செவ்வாய், 21 நவம்பர், 2017

பெண்களின் கையை வைத்து குணாதிசயங்களை தெரிந்து கொள்ள...



பெண்களின் கையை வைத்து குணாதிசயங்களை தெரிந்து கொள்ள...


♥🌷 நாம் கைரேகையை வைத்து ஒருவரின் எதிர்காலத்தையும், குணத்தையும் அறிந்து கொள்ளலாம். ஜோதிடத்தில் மனிதனின் வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை ஏற்படும் பல நிகழ்வுகளை நாம் தெரிந்து கொள்ளலாம். அதேபோல் பெண்களின் கைகளின் அமைப்பை வைத்து அவர்களது குணாதிசயங்களை அறியலாம்.

♥🌷 பெண்களின் கைகள் மிருதுவாக இருந்தால், அவர்கள் முயலும் எல்லா வேலைகளும் தடையின்றி நிறைவேறும். லாபமும் கிடைக்கும். தர்ம காரியங்களில் அதிக ஈடுபாடு உடையவர்கள்.

♥🌷 கைகள் வறட்சியாகவும், நரம்புகள் வெளியே தெரியும்படியும் இருந்தால், அவர்களது குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் அதிகமிருக்கும்.

♥🌷 மணிக்கட்டுகள் தெரியாமல் அவர்களது கைகள் இருந்தால், அவர்களுக்கு ஆபரண யோகமும், தெய்வ அனுகூலமும் உண்டாகும்.

♥🌷 உள்ளங்கைகள் சிறிது பள்ளமாக இருக்கும் பெண்கள் உண்மையைப் பேசும் குணமுடையவர்கள். நல்லொழுக்கமானவர்கள்.

♥🌷 உள்ளங்கைகள் அதிக பள்ளமாகவும், முக்கியமான ரேகைகள் மட்டுமே தௌpவாக இருந்தால் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

♥🌷 கைகள் முழங்கால் அளவுக்கு நீண்டு இருந்தால், அவர்கள் பாசமானவர்கள், சகல சௌபாக்கியங்களுடன் இருப்பார்கள். வாழ்க்கையின் சங்கடங்கள் எதையும் சிரித்த முகத்துடன் சகித்துக் கொள்வார்கள். கணவனுக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பார்கள்.

♥🌷 கைகளில் அடர்த்தியான ரோமங்கள் இருந்தால் அவர்களால் குடும்ப வாழ்க்கையில் நீடித்திருக்க முடியாது.

♥🌷 பெண்களின் கை விரல்கள் மென்மையாகவும், அழகாகவும் இருந்தால் சகல சௌபாக்கியங்களும் அமைந்திருக்கும். இவர்களுக்கு புண்ணிய காரிங்களில் ஈடுபாடு அதிகமிருக்கும். எல்லோரும் பாராட்டும் வகையில் நடந்துகொள்வார்கள்.

♥🌷 நீண்ட கை விரல்களை உடைய பெண்கள் கலை ஆர்வமுள்ளவர்கள். இசை ஞானம் உள்ளவர்கள், இசைக் கருவிகளை வாசிப்பதில் பெரிதும் வல்லவர்களாக இருப்பார்கள். சிலர் நாட்டியத்திலும், சிலர் நடிப்பிலும் சிறந்து விளங்குவார்கள்.

♥🌷 கை விரல்கள் நெருக்கமாக இருந்தால், கஞ்சத்தனம் உடையவர்கள். பணம் சேர்ப்பதிலேயே எப்போதும் குறியாக இருப்பார்கள்.

♥🌷 விரல்கள் அதிகப் பருமனாக இருந்தால் கணவனுக்குக் கண்டம் உண்டாகும்.

♥🌷 கைவிரல் நகங்கள் சொத்தையாகவும், கறுப்பாகவும் இருந்தால் ஆயுட்காலம் முழுவதும் கஷ்டமும், வறுமையும் உண்டாகும்.

♥🌷 விரல் நகங்கள் சிவந்து, பளபளப்பாக, அழகாகக் காணப்பட்டால் அப்பெண்கள் ஆரோக்கியமானவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள்.

♥🌷 கைகள் சமமாக இருந்தால், அவர்களுக்கு எல்லா சௌபாக்கியங்களும் கிட்டும். குடும்பத்தை நன்றாக நிர்வாகிப்பார்கள். மரியாதை உடையவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக