திங்கள், 18 டிசம்பர், 2017

உங்க ஆடும் பல்லை வலுவாக்கனுமா? இந்த பழங்கால கைவைத்தியம் ட்ரை பண்ணிப் பாருங்க


உங்க ஆடும் பல்லை வலுவாக்கனுமா? இந்த பழங்கால கைவைத்தியம் ட்ரை பண்ணிப் பாருங்க!!

பற்கள் ஆடினா உடனே அவற்றை பிடுங்கத்தான் வேண்டுமா அல்லது அவை விழும் வரை காத்திருக்கனுமா? தேவையில்லை. உங்கள் ஈறுகளை வலுவாக்கினால் ஆடும் பல்லைக் கூட நிறுத்த முடியும். அனுபவப் பூர்வமாக சிலரருக்கு நடந்துள்ளதால் உங்களுக்காக இந்த குறிப்புகள் தரப்பட்டுள்ளன.

பல் ஆடுவதற்கு என்ன காரணம் ?

உங்கள் பல் ஆடுவதற்கு பலவீனமான ஈறு மற்றும் பற்கள் காரணம். மோசமான பராமரிப்பு மிக முக்கிய காரணம். பற்சொத்தை ஏற்படுவதாலும் பற்கள் ஆடத் தொடங்கும். . எனவே ஆடும் சமயத்தில் பற்கள் மற்றும் ஈறுகளின் மீது கவனம் செலுத்தினால் பற்கள் ஆடாமல் மேலும் வலுவாக்க முடியும். அப்படியான குறிப்புகளை பார்க்கலாம்.

தேவையானவை :

நல்லெண்ணெய் - கால் கப்
நெல்லிக்காய் பொடி - கால் கப்
மஞ்சள்- 1 ஸ்பூன்
பட்டைப் பொடி - கால் ஸ்பூன்
கிராம்புப் பொடி - அரை ஸ்பூன்
உப்பு - 1 ஸ்பூன்.

மேற்சொன்ன பொடிகளை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். இதுதான் மூலிகைப் பொடி. மஞ்சள், பட்டை, கிராம்பு, கல் உப்பு போன்றவற்றையும் ஒன்றாக கலந்து பொடி செய்து கொள்ளலாம். அல்லது நேரடியாக பொடியாகவும் வாங்கிக் கொள்ளலாம். நல்லெண்ணெய் லேசாக சூடுபடுத்திக் கொண்டு அதில் இந்த பொடிகளை கலக்க வேண்டும்.

1.இந்த எண்ணெயால் தினமும் காலையில் ஆயில் புல்லிங்க் செய்ய வேண்டும். இந்த எண்ணெய் எல்லா பற்களிலும் படும்படி 20 நிமிடங்கள் வாயிலேயே வைத்து இருக்க வேண்டும். பின்னர் உமிழ்ந்து விடுங்கள். இப்படி தினமும் ஆயில் புல்லிங்க் செய்வதால் உங்கள் ஈறு பலம்பெற்று நன்றாக வலுப்பெறும். ஆடிய பற்களும் நின்று போய் விடும்.

தினமும் இந்த மூலிகைப் பொடியால் பல் துலக்க வேண்டும். ஆடும் பல்லின் மீதும் , அதன் ஈறின் மீதும் இந்த பொடியை வைத்து மசாஜ் செய்யுங்கள். இப்படி காலை மற்றும் இரவு தூங்கும்போது செய்தால் ஆடும் பல் கெட்டிப்பட்டுவிடும்.

நெல்லிக்காய் ஈறுகளில் உள்ள நரம்புகளை பலப்படுத்துகிறது. உப்பு கிருமி நாசினி மற்றும் அங்கிருக்கும் தொற்றுக்கலை நீக்குகிறது. நல்லெண்ணெய் பற்களின் நடுவே ஊடுருவி ஈறுகளை பலப்படுத்தும். பட்டை கிராம்பு, பற்களை சிதைவிலிருந்து பாதுகாக்கும்.

இந்த மூலிகைப் பொடி சித்த மருத்துவக் கடைகளில் கிடைக்கும் இல்லையென்றாலும், மூலிகைப் பொடி நீங்களே வீட்டில் தயாரிக்கலாம்.

தேவையானவை:

படிகார உப்பு - 6 ஸ்பூன்
மிளகு -1ஸ்பூன்
சாம்பிராணி - 1 ஸ்பூன்
இந்துப்பு - 1 ஸ்பூன்
ஓமம் - அரை ஸ்பூன்
கிராம்பு - 2.5 ஸ்பூன்
வேப்பம்பட்டை - 10 ஸ்பூன்

மேற்கண்ட பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை தினமும் பல் துலக்கப் பயன்படுத்தலாம். இவை பல்வலி, பல் கூச்சம், வாய் துர்நாற்றம், பல் நோய்கள், பல் ஆடும் பிரச்னை, பலவீனமான ஈறுகள் ஆகிய பிரச்னைகளைத் தீர்க்கும்.

தேவையானவை:

சுக்கு - 1 ஸ்பூன்
கடுக்காய் - 1 ஸ்பூன்
இந்துப்பு - 1 ஸ்பூன்.

இந்த நான்கையும் ஒன்றாகச் சேர்த்து இடித்து, பொடி செய்துகொள்ளவும். தேவைப்படும்போது இந்தப் பொடியால் பற்களைத் துலக்கவும். பல் ஈறுகளில் ரத்தம் கசிதல், பல் ஆடுவது, சொத்தையாவது போன்ற பிரச்னைகள் தீரும

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக