வியாழன், 23 நவம்பர், 2017

குழந்தைகள் முன் செய்யக்கூடாதது எது?



குழந்தைகள் முன் செய்யக்கூடாதது எது?

குழந்தைகளின் முன்னிலையில் பெரியவர்கள் நடந்து கொள்ளும் முறை ஒவ்வொன்றும், அவர்களின் எதிர்கால குணாதிசயங்களில் மாற்றங்களை கொண்டு வரும்.

* கணவன் மனைவி சண்டை, சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக்கூடாது.
அவர்கள் முன்னிலையில் சண்டையிட்டுக் கொள்வதை, கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

* குழந்தைகள் முன்னிலையில் பிறரை பற்றி, தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள்.
உங்கள் கணவரிடம் நீங்கள் கூறுவதை நினைவில் வைத்துக் கொள்ளும் குழந்தை, அவர் வரும் போது, அது குறித்து வாயை திறக்கலாம்.

*தீய சொற்கள் பேசுவதை தவிருங்கள்.
அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* சிறு குழந்தைகளை மிரட்டும் போது, கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன் போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

*சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர்.
எனவே, குழந்தைகளிடம், அப்பாகிட்டே சொல்லிடாதே என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே அப்பாக்கிட்ட சொல்லிடுவேன் என்று மிரட்டும்.

*குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது.
உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை, உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

குழந்தைக்கு எதற்கெடுத்தாலும், காசு கொடுத்துப் பழக்கக் கூடாது.
அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப் படுத்துவது கூடவே கூடாது. கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன் என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்ப்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

*குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும்.
நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

*உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள்.
அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

*படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது,
பாசிடிவ் அப்ரோச் இருக்க வேண்டும். நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம் என்று கூறி ஊக்கப்படுத்த வேண்டும்.

*நீ படிக்கிற படிப்புக்கு, பியூன் வேலை கூட கிடைக்காது.
இந்த மார்க் வாங்கினா மாடு மேய்க்கதான போக முடியும் என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

*குழந்தை முன்னிலையில் கணவரோ, பிற நபர்களோ
*சிகரெட் பிடிப்பது,
*மது அருந்துவது,
*புகையிலை பயன் படுத்துவது
போன்ற செயல்களை அனுமதிக்காதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக