ஆகிய 2ஹார்மோன்கள் தான் காரணம்.

வழக்கமாக 28 நாட்களுக்கு ஒருமுறை பீரியட்ஸ் ஏற்பட்டு மூன்றுமுதல் 5 நாட் கள் வரைஉதிரப்போக்கு இருக்கும். இந்தக்காலகட்டத்தில் பீரியட்ஸ்துவங்குவதற்கு முன்பு பெண்ணின்உடலில் சில அறிகுறிகள் தோன்றும்.

ஒருவிதமான டென்ஷன், கோபம்வருதல், மார்பகங் கள் கொஞ்சம்வீங்கி வலி போன்றவை ஏற்படலாம்.சில நேரங்களில் பீரியட்ஸ் லேட் ஆகி தாமதமான உதிரப்போக்கு, வழக்கத்தை விட குறைவாகப்போதல்,  அதிக உதிரப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்னைகள்ஏற்படலாம். இதில் அதிகஉதிரப்போக்கு முக்கியமான ஒன்று. கருப்பையில் ஏதாவது பைபர் கட்டிகள் அல்லது வேறு கட்டிகள்இருக்கும் பட்சத்தில் அதிகஉதிரப்போக்கு ஏற்படலாம்.

ஹார்மோன் அளவு மாறுபாடு,கருப்பையின் உட்புறச் சுவர் தடிமன் ஆவது போன்றவை இதற்குகாரணங்களாக இருக்கலாம்.இதெல்லாம் சரியாக இருந்தும் கூடசிலருக்கு அதிக உதிரப் போக்குமற்றும் கட்டியாக உதிரம்  போதல்போன்ற தொல்லைகள்இருக்கும்.உதிரப்போக்கு அதிகம்போதல், கட்டியாக உதிரம்வெளிப்படும் போது அதிகவலியிருந்தால் சாதாரணமாகஎண்ணி விடக்கூடாது.

உடனடியாக கர்ப்பவியல்  நிபுணர்களை அணுகிசிகிச்சை எடுக்க வேண்டும். ஸ்கேன்மற்றும் கருப்பைக்கானபரிசோதனைகள் மூலம் சரியானகாரணத்தை கண்டறியவேண்டியதும்  அவசியம். கருப்பைக்கட்டிகளை கண்டுகொள்ளாமல்விடும்போது அவை கேன்சர்கட்டிகளாக மாறும் அபாயம் உள்ளது.

எனவே உங்களின் அதிக உதிரப்போக்கு கேன்சருக்கானஅறிகுறியாகவும் இருக்கலாம்என்கிறார் டாக்டர் சசிக்குமார்....

மனரீதியான ஆறுதல்:

இளம் வயது முதல் மெனோபாஸ்வரை பெண்களின் பீரியட்ஸ்நேரத்தில் அவர்களது பிரச்னைகளை உடன் இருப்பவர்கள்புரிந்து கொள்ள வேண்டும்.

 பீரியட்சுக்கு முன்பு வரும் டென்ஷனை கணவர்கள் புரிந்து கொண்டுவிட்டுக் கொடுக்கலாம். உடல்சோர்வு, இடுப்பு வலி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழக்க மானவேலைகளில் இருந்து முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் சிறிது ஓய்வுதேவை.

 பீரியட்ஸ் நேரத்தில் வலி, எரிச்சல், வாந்தி உள்ளிட்டபிரச்னைகள்  உள்ள பெண்கள்சரியாக சாப்பிட மாட்டார்கள்.

இந்தநேரத்தில் உடன் இருப்பவர்கள்அவர்களை சத்தான உணவைசாப்பிட செய்வது அவசியம்.  ஒவ்வொரு பீரியட்ஸ் நேரத்திலும் சுகாதாரமான நாப்கின் பயன்படுத்தவேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் நாப்கினைமாற்றுவது அவசியம். நோய்தொற்று  ஏற்படுவதை தவிர்க்க வெதுவெதுப்பான தண்ணீரில்சிறிது கல் உப்பு சேர்த்து அடிக்கடிபிறப்புறுப்புகளை கழுவலாம். இதன்மூலம் அரிப்பு மற்றும் நோய்த்தொற்று உருவாவதை தடுக்கமுடியும்.



மாதவிடாய் தாமதமாவதற்கு காரணங்கள் பல

பீரியட்ஸ் எனப்படும் மாதவிடாய் தாமதாவது பலருக்கும் ஒரு பிரச்சினையாகவே இருக்கிறது. மாதா மாதம் சரியாக பீரியட்ஸ் வராமல் தவிக்கும் பெண்கள் பலர். ஆனால் அதற்கான சரியான காரணத்தை அறியாமல் கவலைப்படுவதால் பலன் ஏதும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
பீரியட்ஸ் வராமல் தாமதாவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் முக்கியமானது ஸ்டிரஸ் எனப்படும் மன அழுத்தம் மற்றும் பதட்டம். இதுதான் நமது உடலில் பல உபாதைகள் ஏற்பட முக்கியக் காரணியாக இருக்கிறது. தாமதமான பீரியட்ஸ் பிரச்சினைக்கும் இது முக்கியக் காரணமாக இருக்கிறதாம்.
மன அழுத்தம் அதிகரிக்கும் போது, பெண்களின் உடலில், ஜிஎன்ஆர்எச் எனப்படும் ஹார்மோனின் அளவு குறைகிறது. இந்த ஹார்மோன்தான், கர்ப்பம் தரிப்பதையும், பீரியட்ஸ் வருவதையும் வழிநடத்தும் முக்கிய ஹார்மோனாகும்.
எனவே இந்த ஹார்மோன் குறையும்போது பீரியட்ஸ் வருவது மட்டுமல்ல, கர்ப்பம் தரிப்பதும் கூட தாமதமாகும் என்பது முக்கியம். இதுபோன்ற ஹார்மோன் குறைபாடு இருக்கிறதா என்பதை அறிய டாக்டர்களை அணுகி பரிசோதித்துக் கொள்வது நல்லது.
சில பெண்களுக்கு பீரியட்ஸ் வரவிருக்கும் நாளுக்கு முன்பாக திடீரென காய்ச்சல், சளி, இருமல் ஆகிய பிரச்சினை ஏற்படலாம். அப்படி வந்தால் பீரியட்ஸ் தாமதமாகும்.அதேசமயம், இந்த சிறிய உடல் நலக்குறைபாடுகள் குறுகிய காலமே இருக்கும்.அது சரியானவுடன் பீரியட்ஸ் முறையாக நடைபெறக் கூடும். ஒருவேளை அப்படியும் தாமதமானால் டாக்டர்களை கலந்து ஆலோசிப்பது நல்லது.
பணி நேரங்களில் ஏற்படும் திடீர் மாற்றங்களும் பீரியட்ஸை டிலே செய்யும் வல்லமை படைத்தவை. குறிப்பாக தொடர்ந்து பகல் நேரத்தில் பணியாற்றி வரும் பெண்களுக்கு திடீரென இரவுப் பணி போடும்போதும் அவர்களது உடலில் மாற்றங்கள் ஏற்படும். இது பீரியட்ஸை தாமதப்படுத்தும்.
அதேபோல் வீட்டில் திருமணம் போன்ற விழாக்கள் திடீரென குறுக்கிடும்போது ஓய்வில்லாமல் பணியாற்ற நேரிடும்.அப்போது உடலின் ரிதம் மாறி அதனால் பீரியட்ஸ் தாமதமாகலாம். உங்களது உடல் வழக்கமான நிலைக்கும், இயல்புக்கும் திரும்பும்போது பீரியட்ஸும் சகஜ நிலையை அடையும்.
குழந்தைப் பிறப்பைத் தடுக்க பயன்படுத்தும் மாத்திரைகள், மாதவிடாயைப் பாதிக்கக் கூடிய வகையிலான மருந்து, மாத்திரைகளாலும் கூட பீரியட்ஸ் தாமதமாகும். இதற்கு டாக்டரிடம் அறிவுரை பெறுவது நல்லது. அதிக எடை கொண்டவர்களுக்கும், அதேபோல மிகவும் குறைந்த எடை கொண்டவர்களுக்கும் கூட பீரியட்ஸ், தாமதம் தவிர்க்க முடியாதது.
சீரான, தொடர்ந்த உடற்பயிற்சியும், சத்தான சாப்பாடும் இவர்களுக்கு அவசியம். உடலில் அதைக எடை கூடாமலும், கொழுப்புச் சத்து சேர்ந்து விடாமலும் கவனமாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம். அதேசமயம் நமது உடலில் தேவைக்கேற்ற கொழுப்புச் சத்து இல்லாவிட்டாலும் கூட சிக்கல்தானாம். தேவையான கொழுப்புச் சத்து இல்லாமல் போனால் சுத்தமாக பீரியட்ஸ் வராமல் நின்று விடுமாம். இதற்குப் பெயர் அமீனோரியா என்று பெயர்.
எனவே ஆரோக்கியமான உடலும், எடையும் இருப்பதை உறுதி செய்வது பெண்களுக்கு நல்லது. மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிற்கும் பருவத்தை நெருங்கி வரும் பெண்களுக்கு பீரியட்ஸ் முறையாக இருக்காது. சில சமயம் லேசானதாக இருக்கும். சில சமயம் உதிரப் போக்கு அதிகமாக இருக்கும். சிலருக்கு தாமதமாகும். சிலருக்கு நீண்ட நாட்கள் கூட தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். இதற்காகப் பயந்து விடத் தேவையில்லை. டாக்டர்களின் அறிவுரைப்படி நடந்து கொள்ளவும்.
ஹார்மோன் சமச்சீரின்மையும் பீரியட்ஸ் குறைபாட்டுக்கு ஒரு காரணம். பிசிஓடி எனப்படும் பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் உள்ள பெண்களுக்கு பீரியட்ஸ் முறையாக வராது. தாமதமாக வரும், அதிக உதிரப்போக்கு சில சமயங்களில் இருக்கும். அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டால் இதை ஓரளவு சரி செய்யலாம்.
வயதுக்கு வரும் டீன் ஏஜ் பெண்களில் பலருக்கும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு பீரியட்ஸ் முறையாக இருக்காது. இதற்காக அவர்கள் பயந்து விடத் தேவையில்லை. காரணம், அவர்களது உடலில் ஹார்மோன்கள் முறையாக வளர்ச்சி அடைந்திருக்காது. காலப் போக்கில் ஹார்மோன் வளர்ச்சி சரியானவுடன், பீரியட்ஸும் சரியாகி விடும்.
கடைசியாக, அதேசமயம், முக்கியமானது, பீரியட்ஸ் தாமதத்திற்கு மேற்கண்ட காரணங்கள்தான் உள்ளன என்று அர்த்தம் இல்லை. கர்ப்பம் தரித்தாலும் கூட பீரியட்ஸ் வராமல் போகலாம். எனவே அந்த டெஸ்ட்டையும் செய்து பார்த்து விடுவது நல்லது.



மாதவிலக்கு நாட்களில் வலி ஏன்?

மாதத்தில் அந்த 3 நாட்கள் மட்டும் வராமலே இருக்காதா என மிரட்சி கொள்கிற பெண்கள் பலர். காரணம், வாழ்க்கையையே வெறுக்கச் செய்கிற அந்த நாட்களின் வலி. மாதவிலக்குக்கு 10-15 நாட்களுக்கு முன்பே ஆரம்பிக்கிற அந்த வலி, மாதவிலக்கின் போது அதிகமாகி, முடிகிற வரை தொடர்வதன் பின்னணி, தீர்வுகள் என எல்லாவற்றையும் பற்றிப் பேசுகிறார் பொது மருத்துவர் ரிபப்ளிகா.
‘‘மாதவிடாய்க்கு முன் கர்ப்பப் பையில் உள்ள ரத்தக் குழாய்கள் திறந்து கொள்ளும். ரத்தப் போக்கு ஆரம்பமாகும். 3 முதல் 5 நாட் களில் மாதவிடாய் முடிந்ததும், கர்ப்பப் பை தசைகள் சுருங்கி, ரத்தக் குழாய்கள் மூடிக் கொள்ளும். இவை எல்லாவற்றையும் கட்டுப்ப டுத்துவது ஹார்மோன்கள். அந்த ஹார்மோன்கள் சரியில்லை என்றால் அடி வயிற்று வலி வரும். அடுத்து கர்ப்பப் பையில் கட்டிகள் இருந்தாலும் வலி வரும். கட்டி என்றதும் புற்றுநோய் கட்டியோ என்று பயப்பட வேண்டாம். கர்ப்பப் பையின் உள்ளே இருக்கும் தசையானது இறுகியிருக்கும். கர்ப்பப் பையானது சுருங்க, அந்தத் தசைகள் மென்மையாக இருக்க வேண்டும்.
அதே போல கட்டி எந்தப் பக்கம் இருக்கிறதோ, அதைப் பொறுத்து வலியின் இடமும் மாறும். கீழே இருந்தால் அடிவயிற்றிலும், கர்ப் பப் பையின் பின்புறம் இருந்தால் முதுகுவலியும் இருக்கலாம். அடினோமையோசிஸ் என்கிற பிரச்னை இருந்தாலும் வலிக்கும். கர்ப்பப் பை புண்ணானதன்  விளைவாக, மாதவிலக்கு நாட்களில் உருண்டு, புரண்டு துடிக்கிற அளவுக்கோ, மாதா மாதம் பிரசவ வலியை மிஞ் சும் அளவுக்கோ வலிக்கும். அடிக்கடி வடி அண்ட் சி செய்கிறவர்களுக்கும், வருடக் கணக்கில் காப்பர் டி உபயோகிப்பவர்களுக்கும்  அடினோமையோசிஸ் வரலாம்.
பூப்பெய்திய புதிதில் முதல் ஒரு வருடத்துக்கு அதிக வலி இருப்பது சகஜம். அதையும் தாண்டித் தொடர்ந்தாலோ, கட்டிக் கட்டியான ரத்தப் போக்கு இருந்தாலோ கர்ப்பப் பையில் பிரச்னைகள் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். புதிதாகத் திருமணமானவர்களுக்கு முதல் சில மாதங்கள் அடி வயிற்று வலி இருப்பது சகஜம். அவர்களுக்கு ‘டார்ச்’ என்கிற இன்ஃபெக்ஷன் காரணமாக இருக்கலாம். வயிற்று வலியுடன், காய்ச்சலும் சேர்ந்து கொள்ளும். கர்ப்பம் தரிப்பதில் பிரச்னை இருக்கலாம். டார்ச் என்பது 2 - 3 இன்ஃபெக் ஷன்கள் சேர்ந்தது என்பதால் வலி இருப்பவர்கள் மருத்துவரைப் பார்த்து அதற்கான மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு மாதவிடாய்க்கும், இன்னொரு மாதவிடாய்க்கும் இடையிலான 13 முதல் 15வது நாளில் வயிற்று வலி வரும். அது கருத்தரிக்கும் நேரம் என்பதற்கான அறிகுறி. அதுவே சினைப்பையில் கட்டி உருவாகி, பொறுக்க முடியாத அளவுக்கு வலி இருந்தால் மருத்துவரைப் பார்க்க வேண்டும். மெனோபாஸ் வயதில் இருப்போருக்கு வரும் வலி அலட்சியப்படுத்தக் கூடாது. கர்ப்பப் பை கட்டியின் விளைவா கவும், அது புற்று நோயாக மாறியதன் விளைவாகவும் அந்த வலி ஏற்பட்டிருக்கலாம். பாப் ஸ்மியர் சோதனையின் மூலம் அதைக் கண்டுபிடிக்கலாம்.
மாதவிடாய் காலங்களில் ஏற்படுகிற வலிக்கு, உடனே நீங்களாக வலி நிவாரண மாத்திரை வாங்கி உட்கொள்ளக்கூடாது. நிறைய திரவ உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். சுத்தமும், சுகாதாரமும் முக்கியம். ரத்த சோகை இருந்தால் சரிப்படுத்தப்பட வேண்டும். நார்ச்சத்துள்ள காய்கறிகள்  மற்றும் பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் கர்ப்பப்பை லேசாக இருப்பது போல உணரலாம்...’’ என் கிறார் பொது மருத்துவர் ரிபப்ளிகா.



மாதவிடாய் வலி குறைக்கும் மருந்துகள்

* முருங்கை ஈர்க்கு 2 கைப்பிடி அளவு எடுத்துத் தண்ணீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டித் தேவையான உப்பும் சேர்த்து, சூப் செய்து பருகிவரலாம், வயிற்றுவலி குறையும்.
* முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் மிக்சியில் போட்டு லேசாகத் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட, வயிற்றுவலி குறையும்.
* முருங்கைக் கீரையுடன் சிறிது கறுப்பு எள் சேர்த்துக் கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால், வலி குறையும்.
* உலர்ந்த புதினா இலையுடன் ஒரு ஸ்பூன் கறுப்பு எள் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், வலி குணமாகும்.
* கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் வலி குறையும்.
* மாதவிலக்கு வந்த மூன்றாம் நாள் காலை மலைவேம்பு சாறு 1/2 கப் குடிக்கவும்.
* சாதிக்காய், திப்பிலி, சீரகம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும்.
* ஓமம், கிராம்பு இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும்.
* எள் விதையை அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு எடுத்து நீரில் கலந்து சாப்பிடவும்.
* ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாறுடன், சிறிது பெருங்காயம் சேர்த்து மோரில் கலந்து சாப்பிட, வலி குறையும்.




மாதவிடாய் நிற்கும் காலத்தில் எடை அதிகரிப்பும் அதை தடுக்கும் வழிமுறைகளும்...



பெரும்பாலான பெண்களுக்கு மாத­விடாய் நிற்கும் காலங்களிலும் அதைத் தொடர்ந்து மாதவிடாய் முற்றாக நின்ற பின்னரும் எடை அதிகரிக்கவே செய்கி­றது. இடை அழகியாக இருந்தவர்கள் சள்ளை தொங்கும் குண்டுப் பீப்பாய்களாக மாறு­வார்கள். இடுப்பில் மட்டுமின்றி வயிறும் பெரிதாகும். அன்ன நடை நடந்த பெண்கள் ஆயாச நடையில் அரங்கி அரங்கி நடப்­பார்கள். இது உங்களுக்கும் வரவேண்­டுமா?
மாதவிடாய் பொதுவாக 50ற்கு சற்றுப் முன் பின்னராக நின்று போகிறது. 50 முதல் 59 வயதுவரையான பெண்களில் 30 சதவிகிதமானவர்களின் எடை அதிகரிக்கி­றது. சாதாரணமான அதிகரிப்பு உள்ளவர்க­ளாக (Overweight) மட்டுமின்றி அதீத எடை (Obesity) உள்ளவர்களாகவும் அவ் வயதுப் பெண்கள் மாறுவது அவதானிக்கப்பட்டுள்­ளது.
அவ்வாறாயின் மாதவிடாய் நின்ற பெண்­களில் எடை அதிகரிப்பது நியதியா என்று கேட்டால். இல்லை என்றே சொல்லலாம். போஷாக்கான உணவு முறைகளையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை­யையும் கடைப்பிடித்தால் அந்நேரத்திலும் எடை அதிகரிப்பைத் தடுக்க முடியும்.
ஏன் அதிகரிக்கிறது
மாதவிடாய் நிற்கும் போது பெண்களில் உடலிலுள்ள பெண் ஹோர்மோனான ஈஸ்ட்­ரோஜன் அளவுகளில் வீழ்ச்சி ஏற்படுகிறது. இந்த மாற்றமானது உடலின் இயக்கத்தின் வேகத்தைக் குறைத்து சோம்பலைக் கொண்டு வருவதுடன் அதிகமாக உண்­ணவும் வைக்கிறது என எலிகளில் செய்யப்­பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது. இது பெண்களுக்கும் ஏற்புடையதாக இருக்­கலாம்.
அதேபோல ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும்­போது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் தாழ்ச்சியுறுகிறதாம்.
மாதவிடாய் நின்ற பெண்களின் சில பிரச்சினைகளுக்காக ஈஸ்ட்ரோஜன் மாத்தி­ரைகளை மருந்தாகக் கொடுக்கும்போது அவர்களது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிப்பது அவதானிக்கப்பட்டுள்­ளது. அத்துடன் அத்தகைய ஹோர்மோன் மாற்றம் ஏற்படும்போது உடலானது மாப்­பொருளையும் குளுக்கோசையும் பயன்­படுத்தும் ஆற்றல் குறைகிறது. இதனால் அவை உடலில் கொழுப்பாக சேமிக்கப்பட்டு உடை அதிகரிக்கிறது என்கிறார்கள்.
மாதவிடாய் நிற்கும் கால எடை அதிகரிப்­பிற்கு ஹோர்மோன் மாற்றங்கள் ஒரு காரண­மாகச் சொல்லப்பட்டபோதும் அது தவிர்ந்த வேறு பல காரணங்களும் இருக்கின்றன. வயதாகும்போது உடல் உழைப்புச் செயற்­பாட்டிலும் வாழ்க்கை முறையிலும் ஏற்­படும் மாற்றங்கள் முக்கியமானவை.
உதாரணமாக வயதாகும்போது தசை­களின் திணிவு குறைகிறது. அதே நேரம் அதிலுள்ள கொழுப்பின் அளவு அதிகரிக்­கிறது. தசைத் திணிவு குறையும்­போது அவற்றால் முன்னரைப் போல கலோரிச் சத்தை பயன்படுத்த முடிவ­தில்லை. ஆனால் இவை தவிர்க்க முடியாத விடயங்கள் அல்ல. உட்கொள்ளும் உணவைச் சற்றுக் குறைத்து உடற் செயற்பாட்டை அதி­கரிப்பதன் மூலம் எடை ஏறுவதை நிச்ச­யமாகக் குறைத்துக் கொள்ள முடியும்.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால் இள வயதில் உட்கொண்டது போன்ற அளவு­களில் உணவுகளைத் தொடர்ந்து உட்கொண்­டபடி உடலுக்கு போதியளவு வேலையைக் கொடுக் காவிட்டால் எடை அதிகரிக்கவே செய்யும்.
பரம்பரை அம்சங்களும் அந்நேர எடை அதிக­ரிப்பிற்கு காரணமாகலாம். உதாரணமாக உங்கள் அம்மா அல்லது அப்பா தொந்தியும் சள்ளையுமான பருத்த உடல்வாகு உள்ளவ­ரானால் நீங்களும் அவ்வாறு ஆவதற்கான சாத்தியம் அதிகமே.
மன உளைச்சல்களும் காரணமாகலாம். அந்த வயதில் பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிய நேரலாம், கணவன் மரணமடையலாம், மணமுறிவு ஏற்படலாம். இத்தகைய சம்பவங்­களால் மன உளைச்சல்கள் ஏற்படலாம். அதன் காரணமாக ஒருவர் தனது உணவு முறையில் அக்கறை செலுத்தாது விடு­­வார்கள். மனம் தளர்ந்து சுறுசுறுப்பாக இயங்காது சோர்ந்து கிடக்கவும் செய்வர். இவற்றால் எடை அதிகரிக்கும்.
60 சதவிகிதமானவர்கள் தங்கள் முது­மையில் போதுமான உடற்பயிற்சி செய்வ­தில்லை என அறிக்கைகள் கூறுகின்றன. தொடர்ந்து வயது அதிகரிக்கும்போது உடல் இயக்கத்தில் குறைபாடும் அதிகரிக்­கிறது. இதைத் தவிர்த்து உள பூர்வமாக உடற் பயிற்சிகளில் ஈடுபடுவது அவசிய­மாகும்.
எடை அதிகரிப்பால்
ஏற்படும் பாதிப்புகள் எவை
உடல் எடையானது தேவைக்கு அதிகமாக அதிகரிக்கும் போது உடலில் பல்வேறு சிக்கல்களும் நோய்களும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
* பிரஸர் அதிகரிக்கும்,
* நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியம் அதிகமாகும்.
* மாரடைப்பு நோய்க்கான சாத்தியமும் அதிகமாகும்.
* அதைபோல மூட்டு வருத்தங்களுக்கான சாத்தியம் அதிகரிக்கும்.
குண்டான பலர் முழங்கால் மூட்டில் தேய்வு வீக்கம் என அவதிப்படுவதை நீங்­களே அவதானித்திருப்பீர்கள்.
எடை அதிகரிப்பானது கொழுப்பு அதிக­ரிப்பதோடு தொடர்புடையதுதானே. இந்த கொழுப்பானது வயிற்றறைப் பகுதியில் அதிகமாகவே சேரும். அதனால் வயிறு பானைபோலாகும். வயிற்றறைச் சுற்றள­வானது 35 அங்குலத்திற்கு அதிகமானால் அது மேலே கூறியது போன்ற பலவித ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பது தெரிந்­ததே. எனவே அதைத் தவிர்க்க வேண்டும்.
எடை அதிகரிப்பதைத் தடுப்பது எப்படி?
எடை அதிகரிப்தைத் எடையைக் குறைப்ப­தற்கு மாயாஜால முறைகள் எதுவும் கிடையாது. மருத்துவர்கள் கிறுக்கித்­தரும் மாத்திரைகளோ, ஊடகங்களில் விளம்­பரப்படுத்தும் மருந்துகளோ, கிறீன் ரீயோ, கொள்ளுச் சாப்பிடுவது போன்றவையோ மட்டும் உதவப் போவதில்லை.
உங்கள் முயற்சிதான் அதிமுக்கிய விட­யாகும்.
சோர்ந்திருக்காதீர்கள்
கூடியவளவு உடல் உழைப்பில் ஈடுப­டுங்கள். சோர்ந்து கிடக்காதீர்கள். நடந்தால் கால் உளைவு கை உளைவு என்று சாட்டுச் சொல்லாதீர்கள். முயற்சியில் இறங்­குங்கள். அந்த வயதிற்கு ஏற்றது நடைப் பயிற்சி. வாரத்தின் பெரும்பாலான நாட்­களில் 30 நிமிடங்களுக்கு குறையாது கை கால்களை விசுக்கி வீசி நடவுங்கள். துள்ளல் நடை நீச்சல் பயிற்சிகளும் நல்லது.
வீட்டுத் தோட்டம் செய்யுங்கள். மாடிப்படி­களில் ஏறி இறங்குங்கள்.
இவற்றைத் தவிர நாளாந்த வீட்டு வேலைக­ளிலும் ஈடுபடுங்கள். கூட்டுங்கள் கழு­வுங்கள், தூசு தட்டுங்கள்.
உணவில் கவனம் எடுங்கள்
சாப்பிடுங்கள் பட்டினி கிடக்காதீர்கள். உணவைத் தவிர்க்காதீர்கள்.

ஆனால் உணவின் அளவிலும் எத்தகை உணவு உண்பது என்பதிலும் மாற்றங்கள் செய்யுங்கள். எண்ணெய், பொரியல், கொழுப்பு போன்றவற்றை மிகவும் குறை­யுங்கள். சோறு, இடியப்பம், புட்டு, பாண் போன்ற மாப்பொருள் உணவுகளை அளவோடு உண்ணுங்கள். அல்லது சற்றுக் குறையும். அதற்கான மொத்த உணவின் அளவைக் குறைக்க வேண்டியதில்லை. காய்கறிகள் பழவகைகளை அதிகம் சேருங்கள்.
அதே போல அருந்தும் பானங்களும் அதிக கலோரி வலு அற்றதாக இருக்க வேண்டும். மென்பானங்கள், இனிப்பூட்டிய பழச் சாறுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். நாளாந்த அருந்தும் தேநீர் கோப்பி போன்றவற்றிக்கு சேர்க்கும் சீனியின் அளவையும் குறைப்பது அவசிய மாகும்.
தண்ணீர், மோர். அதிகம் இனிப்பு சேர்க்காத உடன் பிழிந்த பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை கூடியளவு உப யோகியுங்கள்.
இவற்றைக் கடைப்பிடித்தால் மாதவிடாய் நின்ற பின்னரும் மோகவைக்கும் குமரி­போல உங்கள் உடல் வனப்பைப் பேணிக்கொள்­ளலாம்.




பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் உதிரப் போக்குக்கு சிறப்பான தீர்வு..

பெண்களுக்கு மாதவிடாய்க் கால ங்களில் ஏற்படும் உதிரப்போக்குக்கு சித்த மருத்துவ த்தில் சிறப்பான தீர்வு உண்டு அதைப்பற்றி இங்கு காண்போம்.
பெண்களுக்கு மாதவிடாய்க் கால ங்களில் ஏற்படும் உதிரப்போக்கு, உரிய அளவைவிட அதிகமாகவும், அதிக நாட்களுக்கும் இருந் தால் அதை அதி உதிரப்போக்கு எனகிறோ ம்.
காரணங்கள்:
ரத்தம் உறைவதில் ஏற்படும் குறைபாடுக ளினாலும், ரத்தசோகை, தைராய்டு நோய் கள், காசநோய், கருப்பைக்கட்டிகள், சினை ப்பை நீர்க்கட்டிகள், கர்ப்பத்தடை மாத்தி ரைகள் உட்கொண்டதன் பின் விளைவுகள் போன்ற காரணங்களாலும் அதிக உதிரப் போக்கு ஏற் படும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
அத்திப் பட்டையை மோர் சேர்த்து இடித்து ச் சாறு எடுத்து 30 மி.லி. அருந்தலாம்.
அத்திப்பால் ஐந்து சொட்டு எடுத்து வெண் ணெய் சேர்த்து உண்ணலாம்.
குங்கிலியத்தை நெய்விட்டுப் பொரித்து நீர் சேர்த்துக் குழைத்து, கால்ஸ்பூன் உண்ண லாம்.
இளம் வாழைப்பூவை அவித்து 30 மில் லி சாறெடுத்துத் தேன் கலந்து உண்ண லாம்.
இத்தியின் பிஞ்சை அரைத்து, கொட்டைப் பாக்கு அளவு உண்ணலா ம்.
தொட்டாற்சிணுங்கியின் இலைச் சாற்றை 15 மி.லி. அருந்தலாம்.
நாவல் பட்டை, ஆவாரைப் பட்டை சம அள வு எடுத்து நான்கு பங்கு நீர் சேர்த்து, ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.
கால்ஸ்பூன்லவங்கப் பட்டைப்பொடியை எடுத்துப்பாலில் கலந்து உண்ணலாம்.
கவிழ்தும்பை இலையைக் கைப்பிடி அளவு எடுத்துத் தேன் சேர்த்து, வதக்கி நீர் சேர்த் துக் காய்ச்சி அருந்தலாம்.
அசோகப் பட்டையை இடித்துச் சாறு எடுத்து 30 மி.லி. அருந்தலாம்.
கட்டுக்கொடியின் இலைச்சாற்றை ஒரு டேபிள்ஸ்பூன் அருந்தலாம்.
முள்இலவுப் பட்டை, தாமரைக் கிழங்கு, செம்பருத்தி வேர் இவற்றி ன் பொடியைக் கலந்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து உண்ணலாம்.
மந்தாரைப் பூ மொக்கு ஐந்து எடுத்து ஒரு டம்ளர் நீர் சேர்த்துக் காய் ச்சிக் கால் டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.
அரசம்பட்டை, ஆலம்பட்டை சம அளவு எடுத்து சிதைத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்தலாம்.
மாங்கொட்டைப் பருப்பின் பொடியை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து உண்ண லாம்.
நிலப்பூசணிக் கிழங்கின் பொடியுடன் சர் க்கரை, வெண்ணெய்ச் சேர்த்துக் கிண்டி நெல்லிக்காய் அளவு உண்ணலாம்.
வாலுளுவைப் பொடியை இரண்டு கிராம் எடுத்துத் தேனில் கலந்து உண்ணலாம்.
திப்பிலி ஐந்து பங்கு, தேற்றான் மூன்று பங்குசேர்த்து அரைத்து அதில் நான்கு கிராம் நீராகாரத்தில் கலந்து, காலையி ல் குடிக்கலாம்.
மாம்பிசின், விளாம்பிசின் பொடி சம அள வு எடுத்து, அதில் கால் ஸ்பூன் மோரில் கலந்து உண்ணலாம்.
கீழாநெல்லியின் வேர்ப்பொடியை அரை ஸ்பூன் எடுத்து நீராகாரத் துடன் கலந்து உண்ணலாம்.
சேர்க்க வேண்டியவை:
துவர்ப்புச் சுவை உள்ள உணவுகள், அத்தி ப் பழம், பேரீச்சை, பால், தயிர், காளான், சிகப்புத் தண்டுக்கீரை, ஈரல்.
நீக்க வேண்டியவை:
இஞ்சி, பூண்டு, காயம், அன்னாசி, எள், பப்பாளி, நல்லெண்ணெய்.



மாதவிலக்கு பிரச்னை தீர...
* மாதவிலக்கு பிரச்னையால் அதிக உதிரபோக்கு உள்ளவர்கள், மாம்பருப்பை, பாலுடன் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் குணமாகும்.
* மாதுளம் பழத்தோலை அரைத்து, புளித்த மோரில் கலந்து சாப்பிட்டால் மாத விலக்கு பிரச்னை தீரும்.
* கொய்யா இலை, மாதுளம் இலை, மாந்தளிர் இலை மூன்றையும், சம அளவு எடுத்து, ஒன்றாக சாப்பிட்டால் மாத விலக்கு பிரச்னை தீரும்.
* மாதவிலக்கு சிக்கல் தீர, காட்டு கருணைக் கிழங்கை பசும்பால் சேர்த்து அரைத்து, ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால், மாதவிலக்கு உண்டாகும்.
* முருங்கை கீரையுடன், மிளகு, பூண்டு, வெங்காயம் சேர்த்து, சூப் செய்து ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் மாதவிலக்கு உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக