சனி, 16 டிசம்பர், 2017

குங்குமம்


  குங்குமம்

🌺பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரு பொடியே குங்குமம். இயற்கை முறையில் விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கப்பட்ட பொடியுடன் நல்லெண்ணெய் சேர்த்தால் குங்குமம் தயார். மஞ்சளும், காரமும் வேதிவினை புரிவதால் சிவப்பு நிறம் கிடைக்கிறது.

அம்மன் கோவில்களில் பிரசாதமாக குங்குமம் தரப்படுகிறது. மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண். அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதி. இங்கு குங்குமத்தை இட்டால் அமைதி கிடைக்கும்.
குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளைத் தோற்றுவிக்கும். இதை அணிந்த எவரையும் வயப்படுத்துவது கடினம்.
தெய்வத்தன்மையும் மருத்துவத் தன்மையும் உள்ள குங்குமத்தை அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவற்றுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.
மூளைக்குச் செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.

குங்குமம் இட்டுக்கொள்வதால் புத்துணர்வும், புதுத்தெளிவும், புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன.
மனிதனின் உடற்கூறுக்கு உகந்த முறைகளைத்தான் நாம் இறைவழிபாடுகள் மூலம் அடைகிறோம் என்பதற்கு குங்குமம் ஒரு மிக பெரிய சான்று என்றே கூறவேண்டும்.

🌸 திருமணமான பெண்கள் பலரும் நெற்றியில் குங்குமம் இடுவது வழக்கம். இதற்குப் பின்னால் உள்ள நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

என்னதான் ஸ்டிக்கர் பொட்டு இருந்தாலும், குங்குமத்திற்கு இருக்கும் மதிப்பே தனி. அதனை இளம்பெண்கள் தொடங்கி, திருமணமான பெண்கள் வரையிலும், வித்தியாசமான வடிவில் நெற்றியில் இட்டுக் கொள்வது நம் மரபு.

அப்படிச் செய்வதற்கான காரணங்கள் பின்வருமாறு:

1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீ மகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.
3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.


7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்க்க ஆயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.
குங்குமம் வைக்க சிறந்த திசை எதுவென்று பார்க்கலாம்.


பெண்களுக்குரிய மங்கல அடையாளம் குங்குமம். பெண்கள், உடல்நலம் இல்லாத இல்லாத நாளிலும் கூட குங்குமம் வைப்பது அவசியம்.

சுமங்கலிகள், கிழக்கு நோக்கி நின்று, ‘’ஸ்ரீம் ஸ்ரீயை நம; ஸம் சுபம் பூயாத்,’’ என்னும் லட்சுமி மந்திரம் சொல்லி புருவ மத்தியில் குங்குமம் வைக்க வேண்டும்.

இதனால், லட்சுமி கடாட்சம் உண்டாகி, திருஷ்டி தோஷம் நீங்கும். ஆக, குங்குமம் வைக்க உகந்த திசை, கிழக்குத் திசையே ஆகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக