சனி, 2 டிசம்பர், 2017

புற்றுநோயை தடுக்கும் எட்டு மூலிகைகள்



புற்றுநோயை தடுக்கும் எட்டு மூலிகைகள் !

மஞ்சள் :



புற்றுநோய் செல்களை அழிப்பதில் மஞ்சள் முதன்மையானது. இதில் உள்ள பாலிபீனால் குர்குமின் என்ற வேதிப்பொருள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.



மிளகு:



லுகீமியாவின் செல்களை அழிப்பதிலும், குறைப்பதிலும் மிளகின் பங்கு இன்றியமையாதது. நோய்க்கிருமிகளுக்கு மிளகைப் பார்த்தால் கொஞ்சம் பயம் தான். எதிரி வீட்டுக்கு போனாலும் 3 மிளகை சாப்பிட்டால், விஷம் கூட முறிந்து விடும்னு சும்மாவா சொல்றாங்க.



குங்குமப்பூ:



இயற்கையான காரடெனாய்டு டை கார்போசிலிக் அமிலம் எனப்படும் குரோசிடின் குங்குமப்பூவில் அதிகமாக காணப்படுகிறது. கேன்சருக்கு குட்பை சொல்லும் சக்தி குங்குமப்பூவிற்கு உண்டாம்.



சீரகம்:



சீரகத்தில் உள்ள தைமோகுயினோன் என்கின்ற மூல பொருள் புற்றுநோயை விரட்டும் தன்மை கொண்டது.



இலவங்கப்பட்டை:



தினமும் அரை கரண்டி லவங்கத்தூளை எடுத்துக்கொண்டால், புற்றுநோய் அபாயங்கலில் இருந்து நம்மை நிச்சயம் தற்காத்துக் கொள்ளலாமாம். இயர்கையாகவே உணவை கெட்டுப் போகவிடாமல் காக்கும் இதில் கூடுதலாக அயர்ன்னும், கால்சியமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



பெருஞ்சீரகம்:



பெருஞ்சீரகத்தில் உள்ள அனீதோல் எனும் மூலப்பொருள் புற்றுநோய் செல்களின் புற்றுநோய் பிசின் மற்றும் ஊடுருவல் நடவடிக்கைகளை கட்டுக்குள் வைக்கிறது. வறுக்கப்பட்ட பெருஞ்சீரகத்தூள் சேர்க்கப்பட்ட தக்காளி சூப் புற்றுநோய் நோயாளிகளுக்கான விரிவான நிச்சயமாக உணவு ஆகும்.



மிளகாய் விதைகள்:



இரண்டு கப் திராட்சைகளை சாப்பிடுவதற்கான பலனை, ஒரு ஸ்பூன் மிளகாய் விதைகல் தந்து விடுகின்றனவாம். இதில் உள்ள குவார்சிடின் எனும் மூலப்பொருள், புற்றுநோய் உயிரணுக்களை அழிப்பதற்கான, மருத்துவப் பொருளாக பயன்படுகிறது



இஞ்சி:



கொழுப்பை குறைப்பதிலும், உடல் செயல்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பதிலும், புற்றுநோய் கிருமிகளை அழிப்பதிலும் வல்லவன் இஞ்சி என்பது யாவரும் அறிந்ததே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக