வெள்ளி, 8 மே, 2020

ஒரு வாரத்துக்கான ஆரோக்கியத்தை ஒரேநாளில் எடுத்துக்க முடியும்! எப்படி?

ஒரு வாரத்துக்கான ஆரோக்கியத்தை ஒரேநாளில் எடுத்துக்க முடியும்! எப்படி?


    ஒரு வாரத்துக்கான ஆரோக்கியத்தை ஒரே நாளில் எடுத்துக்க முடியும்!  எப்படி? 


        வாரம் முழுவதும் ஏசி அறையில் அதிகபட்சம் நாளை, நேரத்தை ஆபீஸ்லேயே  கழிக்க வேண்டியதாக இருக்கு.  இந்தக் காலத்தில். உடம்பு ஆரோக்கியத்தின் மேல் கவனம் செலுத்துவதில்லை. 
பசிக்கும் மட்டும்தான் சாப்பிடும் சூழ்நிலை  தான் இருக்கு. இப்படியே  போய் என் உடல் எடையை ஏறியது தான் மிச்சமே தவிர எந்த உடற்பயிற்சியும் இல்லை என்றும் ஹெல்தி டயட் கடைபிடிக்க முடியவில்லை என்று ஒரே கவலையா? 

   சரி இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் அட்லீஸ்ட் வாரத்தில் ஒரு நாளாவது வீட்டு சமையலில் கவனம் செலுத்தி அன்றைய தினத்திலேயே ஒரு வாரத்திற்கான ஆரோக்கியம் டயட் பெற்றுவிடலாம். 

அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன். 
முதலிலும் வாரத்துல ஒரு நாள், அந்த ஒரு நாளைக்கு முந்தைய நாள் இரவு ஆறு அத்திப்பழம் அல்லது உலர்ந்த அத்திப் பழங்களை மற்றும் இரண்டு பேரிச்சம் பழத்தையும்  பாலுடன்சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து குடித்து விட்டு பின்பு தூங்க செல்லவும்.
    காலையில் எழுந்த பிறகு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் கல்லுப்பு, சிறிது எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து நிதானமாக குடிக்க வேண்டும். இது இறந்த செல்களை புதுப்பிக்க உதவும். 

    பின்பு அரை மணி நேரம் விட்டு கொஞ்சம் கருவேப்பிலை, 2 பேரிச்சம்பழம் போட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி குடிக்கவும். இது ரத்தத்தை உற்பத்தி செய்யும். 

பின்பு இளம் சூடான காலை உணவானது இட்லி, தோசை இன்னும் வேறு சைவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 
   பின்பு பகல் 12 மணி அளவில் கேரட், பீன்ஸ், கொத்துமல்லி இலை, கருவேப்பிலை, புதினா, பீட்ரூட், துளசி இலை மற்றும் வெள்ளை பூசணிக்காய் இவற்றையெல்லாம் சிறிதளவு எடுத்துக்கொண்டு நன்கு வேக வைக்க வேண்டும். பின்பு அதன் நீரை எடுத்து அதனுடன் ருசிக்கேற்ப உப்பு கொஞ்சம் மிளகு சேர்த்து ஒரு ஸ்பூன் வெண்ணை போட்டு நன்கு கலந்து விடவேண்டும். இது ஒரு காய் சூப்ஆகும். சூப்பை இளம் சூட்டில் மெல்ல ரசித்து ருசித்து குடிக்க வேண்டும். இது உடலை புத்துணர்ச்சி பெறச் செய்து அடுத்த ஒரு வாரத்திற்கு தேவையான சத்தை கொடுக்கும். 

     இந்த நாளில் மட்டும் 10 அல்லது 12 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். 

      பின்பு மதியம் 2 மணிக்கு சைவம் அல்லது அசைவம் இரண்டில் எது வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம். அதில் வேகவைத்த முட்டை ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும். சைவம் சாப்பிடுபவர்கள் வேக வைத்த முட்டை 1 எடுத்துக்கொள்ளலாம் . 

  
   சாயங்காலம் 4 மணி அளவில் ஹெர்பல் டீ எடுத்துக்கொள்ளுங்கள். அது எப்படி செய்வது என்றால் நீரில் கொஞ்சம் டீ பவுடர், சிறிது கொத்தமல்லி விதை, ஒரு கிராம்பு, இரண்டு மிளகு, ஒரு துண்டு இஞ்சி, சிறிது சோம்பு போட்டு நன்றாக வேகவைத்து பால் சேர்க்காமல் சிறிது நாட்டுச் சர்க்கரை சேர்த்து குடிக்க வேண்டும். 

   இரவு அரை வயிறு அளவு மட்டும் எது வேண்டுமானாலும் சாப்பிடலாம். இரவு 9 மணியளவில் கொஞ்சம் துண்டுகளாக்கிய பழங்களை சாப்பிடலாம். அன்றைய தினம் முழுவதும் காபி,  டீ, பால், பாலில் செய்த பொருட்கள் எதையும் சாப்பிட வேண்டாம். கடைசியாக தூங்குவதற்கு முன் கண்டிப்பாக இரண்டு டம்ளர் நீர் குடிக்க வேண்டும். 

     இவ்வாறாக வாரம் ஒருமுறை செய்து வந்தால் போதுமானது. மற்ற நாட்களில் எடுத்துக்கொள்ளாத ஊட்டச்சத்து இந்த ஒரு நாளிலே பெற்றுக்கொள்ளலாம். 

     மற்ற நாட்களில் நெய் அரை ஸ்பூன் மற்றும் சிறிதளவு எண்ணையில் செய்த உணவு வகைகளை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். 

  அலுவலகத்திற்கு செல்லும் போது உலர்ந்த திராட்சை, பேரிச்சம்பழம் போன்ற ஏதேனும் சில உலர்ந்த பழங்களை வைத்திருந்து டீ குடிக்கும் நேரத்தில் அல்லது வீட்டிற்கு செல்லும் நேரத்தில் கொஞ்சம் சாப்பிடுங்கள். இது உங்களது எனர்ஜி  வீணாகாமலும், பசியால் வயிறு அடைத்தாற் போல் ஏற்படும் உணர்வுகளை சீர்செய்யும். உங்களுடைய உணவு பழக்கங்களை நல்லபடியாக வைக்கும். 

    ஏசி அறையில் இருந்து நாள் முழுவதும் வேலை பார்ப்பவர்கள் தாகம் எடுப்பதில்லை என்றாலும் சிறிதளவு தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். அப்பொழுதுதான் சிறுநீர் கடுப்பு ஏற்படாது. 

   ஆரோக்கியத்தில் சிறிது கவனம் செலுத்தி அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தாலே போதும், உங்களது உள்மனது, மூளையும் அதற்கான வாய்ப்புகளை தானாகவே தேடித்தரும். 

  இந்த டயட்டை கடைப்பிடியுங்கள். உங்களுக்கு வாரம் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும். 


இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க. 

நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக