திங்கள், 23 செப்டம்பர், 2019

பெண்களுக்கான நோய்களும் அதற்கான தீர்வுகளும்...


பெண்களுக்கான நோய்களும் அதற்கான தீர்வுகளும்...

பெண்கள் குழந்தைகளாக இருக்கும்போது சளி பிடிக்கும்
அதற்குப் பிறகு ஹார்மோன் மாற்றங்கள் உண்டாகும்
இன்றைய காலகட்டத்தில் hybrid உணவுகள் கோழி கறிகள் சாப்பிடுவதனால் இளம் வயதில் பூப்பெய்தும் விடுகிறார்கள்

மாதவிடாய் சிக்கல்கள் வருகிறதுஉடல் எடை கூடுவது அல்லது குறைவது வெள்ளைப்படுவது போன்ற பிரச்சனைகளை உருவாகிறது
ஒரு சில பெண்களுக்கு தைராய்டு பிரச்சினை உண்டாகி
ஹைபோதைராய்டு ஆக இருந்தால்
மாதவிடாய் அதிகமாக இரத்தப்போக்கு நடைபெறுகிறது

இது தொடர்ந்து நடைபெறும் பொழுது இரத்த சோகை உண்டாகிறது
லோ தைராய்டு ஹார்மோன் பிரச்சினை இருந்தால்
மாதவிடாய் கண்டும் காணாமல் சீராக செல்வதில்லை

இதனால் உடல் பருமன் ஆகிறது
தைராய்டு கட்டிகள் உண்டாகிறது தொண்டை பகுதியில்

பிறகு திருமணம் நடைபெற்று ஒரு சில பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகிவிடுகிறது
ஒரு சிலருக்கு காலதாமதம் ஆகிறது

குழந்தை பிறக்கும்போது சுகப்பிரசவமாக இல்லாமல் அறுவை சிகிச்சையின் மூலம் பிறக்கிறது

இது மாதிரி தொடர்ந்து மூன்று குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறக்கும்பொழுது

அவர்களுக்கு ஏதேனும் ஒரு தீராத உபாதைகள் வந்து விடுகிறது
ஒரு சிலருக்கு ஒரு தடவைஅறுவை சிகிச்சை செய்யும் பொழுது
இதற்கு முன்பு சீராக மாத விடாய் நடந்துகொண்டு இருக்கும்
அறுவை சிகிச்சைக்குப் பிறகு மாதவிடாய் சீரற்ற முறையில் நடைபெறுகிறது
இதனால் கர்ப்பப்பை கட்டி pcod problem உண்டாகிறது

ஒரு சில பெண்களுக்கு தோல் உபாதைகளும் உண்டாகிறது
தொடர்ந்து சளிக்கு நோய் எதிர்ப்பு மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதால் உடல் அலர்ஜி உண்டாகி றது

ரத்தம் சுத்தம் செய்ய வேண்டும்

அருகம்புல் வெள்ளருகு நாவல்கொட்டை கருங்காலிப்பட்டைகொட்டைக்கரந்தை அவுரி கருவேப்பிலை போன்ற மூலிகைகளை சூரணமாக. வாங்கி சமஅளவு கலந்து ஒவ்வொரு கிராம் சாப்பிடவேண்டும் இருவேளை காலை இரவு

செரிமான பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும்

சுக்கு மிளகு திப்பிலி வெட்பாலை அரிசி ஓமம் சோம்பு சீரகம் பிரண்டை சதகுப்பை கொத்தமல்லி போன்ற மூலிகைகளை சம அளவு கலந்து சூரணமாக செய்து ஒவ்வொரு கிராம் காலையும் இரவும் சாப்பிடவேண்டும்

,நரம்பு மண்டலங்கள் பலப்படுத்த வேண்டும்

அஸ்வகந்தா நத்தைசூரி நிலப்பனைக் கிழங்கு பூமி சர்க்கரைக் கிழங்கு பூனைக்காலி விதை கோரைக்கிழங்கு கடுக்காய் நெல்லிக்காய் தான்றிக்காய் வல்லாரை தேற்றான்கொட்டை தேசாவரம் பற்பாடகம் போன்ற மூலிகைகளை சூரணமாக வாங்கி சமஅளவு கலந்து ஒவ்வொரு கிராம் காலையும் இரவும் சாப்பிடவேண்டும்

வாய்வு தொல்லைகள் சரி பண்ணவேண்டும்
முடக்கத்தான் இலை வாத நாராயணா இலை குறுந்தொட்டி வேர் கொடிவேலி வேலிப்பருத்தி சிறு தும்பை போன்ற மூலிகைகளை சூரணமாக வாங்கி சமஅளவு கலந்து ஒரு கிராம் காலையும் இரவும் சாப்பிட வேண்டும்

உடல்சூடு சிகிச்சையளிக்க வேண்டும்

வில்வம் துத்தி இலை அத்தி விதை அத்திப்பட்டை அத்தி இலை
நாயுருவி வெந்தயம் அதிமதுரம் ரோஜா இதழ் செம்பருத்தி பூ வெண்தாமரை மருதம்பட்டை வெட்டிவேர் நன்னாரி கீழாநெல்லி கரிசலாங்கண்ணி பொன்னாங்கண்ணி
போன்ற மூலிகைகளில் சூரணமாக வாங்கி சமஅளவு கலந்து ஒரு கிராம் காலையும் இரவும் சாப்பிட வேண்டும்

கர்ப்பபையை பலப்படுத்த வேண்டும் கருப்பையில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற வேண்டும்
அரசு இலை அசோகப் பட்டை லோந்த்ரா பட்டை
ஓரிதழ் தாமரை போன்ற மூலிகைகளை சம அளவு கலந்து ஒரு கிராம் சாப்பிட வேண்டும் இது கர்ப்பபையில் பலப்படும்

தோல் வியாதிகள் இருந்தால் அதை குணப்படுத்த வேண்டும்

சிறியாநங்கை தான்றிக்காய் ஆடுதின்னாபாளை ஆகாச கருட கிழங்கு நொச்சிஇலை குப்பைமேனி வாய் விடங்கம் சிறு செருப்படை இலை போன்ற மூலிகைகளை சம அளவு கலந்து ஒவ்வொரு கிராம் காலையும் இரவும் சாப்பிடவேண்டும்

சனி இருந்தால் சளியை குணப்படுத்த வேண்டும்

ஆடாதொடை இம்பூரல் சித்தரத்தை சிறுதும்பை
தூதுவளை விஷ்ணுகிரந்தி முசுமுசுக்கை தாளிசபத்திரி
கண்டங்கத்திரி போன்ற மூலிகைகளை சூரணமாக சமஅளவு கலந்து ஒரு கிராம் சாப்பிட வேண்டும் காலையும் இரவும்

கர்ப்பப் பையில் நீர் கட்டிகள் கட்டிகள் இருந்தாலும் கரைக்க மூலிகைகள்

வேலிப்பருத்தி கழர்ச்சிக்காய் சித்தரத்தை இலவங்கப்பட்டை தொட்டால் சுருங்கி மாவிலங்கப்பட்டை போன்ற மூலிகைகளை சம அளவு கலந்த சூரணமாக வாங்கி காலையும் இரவு ஒரு கிராம் சாப்பிட வேண்டும்

கர்ப்ப பையில் உள்ள கட்டிகளை கரைப்பதற்கு இனிமா கப் உபயோகித்து மாதவிடாய் நடக்கும் சமயத்தில் மென்சஸ் பாதையில் வேப்பிலை 2 உள்ளங் கைப்பிடி அளவு பெருங்காயம் ஒரு சிட்டிகை அளவு கசாயம் செய்து
செலுத்த வேண்டும் இது மாதிரி செலுத்தினால் கட்டிகள் கரைந்து வருவதை நீங்களே கண்கூடாக பார்க்கலாம்

மாதவிடாய் நடக்கும் சமயத்தில் எப்போதும் தொடர்ந்து கடை பிடித்தால் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எப்போதும் வராது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக