சனி, 26 அக்டோபர், 2019

தீபாவளி பற்றிய தகவல்கள்


தீபாவளி பற்றிய தகவல்கள்

* இந்தியாவில் மட்டுமின்றி, அண்டை நாடுகளான, வங்கதேசம், இலங்கை, மலேஷியாவிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஆனால், பெயர்களும், கொண்டாடும் முறைகளிலும் மாற்றம் இருக்கும்.
* தமிழகத்தில், தீபாவளியன்று, சிறுவர்கள் பட்டாசு வெடிக்க விரும்புவர். ஆனால், குஜராத் மாநிலத்தில், தீபாவளி அன்று யாரும் பட்டாசை பற்றி நினைப்பதில்லை. அதற்கு பதிலாக, சிறுவர் முதல் பெரியவர் வரை, விதவிதமான பட்டங்கள் செய்து, வானில் பறக்க விட்டு மகிழ்வர்.
* காசியில், பிரசித்தி பெற்ற அன்னபூரணி கோவில் இருக்கிறது. இந்த கோவிலில், தீபாவளி சமயத்தில், மூன்று நாட்களுக்கு மட்டும், தங்க அன்னபூரணியாக காட்சி அளிப்பார்.
* நரகாசுரனை, அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணெய் தேய்த்து தலை முழுகினார். அதுதான் இன்றளவும் தீபாவளியன்று, அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கமாக தொடர்கிறது.
* தாய்லாந்தில், தீபாவளியன்று, வாழை மட்டைகளில் விளக்கு ஏற்றி வைத்து, அதை நீரில் விட்டு வழிபடுவர்.
* தீபாவளி என்றால், பட்டாசுகளும், பிரகாசமிடும் அகல் விளக்குகளும் இணைந்தே நினைவிற்கு வரும். இதற்கு ஒரு காரணம் உண்டு. விளக்குகளை ஏற்றி வைப்பதன் மூலம், வீடுகளில் இருள் விலகி, வளம் பெருகும் என்பது ஐதீகம்.அயோத்திக்கு, ராமரும் - சீதையும் வந்தபோது, அந்நகர மக்கள் விளக்கேற்றி வைத்தனர் என்ற புராண வழக்கமும், இன்னொரு காரணமாக சொல்லப்படுகிறது.

#Deepavali #தீபாவளி

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக