சனி, 2 மே, 2020

அனைவருக்கும்_சமமா


#அனைவருக்கும்_சமமா

பக்கத்து வீட்டுக்கு பாத்திரம் தேய்க்க லட்சுமி அக்கா வருவாங்க. அவங்களுக்கு இரண்டு பசங்க. ஒரு பையன் ஒரு பொன்னு என சொல்லி இருக்காங்க. ஒரு நாள் நான் வேலைக்கு போகல. அந்தக்காவ பார்த்து சிரித்தேன். அவங்களும் சிரிக்க "பசங்க ரெண்டு பேரும் எனக்கா பண்றாங்க?"ன்னேன். அவங்க படிக்கிறாங்கம்மா என சொல்ல "எந்த ஸ்கூல்க்கா?" என்றேன்.

பையனை மெட்ரிக் ஸ்கூல்லயும் பொன்ன கவர்ன்மெண்ட் ஸ்கூல்லயும் படிக்கறதா சொன்னாங்க. "ஏன்க்கா இப்படி ஒரே ஸ்கூல்ல சேக்காம, பையனுக்கு ஒன்னு பொன்னுக்கு ஒன்னுன்னு பார்க்கிறீங்க?" என கொஞ்சம் சத்தமாத்தான் கேட்டேன்.

ஆமாம்மா பொன்ன படிக்கவச்சி என்ன ஆகப்போகுது? இன்னொருத்தன் கைல புடிச்சி குடுத்துட்டா முடிஞ்சது. ஆனால் பையன் தான் எங்களுக்கு காலம் புல்லா கஞ்சி ஊத்துவான். அவன் நல்ல பள்ளி கூடத்துல படிக்க வச்சாத்தானே நல்ல வேலை கிடைக்கும் என அவங்க சொன்னத கேட்டு BP அதிகமா ஆகிடுச்சி .

விடக்கூடாது இவங்களன்னு முடிவு பண்ணி, "சரிக்கா, உங்ககூட பிறந்தவங்க எத்தனை பேர் எப்படி இருக்காங்க?"ன்னு ஆரம்பிச்சேன். நா ரெண்டு தம்பிங்க அவங்க தனியார் கம்பெனியில் நல்ல வேலையில கைநிறைய சம்பாதிக்கிறாங்க.  இதுல நான் மட்டும்தான் இப்படி வீட்டு வேலைமா என சொன்னதும் "நான் கேட்டேன் நீங்களும் நல்லா படிச்சிருந்தா இந்த வேலைக்கு வராம ஆபீஸ் உத்யோகத்துக்கு போயிருக்கலாம் இல்லையா?" என்று கேட்டேன். 

"இதே நிலமை உங்க பொன்னுக்கும் வரலாம்க்கா. அவ நல்லா படிச்சா அவ வாழக்கை தரம் உயரும்க்கா" என சொன்னேன். மண்டைய மண்டைய ஆட்டுச்சி...

எந்த காலத்துல இருக்கோம் நம்ம பெண் குழந்தைகளையும் சமமா பார்க்கனும். அரசு பள்ளிகளை குறை சொல்ல வரவில்லை. ஏன்னென்றால் அரசு பள்ளிகளிலிருந்தும் நல்ல அறிஞர்களும், அறிவியலாளர்களும் வந்திருக்காங்க.  என்னோட கேள்வி இருவரையும் ஒரே மாதிரியான பார்வையில் வைக்கவேண்டும். அனைத்துமே அனைவருக்கும் சமமா கிடைக்கனும் என்பதுதானே நியாயம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக