சனி, 24 பிப்ரவரி, 2018

விந்து ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள்


விந்து ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள்

விந்து என்பது விந்துக் கோட்டைகள்உற்பத்தி செய்யும் பல லட்சம் உயிரணுக்கள் அடங்கிய, இரண்டு சுரப்பிகளின் கலவை. விந்துக்குழாய் சுமார் 60%, புராஸ்ட்டோட் சுரப்பி 40% சுரந்து கலந்த கலவை தான் விந்து என்பது.

மேலும் இதில் 90% நீரும், 5% புராக்டோஸ் என்ற சர்க்கரைச் சத்தும் மீதி 5% மிக மிகக் குறைந்த அளவில் புரதமும், உப்பும் சளியும் மற்றும் 1% அளவில் உயிரணுவும் உள்ள.

ஒருதடவை வெளியாகும் விந்துவில் (2.3 மி.லி)சுமார் 1 சிட்டிகை அளவு சர்க்கரை சத்து (150மி.கி) தான் வெளியாகிறது. இதனால் சக்தி இழப்போ, சத்து இழப்போ எத்வும் ஏற்படுவது இல்லை.

1மி.லி விந்துவில் சுமார் 100 மில்லியன் உயிரணு இருந்தால் தான் கரு உண்டாகும் . இது 20-40 மில்லியன் அளவுக்கு குறைந்தால் கரு உண்டாக்க முடியாது.

ஆன் உயிரணுக்கள் பெண் குறியில் மட்டும் இருந்தால் சுமார் 1 மணி நேரமும் கருப்பையில்  இருந்தால் சுமார் 24-48 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும். சுமார் 300 மில்லியன் உயிரணுவில் சுமார் 300 மட்டுமே கருமுட்டையை சூழ்ந்து அதில் ஓன்று மட்டுமே  அதன் உள்ளே சென்று கருவாகிறது.

குழந்தை ஆனா, பெண்ணா என்பதை தீர்மானிக்க ஆண் உயிரணுவே காரணமாகிறது.

குழந்தை உண்டாகாமல் இருக்க 75% ஆண்களே காரணமாக இருக்கிறான்.



இரவு உணவுகளை பாலில் கலந்து உண்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்!

உட்கார்ந்தே வேலைப் பார்க்கும் பழக்கம் வந்ததால் ஏற்பட்ட உடல்நிலை மாற்றம் உடலில் இன்சுலின், பருமன் மற்றும் ஆண்மை குறைபாட்டை வலுவாக பாதித்து வருகிறது. ஒருவகையில் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு தான் இந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பெரும்பாலும் இந்த பிரச்சனையை மருத்துவரிடம் நிறைய ஆண்கள் எடுத்து செல்வதில்லை. அப்படி சென்றாலும் கூட அவர்களுக்கு நிரந்தர தீர்வுக் கிடைப்பதில்லை. இதற்காக ஆண்மை அதிகரிக்க மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் அவை பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதற்கு இயற்கை மருத்துவம் தான் சிறந்த பயன்தரும். நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகளை பாலில் கலந்து இரவு வேளைகளில் உண்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
ஒரு கிராம் தாமரை விதையை ஒரு டம்ளர் பாலில் கலந்து இரண்டு வேளை குடித்து வந்தால் ஆண்களுக்கு விந்து உற்பத்தி அதிகரிக்கும். வெண்டைக்காய் வேரை நன்கு இடித்து பொடியாக்கி, இரவு உணவருந்திய பிறகு பாலில் கலந்து பருகி வந்தால் ஆண்களுக்கு விந்து உற்பத்தி அதிகரிக்கும். கரும்பு சாறோடு கொஞ்சம் கற்கண்டும் சேர்த்து காய்ச்சி ஒரு ஸ்பூன் முருங்கை பூவை சேர்த்து குடித்து வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும். வெங்காயத்தை வதக்கி தேன் கொஞ்சம் கலந்து இரவில் சாப்பிட்ட பிறகு பசும்பால் பருகி வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.
கொடிப்பசலைக் கீரை சாறில் பாதாம் பருப்பை ஊறவைத்து, அது உலறிய பிறகு பொடியாக்கி, பாலில் ஒரு ஸ்பூன் வீதம் கலந்து பருகி வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும். அரச இலை கொழுந்தை அரைத்து சிறிதளவு சூடான பாலில் கலந்து காலை வேளையில் வெறும் பயிற்றில் ஓரிரு மாதங்கள் பருகி வந்தால் விந்து குறை நீங்கி, விந்து உற்பத்தி அதிகரிக்கும். உலர்த்திய செம்பருத்திப் பூ சூரணத்துடன் உலர்த்திய முருங்கைப்பூ பொடியும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரித்து ஆண்மை குறைபாடு நீங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக