சனி, 23 மே, 2020

நம் நாட்டின் கோரொனா எண்ணிக்கை 100 இருந்த போது மக்களிடமிருந்த பயம், இன்று 1,00,000 ஐ தாண்டிய போது இல்லையே..

நம் நாட்டின் கோரொனா எண்ணிக்கை 100 இருந்த போது மக்களிடமிருந்த பயம்,   இன்று 1,00,000 ஐ தாண்டிய போது இல்லையே..

மனிதனின் உளவியல் ரீதியாக பார்த்தால் இதற்கு விடை கிடைக்கும். "குப்ளர் ரோஸ் மாடல் " என்று ஒரு தத்துவம் உள்ளது. அதாவது, மனிதனுக்கு எதேனும் துக்க நிகழ்வு, இயற்கை பேரிடர், விபத்து  போன்றவை நடக்கும்போது அவன் 5 கட்டங்களை கடந்து செல்கிறான். அவை,
1.Denial
2.Anger
3.Bargain
4.Depression
5.Acceptance

1.Denial - அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது என்பதை  நம்ப மறுப்பது. உதாரணத்திற்கு நமக்கெல்லாம் கோரொனா வராது என்று மறுத்தது. அப்படியே வந்தாலும்,  நமது ஊர் வெயிலில் அது பரவாது என்று  மீண்டும் மறுத்தது ( நான் உட்பட)

2.Anger-கோபம் கொள்வது. உதாரணத்திற்கு , ஊரடங்கு போட்டு விட்டார்களே, வருமானம் பாதிக்குமே, இயல்பு வாழ்க்கை கெட்டு விட்டதே என்று கோபம் கொண்டது.

3. Bargain- கொரோனா  வராமல் இருந்திருக்கலாமே , ஊரடங்கு உத்தரவு போடாமல் விட்டிருக்கலாமே என்று உள்ளுக்குள் புலம்புவது.

4. Depression- இப்படி ஆகிவிட்டதே என்று மன அழுத்தம்,  மனச்சோர்வு அடைவது.

5. Acceptance - கடைசி கட்டம்.  வேறு வழியில்லாமல் , அதை ஏற்றுக்கொள்வது. உதாரணம் : கொரோனாவுடன்  வாழ பழகிகொண்டது 😂😂

இந்த 5 நிலைகள் , கொரோனாவிற்கு மட்டுமல்ல. மனித வாழ்வில் உண்டாகும் அனைத்து பிரச்சினைகளக்கும்  பொருந்தும்.

புத்திசாலி என்ன செய்வான் ?
முதல் நிலையிலிருந்து நேராக ஐந்தாம் நிலைக்கு சென்று விட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைவான்.

ஐந்தாம் நிலைக்கு செல்லமுடியாமல்  சிக்கிக்கொள்பவன் மனநோயாளியாகிறான் !

Dr. பிரகாஷ் மூர்த்தி MBBS,MD, மன்னார்குடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக