ஞாயிறு, 6 அக்டோபர், 2019

ஆண்களைப் பற்றிய உண்மைகள்!!


ஆண்களைப் பற்றிய உண்மைகள்!!

எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...

இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம்
தெரிந்து கொள்வோம்....

ஆண் என்பவன் யார்?
ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான
படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே
செய்யத் தொடங்கி விடுகிறான்,
அவன் தன் தாய் தந்தை, சகோதரிக்காக குடும்ப சூழ்நிலையால்,.....

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான்.
தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு
வெளிநாடுகளில் வேலை செய்வதன் மூலம் அன்பு மற்றும் சந்தோசத்தை தியாகம் செய்கிறான்.

அவன் மகள் மற்றும் சகோதரிக்காக
தன் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம்
கடனாளியாய் உருவாகிறான்
ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த
தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான்.

அவன் தன் மனைவியின் ஆசைகள் மற்றும்
குழந்தைகளுக்கான படிப்பு, திருமணம் போன்றவைகளில் எந்தவித குறையும் இல்லாமல் இருக்க தன்னையே தியாகம் செய்கிறான்.

அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும்,

தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது.

எல்லா தாயும், மனைவியும் முதலாளியும்
அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.

இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக
விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.

பெண்களே, உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள்.

அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான்
என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.

அவனுக்கு தேவைப்படும்போது
உங்கள் கரங்களை நீட்டுங்கள்

அவனிடமிருந்து இருமடங்காக
நீங்கள் அன்பை பெறுவீர்கள்.

ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு,

அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக