செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

கனவு பலன்கள்


கனவு பலன்கள் !

♥நாம் கண்ட கனவுகளும் அதன் பலன்களும் :

♥அழகிய பதுமையை(பெண்) கனவில் காண்பது வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படுவதை குறிக்கிறது.

♥மங்கள பொருளுடன் கன்னிப் பெண் வீட்டிற்குள் நுழைவது வீட்டில் உள்ள பெண் பருவமடைய போகிறார்கள் அல்லது திருமண முயற்சி கைக்கூடும்.

♥அறிமுகமில்லாதவர்கள் மற்றும் புதிய நபர்களை கனவில் கண்டால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

♥அணைக்கட்டில் நீர் வழிந்தோடுவது போல் கனவு வருவது வரவுக்கு மீறிய செலவு ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

♥அணை உடைவது போல் கனவு கண்டால் நெருங்கிய நண்பர்களிடமிருந்து பிரிந்து செல்லுதல் மற்றும் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும் என்பதை குறிக்கிறது.

♥ஆதரவற்ற சிறுவனுக்கு உதவுவது போல் கனவு கண்டால் செல்வந்தரின் தொடர்பு ஏற்படும்.

♥அக்னியைக் கனவில் கண்டால் செல்வம் உண்டாகும்.

♥அட்டைப்பூச்சியை கனவில் கண்டால் சத்ருக்களால் பிரச்சனைகள் உருவாகும் என்பதைக் குறிக்கிறது.

♥அம்மை நோயால் கொப்பளம் உண்டாகுவது போல் கனவு கண்டால் தனலாபம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

♥அரிசி நிறைந்த கூடையை கனவில் காணுதல் நன்மை உண்டாகும்.

♥அணிகலன்கள் வாங்குவது போல் கனவு வந்தால் இன்பம் பயக்கும்.

♥அத்தி மரத்தை காண்பது குடும்பத்தில் விவாக நிகழ்வு ஏற்படுவதை குறிக்கும்.

♥ஆலயத்தை கனவில் கண்டால் இறைவனின் அருளால் நமக்கு கூடிய விரைவில் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.

♥ஆலயத்தில் நாம் தனியாக இருந்து கதவு மூடப்பட்டது போல் கனவு காண்பது தொழிலில் தேக்க நிலைகள் ஏற்படும்.

♥ஆலயத்தின் தலை வாசலை நாம் திறந்து உள்ளே போவது போல் கனவு வருவது புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள் என்பதை குறிக்கும்.

♥ஆடுகளைக் கனவில் கண்டால் தனவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கும்.

♥ஆமையை கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள் என்பதைக் குறிக்கிறது.

♥ஆயுதம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை கனவில் கண்டால் துன்பம் நீங்கும்.

♥இனிமையான பாடலை கேட்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கும்.

♥இரும்பை கனவில் காண்பது நஷ்டத்தை குறிக்கிறது.

♥இருளைக் காண்பது போல் கனவு கண்டால் ஆரோக்கியத்தில் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

♥இறந்தவர்களை கனவில் கண்டால் சுபச்செய்தி வரும் என்பதைக் குறிக்கிறது.

♥இடாகினி(காளி) தெய்வத்தை கனவில் கண்டால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவதைக் குறிக்கிறது.

♥இந்திர தனுசு(வானவில்) கனவில் கண்டால் குடும்பத்தில் இருப்பவர்களின் வாழ்க்கையில் மாற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥ஈக்கள் தன்னைச் சுற்றி வருவது போல் கனவு கண்டால் வெளிவட்டாரங்களில் பகைமை அதிகரிக்கும்.

♥ ஈச்ச மரத்தைக் கனவில் கண்டால் தன்னுடைய சொந்த பந்தங்களில் பகைமையை உருவாக்கும்.

♥கனவில் உடை எரிவதுபோல் கண்டால் வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் பூப் பெய்துவார்கள். பொருள் இழப்பு ஏற்படலாம்.

♥உடுக்கையை காண்பது போல் கனவு கண்டால் தனக்கு ஏற்படும் ஆபத்திற்கு நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள் என்பதைக் குறிக்கிறது.

♥உணவு உண்பது போல் கனவு கண்டால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥உணவு சமைப்பது போல் கனவு கண்டால் முதலாளியாக இருப்பவர்கள் தொழிலாளியாக மாறுவார்கள் என்பதைக் குறிக்கிறது.

♥உத்தியானம் (தோட்டம்) வருவது போல் கனவு கண்டால் குடும்பம் விருத்தியாகும் என்பதைக் குறிக்கிறது.

♥உப்பைக் கனவில் கண்டால் தனலாபம் உண்டாகும்.

♥உரம் இடுவதாக கனவில் கண்டால் வீட்டிற்கு விருந்தினர்கள் வருவார்கள் என்பதைக் குறிக்கிறது.

♥உப்பளத்தை கனவில் கண்டால் விருந்துக்குப் போகப் போகிறோம் என்பதைக் குறிக்கிறது.

♥ஊமையைக் காண்பது போல் கனவு வந்தால் தொழிலில் தேக்க நிலை ஏற்படும்.

♥ஊன்(இறைச்சி) விற்பதைக் கனவில் கண்டால் எதிர்பாராத தன வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥எண்ணெய் தேய்த்துக் கொள்வது போல் கனவு கண்டால் உடல் வலிமை குறையும் என்பதைக் குறிக்கிறது.

♥எருது மிதிப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் குறையும்.

♥எருது சீறுவது போல் கனவு கண்டால் அதிகாரம் குறையும்.

♥எறும்பு ஊறுவதை கனவில் கண்டால் பதவி உயர்வு உண்டாகும்.

♥எள்ளை கனவில் கண்டால் அசுப காரியம் ஏற்படுவதை உணர்த்துகிறது.

♥ஏணியின் மேலே ஏறுவது போல் கனவு கண்டால் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

♥ஏணியில் கீழே இறங்குவது போல் கனவு கண்டால் தொழிலில் தாழ்வு நிலை ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

♥ஒட்டகத்தைக் கனவில் கண்டால் பயணங்களில் பல்வேறு இன்னல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥ஓடம் தண்ணீரில் மிதப்பது போல் கனவு கண்டால் துக்கம் வருவதை குறிக்கிறது.

♥ஓநாய் விரட்டிக் கொண்டு வருவது போல் கனவு கண்டால் மனதிற்கு பிடித்த உறவினர்களால் பகைமை ஏற்படுவதை குறிக்கிறது.

♥கங்கை நதியை கனவில் கண்டால் துன்பம் அனைத்தும் விலகும் என்பதைக் குறிக்கிறது.

♥கடற்கரையில் இருப்பது போல் கனவு கண்டால் வாழ்வில் உயர்வு உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥கத்திரிக்காய் சாப்பிடுவது போல் கனவு வந்தால் குடும்பத்தில் சௌபாக்கியம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥கல்யாணம் நடப்பது போல் கனவு கண்டால் வியாதியால் துன்பம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

♥கனிகளை கனவில் காண்பது மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥காகம் தலையில் அடிப்பதாக கனவு கண்டால் கெடுதல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥காசி நகரத்தைக் கனவில் கண்டால் எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும் என்பதைக் குறிக்கிறது.

♥காவல்காரர்களை காண்பது போல் கனவு வந்தால் சாதகமற்ற நிலையை உண்டாக்கும்.

♥கிழங்குகளை கனவில் கண்டால் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥கிழவியை காணுவது போல் கனவு வந்தால் தனப் பெருக்கம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥கீரியை கனவில் கண்டால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்

♥பூக்கள் நிறைந்த கலத்தை கனவில் கண்டால் வருமானம் பெருகும் பொருளாதார வளம் ஏற்படும்.

♥பூச்செண்டு கனவில் வருவது பொருளாதார மேன்மை குறைவதை சுட்டிக் காட்டுகிறது.

♥பெண் தன்னை நோக்கி வருவது போல் கனவு வந்தால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥பெருச்சாளியை கனவில் கண்டால் இன்னல்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

♥பேன் தலையில் இருப்பது போல் கனவு கண்டால் ஏமாற்றம் உண்டாகும்.

♥பை நிறைய தானியங்கள் இருப்பது போல் கனவு கண்டால் சுபம் உண்டாகும்.

♥ பைத்தியத்தை கனவில் கண்டால் காரிய சித்தி உண்டாகும்.

♥பொன்(தங்கம்) கனவில் வந்தால் மங்களம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥ மயானத்தை கனவில் கண்டால் காரியத் தடங்கல் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

♥மரணத்தை கனவில் கண்டால் குழந்தைப் பேறு கிட்டும்.

♥மரத்தை பதமையான (மென்மையான) நிலையில் இருப்பது போல் கனவு கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும் என்பதைக் குறிக்கிறது.

♥மலர்களை கனவில் கண்டால் சொத்து அபிவிருத்தி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥மழையை கனவில் கண்டால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥ மாமிசம் கொண்டு செல்வது போல் கனவு வந்தால் கீர்த்தி உண்டாகும் என்பதைக் குறிக்கும்.

♥மாதுளை பழத்தை உண்பது போல் கனவு கண்டால் கெட்ட நிகழ்வு ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

♥மிருதங்க ஒலியை கேட்பது போல் கனவு கண்டால் விரைவில் திருமணம் கைகூடும்.

♥மின்னலை கனவில் கண்டால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥ மீன்களை கனவில் காணுதல் நன்மை பயக்கும்.

♥மூடவரைக் கனவில் கண்டால் தன விரயம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥முதலையை கனவில் கண்டால் அறிவாற்றல் பெருகும் என்பதைக் குறிக்கிறது.

♥ முத்தை கனவில் கண்டால் புகழ் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥முயலை கனவில் கண்டால் பொருள் வரவு ஏற்பட்டு இன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥மேட்டில் இருப்பது போல் கனவு கண்டால் பொறுப்புகள் அதிகரிக்கும்.

♥மொட்டை அடிப்பது போல் கனவு கண்டால் தொழிலில் நஷ்டம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

♥மோதிரம் கனவில் வந்தால் சுப பலன்கள் உண்டாகும்.

♥யாகத்தை கனவில் கண்டால் பிரச்சனைகளால் துன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

♥யானையை கனவில் கண்டால் மகிழ்ச்சி உண்டாகும்.

♥ரத்தத்தை கனவில் கண்டால் பொருள் சேர்க்கை உண்டாகும்.

♥வண்டியை கனவில் கண்டால் இன்பம் மற்றும் துன்பம் சரிபாதி அளவில் இருக்கும் என்பதைக் குறிக்கிறது.

♥வண்டுகள் தேனை சேகரிப்பது போல் கனவில் கண்டால் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்.
♥வலிமைமிக்கவர்களை கனவில் கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும்.

♥வாத்தை கனவில் கண்டால் கடன் உதவிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

♥விதவையை கனவில் கண்டால் உயர் பதவிகள் கிடைக்கும்.

♥விவசாயியை கனவில் கண்டால் செய்யும் காரியம் வெற்றியில் முடியும் என்பதைக் குறிக்கிறது.

♥வில்வ இலையை கனவில் கண்டால் புத்திக்கூர்மை பெருகும்.

♥விளக்கு எரிவதைப் போல் கனவு கண்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

♥விளை நிலத்தை பசுமையுடன் கனவில் கண்டால் மகிழ்ச்சி உண்டாகும் என்பதைக் குறிக்கும்.

♥வீணை ஓசையை கேட்பது போல் கனவு வந்தால் சுப செய்தி வரும் என்பதைக் குறிக்கிறது.

♥வைத்தியம் செய்பவரை கனவில் கண்டால் தனலாபம் கிட்டும்.

57 கருத்துகள்:

  1. நன்று. நன்றி. ஊறுகாய் சாப்பிடுவது போல கனவு கண்டால் என்ன பலன்? ஆட்டு தலை கறியை வெட்ட பார்ப்பது போல கனவு கண்டால் என்ன பலன். abrawof@yahoo.com

    பதிலளிநீக்கு
  2. அடிக்கடி குழந்தைகள் கனவில் வருகின்றனர் என்ன அர்த்தம் என்று கூறுங்கள்.மற்றும் மிகப் பெரிய சுனாமி பேரலைகளில் எனது குடும்பம் மூழ்கி மீழ்வது போலும் ஒரு கனவு கணஃடேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காளி. குழந்தையைக் கண்டால் காளி என்று சொல்லுவார்கள்

      நீக்கு
    2. Periya pirachanaiyil irunthu thappi peergal. Nanadri.

      நீக்கு
    3. En Thalaiyil pean irukkaamdu en friend periya periya pean eduthu kaila thaaraagka naan athisayamaa paakuren

      நீக்கு
  3. வெங்கடாஐலபதி வணங்கி அவா் மேல் விழுவது போல,விநாயகா் ஒரு விரல் என்ணை பாா்த்து நீட்டுகிறாா்.இக்கணவு எதை குறிக்கிறது

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. தலையில் எண்ணெய் வைத்தது போல கனவுகள் வந்தது.....?

    பதிலளிநீக்கு
  6. என்னிடம் பிக்பாக்கெட் அடித்து ஒருவன் ஓடுவதைப்போல் கனவு 3.45 காலை

    பதிலளிநீக்கு
  7. மாதவிடாய் கால இரத்த த்தை கனவில் கண்டால்

    பதிலளிநீக்கு
  8. இரண்டு நாட்களாக இந்து சமய மற்றும் கிருத்துவ சமய முறைப்படி திருமணம் செய்து கொண்டது போல கனவு வருகிறது ஏற்கனவே எனக்கு பெண் பார்க்கிறார்கள் இது நோயைக் குறிக்கிறதா

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. சமூக வலை தளங்களில் இப்படி கேள்விகள் கேட்பது முறையல்ல, எல்லா வயதினரும், குறிப்பாக சிறு வயது பிள்ளைகள் கூட படிக்க வாய்ப்புள்ளது, எனவே இப்பதிவை நீக்குங்கள்

      நீக்கு
    2. சமூக வலை தளங்களில் இப்படி கேள்விகள் கேட்பது முறையல்ல, எல்லா வயதினரும், குறிப்பாக சிறு வயது பிள்ளைகள் கூட படிக்க வாய்ப்புள்ளது, எனவே இப்பதிவை நீக்குங்கள்

      நீக்கு
    3. சமூக வலை தளங்களில் இப்படி கேள்விகள் கேட்பது முறையல்ல, எல்லா வயதினரும், குறிப்பாக சிறு வயது பிள்ளைகள் கூட படிக்க வாய்ப்புள்ளது, எனவே இப்பதிவை நீக்குங்கள்

      நீக்கு
  10. ஒரு பென் என் ஆன்குறீயை சுவைப்பது போல கணவு கண்டேன் ் இதனால் என்ன பலன் வரும்

    பதிலளிநீக்கு
  11. அதிகாலை கனவு. உறவினர் வீட்டில் வாழையிலையில் உணவு உண்ட பிறகு இலையை தவறுதலாக மூடினேன். இதனால் என்ன பலன்?

    பதிலளிநீக்கு
  12. கனவில் ஒருவர் என்னிடம் முள் கத்திக்காயை கொடுப்பது போல கனவில் வந்தால் என்ன பலன்?

    பதிலளிநீக்கு
  13. தலையை வெட்டுவது போல கனவு வந்தால் என்ன பலன்

    பதிலளிநீக்கு
  14. ஒருவருடன் வண்டியுல் செல்வது போல கனவு கண்டால் என்ன பலன்

    பதிலளிநீக்கு
  15. எனக்கும் வேறு ஒருவருக்கும் கல்யாணம் நடப்பது போல் என் நண்பர் கனவு கண்டுள்ளார்.. இது எதை குறிக்கிறது. . சொல்லுங்களேன்

    பதிலளிநீக்கு
  16. எனக்கும் வேறு ஒருவருக்கும் கல்யாணம் நடப்பது போல் என் நண்பர் கனவு கண்டுள்ளார். இதற்கு என்ன அர்த்தம்..

    பதிலளிநீக்கு
  17. Oruvar thunguvathu pola avarkagalai sutri sonthangal irunthu kondu siripathu pola kanavu kandal apram kolanthai keelai viluvathu pola kanavu kandal

    பதிலளிநீக்கு
  18. திருமணம் ஆன பெண்ணிற்கு திருமணம் பேசிமுடிப்பதை பகலிலும் இரவிலும் கனவு காணுதல்

    பதிலளிநீக்கு
  19. அம்மன் முன்பு நானே என் தலையில் மஞ்சள் அரிசி மற்றும் பூக்களை போடுகிறேன்..

    பதிலளிநீக்கு
  20. erunthu pona en appa odal nalam sariellamal eruppathu pola kanavu kandan

    பதிலளிநீக்கு
  21. பெண்ணை ஒருவர் கூட்டி செல்லும் கனவு

    பதிலளிநீக்கு
  22. கனவில் தேன் சாப்பிடுவது போல் வந்தால் என்னா பலன் நண்பா சொல்லுங்க

    பதிலளிநீக்கு
  23. என் மனதில் உள்ள காதலனோடு கல்யாணம் நடக்க போவது போல பல முறை கனவில் வந்து விட்டது... ஆனால் ஒரு முறை கூட கல்யாணம் நடக்க வில்லை😕... இதற்கு என்ன அர்த்தம்.... சொல்லுங்க pls

    பதிலளிநீக்கு
  24. பாம்பு புற்று ஒன்று உள்ளது அதற்கு மேல் வேப்பமரம் ஒன்று உள்ளது அதைச்சுற்றி சாமி கும்பிட்டு வருகிறேன் அதற்கு என்ன பொருள்

    பதிலளிநீக்கு
  25. Onaai ennai thookitu parandhu povathu pol kanavu vandhal enna palan

    பதிலளிநீக்கு
  26. ஒரு திருமணமான பெண் என்னிடம் கடன் கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்.

    பதிலளிநீக்கு
  27. கனவில் யாகம் வந்தால் என்ன அர்த்தம்

    பதிலளிநீக்கு
  28. Niraya per mottai adithavargal yedho oru veettil vaasal vazhiyaga nuzhaivadhu Pol kanavu kandaal Enna palan...?

    பதிலளிநீக்கு
  29. எனது இரண்டு வயது குழந்தையை ஆலயத்தில் நான் தொலைத்தது போல் கனவு கண்டால்

    பதிலளிநீக்கு
  30. எனக்கு பிடிச்சவங்கள lockdown கு அப்பறமா பாக்க முடியல ஆனா அவங்க தினமும் என் கனவில் வராங்க கனவிலயும் அவங்கள பாக்க முடியல இதுக்கு என்ன அர்த்தம்

    பதிலளிநீக்கு
  31. Sumangaligal oru ilam penirku manjal theithu thaneer ootri vital ena artham..

    பதிலளிநீக்கு
  32. வெற்றிலை பாக்கு தருவது போலவும் வெட்டப்பட்ட ஆடுகளின் தலை என் மடியில் விழுவது போலவும் கனவு கண்டேன்... இதற்கு பலன் ஏதேனும் தெரிந்தால் கூறுங்கள் அய்யா.. மனம் மிகவும் சஞ்சலமடைந்துள்ளது

    பதிலளிநீக்கு
  33. சாம்பார் கொதிப்பாது போல் வந்தால் கனவு பலன்

    பதிலளிநீக்கு
  34. அரிசி பானையில் அரிசி குறைவாக இருக்கு
    அந்த அரிசியே அள்ளுவது போல கனவு வந்தால் என்ன பலன்

    பதிலளிநீக்கு
  35. Vettil kadavulukku padaithu irukum nerathil arukil paampu padam eduthu nirpathu pol kanavu itharkana artham

    பதிலளிநீக்கு