சனி, 9 மே, 2020

அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் !!


♥அம்மாவின் அன்புக்கு💞 நிகர் யார்?💯 🤰 அன்னையர் தின வாழ்த்துக்கள்🎈😍

🤰ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை, அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்னையின் தியாகம், பெருமையை போற்றும் வகையில் உலக அன்னையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

🤰மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று (மே 09) அன்னையர் தினம் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மா என்ற வார்த்தைக்குள் எத்தனை எத்தனை அன்பும், பாசமும் நிறைந்துள்ளது. உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை என்று சொன்னால் அது மிகையாகாது.

🤰அம்மா என்ற வார்த்தை களங்கம் இல்லாதது, கபடம் இல்லாதது, பாசமும், அன்பும் ததும்பியது, என்றும் உயிர்ப்புடன், உலகமே அவளாக, சுமைகளை சுமந்து குடும்பத்தின் முகவரியாக வாழ்பவள்.


வீட்டின் பணிகளை செவ்வனே செய்து..
வேலைக்கு சென்று...
குடும்ப பாரத்தை பகிர்ந்து,..
கஷ்டம் இருந்தாலும்.. துன்பம் இருந்தாலும்..
அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்..
அமைதியாக அன்புடன்..
நடந்து கொள்ளும் விதம்...
அம்மா என்ற அந்த உயிருக்குள் மட்டுமே காண முடியும்.
🤰தாயிற் சிறந்ததொரு கோவில் இல்லை என்று கூறும் பழமொழி உண்மை என்றால் அது மிகையாகாது. இவ்வுலகில் தாயை தெய்வமாக மதிப்பவருக்கு அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கும். தான் பிறந்தது முதல் ஒரு பெண்ணானவள் பல்வேறு பரிமாணங்களை பெறுகிறாள். மண்ணில் புதையுறும் வரை தன்னலம் பேணாது உழைத்துக் கொண்டே இருப்பவள் தாய்.


அம்மா !!!!....
எத்தனை உறவுகள்
இந்த உலகத்தில் இருந்தாலும்,
காலத்தின் மோதலினால்
அவை மாறுபடும் !!
ஆனால், தாயே உன் அன்புக்கு இணை இவ்வுலகில் எதுவுமில்லை...!!
🤰பிரம்மா இவ்வுலகில் உள்ள உயிர்களை படைக்கிறார் என்றால், பெண்ணும் அதே பணியை தான் செய்கிறாள் என்றால் அது மிகையாகாது.

மறுபிறவி எடுப்பவள் தாய் :

🤰பெண் என்பவள் இரு முறை பிறக்கிறாள் என்பார்கள். அதாவது அவளது தாய், தந்தைக்கு மகளாக பிறக்கும்போது ஒரு முறையும், இரண்டாவது முறை அவளது குழந்தையை பிரசவிக்கும்போது பெண் மறுஜென்மம் எடுக்கிறாள்.

🤰பிரசவம் என்பது பெண்ணுக்கு தாள முடியாத வலியை கொடுக்கும் என்றாலும் அவை அனைத்தையும் தாங்கி கொண்டு குழந்தையின் அழுகுரல் கேட்டவுடன் அதை மறந்து விடுகிறாள்.

உயர்ந்த உள்ளம் கொண்டவள் தாய் :

🤰தான் உண்ணாமல் இருந்தாலும் தன் குழந்தை உண்ண வேண்டும் என்று நினைக்கும் ஒரே உள்ளம் தாய் தான். பார்த்து பார்த்து ஒரு குழந்தையை கருவுற்று இருக்கும் போதில் இருந்தே கண்ணை இமை காப்பதற்கு மேலாக தன் குழந்தையை பாதுகாத்து வருகிறாள்.

மின்னல் மின்னும்போது...
அம்மாவைக் கட்டி அணைக்கும்...
குழந்தைக்கு தெரிந்திருக்கிறது...!!
அம்மா அதைவிட பெரிய சக்தி என்று...!!
அன்னையர் தினமான இன்று அம்மாவை மகிழ்விக்க, ஆச்சரியப்படுத்த அவர்களுக்கு ஓய்வு கொடுத்து, பரிசளித்து, விரும்பியதை வாங்கிக் கொடுத்து அவர்களுடன் இன்று ஒருநாள் உங்கள் நேரத்தை செலவிட நீங்கள் தயாராகி இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

தாயை மதிப்போம்!!.... தாய்மையை போற்றுவோம்!!...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக